“சரியா தான் ஆர்யா பண்ணிருக்க. அப்புறம் ஏன் புலம்பிட்டு இருக்க. வந்த உடனே பேசி புரிய வைக்க இது என்ன சினிமாவா? அவளுக்கான ஸ்பேஸ் நீ குடுத்து தான் ஆகணும் மேன்!” ஆர்யா தான் கண்ணாடி முன் நின்று தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தான்.
“அப்படிங்களா? அப்ப நீங்க தெளிவா தான் இருக்கீங்க? இது லவ் தான்?” என மனம் அவனிடம் கேள்வி கேட்பதாய் தெரிய,
“யாஹ் மேன்! ஐம் டேம்ன் ஷூர்!” கண்ணாடியின் முன் அத்தனை தெளிவாய் உறுதி யுடன் தன் பிம்பத்திடம் கூறினான்.
“அந்த பொண்ணு யார் என்னனு தெரியாம எங்கருந்து டா குதிச்சது அந்த லவ்வு? இன்னைக்கு தான் நீ மூணாவது நாளா அவங்களைப் பாக்குற”
“ஓஹ் காட்! அது தான் ப்ரோப்லமா? அண்ட் அதெல்லாம் ஒரு ப்ரோப்லேமா? எனக்கு பார்த்ததுமே புடிச்சதே? அது லவ்வா? இல்ல அது லவ் இல்லைனா நான் ஏன் அவளை தேடனும்?”
“இதெல்லாம் கணக்குல சேர்த்தி இல்ல டா ராஜா. காலேஜ்ல சைட்டடிக்க இப்படி தான தேடி சுத்துவிங்க?”
“அதுவும் இதுவும் ஒன்னா? எனக்கு புடிச்சிருக்கு. என்னால பீல் பண்ண முடியுது. புகழ் பார்க்ல அவன் பிளான் இது தான்னு சொல்லவும் சத்தியமா என்னால அக்சப்ட் பண்ணவே முடியல. கோபத்துல அவன்கிட்ட எவ்வளவோ வார்த்தையை விட்டேன். ஆனா திகழை பார்த்ததும் நான் சடனா பிளாட் ஆகிட்டேன். அது லவ்னு நான் சொல்லல. ஆனா அந்த நிமிஷம் நான் ஒரு பட்டர்ஃபிளை மொமெண்ட் பீல் பண்ணினேன். சட்டுனு என் முடிவை மாத்தி இதோ இப்ப அவ என் வீட்டுக்குள்ள. அதுவும் மிஸஸ் ஆர்யன்ற பேர்ல. நேத்து வரை சின்னதா ஒரு டவுட் என் மேலயே இருந்தது இது லவ்வா இல்லையானு. ஆனா திகழ் கூட இந்த வீட்டுக்குள்ள வரவும் சம் மேஜிக்ஸ் எனக்குள்ள.” என தனக்கு தானே அவன் முகம் பார்த்து பேசிக் கொண்டிருக்க, முகம் முழுதும் பூவாய் மலர்ந்திருந்தது.
“இது லவ்வா தான் இருக்க முடியும். எனக்கு மனைவியா திகழ் இங்க வந்தது வந்தது தான்!” மீண்டுமாய் சொல்லிக் கொண்டவன் அன்னையை நினைத்தும் நகைத்துக் கொண்டான்.
புகழ் வேந்தனும் வள்ளி தேவியும் சென்ற சிறிது நேரத்தில் முகத்தில் கோபம் அப்பட்டமாய் தெரிய அங்கும் இங்குமாய் சுற்றி வந்த விஸ்வநாதன் ஆர்யன் சோஃபாவில் அமர்ந்திருக்க கண்டு அவனருகே சென்று மீண்டுமாய் உர்ரென்ற முகத்தோடு அமர்ந்தார்.
மீனாட்சியோடு சமையலறையில் இருந்து வெளிவந்த திகழ்மதியைப் பார்த்ததும் வந்ததும் பார்த்தது போல இப்போதும் சிந்தனையோடுப் பார்த்தவர்,
“உன்னை எங்கேயோ பார்த்திருக்கேனே!” என்று அருகில் வந்துவிட்டவர்கள் காதில் விழுவது போலவே சொல்ல,
“ம்ம் அடிக்கடி பார்த்திருக்க வாய்ப்பிருக்கு!” என்றான் ஆர்யன்.
“அடிக்கடியா?” மீனாட்சி கேட்க,
“ஆமா ம்மா! நம்ம ஸ்டோர் இவ்வளவு தூரம் வந்ததே திகழ்னால தான்!” என்றான் ஆர்யன் புன்னகையோடு.
“என்ன டா உளறுற? நான் ஆடா மாடா உழைச்சு….. “
“ப்பா ப்பா! வெயிட் வெயிட்! அதெல்லாம் சரி. நீங்க தான அட்வர்டைஸ்மென்ட் குடுத்தீங்க? அந்த அட்னால தான் நம்ம ஸ்டோர் இன்னும் ஃபேம் ஆச்சு?” என்று கேட்க,
“ஓஹ்!” என்ற விஸ்வநாதனுக்கு சட்டென நியாபகம் வந்துவிட்டது தன்னுடைய நிறுவனத்தில் இந்த பெண்ணைப் பார்த்திருப்பது.
“அப்பா என்ன பன்றாங்க?” அடுத்து சாதாரணம் போல விஷ்வநாதன் கேட்டுவிட,
“ப்பா! அதான் சொன்னேனே! டைம் வரும் போது நானே சொல்றேன்!” என ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டான் ஆர்யன்.
இப்பொழுது அவராய் சில கற்பனைகளை கொண்டு வந்தார் விஸ்வநாதன். ‘சாதாரண நடுத்தரக் குடும்பம் போல. அதனால் தான் இவர்கள் காதலை இந்த பெண்ணின் குடும்பம் ஏற்றுக் கொள்ளவில்லை போல” என நினைத்தவர் அமைதியாய் இருக்க மீனாட்சிக்கு திகழ்மதியை தெரியப்படுத்தினான் ஆர்யன்.
“அப்படி தான் உங்களுக்குள்ளயும் பழக்கமா?” முறைத்தபடி மீனாட்சி கேட்க,
“ஆமா ஆண்ட்டி!” என்று திகழ்மதியும், “இல்லை ம்மா!” என்று ஆர்யனும் ஒரே நேரத்தில் கூறிக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள
“இன்னும் என்னல்லாம் பொய் சொல்லி என்னை ஏமாத்தி இருக்கியோ!” என்ற மீனாட்சி எழுந்து சென்றுவிட, விஷ்வநாதனும் அறைக்குள் சென்றுவிட்டார்.
“ஹப்பா!” என்று ஆசுவாசமாய் சாய்ந்து அமர்ந்தான் ஆர்யன்.
“இருந்தாலும் இதெல்லாம் பாவம்னு தோணுது சார். ஆண்ட்டி ரொம்ப பீல் பன்றாங்க. பாவமா இருக்கு. நீங்க இன்னும் கொஞ்சம் கூட யோசிச்சுருக்கலாம்!” திகழ்மதி ஆர்யனிடம் சொல்ல,.சிறு புன்னகை கொடுத்தவன்,
“அம்மாவை ஏமாத்துற பிளான் எல்லாம் எனக்கு இல்லை. ஆனா சில விஷயங்கள் புரிய வைக்க முடியாதே!” என்று சொல்ல, அது அவளுக்கே புரியவில்லை.
“சொல்ல வேண்டிய நேரம் நானே சொல்லிடுவேன்!” என்றான் அவள் விழித்ததில் சமாதானமாய்.
“உங்களுக்கு இங்க எல்லாம் ஓகே தானே?” என்றதும் அந்த பெரிய வீட்டினை சுற்றிலும் பார்த்தாள்.
“மனுஷங்க தவிர எல்லாம் ஓகே தான்னு சொல்ல வர்றிங்க இல்ல?“ என்று சொல்லி புன்னகைக்க,
“அதெல்லாம் இல்லை சார்!” என்றாள் அவளும் புன்னகைத்து.
“அம்மா ரொம்ப ரொம்ப ஸ்வீட். என்னோட மேரேஜ் அவங்களோட ட்ரீம். அதான் இவ்வளவு கோபம். அதுவும் என் மேல தான் இருக்கும். சீக்கிரம் உங்களோட நார்மல் ஆகிடுவாங்க!”
“அப்புறம் இன்னிக்கு மாதிரி எப்பவும் அம்மாகிட்ட வேற வேற பதில் சொல்லி மாட்டிக்க கூடாது. சோ அதுல கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கனும்!” என்றான்.
“ஹ்ம் புரியுது சார்!”
“தேங்க்ஸ்! ரூம் மேல இருக்கு. நீங்க வேணா கொஞ்ச நேரம்…” என்று ஆர்யன் சொல்ல வர,
“ஆமா! உன் பேரு என்ன?” என்றபடி அவர்களை நோக்கி வந்தார் மீனாட்சி.
“திகழ்மதி ம்மா!”
“நான் உன்கிட்ட கேட்கல. நீ சொல்லு உன் பேரு என்ன? அவன் சொன்னா தான் பேசுவியா?” என்று அரட்டல் போட,
“இல்ல ஆண்ட்டி! திகழ்மதி. மதினு கூப்பிடுவாங்க!” என்று அவள் கூறிட,
“சரி சரி உள்ள வா!” என தான் நின்ற சமையலறைக்கு அவளையும் அழைத்து சென்றவர் சமையலறை வாசலில் நின்று,
“மேல இருக்குறது உன்னோட ரூம். அங்க நீ இரு. மதி என் கூட தான் இருப்பா” என்று சொல்ல, சோஃபாவில் அமர்ந்திருந்தவன் சட்டென எழுந்து நின்றான்.
“கல்யாணம் உன் இஷ்டமா இருக்கலாம். அதுக்காக நீ சொல்றப்படி ஆட முடியாது. நான் ஜோசியர்கிட்ட சில விஷயங்கள் கேட்டு எல்லாம் தெரிஞ்சிகிட்ட அப்புறம் தான் மதி மாடிக்கு வருவா!”என்று சொல்ல,
“நான் எதுவும் சொல்லலையே ம்மா!” என்றான்.
“சொல்லி தான் பாரேன்!” என்றவர் உள்ளே சென்று விட,
“உஃப்!” என மூச்சை இழுத்து விட்டவன் தான் தன் அறையில் கண்ணாடி முன் வந்து நின்றிருந்தான்.
“இப்ப அவளுமே கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா பீலி பண்ணுவா. இதுவும் நல்லதுக்கு தான் விடு டா ஆர்யா!” என ஆரம்பிக்க,
“அப்புறம் ஏன் டா கண்ணு கலங்குது!” என்று ஆரம்பித்து வைத்தது அவனது மன பிம்பம்.
“எக்ஸ்பெக்ட் பண்ணினேன்ல. அதான். பட் இது தான் நல்லது. கொஞ்சம் கொஞ்சமா தானே அவளுக்கு புரிய வைக்கணும். அதான் முப்பது நாள் டைம் இருக்கே!” என தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டாலும் சிறு ஏமாற்றம் தான் அவனை இந்த அளவுக்கு கண்ணாடி முன் நின்று புலம்பவும் வைத்திருந்தது.
இப்பொழுது தான் மதிய நேரமே வந்திருக்க இப்படியே இருந்தால் இன்னும் மனம் குழம்பி தவிக்கும் என புரிந்தவன் கீழே வந்து அன்னையிடம் ஸ்டோருக்கு கிளம்புவதாய் சொல்ல, அவர் பதில் கூறவில்லை.
திரும்பி திகழ்மதியை கண்டவன் ஒரு புன்னகையை கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
“சாப்பிட்டு போக சொல்ல மாட்டியா?” என அதையும் திகழ்மதியிடம் மீனாட்சி முறைக்க, திருதிருவென விழித்தாள் அவள்.
சமைத்து முடித்து டேபிளில் எடுத்து வைத்த பெண் சென்றுவிட, மீனாட்சி வந்து அமர்ந்தவர் திகழ்மதியையும் அமர வைத்தார்.
“அங்கிள் சாப்பிட வரலையே!” திகழ்மதி கேட்க,
“அவங்க தங்கச்சி வீட்டுக்காரர்க்கு ராஜா விட்டு குடுத்துட்டான்னு கோவமா இருப்பாங்க. நானா கூப்பிட்டா அது என் தலையில தான் விடியும். பசிச்சா வந்து சாப்பிடட்டும் விடு!! என்று சொல்லி இருவருக்கும் பரிமாற, சட்டென தம்பி தங்கையின் நியாபகம் திகழ்மதிக்கு.
மீனாட்சி கூறிய அறையில் தன் உடைமையை வைத்திருந்தவள் சென்று அலைபேசியை எடுத்து வந்து மீண்டும் அவரருகில் அமர்ந்து கொண்டு அரவிந்த் நம்பருக்கு அழைத்தாள்.
“க்கா! இங்க பாரேன்! இந்த அர்வி பேக்ல இன்னைக்கு ஒரு கிப்ட் பாக்ஸ் இருந்துச்சு. உண்மையை சொல்லுடான்னா நடிக்குறான்!” என்று அழைப்பை ஏற்றதும் மகிழினி பட்டாசாய் பேச,
“ஓஹ்!” என்ற திகழ்மதி, அவள் சொன்னதை விடுத்து,
“சாப்பிட்டீங்களா ரெண்டு பேரும்? மதியம் வரை தானே காலேஜ்? எப்ப வந்திங்க?“ என்று கேட்க,
“சாப்பிட்டோம் க்கா! அத்தை மாமா கூட ஹாஸ்பிடல்ல இருக்காங்க இல்ல அதான் நான் அர்வி, அனு எல்லாம் ஒன்னா சாப்பிட்டோம்.” என்ற மகிழினி நியாபகம் வந்தவளாய்,
“நீ எங்க இருக்க க்கா? சாப்டியா? சாப்பாடு நல்லா இருக்குதா?”
“ம்ம் டா!” என்றவள் அங்கிருந்த பல உணவு வகைகளைப் பார்த்ததும் லேசாய் கண்கள் கலங்க, சமாளித்துக் கொண்டவள்,
“சரி நான் அப்புறம் பேசுறேன் மகி. பார்த்து பத்திரம்!” என்று சொல்லி வைத்து விட்டாள்.
அனைத்தையும் பார்த்திருந்த மீனாட்சிக்கு கேட்கலாமா வேண்டாமா என்றொரு எண்ணம்.
“சரி சரி சாப்பிடு!” என்று அதட்டலாய் கூற, தலையசைத்து சாப்பிட துவங்கினாள்.
பார்க்க அத்தனை சாந்தமான முகத்தோடு நெற்றியில் குங்குமம் வீற்றிருக்க, ஆனால் முகம் முழுதும் கடுமை காலையில் தான் வந்ததில் இருந்து. என்னவோ அந்த கடுமை அவருக்கு சரியாய் பொருந்துவது போல தெரியவில்லை.
“நான் கேட்டுட்டு இருக்கேன். என்ன பார்த்துட்டே இருக்க?”
“இல்ல சும்மா தான் ஆண்ட்டி!”
“அவன் வெளில சாப்பிடவே மாட்டான். மணி என்னனு கூட பார்க்காம போயிருக்கான். இன்னும் அஞ்சு நிமிசத்துல திரும்பி வர்றானா இல்லையா பாரு. இனி இதை எல்லாம் நீ தான் கவனிக்கணும்” என்றும் சொல்ல,
“ம்மா! லஞ்ச் ரெடியா?” என்று கேட்டு வந்தான் ஆர்யன்.
எத்தனை புரிதல் மகன் மேல் அன்னைக்கு என நினைத்தவள் ஒரு புன்னகையுடன் அவனைப் பார்க்க, அதில் ஆர்யனுக்கு தானாய் ஒரு பரவசப் புன்னகை.