“உஷா! நிஜமாவா சொல்ற?” திகழ்மதி நம்ப முடியாமல் கேட்டாள்.
“எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரில மதி! இந்த புகழ் அண்ணா அப்படி தான் சொன்னாங்க. எனக்கும் நம்ப முடியலை!” என்ற உஷா,
“அதுக்காக அவங்களை தப்பாவும் நினைக்க முடியலை.. உன்கிட்ட சொல்லிக்க வேண்டாம்னு தான் சொன்னாங்க. நீ கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கணும்னு தான் உன்கிட்ட சொல்றேன்!” என்றும் கூறினாள்.
“ஹெலோ மதி! கேட்குதா!” என மீண்டும் உஷா அழைக்க,
“ம்ம் கேட்டுச்சு உஷா. நான் பார்த்துக்குறேன்!” என்று சொல்லி வைத்துவிட்டாள் திகழ்மதி.
எதற்காக இந்த வேலை? தன்னைப் பற்றி அறிந்து என்ன செய்ய போகிறார்கள் என திகழ்மதியின் சிந்தனைகள் இருக்க, குழப்பத்துடனே கிளம்பி வந்தாள்.
“தனியா போறதா சொல்றியே மதி! நான் வேற அவன் மேல கோவமா இருக்கேன். நீயே போன் பண்ணி கேளு. வந்தாம்னா கூட்டிட்டு போவான்ல?” என்று மீனாட்சி சொல்ல,
“கோவிலுக்கு தானே அத்தை! நான் பார்த்துக்குறேன். பூஜை முடிய ஆறு மணி ஆகும். வீட்டுக்கு எட்டு மணிக்குள்ள வந்துடுவேன்!” என்று சொல்லி சமாதானம் செய்து கொண்டிருக்கும் நேரம் வீட்டிற்குள் வந்தான் ஆர்யன்.
“அதானே பார்த்தேன்! அப்படி தனியா போக விட்டுடுவானா பொண்டாட்டியை?” என்று மீனாட்சி அங்கலாய்ப்பாய் சொல்ல,
“போலாமா திகழ்?” என்றான் அவனும்.
“நீயும் சேர்ந்து தான் ப்ளனா?” என்று வேறு கேட்க,
“அவங்க வர்றதே எனக்கு தெரியாது அத்தை” என்றவள்,
“நீங்க எங்க வர்றிங்க?” என்றாள் கோபமாய் பார்த்து முறைத்து.
“நேத்தே சொன்னா ம்மா. நானும் முடிஞ்சா வர்றதா சொல்லி இருந்தேன். இப்ப பிரீ தான். போலாம் திகழ்.” என்றவன் முகத்தை ஆராய்தலாய் அவள் பார்க்க, என்ன என்று தலையசைத்தவனுக்கு மறுப்பாய் தலை அசைத்து பார்த்தாள்.
அவள் தன் குடும்பத்தை பார்க்க செல்ல இருப்பது அவனுக்கும் தெரியுமே!
அந்த பார்வையின் வித்யாசத்தை உணர முடிந்தவனுக்கு என்ன என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.
காரில் ஏறி சில தூரம் வந்த பிறகுமே அவள் அமைதியாய் வர, புருவம் சுருக்கியவன், “எதாவது ப்ரோப்லேமா திகழ்?” என்றான் அவள் அமைதியில்.
“நீங்க எதுக்காக வந்தீங்க?”
“அதான் சொன்னேனே! டைம் இருந்துச்சு…”
“ஆனா நான் உங்களை கூப்பிடவே இல்லையே!”
“திகழ்?”
“என்ன ட்ரை பண்றீங்க? நீங்க இப்படி பண்ணுவிங்கனு நான் நினைக்கவே இல்லை” என்று சொல்லி முடிக்கையில் காரை நிறுத்தி இருந்தான் ஆர்யன்.
“திகழ்? என்னாச்சு? நான் என்ன பண்ணேன்?” என்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“உங்களை என்னவோன்னு நினச்சேன். நானும் சராசரி ஒருத்தன் தான்னு காட்டிட்டிங்க”
“திகழ் ப்ளீஸ்! என்னனு சொல்லுங்க. எனக்கு நிஜமா புரியல”
“உங்களை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் எங்களை எப்பவும் புரியாது. புரியவும் வேண்டாம். எனக்கான வேலையை நான் முடிச்சு குடுத்துட்டு தான் கிளம்புவேன். வேற எந்த உதவியும் உங்க மூலமா எனக்கு தேவை இல்லை!” என்றவள் அவன் புரியாமல் பார்த்திருக்கும் பொழுதே கதவை திறக்க முயல,
“திகழ் வெயிட்!” என தடுத்தான்.
“என்னனு சொல்லாம இவ்ளோ ஹார்ஷா பேசுறீங்க. அப்படி என்ன பண்ணிட்டேன்?”
“என் பேமிலி பத்தி தெரிஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க? என்ன நோக்கம் உங்களோடது? என்னை பார்த்து ஒரு வாரம் கூட ஆகல. அதுக்குள்ள என்னென்னவோ சொல்லி இருக்கீங்க.”
“திகழ் அதை தான் கேட்குறேன். என்ன சொன்னேன்? யார்கிட்ட சொன்னேன். உங்க பேமிலி பத்தி எனக்கு என்ன தெரியும்? நான் எதுவும் கேட்டதில்லையே? என்ன பேசுறீங்க? தெளிவா சொன்னா தான் எனக்கு புரியும். நீங்க என் மேலே இவ்வளவு கோவமா இருக்குற அளவுக்கு நான் எதுவும் என் மனசறிஞ்சு நான் பண்ணல.”
“பண்ணவும் வேண்டாம். நான் என் குடும்பத்துக்காக மட்டும் தான் இதையும் ஒரு வேலையா ப்ராஜெக்ட்டா நினச்சு தான் சம்மதிச்சு வந்தேன். வந்த வேலை முடிஞ்சதும் உங்ககிட்ட அதுக்கான சம்பளம் வாங்கி இருக்கனும். ஆனா என் நேரம்.” என்றவள்,
“அதை உங்களுக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கிட்டீங்க. இப்பவும் என்னோட சூழ்நிலைக்கு நான் யாரையும் காரணமாக்க விரும்பல. ப்ளீஸ் இதுக்கு மேல நாம பேசிக்க எதுவும் இல்ல. உங்க வேலையை நீங்க பாருங்க. எனக்கு குடுத்துருக்க பெர்மிஸ்ஸன் டைம் முடியவும் நான் அங்க வந்துடுவேன்!” என்றவள் காரைவிட்டு இறங்கி முன்னே நடந்து செல்ல, புரியாத புதிருடன் செல்பவளை நிறுத்தவும் முடியாமல் பார்த்து நின்றவன் நிலை மோசமானது.
********************
“அக்கா! நீ எப்ப க்கா பெங்களூர்லேர்ந்து வந்த? போன் பண்ணவே இல்லை?” என்று வீட்டிற்குள் வந்த திகழ்மதியை வரவேற்றான் அரவிந்த்.
“இப்ப தான் வந்தேன் அர்வி! கீழ மாமா அத்தை அனு யாரையும் காணும்? எங்க போனாங்க? அவங்களை பார்க்க தான் வந்தேன்!” என்றாள் திகழ்மதி.
“மாமாக்கு லைட்டா பெயின் வந்துடுச்சு. அதான் அத்தை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்க. அனுவும் காலேஜ்லேர்ந்து அப்படியே ஹாஸ்பிடல் போறதா மகிகிட்ட சொல்லி இருக்கா!” என்று அரவிந்த் சொல்லிக் கொண்டு இருக்க, மகிழினியும் அப்பொழுது தான் கடைக்கு சென்றிருந்தவள் வந்தாள்.
“நீ போயிருக்கலாமே அர்வி?”
“நான் மாட்டேன்னு சொல்லுவேனா க்கா? அத்தை தான் எப்பவும் போல பேசினாங்க. நீ ஒன்னும் பார்த்து கிழிச்சதா பேர் வாங்க வேண்டாம். நான் பார்த்துக்குறேன்னு சொல்லிட்டாங்க!” என்ற அரவிந்த்,
“உனக்கு அங்க எல்லாம் ஓகேவா க்கா? கஷ்டமா இருக்கா? பணம் வாங்கிட்டோமேனு நீ எதுவும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்கியா? “ என்று அரவிந்த் கேட்க, பெருமூச்சொன்றை விட்டவள்,
“அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்லை. நீயும் மகியும் என்ன பண்றீங்க? சண்டை தான் போட்டுக்குறீங்களா?” என்றாள்.
“அதெல்லாம் இல்ல க்கா!” அரவிந்த் சொல்ல,
“எங்க சண்டை போட? அவருக்கு வர்ற கிப்ட் சேர்ச் பண்ணவே நாள் போதல!” என்றாள் மகிழினி.
“அது என்னனு கவனி அர்வி. பெரிய ப்ரோப்லேம் ஆகிடாம!” என்றாள் திகழ்.
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பின் தன் தம்பி தங்கைகளுடன் என நேரம் ஒதுக்கியவள் அன்றைக்கான இரவு சமையலையும் அவர்களுக்கு சமைத்து வைத்துவிட்டு தானும் கொஞ்சமாய் அதில் எடுத்துக் கொண்டு ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டாள்.
“போனுமா க்கா? “ மகிழினி கேட்க,
“நைட் ஷூட்டிங் இங்க டா. மறுபடியும் சென்னை போய் பெங்களூர். இந்த மாசம் மட்டும் தான்!” என சமாதானம் செய்து கிளம்பினவள் எண்ணம் முழுதும் ஆர்யனிடம்.
ஸ்வேதா அருகில் இருக்க உஷாவிடம் பேசினான் புகழ் வேந்தன் ஸ்வேதாவிடம் அனைத்தையும் சொல்லி. அப்பொழுதும் எச்சரித்தே பேச சொல்லி இருந்தாள் ஸ்வேதா.
“திகழ்மதி பேமிலி டீடெயில்ஸ் கொஞ்சம் சொல்ல முடியுமா உஷா?” என்று புகழ் உஷாவிடம் கேட்க,
“ஏன்? அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? நீங்க என்கிட்ட இப்படி கேட்குறது மதிக்கு தெரியுமா? “ என்று தான் கேட்டாள் உஷா.
“உஷா! நான் அவங்களுக்கு நல்லது தான் நினைக்குறேன். ப்ளீஸ் சொல்லுங்க! இங்க பக்கத்துல ஸ்வேதா இருக்கா. நீங்க அவகிட்ட பேசி பாருங்க. ஆர்யா ரொம்ப ரொம்ப நல்லவன். அவனுக்கு திகழ்மதி யை பிடிச்சிருக்கு!” புகழ் சொல்ல,
“என்ன?” என்று அதிர்ந்தாள் உஷா.
“என்ன பேசுறீங்க சார் நீங்க? அவ பேமிலி என்னனு தெரியுமா உங்களுக்கு? என்ன மாதிரி சிட்டுவேஷன்ல நான் அவளை உங்க கையில குடுத்தேன் தெரியுமா? காலேஜ் படிக்குற தம்பி தங்கச்சியோட பீஸ், சொந்த செலவுன்னு அவளோட தேவைக்காக பிடிக்காம இந்த பீல்ட்டுக்கு வந்த பொண்ணு சார் மதி. அம்மா அப்பா இல்லாம மூத்த பொண்ணா ரெண்டு பசங்கள பாத்துக்குறது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? அவளுக்கு ஹெல்ப் பண்ண தான் அந்த பணம் தேவையா இருந்துச்சு. தங்குறதுக்குன்னு அவ மாமா வீடு மட்டும் தான் அவளுக்கு இருக்கு. இப்ப அவங்க மாமா மெடிக்கல் செலவுக்காக அவங்க அத்தை அவளை டார்ச்சர் பண்ணாங்க. அதனால தான் அவளை உங்களுக்கு இன்ட்ரோ பண்ணதே!” என மொத்தத்தையும் அவளறியாமல் கோபத்தில் சொல்லி இருந்தாள் உஷா.
“பாவம் சார் அந்த பொண்ணு. வெறும் ஒரு வாரத்துல என்ன தெரியும்னு இந்த மாதிரி பேசுறீங்க. வேணாம் சார். நீங்க நினைக்குற மாதிரி பொண்ணு இல்ல மதி. உங்க பணக்கார விளையாட்டுக்கு எல்லாம் அவ செட்டாக மாட்டா!” என கோபமாய் சொல்ல
“ஹெலோ ஹெலோ சிஸ்டர்! ஆர்யாவும் நீங்க நினைக்குற மாதிரி பையன் இல்ல! அன்னைக்கு பார்த்தீங்க தான பார்க்ல என்ன நடந்துச்சுன்னு? அது தான் ஆர்யா. அந்த இடத்துல திகழ் இல்லைனா நிச்சயம் இந்த ட்ராமா கல்யாணம் எல்லாம் நடந்திருக்கவே வாய்ப்பில்லை!”
“நீங்க என்னவேனா சொல்லிக்கோங்க சார். அவர் நல்லவராவே இருந்துட்டு போகட்டுமே. ஆனா மதி நீங்க நினைக்குற மாதிரி பொண்ணு இல்ல. ப்ளீஸ்! தயவு செஞ்சு அவளை வேற மாதிரி யூஸ் பண்ணிடாதீங்க. நேத்து கூட கால் பண்ணி ஆர்யா சரோட அம்மாவை அவ்வளவு புகழ்ந்து பேசினா. ரொம்ப பீல் பண்ணினா அவங்களை ஏமாத்துறோம்னு. அவ வாழ்க்கைல விளையாடிடாதிங்க ப்ளீஸ்!” என்றவள்,
“சிஸ்டர் ப்ளீஸ்! நான் உங்களுக்கு அப்புறமா டீடெயிலா சொல்றேன். நீங்க மதிகிட்ட எதுவும்…. “ என்று சொல்லிக் கொண்டிருந்த புகழ் பேசுவதை கேட்காமல் உடனே கட் செய்திருந்தாள் உஷா.
அடுத்த நொடியே திகழ்மதிக்கும் அழைத்து விஷயத்தை அவளுக்கு தெரிந்த விதத்திலும் சொல்லி இருக்க, தெரிந்த வரையிலுமே திகழ்மதிக்கு அது தேவை இல்லாதது தான்.
அதனாலேயே இனி ஆர்யனிடம் எப்படி இருக்க வேண்டுமெனவும் இந்த ஒரு மாதத்தினை எப்படி கடக்க வேண்டும் எனவும் சில குறிப்புக்களை தனக்குள் கொண்டு வந்திருந்தாள்.
பார்த்ததும் விரும்பினான் தான். ஆனாலும் அதனால் மட்டுமே அவளை தனக்குள் கொண்டு வைத்து கொண்டாட நினைக்கவில்லை யே அவன். அவளின் ஒவ்வொரு பேச்சு, வார்த்தை, கனிவு, குணம் என மொத்தமா ய் அவன் கண்களில் விழுந்து இதயத்தில் நிறைத்ததை யார் சொல்லிவிட முடியும்?
முதலும் முடிவும் தெரியாமல் மீண்டும் புகழ் செய்த ஒரு வேலை ஆர்யனை மற்றொரு கோணத்தில் திகழ்மதியிடம் கொண்டு சேர்த்து இருந்தது. தன் மனதை வார்த்தையால் சொல்ல நினைத்தவனால் சாதாரண வார்த்தைகளை கூட அவளிடம் பேசிட முடியாமல் போனது தான் மிச்சமாகி போயிருந்தது.