சபரி”யாருங்க நீங்க..?”என்றான் வெளியில் நின்றவனிடம்.
“அண்ணி இல்லையா..?”
“அண்ணி!”என யோசித்து தமயாவை பார்த்தான் சபரி.
தமயா”யாருடா..?”என, வெளியில் வந்தாள்.
“அண்ணி! என் பேரு நடராஜன் நட்டுனு தான் அண்ணே கூப்புடுவார், கடையில் இட்லி வாங்கி கொடுக்க சொன்னார்”என கவரை நீட்டினான்.
தமயா புரியாமல் பார்த்தாள்.
“நீங்க..? நான் பாத்தது இல்லையே”
“கல்யாணத்தில் நானும் நின்னேன் உங்களுக்கு என்னைய தெரியாது, நம்ம நளன் அண்ணன் கடையில் தான் நான் வேலை பாக்குறேன், அன்னைக்கு ஹாஸ்பெட்டலுக்கு கூட சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தது நான் தான் அண்ணி”என்றான் உரிமையாக.
“ஓ! தேங்க்ஸ் தம்பி”என கவரை வாங்கி சபரியிடம் கொடுத்தாள்.
“சரி அண்ணி! நான் கிளம்புறேன், எதாச்சும் தேவைனா கூப்புடுங்க நான் கடையில் தான் உள்ள படுத்திருப்பேன், என் நம்பர்”என நம்பரை ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்தான்.
“ம்ம்ம்! சரிப்பா”என்றாள் நன்றியாக.
நான்கு பேரும் சாப்பிட்டு முடித்தனர்.
ஏனோ தமயாவிற்கு வீட்டின் நினைவு வந்தது, புகுந்த வீட்டு நினைவு அது, ‘எல்லாரும் சாப்புட்டாங்களா..? ஜோதி என்ன பண்றா..? தொரை சாப்புட்டு ரூமுக்கு போய் இருப்பாரா..?’என அவளை அறியாமல் ஓடியது எண்ணங்கள்.
சரண்யா எதையோ எழுதிக் கொண்டு இருந்தாள். சபரி ஃபோனில் இருந்தான்.
சொர்ணம் மருந்தின் வீரியத்தில் கண் அயர்ந்தார்.
தமயா தனியாக அமர்ந்து ஏததோ யோசனைக்கு சென்றாள், யோசனையின் முடிவில் தொரை தான் வந்து நின்றான்.
சபரி”அக்கா! நான் வெளியில் போயிட்டு வரேன்”
“எங்கடா இந்த நேரத்தில் போற..?”
“சும்மா நடந்துட்டு வரேன்கா, உட்காந்திருக்க போர் அடிக்குது”
“ம்ம்ம்!”
மணி பத்தாகியது. வேகமாக திரும்பிய அவளின் தம்பி “அக்கா!”என அழைத்தவாறே நுழைந்தான்.
“என்னடா..?”
“மாமா வந்து இருக்கார்”
“மாமாவா..? யார சொல்ற..?”
“நளன் மாமா தான் அக்கா”என்றான்.
“தொரையா..?”என எழுந்து வெளியில் சென்றாள்.
சபரி தோள்களை குலுக்கிவிட்டு சரண்யாவோடு பேச ஆரம்பித்தான்.
வெளியில் சென்றவள் அங்கு அமர்ந்திருந்த தொரையை கண்டு முகம் பிரகாசமாக அருகில் சென்றாள்.
“ம்ம்ம்!”என நின்றாள், மனம் ஏனோ நிம்மதியாக உணர்ந்தது.
அது மூன்றுப் பேர் அமரும் நாற்காலி வரிசை.
அவன் ஒரு பக்கம் அமர்ந்திருந்தான்.
“அம்மா தூங்கிட்டாங்களா..?”
“ம்ம்ம்!”
தமயா உள்ளே சென்று தம்பி, தங்கைகளை தூங்க சொல்லிவிட்டு நளன் அமர்ந்திருந்த நாற்காலியில் மறு முனையில் வந்து அமர்ந்தாள்.
“ஜோதி சாப்புட்டு தூங்கிட்டாளா..?”என கேட்டாள்.
“ம்ம்ம்!”
“அத்தை சாப்பாட்டுச்சா..?”
“ம்ம்ம்!”
“சங்கர் படிக்குறானா, தூங்கிட்டானா…?”
“நான் வரும் போது படிச்சுட்டு தான் இருந்தான்”
“ம்ம்ம்!”
இருவரும் அமைதியாக இருந்தனர்.
“நீங்க சாப்புட்டீங்களா..?”என கேட்டாள் மெல்ல.
அவளை திரும்பி பார்த்தவன், “ம்ம்ம்!”என்றான்.
தமயாவுக்கு எதற்கு அவனிடம் பேசுகின்றோம் தெரியாமல் ஒவ்வொன்றாக கேட்டாள்.
“இங்கரே! உனக்கு தூக்கம் வரலையா..?”
“இல்ல!”
“அம்மாக்கு சரியாகிடும் கவலப்படாத”
“ம்ம்ம்! நான் வேலை பாக்குற ஹாஸ்பெட்டலுக்கு மாத்திடலாம..? எனக்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும், டாக்டர்ஸ் எனக்கு தெரிஞ்சவங்க இருப்பாங்கள”
“ம்ம்ம்! நாளைக்கு கேட்டுப் பாக்கலாம்”
“ம்ம்ம்!”
“என்ன ஆச்சு..? ஏன் ஒரு மாதிரியா இருக்க..?”
“ஒன்னுமில்ல!”என்றாள் அவளுக்கே ஏன்னென்று தெரியாத வருத்தமான சிரிப்போடு.
அவனும் அதற்கு மேல் பேசாமல் தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடினான்.
தமயாவும் உள் சென்று அம்மாவை பார்த்துவிட்டு, மறுபடியும் வந்து அமர்ந்து நாற்காலியில் தூங்க ஆரம்பித்தாள், அந்த நாற்காலியில் சாய்ந்தவள் தூக்கத்தில் அப்பிடியே அருகில் இருந்த வெற்றிடத்தில் தலையை சாய்த்து கால்களை சுருக்கினாள் இரு நாற்காலியில் அடங்கியவாறு.
‘இவ்வளவு நேரம் தூங்கிட்டு தானே இருந்தேன்’என முறைத்தாள் மனதை.
‘பின்ன என்ன..?’
‘நல்லா தான் இருக்கு, என் அம்மா மடியில் கூட நான் இப்பிடி படுத்ததில்லை, ஆனா தொரை மடியில்..? எனக்கு தான் இவரை புருசனா புடிக்கலை, அப்புறம் ஏன் இன்னும் எழுந்திரிக்காம இருக்கேன், ஆனா எழ மனசு வரலையே, ஏதோ ஒரு நிம்மதியான உணர்வு இருக்கு, அது ஏன்னு தெரியலையே.?’என தனக்குள்ளே புலம்பியவள், அந்த மடியை விட்டு எழாமல் அப்பிடியே அசையாமல் கண் முழித்திருந்தாள்.
அசைந்தால் அவன் முழித்துவிடுவான் என்ற பயம் அவளுக்கு.
முதன் முறையாக அவனின் வாசம் உணர்ந்தாள்.
அவளின் மனதை அசைத்தது அந்த வாசம்.
‘நமக்கு ஏன் என்னனமோ தோணுது, எனக்கு என்ன வேணுமுனு தெரியலையே, இந்த தொரை பக்கத்தில் ஒரு நிம்மதியான உணர்வு வருதே எனக்கு, கடவுளே! என்னைய ஒரு மனசா யோசிக்க வை’என கடவுளிடம் வேண்டினாள்.
அவளின் வேண்டுதலை கிடப்பில் போட்ட கடவுள் நளனை எழுப்பி இருப்பார் போல், கண்களை முழித்து தலையை சுழற்றினான் ஒரே பக்கமாக தூங்கியதால்.
குனிந்தப் போது தமயா தூங்கி கொண்டு இருப்பது தெரிந்தது.
“இங்கரே!”என எழுப்பினான் அவளை, தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்புவது கடினம் என்பதை நிரூபித்தாள் தமயா.
‘இது சரிவராது, இவ தூங்கட்டும்’என மெல்ல அவளின் தலையை தூக்கி, அவன் அமர்ந்த இருந்த இடத்தில் வைத்தான்.
பிறகு கை, கால்களை உதறிவிட்டு வெளியில் நடந்தான்.
தமயாவிற்கு அதுவரை இருந்த உணர்வு மாறியது, மனம் வெற்றிடமாய் அலறியது மெல்ல, அவனின் ஸ்பரிசம் விட்டு செல்ல ஏனோ அவளுக்கு ஆகாயத்தில் பறந்த உணர்வு சட்டென்று கீழே விழுந்தது போல் தோன்றியது.
மெல்ல எழுந்து அமர்ந்தாள், நளன் முகம் கழுவி வந்தான்.
“எழுந்திரிச்சுட்டீயா..? டீ குடிக்குறீயா..?” என கேட்டான் அவள் அருகில் வந்து.
“ம்ம்ம்!”என தலையை ஆட்டினாள்.
அவன் செல்ல, அவளும் அம்மா, தம்பி, தங்கையை பாத்துட்டு முகம் கழுவி வந்தாள்.
நளனும் டீயோடு வந்து சேர்ந்தான்.
இருவரும் அமர்ந்து டீ குடிக்க, நளன்”நான் வீட்டுக்குப் போயிட்டு கடைக்குப் போகும் போது வரேன், டாக்டர் கிட்ட பேசிட்டு, அந்த ஹாஸ்பெட்டலுக்கு அழைச்சுட்டுப் போகலாம்”
“ம்ம்ம்!”
“நைட் உன் முகமே சரியில்ல, இப்பவும் அப்பிடியே இருக்க..? என்ன ஆச்சு..? அம்மாக்கு ஒன்னும் பிரச்சனையில்லைனு தானே சொன்னாங்க”
“அப்பிடி எல்லாம் ஒன்னு இல்ல, நான் நல்லா தான் இருக்கேன். ஹாஸ்பெட்டலில் இருப்பதால் லேசான தலைவலி”
“ம்ம்ம்! மாத்திரை போடாத பழக்கமாகிடும், மருந்து தேய்ச்சுட்டு கண்ணை மூடிப் படு, இல்லனா வீட்டுக்கு வரீயா மதியம் வரலாம், அது வரை உன் தம்பி இருக்கட்டும்”
“இல்ல வேணாம், அவங்க காலேஜ் போகனும், நான் பாத்துக்குறேன்”
“சரி! நான் கிளம்புறேன்”என எழுந்தான்.
அவன் சென்றதும், தனியாக அமர்ந்திருந்தாள்.
மனம் தனிமையை உணர்ந்தது.
கண்களை மூடி அமர்ந்திருந்தவளுக்கு நளனின் வாசம் வந்தது, அவளை அறியாமல்..
‘அவன் மடியில் படுத்திருந்த உணர்வு இன்னும் வாசத்தை உணர்கிறது போல’என கண்களை திறக்கவில்லை.
அந்த வாசம் மாறாமல் இருக்க கண்களை திறந்தவள் முன் நின்றான்.
“நீங்க போகலையா..?”என்றாள் தடுமாறி.
“இந்த பையில் உன்னோட டிரஸ் இருக்கு, ஜோதி கிட்ட சொல்லி எடுத்து வைக்க சொன்னேன்”என ஒரு பையை அவள் அருகில் வைத்தான்.
புல்லட்டில் இருந்த பையை எடுத்து வந்தவன், அவளின் மூடிய விழிகளைப் பார்த்தவாறே நின்றான்.
தமயாவிற்கு இரவில் இருந்தே நளன் சொல்லி சென்ற உன் ஆசை எல்லாம் நிறைவேறும், அதன் முதல் படியாய் தாலிப்பிரிச்சுக் கோர்ப்பதை நிறுத்தியாச்சு என்பதே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது.
அவன் மீது ஏதோ ஒரு உணர்வு அவளுக்கு வந்தது தான் காரணம். அதன் விளைவு அவளுக்கு அடுத்து மாப்பிள்ளை பார்ப்பது நடந்து விடுமோ என்ற அச்சத்தை கொடுத்திருந்தது.
அவன் கிட்ட வேண்டாமென்று சொல்லி விடலாம் என நினைத்தாள், ஆனால் மனம் வீம்பு பிடித்தது. ‘நான் சொல்ற மாப்பிள்ளையை அவனால் பாக்க முடியுமானு..?’
அப்பிடி பட்ட மனநிலையில் இருந்த போது தான் இரவு நளன் வந்தது, அவன் மடியில் தூங்கியது எல்லாம்.
காலையில் அவளின் மனம் நளனை ரொம்ப நினைக்க ஆரம்பித்தது..
இப்போது அவன் சென்றதும், அவன் மடியில் தூங்கியதை நினைத்து தனக்குள் சிரிக்க ஆரம்பித்தாள் தன்னையறியாமல்.
வீட்டிற்கு சென்று திரும்பி வந்த நளன் டாக்டர் கிட்ட பேசிட, தமயா வேலை செய்யும் மருத்துவமனக்கு சொர்ணத்தை மாற்றினர்.
ஐந்து நாட்கள் அந்த மருத்துவமனையில் தங்கி இருந்தார் சொர்ணம்.
தமயா தம்பி, தங்கை வீட்டிற்கு சென்றனர், பக்கத்து வீட்டுப் பாட்டி இரவு துணைக்கு படுக்க வந்ததால்.
இரவில் தமயா மருத்துவமனையில் தங்க, நளனும் வீட்டிற்குப் போகாமல் அவளுக்கு துணையாக தங்கினான் மருத்துவமனையில் தமயா மறுத்தும்.
அவள் வேண்டாமென்று வாயினால் சொன்னாலும் அவன் தங்க வேண்டுமென்று மனதில் ஆசைப்பட்டாள்.
ஏனோ இந்த மாதிரி நேரத்தில் அவனின் அருகாமை அவளுக்கு துணை மட்டுமின்றி ஆறுதலான ஒரு பிடிப்பைக் கொடுத்தது, மனதில் அந்த பிடிப்பு விழுதாக ‘என் புருசன்’ என வளர தொடங்கியிருந்தது அவளை அறியாமல் இல்லை, அவளை மீறி.
சொர்ணம் அன்று இரவு நளன் வரும் முன்”பாவம் தமயா மாப்பிள்ள தினமும் வந்து கஷ்டப்படுறாப்ல, வீட்டுக்குப் போக சொல்லுடி”என்றார்.
மனதில் தாயை திட்டினாலும்’அவர் கிட்ட சொல்லிட்டேன் போகல, நான் என்ன செய்ய..? நீ பேசாம தூங்கும்மா, அதான் நாளைக்கு வீட்டுக்குப் போகப் போறல”
“ஏன்டி! நீ வரலையா நம்ம வீட்டுக்கு. உன் மாமியார் தான் பத்து நாள் இருந்துட்டு வானு சொன்னாங்களே”
“ம்ம்ம்! அவங்க சொன்னாங்கனு ஒரேதா வர முடியுமா நான், வரேன்மா வந்து பாத்துட்டுப் போறேன் உன்னைய” என்றாள்.
“ம்ம்ம்! நீ இப்பிடி பேசுறதே எனக்கு போதும், புடிக்காம போன அங்க, இப்ப நீயே வர யோசிக்குறனா அந்த வீடு புடிக்காமயா இருக்கும். எனக்கு என்ன நான் பாத்துக்குறேன்”என்றார் மனதார.
தமயா பதில் சொல்லவில்லை.
நளனை விட்டு அம்மா வீடுப் போக அவளால் யோசிக்க முடியவில்லை, இந்த ஐந்து நாட்களில் அவனோடு அதிக நேரம் செலவிட்டிருந்தாள்.
தங்கம், நதியா வீட்டிற்கு சென்றதும் தான் நளன் வருவான் இரவு. அதனால் அவர்களின் கிண்டலில் மாட்டவில்லை தமயா.
அவனின் ஒவ்வொரு அக்கரையும், அனுசரனையும் அவளை ஈர்த்தது அவன் பக்கம்.
அடுத்த நாள் மாலை, சொர்ணத்தை வீட்டிற்கு அழைத்து செல்லும் நேரம்.
தமயா டிஸ்சார்ஜ் செய்ய அனைத்து பார்மாலிக்டிஸ் முடித்திருந்தாள்.
சொர்ணம் அறையில் இருக்க, தமயா நளனுக்காக காத்திருந்தாள்.
அவன் ஒரு பையோடு வந்தான்.
“என்னங்க இது…?”
“இங்கரே! உன் டிரஸ் எல்லாம் இதுல இருக்கு, உன் அம்மா வீட்டுக்குப் போகும் போது வேணுமுல, அதான் கொண்டு வந்தேன், பார்மாலிக்டிஸ் முடிஞ்சுட்டா.?” என கேட்டான்.
“உனக்கு டிரஸ் மாத்த வேணுமுனு எடுத்துட்டு வந்தேன், இதுக்கு ஏன் கோபப்படுற.?”
“ஆமா! நான் கோபக்காரி தான், அதுவும் உங்களை கல்யாணம் பண்ணதில் இருந்து அது மாறவே இல்ல”என்றாள் வேகமாக.
நளன் மாமியார் அறையை எட்டிப் பார்த்துவிட்டு, அவளின் கையைப் பற்றி ஓரமாக அழைத்து சென்றான்.
“இப்ப எதுக்கு இப்பிடி கத்துற.? உன் அம்மா முடியாம படுத்திருக்காங்க தானே”
“அவங்களுக்காக அமைதியா இருந்து இருந்து கடைசியா இதோ கோபக்காரினு பட்டம் கிடைச்சது தான் மிச்சம்.”என்றாள் வெறுப்பாக.
நளனுக்கு அவளின் மனநிலை புரியவில்லை.
அவன் வயதிற்கு அமைதியாக யோசிக்கின்றான் அவளின் வயதிற்கு எகிறி குதித்தாள்.
“சரி விடு தெரியாம சொல்லிட்டேன் கோபப்படுறனு” என்றான் அவளை சமாதானம் செய்யவென்று.
“இல்ல! இல்ல! நீங்க சொன்னது உண்மை தான், நான் ரொம்ப கோபக்காரி தான், எனக்கு மாப்பிள்ளை பாக்கப் போறீங்கள அந்த மாப்பிள்ளை கிட்ட நான் ரொம்ப கோபக்காரினு மறக்காம சொல்லுங்க”என்றாள் அவனை முறைத்து.
நளனுக்கு முகம் ஒரு மாதிரி ஆனது, “ம்ம்ம்! நீ எப்பிடி மாப்பிள்ளை பாக்கனுமுனு இன்னும் சொல்லவே இல்லையே?”
அவனை மேலும் முறைத்து,
“ம்ம்ம்! நல்ல மனுசனா, என்ன ஆனாலும் என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தானு ரோசமா இருப்பவனா, முக்கியமா பொண்டாட்டியை காதலிக்கனும், காதலிக்க வைக்க ஏதாச்சும் செய்றவனா இருக்கனும், மொதல காதல்னா என்னனு தெரியனும்”என்றாள் அவனை குத்தி காட்டியவாறு.
“வயசு..?”என்றான் அவளின் பேச்சுப் புரியாமல்.
“ம்ம்ம்! எனக்கு மூப்பா இருந்தா போதாததா..”என்றாள் கடுப்பாக.
“சரி! வெளியில் கார் நிக்குது அம்மாவை அழைச்சுட்டு வா”என்று நகர்ந்தான் நளன்..
தமயாவிற்கு கோபம் கோபமாக வந்தது.
“மக்கு! மக்கு! போகுது பாரு, யோவ் தொரை நான் உன்னைய தானே மாப்பிள்ளையா சொல்றேன் அது கூட புரியாம போற பாரு, உன்னைய”என முகத்தை சுளித்து வெளிப்படையாக திட்டினாள்.
இருவருக்குமே வயது வாழ்வதில் தடையாக இல்லை, யோசிப்பதில், வெளிப்படுத்துவதில் தடையாக இருந்தது.
தமயாவிற்கு நளன் என்ன தான் அக்கரை, சர்க்கரையாக இருந்தாலும் காதல் கணவனாக வேண்டும், அவனோட பொண்டாட்டி என்ற உணர்வை அவனே உணர்ந்து அவளிடம் வெளிப்படுத்த வேண்டும்.
நளனிற்கு தமயா சந்தோஷமாக இருக்க வேண்டும், அவன் மனதில் அவனுக்கு பிடித்த பொண்டாட்டி தான் ஆனால் புடிக்காத புருசனாக இருக்க விரும்பவில்லை.
இருவரின் மனநிலையும் மதில் மேல் பூனையாக இருந்தது.
காதல்… அதை வெளிப்படுத்தும் விதம் ரொம்ப முக்கியம் இருப்பக்கமும். கணவனோ! மனைவியோ! தமயாவின் எதிர்ப்பார்ப்பு தப்பில்லை, நளனுக்கு அந்த அளவு காதல் பக்கம் அனுபவம் இல்லை, முதலில் அவனுக்கு புரியனுமே..?
மதில் மேல் பூனைக்கு நான்கு கொடுக்க வேண்டியது தான். அதாங்க தொரையை சொல்கின்றேன், நாற்பது மேல் வயதில் நரைமுடி வந்தால் எப்பிடி தப்பில்லையோ அதே போல் காதல் வந்தாலும் தப்பில்லை என்று புரிய வைக்க வேண்டும். எப்பிடி….?