வண்ணமில்லா எண்ணங்கள் கதையின் இரண்டாம் பாகம் இந்தக் கதை.சிறு முன்னுரையோடு துவங்குகிறேன். ஜெய்ப்பூரில் இருக்கும் மிகப்பெரும் குடும்பம் மகிழன் வர்மாவினுடையது.அவனது தாத்தா சந்திர வர்மாவின் மரணத்தில் சந்தேகம் எழ அதை விசாரிக்க சீபிஐயில் இருந்து வரும் அதிகாரி ஷியாமா. அந்த மரணம் மட்டும் அல்லாது மகிழனைச் சுற்றி நடந்த பல நிகழ்வுகளை கண்டுபிடித்துக் கொடுக்கும் அதே வேளையில் இருவரும் நல்ல நண்பர்களாகியிருக்க மூன்று மாதங்களுக்குப் பிறகு மகிழனின் பெரியம்மா இறந்து போகும் செய்தி கேட்டு மீண்டுமாய் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் வருகிறாள் ஷியாமா.
அத்தியாயம்-1
மூன்று மாதங்களுக்குப் பின் மீண்டுமாய் ஜெய்ப்பூர் பயணம் ஷியாமாவிற்கு.எப்போதும் போல் எவ்வித அலட்டலும் இன்றி காரை இயக்கிக் கொண்டிருந்தவளின் கைப்பேசி அழைக்க எடுத்துப் பார்த்தவள் மகிழனின் பெயரைப் பார்த்ததும் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு மடியில் வைத்த வண்ணம் காரை இயக்கினாள்.
“சொல்லுங்க மகிழன்..”
“பெரியம்மா இறந்துட்டாங்க ஷியாமா..”
“ஓ..ஷி…”
“இப்போ தான்..நான் ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கேன்.நீ இங்கேயே வந்துடு.”
“ஓகே மகிழன் 20 நிமிஷத்தில் அங்கே இருப்பேன்.”
அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவமனை வாசலில் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவளுக்கு வராண்டாவில் இரண்டு கைகளையும் தலைக்குக் கொடுத்து குனிந்து அமர்ந்திருந்த மகிழன் தெரிந்தான்.
“மகிழன்..”
“ஹாய் ஷியாமா..”,என்றவன் எழுந்து நின்று அவளோடு கைக் குலுக்கினான்.
“சாரி ஃபார் த லாஸ்..”
“எவ்வளவு கவனமா இருந்தும் சில விஷயங்களைத் தவிர்க்க முடியுறதே இல்லை.”
“இதில் உங்கத் தப்பு ஒண்ணும் இல்லை மகிழன்.ரிலாக்ஸ்.”
“…”
“என்ன நடந்தது?”
“அம்மா இறந்த இந்த மூணு மாசத்தில் அவங்களை ரொம்பவே கவனமா தான் பார்த்துகிட்டேன்.இன்ஃபேக்ட் வீட்டுக்குள்ளேயே இருக்காங்கனாலும் என்னோட கண்பார்வையில் தான் வைச்சுருந்தேன்.
நேத்து என்னவோ மனசே சரியில்லை கோவிலுக்கு போகணும் போல இருக்குனு முத்து அண்ணாகிட்ட சொல்லிருக்காங்க.அவர் என்கிட்ட கேட்காம வேண்டாம்னு சொல்லிருக்கார்.
ரொம்ப வற்புறுத்தினதுனால் என்னை தொந்தரவு பண்ணாம, இருந்த பாடிகாட்ஸோட அனுப்பி வைச்சுருக்கார்.திரும்பி வர்ற நேரம் திடீர்னு ஒரு நாலு பேர் அட்டாக் பண்ணிருக்காங்க.தலையில் பலமான அடி.”
“…”
“நேத்தே டாக்டர் ஹோப்லெஸா தான் பேசினார்.இப்போ என்னடானா..”,என்றவனுக்குப் பெருமூச்சு எழுந்தது.
“அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்கீங்க மகிழன்?”
“இதை அப்படியே விட்டுடலாம்னு இருக்கேன்.”
“வாட் அதுக்காகவா என்னை வர சொன்னீங்க?”
“சீபிஐ ஆபீசர் ஷியாமாவை நான் எப்போ கூப்ட்டேன்?”
“!!”
“எனக்கு என் ப்ரெண்ட் ஷியாமா என் பக்கத்தில் இருந்தா நல்லாயிருக்கும்னு தோணிச்சு அதுக்காக தான் விஷயத்தைச் சொன்னேன்”,என்றவனைப் பார்த்து நின்றவளின் முகத்தில் மெலிதான ஒரு சிரிப்பு.
“இதை போன்லேயே சொல்லிருந்தா இப்படி அஞ்சு மணிநேரம் நானே கார் ஓட்டிட்டு வந்திருக்க மாட்டேன்ல?அக்டிவ் டிரைவர்ஸ் கூட கிடைக்கலை..”,என்றவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.
இரு காது நுனியிலும் கை வைத்தவனாய்,”சாரி..”,என்றவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து பின் சாய்ந்து விழி மூடிக் கொண்டான்.
அவனது ஆறடி இரண்டங்குலத்திற்கு காலை நீட்டி அந்த வராண்டாவின் வழியையே மறைத்த வண்ணம் விழி மூடியிருந்தான்.
ஷியாமாவும் அமைதியாய் அவனருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள,
“கண்டிப்பா இது அத்தைங்களோட வேலையா தான் இருக்கும்னு அப்பட்டமா தெரியுது.இதுக்கு நான் பதிலடி கொடுக்க அடுத்து அவங்க பசங்களுக்கு பழிவாங்குற உணர்ச்சி வர, இதெல்லாம் தேவையில்லைனு தோணுது ஷியாமா.
வர்மா குடும்பத்தில் அடுத்த தலைமுறையாவது எந்த வன்மங்களும் இல்லாம இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன்”
“புரியுது மகிழன்.நல்ல முடிவு தான்.”
“ம்ம் இங்கே இருந்து நேரா க்ரிமேஷனுக்கு தான் போக போறேன்.முத்து அண்ணா அங்கே எல்லா ஏற்பாடும் பண்ணிருப்பார்.நீ வீட்டுக்கு போ நான் வந்துட்றேன்”
“ஆர் யூ ஷுவர்?நானும் வரேன் ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை..”
“இருக்கட்டும் ரொம்ப டயர்டா தெரியுற நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு.உன் ரூம் தயாரா தான் இருக்கும்.”
“ஓகே டேக் கேர் வீட்டுக்கு வந்துட்டு கால் பண்ணுங்க.தூங்கினாலும் தூங்கிடுவேன்.”,என்றவள் எழுந்து கொள்ள தானும் அவளோடு வாசல் வரை சென்று வந்தான்.
மீண்டும் அந்த அரண்மணைக்குள் வந்தபோது முதல் முறை வந்த நினைவுகள் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன.இப்போது இன்முகமாய் கதவைத் திறந்துவிடும் காவலாளியைப் பார்த்து சிரிப்பு வந்தது ஷியாமாவிற்கு.
காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு இறங்க புதிதாக நியமிக்கப் பட்டிருந்த பாடிகார்டில் ஒருவன் சாவியை வாங்கி பார்க் செய்ய எடுத்துச் சென்றான்.
தன் வருகையை மகிழன் அனவருக்கும் தெரிவித்து விட்டான் என்பதை உணர்ந்தவளாய் தன் பையோடு உள்ளே செல்ல வாசலிலேயே அவளுக்காக காத்திருந்தனர் ஆஷிக் மோனிஷா மற்றும் தியா.
“ஹாய்..”,என்று மூவருமாய் அவளை வரவேற்க ஷியாமாவிற்குமே சற்று உற்சாகமாய் இருந்தது.
“ஹலோ கைஸ்..எப்படியிருக்கீங்க எல்லாரும்?”
“நாங்க இருக்குறது இருக்கட்டும் நீங்க என்ன மெலிஞ்சுட்ட மாதிரி இருக்கீங்க?”,என்ற மோனிஷாவைப் பார்த்து புன்னகைத்தவளாய்,
“ஒரு கேஸ் ரொம்ப குடைச்சல் கொடுத்துடுச்சு அதோட உபயம்.”,என்றவள் தியாவைப் பார்த்து புன்னகைத்தபடி,
“அப்பறம் கல்யாண பொண்ணு என்ன சொல்றார் உங்க வருங்கால கணவர்?”
“அதெல்லாம் முடியாது கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும்.தீரஜ் கூட உங்ககிட்ட பேசுறேன்னு சொல்லிருக்கார்.”
“நீங்க கூப்பிட்டதே போதும் ஊரில் இருந்தா கண்டிப்பா வரேன்.”,என்றவளைப் பார்த்து அமைதியாய் நின்றிருந்த ஆஷிக்கை லேசாய் வயிற்றில் குத்தினாள்.
“என்ன நல்லவரே இவ்வளவு அமைதி ஆகிட்டீங்க?”
“இன்னும் நான் உங்க வேலையை நினைச்சு ஷாக்ல தான் இருக்கேன்.”
“இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?”,என்றவளோடு சேர்ந்து புன்னகைத்தவன் கைக் குலுக்கினான்.
மேலும் சில நொடிகள் பேசிவிட்டு மாடிக்கு வந்தவள் அவளுக்கான அறைக்குள் சென்று சிறு குளியலைப் போட்டுவிட்டு அப்படியே கட்டிலில் விழுந்திருந்தாள்.
நல்ல உறக்கத்தில் இருந்தவளுக்குத் தன் கைப்பேசியின் அழைப்பு எங்கோ ஒலிப்பதாய் தோன்ற கட்டிலைத் தடவி எடுத்து அப்படியே காதில் வைத்தவள்,
“யெஸ்..”
“ஷியாமா மகிழன் ஹியர்..”
“ஒரு பேச்சுக்கு கால் பண்ணுங்கனு சொன்னா நிஜமாவே கால் பண்ணுவீங்களா?ஐ அம் ஸ்லீபிங் யார்..”என்றதைக் கேட்டவனின் முகத்தில் வெகு நாட்களுக்குப் பின் சிறு முறுவல்.
“வந்து சாப்பிட்டு போய் தூங்கு கம்..”,என்றவன் அழைப்பைத் துண்டித்து விட வேண்டா வெறுப்பாய் எழுந்தவள் தலையைக் கோதி கொண்டையிட்ட வண்ணம் கீழே சென்றாள்.
உணவு மேஜையில் மகிழன் மட்டுமே அமர்ந்திருக்க அப்போது தான் மணியைப் பார்த்தவள் இரவு ஒன்பது என்பதைக் கவனித்தாள்.
“ஹோப் நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணலை?”
“அராஜகம் பண்றீங்க மிஸ்டர் எம் வி..இனி எனக்குத் தூக்கம் வராது..”
“குட் அதுதான் எனக்கும் வேணும்.நான் உன்கூட கொஞ்சம் பேசணும் ஷியாமா.”
“எனிதிங் சீரியஸ்?”
“அப்படினு சொல்லிட முடியாது..”,எனும்போதே முத்து சூடான உணவோடு அங்கு வந்திருந்தார்.
“எப்படியிருக்கீங்க மேடம்?”
“என்ன அண்ணா மேடம் எல்லாம்?எப்பவும் போலேயே பேசுங்க..”
“நல்லதுமா..உன்னைத் திரும்பவும் இங்கே பார்த்ததில் ரொம்பவே சந்தோஷம்.”,என்றவர் சமையலறைக்குள் செல்ல அதுவரை அமைதியாய் இருந்த மகிழன்,
“சாப்ட்டு என் ரூம்க்கு வா ஷியாமா பேசலாம்”,என்றதைக் கேட்டவளுக்கு லேசான ஆச்சரியம்.அவனது அலுவலக அறையைத் தவிர எங்கேயும் அவனைப் பார்த்திராதவளுக்கு இந்த அழைப்பு அத்தனை ஆச்சரியத்தைக் கொடுத்தது.
இருந்தும் எதையும் காட்டிக் கொள்ளாமல் ஆமோதிப்பாய் தலையசைத்தவள் அமைதியாகவே உணவை உண்ண ஆரம்பித்திருந்தாள்.
இருவருமாய் உணவை முடித்த நேரம் ஷியாமாவிற்கு வந்த அழைப்பை ஏற்று அவள் பேசத் தொடங்க அறைக்குச் செல்வதாய் கையசைத்து விட்டு மகிழன் மாடியேறியிருந்தான்.
பத்து நிமிடத்தில் அழைப்பை முடித்தவள் மாடியில் ஓரத்தில் இருந்த அவனது அறைக்கான மணியை அழுத்திவிட்டு காத்திருக்க கதவைத் திறந்தவன் வரவேற்பாய் தலையசைத்தான்.
உள்ளே சென்றவளுக்கு அப்படியாய் ஒரு ஆச்சரியம்.அறையின் ஒவ்வொரு இடத்திலும் அத்தனை நேர்த்தி.கிட்டத்தட்ட மியூசியம் போல் இருந்த அறையைப் பார்வையிட்டவளுக்கு சற்று நேரத்திற்கு முன் குளித்து வந்து தன் டவலை அப்படியே சோபாவில் வீசியது நினைவிற்கு வந்தது.
“வாவ் மகிழன் நீங்க மிஸ்டர் பெர்ஃபெக்ட்னு தெரியும் பட் இந்தளவு எதிர்பார்க்கலை.”,என்றவளைப் பார்த்தபடியே பால்கனியின் சுவரில் கை ஊன்றிய வண்ணம் அவளையேப் பார்த்திருந்தான்.
“உங்க ப்ரெண்டா இருக்கணும்னா நிறைய ஃபாலோ பண்ணணும் போலேயே”,என்றவள் அவனைப் பார்த்து புன்னகைத்தவாறே அவனெதிரில் இருந்த சேரில் அமர்ந்து எப்போதும் போல் கால் மேல் கால் போட்டுக் கொண்டாள்.
“சின்ன வயசில் இருந்தே அப்படியே பழகிடுச்சு ஷியாமா.என் திங்க்ஸை யாரும் டச் பண்ணினா கூட எனக்கு பிடிக்காது.அதனாலேயே யாரையும் இந்த ரூம்க்குள்ள அனுமதிக்க மாட்டேன்.முத்து அண்ணா மட்டும் தான் சுத்தம் செய்ய வருவார்.இப்போ நீ..”
“ம்ம்.”
“தனிமை ரொம்ப பிடிக்கும்னு நினைச்சுட்டு இருந்தேன்.பட் உன்னை ப்ரெண்ட்னு சொன்ன அப்பறம் நீ இல்லாம ஐ பெல்ட்..எப்படி சொல்றதுனு தெரியலை.
வாழ்க்கையில் யாரையும் இவ்வளவு மிஸ் பண்ணதில்ல அதான் மறைக்காம உன்கிட்ட கேட்டுடலாம்னு தோணிச்சு.வொய் காண்ட் வீ கெட் மேரிட் ஷியாமா?”
“ம்…வெயிட்..வாட்??”,என்றவள் இருக்கையில் இருந்து எழுந்து விட்டிருந்தாள்.
“ஷ்..யூ ஆர் ஷௌட்டிங்..”,என்றவன் அப்போதுமே நிதானமாகத் தான் பேசிக் கொண்டிருந்தான்.
“விளையாடுறீங்களா மகிழன்?”
“கமான்..நான் காலேஜ் பையன் இல்லை.இந்த நேரத்தில் உன்னை கூப்பிட்டு விளையாடுறதுக்கு..”
“இதைவிட பிஸினஸ் தனமான ஒரு ப்ரொபோசலை வாழ்க்கையில் யாரும் பண்ணிருக்க மாட்டாங்க..”,என்றவள் மார்பின் குறுக்கே கை கட்டி நின்று அவனை ஏறிட்டாள்.
“உன்னோட போலீஸ் பார்வையை கொஞ்சம் நிறுத்துறியா..ஐ அம் டேம் சீரியஸ்..”
“..”
“எனக்கு காதல் வசனமெல்லாம் வராது.முயற்சியும் பண்ணலை.நீ வந்த கொஞ்ச நாளிலேயே என்னை இம்ரெஸ் பண்ணிணது நிஜம்.பட் இருந்த பிரச்சனையில் இது ஒரு வித அஃபெக்ஷன் இதை அடுத்த கட்டத்துக்கு ப்ரொசீட் பண்ணணும்னு எல்லாம் எனக்கு யோசனையே இல்ல.”
“…”
“பட் இந்த மூணு மாசம் என்னால நார்மலா இருக்க முடியல.என்னை அறியாம உன் பேரை சொல்லி நிறைய தடவை மத்தவங்களை கூப்பிடுற அளவு உன் விஷயத்தில் நான் தீவிரமா இருந்துருக்கேன்னு அப்போ தான் புரிஞ்சுது.
அண்ட் என்னால காதல் கவிதைனு எல்லாம், சத்தியமா செட் ஆகாது.பட் கண்டிப்பா ஐ கேன் பி அ குட் ஹஸ்பெண்ட்.நவ் பால் இஸ் ஆன் யுவர் கோர்ட்.”,என்றவன் உதடு குவித்து மூச்சை வெளியிட்ட படி அவளருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
அவளுக்குமாய் நாற்காலியை கை காட்ட மறுக்காமல் அமர்ந்த வண்ணம் ஒரு நிமிடம் அவனையேப் பார்த்திருந்தாள்.
“வாட்?”,என்றவனைப் பார்த்து சிரிப்பு வந்திருந்தது.
“ப்ரொபோசல் வைக்குற உங்க முகத்தில் ஒரு தடுமாற்றமோ ஆர்வமோ ஆசையோ எதுவும் இல்லை.அதை விட கேட்குற எனக்கு எந்த பட்டாம் பூச்சியும் பறக்கலை.நாம இரண்டு பேரும் சேர்ந்தா இரண்டு ரோபோ சேர்ந்த மாதிரி தான் இருக்கும்.”,என்றதில் அவனுமே சிரித்தான்.
“என் கரெக்டருக்கு எல்லாம் கல்யாணம்…நான் யோசிச்சே இருக்காத ஒரு விஷயம் மகிழன்.குடும்பத்துக்கு புருஷனுக்கு கட்டுப்பட்டு போற ஆள் நிச்சயமா நான் இல்லை.யாரையும் மதிக்க மாட்டேன்னு சொல்லலை.பட் வெளிப்படையா மனசில் தோணுறதை பேசுற ஆள் நான்.
ரொம்ப சிம்பிளா ஒண்ணு சொல்லவா இதுவரை நான் புடவையே கட்டினது கிடையாது.சுருக்கமா சொல்லணும்னா ஒரு பொண்ணுக்காக இந்த உலகம் வைச்சுருக்கும் எந்த வரைமுறையிலும் நான் பொருந்த மாட்டேன்.எல்லாத்தையும் விடுங்க.வர்மா க்ரூப் ஆப் கம்பனீஸோட எம்டி மனைவியா வரப்போறவங்களைப் பத்தி இந்த சொசைட்டிக்கே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.
அப்படியிருக்கும் போது உங்க குடும்பம் இதெல்லாத்தையும் எப்படி?அதிலேயும் உங்க அத்தைங்க என்னை கொன்னு போட கூட யோசிக்க மட்டாங்க?”,என்றவள் சிரிக்க மகிழனின் முகத்தில் ஒருவித இறுக்கம்.