“பசங்களுக்கு வை கனகா. எனக்கு போதும்!” அன்பரசன் சொல்ல,
“நான் பேசுறது உங்களுக்கு கேட்குதா இல்லையாங்க? அவ போய் ஒரு மாசம் ஆக போகுது. தம்பி தங்கச்சிகிட்ட பேசுறவா ஒரு வார்த்தை உங்ககிட்ட எப்படி இருக்கீங்கனு போன் பண்ணாளா? நேர்ல வந்துட்டும் நம்மை எல்லாம் பார்க்காம போயிருக்கா. அவளை என்னனு கேளுங்கன்னு சொன்னா இதுங்களுக்கு சாப்பாடு போடுறது தான் பெரிய விஷயம்ன்ற மாதிரி பேசுறீங்க நீங்க?” என்றார் கனகாவும் கோபமாய்.
அரவிந்த், மகிழினி, அனன்யா என மூவரும் அங்கே தான் சாப்பிட அமர்ந்திருந்தனர். அரவிந்த் தன் கோபத்தை காட்டவும் முடியாமல் அடக்கவும் முடியாமல் என தட்டில் கைகளால் அலைந்து கொண்டிருக்க, மகிழினி எப்பொழுதும் போல துடுக்காய் பேசிவிட்டாள்.
“நீங்க தானே த்த மாமா ஆபரேஷன்க்கு என்ன செஞ்சாவது காசு கொண்டு வான்னு சொன்னிங்க? அதுக்காக தானே அக்காவும் பிடிக்கலைனாலும் படத்துல நடிக்க சம்மதிச்சு முன் பணமும் வாங்கி தந்துட்டு போயிருக்காங்க?”
நெற்றிப் பொட்டில் அடித்தாற் போன்ற வார்த்தைகளை ஒன்றுமே அறியாத குழந்தை போல மகிழினி சொல்ல,
“வாய் வாய்! இந்த வாய் மட்டும் தான் டி உனக்கு உன் அக்காவுக்கு எல்லாம். என்ன அவர்கிட்ட போட்டு குடுக்குறியா? ஆமா நான் கேட்டேன் தான் அதை அவர்கிட்டவும் சொல்லிட்டேன். பணம் இல்லாம யார் தான் ஆபரேஷன் பண்ணுவாங்க? அதுக்காக வீட்டுக்கு வந்துட்டு எங்களை பார்க்காம போவாளா? அவ்வளவு தான் எங்களுக்கு மரியாதையா?”
கேட்ட அடுத்த நாளே மொத்த பணத்தையும் ஏற்பாடு செய்து தந்த திகழ்மதியை அதிர்ச்சியும் ஆச்சார்யமாகவும் தான் பார்த்தார் கனகா.
எப்படி இது சாத்தியம்? என்றெல்லாம் அவர் நினைக்கவே இல்லை. படத்தில் ஒப்புக் கொண்டதற்கே இவ்வளவு என்றால் இன்னும் எத்தனை லட்சம் சம்பளமோ? தனக்கு தெரியாமல் எவ்வளவு வைத்திருக்கிறாளோ என்றெல்லாம் நினைத்தவர் இன்னுமே அதே அளவு பணமாவது அவளிடம் இருந்து கறந்திட வேண்டும் என்று கனகா நினைத்திருக்க, இப்படி ஆபரேஷன் நடக்கும் முன்பே ஷூட்டிங் என்று சென்றவளை இதுவரை பார்க்க முடியாமல் போகும் என நினைக்கவே இல்லை அவர்.
அவளிடம் கொஞ்சம் கண்ணீரோடு பேசி அனன்யா திருமணத்திற்கான நகையை இன்னும் கொஞ்சமாய் பெருக்கிக் கொள்ள அவர் யோசித்து காத்திருக்க, திகழ்மதி பேச்சுக்கு கூட இவரிடம் அழைக்காததில் அழைத்து பேசாததில் கடுப்பாகிவிட்டார்.
“அப்படி எல்லாம் இல்லை அத்தை. அங்க அவ என்ன மாதிரி சீட்டுவேஷன்ல இருக்காளோ! முடிஞ்சா அவளே வருவா த்த. அன்னைக்கு கூட இங்க பக்கத்துல ஷூட்டிங்னு தான் சொன்னா. அதான் வந்துட்டு உடனே கிளம்பிட்டா.” என்றான் அரவிந்த்.
“அப்பவும் நம்ம எல்லாருக்கும் சமைச்சு வச்சுட்டு தான் போனா அக்கா!” என மீண்டும் நெத்தியடி பதில் மகிழினியிடம் இருந்து.
“மகி!” என்று அரவிந்த் முறைக்க,
“போண்ணா!” என்று வாயசைத்து கொஞ்சமாய் கனகா தனது தட்டில் வைத்திருந்த சாதத்தை வாயில் வைத்தாள்.
“திமிரு திமிரு!” என மகிழினியை முறைத்த கனகா,
“ஏய்! சாப்பிட்டாச்சுன்னா உள்ள போ டி!” என அனன்யாவையும் திட்டிவிட்டார்.
“இப்ப எதுக்கு இவங்களை போட்டு காய்ச்சுட்டு இருக்க நீ? மகி என்ன தப்பா சொல்லிட்டா? நிஜம் தான? என் ஆபீஸ்லேர்ந்து பணம் வந்ததை என்ன செஞ்ச நீ? பார்த்துக்கலாம்னு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நான் ஹாஸ்பிடல்ல இருக்கும் போது நீ வெளில பணம் தயார் பண்ணி இருந்தா எனக்கு பணம் வந்ததை திரும்ப குடுத்து செட்டில் பண்ணி விட்ருக்கலாம். அவளும் இவ்வளவு தூரம் நம்மள விட்டு போயிருப்பாளா? வீட்டுக்கு வர கூட நேரமில்லாம வேலைல இருக்குற பொண்ணை என்ன பேசுற நீ?” என்றவர்,
“எனக்கும் தெரியும் நீ என்னவெல்லாம் பண்றனு. மகியும் அர்வியும் சொல்லலைனாலும் எனக்கு சொல்றவங்க சொல்லிகிட்டு தான் இருக்காங்க. மதி உன்கிட்ட எதுவும் சண்டை போட வேண்டாம்னு சொன்னதால தான் நானும் அமைதியா இருக்கேன். மதி எப்படிப்பட்ட பொண்ணுன்னு எனக்கு தெரியும். தேவையில்லாம பேசாத.” என்று சொல்லி வாயடைக்க வைத்துவிட்டார் கனகாவை.
“ஆமா மாமா. ரெண்டு மாசம் கூட முழுசா இல்லை” என்றான் அரவிந்த்.
“அடுத்து படிக்குற பிளான் இருக்கா ப்பா?” என கேட்க,
“அதெல்லாம் இல்ல மாமா. வேலைக்கு தான் பார்த்துட்டு இருக்கேன். ஆல்ரெடி ரெண்டு மூணு பிளேஸ் பார்த்தேன். இன்டெர்வியூ போகணும். கிளாஸ் முடியவும் ஜாப்ல சேருற மாதிரி தான் எதாவது பண்ணனும் மாமா!” என்றான் முடிவை தெளிவாய்.
“நல்லது ப்பா. படிக்க ஆசை இருந்தாலும் என்கிட்ட சொல்லுவியா நீ?” என்று சொல்ல, அதற்குமே மறுக்காமல் சிறு புன்னகையை தான் கொடுத்திருந்தான் அரவிந்த்.
“மாமா! நான்லாம் முடிச்சதும் எம்பிஏ படிப்பேன். நீங்க தான் என்னை சேர்த்து விடணும்!” கனகா உள்ளே சென்றிருந்ததால் தைரியமாய் கூறினாள் மகிழினி. அரவிந்த் முறைத்ததை எல்லாம் கண்டு கொள்ளவில்லை அவள்.
“உனக்கில்லாததா மகிம்மா. உன் ஆசைக்கு தான் எல்லாமே!” என்று பாசமாய் அவள் தலையைப் பிடித்து ஆடிவிட்டார் அன்பரசன்.
“அப்ப நான் ப்பா?” அனன்யா தந்தையிடம் கேட்க,
“உனக்கு போக தான் மத்தவங்களுக்கு இல்ல மாமா?” என்று சிரித்தான் அரவிந்த்.
“அனு!” என்று கனகாவின் குரல் சத்தமாய் வர,
“அலாரம் அடிச்சிருச்சு!” என்றாள் மகிழினி.
“மகி!” என அரவிந்த் முறைத்துப் பார்க்க,
“ஹாஹாஹா!” என சத்தமாய் சிரித்த அன்பரசன்,
“சரியா தான் சொல்றா! என்ன ஒரு சத்தம்.. இல்ல டா ம்மா?” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்க, அனன்யாவுமே அவர்களோடு சிரித்தவள் எழுந்து அன்னையிடம் சென்றாள்.
“உனக்கு வாய் கூடி போச்சு மகி. இரு அக்காகிட்ட சொல்றேன்!” என அறைக்கு வந்ததும் அரவிந்த் மகிழினியிடம் கூற,
“மாமாவே எதுவும் சொல்லல. நீ ஏன் ஓவரா பண்ற? உன் கிப்ட் எல்லாம் கூட மாமாகிட்ட சொல்லி இருக்கலாம். அப்படியே அத்தைகிட்டயும்.” மகிழினி சொல்லவும்,
“ம்ம் ஆமா! நான் யாரையோ இழுத்துகிட்டு ஓடிட்டேன்னு ஊரு முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டி இருப்பாங்க. கொழுப்பா டி உனக்கு!” என்றான் அவனும் கோபமாய்.
“அக்கா ஏன் இன்னும் கால் பண்ணல?” என அரவிந்தே பேச்சை மாற்றிவிட,
“அக்கா அவங்களா தான் கால் பண்ணி பேசுறாங்க. நாம பண்ணினா ரீச் பண்ண முடியல!” என்றாள் மகிழினியும்.
“ம்ம் ஆமா. நான் கூட வீடியோ கால் பண்ண சொல்லி கேட்டேன் அன்னைக்கே. இன்னும் பண்ணல. ஒரு போட்டோ கூட அனுப்பல. என்ன மாதிரி நிலைமை எதுவும் கஷ்டப்படுறாங்களா எதுவும் புரியல!” என அரவிந்த்துமே வருத்தப்பட்டான்.
*************************
திகழ்மதி அத்தனை குழப்பத்தில் இருந்தாள். ஏன் எதற்கு என்று தெரியாமலே கோபமும் குழப்பமும் சூழ, இடையில் உஷா அழைத்து ஒரு நாள் கேட்ட பொழுது கூட நடந்ததை திகழ்மதி சொல்லி இருக்க,
“பார்க்க டீசென்ட்டா இருக்கார். ஆனா ஆள் எப்படி இருக்கார் பாரேன்!” என உஷா கூறவும்,
“அப்படியும் என்னால சொல்ல முடியல உஷா. நிஜமா அவர் ஜெம் தான். ஆனா என்கிட்ட அப்படி பேசினது மட்டும் தான் எனக்கு பிடிக்கல”
“என்ன மதி சப்போர்ட் பண்ற? அப்ப உனக்கும் லவ்வியோலஜி தானா?” என கிண்டலாய் விளையாட்டாய் மட்டும் உஷா கேட்க,
“ப்ச்! அதெல்லாம் என் வாழ்க்கைக்கு ஒத்து வருமா உஷா?” என்றாள் திகழ்மதி விரக்தியாய்.
“ஹேய்! என்ன மதி சீரியஸ் ஆகிட்ட. நான் சும்மா விளையாடினேன். இப்ப என்ன உன் வாழ்க்கைக்கு குறை? உன் தம்பியை நல்லபடியா படிக்க வச்சுட்ட. அவன் இரு வேலைக்கு போனா நீயும் அவனும் சேர்ந்து மகிக்கு நல்ல ஒரு வாழ்க்கை குடுக்கலாம்.” என்ற உஷா,
“இங்க பாரு மதி! உனக்கு பிடிச்சதை எல்லாம் முக்கியமான நேரத்துல விட்டு கொடுத்துட்டா இந்த வாழ்க்கையை வாழ்ந்து அர்த்தமே இல்ல. நூத்து கிழவி மாதிரி பேசாத! இப்ப என்ன ஆர்யா சார் உன்னை லவ் பன்றாரா? பண்ணட்டுமே என்ன தப்பு?” என்றும் கேட்க,
“ஷட் அப் உஷா? லூசா நீ? உன்கிட்ட போய் சொன்னேன் பாரு!” என்றாள் திகழ்மதியும் உடனே.
“சொல்றதை முழுசா கேளு மதி. நீயே சொல்ற நல்லவர்னு. என்னவோ ப்ரோப்லேம். வீட்டுலயே பொய் சொல்ல வேண்டிய நிலைமை. அதுவும் அந்த புகழ் சார் பேசினதை எல்லாம் சேர்த்து பார்த்தா அவர் தான் என்னவோ கோல்மால் பண்ணி இவரை சிக்க வச்சிருக்கார்!”
“இப்ப என்ன சொல்ல வர்ற நீ?”
“நான் எதுவும் சொல்லல. நீ யோசி. உனக்கு சரினு தோணுறதை செய். ஆர்யா சார் லவ் பன்றார்னா அது அவரோட. உனக்கு அவரை புடிச்சிருக்கா இல்லையா? அதுல மட்டும் நீ தெளிவா இரு. அது போதும்!”
“எனக்கு வேண்டாம். அதுல நான் தெளிவா இருக்கேன். போதுமா? உன்கிட்ட சொன்னதுக்கு!” எனக்கு தனக்கு தானே தலையில் அடித்துக் கொண்டு வைத்துவிட்டாள்.
அலைபேசியை வைத்துவிட்டு அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு தன்னையும் மீறி உஷா கூறிய வழியில் சிந்தித்துக் கொண்டிருந்தது அவளது உள்ளம். அதை அவள் முழுதாய் உணரும் முன்பே சிந்தனையை கலைத்து அறைக்குள் வந்தான் ஆர்யன்.
“உங்ககிட்ட பேச தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்!” நீண்ட நாட்களுக்கு பின் அறையில் திகழ்மதியின் சத்தம் கேட்க,
“பார்த்துக்கலாம் திகழ். இன்னும் ஒரு பத்து பதினைஞ்சு நாள் தான். அதுக்கு நடுவில புகழ் வைஃப் சீமந்தம் மட்டும் இருக்கும். அதை மட்டும் முடிச்சு குடுத்துட்டு நீங்க கிளம்பினா சரியா இருக்கும்” என்றவனை இவள் விழி அகற்றாமல் பார்க்க,
“கவலைப்பட வேண்டாம். நிச்சயம் உங்க பேர் எங்கேயும் வராது. நான் நிஜத்தை சொல்லி உங்க மேல எந்த பேச்சும் வராம உங்க மரியாதைக்கு எந்த பேச்சும் வராம தான் அனுப்பி வைப்பேன்!” என்றவனை இன்னுமே ஆழ்ந்து தான் பார்த்தாள்.
சில நாள் முன்பு அவளிடம் அவன் பேசிய விதம் என்ன? இன்று அவன் பேசுவது என்ன? இதில் எது உண்மை? என குழம்பி அதன் தாக்கத்தில் பார்வை அவனை விட்டு அகலாமல் இருக்க,
“என்ன திகழ் அப்படி பாக்குறீங்க?“ என்றான் ஆர்யனே!.
பத்து நாட்களை கடந்துவிட்டது இருவரும் தனியாய் சந்திக்கும் பொழுதுகளில் பேசி. இப்பொழுது கூட அவளே பேச போய் தான் அவனும் பேசுகிறான். ஆனாலும் அவளுக்கு தான் கஷ்டம் அதில்.
இப்பொழுது உஷா கூறிய திசையில் தான் சிந்தித்துக் கொண்டிருந்தது நியாபகத்தில் வர, திடுக்கிட்டு போனது அவள் உள்ளம்.
“அம்மா கூட ரொம்ப மெர்ஜ் ஆகிட்டீங்க போல. அதான் பீல் பண்றிங்க. அம்மா புரிஞ்சிப்பாங்க. பாட்டி, அப்பா தான்.. கொஞ்ச நாள் கோவமா இருப்பாங்க அப்புறம் சரியாயிடுவாங்க”
“ரிசெப்ஷன் வைக்கும் போது தான் மேரேஜ் ஆன டீடெயில்ஸ் எல்லாம் வெளில குடுக்கணும். அதுவரை வெளில யாருக்கும் சொல்ல வேண்டாம்னு அப்பாகிட்ட கூட சொல்லி இருக்கேன். சோ எந்த பிரச்சனையும் வராது” என அவளுக்காய் யோசித்து ஆர்யன் பேச,
“எதுக்காக இப்படி ஒரு ட்ராமா?” என்றாள் அவன் பதில்களை எல்லாம் கவனிக்காமல்.
“திகழ்?”
“யாருக்காக? சொத்து பிரச்சனையா? சொத்து வெளில போயிட கூடாதுன்னா? இல்ல பிடிக்காத மேரேஜ்க்கு உங்களை கட்டாயப்படுத்திட்டாங்களா?” என்றாள் என்னவாக இருக்கும் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்.