அதி பெங்களூரு சென்று நாற்பது நாட்கள் ஆகி இருந்தது….. நாற்பது நாட்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் சென்றது….. நிவேதா அதியின் வீட்டில் தான் அப்பத்தாவிற்கு துணையாக உறங்குகிறாள்…. தினமும் காலை இரவு என இருவேளையும் அவளுடன் பேசவில்லை என்றால் அவனுக்கு அந்த தினமே போகாது…. இந்த நாற்பது நாட்களில் பிரியா நிவேதா இருவரின் செமஸ்டர் தேர்வும் முடிந்து இருந்தது… மதுரையில் சித்திரை திருவிழா முடிந்து இருந்தது…. வீடியோ கால் மூலமாக அங்கு நடக்கும் அனைத்தையும் பார்த்தனர்….
அந்த சம்பவம் நடக்கும் முன்னாடி நாள் இரவு தான் மதுரையில் இருந்து அனைவரும் சேலம் வந்து இருந்தனர்…. சுந்தரன் ஐயா மட்டும் வரவில்லை…. இரவு ஆகும் என்பதால் அப்பத்தா நிவேதா இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்…. அப்பத்தாவிற்கு தூக்கம் வந்ததால் அவரை தூங்க அனுப்பிவிட்டு நிவேதா அதிக்கு அழைத்தாள்…. அவன் அப்போது தான் வேலையை முடித்து விட்டு அவன் தங்கி இருக்கும் இடத்துக்கு வந்தான்…. அவளின் அழைப்பை பார்த்ததும் உற்சாகமாகி உடனே எடுத்தான்…
“இல்ல டா இப்ப தான் ஒர்க் முடிச்சிட்டு வந்தேன்… குளிச்சிட்டு சாப்பிடலாம்னு எடுத்து வெச்சிட்டு இருந்தேன்… சாப்பிட போது உனக்கு கூப்பிடலாம்னு இருந்தேன்… எப்பயும் ரூம்ல இருந்து தானு அம்மு பேசுவ … இன்னிக்கு என்ன ஹால்ல இருக்க… தூங்க போலயா அம்மு”… என்று கேட்டான்….
“பாவா மதுரைல இருந்து தாத்தா, அத்தம்மா, அண்ணா, அண்ணி, அஜய், தாரா குட்டி எல்லாம் வராங்க…. அல்மோஸ்ட் சேலம் ரீச் ஆகி இருப்பாங்க… எப்படியும் ஒரு அரை மணி நேரத்துல வந்துடுவாங்க” என்று கூறினாள்….
“மாமா காலைல போன் பேசும் போது கூட வராத சொல்லவே இல்லை”… என்று கேட்டான்….
“இல்ல பாவா திடீர்னு தான் புறப்பட்டாங்க….. அம்மாச்சி எல்லாரையும் பாக்கணும் சொன்னாங்க…. அதுனால தான்…. பத்து மணி போல தான் அம்மாச்சி சொன்னாங்க…. அதுனால அங்க இருக்க வேலையெல்லாம் முடிச்சிட்டு அஞ்சு மணிக்கு மேல தான் புறப்பட்டாங்க….. சோ மணி இப்ப ஒன்பதரை ஆக போகுது…. பாப்பா நடுவுல முழிச்சி ஒரே அழுகையாம்… அதுனால லேட்னு சொன்னாங்க….” என்று கூறினாள்
“சாப்டேன் பாவா… அம்மாச்சி அவங்க சாப்புட்ற அப்பயே என்னையும் சாப்பிட வெச்சுட்டாங்க….. அம்மாச்சி தூங்க போயிட்டாங்க…. நீங்க சாப்புடுங்க….சாப்டு கூப்பிடுங்க நான் வைக்குறேன்” என்று கூறி முடித்தாள்….
“நோ அம்மு வீடியோ கால் வா …. பேசிட்டே சாப்புடுறேன்”…. என்று அழைப்பை கட் செய்து விட்டு அவளுக்கு வீடியோ கால் செய்தான்…. அவளும் அதை ஏற்று பேச ஆரம்பித்தாள்…
அவனும் அவளுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தான்…. “ஓகே பாவா நீங்க போய் தூங்குங்க…. நாளைக்கு ஒர்க் போனும்ல…. நாளைக்கு பேசலாம்” என்று கூறினாள்….
“நோ அம்மு கொஞ்ச நேரம் பேசலாம்… அந்த லேடியால வீட்டுல எந்த பிரச்சனையும் வரலல அம்மு”….. என்று கேட்டான்…
“எந்த லேடி பாவா….???” என்று கேட்டாள்… சிறிது நேரம் கழித்து தான் யார் என்று தெரிந்தது… “இல்லை பாவா… மோஸ்ட்லி அங்க வீட்டுக்கு போறது இல்லை…. வசும்மாவ பாக்க கூட அவங்க தூங்குன வாட்டி தான் போறேன்…
அண்ணாவும் பிரியாவும் இங்க வந்து பாத்துக்குவாங்க…. நீங்க வந்த வாட்டி அங்க போனா அவங்கள பேஸ்(face) பண்ணனும்…. அப்ப என்ன பண்றது தெரியல” என்று கூறினாள்….
“அப்டின்னா அங்க போக வேண்டாம் நம்ம வீட்டுலயே இங்க இரு” என்று கூறினான்… அவளும் சரி என தலை அசைத்தாள்… பிறகு தான் அவன் என்ன கூறினான் என உணர்ந்து “பாவா என்ன சொன்னிங்க????” என்று கேட்டு முறைத்தாள்….
“நம்ம வீட்டுலயே இருனு சொன்னேன் அம்மு” என்று கூறினான்…
“போங்க பாவா நான் போன் வைக்குறேன்… நீங்க தூங்க போங்க … குட் நைட்” என கூறி போனை வைத்து விட்டாள்…. அவனும் சிரித்து கொண்டே அவளுக்கு “குட் நைட்” என மெசேஜ் செய்து விட்டு தூங்க சென்று விட்டான்….
நிவேதா போனை வைத்து விட்டு அப்பத்தாவை போய் பார்க்க சென்றாள்… அவர் நல்ல உறக்கத்தில் இருந்தார்… மீனாட்சிக்கு போன் செய்து பேசினாள்… எவளோ நேரம் ஆகும் என்று… இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்று கூறினாள் அவளும்… அதனால் நிவேதா சிஏ தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தாள்… அரை மணி நேரத்தில் காலிங் பெல் சத்தம் கேட்டது… இவள் போய் கதவை திறந்து அனைவரையும் வரவேற்றாள்… முதலில் அனைவரையும் ரெபிரெஷ் (refresh) செய்துவிட்டு வருமாறு கூறிவிட்டு அனைவருக்கும் உணவை எடுத்து வைத்தாள்….
அனைவரும் சாப்பிட்டு விட்டு சாப்பாடு அருமை என பாராட்டினார்… தாத்தா நிவேதாவிடம் “தாயி உன் அம்மாச்சி சொன்னா நீ அருமையா சமைப்பன்னு … ரொம்ப அருமையா சமைச்சி இருக்க டா” என்று கூறினார்…. பிறகு அனைவரும் அவர் அவர் அறைக்கு சென்று தூங்கினர்….
அடுத்த நாள் காலை யாருக்கும் நன்றாக விடியவில்லை…. நிவேதா நிதிஷ் பிரியா வசும்மா நால்வருக்கும் உறுத்திக் கொண்டே இருந்தது….. நிவேதா அதிக்கு அழைத்து பேசினாள்… அவனை பேசிக் கூட விடவில்லை அவள்… “பாவா நீங்க ஓகே தானு….. எழுந்ததுல இருந்து மனசு ஒரு மாதிரி இருக்கு பாவா… நீங்க நல்லா இருக்கீங்க தானு” என படபடப்பாக பேசினாள்…
“அம்மு நான் நல்லா தான் இருக்கேன் ஏன் இப்படி டென்சன் ஆகுற…… எனக்கும் ஒன்னும் இல்ல…. சோ அமைதியா இரு அம்மு”…. என்று அவளை அமைதி படுத்தினான்
அதி சிறிது நேரம் அவளை அமைதி படுத்தி அவளை கிளாஸ்க்கு ரெடியாக கூறினான்.. இன்று அவளுக்கு லீவ் என்று கூறினாள்… வாக்கிங் சென்றாளா என்று கேட்டான் அவளும் ஆம் என்று கூறினாள்…. சரி ஓகே அம்மு அப்டினா வெளிய போ… இல்லனா வசும்மா நிதிஷ் பிரியா மூவரையும் சென்று பாத்துட்டு வா” என்று கூறினான்…. அவளும் சரி எனக் கூறிவிட்டு ரெடியாகி வெளியே சென்றாள்…. அப்பத்தா சிவம்மா மட்டும் எழுந்து இருந்தனர்… இருவருக்கும் காலை வணக்கம் கூறிவிட்டு இருவருக்கும் உதவி செய்து கொண்டு இருந்தாள்… மீனாட்சியும் ரெடியாகி வெளியே கீழே வந்து இருந்தாள்……
பிறகு அப்பத்தாவை ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு மாமியார் மருமகள் நாத்தனார் மூவரும் காலை உணவை தயாரித்தனர்…. தயாராகி முடிப்பதற்குள் அனைவரும் வந்து இருந்தனர்…..
எல்லாம் தயாராகி இருந்தது…. மூவரும் மற்றவர்களுக்கு பரிமாறி விட்டு மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டே சாப்பிட்டனர்….. சிறிது நேரம் பேசி விட்டு வசும்மா வீட்டுக்கு செல்கிறேன் என்று கூறினாள்…. அவர்களும் சரி என கூறினார்… போகும் போது அஜயையும் அழைத்துக் கொண்டு சென்றாள்…. போகும் போது சிரித்து கொண்டே போகிறவள் வரும் போது கோவமாக வருவாள் என யாரு சொல்வது….
போகும்போதே பிரியாவுக்கு அழைத்து சாந்தா என்ன பண்ணுகிறார் என்று கெடுக்க கொண்டு தான் அங்கு சென்றாள்….
சாந்தா தன் நாடகத்தை நன்றாக நடத்திக் கொண்டிருந்தார்…. முதலாவது ஜனகராஜ் நிஹா இருவரையும் நியாபகம் இருக்குமாறு நாடகத்தை நடத்தினார்…. ஆனால் தற்போது அனைவரையும் மறந்து போனது என்று நாடகம் நடத்துகிறார்… இதுக்கு அவருக்கு சிகிச்சை பார்க்கும் மருத்துவரும் உடந்தை….
யாருக்கும் சந்தேகம் வராதவாறு தன் நாடகத்தை ஒரு மாதமாக நடத்திக் கொண்டிருந்தார்….. வசும்மா கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு யார் என சொல்லிக்கொடுத்தார்… அதை மட்டும் வைத்து கொண்டு பேசி ஏமாற்றி கொண்டிருந்தார்….
சாந்தா உள்ளே அறையில் இருந்தார்… பெரியம்மா என்று கத்திக் கொண்டே உள்ளே நுழைந்தாள்… வசும்மா பிரியா நிதிஷ் மூவரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்… மூவரும் அஜயை வரவேற்று விட்டு அனைவரும் பேசிக் கொண்டு இருந்தனர்….. கொஞ்ச நேரம் கழித்து வசும்மாவிடம் “பெரியம்மா நேத்து ஒரு புக் கொரியர் வந்து இருக்குமே அது எங்க…???” எனக் கேட்டாள்….
வசும்மா சொல்வதற்குள் பிரியா “ஏஞ்சல் நான் தான் நீ சிஏ புக்ஸ் ஒரு கப்போர்டுல வெச்சி இருப்பல அங்க வெச்சிட்டேன் போய் எடுத்துக்கோ” என்று கூறினாள்……
“ஓகே அண்ணிமா” என்று கூறிவிட்டு “அஜய் நீ ஒரு புக் கேட்டல வா தரேன்” என்று அவனையும் அழைத்துக் கொண்டு மேலே சென்றாள்…. ஆனால் பிரியா சொன்ன இடத்தில புக் இல்லை… அத புக் ஐசிஏஐ (ICAI) வெப்சைடில் ஆர்டர் செய்து தான் வாங்க வேண்டும்…. நேற்று தான் அந்த புக் வந்தது…. வசும்மா தான் வாங்கினார்.. அதை பிரியாவிடம் குடுத்து நிவேதாவின் அறையில் வைக்க சொன்னார்…. அவளும் வைத்து விட்டாள்… ஆனால் சாந்தா நேற்று இரவு மற்ற மூவருக்கும் தூக்க மாத்திரை கலந்த பாலை அவர்களுக்கே தெரியாமல் குடுத்து தூங்க வைத்துவிட்டு நிவேதா அறைக்கு சென்று அந்த புத்தகத்தைத் தேடி கண்டுபிடித்து அதை பயன்படுத்த முடியாதாவாறு கிழித்து அதை பிரியா கிழித்ததை போல் அவளின் அறையில் மறைத்து வைத்து விட்டு தூங்கிவிட்டார்….
“அஜய் நீ போய் இங்க புக் இல்லனு சொல்லிட்டு வா… வேற எங்கயோ வெச்சி இருக்காளானு கேட்டுட்டு வா” என்று அனுப்பி வைத்தாள்….. அவனும் “ஓகே மதனி” என்று சொல்லிட்டு சென்றான்… அவன் சென்று பிரியாவிடம் கூறினான்… அவளும் தேட மேலே வந்தாள்… அவளும் தேடினாள்…. அவளுக்கும் கிடைக்கவில்லை… அறை முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை….
“அண்ணி இங்க தானு வெச்ச ஆனா எங்கயும் காணோம… வேற எங்கயோ வெச்சி இருக்கியா” என்று கேட்டாள்… “இல்ல இங்க தான் வெச்சேன்”…. என்று கூறினாள்….
வீடு முழுவதும் இருவரும் தேடினர்…. எங்கு என தெரியவில்லை…. எங்க தான் போச்சி என யோசித்து கொண்டு இருந்தனர்….
வசும்மாவும் தேடினார்…. எங்கே என தெரியவில்லை….
நிதிஷ் வெளியே சென்று இருந்தான் அவனுக்கும் தெரியவில்லை….. எதுக்கும் சாந்தாவிடம் கேட்கலாம் என வசும்மா போய் கேட்டார்…. “சாந்தா நீ எதோ புக் பாத்தியா…..”
“ஆமா பாத்தேன் க்கா மேல அட்டை ப்ளூ கலர்ல இருக்கும் அது தானே” என்று கேட்டார்….
“ஆமா அது தான் எங்க பாத்த????” என்று கேட்டார்….
“அக்கா உன் மருமக பொண்ணு தான் அந்த புக் எடுத்து வெச்சி இருந்தது…. எதோ கோவமா பேசிட்டு இருந்தது.. அப்புறம் அந்த புக்க கிழிச்சி அதோட ரூம்ல வெச்சிடிச்சி” என்று கூறினார்….
“ஏய் சாந்தா என்ன ஒளறிட்டு இருக்க” என்று கேட்டார்… “உண்மைய தான் சொன்னேன் க்கா.. நீங்களா கேட்டீங்க நான் பாத்தது சொன்ன திட்டுறீங்க”.. என்று சொல்லி விட்டு உள்ளே சென்று கதவை அடைத்து விட்டார்… உள்ளே சென்று “எப்படி நீங்க நிம்மதியா இருக்கீங்கன்னு பாக்குறேன்” என்று தன்னக்குள்ளே கூறிக்கொண்டு என்ன நடக்குது என கதவை திறக்காமல் காதை வைத்து கேட்டார்…..
பிரியா “இல்லை நான் அப்டிலாம் பண்ணல” என்று கூறி அவள் அறைக்கு சென்று அனைத்தையும் எடுத்து கீழே போட்டு காட்டினாள்… ஆனால் சாந்தா தான் ஏற்கனவே அவள் கபபோர்டில் வைத்து இருந்தாரே… அவள் அதை பார்த்து விட்டு “இல்ல நான் இத பண்ணல” என்று அழுது கொண்டே கூறினாள்….
நிதிஷும் வீட்டுக்கு வந்து இருந்தான்…. அவன் பார்த்தது அழுது கொண்டு இருக்கும் பிரியாவை தான்… “பாப்பு என்ன ஆச்சு ஏன் அழுகுற தான் என்ன ஆச்சுனு சொல்லு டா” என்று கேட்டான்…
மாமா என்று சொல்லி சாந்தா கூறியதை கூறி அறையில் புக் கிழிந்து இருந்ததையும் கூறினாள்… பிறகு மாமா நெஜமாவே நான் அத பண்ணல மாமா அவங்க ஏன் இப்படி சொன்னாங்கனு தெரியல மாமா என்று அழுது கொண்டே கூறினாள்….
அவன் எதுவும் கூறாமல் வசும்மா நிவேதா முகத்தைத் தான் பார்த்தான்…. ஆனால் இருவரும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை…..
( நீங்க நினைக்கலாம் ஒரு புக்குக்கு இவளோ அலப்பறையானு…. ஐசிஏஐ(icai) வெப்சைட்ல ஆர்டர் பண்ணி தான் சிஏ(CA)க்கு புக் வாங்கணும்… சோ அந்த புக் ரொம்ப முக்கியம்… எனக்கு தெரிஞ்சி அப்டி தான்…. தப்புனா சொல்லிடுங்க )