நிதிஷ் நிவேதா , வசும்மா இருவரை தான் பார்த்தான் ….. இருவரும் அமைதியாக நின்று கொண்டு இருந்தனர்….. அஜய் அதற்குள் அதி வீட்டுக்குச் சென்று இங்கு நடக்கும் பிரச்சனையைச் சொல்ல சென்றான்… மற்றவர் யாரும் வேண்டாம் என சொல்லி மாறன் மீனாட்சி அஜய் மூவர் மட்டும் சென்றனர்…..
நிதிஷ் மீண்டும் சாந்தாவின் அறைக்குச் சென்று அவரை வெளியே வரச் சொல்லிக் கேட்டான்… ஆனால் அவர் சொன்னதை தான் திருப்பி திருப்பி சொன்னார்… பிரியா தான் அந்த புக்கைக் கிழித்ததாக கூறினார்… அதை கேட்டு பிரியா மீண்டும் அழுது கொண்டே “மாமா நிஜமா நான் எதுவும் பண்ணல மாமா இவங்க பொய் சொல்றாங்க மாமா” என்று கூறினாள்… அவள் அழுவதை சாந்தா ரசித்துக் கொண்டே இருந்தார்….
அதை உள்ளே வந்த மாறன் பார்த்துவிட்டான்…. இந்த அம்மா தான் எதோ பண்ணி இருக்கு போல என நினைத்து கொண்டு என்ன பண்ணலாம் என யோசித்தான்…. அன்று ஒரு நாள் அவன் சேலம் வந்த போது நிதிஷ் இவனிடம் சொல்லி இருந்தான் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும் என … அதை பார்த்தால் தெரிந்துவிடும் என நினைத்து அதை நிதிஷிடம் கூறினான்….
அவனும் அதை பார்த்தால் தெரிந்து விடும் என நினைத்து பிரியாவை எடுத்து வர சொன்னான்…. ஆனால் அவள் அவனை விட்டு நீங்கவே இல்லை…. அவன் சட்டையை பிடித்துக் கொண்டு அவனுடனே நின்றாள்…. சாந்தா அதற்கும் “நீ நீலி கண்ணீர் வடிச்சா நீ பண்ணது உண்மை இல்லனு ஆகுமா… நான் பார்த்ததைச் சொன்னேன் அவளோ தான்….. என்னை எனக்குன்னு ஒரு வீடு இருந்தா அங்க கொண்டு போய் விட்ருங்க…. தேவ இல்லாத விசயத்துக்குலாம் என்ன திட்டுறீங்க” என்றுச் சொல்லிக் கொண்டு இருந்தார்…..
நிதிஷ் அஜயிடம் போய் எடுத்துவர சொன்னான்…. அவனும் சரி என எடுத்து வந்து குடுத்தான்….. நிதிஷ் இரண்டு மூன்று இடங்களில் கேமரா வைத்து இருந்தான் ஹாலில் மாடியில் உள்ள ஹாலில் பிறகு கிச்சனுக்கு வெளியில்….. அதை பார்த்த போது சாந்தா செய்ததை அனைத்தும் அதில் இருந்தது…. அவருக்கு தான் தெரியாதே கேமரா இருப்பது அதனால் மறைந்து மறைந்துலாம் செல்லவில்லை…. அவர் தான் அது என தெளிவாக தெரிந்தது….அந்த வீடியோவை அனைவரும் தான் பார்த்தனர்…..
அந்த வீடியோ பார்த்து நிவேதா எதுவும் சொல்லவில்லை…. பிரியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அதியின் வீட்டுக்குச் சென்றுவிட்டாள்… வசும்மா நேராக சென்று சாந்தாவின் முன் நின்று “நீ திருந்துவனு நெனச்சிட்டு இருந்தேன்…. ஆனா நீ திருந்தவே மாட்டால…. பாவம் கூட பிறந்த தங்கச்சினு உடம்பு சரி இல்லனு வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து பார்த்தா நீ என்ன வேல பார்த்து இருக்க” என்று கூறி நிதிஷிடம் திரும்பி நிதிஷ் “இனிமே இவ இந்த வீட்டுக்குள்ளேயே இருக்க கூடாது”… என்று கூறிவிட்டு உள்ளே செல்ல பார்த்தார்….
“அம்மா ஒரு நிமிசம் இவங்க வெளியே போனாலும் பிரச்சனை பண்ண மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்… நில்லுங்க இவங்கள என்ன பண்ணலாம்னு பாக்கலாம் அது வரைக்கும் இங்கயே இருக்கட்டும்” என்று கூறி அவரை ஒரு அறையில் தள்ளி பூட்டி வைத்துவிட்டான்….
அவர் “ஐயோ என்னடா பண்ற வெளிய விடுடா என்னை” எனக் கத்திக் கொண்டு இருந்தார்… அவரை என்ன செய்வது என நிதிஷ் யோசித்து கொண்டு இருந்தான்…. மாறன் அதிக்கு மெசேஜ் செய்தான் அவன் வேலையில் இருக்கிறானா… இல்லை பிரீயா(FREE) எனக் கேட்டான்…. அவன் பிரீ(FREE) என மெசேஜ் செய்தான்… உடனே மாறன் அவனிடம் இங்கு நடந்த பிரச்சனையைச் சொன்னான்….
அவன் கேட்டுக் கொண்டு “மாமா நான் சூர்யாவ(நமக்கு அரசு) வர சொல்றேன்… அவன்கிட்ட என்ன பண்றதுனு சொல்றேன் அவன் பாத்துப்பான்… நான் வைக்குறேன்” எனக் கூறி வைத்துவிட்டான்… பிரியா நிதிஷை விட்டு அகலவே இல்லை…. அவனுடன் தான் இருந்தாள்… வசும்மா அவர் அறைக்கு சென்று விட்டார்…..
சிறிது நேரத்தில் அரசு நிதிஷ் வீட்டுக்கு வெளியே நின்று மாறனுக்கு அழைத்தான்…. “மாமா நான் வந்துட்டேன்… நீங்க எங்க இருக்கீங்க” எனக் கேட்டான்… “நில்லு வரேன்” என்று சொல்லி நிதிஷிடம் சொல்லிவிட்டு அரசுவை அழைக்க மாறன் வெளியே சென்றான்…. அவனை உள்ளே அழைத்து வந்தான்…. நிதிஷ் அவனை வரவேற்று விட்டு உட்கார வைத்தான்…. பிரியா அழுதுக் கொண்டே தூங்கி இருந்தாள்….. அதனால் மீனாட்சி தான் அவனுக்கு தண்ணீர் எடுத்து வந்து குடுத்தாள்…
மாறன் அவனிடம் “டேய் அரசு வீரா என்ன சொன்னான் உன்கிட்ட…. என்ன பண்ண போறீங்க…” என்று கேட்டான்…. அதற்கு அரசு “பொறுமை மாமா சொல்றேன்…. நிதிஷ் உங்க அம்மாவை வர சொல்றிங்களா… அவங்கள வெச்சே சொல்றேன்”…. என்று கூறினான்
வசும்மா வந்தவுடன் தன்னை அவரிடம் அறிமுகபடுத்திக் கொண்டு அதி சொன்ன விசயத்தைக் கூறினான்…. அதில் அனைவருக்கும் திருப்தி…. அனைவரும் சரி என ஒத்துக்கொண்டனர்…..
அதி சொன்னது சாந்தாவை மனநல பாதிக்க பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்ப்பது தான்… யாருக்கும் சந்தேகம் வராது….. போலீஸ் சொன்னால் நம்புவர்… அதுவும் ஒரு மாவட்டத்தின் எஸ்பி கூறினால் நம்பி தானே ஆக வேண்டும்…. எனவே அரசுவின் அப்பா எஸ்பி மணிகண்டனிடம் கூறி அவருக்கு தெரிந்த மனநல பாதிக்க பட்டவர்கள் மருத்துவமனையில் பேச சொன்னான்… அவரும் பேசி விட்டார்…. இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் வந்துவிடுவார்கள் என்று கூறினான்… அதற்குள் சாந்தா இருந்த அறையில் இருந்து பொருட்கள் உடையும் சத்தம் கேட்டது…… ஆனால் அவரை கண்டுகொள்ளவே இல்லை….
சிறிது நேரத்தில் மருத்துவமனையில் இருந்து வந்து இருந்தனர்… மற்ற யாரையும் பேசவேண்டாம் எனக் கூறிவிட்டு அரசுவே அவர்களிடம் பேசினான்… பிறகு சாந்தா இருந்த அறையைத் திறந்து விட்டான்…. திறந்தவுடன் வெளியே பாய்ந்து கொண்டு வந்தார் நிதிஷை அடிக்க…. அந்தோ பரிதாபம் !! அவரை மருத்துவமனை ஊழியர்கள் பிடித்துக் கொண்டனர்… “என்ன விடுங்கடா யாருடா நீங்க ??” என்று கத்திக் கொண்டிருந்தார்…
ஊழியர்கள் எந்த பதிலும் சொல்லாமல் அவரை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர்…. அரசுவும் விடைபெற்றுக் கொண்டு சென்றுவிட்டான் சாந்தாவை ஏற்றிக்கொண்டு சென்ற வண்டியின் பின்னே… மருத்துவமனையில் சென்று சேர்த்துவிட்டு அங்கு இருக்கும் பார்மாலிட்டீஸ்(formalitices) முடித்துக் கொண்டு வருவதாக சொல்லிச் சென்றுவிட்டான்
(நீங்க கேட்கலாம் இப்படி ஹாஸ்பிடல்ல சேத்தி விட்டுட்டா தண்டனையானு… நல்லா இருக்க ஒருத்தருக்கு மனநல பாதிக்க பட்டவங்களுக்கு தர டிரீட்மென்ட் தந்தா அவங்களே கொஞ்சம் கொஞ்சமா மனநலம் பாதிக்க பட வாய்ப்புகள் இருக்கு…. உங்களுக்கு திருப்தி இல்லனா சொல்லுங்க…. இனிமே சாந்தானு ஒரு கேரக்டர் நிவேதா லைப்ல வரமாட்டாங்க)
பிரியாவும் கொஞ்ச நேரத்தில் எழுந்து இருந்தாள்… ஆனால் எழுந்தவுடன் மீண்டும் நிதிஷிடம் வந்து அமர்ந்து கொண்டாள்… அவன் தான் “பாப்பு ரிலாக்ஸ் ஒன்னும் இல்ல எதுக்கு இந்த அழுகை… அங்க பாரு வீட்டுக்கு யாரு வந்து இருக்காங்கனு நீ வந்து என் பக்கம் உட்காந்தா என்ன அர்த்தம்… அங்க பாரு அம்மாவும் கோவமா இருக்காங்க நீ வந்த உடனே அம்மா உள்ள போயிட்டாங்க பாரு…. குட்டிமா கோச்சிக்கிட்டு போயிட்டா…. அவங்கள சமாதானம் பண்ணாம என்கிட்ட வந்து உட்காந்து இருக்க போயி அம்மாவை சமாதானம் செய் போ” என்று அவளை வசும்மா அறைக்கு அனுப்பி வைத்தான்….
“அதுவா அண்ணா… பிரியாக்கு அவ தப்பு பண்ணாம அவ தான் பண்ணா அப்டினு யாரோ சொன்னா அழுக ஸ்டார்ட் பண்ணிடுவா போல்டா பேசமாட்டா…. தப்பு செஞ்சா அவளே ஒத்துக்குவா… ஆனா அவளை யாரோ ப்ளேம்(blame) பண்ணா அவ ஹர்ட் ஆகிடுவா…. அவளை பத்தி நல்லா தெரிஞ்ச அம்மாகிட்டயும் குட்டிமாகிட்டயும் அழுதா…. அதுதான் அம்மாக்கும் குட்டிமாக்கும் கோவம்…. எப்படி அவங்க இவளை சந்தேகப்படுவாங்கனு இவ நெனச்சான்னு… அது தான் கோவமா இருக்காங்க” என்று கூறினான்….
“அம்மாவ இப்ப சமாதானம் செஞ்சி கூட்டிட்டு வந்துடுவா…. ஆனா குட்டிமாக்கு கோவம் வந்துச்சி கோவம் போக ரொம்ப நாள் ஆகும் எத்தனை நாளைக்கு ரெண்டு பேரும் இப்படி இருப்பாங்களோ தெரியல அண்ணா” என்று கூறினான்…. சொன்னது போலே வசும்மாவை சமாதானம் செய்து கூட்டி வந்துவிட்டாள்…..வசும்மா இப்போது போது தான் மீனாட்சி மாறனை வரவேற்றார்… பிரியாவும் இப்போது தான் வரவேற்றாள் … கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிளம்புவதாக கூறினர்… சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு கூறினார் வசும்மா….
மீனாட்சி மறுத்துவிட்டு இவர்கள் மூவரையும் அங்கு சாப்பிட வருமாறு கூறிவிட்டு மாறனுடன் அங்கு வீட்டுக்குச் சென்றாள்…. அஜயும் நிவேதாவுடன் முன்னவே சென்றுவிட்டான்… இருவரும் வீட்டுக்கு செல்லும்போது நிவேதா சிவாம்மா மடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்…. அப்பத்தா தாத்தா சிவாம்மா மூவருக்கும் அஜய் அங்கு நடந்ததைச் சொல்லிக் கொண்டிருந்தான்… தாரா பாப்பா தாத்தாவின் மடியில் உறங்கிக் கொண்டிருந்தாள்….
தாத்தா மாறனிடம் அப்பறம் என்ன ஆச்சு ப்பா.. தாயி கோவமா வந்தது… ஆனா அழுதுட்டே தூங்கிடிச்சி.. அஜய்க்கு கொஞ்சம் தான் தெரியும் போல நீ சொல்லு என்ன ஆச்சி அதிக்கு தெரியுமா… என்று கேட்டார்… மாறனும் அனைத்தையும் சொல்லிவிட்டு நிதிஷ் கூறியதையும் கூறினான்… “தாத்தா பாப்பாக்கு கோவம் வந்தா சீக்கிரம் போகாதாம்.. ரொம்ப நாள் ஆகுமாம் கோவம் போக..” என்று கூறினான்…
அப்பத்தா தான் “ரெண்டு பேரும் கோவப்படுறதுல கூட ஒத்துமையா இருக்காங்க… ராசாக்கும் கோவம் வந்த போகாது தாயிக்குமா” என்று கூறினார்….. அனைவரும் சிரித்துவிட்டு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்…. மீனாட்சி தான் வசும்மா நிதிஷ் பிரியாவை சாப்பிட அழைத்ததைக் கூறினாள்….
எனவே சிவாம்மா அப்பத்தா மீனாட்சி மூவரும் சமைக்க சென்றனர்….. சிவாம்மா மடியில் தூங்கி கொண்டிருந்த நிவேதாவை சிவாம்மா அப்படியே சோபாவில் உள்ள தலையணையில் வைக்க முடிவு செய்தார்… ஆனால் மாறன் அதை மறுத்து அவளை தன் மடியில் தூங்க வைத்தான்…. மற்ற மூவரும் சமைக்க செல்ல தாத்தாவும் மாறனும் பேசிக் கொண்டிருந்தனர்… அஜய் பெரும்பாலும் சிவாம்மா இருக்கும் இடம் தான் இருப்பான் எனவே அவன் அவர்களுடன் சென்று விட்டான்….
மாறனின் மடியில் தூங்கும் நிவேதாவைக் கண்டு அப்போது தான் அதியின் வீட்டுக்கு வந்த வசும்மா பிரியா நிதிஷிற்கு சந்தோசமாக இருந்தது… அவளின் புகுந்தவீட்டில் இளவரசியாகவோ ராணியாகவோ இருப்பாள் என…..