அத்தியாயம் 8
மகேந்திரன் பயந்து போய் நிற்க அவனை பார்த்து சிரித்தான் சந்தோஷ்…
என்ன இவன் நம்பல பார்த்து சிரிக்கிறான்… என்று மனதிற்குள் மகேந்திரன் நினைக்க…
அவனை பார்த்து மேலும் புன்னகைத்த சந்தோஷ்
என்ன ப்ரோ இப்போ தான் என்னை மாதிரி இறந்தவங்களை பார்த்தா பயப்பட மாட்டேன்னு சொன்னிங்க…என்று கேட்டான்…
அதில் மிரண்டு போன மகேந்திரன்…
அவளை சமாதானம் பண்ண வாய்க்கு வந்ததை சொன்னது ஒரு குத்தமா டா …உடனே டான்னு வந்து அஜார் ஆகி வந்துடுச்சே.. இப்போ என்ன பண்ண… கடவுளே என்னை எப்படியாச்சு காப்பாத்து
என்னை பார்த்து பயப்படாதீங்க ப்ரோ … நான் உங்களை ஒன்னும் பண்ண மாட்டேன்…
என்ன இது சமாதானமா பேசுற மாறி பேசி நம்பள போட்டுத்தள்ள போகுதோ…இது தான் மதி சொன்ன சாத்தானோ… ஐயோ இப்படி வந்து சிக்கிடனே…என்று மனதிற்குள் அழுது புலம்ப
நான் அந்த சாத்தான் இல்ல என்றவன் கண்கள் சாத்தான் மீது இருந்த கோபத்தில் சிவந்து…
அதை பார்த்து மேலும் பயந்து போன மகேந்திரன்
மதி சீக்கிரம் கதவை தொரா …என்னை காப்பாத்து டி… என்று கத்தி கொண்டே கதவை தட்டினான்…
என்ன டா … இப்போதா குளிக்க ஸ்டார்ட் பண்ணிருக்கேன்…வெயிட் பண்ணு வரேன்… என்று உள்ளே இருந்து குரல் கொடுத்தாள்…
அடியே நீ குளிச்சு வர வரைக்கும் வெயிட் பண்ணிகிட்டு இருந்த இது என்னை கொண்ணுடும்…இப்பவே வா டி… என்று மகேந்திரன் கூற வர அவனால் கூற முடியவில்லை… வாயில் இருந்து காற்று மட்டுமே வந்தது…சந்தோஷின் சத்தியின் பலனாய்….
ஸ்ஸ்ஸ் சத்தம் போடதிங்க ப்ரோ… நான் உங்களை ஒன்னும் செய்ய மாட்டேன்… உங்க கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசதான் வந்துருக்கேன்…
மிரண்டு போய் அவனை பார்க்க
உன்னால மட்டும் தான் என்னை பார்க்க முடியும் நான் உன்னோட கண்ணுக்கு மட்டும் தான் புலப்படுவேன்….. நான் பேசுறது உனக்கு மட்டும் தான் கேட்கும்…என்னை பத்தி நீ வெண்மதி கிட்ட சொல்ல கூடாது புரியுதா… உனக்கு இப்போ அந்த சாத்தனால ஆபத்து இருக்கு… கவனமாக இரு… என்று கூறியவன் சுடக்கிட மகேந்திரனுக்கு குரல் வந்தது
சரியாக அறையின் கதவு பட்டென திறக்க பட்டது உள்ளே நுழைந்தான் அபி…
அவன் பின்னோடு வந்த செங்கமலம் பாட்டி
அட கூறுகேட்ட பயலே இப்படி தான் புதுசா கல்யாணம் ஆனவங்க அறைக்குள்ள நீ பாட்டுக்கு கதவ திறந்துட்டு உள்ள போவ… என்று அவனின் தலையில் கொட்டி விட்டு மகேந்திரனிடம்
மதி எங்க மாப்பிள்ளை என்று கேட்க
குளிக்கிறா பாட்டி … என்று கூறியவனின் பார்வை முழுவதும் அபி அருகில் நின்று இருந்த சந்தோஷ் மீதே பயத்துடன் பார்த்து இருந்தது…
அவனின் பயந்த முகத்தை பார்த்த பாட்டி … இன்று நடந்த சம்பவத்தை பார்த்து பயந்து இருக்கிறான் என நினைத்வர் இதனால் மதியின் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்று பயந்தவர் இது பற்றி அவனிடம் பேச நினைத்து மகேந்திரனிடம்… மதி வந்ததும் சாப்பிட வருமாறு அழைத்து விட்டு சென்றார்…
அவர் சென்றதும் அபி தன் தலையை தேய்த்து கொண்டே
பாவம் கிழவின்னு பார்த்தா ரொம்ப பண்ணுது இதுக்கு ஒரு நாள் இருக்கு என்று கூறியபடி மகேந்திரனின் அருகில் வர…
அவனை கட்டி அணைத்த மகேந்திரன்…
எனக்கு ஒரு கஷ்டம்னா உடனே என்னை காப்பாத்த வந்துடேயே ….நண்பேன்டா… வா நம்ப இந்த ஊர விட்டு போயிடலாம் மச்சான்… என்று அவனை பற்றி இழுக்க அவனை புரியாமல் பார்த்தான் அபி
இந்த அரண்மனைக்குள் இருக்கும் வரை தான் உனக்கு பாதுகாப்பு… இதை தாண்டி வெளியே போன உனக்கு ஆபத்து… என்று கூறினான் சந்தோஷ்…
என்னால இனி ஒரு நிமிசம் கூட இந்த ஊருல இருக்க முடியாது… வா டா என்முஞ்சயே பார்த்திட்டு நிற்கிற…
ஏன் டா மச்சான் என்ன ஆச்சு… மாப்பிள்ளைக்கு சொம்பு கொடுக்கலைன்னு கோவிச்சுட்டு போகிறயா மச்சான்
என்று அவன் இழுத்த இழுப்புக்கு போக…
அப்போது தான் குளித்து விட்டு வெளியே வந்த வெண்மதி அவர்களை கண்டு
வா அபி எப்போ வந்த…
என்று கேட்க
நல்ல வேல ஏன் வந்தேன்னு கேக்காம விட்டாயே என்று சலித்து கொள்ள…
ஏன் டா என்று அவள் கேட்க
நல்லா கேட்ட போ … இப்போ தான் வரேன் உடனே இங்க இருந்து கிலம்பணும்ன்னு சொல்றான்… என்ன ? மறுபடியும் ரெண்டு பேரும் சண்ட போட்டிங்களா….
அப்பொழுது தான் மகேந்திரனை பார்த்த வெண்மதி…அவன் கையில் பெட்டியுடன் இருப்பதை கண்டு
எங்க போற
நான் ஊருக்கு போறேன்
என்ன ஆச்சு திடிர்னு…
நீயும் வா நம்ப இங்க இருக்க வேண்டாம் என்று குளித்து விட்டு தலையில் துண்டுடன் நின்றிருந்த மதியின் கை பிடித்து இழுத்து சென்றான்
அவன் மதியை இழுத்துட்டு வந்ததை பார்த்து அந்த அரண்மனையில் உள்ள அனைவரும் அவன் அருகே வர
மகேந்திரன் யாரையும் கண்டு கொள்ளாமல் அரண்மனையின் கதவினை தாண்டி கால் வைத்தவன் தூக்கி அரண்மனைக்குள் ஏறியபட்டான்…
அதை பார்த்த மதி வாயில் கை வைத்து மூடி அதிர்ச்சியுடன் பார்த்தவள்…
மகேன்… என்று கத்தி கொண்டு அவன் அருகில் செல்ல
அபியும் மதியும் சேர்ந்து மகேந்திரனை தூக்கி விட்டனர்…
அந்த அரண்மனையில் இருந்த எல்லோரும் நடந்த நிகழ்வை கண்டு மிரண்டு நின்றனர்…
எழுந்து நின்ற மகேந்திரன் அரண்மனையின் கதவினை பார்க்க அங்கு கோபத்துடன் நின்றிருந்தான் சந்தோஷ்…
அவனை பயத்துடன் பார்த்தான் மகேந்திரன்
உனக்கு சொன்னா புரியாத… இந்த அரண்மனை முழுக்க என்னோட சத்தி வளையத்தை ஏற்படுதிருக்கேன்…அதனாலே அந்த சாத்தான் உள்ள வரமுடியாமல் வெறி கொண்டு காத்து இருக்கு இப்போ நீ வெளிய போய் அதுகிட்ட சாக போறிய … நீ வெளிய போகரதும் இல்லாம வெண்மதியையும் கூட்டிட்டு போற…
என்று மகேந்திரனின் கோபமாக கேட்டான்… அவன் பேசுவதும் அங்கு இருப்பதும் மகேதிரன் தவிர யாருக்கும் தெரியவில்லை
மகேந்திரனுக்கு சந்தோஷ் கூறுவதை நம்புவதா வேண்டாமா என்ன செய்வது என்று ஒன்றும் தெரியவில்லை….
அரண்மனையில் சிறியவர்கள் அனைவரும் சென்றிருக்க வீட்டு ஆண்களும் பணிக்கு சென்று இறந்தனர்…மீதம் அங்கு இருந்தது செங்கமலமும் அவரது மகள் மருமகள்கள் மட்டுமே இருந்தனர்
மகேந்திரனுக்கு ஒன்னும் ஆகவில்லையே என்று விசாரித்தவர்கள் …அவனை உள்ளே அழைத்து சென்று சோஃபாவில் அமர வைத்தனர்… ஆண்களுக்கு தகவல் தெரிவிக்க பட்டது…
மகேந்திரனுக்கு நடந்ததை கண்ட அவர்களால் அரண்மனையின் கதவினை தாண்டி செல்ல யாருக்கும் துணிவு வரவில்லை …
இதுக்கு தான் நான் நேத்தே போறோம்னு சொன்னேன்… என்று கூறி அழுக ஆரம்பித்தாள் வெண்மதி…
செங்கமலம் நடபதை கண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தார்…
அந்த சாத்தான் ஏன் இப்படி பண்ணுது தெரிலயே… இதுவரை பகலில் அது அதிகம் நடமாட்டம் இல்லாமல் தான் இருக்கும்…. என்று கூறி கொண்டு இருக்க
செய்தி அறிந்து பதறி ஓடி வந்தனர் சுந்திரபாண்டி மற்றும் முத்துப்பாண்டி இருவரும் கூடவே ஒரு முதியவரையும் அழைத்து வந்திருந்தனர்…
அவர்களிடம் நடந்தசம்பவதை கூற… அந்த முதியவர் கண்களை மூடி அமர்ந்தார்…
அவர் மிக சத்தி வாய்ந்த சாமியார்… அந்த ஊரில் நடந்த அனைத்தும் அறிந்தவர் அவர் ஒருவர் மட்டுமே …அவர் பரம்பரை பரம்பரையாக அந்த ராஜா வம்சத்தின் இருக்கும் கடவுள் அருள் பெற்றவர்கள்…இவரின் உதவியால் தான் சாத்தான் பகல் பொழுதில் வெளியே வர முடிவதில்லை… பல சத்தி வாய்ந்த பூஜைகள் செய்து அதை முடிந்த அளவு கேட்டு படுத்தி வைத்திருக்கிறார்…
கண்களைத் திறந்த அந்த முதியவர் முதலில் பார்த்தது சந்தோஷை தான்…அவனைப் பார்த்து புன்னகைத்தவர் அடுத்து அங்கு நின்றிருந்த மகேந்திரனை அன்பாக பார்த்தார்…அதேசமயம் அவர் முகத்தில் ஒருவித பயம் ஆட்கொண்டு இருந்தது…
பின்பு அவர் அனைவரிடமும் பொதுவாக பேச ஆரம்பித்தார்…
நீங்க நினைக்கிற மாதிரி இங்க இருக்கிற சக்தி சாத்தான் கிடையாது…இங்கு ஒரு புனித ஆத்மா குடிகொண்டு இருக்கிறது…. அதனுடைய வேலை முடியும் வரை அத யாரு நினைத்தாலும் அது இங்கு இருந்து செல்லாது…அந்தப் புனித ஆத்மாவால் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்திற்கும் எந்த ஒரு தீங்கும் நடக்காது என்று அவர் கூற அதை கேட்ட செங்கமலம்
நீங்க சொல்றது சரி சாமி… ஆனால் எங்க மாப்பிள்ளைய அது எங்க கண்ணு முன்னாடி தான் தூக்கி அடிச்சது …பார்த்த எங்களுக்கு ஒரு நிமிஷம் உசுரே இல்ல…குடும்பமா வாழற வீட்டுல ஆத்மா இருக்கிறது நல்லதில்லையே சாமி என்று அவர் அந்த முதியவரிடம் கேட்க
அதைக் கேட்டு சிரித்த அந்த முதியவர்
உங்களுடைய குடும்ப நல்லதற்காக தான் அந்த ஆத்மா உங்களைச் சுற்றி வருகிறது…என்று கூறியவர்…
என்ன சாமி சொல்றீங்க என்று செங்கமலம் அவரை கேட்க
இந்த குடும்பத்திற்கு ஒரு பெரிய ஆபத்து காத்துட்டு இருக்கு அதுவும் உங்க மாப்பிள்ளைக்கு ரொம்ப ஆபத்து…அந்த சாத்தான் இவரை கொல்றதுக்காக காத்துட்டு இருக்கு….அதேசமயம் அந்த சாத்தான் இத்தனை வருஷம் எதுக்காக காத்துகிட்டு இருந்துச்சோ அந்த நேரம் நெருங்கிட்டு இருக்கு ஆனால் அது நன்மையாக முடியுமா அல்லது தீமையாக முடியுமா என்று அந்த இறைவனுக்கு தான் தெரியும் …
என்று அவர் கூற அதைக் கேட்ட அனைவரும் பயத்துடன் மகேந்திரனை பார்த்தனர் …
என்ன சாமி இப்படி சொல்றீங்க இப்பதான் என் பேத்திக்கு மறுபடியும் ஒரு நல்லது நடந்திருக்கு இந்த சமயத்துல எங்க மாப்பிள்ளைக்கு ஆபத்துன்னு சொல்றீங்களே இதுக்கு என்ன தான் வழி என்று செங்கமலம் கேட்க…
அவரைப் பார்த்து சிறிது புன்னகைத்த அந்த முதியவர் உங்கள் வீட்டில் அந்த தூய ஆன்மா காவல் இருக்கும் வரை உங்கள் மாப்பிள்ளை அந்த சாத்தானால் நெருங்க முடியாது….
என்று அவர் கூற…அதைக் கேட்ட அனைவருக்கும் அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை
தங்களுடன் ஒரு ஆத்மா இருக்கிறது என்ற செய்தியே அனைவரையும் பயம் கொள்ள செய்தது அது யார் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை மகேந்திரனை தவிர….
முதியவர் சந்தோஷை பார்க்க அவன் அவரிடம் என்னைப் பற்றி இங்கு இருப்பவர்களிடம் கூற வேண்டாம் என்று மானசீகமாய் வேண்டிக் கொண்டான்….
அதைக் கேட்டு சிறிது புன்னகைத்த முதியவர் அவனிடம் உன் வேலை முடிந்த பிறகு இங்கிருந்து யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் நீ கிளம்ப வேண்டும் என்று மனதிற்குள் கூற
அதை ஏற்றுக் கொண்ட சந்தோஷ்…இந்த ஜென்மத்துல என்னால வெண்மதி கூட வாழ முடியல ஆனா கண்டிப்பா என்னோட காதல் உண்மைனா அந்த கடவுள் எனக்காக என் காதல் கை கூட வேண்டும் என்பதற்காக எங்களுக்கு மீண்டும் ஒரு ஜென்மத்தை கொடுப்பார் என்று நான் நம்புகிறேன் …
அந்த சாத்தானை அளிக்கும் வரை மட்டுமே நான் வெண்மதிக்கு காவலாக இருப்பேன் அதன் பிறகு அந்த ஈசனடி பணிவேன் என்று சந்தோஷ் கூற அதை கேட்ட முதியவர் புன்னகையுடன்
நலம் உண்டாகட்டும் நீ நினைப்பது அனைத்தும் நடக்கும் என்று மனதிற்குள் அவனுக்கு ஆசி வழங்கினார் ….
நம்ம ஊர் திருவிழா முடியும் வரை இவரால் இந்த கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியாது இந்த அரண்மனையை விட்டு அவர் வெளியே வந்தாலே அந்த சாத்தான் பலி வாங்கிவிடும் …அதையும் மீறி இந்த அரண்மனையை விட்டு வெளியே சென்றாலும் இந்த ஊர் எல்லையை தாண்ட முடியாது என்று கூறிய முதியவர்
எங்களுக்கு துணையாக இருக்கும் அந்த தூய ஆத்மா யாரு என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா சாமி என்று சுந்தரபாண்டி கேட்க
உன் குடும்பத்திற்கு சொந்தம் ஆனவர்தான் உங்களை காக்க இங்கு உங்களுக்கு நிழலாக இருக்கிறார் என்று மட்டும் கூறினார்
இந்த திருவிழா முடியும் நேரம் இந்த ஊருக்கும் நன்மை பிறக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு அவர்களிடம் இருந்து விடை பெற்று அங்கிருந்து சென்றார் ….
அவர் சென்றதும் அனைவரும் சில நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தனர் …
வெண்மதி அழுது கொண்டே அமர்ந்திருக்க அதை கண்டு சந்தோஷ் அவள் அருகில் சென்று அவளின் தலையை கோத செல்ல அவனைப் பார்த்துக் கொண்டு இருந்த மகேந்திரன் பயந்து போய் வெண்மதியை தன் புறம் இழுத்து இருந்தான்… அதை பார்த்த சந்தோஷ் அவனை கோபமாக முறைக்க
மனதிற்குள் பயம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் வெண்மதியை தன்னோடு அணைத்து கொண்டு
இப்போ எதுக்கு மதி இப்படி அழுதுட்டு இருக்குற என்று அவளிடம் கேட்க
என்னால தான் எல்லாமே இப்போ உனக்கு ஆபத்துன்னு அந்த பெரியவர் சொல்லிட்டு போறாரு அவர் என்ன சொன்னாலும் கண்டிப்பா நடக்கும் நான் தான் உன்னை இங்கு கூட்டிட்டு வந்தேன் உன் வாழ்க்கையில் வந்து நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேன் என்று அவள் பாட்டுக்கு புலம்பிக்கொண்டே அழுக
அவளை ஒரு கையில் அணைத்தபடி நின்றிருந்த மகேந்திரன் மற்றொரு கையால் அவள் முகத்தில் வடிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
என்னடி பேசுற… அந்த சாமி தான் சொன்னார் இல்ல இந்த அரண்மனைக்கு உள்ள இருக்கிற வரைக்கும் எனக்கு எந்த ஆபத்தும் இல்லை என அப்புறம் எதுக்கு இவ்வளவு அழுகுற என்று அவளை சமாதானப்படுத்த
மதியின் அருகே வந்த சாந்தி நீ பயப்படாத மதிமா அந்த சாமி சொன்னது கேட்டியா நம்ம குடும்பத்துக்கு சொந்தமானவர்தான் இப்போ ஆன்மாவா இருந்து நம்பள காப்பாத்துறதா சொன்னாரு உன்னோட அப்பா தான் இப்போ நமக்கு துணையா வந்திருக்காரு நீ எதுக்கும் கவலைப்படாத அவரு பாத்துக்குவாரு என்று கூறினார்
ராணியும் திலகவதியும் தேவகியும் அருகில் வந்தவர்கள் அம்மா சொல்றது கேட்டதான உன்னோட அப்பா உன் கூடவே இருக்கிறார் நீ எதுக்கும் பயப்படாதே உனக்கு இந்த வாழ்க்கை கடவுள் அமைத்து கொடுத்தது அதை கண்டிப்பா உன்கிட்ட இருந்து யாராலயும் பறிக்க முடியாது என்று அவளை அணைத்து ஆறுதல் படுத்தினர்…
நீ இந்த வீட்டோட குலசாமி டா…உன்னோட வீட்டுக்காரரை நாங்க அப்படி விட்டு விடுவோமா எங்களை தாண்டி தான் எதுவும் அவரை நெருங்கும் நீ அழுகாத கண்ணு நாங்க எல்லாம் உன் கூட இருக்கிறோம் என்று முத்துப்பாண்டி கூறினார் …அதை ஆமோதித்தார் சுந்தரபாண்டி …
இங்கே என்னடா மச்சான் நடக்குது நடக்கிறது நம்பவே முடியல என்று அபி மகேந்திரனிடம் கேட்க…
உனக்கு இங்க நடக்கிறது நம்ப முடியலையா ஏன்டா உன் கண்ணு முன்னாடி தானே பறந்து போய் விழுந்தேன் ….விழுந்ததுல இன்னும் என்னோட இடுப்பு வலிக்குதுடா…
நான் அப்படி சொல்லல மச்சான் இங்கு நடக்கிறது எல்லாம் புதுசா இருக்கு இந்த காலத்திலும் பேய் பிசாசு நான் இதுவரைக்கும் கேள்விப்படல ஆனா இப்போ நேர்ல பாக்கும்போது ரொம்ப பயமா இருக்குது மச்சான் எப்படி இங்கிருந்து போறது…
இனி எங்க போறது அதுதான் அந்த சாமியார் தெளிவா சொல்லிட்டு போனாரே …திருவிழா முடிஞ்ச தான் இங்கிருந்து போக முடியும் என்று நினைக்கிறேன் …இதுவரைக்கும் கிராமத்துல நடக்குற திருவிழாவுல எல்லாம் நான் கலந்துக்கிட்டதே இல்ல அது எப்படி இருக்கும்னு பார்க்கலாம்னு ஆசைப்பட்டு இங்கே இருக்கலாம் என்று சொன்னேன் ஆனால் அது எனக்கே இப்ப வினையா வந்துருச்சு….
என்று அபியிடம் புலம்பி கொண்டு இருக்க
வெண்மதியை சமாதானப்படுத்தி அவளது அறைக்கு அழைத்து சென்றார் சாந்தி… அவர் கூடவே சந்தோஷம் போக அதை கண்டு மகேந்திரன் ….
இவன் என்ன எப்ப பார்த்தாலும் அவ பின்னாடியே போய்கிட்டு இருக்கான் என்று கூறிக்கொண்டு அவர்கள் பின் செல்ல போக அவனுடைய நீயே நடந்து வந்த அபி அவன் பேசுவதை கண்டு
யாருடா என்று கேட்க
அவன் தான் மச்சான்…என்று சந்தோஷை கைகாட்டி விட்டு வேகமாக அறைக்குச் சென்றான் …
எவன் இங்கே இருக்கிறான் என்று காத்துல கை காட்டிட்டு போறான் என்று புழம்பிக் கொண்டே அவனுடன் உள்ளே அறைக்குச் சென்றான் …
வெண்மதியே படுக்க வைத்து விட்டு சாந்தி வெளியே வர சரியாக உள்ளே நுழைய வந்தான் மகேந்திரன்
அவர் வருவதை கண்டு ஒதுங்கி நிற்க அவனைப் பார்த்த சாந்தி
என் பொண்ணுக்கு முதல் கல்யாணம் நிலைக்கல அதுக்கப்புறம் அவ கல்யாணம் பண்ண கூடாதுன்னு நான் நினைச்சதுக்கு காரணம் இந்த சாத்தான் தான் …எனக்கு தெரியும் அது வெண்மதி யாரை கல்யாணம் பண்ணினாலும் அவனை கொன்னுடும் என்று அதனால் தான் நான் நீங்க கல்யாணம் பண்ணிட்டு வந்த அன்னைக்கு உங்ககிட்ட கோபமா நடந்துகிட்டேன் என்று கூறினார் …
யாருடா அந்த சாத்தான் வந்ததிலிருந்து சாத்தான் சாத்தான் என்று தான் சொல்றீங்களே தவிர அதை யாருன்னு ஒருத்தரும் சொல்ல மாட்டேங்கிறீங்களே அவன் எதுக்கு என்ன கொள்ள நினைக்கிறான் இந்த சந்தோஷ் இறந்ததுக்கு அப்புறமும் எதுக்கு வால் மாதிரி வெண்மதி பின்னாடியே சுத்திகிட்டு இருக்கிறான் என்ன தான் நடக்குது இங்கே ஒண்ணுமே புரிய மாட்டேங்குது கூடிய சீக்கிரம் நான் பைத்தியமாக போறேன் என்று மனதிற்குள் பேசியவன் ….
அவரிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் ஒரு சிரிப்புடன் தலையசைத்து விட்டு உள்ளே சென்றான்