அதி பெங்களூரில் இருந்து வரும் நாளுக்கு முதல் நாள் இருவருக்கும் ஊடல் நடந்தது…. எப்போதும் காலையில் அழைக்கும் அவன் அன்று அழைக்கவில்லை…. அவளுக்கு காலை எழும்போதே மனதிற்கு தப்பாக எதோ நடக்க போவது போல் தோன்றியது…. எழுந்தவுடன் அவள் முதலில் அழைத்தது அவனுக்கு தான் முதலில் ரிங் போனது…. எடுக்கவில்லை… மீண்டும் அழைத்தாள்… “அட் ஒர்க்(at work)” என்று அனுப்பிவிட்டு சுவிட்ச் ஆப் செய்துவிட்டான் போனை….
இவள் அந்த நாளை சஞ்சலத்துடனே தொடங்கினாள்….. வழக்கம் போல் அன்றாட வேலைகளை செய்துவிட்டு சிஏ கோச்சிங்கு சென்று விட்டாள்…..
மதியம் உணவு வேளையில் அவளவனுக்கு அழைத்தாள்…. ரிங் போனது எடுக்கவே இல்லை… மீண்டும் ஒருமுறை அழைத்தாள்…. அப்போதும் எடுக்கவே இல்லை…. மாலை நிதிஷ் வந்து அழைத்து சென்றான்…
அவள் முகத்தில் இருக்கும் வருத்தத்தை அவன் கண்டுகொண்டான்… “ஏன் டா வருத்தமா இருக்க… எதோ பிரச்சனையா.. உடம்பு எதுவும் சரி இல்லையா” என்று கேட்டான்…
“இல்ல அண்ணா நல்லா தான் இருக்கேன்”…. என்று கூறினாள்… அவனும் சரி எனக் கூறிவிட்டு வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்….
வீடு வந்தவுடன் அவனிடம் விடைபெற்று கொண்டு அதியின் வீட்டை நோக்கி நடந்தாள்…. அவளின் முக வாட்டத்தைப் பார்த்து சிவாம்மாவும் கேட்டுவிட்டார்…. “டேய் நிவிம்மா ஏன் உன் முகம் வாட்டமா இருக்கு… உடம்பு சரியில்லையா…. வேற எதோ பிரச்சனையா??????” … என்று கேட்டார்….
அவள் எதுவும் கூறாமல் அவரை போய் கட்டிக் கொண்டாள்… “என்ன டா தங்கம் ஆச்சி…. சொல்லு டா” என்று அவளின் முதுகை தட்டிக் கொடுத்து கேட்டார்…..
“பாவா உங்களுக்கு போன் பண்ணங்களா ம்மா…. காலைல போன் பண்ற அப்ப வேல இருக்குனு சொன்னாரு.. மதியம் கால் பண்ணேன் …. ரிங் போச்சி எடுக்கவே இல்ல. காலைல இருந்து ஒரு மாதிரியா இருந்துச்சு …. ஆனா கால் பண்ணா பாவா எடுக்க மாட்டிங்குறாங்க அத்தம்மா” என்று கூறினாள்
“விடு டா வேலையா இருக்கும்…. நைட் பேசலாம் அவன் கிட்ட போய் பிரஷ்(fresh) ஆகிட்டு வா… டீயும் சமோசா பண்ணி இருக்கேன் சாப்பிடலாம்” என்று கூறி அவளை ரூமிற்கு அனுப்பி வைத்தார்…
ஆனால் அவள் சென்றவுடன் அவரும் சோபாவில் சோகமாக அமர்ந்தார்….. ஏனென்றால் அவருக்குமே காலையில் இருந்து மனது சரியில்லை… மதுரைக்கு அழைத்து அனைவரிடமும் பேசினார்… அங்கு அனைவரும் நலம் என தெரிந்து கொண்டு அதிக்கு அழைத்தார்.. ஆனால் அவன் முழு அழைப்பு சென்றும் அழைப்பை ஏற்கவில்லை…..
நிவேதா வந்தவுடன் இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்… வசும்மா வந்து இருந்தார்… அவருடன் சிவாம்மா பேசிக் கொண்டிருந்தார்… நிவேதா படிக்க சென்று விட்டாள்….
அங்கு மதுரையில் மாறனுக்குமே காலையில் இருந்தே எதோ மாதிரியாக இருந்தது… அவனும் அதிக்கு அழைத்து இருந்தான்…. ஆனால் அவன் அழைப்பையும் எடுக்கவில்லை… அவனின் முகத்தில் சிந்தனை கோடுகள் ஓடிக் கொண்டே இருந்தது… அதை கவனித்து விட்டு மீனாட்சி மாறனிடம் “என்னாச்சு மாமா… உன் மொகம்(முகம்) ஏன் இவளோ யோசனைலயே இருக்கு… எதோ பிரச்சனையா மச்சான்…. நீ எப்பவும் இப்படி இருக்க மாட்டியே … ஏன் இன்னிக்கு எதோ வாட்டமா இருக்கு….” என்று கேட்டாள்
“ஒன்னும் இல்ல தங்கமே…. வீரா காலைல இருந்து போன் எடுக்கல…. அது தான் ஒரு யோசனைல இருந்துட்டேன்…. வேற ஒன்னும் இல்ல…. நீ உள்ளாற போ… நான் அப்படியே தோப்புக்குப் போயிட்டு வரேன்…. தாத்தாவ பாக்க போகணும் … தோப்புக்கு போயிட்டு வந்ததும் அங்க வீட்டுக்குப் போலாம்” என்று தோப்புக்குச் சென்றுவிட்டான்…..
அவன் அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிட்டான்… இருவரும் தாரா பாப்பாவை அழைத்து கொண்டு அதியின் வீட்டுக்கு சென்றனர்…
இருவரையும் அனைவரும் வரவேற்றனர்….. மீனாட்சி அப்பத்தாவுடன் பேசச் சென்றாள்…. மாறன் தாத்தா மற்றும் சுந்தர் அப்பாவுடன் பேசுச் சென்றான்…..
“சொல்லு மாறா என்ன பிரச்சனை??…. பேசணும்னு சொன்ன”… என்று தாத்தா மாறனிடம் கேட்டார்…
“தாத்தா ஜிஎஸ்டிக்கு(gst) டேக்ஸ்(tax) இப்பலாம் கரெக்டா இருபதாம் தேதி தான் கட்டுறாராம் மேனேஜர்…… ஆனா நான் அவர்கிட்ட பதினாலாம் தேதியே அமௌன்ட் குடுத்துவேன்…. ஆனா லாஸ்ட் மூணு மாசமா அவர் லாஸ்ட் டேட் தான் பே(pay) பண்ணி இருக்காரு….. இதுனால ஒவ்வொரு டைம் லாஸ்ட் டே கட்டுறதுனால பேங்க்ல செக்(cheque) பாஸ் ஆகாதுனு ஆடிட்டர் சொல்றாரு…. ஏன் மூணு மாசமா லேட்டா கட்டுறிங்கனு கேட்குறாரு தாத்தா”
ஒரு வேல செக் பாஸ் ஆகலனா அடுத்த நாள் பைன்(fine) அமௌன்ட் பே பண்ணனும்னு சொல்றாரு….
பெனால்டி(penalty) அமௌன்ட் பே பண்ணனும்… அது மட்டும் இல்லாம இன்ட்ரெஸ்ட் அமௌன்ட் பே பண்ணனும் தாத்தா”…. என்று கூறினான் மாறன்
“நான் என்னனு விசாரிக்குறேன் மாறா…. அப்பறம் உன் மொகம் ஏன் வாட்டாம இருக்கு” என்று கேட்டார் தாத்தா…
“ஒன்னும் இல்ல தாத்தா நான் நல்லா தான் இருக்கேன்……” என்று கூறினான்….
அங்கு இரவு உணவு முடித்துவிட்டு மாறன் மீனாட்சி மற்றும் தாரா பாப்பாவை அழைத்து கொண்டு அவன் வீட்டுக்கு சென்று விட்டான்….
இங்கு சேலத்தில்
ஏழு மணி அளவில் வசும்மா அவர் வீட்டுக்கு சென்று விட்டார்…. அவர் சென்றவுடன் நிவி மற்றும் சிவாம்மா இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்….
எட்டரை மணியளவில் இருவரும் சாப்பிட்டு விட்டு சிவாம்மா சுந்தர் அப்பாவிடம் பேசச் சென்று விட்டார்…..
நிவி அதிக்கு அழைத்து பார்த்தாள்.. ஆனால் அவன் அப்போதும் எடுக்கவில்லை….. ஒன்பது மணிக்கு சிவாம்மா பேசி விட்டு வந்து விட்டார்….
“என்ன நிவிம்மா அதிபோன் எடுத்தானா டா?”…. என்று கேட்டார் சிவாம்மா….
அவளும் அவனுக்கு அழைத்தாள்…… இந்த தடவை முழு ரிங் போய் கட்டாகும் போது எடுக்கப்பட்டது…. சிவாம்மா ஸ்பிக்கரில் போட கூறினார்…..
ஆனால் அவன் போன் எடுத்தவுடன் திட்ட ஆரம்பித்து விட்டான்… “நிவேதா போன் எடுக்கலான விட்ரணும்… எதுக்கு திரும்ப திரும்ப போன் பண்ணி டார்ச்சர் பண்ற… கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா…. ஒருத்தர் போன் எடுக்கலான பண்ணக் கூடாது… அந்த பேசிக் நாலேட்ஜ்(basic knowledge) கூட இல்லையா உனக்கு…. வேல இருக்குனு காலைல மெசேஜ் பண்ணேன்ல… அறிவு இல்ல… எதுக்கு திரும்பியும் போன் பண்ற… ஒரு டைம் பண்ணா பரவால்ல ஆனா அத்தனை டைம் பண்ணி இருக்க…சென்ஸ் இல்ல…. சே இதுக்கு தான் மெட்சுரிட்டி இல்லாத ஆளுங்கள லவ் பண்ண கூடாது போல வை போனை” என்று அவள் என்ன கூற வருகிறாள் என்று கூட கேட்காமல் திட்டிவிட்டு வைத்து விட்டான்…
நிவேதா அவன் திட்டியதை கேட்டு அதிர்ச்சியாகி அமர்ந்து இருந்தாள்…. எப்போதும் அம்மு அம்முமா என்று அழைக்கும் அதி இன்று முழு பெயரையும் அழைத்து இருந்தான்… அது மட்டுமில்லாமல் இது வரை அவளிடம் சத்தமாக கூட பேசாதவன் இன்று திட்டி இருந்தான்….
அதனால் தான் அதிர்ந்து அமர்ந்து இருந்தாள்…. சிவாம்மாவும் அதிர்ந்து தான் இருந்தார்… அதி இப்படி பேசுவான் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை….
அவர் சென்று நிவிம்மா என்று தோளை தொட்டார்… அவள் எதுவும் கூறவில்லை.. அவரை அணைத்து கொண்டு சத்தமில்லாமல் அழுதாள்…. சிவாம்மா அவளை ஆறுதல் படுத்தி உறங்க அழைத்து சென்றார்…..
அடுத்த நாள் காலை
அன்று முரளியின் பையன் அகிலின் பிறந்தநாள்…. மாலை பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்து இருந்தான்….. காலை அனைவரும் அவரவர் வேலைகளை பார்க்க சென்று விட்டனர்… நிவேதா நேற்று இரவு நடந்த நிகழ்வில் தாகத்தினால் இன்னும் வெளியே வரவில்லை….. அதனால் கோச்சிங் கிளாஸ் செல்லவில்லை…. நிதிஷ் கேட்டதுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை என்று கூறிவிட்டாள்……
அவன் நிவேதாவிடம் “குட்டிமா என்ன ஆச்சு வா ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம் வா டா”என்று அழைத்தான்…..
“இல்ல ண்ணா வீட்டுல ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்” என்று கூறி மறுத்துவிட்டாள்…..
அவனும் “ரெஸ்ட் எடு டா” என்று கூறி சென்று விட்டான்….
சிவாம்மா நிவேதாவிடம் “டேய் நிவிம்மா நேத்து அதி பேசுனது நினைச்சி இன்னும் ஏன் டா சோகமா இருக்க…. அவன் வரட்டும் இருக்கு…. மதுரைக்கு போன் பண்ணி உன் அப்பா கிட்டயும் சொல்லிட்டேன்…. அவரும் அவன் கிட்ட கேட்குறன்னு சொல்லி இருக்காரு…. அவன் வரட்டும்” என்று அவளிடம் கூறினார்…
அத்தமா வேணாம் அப்பாவ திட்ட வேணாம்னு சொல்லுங்க… அவரு வேல இருக்குனு சொல்லியும் நான் நிறைய டைம் போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டேன்…. அவருக்கு என்ன வேலையோ அது தான் திட்டிட்டாரு…. என் மேல தான் தப்பு” என்று கூறி உள்ளே சென்று விட்டாள்….
மாலை ஆனது அனைவரும் பிறந்தநாள் விழாக்கு முரளியின் வீட்டுக்கு சென்றனர்…. முரளி கல்வித்துறை அலுவலகத்தில் வேலையில் உள்ளான்…. சேலத்தில் இருப்பது வாடகை வீடு தான் ஆனால் மதுரையில் சொந்த வீடு ஒன்று உள்ளது…….. அது அங்கு செல்லும் போது தங்க அந்த வீட்டை தான் உபயோக படுத்துவான்… சின்ன மாடிவீடு தான்…. மாறன் வீடு பக்கத்தில் தான் உள்ளது அந்த வீடு…..
வசும்மா நிதிஷ் பிரியா சிவாம்மா நிவேதா அனைவரும் ஒரே காரில் தான் வந்து இருந்தனர்… நிவேதா இன்னும் பிரியாவிடம் பேசவில்லை…. அவர்கள் அங்கு சென்ற சிறிது நேரத்தில் அதியும் முரளியின் வீட்டுக்கு வந்து விட்டான்… இரண்டு மாதம் கழித்து அவனை காண்பதால் அவனிடம் செல்ல துடித்த கால்களை அடக்கி கொண்டு திரும்பி நின்று விட்டாள்…. நிவேதா சிவாம்மா தவிர மற்ற அனைவரும் வரவேற்றனர்….
அதியை பார்த்ததும் அகில் “சித்தா” எனக் கூறி ஓடி வந்தான்…. அவனை தூக்கி கொண்டு சோபாவில் அமர்ந்தான்… “சித்தா தூரி ஆட்டு” எனக் கூறி அவனின் பாதம் மேல் ஏறி நின்றான்….. அவனும் ஆட்டினான… ஆனால் இரண்டு நிமிடத்தில் நிவேதா அவனிடம் இருந்து அகிலை கோவமாக பிடிங்கி கொண்டாள்…
அவளின் அந்த வேகத்தில் அனைவரும் அவளை அதிர்ச்சியாக பார்த்தனர்… அதியோ அவளை ஆராய்ச்சியாக பார்த்தான்….