நேசம் 7
“எல்லாம் ஓகே தானே சிஸ்டர்? ஒன் மன்ந்த் இதை ஹெல்ப்பாவே கேட்குறேன் நான். என்னோட ரிலேஷன்றது விட ஆர்யா என் பிரண்ட். அவனை நம்பி அவன் வீட்டுக்கு நீங்க போகலாம். நான் கேராண்டி!” அனைத்தையும் சொல்லி முடித்து புகழ் பெண்கள் இருவரையும் காண, திகழ்மதி உஷாவின் முகம் பார்த்தாள்.
“அய்யயோ அவங்களை எல்லாம் கூட்டிட்டு போக அது டூரிஸ்ட் ஸ்பாட் இல்ல!” திகழ்மதி பார்வை வைத்து புகழ் வேகமாய் கூற, ஆர்யன் சிரித்துவிட்டான்.
“அதெல்லாம் எங்களுக்கும் தெரியும். ஆனா எங்களுக்கு பணம்…. “ என்று உஷா கூற,
“ஓஹ். ஆமால!” என்று புகழ் கூற வரும் முன், “அக்கௌன்ட் நம்பர் இந்த நம்பர்கிம் சென்ட் பண்ணுங்க. அனுப்பிடலாம்!” என்றான் ஆர்யன் தன் விசிட்டிங் காரடை கொடுத்து.
“அதில்ல சார்! கொஞ்சம் எமெர்ஜென்சி. இவங்க மாமா ஹாஸ்பிடல்ல…. “ என்று உஷா சொல்ல வர, அவளைத் தடுத்த திகழ்மதி,
“சார் ப்ளீஸ்! நீங்க என்னை நம்பலாம். நாளை மறுநாள் காலைல நீங்க சொன்ன நேரத்துக்கு நான் கண்டிப்பா வந்துடுவேன். எனக்கு இப்ப அர்ஜென்ட்டா உடனே கேஷ் தேவை. எவ்ளோ அர்ஜென்ட்னா எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடனே.” என்றாள் திகழ்மதி காரணம் கூறாமல் உஷாவை கூறவும் விடாமல்.
புகழ் வேந்தன் தயங்க, “ஓகே எவ்வளவு!” என்று புகழ் பக்கம் ஆர்யன் திரும்ப, அவனுமே விழித்தான் இதைப் பற்றி இன்னும் பேசி இருக்கவில்லையே.
பத்து லட்சம் வரை தான் புகழ் எண்ணம். அதுவும் ஆர்யாவுக்காக தானே கொடுக்க வேண்டும் என நினைத்திருக்க, உடனே பணம் வேண்டும் என்று கேட்கவும் அவன் சிந்தித்தான்.
“பரவால்ல நீங்களே சொல்லுங்க. நான் அனுப்பிடுறேன்!” என்று திகழ்மதி பக்கம் ஆர்யன் திரும்ப,
“சார் ஒரு பத்து லட்சம் போதும்!” என்று உஷா வேகமாய் சொல்ல, திடுக்கிட்ட திகழ்மதி,
“இல்ல இல்ல சார்! அவ்வளவு வேண்டாம். எனக்கு…!.” என்றவள் குறிப்பிட்ட தொகையை கூறினாள்.
எங்கே மறுப்பார்களோ என்பதை போல கண்டிப்பாய் அவ்வளவு வேண்டும் என்பதை போல திகழ்மதி சொல்ல புகழை திரும்பி பார்த்த ஆர்யன் புன்னகைக்க, புகழுமே புன்னகைத்தான்.
“ஓகே! அக்கௌன்ட் நம்பர்!” என மீண்டும் அதை நியாபகப்படுத்த, உடனே தன் அத்தையின் வங்கி கணக்கு விவரங்களை அனுப்பி வைத்தாள் கார்டில் இருந்த நம்பருக்கு.
“உங்க ரெண்டு பேரையும் நம்புறேன் சார். கூடவே ஸ்வேதாவை ரொம்பவே நம்புறேன். நீங்க அப்ப பேசின பேச்சுக்கு துளி கூட மதிக்கு செட்டாகாது. இப்ப கூட பார்த்தீங்க இல்ல. அவளோட இப்ப வேண்டிய தேவைக்கு மட்டும் தான் பணம் கேட்டிருக்கா. அதுக்காக அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுற டைப்னு நினைச்சுக்காதீங்க. இனி ஒரு பைசா அவ கேட்க மாட்டா!” என்று உஷா சொல்ல,
“எங்களுக்கு புரியுது சிஸ்டர். அப்ப பேசினதை அப்படியே விட்டுடுங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல பணம் டிரான்ஸ்பெர் பண்ணிடுறோம்.” என்ற புகழ் மேலும் தேவையான விவரங்கள் தகவல்களை சொல்லி அனுப்பி வைக்க, திகழ்மதி ஆர்யனிடம் தலையசைத்து விடைபெற்றாள்.
“ஆர்யா! அந்த வாங்கு வாங்கின. உட்ட பாரு ஒரு அறை! இன்னும் இந்த பக்கம் காது கேட்கல. ஏன் டா அவ்வளவு பேசிட்டு அந்த பொண்ணுகிட்ட எப்படி டா உடனே சம்மதம் சொன்ன? எனக்கு சரியாப்படலையே!” என்றான் சந்தேகமாய் பார்த்து புகழ்.
“இப்பவும் நீ பண்ணினது பிடிக்கல தப்பு தான். இன்னும் ரெண்டு அறை கூட விட்டிருப்பேன்!”
“எதே?”
“ஆனா அந்த பொண்ணு…” என்றவன் செல்பவளைப் பார்த்து மெலிதாய் சிரிக்க,
“ஆர்யா?” என்ற புகழுக்கு புரிவது போலவும் புரியாததை போலவும் இருந்தது.
“டேய்! அந்த பொண்ணை தான் ரெண்டு நாள் முன்னாடி நம்ம ஸ்டோர்ல பார்த்தேன். ஷூட்டிங் போய்ட்டிருக்குன்னு தெரியும். ஆனா அந்த பக்கம் நான் போனதில்ல அப்பா தான் பார்த்துப்பாங்க. ஷூட்டிங் ஸ்பாட் விட்டுட்டு ஃப்ளோர் ஃப்ளோரா தேடுனேன். அன்எக்ஸ்பெக்டட்!” என்று சிரித்த ஆர்யாவை ஆனந்தமாய் பார்த்த புகழ்,
“மச்சி?” என்று கேட்க,
“தெரில. பார்த்ததும் திரும்பிப் பார்க்க தோணுச்சு. தேடுனேன். இப்ப பார்த்ததும் சான்ஸ் மிஸ் பண்ண தோணல!”
“டேய் டேய்! தெளிவா சொல்லேன். எப்ப பாரு நாங்க நினைக்குறதுக்கு அப்போசிட்டாவே நினைக்குறது.”
“எனக்கே தெரியாத கேள்வி. கேள்வி தெரிஞ்சதுனு வச்சுக்கோயேன். விடையும் கண்டுபிடிச்சா….. ஷேர் செய்யப்படும்!” என்றவன் தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவளை பார்த்தபடி நின்றான்.
“நாட் பேட் மேன்! நல்லதாவே உன் விருப்பப்படியே நடக்கட்டும்” என்று கூறியவன்,
“ஆமா வீட்ல எப்படி பேச போற ஆர்யா? மாமாவை நினச்சா பயமா தான் இருக்கு!” என்றும் சொல்ல,
“நான் ஏன் டா சொல்லணும்? ஸ்டார்ட் பண்ணின இல்ல.. வந்து கன்டின்யூ பண்ணு.” என்றவன் திகழ்மதி அனுப்பிய வங்கி எண்ணோடு அவள் எண்ணையும் சேமித்தான் அலைபேசியில்.
“நானா?”
“என்ன நானா? நீ தான். நீயே தான். ஆகாத போகாத வேலையெல்லாம் பார்த்தாச்சு. இதுக்கு மட்டும் மாமாவை நினச்சா பயமா இருக்கா. வந்து நீ தான் பேசுற. திகழ் வர்றது எதுவும் சொல்ல வேண்டாம். அதை நான் அவ வரும் போது பார்த்துக்குறேன். நீ தான் கதாசிரியர் மாதிரி டெவலப் பண்ணுவியே. நாளைக்கு வந்து எதாவது சொல்லிட்டு போ!”
“எதாவதுன்னா மழை வருமா வராதானா? இதெல்லாம் ஓவர் டா. ஆனாலும் கேள்வி தெரில பதில் தெரிலனு சொல்லிட்டு வச்ச பாரு பேரு. திகழ்மதி திகழ் ஆயிட்டாங்களா உனக்கு? நீ நடத்து.” என்று கிண்டல் செய்தவன் தோள்களில் கையைப் போட்டு விளையாடியபடி சென்றான் ஆர்யன்.
மாலை கான்ஸ்ட்ரக்ஷன்ஸ் வேலையை ஒரு பார்வை பார்த்துவிட்டு தந்தை வரும்முன் வீட்டிற்கு சென்ற ஆர்யன் கிளம்பி மீண்டும் புகழ் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
“நினச்சேன் ண்ணா நீங்க வருவீங்கன்னு!” என்று முதலில் பார்த்து வரவேற்றது ஸ்வேதா தான்.
“இவன் பண்ணின வேலைக்கு நான் எங்கப்பாகிட்ட தலைமறைவா சுத்திட்டு இருக்க வேண்டியதா போச்சு” என்ற புலம்பலுடன் உள்ளே வர, வள்ளிதேவி அமர்ந்திருந்தார்.
“ஆர்யா! வா வா! ரொம்ப நாளா இந்த பக்கமே காணுமேன்னு நினைச்சேன்!” என்று வள்ளி தேவி அழைக்க,
“அதான் நீங்க வந்து பெரிய குண்டா என் தலையில போட்டுட்டிங்களே! அப்புறம் எங்க வர்றது?” என்று சுற்றிலும் பார்த்தவன்,
“மாமா எங்க? “ என்றான் ஹஸ்கியான குரலில்.
“அவர் வர நேரமாகும். நீயும் என் மேல கோபமா தான் இருக்கியா ஆர்யா?” என்று வள்ளி தேவி கேட்க,
“நான் காபி கொண்டு வர்றேன் ண்ணா!” என்று உள்ளே சென்றாள் ஸ்வேதா.
“உங்க மேல மட்டும் தான் கோபமா இருக்கேன். பாட்டி சொத்து வேணும்னா அது தூங்கும் போது கைரேகையை எடுத்துட்டு போறதுக்கு இல்லாம போய் பாட்டிகிட்ட கேட்டு வச்சுட்டீங்க. அவங்க அப்பாகிட்ட சொல்ல, அப்பா மாமாவை சத்தம் போட, இப்ப லாஸ்ட்ல என் தலை தான் உருளுது. பட்டுன்னு கல்யாணம் பண்ணினா தான் ஆச்சுன்னு நிக்கிறாங்க எல்லாரும்!” என்றான்.
“நீயுமா டா? நான் அதெல்லாம் கேட்பேனா? உன் மாமா தான் சொத்தோட வா இல்லைனா உன் அண்ணன் veetula போய் இருந்துக்கோன்னு சொல்லிட்டாரு. அவர் தொல்லை தாங்காம தான் அம்மா காதுல போட்டு வச்சேன். உனக்கு என்ன டா கண்ணா? பொண்ணு எப்படி இருந்தாலும் அண்ணனும் அண்ணியும் ஓகேனு சொல்லிட்டாங்களே! எவ்வளவு நாள் தான் நீயும் இப்படியே சமாளிச்சுட்டு இருக்க போற? பொண்ணு யார்னு காட்டு அத்தை வேணா அவங்க வீட்டுல பேசுறேன்!” என்று சொல்ல, தான் வந்த வேலை சரியாய் நடந்து கொண்டிருந்தது ஆர்யனுக்கு.
“அதே தான்! உங்க ஹெல்ப் கேட்டு தான் வந்திருக்கேன்!” என்று ஆர்யன் சொல்ல, வாசலில் பைக் நிற்கும் சத்தம். புகழ் தான் வந்திருந்தான்.
“சொல்லு டா பொண்ணு வீட்டுல பேசணுமா? பேசிடலாம்!” என்று வள்ளி தேவி கூற,
“இல்ல! உங்க அண்ணன்கிட்ட பேசணும்”
“அண்ணன்கிட்ட என்ன பேசணும்?”
“அப்படி கேளுங்க! தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு தப்பு பண்ணிட்டேன் அத்தை!” என்று சொல்ல,
“என்ன டா பண்ணி வச்ச?” என்றார் புரியாமல்.
“இவனா? இவன் எங்க இங்க?” நினைத்தபடி புகழ் ஆர்யன் அருகே வர, ஸ்வேதா காபியோடு வர,
“பண்ணி வச்சது உங்க மகன் தான். நாலு நாள் ஆச்சு. இப்ப நீங்க ஹெல்ப் பண்ணினா தான் நான் வீட்டுக்கு போக முடியும்!” என்று பொடி வைத்து பேசினான் ஆர்யன்.
“என்ன டா பேசிட்டு இருக்க?” என்று புகழ் அமரவும், காபியை எடுத்துக் கொண்ட ஆர்யன், புரியாமல் வள்ளி தேவியும் ஸ்வேதாவும் முழித்துக் கொண்டிருக்கும் பொழுதே,
“சொல்லு புகழ்! நீ தானே எனக்கு கல்யாணம் பண்ணி வச்ச? இப்ப அவ வீட்டுல பிரச்சனை ஆகிட்டு. நாளைக்கோ நாளன்னைக்கோ அவ வீட்டை விட்டு வந்தா அத்தை ஹெல்ப் பண்ணினா தான அப்பாகிட்ட பேச முடியும்?” என்று சொல்ல, குடித்துக் கொண்டிருந்த காபி மூக்கில் ஏறி இருமலோடு வெளிவந்து கொண்டிருந்தது புகழுக்கு.
“என்ன! கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சா? “ என்றதில் வள்ளி தேவி அதிர்ந்திருக்க, ஆர்யனின் இந்த பேச்சில் ஸ்வேதாவுமே வாய் திறந்து பார்த்திருந்தாள்.
“வேற வழி தெரில அத்தை. அவளும் அழுறா இவனும் கல்யாணம் தான் ஒரே வழினு சொல்லிட்டான். அதான் நானும் வேற வழி இல்லலாம…” என்றவன்,
“சொல்லு டா!” என்றபுகழ் முதுகில் தட்ட,
“அறிவிருக்கா புகழ் உனக்கு? என்ன வேலை பார்த்து வச்சிருக்க? அண்ணே சும்மாவே என் மேல கோபமா இருக்காங்க. இப்ப போய் நீ? “ என்ற வள்ளிக்கு இப்போதே படபடப்பாய் வந்தது.
‘போயும் போயும் இதற்கா இவன் தன்னிடம் உதவி கேட்டு வர வேண்டும்?’ என்று நினைக்கும் அளவுக்கு வந்துவிட்டார்.
“ஏன் டா?” என்ற பார்வை புகழ் ஆர்யனைப் பார்க்க,
“என்னை கோர்த்து விடும் போது நல்லாருந்துச்சா? திகழ் வரும் போது நீயும் குடும்பத்தோட வந்து சேரு!” என்று புகழ் காதில் முணுமுணுத்துவிட்டு சென்றான் ஆர்யன். மனைவியை பரிதாபமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தான் புகழ்.
தொடரும்..