உமையாள், வசீகரன், பாலா மற்றும் கிருஷ்ணா என எல்லோரும் ஆள், ஆளுக்கு ஒரு உணவு பதார்த்தங்களை எடுத்து வந்து உணவு மேசையில் நிரப்பினர்.
வசீகரனுக்கோ அவள் குறைகிறது என்று சொன்ன “அது”வே மண்டையில் ஓடி கொண்டு இருந்தது. இந்த வீடு புதிதாக வாங்கி இருந்ததால் அவன் “அது” வாங்க மறந்திருந்தான்.
அவனின் பாப்புக்கு பிடித்த வகையில் பெரிதாக வாங்க வேண்டும் என்றால் உடனடியாக கிடைக்காது. அவனின் பாப்புவிற்கு பிடித்த மாதிரி செய்ய சொல்லி வாங்க வேண்டும். நாளைக்கு கடைக்கு செல்ல வேண்டும் என மனதிற்குள் குறித்து கொண்டான்.
இந்த சிந்தனையில் வசீகரன், நண்பர்களுடன் இருக்கையில் அமர, உமையாள் நின்றுகொண்டு பரிமாற தயாரானாள். சற்று முன்பு தான் அவ்ளோ பெரிய வாக்குவாதம் நடைபெற்று இருக்க, அதன் தாக்கத்தில் பாலா, உமையாளிடம்,
“நீயும் உட்காரு உமா, நாமளே எடுத்து வச்சி சாப்பிடலாம்” என அவளையும் அவர்களுடன் உண்ண அழைத்தான். உமையாளோ,
“பரவாயில்ல அண்ணா, நீங்க எல்லாம் சாப்பிடுங்க, உங்களுக்கு பரிமாறிட்டு நான் சாப்பிடுறேன்” என மறுத்தவாறே, மூவருக்கும் உணவு பரிமாற, பாலாவோ அவளை ஒரு பொருள் விளங்கா பார்வை பார்த்துவிட்டு,
“என்ன உமா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான், சில வேலை எல்லாம் பெண்களுக்குனு எழுதி வைச்சி இருக்கானு கேட்டு சண்ட போட்ட, இப்போ உட்காரு எல்லாம் சாப்பிடலாம்னு சொன்னா மாட்டேன் சொல்ற, உன்ன என்னால புரிஞ்சிக்கவே முடில” என பாலா அங்கலாய்க்களானான்.
தன் சிந்தனையில் இருந்து மீண்ட வசீகரன், பாலாவின் கூற்றில், உமையாளை பார்த்து, ஒரு இளநகையை உதிர்த்தான். உமையாளுக்கும் வசீகரனின் சிரிப்பு தொற்றிகொள்ள, அதே சிரிப்புடன்,
“அப்படி இல்ல அண்ணா, இப்போ நானும் சாப்பிட உட்கார்ந்தா, நாமளே தான் நமக்குள்ள பரிமாறி சாப்பிடுவோம், அப்போ ஒன்னு இடது கையாள எடுத்துவைப்போம், இல்லைனா சாப்பிட்ட கையாலே எடுத்து வைப்போம், அது ஒருவேளை சாப்பிடறவங்களுக்கு அன்ஈசியா அஹ இருக்கலாம், அதுபோக எவ்ளோ தான் நண்பர்களா இருந்தாலும் சாப்பாடு மட்டும், தானே எடுத்து வச்சி சாப்பிட கொஞ்சமா தயக்கம் இருக்கும், நமக்காக ஒருத்தவங்க பார்த்து பார்த்து பரிமாறி சாப்பிட நிஜமே நல்லா இருக்கும் அண்ணா, அதான் நான் பரிமாறுறேனு சொல்றேன்” என அதற்கும் ஒரு விளக்கம் கொடுத்தாள்.
[the_ad id=”6605″]பாலாவுக்கு உமையாள் வித்தியாசமான பெண்ணாக தான் தெரிந்தாள். எல்லா விஷத்தையும் அவள் ஒரு புதுவிதமான கண்ணோட்டத்தில் அணுகுவதாக அவனுக்கு தோன்றியது. வெகு விளையாட்டு பெண் போல தெரிந்தாலும் அவள் எல்லா விஷயத்திலும் தெளிவாக யோசிக்கிறாள் என்றும் புரிய பாலா,
“சரி, நீ எங்களுக்கு பரிமாறு, நான் உனக்கு பரிமாறுகிறேன் டீல் ஓக்கே வா” எனக் கேட்க, உமையாளும்
“இப்போ சொன்னிங்க பாருங்க இது டீல், இப்படி தான் இருக்கனும், சாப்பிட்டு முடிச்சதும் அப்படியே போகாம, நமக்கு பரிமாறுனவங்களுக்கு நாம பரிமாறனும்” உமையாள் சிலாகிக்க, பாலா பதிலுக்கு புரிந்தது எனும் விதமாக தலையாட்டி வைத்தான்.
பேச்சு ஒரு பக்கம் இருக்க, உமையாள் அம்மூவரின் தட்டிலும் அவர்களின் விருப்பம் அறிந்து உணவுகளை வைத்து, அவர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாற, மூவரும் அமைதியாக சாப்பிட்டுக்கொண்டு இருக்கே, திடீரென்று பாலா,
“எனக்கு ஒரு விஷயம் இப்போ தான் புரியுது உமா”
“என்ன அண்ணா”
“நீ ஒரு விஷயம் பண்ணும் போது கரன் அமைதியா இருந்தா, அந்த விஷயத்தை பத்தி கருத்து சொல்ல கூடாதுனு புரியுது, உன்ன பத்தி கரன் நல்லா புரிஞ்சி வச்சி இருக்கான் இல்ல” என பாலா இருவரையும் அளவிட்டவாறே சொல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, ஒரு முழு நிமிடம் இணைந்த நயனங்கள் அடுத்த நிமிடம் பிரிய, உமையாள் பாலாவிடம்,
“ஆமா அண்ணா, என்னோட அம்மாக்கு அப்புறம் என்ன நல்லா புரிஞ்சிக்கிட்டது கரன் தான்”, என பார்வை முழுதும் வசீகரன் மேல் வைத்தே சொல்ல, அவன் ஒரு சிரிப்பையே பதிலாக தந்தான்.
ஒரு வழியாக மூவரும் உண்டு முடிக்க, உமையாள் சாப்பிட உட்காரவும், வசீகரனும் பரிமாற வர, அவனை தடுத்த பாலா,
“நீ போ மச்சான், நான் தான் இன்னைக்கு உமாக்கு பரிமாற போறேன்” என, பாலாவின் கூற்றில் நிமிர்ந்து அவனின் பாப்புவை பார்த்த வசீகரன், அவள் சம்மதமாக தலை அசைக்கவும், நகர போக, பாலா கடுப்பாகி விட்டான்.
“ஏண்டா நான் சொல்றேன், கொஞ்சம் கூட என்ன மதிக்காம, போகட்டுமான்னு உன்னோட பாப்புவை பார்க்கிற, ஏன் உன்னோட பாப்பு சொன்னா தான் போவியா” எனக் கேட்க, வசீகரனோ சிறிதும் அலட்டி கொள்ளாமல்,
“ஆமாடா என்னோட ஒரே ஒரு மாமா பொண்ணு, நான் தானே பத்திரமா பார்த்துக்கணும்” என கண்ணடித்து சொல்ல, பாலாவோ,
“டேய் உமா எனக்கு தங்கச்சி, நானும் பத்திரமா பார்த்துப்பேன்” என மல்லுக்கு நிற்க, கிருஷ்ணாவின் மனமோ, “ஹப்பா பாசம் என்ற பேருல பண்ற அலப்பறை தாங்க முடியல” என்று நினைத்து அலுத்துக்கொண்டே சென்று வரவேற்பறையில் சோபாவில் அமர்ந்தான்.
வசீகரனும், பாலாவும் பேசியபடியே இருக்க, உமையாளோ இவர்களை கணக்கில் கொள்ளாமல், தன் வயிறை கவனிக்கும் பொறுப்பை கவனிக்க, மேற்கொண்டு அவள் தட்டை நிரப்பும் பொறுப்பை பாலா ஏற்றுக்கொள்ள, வசீகரன் அவனின் பாப்புவிடம் ஒரு தலையசைப்புடன் விடைபெற்று வரவேற்பறைக்கு சென்று கிருஷ்ணாவின் அருகில் அமர்ந்தான்.
[the_ad id=”6605″]கிருஷ்ணா ஏதோ கேட்க, வசீகரன் பதில் பேசவென அவர்கள் தீவிரமாக எதையோ பற்றி உரையாட, இங்கு உமையாள் சாப்பிட்டுவிட்டு பாலாவை முன்னே செல்ல சொல்லிவிட்டு, பின்னாடியே சிறிய சிறிய கோப்பைகளில் பாயசத்தை எடுத்துக்கொண்டு வந்தாள்.
பாயசத்தோடு வந்தவள் எல்லாருக்கும் ஒரு கோப்பையை கொடுத்துவிட்டு, தானும் ஓன்றை எடுத்து கொண்டு அமர, வசீகரனும், கிருஷ்ணாவும் தங்கள் பேச்சை தொடர, பாலாவும் அவர்கள் பேசுவதை செவிமடுக்க நினைக்க, அருகில் அமர்ந்து இருந்த உமையாளின் அசையா பார்வையில், கவனம் மொத்தத்தையும் அவளின் மீது திருப்பினான் பாலா.
உமையாள் பார்வை, வசீகரனை வட்டமிட்டிருந்தால் பாலா நிச்சயம் அதை பெரிதாக எடுத்துக்கொண்டு இருக்க மாட்டான். ஏனனில் அவனுக்கு அவர்கள் இருவரும் விரும்புகிறார்களோ என்ற சந்தேகம் இருக்கையில், காதலர்களுக்குள் யாரும் அறியாமால் பரிமாறப்படும் ஒர பார்வைகளும், தன்னை மறந்து தன் துணையின் மீது நிலைக்கும் ரசனையான பார்வைகளும் சகஜம் தான்.
ஆனால் கிருஷ்ணாவில் மையம் கொண்ட உமையாளின் பார்வையில் இருந்த அந்த என்னவோ ஒன்று, என்ன என சத்தியமாக பாலாவிற்கு விளங்க வில்லை. பாலாவும், உமையாள் இப்போது பார்வையை விளக்குவாள், தன் பார்வையை மாற்றுவாள் என பொறுத்து பொறுத்து பார்க்க, கிருஷ்ணாவில் நிலைத்த உமையாளின் பார்வையில் கொஞ்சம் கூட மாற்றம் இல்லை. மாறாக ஒரு தீவிரம் மட்டுமே.
உமையாள் தன் நயனங்களை கிருஷ்ணாவின் மேல் இருந்து பிரிக்கும் வழியை காணாததால், இதற்கு மேலும் அவளின் பார்வைக்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ள வில்லை என்றால் தலை வெடித்துவிடும் என்ற நிலையில் பாலாவே, உமையாளின் பக்கம் கொஞ்சம் சரிந்து, அவளின் காதருகில் குனிந்து,
“என்ன உமா, கிருஷ்ணா மூஞ்சியே உத்து, உத்து பார்த்துகிட்டு இருக்க, அவ்ளோ அழகாவா இருக்கான்” என நக்கலாக கேட்க, அவளோ இப்பொழும் அவனிடம் இருந்து பார்வையை ஒரு சதவீதம் கூட அசைக்காமல்,
“கிருஷ்ணாக்கு என்ன அழகன் தான், ஆனா இப்போ அவன் மூஞ்சியை யாரு பார்த்தா” என பதில் கேள்வி தொடுக்க, பாலாவோ இப்போதும் அவள் பார்வையை தன் பக்கம் திருப்பாத கடுப்பில்,
“அப்புறம் அங்க என்னத்த இப்படி வச்ச கண்ண எடுக்காம பார்த்துகிட்டு இருக்க” என கேட்க, உமையாளோ,
“ஹேர்” என ஒரே வார்த்தையில் பதில் அளிக்க, அவளின் பதிலை செந்தமிழில் மொழிபெயர்த்த பாலா, ஒரு நிமிடம் அதிர்ந்து தான் விட்டான்,
“இப்போ நான் என்ன கேட்டுடன்னு என்ன இப்படி திட்டுற” என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க, அவனின் குரலில், இப்போது தான் தன் கடைக்கண் பார்வையை பாலாவை நோக்கி திருப்பிய உமையாள், ஒரு பொருள் விளங்கா பார்வையுடன்,
“நானா, நான் எப்போ அண்ணா உன்ன திட்டினேன்” என கேட்க, பாலாவோ, அவளுக்கு விளங்கவைக்கும் நோக்கத்தில்,
“நான் என்ன பார்க்கிறனு கேட்டதுக்கு, ஹேர் னு சொன்ன இல்ல” புகார் வாசிக்கும் குரலில் சொல்ல, இப்போதும் அவன் சொல்ல வருவதின் உட்கருத்தை புரிந்து கொள்ளாமல், உமையாளின் கண்கள் கிருஷ்ணாவின் முகத்திற்கும், பாலாவின் முகத்திற்கும் கபடி விளையாடியபடியே இருக்க,
“நீங்க கிருஷ்ணா மூஞ்சிய பார்க்கிறியா கேட்டிங்க, நான் இல்ல அவரோட முடியை பார்க்கிறேன்னு தானே சொன்னேன்” என விம்பார் போட்டு விளக்க,
பாலாவோ மனதிற்குள் “ஆத்தாடி என் வாயால நானே அசிங்க பட திரிஞ்சனா, ஜஸ்ட் மிஸ்டா பாலா” என ஆசுவாசபட்டுக் கொண்டவன் திரும்பி கிருஷ்ணாவை பார்த்தான்.
கிருஷ்ணாவோ எப்போதும் போல முன்உச்சி கொண்டை, மீதி முடிகள் காற்றின் வசம் என வசீகரனிடம் உரையாடி கொண்டு இருக்க, பாலாவிற்கு இப்போதும் புரியவில்லை,
“சரி முடியை தான் பார்க்கிறனு வச்சுக்குவோம், அதை ஏன் இப்படி உத்து உத்து பார்த்துகிட்டு இருக்க”
“அது இல்ல, முடி இவ்ளோ ஷைனிங் அஹ இருக்கே, அப்படி முடிக்கு என்னத்த போட்டு வளர்ப்பாருனு தான் யோசிச்சிகிட்டு இருந்தேன், ஒரு வேலை மண்டைக்குள்ள வளம் செழிப்பா இருக்குமோ” என பாலாவை பார்த்து கண்ணடித்து சிரிக்க, ஒரு நிமிடம் எடுத்தது பாலாவிற்கு அவள் சொன்னது புரிய.
எல்லாரும் பேசவே பயப்படுகிற, வியாபாரத்தில் அடுத்தவர் கணிக்க முடியா செயல்பாடுகளை கொண்ட கிருஷ்ணாவை பார்த்து, இந்த உமா, “அவர் மண்டையில் களிமண் அதிகமோ, அதனால் தான் இத்தகைய முடி வளர்ச்சியோ” என கிண்டல் அடிக்கிறாள் என புரிந்த அடுத்த நிமிடம், பாலா அடக்கமாட்டாமல் சிரித்து விட்டான்.
அவனின் சிரிப்பில், தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு இருந்த வசீகரனும், கிருஷ்ணாவும், தங்கள் கவனத்தை இவர்கள் பக்கம் திரும்பி, இவர்கள் இருவரையும் பார்க்க, உமையாளோ இப்படி சிரித்து தன்னை மாட்டி விட்டுவிட்டாயே என பாலாவை முறைத்தாள்.
“என்னடா எதுக்கு இப்படி சிரிக்கிற” என வசீகரன் புரியாமல் கேட்க, கிருஷ்ணாவும் அதே கேள்வியை தாங்கி பாலாவை பார்க்க, பாலா இன்னும் சிறிது முடித்தபாடில்லை. உமையாளே சமாளிக்கும் விதமாக,
“இல்ல கரன், கிருஷ்ணா ஹேர் செமையா இருக்கு, என்ன பிராடக்ட் யூஸ் பண்ணுவாருனு பாலா அண்ணா கிட்ட கேட்டேன்” என சற்று இடைவெளி விட்டு நிறுத்த,
வசீகரனுக்கு புரிந்துவிட்டது இவள் ஏதோ குறும்பு செய்திருக்கிறாள் என, அவன் அவனின் அந்த அழகிய நயனங்களில் சிரிப்பை பூசி இவளை பார்த்தான், மிட்சத்தையும் சொல்லி முடி எனும் விதமாக.
உமையாள் தன் பெயரை எடுத்ததுமே கிருஷ்ணாவின் அந்த உறையவைக்கும் கண்களில் கூர்மையாக அதிகமாக, அவளையே துளைக்க, பாலாவோ இன்னும் சிரிப்புகளின் மிச்சத்துடன் என்ன சொல்லி சமாளிக்க போகிறாள் என ஆர்வமாக பார்த்தான்.
[the_ad id=”6605″]இடையில் நிறுத்தியவள் ஒரு தடவை எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவர்களின் கண்களின் வழியே அவரவர் எண்ணத்தை அனுமானித்தபடியே,
“நான் கேட்டதுக்கு, பாலா அண்ணா அவன் மண்டையில் களிமண் அதிகம், அதான் முடி நல்லா வளர்ந்து இருக்குனு சொல்லிட்டு சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க” என அப்படியே நடந்ததை விளக்கும் குரலில், உண்மை போலவே சொல்ல, வசீகரன் அதரங்கள் புன்னகையில் விரிய, பாலாவின் புன்னகை அப்படியே அதரங்களில் உறைந்தது.
கிருஷ்ணா எப்பவுமே எல்லாரையுமே இரண்டு அடி தள்ளி நிற்க வைக்கும் ரகம். பாலாவே கூட அவனை கிண்டல் அடித்ததது எல்லாம் இல்லை. முதல் முறையாக பாலா கிருஷ்ணாவை ஒருவர் கிண்டல் அடிக்க பார்க்கிறான். கிருஷ்ணாவின் குணத்திற்கு அவன் இதை எப்படி எடுத்துக்கொள்வான் என பாலாவால் நிர்ணயிக்க முடியவில்லை.
கிருஷ்ணா நிச்சயம் பாலாவை திட்டினால் அவன் பெரிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை. அதே சமயம் கிருஷ்ணா உமையாள் சொல்லியதை அப்படியே நம்புவானா என்பதும் சந்தேகமே. ஒரே பார்வையில் எல்லாவற்றையும் எடை போட்டுவிடுபவன் அவன்.
ஒருவேளை உமையாளை ஏதும் சொல்லிவிட்டால், வசீகரன் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டான் என்பது திண்ணம். அதனால் பாலாவின் எண்ணம் முழுதும் இங்கு எந்த ராசபாதமும் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது.
அந்த பதட்டத்தில் பாலா, ” மருதமலை இருக்க பெருமாளோட பிள்ளையே பிள்ளையாரப்பா எப்படியாவது இவன் கிட்ட இருந்து எங்களை இன்னைக்கு காப்பாத்தி விட்டுடு, பிளீஸ்” என தப்பும் தவறுமாக வேண்டுதல் வைத்தான்.
இவனின் வேண்டுதலை கேட்ட பிள்ளையாரோ, “நான் எப்போ டா மருதமலை போனேன், அங்க என்னோட தம்பி தான்டா லிவிங்ஸ்டன், பெருமாள் என்னோட மாமாடா மங்கூஸ் மன்டையா, , இவனை நான் காப்பாத்தணுமாம், எப்பா டேய் யாராவது வந்து இவன் கிட்ட இருந்து என் குடும்பத்தை காப்பாத்துங்கடா” என கதறினார்.
இப்படி கடவுளையே கறதவிடுவது எல்லாம் பாலாவில் மட்டுமே சாத்தியப்படும் போலும்.
பாலா மீண்டும் மனதில் எதையோ நினைக்க, அதை செவிமடுத்த பிள்ளையாரே, நல்ல வேலை என்னை பற்றி யோசிக்கவில்லை என்று எலியாரோடு கிடைத்த இடைவெளியில் எஸ்ஆக, பாலா உமையாளை வருத்து எடுத்துக்கொண்டு இருந்தான்..
“பாப்பு இப்படி வச்சிட்டியே ஆப்பு, இந்த ஆங்கிரி பர்ட் கிட்ட என்ன இப்படி மொத்தமா கோர்த்துவிட்டுட்டியே, எப்படி எல்லாம் குதறி எடுக்க போகுதோ” என கொஞ்சம் பயம், நிறைய பதட்டத்தோடு கிருஷ்ணாவை பார்க்க, அவனின் பார்வையோ உமையாளின் மீது தான்.
உமையாளையே கூர்ந்து, அவளின் விழிவழியே ஊடுருவி மனதை படிப்பவன் போல கிருஷ்ணா பார்க்க, உமையாளும் சளைக்காமல் அவனின் பார்வையை எதிர்கொள்ள, சிறிது நேரத்தில் எதுவுமே சொல்லாமல், முக்கியமாக பாலாவை திட்டாமல் வசீகரனிடம், “சரி கரன் நான் கிளம்புகிறேன்” என்று உரைத்துவிட்டு இருக்கையை விட்டு எழுந்தான்.
கிருஷ்ணாவின் பார்வையில், பாலா “திக் திக்” என இருந்தவன், அவன் “கிளம்புகிறேன்” என சொன்னதும், நிம்மதி பெருமூச்சுவிட, அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு விடுவேனா என கங்கணம் காட்டியது போல, கிருஷ்ணாவுடன் சேர்ந்து எழுந்த உமையாள், அவன் நடையை தடை செய்வது போல, அவசர, அவசரமாக
“பதில் சொல்லாமலே போறிங்களே கிருஷ்ணா” என மீண்டும் கேள்வி கேட்க, கிருஷ்ணா அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் எதுமே சொல்லாமல் விடைபெற, வசீகரனோ “ஏன் பாப்பு இப்படி அவனை கலாட்டா பண்ற” என்று அவளின் தலையை கலைத்துவிட்டு கிருஷ்ணாவுடன் வாசலுக்கு சென்றான்.
இங்கு பாலா இப்போது தான் சிறிது ஆசுவாசம் ஆனவன், உமையாளிடம், “அவனே போறேன்னு சொல்றான், ரொம்ப புண்ணியம், கிளம்புனு சொல்லாம போறேன்னு சொன்னவனு நிறுத்தி வச்சி கேள்வி கேட்குற, நீ என்ன லூசாப்பா” என கேட்க,
பதிலுக்கு உமையாளோ, ” அவரு என்ன சிங்கமா, புலியா இப்படி பயப்படுறீங்க” என கேலிபேசும் குரலில் கேட்க,
“எனக்கு எல்லாம் அவன் முறைத்தாலே அல்லு விட்டுடும், நீ என்னடானா வான்ட்டடா போய் அவனை “என் கூட சண்டைக்கு வாடானு” கூப்பிடுற ” என அவளை மேலும் கீழும் பார்த்தவாறே சொல்ல, உமையாளோ,
“எல்லாம் ஒரு டைம் பாஸ்க்கு தான் அண்ணா” என அவனை பார்த்து கண்ணாடிக்க, பாலாவோ,
“டைம் பாஸ்க்குனு இந்நேரம் இந்த அண்ணனை பலி கொடுக்க இருந்த நீ ” என மீண்டும் புலம்ப,
“விடுங்க அண்ணா, சண்டைனா சட்டை கிழிய தான் செய்யும்”
“சண்டை போடுறவங்க சட்டை கிழிஞ்சா சரி, வேடிக்கை பார்க்கிற என் சட்டையை ஏண்டா கிழிச்சி விடுறிங்க”
“அண்ணா இது ஒரு சாதாரண கிண்டல் பேச்சு, அதுக்கு இவ்ளோ பெரிய அக்கப்போறா”
“உமா அது நாம யாரை கிண்டல் பன்றோம் அப்படின்றதா பொறுத்து இருக்கு”
“ஓவர் பில்ட்அப் அஹ இருக்கே அண்ணா”
“பச் அது எல்லாம் ஒன்னும் இல்லடா, அவன் சட்டுனு கோவப்பட்டு பேசிடுவான், சரியான ஆங்கிரி பர்ட் அவன்”
“ஆங்கிரி பர்ட் எல்லாம் அப்படியே விட கூடாது அண்ணா, ஏதாவது பண்ணி லவ் பர்ட் மாத்தி விட்டுடுவோம்”
“இது நல்ல ஐடியா தான், சரண்யா இவன் மாமா பொண்ணு, அந்த பொண்ணும் இவனை தான் சுத்தி வருது, பேசாம ஜாயிண்ட் அடிச்சி விட்டுடுவோமா”
“சரண்யா, பேரு நல்லா இருக்கே, நான் நேர்ல பார்க்கனுமே, நம்ப ஆங்கிரி பர்ட்க்கு ஏத்த லவ்வாங்கியானு”
“சரி ஒரு நாள் ரெண்டு பெரும் போய் சரண்யாவை பார்க்கலாம் சரியா”
(அடேய் நீங்க ரெண்டு பேரும் பண்ண போற வேலைக்கு பேரு என்னனு தெரியுமாடா லகடபாணிகளா……….)
பாலாவும், உமையாளும் ஒருவருக்கு ஒருவர் ஹை-பை கொடுத்துக்கொண்டு சிரிக்க, வசீகரன் கையில் ஒரு பையோடு வந்து சேர்ந்தான். இருவரின் புருவமும் மேலெழுந்தது அவனின் கையில் இருக்கும் பையை பார்த்து.
காதல் கொள்வோம்………….