அன்றைய தினத்தை முடித்து வைக்கவே பெரும்பாடு என்றானது ஆர்யாவிற்கு. இரவு தன் அறையில் அமர்ந்து நடந்ததை எல்லாம் நினைத்துக் கொண்டிருக்க, புகழ் வந்து சேர்ந்தான் அவனிடம்.
“என்ன டா இந்நேரம் இங்க? வீட்டுக்கு போகலையா? ஸ்வேதா தேடுவாளே?” என்றான் ஆர்யன்.
“போனும் டா. உன்னை பார்த்துட்டு போலாம்னு தான் வந்தேன்!” என்ற புகழ்,
“என்ன முடிவு பண்ணிருக்க?“ என்றான்.
“ப்ச்! நான் மட்டும் முடிவு பண்ணி?” என்றான் சலிப்பாய்.
“அப்போ அம்மா சொன்னது?”
“அதான் யோசிச்சுட்டு இருக்கேன்!”
“ஹ்ம்! ஆனா நிறைய பண்ணிட்டோம். எல்லாம் சேர்ந்து தான் இப்படி வந்து நிக்குது இல்ல?” புகழ் சொல்ல, மற்ற நேரமாய் இருந்தால் உன்னால் தான் என்று சொல்லி இருப்பான். இப்பொழுது அவன் நினைவு முழுதும் திகழ்மதியிடம்.
“சாரி டா. நான் தான் எதையும் யோசிக்காம உன்னை இப்படி நிக்க வச்சுட்டேன்!”
“இப்ப அதை பேசி எதுவும் ஆக போறதில்ல புகழ். அடுத்து நடக்குறதை தான் பார்க்கணும்!” என்றான் ஆர்யன்.
விஷ்வநாதன் மாலை தான் கிளம்பி பெங்களூருவிற்கு சென்றிருந்தார் தொழில் தொடர்பாய்.
“நீ சொல்லு டா. இனி முடிவு உன்னோடதா இருக்கட்டும். நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். உண்மையை சொல்றதா இருந்தாலும் ஓகே. நானே சொல்றேன்!” ஆர்யன் அவ்வளவு தீவிரமாய் அமர்ந்து சிந்திப்பதே புகழுக்கு கவலையை கொடுத்தது.
“ம்ம் உண்மையை தான் சொல்ல போறேன். ஆனா…” என்றவன் புகழ் முகம் பார்த்து, “திகழ்கிட்ட!” என்று சொல்ல,
“நிஜமாவா?” என்ற புகழுக்கு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒன்றாய்.
இரண்டு நாட்கள் கூட முடியாமல் இவர்களின் எண்ணிலடங்கா பொய்யை இவர்களாளேயே சமாளிக்க முடியவில்லை. மீனாட்சி உண்மை தெரியாமலேயே அவ்வளவும் செய்துவிட்டார்.
இரவு முஹூர்த்த நேரம் குறிக்க என்று மீனாட்சி புகழை அழைத்து சென்றவர் அங்கே சென்று வரவேற்பு வைக்கவென நாள் கேட்க, அந்த ஜாதகக்காரரோ புகழை தான் திரும்பிப் பார்த்தார்.
மீனாட்சியை சமாளித்து கூட்டி வரவே அத்தனை கஷ்டமாய் போனது புகழுக்கு. ஒருவழியாய் நல்ல நேரம் என்று நான்கு நாட்கள் கழித்து குறித்து வாங்கியாகிற்று. புகழ் சைகை சரியாய் புரியாமல் ஒரு வாரம் சென்று திரும்ப வருமாறு அனுப்பி வைத்தார் வரவேற்பிற்கு நாள் குறிக்க.
ஆர்யன் ஜாதகத்தைப் பார்த்தும் நல்லவிதமாய் சொல்லி இருக்க, வீட்டிற்கு வந்து தான் மூச்சு விடவே முடிந்தது புகழுக்கு. இதற்க்கிடையில் அன்னையிடமும் அழைத்து, “அத்தை உங்களை தான் கூட்டிட்டு போறதா இருந்தது. மாமாவும் திடிர்னு வர்றேன்னு சொல்லிட்டாங்க. அதான் உங்களை ஜாதகம் பார்க்க கூப்பிடல.” என்று அவரையும் சமாளித்து விட்டான்.
“ம்மா! நான் தான் சொன்னேனே! சின்ன சின்ன பிரச்சனை எல்லாம் இருக்கு. சால்வ் ஆகட்டும். அப்புறமா உங்க விருப்பப்படி கிராண்டாவே எல்லாம் செய்யலாம். இப்ப எதுக்கு ரிசெப்சன்க்கு எல்லாம் கேட்குறீங்க?” என்று வீட்டிற்கு வந்ததும் ஆர்யன் கேட்க,
“மதி வீட்டை மட்டும் யோசிக்குறியே! நம்ம குடும்பத்தை யோசிச்சியா? இப்பவே நிறைய பேருக்கு உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சி அப்பாக்கு கால் மேல கால். அவங்க வாயை எல்லாம் அடைக்க வேண்டாமா? எது கேட்டாலும் ஒரு மாசம் போகட்டும்னு சொல்ற. என்னை என்ன நினைச்சுட்டு இருக்க?” என்று மகனிடம் கேட்டவர்,
“நீ சொல்லு மதி! குடும்ப கௌரவம்னு ஒன்னு இருக்குல்ல?“ என்றும் கேட்க, பதில் கூற முடியாமல் விழித்தார்.
“மாமியார் மெட்டி போடணுமே! அதான் ரிசெப்ஷன் வச்சு போட்டுடலாம்னு பார்த்தேன். அது தப்பா தெரியுதா?” என்று அத்தனை வசனம் பேசினார் மீனாட்சி.
“முதல்ல அத்தைனு கூப்பிட்டு பழகு. ஒதுக்கி வைக்குற மாதிரி ஆண்ட்டி ஆண்ட்டினு.. “ என்று முறைத்துவிட்டு அவரும் சென்றுவிட, திகழ்மதி விழிபிதுங்கி நின்றாள்.
ஏற்கனவே ஆர்யன் அவளிடமும் கோபம் கொண்டு தான் கடையில் இருந்து திரும்பி வந்திருந்தான். இதில் இந்த பிரச்சனை வேறா? என்று எண்ணியவள் யார் பக்கமும் செல்லவில்லை.
கோவிலுக்கு போகலாம் என்று திகழ்மதி சொல்லவும் அங்கே சென்று அவளருகில் நின்று தன் பிரார்த்தனையை வேண்டி வணங்கி அங்கிருந்து கிளம்பினர்.
கடவுளை பார்த்து வந்தது கடவுளே தனக்கு அருள் புரிந்து விட்டதை போல மகிழ்ந்தவன் அதே உற்சாகத்தோடு உக்கடத்தில் இருக்கும் தனது ஸ்டோருக்கு அவளை அழைத்து வந்தான்.
“கண்டிப்பா உள்ள போகணுமா?” திகழ்மதி கேட்க,
“அம்மா உங்ககிட்ட தான் என்ன வாங்குனீங்கனு கேட்பாங்க. சோ ஒன்லி!” என்று சொல்லி உள்ளே அழைத்து செல்ல, அங்கிருப்பவர்களின் பார்வையில் கொஞ்சம் அவள் திணற,
“ஓகே ரிலாக்ஸ்!” என்று பட்டுப் பிரிவிற்கான தனி இடத்திற்கு அழைத்து வர, அந்த இடத்தில் நான்கு பேர் மட்டுமே வேலை செய்பவர்கள் இருக்க, வாங்குபவர்கள் யாரும் அங்கே இல்லை.
“இது ஸ்பெஷல் ப்ரைஸ் பிளேஸ் இல்ல?” அவள் கேட்க,
“ம்ம் ஆமா. வேற பாக்கணும்னா சொல்லுங்க. இங்கேயே கொண்டு வர சொல்லிடலாம். ஆனா இங்கேயும் செலக்ட் பண்ணிக்கோங்க. அம்மா கேட்பாங்க!” என்றான்.
“நோ சார் ப்ளீஸ்! ஆண்ட்டிகிட்ட நான் சொல்லிடுறேன். இவ்வளவு காஸ்ட்லி!” என அவள் தயங்க,
“சார் ப்ளீஸ்! என்கிட்ட இருக்குற காசுக்கு என்ன வேணுமோ அது மட்டும் நான் பர்ச்சேஸ் பண்ணிக்குறேன்!” என்று திகழ்மதி அழுத்தமாய் சொல்ல,
“ஸீ! வாங்கி கொண்டு வீட்டுல வச்சா மட்டும் போதும். உங்களை கம்பல் பண்ண போறதில்ல. அம்மா இந்த பிளேஸ்ல இருக்குற சாரீஸ் மட்டும் தான் எடுக்கவே செய்வாங்க. அதனால தான் சொல்றேன்!”என்றான் கொஞ்சம் கோபமாகவே. அப்பொழுது தானே அவள் வாங்குவாள் என நினைத்து.
விருப்பமே இல்லாமல் அவள் பார்த்துக் கொண்டே இருக்க, அதை புரிந்தவனும் தானே இரண்டினை எடுத்துக் கொண்டு, “இனியாவது உங்களுக்கு என்ன ரேட்ல என்ன வேணுமோ அதை பார்த்து வாங்குங்க!” என்ற பின் அவர்கள் வீட்டிற்கு பொருந்துவது போல சிலவற்றை வாங்கியத்தோடு காரில் ஏறியதும் பணத்தை அவனுக்கு அலைபேசியில் அனுப்பி வைக்க முறைத்தான்.
“நான் முதல் நாளே உங்ககிட்ட சொன்னேனே! நீங்க எனக்கு பேவரா எனக்கு தேவையான பணத்தை முதல்லயே குடுத்துட்டிங்க. அப்புறம் உங்ககிட்ட கேட்க மாட்டேன் சொல்லிருக்கேன். சொன்னதை நானும் காப்பாத்தணுமே!” என்றவள் கொள்கையில் இவனுக்கு தான் தலை வேதனையானது.
அதையெல்லாம் நினைத்து தான் அவளிடம் சொல்லி விடுவது என்ற முடிவுற்கே வந்திருந்தான் ஆர்யன்.
“நிஜமாவா ஆர்யா? ஆனா திகழ் ரெஸ்பான்ஸ் என்ன மாதிரி இருக்கும் தெரிலயே!” என்று புகழ் ஆர்யனிடம் கூற,
“என்ன மாதிரி இருக்கும்? கண்டிப்பா நெகடிவா தான் இருக்கும். சொல்ல முடியாது மோசமான வர்ட்ஸ் கூட வரலாம். அடிக்க மட்டும் வாய்ப்பில்லை!” என்றான் புன்னகைத்து.
“சிரிக்காத ஆர்யா! தெரிஞ்சே ரிஸ்க் எடுக்குறேன்ற?”
“ஈசியா காதலிச்சுட்டேன். காதலிக்கப்படணுமே? அதுக்கு ரிஸ்க் இல்லைனா எப்படி? திகழ்கிட்ட சொல்ல தான் போறேன். அவளோட பதில் என்னவாவும் இருக்கட்டும். ஆனா இந்த ஒன் மன்த் சொன்ன வார்த்தை மாறாம நிச்சயமா நமக்காக இங்க தான் இருப்பா. அப்ப புரிஞ்சிக்க வாய்ப்பிருக்கு இல்லையா?”
“பிளான் எல்லாம் ஓகே தான். ஆனா சொதப்பல் இல்லாம போகணும். ஆல்ரெடி எல்லாம் குழப்பமா போய்ட்டு இருக்கு. அம்மா வேற வளைகாப்பு தமிழ் மாசத்துக்கு இந்த மாசமே வைக்கணும்னு சொல்றாங்க. அவங்களும் அத்தை கூட நாள் குறிக்க போக ரெடியா இருந்தாங்க. நான் தான் சமாளிச்சு வச்சிருக்கேன். போய் அவங்களை நம்ம ஜோசியர்கிட்டயே கூட்டிட்டு போகனும்! ஷப்பா நினைச்சாலே தலை சுத்துது டா. நான் இவ்வளவு இருக்குன்னு தெரியாமலே உன்னை புலி வாலை புடிக்க வச்சிருக்கேன் பாரேன்!” என்று தலையசைக்க,
“நீ பண்ணினதுலேயே உருப்படியான விஷயமும் இது தான். தேவை இல்லாத வேலையும் இது தான். ஓகே நமக்கு வேண்டியதை மட்டும் நாம எடுத்துக்கலாம். திகழ் இந்த ரூம்க்கு வரட்டும். நான் சொல்லிடுறேன்!” என்றான் ஆர்யன்.
“உன்னை மாதிரி ஒரு பையன் திகழ்மதிக்கு கிடைக்க அவங்க லக்கி டா. உன்னோட லவ் அவங்களை உன்கிட்ட கொண்டு வரும்.” என்று சொல்லி புகழ் கண் சிமிட்ட, பதிலுக்கு கண் சிமிட்டி புன்னகைத்தான் ஆர்யன்.
அடுத்த இரு நாட்களும் சாதாரணமாய் செல்ல, மீனாட்சியோடு திகழ்மதியின் பேச்சுக்கள் சரளமாய் உரையாடும் அளவுக்கு வந்திருந்தது.
“நான் இன்னும் அவன் மேல கோவமா தான் இருக்கேன். உன்கிட்ட இளையுறேன்னு அவன்கிட்ட சொன்ன…” என்று ஒற்றை விரல் காட்டி திகழ்மதியை மிரட்ட,
“வாய் வாய்!” என்றவர், “அழகா இருக்கியேனு எல்லாம் என் ராஜா உன்னை கல்யாணம் பண்ணிக்கல. என்னவோ இருக்கு உன்கிட்ட. அதான் எனக்கும் உன்னை புடிச்சு போச்சு!” என்று சொல்லி கன்னத்தில் இடிக்க,
“உங்க ராஜா என்ன அவ்வளவு பெரிய அப்பாடாக்கரா?” என்று வேண்டுமென்றே கேட்டு வைப்பாள்.
“இல்லையா பின்ன? என் ராஜாவுக்கு என்ன? அவன் நிஜமாவே ராஜா தான் இந்த வீட்டுக்கு! காலேஜ் படிக்கும் போதே சொல்லுவான். இந்த லவ் மேரேஜ்ல அப்படி என்ன இருக்குன்னு இப்படி ஜோடி ஜோடியா சுத்துறாங்களோனு. இப்ப பாரு அவனே உன்னை லவ் பண்ணி வீட்டுக்கு தெரியாம கல்யாணமும் பண்ணி இருக்கான். அப்ப எவ்வளவு புடிச்சிருக்கணும் உன்னை?” என்று கேட்க, புன்னகை மாறாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் திகழ்மதி.
மனதில் சுருக்கென ஒரு உறுத்தல். தான் அவர் மருமகள் இல்லை என்று தெரிய வரும் போது இந்த அன்பும் பாசமும் தன்னிடம் அவருக்கு இல்லாமல் போய் விடுமே என்று. அன்னையை இழந்து இத்தனை வருடங்கள் கடந்து இன்று தான் நீண்ட வருடங்களுக்கு பின் தன் அன்னையை தேடி மனம் அலைபாய்ந்தது திகழ்மதிக்கு.
விளைவாய் அவள் குடும்பத்தினரை பார்க்க மனம் ஏங்க, ஆர்யனின் முன் சென்று நின்றாள் வீட்டிற்கு சென்று வர வேண்டி.
“இன்னைக்கா? எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கே திகழ். நாளைக்கு போலாமா?” என ஆர்யன் கேட்க,
“நீங்க வர வேண்டாம். நான் போய்ட்டு வந்துடுறேன்!” என்றவள் அவன் யோசிக்கவும்,
“நிச்சயமா வந்துடுவேன்!” என்றாள். அதில் சிரித்தவன்,
“நான் என்னை விட உங்களை அதிகமா நம்புறேன். தனியா போறதா சொன்னிங்களே அதான் யோசிச்சேன். ஓகே போய்ட்டு வாங்க. ஈவ்னிங் நானுமே உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!” என்று கூறியவன் அவள் வீட்டிற்கு சென்றுவர என கிளம்பி நிற்கும் நேரம் தானும் வீட்டிற்கு வந்து நின்றான்.