மேலும் பத்து நாட்கள் கடந்திருந்தது திகழ்மதி ஆர்யனின் வீட்டிற்கு வந்து. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே என்று நினைத்தபடி காலண்டரை பார்த்தபடி நின்றவள் ஆர்யன் அறைக்குள் வரும் சத்தம் கேட்கவும் அங்கிருந்து வெளியேறி கீழே வந்துவிட்டாள்.
ஆர்யன் தன் விருப்பத்தை எங்கும் எதிலும் மறைக்காமல் மிச்சமும் இல்லாமல் மொத்தத்தையும் அன்று திகழ்மதியிடம் சொல்லி இருக்க, அதை கொஞ்சமும் யோசிக்க கூட இன்றி மறுப்பு கூறி இருந்தாள் திகழ்மதியும்.
“இதுக்கு மேல இதே மாதிரி பேசி என்னை தொல்லை பண்ணினா இந்த வீட்டை விட்டு போகவும் தயங்க மாட்டேன். நான் நியாயமா இருக்க தான் நினைக்குறேன். ஆனா அதுக்கு இங்க எனக்கான மரியாதை இருந்தா மட்டும் தான் நானும் நியாயமா நடந்துப்பேன்!” ஆர்யன் தன் பக்கத்தை அவ்வளவு தெளிவாய் எடுத்து சொல்லியும் இறுதியில் திகழ்மதி பதில் இதுவாய் தான் இருந்தது.
“நான் தான் சொல்லிட்டேனே திகழ். என்னோட விருப்பம் உனக்கு தெரியணும். சோ தெரியப்படுத்திட்டேன். இனி டிஸ்டர்ப் பண்ண எதுவும் இல்ல. உன்னோட வேலைனு நீ சொன்னதால நானும் சொல்றேன். நீ தாராளமா இந்த வீட்டுல உன் வேலையை தொடரலாம். ஆனா இந்த வீட்டுல இருந்து நீ போறேன்னு சொன்னாலும் நான் என் முடிவை மாத்திக்க மாட்டேன். நான் சொன்ன மாதிரி நிச்சயம் காத்துட்டு தான் இருப்பேன்!” என்றிருந்தான் ஆர்யனும்.
“எத்தனை நாளைக்கு சார்?” என்று எரிச்சலாய் இரைந்தவள்,
“சும்மா சினிமா டயலாக் எல்லாம் பேசாதீங்க. காதலாம் காதல். முதல்ல உங்க அப்பா அம்மாக்கு உண்மையா இரு…..” இருங்க என்று தான் சொல்ல வந்தாள். ஆனாலும் சொல்லி முடிக்க போகும் நேரம் தான் வார்த்தைகள் பெரியது என்பதும் நியாபகம் வர, பாதியில் நிறுத்தி இருந்தாள்.
“ரெண்டு கேள்விக்கும் பதில் இருக்கு திகழ். எத்தனை நாளைக்குன்னா… ம்ம்ம்.. என்ன சொல்ல? எனக்கு நம்பிக்கை இருக்கு என் காதல்ல தப்பில்ல. என்கிட்ட வரும். அதுவரைக்கும். அப்புறம் அம்மா அப்பாக்கு உண்மையா இருக்கனும்ன்றது சரி தான். நிச்சயமா அவங்ககிட்ட நான் உண்மையை சொல்லிடுவேன். இந்த ட்ராமா கூட அவங்களுக்காக இல்ல. உனக்காக. புகழை நாலு அறை விட்டு இழுத்துட்டு வந்து அன்னைக்கே நான் என் அம்மா அப்பாகிட்ட நடந்ததை சொல்லி இருப்பேன். இந்த ட்ராமால துளி கூட அப்ப எனக்கு விருப்பமில்ல. உன்னை அங்க பாக்குற வரை!”
“அய்யோ ப்ளீஸ் ஸ்டாப் இட் சார்! என்ன பேசுறீங்க நீங்க? ஃபர்ஸ்ட் எனக்கான ரெஸ்பெக்ட்.. என் அனுமதி இல்லாம நீங்க நீ வா போ’ன்றதை என்னால ஏத்துக்க முடியாது. எனக்காகன்னா? அப்ப நான் உங்ககிட்ட வாங்கின காசை தந்துட்டா நான் போய்டலாம் தான?” என அத்தனை கோபமாய் கேட்டாள் திகழ்மதி.
“திகழ் ரிலாக்ஸ்! ஓகே! ரெஸ்பெக்ட் குடுக்குறதுனால எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. எனக்கு அது அவ்வளவு கம்ஃபோர்ட்டா இருந்தது. உனக்கு சாரி உங்களுக்கு இப்ப பிடிக்கலை அதனால நான் அதுக்கும் மதிப்பு தர்றேன்!” என்றவன்,
“ப்ளீஸ்! இந்த காசு விஷயத்தை இத்தோட விட்ருங்க. அதை பேசவே வேண்டாம் நாம. உங்களுக்கு இஷ்டம் இல்ல. அதை என்கிட்ட சொல்லிட்டீங்க. அவ்வளவு தானே? ஓகே நான் அக்ஸப்ட் பண்ணிக்குறேன். நீங்க எப்பவும் போல இருங்க. இதை நாம லேட்டரா பேசிக்கலாம். உங்களுக்கு எந்த கஷ்டமும் வேண்டாம். சில்! எப்பவும் போல இருங்க!”
திகழ்மதி தன் முடிவில் உறுதியாய் இருக்கவே ஆர்யனும் அப்போதைக்கு அந்த பேச்சை முடித்து வைத்திருந்தான். அவனுக்கு இதுவும் கூட பெரும் நிம்மதி தான் கொடுத்தது. தான் தன் காதலை தெரிவித்துவிட்டதில் மனம் இலகுவான நிம்மதி.
திகழ்மதி தான் அன்று முதல் தூக்கம், மகிழ்ச்சி, நிம்மதி என அனைத்தையும் பறி கொடுத்திருந்தாள். அன்று பேசிவிட்டு ஆர்யன் எப்பொழுதும் போல வீட்டில் அனைவரும் தூங்கிய பின் வெளியே சென்று சோஃபாவில் படுத்துக் கொண்டான்.
அடுத்த நாளில் இருந்து இன்று வரையுமே ஆர்யனிடம் தனியாய் இன்னும் ஒற்றை வார்த்தை பேசி இருக்கவில்லை திகழ்மதி. தேவை என்றாலும் கூட கூடத்தில் இருக்கும் பொழுது மீனாட்சி கவனிக்காத நேரம் என பேச்சுக்கள் சுத்தமாய் இல்லை.
ஆர்யனும் அவன் சொன்னதை போல தள்ளியே இருந்து கொண்டான். அதற்காக பேசாமல் இல்லை. அவளின் எண்ணம் புரிந்து விலகி இருக்க, அது திகழ்மதிக்கு இன்னும் வசதியாக, நாட்கள் அப்படியே நகர்ந்தது.
“ம்மா எனக்கு வேலை இருக்கு ம்மா. இன்னொரு நாள் போலாமா?” என்றான்.
“பரவால்ல டா. நீ வேலையை பாரு. உன் அப்பா வேற வர்றாரு. உனக்கு எதுக்கு கஷ்டம். நீ எல்லா கடையையும் தோள்ல தூக்கிக்கோ. நாங்க மூணு பேரும் உன் அப்பத்தாகிட்ட சொல்லிட்டு போய்ட்டு வர்றோம்”
பரவாயில்லை என்று ஆரம்பிக்கவும் அன்னை சம்மதித்து விட்டார் என ஆர்யன் நினைக்க பாதி பேச்சில் தான் அவர் கோவமே புரிந்தது ஆர்யனுக்கு. அவன் திகழ்மதியைப் பார்க்க, அவள் மீனாட்சியை பார்த்து சிரித்தபடி நின்றாள்.
“கிண்டலா?” என்று அன்னையை முறைத்தவன்,
“ஸ்ட்ராயிட்டாவே சொல்றேன் ம்மா. மெட்டி போடுறது என்ன சும்மாவா? நானும் பாக்கணும் இல்ல? அதுக்காக தான் சொல்றேன். இன்னும் ஒரு பத்து பதினைந்து நாள். அவ்வளவு தான் அவ்வளவே தான். அடுத்து போடலாம். கண்டிப்பா போடலாம்!” என்றவனின் ஆணித் தரமான பேச்சில் திகழ்மதி தீயாய் முறைக்க,
“நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு நாளா காதலிச்சீங்க?” என்று கேட்டு அதிர வைத்தார் மீனாட்சி.
“ஏன் ம்மா?” ஜெர்க் ஆனாலும் ஆர்யன் கேட்டுவிட,
“சுத்தமா லவ் பண்ணி தான் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணீங்கனுஎனக்கு நம்பிக்கை வரல. அவளாவது அவ குடும்பத்தை விட்டு வந்த கவலைல கல்யாணக் கலை காட்டிக்காம இருக்கானு ஏத்துக்கலாம். நீ ஏன் டா இப்படி இருக்க? இல்ல என்னைப் பார்த்தா இளிச்சவாய் மாதிரி இருக்கா?” என்றதும் ஆர்யன் அமைதியாய் இருக்க,
“தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கீங்க இல்ல ரெண்டு பேரும். நானும் உங்க பர்சனல் தலையிட கூடாதுன்னு தான் அமைதியா இருக்கேன். ஒரு வாரம் முன்னாடி லேட் நைட் ரூம்ல தண்ணி இல்லைனு கிட்சேனுக்கு தண்ணி எடுக்க வந்தேன்!” என்றதுமே ஆர்யன் சட்டென திரும்பி திகழ்மதியைப் பார்க்க, அவளும் விரிந்த கண்களோடு அவனை தான் பார்த்தாள்.
“வளந்த பசங்ககிட்ட ஒரு எல்லைக்கு மேல எல்லாமே கேட்டுட்டு இருக்க முடியாது. மதி பேசுறா சிரிக்குறா சந்தோசமா இருக்குற மாதிரி தான் இருக்குறா என் முன்னாடி. ஆனா உன்கிட்ட அப்படி ஒரு நாள் கூட ஒரு நார்மல் புதுசா கல்யானம் ஆனவங்க பேசின மாதிரி பேசி கூட பார்க்கல நான். ஆனா உங்களை புரிஞ்சிக்கவும் முடியல. வீட்டுக்குள்ள வரும் போதே நீ அவளை தேடிகிட்டு தான் வர்ற. திகழ் திகழ்னு நீ கூப்பிடுறதுலஎன்னால் ஒரு பொண்ணா உன் சந்தோசம் புரியுது. அவளுமே உனக்கு புடிச்சதா பார்த்து பார்த்து மதியத்துக்கு செஞ்சு அனுப்புறா. நீ வர்ற நேரம் தெரிஞ்சு உனக்கு என்ன வேணும்னு பாத்துக்குறா. எல்லாம் சரி. ஆனா உங்களுக்குள்ள என்ன பிரச்சனை?” என்றவர்,
“இதெல்லாம் கேட்கணும்னு தான் இருக்கு. ஆனா கல்யாணம் ஆன கொஞ்ச நாள்ல நானும் சராசரி மாமியாரா உங்களுக்கு இடையில நிக்க கூடாதுன்னு தான் அமைதியா இருக்கேன். பிரச்சனையை பேசி தீர்த்துக்கோங்க!” அவ்வளவு தான்!” என்று சொல்லி எழ,
“ம்மா!” என கட்டிக் கொண்டான் அன்னையை.
“இவ்வளவு சொல்றேன். என்னை ஏமாத்த தான் வந்து புடிச்சுட்டு நிக்குற. ஒருவேளை உங்களுக்குள்ள பேசி மதி குடும்பம் உங்களை ஏத்துக்கனும்னு நீங்க தனி தனியா இருந்திங்கன்னா… அதுக்கும் நான் இடையில வர மாட்டேன். ‘எங்களால முடியலை. நீங்க எதாவது பண்ணுங்க ம்மா’னு நீயோ மதியோ கேட்டா தான் நான் தலையிடுவேன்!” என்றும் கூற, அன்னையை நினைத்து அவ்வளவு பிரம்மிப்பு ஆர்யனுக்கு.
இன்னும் மீனாட்சியை நிமிர்ந்து பார்க்காமல் குனிந்தபடி திகழ்மதி நிற்க, ஆர்யன் அன்னையை கட்டிக் கொண்டவன் விடவே இல்லை.
“தள்ளி போ டா!” என்று ஆர்யனையும் தள்ளிவிட்டு சென்றுவிட்டார். ஆர்யன் திகழ் மதியைப் பார்க்க, அவள் இன்னுமே குற்ற உணர்வில் இருந்து நிமிராமல் நிற்க, எழுந்த பெரு மூச்சுடன் தலை அசைத்தவன் தன் அறைக்கு திரும்பிவிட்டான்.