“உங்களுக்கு எல்லாமே விளையாட்டா போச்சா? எவ்வளவு சாதாரணமா சொல்றிங்க? எனக்கு படபடன்னு வருது!” ஸ்வேதா பயந்து நடுங்கினாள்.
“சத்தம் போட்டு இப்பவே காட்டி குடுத்துடாத டி அப்பாவும் வெளில இருக்காங்க. டென்ஷன் ஆகாம நான் சொல்றதை கேளு! பேபி பயந்துட போறாங்க!” என்றான் அவள் அருகில் அமர்ந்த புகழ் .
“என்னங்க இப்படி சொல்றிங்க? லவ் பண்ண பொண்ணு தேட போறாங்க ஒரு மாசம் டைம் வேணும் சொன்னிங்க. அதுக்காக தானே உஷா அந்த பொண்ணை பேசி சம்மதிக்க வச்சா. இப்ப அந்த பொண்ணையே அண்ணா விரும்புறதா சொல்றிங்க. அதுவும் முழுசா நாலு நாள் கூட ஆகலைங்க அந்த பொண்ணை அண்ணா பார்த்து. ம்ம்ஹும் இது எனக்கு சரியாப்படல. நான் மீனாட்சி அம்மாவை பார்த்து எல்லாம் சொல்ல போறேன்!” என்றாள் பயந்து வியர்த்து.
“வேற வினையே வேண்டாம். சும்மா இரு ஸ்வே! நிஜமாவே நடிக்குறதுக்காக நான் தான் அவனுக்காக அந்த பொண்ணை ரெடி பண்ணினேன். ஆனா அதே பொண்ணை அவனுக்கு புடிச்சிருக்கு. அது என்ன அவ்வளவு பெரிய தப்பா? நீயே யோசிச்சு பாரேன். இதுக்கு மேல அவன் ஒரு மாசத்துல ஒரு பொண்ணை தேடி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க கேட்டு… இதெல்லாம் ஆவுற கதையா?”
“அதுக்கு? இதெல்லாம் தெரியாம தான் ஒரு மாசத்துக்குன்னு டீல் பேசினீங்களா? உங்க ப்ளனே இந்த ஒன் மன்ந்த்ல ஆர்யா அண்ணாக்கு புடிச்ச பொண்ணா கிடைக்கனும்ன்றது தானே?”
“ஆமா ஸ்வே! ஆனா நடிக்க வந்த பொண்ணே அவனுக்கு புடிச்சி போகும்னு யார் கண்டா? இப்ப அவனுக்கு வேலை ஈசி. பொண்ணு கிடைச்சிருச்சு. இனி லவ் பண்ணி கல்யாணம் மட்டும் பண்ணிட்டா நானும் ஹாப்பி ஆயிடுவேன்”
“அந்த பொண்ணுக்கு நிறைய பேமிலி ப்ரோப்லேம் அது இதுன்னு உஷா சொன்னா. சரி அவங்க பிரச்சனைக்கு நம்ம காசு யூஸ் ஆகுதேன்னு நான் நினச்சேன். இப்ப அந்த பொண்ணை நானே பிரச்சனைல மாட்டி விட்ட மாதிரி ஆகாதா?”
“ஏன் டி ஆர்யா லவ் பண்றது உனக்கு பிரச்சனை பண்ற மாதிரி இருக்கா?”
“நான் அதை சொல்லலைங்க. அவங்களுக்கு எவ்வளவோ ப்ரோப்லேம் இருக்கும். அதுல இப்ப இப்படி ஆர்யாண்ணா….. “ என்ற ஸ்வேதாவிற்கு எப்படி புகழுக்கு எடுத்து சொல்வது என்று தெரியவில்லை.
“உங்களுக்கு நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா? அந்த பொண்ணுக்கு நிச்சயம் ஆகி இருந்தா? வேற யாரையாச்சும் லவ் பண்ணி இருந்தா? அதெல்லாம் விடுங்க. கல்யாணம் ஆகி இருந்தா? “ என்றெல்லாம் எண்ணி கலங்கி ஸ்வேதா இப்பொழுதும் பதட்டமாய் சொல்ல,
“நீ சொல்றதை பார்த்தா எனக்கே ஹார்ட் அட்டாக் வந்துடும் போல. உன்கிட்ட சொன்னேன் பாரு. என்னை சொல்லணும்!” என்றவன் உடனே ஆர்யாவிற்கு அழைத்தபடி ஸ்வேதாவைத்து முறைத்துவிட்டு தனியே சென்றான்.
“உன் வாயில இருந்து நல்ல வார்த்தையே வராதா டா?” பல்லைக் கடித்து கோபமாய் கேட்டான் ஆர்யன்.
மனைவி இறுதியாய் கூறியதை அந்த இரவு நேரத்தில் உடனே அழைத்து ஆர்யனிடமும் சொல்லி சந்தேகமாய் புகழ் கேட்க, அப்பொழுது தான் நல்ல மனநிலையில் உறங்க வந்த ஆர்யனுக்கு புகழ் கேள்வியில் காதில் இருந்து புகை வந்தது.
“ஆர்யா! கோபப்படாத டா. தப்பு தான். ஸ்வேதாகிட்ட எல்லாம் சொன்னேன். அவ பயந்து போய் இப்படி கேட்டா. எனக்கும் பயமாகிட்டு. அதான் உன்னை அலெர்ட் பண்ணேன்!”
“போய் தொலை!” என்ற ஆர்யனுக்கும் ஒரு நொடி பக்கென்று தான் ஆகிவிட்டது. அலைபேசியை காதில் வைத்துக் கொண்டே தன் அறையில் அங்கும் இங்கும் நடந்தபடி நெஞ்சை நீவிவிட்டுக் கொண்டவன்,
“கல்யாணம் ஆகி இருக்க வாய்ப்பில்லை” என்றவன் சில சிந்தனைகளுக்கு பின், “ஓஹ் காட்! நோ சான்ஸ் டா. மேரேஜ் ஆகிருந்தா இப்படி… ம்ஹும்.. என்னை ஏன் டா டார்ச்சர் பண்ற? “ சில சிந்தனை எல்லாம் நினைக்கும் பொழுதே அதை நினைக்க வைத்த புகழ் மேல் கோபம் கூடியது.
“எனக்கும் அதுக்கு வாய்ப்பில்லைனு தான் தோணுது. ஆனா சப்போஸ் லவ்? வேற எதாவது…” என்றவனுக்கு ஆர்யாவின் கோபம் முழுதாய் சொல்ல விடவில்லை.
“நான் ஏதாச்சும் சொல்றதுக்குள்ள போனை வச்சுட்டு போய்டு!” என்ற ஆர்யா தானே கட் செய்து தலையணைமேல் மொபைலை தூக்கி எறிந்தவன் அறையை விட்டு வெளியே வந்து விட்டான்.
மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்க, மீனாட்சியும் திகழ்மதியும் இன்னும் சோஃபாவில் தான் அமர்ந்திருந்தனர்.
“அதை உன் அம்மாகிட்ட கேளு!” என்றவர் உள்ளே சென்றுவிட,
“ம்மா! திகழ் உங்களோட இருக்குறது ஓகே. அப்பாவைத்து வேற ரூம்ல தூங்க சொல்லலாம் இல்ல?” வந்த வேகத்தில் ஆர்யன் கேட்க,
“அப்பா எப்படி தனியா தூங்குவாங்க? “ என்ற கேள்வியில் இன்னும் கடுப்பானான்.
“கொஞ்சமா குறட்டை விடுவாங்க. கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ!” என்றும் சொல்ல,
“இதெல்லாம் ஓவர்! நான் ஒன்னும் சின்ன பையன் இல்ல. எனக்கும் எல்லாம் தெரியும். நான் பாத்துக்குறேன். நீங்க திகழை அனுப்புங்க. அப்பா உங்க கூடவே தூங்கட்டும்!” என்றதும் சட்டென திகழ்மதியும் திரும்பிப் பார்க்க,
“இல்ல இல்ல! திகழ் தனி ரூம் கூட மனேஜ் பண்ணிப்பா. நீங்க அப்பாவை கூப்பிட்டுக்கோங்க!” என்றான் திருத்தி.
“வந்த முதல் நாளே அவளை தனியா விட சொல்றியா? சில விஷயங்கள் உனக்கு புரியாது. சும்மா உன் இஷ்டத்துக்கு ஆடவும் முடியாது. நீ போ!” என்றார்.
“ப்ச்! என்னவோ பண்ணுங்க. இப்ப நான் திகழ்கிட்ட பேசணும்!” என்றதும் அன்னை முறைக்க,
“ம்மா! நான்.. குழந்தை.. இல்ல..!” என்றான் ஒவ்வொரு வார்த்தையாய்.
“சொன்னா கேட்கவா போற!” என்றவர்,
“மதி பத்து நிமிஷத்துல ரூம்க்கு வரணும்!” என்று சொல்லி செல்ல,
“ஆண்ட்டி பாவம்! ஏன் கோவமாவே பேசுறீங்க அவங்ககிட்ட?”
“பின்ன! என்னை பார்த்தா என்ன மாதிரி தெரியுது அவங்களுக்கு?” என்று அவளையும் ஆர்யன் முறைக்க,
“அவங்க என்ன சொன்னாலும் நம்பிடுவியா?” என்று ஒருமையில் பேசியவனை இவள் புருவம் சுருக்கிப் பார்க்க,
“கோவம், பயம் ஏன் அழுகை கூட வர வேண்டிய இடத்துல வந்து தான் ஆகும். இப்ப எனக்கு ஒரு டவுட். அதை கேட்க தான் வந்தேன்!” என்றான்.
“நானும் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். வெளில தோட்டத்துல பேசலாமா சார்?“ என்று திகழ் கேட்க, என்னவாய் இருக்கும் என்று யோசித்தவன்,
“வேணாம்! மேல டெர்ரஸ் போலாம்!” என்றான் அன்னை தந்தை இருவரும் உள்ளே சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு.
“சொல்லுங்க! என்ன எதாவது ப்ரோப்லேமா?” மேலே வந்ததும் ஆர்யன் கேட்க,
“ஆமா! ஜோசியம் ஜாதகம்னு ஆண்ட்டி நாளைக்கு வெளில போறதா சொல்றாங்க. உங்ககிட்ட சொன்னாங்களா?”
“ம்ம் ஆமா அதான் சாப்பிடும் போதே சொன்னாங்களே?”
“ஓஹ்! நான் கவனிக்கலை! ஆனா அது…”
“இதுல பயப்பட என்ன இருக்கு? அவங்க சொல்லும் போது நீங்க மேல என் ரூம்க்கு வர வேண்டியதிருக்கும். பட் அது பெரிய ப்ரோப்லேம் இல்லை. அம்மாவும் அப்பாவும் தூங்க போய்ட்ட பின்னாடி நான் வெளில போயிடுறேன். உங்களுக்கு எந்த ப்ரோப்லேமும் என்னால வராது!”
“அய்யோ அதை மீன் பண்ணல நான். ஜாதகம் பார்க்க போறதா சொல்றாங்க. அதுவும் உங்களோடது.”
“எனக்கு புரியலை திகழ். என்ன சொல்ல வர்றிங்க?”
“ப்ச்! சார்! எல்லாரையும் ஏமாத்தலாம் ஜாதகத்தை எப்படி ஏமாத்துவீங்க? அதை பார்த்ததும் உங்களுக்கு கல்யாணம் ஆகலைன்னு தெரிஞ்சிடும். அதுவும் உங்க குடும்பத்து ஜோசியர் ரொம்ப சக்தி உள்ளவர். அவர் சொன்னதெல்லாம் நடந்துடும்னு ஆண்ட்டி இப்ப தான் சொல்லிட்டு இருந்தாங்க!”
“ஓஹ்! இப்படி ஒன்னு இருக்கா? ஆனா இதெல்லாம் நிஜமா? கல்யாணம் ஆகிட்டுன்னு சொல்லி வழக்கமான சம்பிரதாயம்னு நாள் குறிக்க சொன்னா காசை வாங்கிட்டு ஒரு நாள் பார்த்து சொல்ல போறாங்க அவ்வளவு தானே?” என்றான் இன்னும் புரியாமல்.
“நிஜம் சார்! என்னை மாதிரி எதாவது தேவை இருக்குற ஆள்னா காசை வாங்கிட்டு சொல்றதை செய்வான். ஆனா எல்லாரும் அப்படி செய்வாங்களா?“ என்றாள்.
“ஏங்க! சும்மா நீங்க உங்களையே சொல்லிட்டு இருக்காதிங்க. எனக்கு கில்டியாகுது!” என்றான் பட்டென்று.
“நீங்க சொல்றதும் புரியுது. நான் எதாவது பண்றேன். நீங்க டென்ஷன் ஆக வேண்டாம்.” என்றான் ஆர்யன் தொடர்ந்து
“என்ன பண்ண போறீங்க? மறுபடியும் மறுபடியும் ஆண்ட்டியை ஏமாத்துற மாதிரி எதாவது பண்றோம்” என்றாள் வருந்தி.
“ஏமாத்துறோம் தான் இல்லைனு சொல்லல. ஆனா லாஸ்ட்ல தப்பை சரி பண்ணிட்டேன்னா எனக்கான தன்டனை குறையலாம் இல்ல? கண்டிப்பா எல்லாம் சரி பண்ணிடுவேன். டோன்ட் வர்ரி!” என்றான்.
“என்னவோ ஒரு நாளைக்குள்ள அவ்வளவு கஷ்டமா இருக்கு ஏமாத்துறோமேன்னு. ஒவ்வொரு நாளும்னு இன்னும் ஒரு மாசம்.. “ என்றவள் மலைப்பாய் மூச்சு விட, அவளையே பார்த்து நின்றான்.
“ஆனா நீங்க ரொம்ப லக்கி சார்! ஒவ்வொண்ணும் உங்களுக்காக உங்க அம்மா பார்த்து பார்த்து பன்றாங்க. கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு. ஆனா உங்களால எனக்கும் அவங்களோட மனசுல ஒரு இடம் கிடைச்சது சந்தோசமா இருக்கு!” என்றாள் உள்ளார்ந்து.
“அந்த இடம் எப்பவும் அப்படியே தான் இருக்கும்!” என்றதன் சரியான அர்த்தம் புரியாமலே புன்னகைத்தவள்,
“நீங்க என்னவோ கேட்க வந்திங்களே?“ என்றாள்.
“ம்ம் கேட்கணும். ஆனா எப்படி கேட்குறதுன்னு தெரியல!” என்றான் திரும்பி நின்று.