தொரையின் ‘தமயந்தி’என்ற அழைப்பில், அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், விழிகளை மேல்நோக்கி லேசாக முறைத்தாள்.
“என்ன..?”என்றான் புரியாமல்.
“ம்ம்ம்! எப்பயும் போல ‘இங்கரே’னு சொல்லுங்க, பேர் சொல்லும் உரிமை வந்துட்டுனு ‘தமயந்தி’னா ரொம்ப தூரம் போற மாதிரி இருக்கு”
“அது சரி தான், இங்கரே! பசிக்குது” என்றான் வாய்விட்டு பசியில்.
“அச்சோ! வாங்க”என அவனை விட்டு விலகி நடந்தவளின் கையைப் பிடித்திருந்தவன், “இரு! நானும் வரேன், கீழ லைட் எல்லாம் ஆப் பண்ணிட்டேன்”என முன்னே நடந்தான்.
மெல்ல நடந்த இருவரும், ஹால் பக்கம் போக, நளன்”இந்த லைட் போட வேண்டாம், வா நேரா அடுப்படிக்கே போயிடலாம், அம்மா முழிச்சு என்னனு கேட்கும், பாவம் தூக்கம் கெடும்”
“ம்ம்ம்!”
நளன் முன்னால் நடந்து அடுப்படிற்குள் நுழைந்து விளக்கைப் போட்டான்.
தமயாவின் கையை விட, அவளும் சென்று ஃப்ரிட்ஜில் இருந்த மாவை எடுத்து தோசை ஊற்றச் சென்றாள்.
“இங்கயே உட்காந்து சாப்புடுறீங்களா..?”
“ம்ம்ம்! நீ தோசையை ஊத்து, நான் இப்பிடி நின்னுட்டே சாப்புடுறேன்” என அவளின் அருகே சற்று தள்ளி எதிர் புறமாக அவளைப் பார்த்து நின்றான்.
இட்லி பொடி, கார சட்னி இருக்கவும் அதை வைத்து தோசையை ஊற்றி தட்டில் போட்டுக் கொடுத்தாள்.
“லேட் ஆச்சுனா சாப்புட்டே வர வேண்டியது தானே..?”
“வரவழியில் கடை எதுவும் இல்ல, அதோட சாப்பாடும் இறங்குமானு தெரியல அப்ப இருந்த மனநிலையில், அந்த நோட்டை படிச்சதில் இருந்து உன்ன வந்து கூட்டியாந்துட தான் நினைச்சேன், பாவம் நாளைக்கு வீடு குடிப்போறவங்களுக்கு முக்கியமான வேலை அது, அதான் பாத்துக் கொடுக்க நேரமாகிட்டு, அப்புறம் பாத்தா மணி பதினொன்னு அப்ப உங்க வீட்டுக்கு வந்தா நல்லா இருக்காதுனு, வந்துட்டேன் ஆனா உன்னைய இங்க பாத்ததும் நம்பவே முடியல”என்றான் மெல்ல சிரித்துக் கொண்டே.
“ஏன்.? ரோஷமா வரமாட்டேனு நெனச்சீங்களா..?”
“இல்லயா பின்ன, நீ எப்பிடிப்பட்ட ரோஷமானவனு தான் தெரியுமே, வந்த மொத நாளே என்னைய பயம் காட்டினளவாச்சே”என கூறினான் தட்டினைப் பார்த்தவாறு.
தமயா அமைதியாக அடுத்த தோசையை ஊற்றினாள்.
நளனுக்கு அவள் பதில்லாமல் நிற்க அந்த பேச்சை விட்டு, “நீ சாப்பிட்டீயா..?”
“ம்ம்ம்! ஒரு தோசை தான் சாப்புட்டேன், ஆனா இப்ப பசிக்குது”
“சரி! இரு நான் சாப்புட்டு உனக்கு தோசை ஊத்தி தரேன்”என வேகமாக சாப்பிட்டான்.
தமயா அவனை திரும்பி பார்த்தவள்,”ஒன்னும் வேணாம், நீங்க பொறுமையா சாப்புடுங்க, நானே ஊத்துறேன், ஆனா..”என நிறுத்தியவள் அவன் முன் சென்று, ‘ஆ!’என வாயை திறந்தாள்.
தோசையை பிய்த்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தவன், அவள் திடீரென்று வந்து’ஆ!’என்றதும் புரியாமல் அப்பிடியே கையில் தோசையோடு அவளை பார்த்தான்.
“உங்களுக்காக இது வரப்போறதில்லை, அதனால நானே கேட்டு வாங்கிக்குறேன் தொரை”என அவன் கையில் இருந்த தோசையை அப்பிடியே தன் வாயில் வைத்துக் கொண்டாள்.
நளன் அவளின் செய்கையை பார்த்து லேசாக சிரித்தப்படி நின்றான்.
“இப்ப புரியுதா..? நீங்க எனக்கு ஊட்டி விடுங்க நான் தோசை ஊத்துறேன், ரெண்டுப் பேரும் சாப்புடலாம் சீக்கிரம்”என அடுத்த தோசையை ஊற்றச் சென்றாள்.
நளனுக்கு அது புதிதிலும் புதிது, கண்டிப்பாக தமயந்தியா கேட்காதவரை அவன் தானாக செய்யப் போறதில்லை, ஏன் என்றால் கதையின் தலைப்புக்கே முழுத் தகுதியானவன்.
“❤காதல் மழலை அவள் மணவாளன்❤”
தமயா எதிரில் வரும் போது எல்லாம் அவளுக்கு வாயில் தோசையை வைத்து விட்டான்.
அவனுக்கு ஒரு விதமான மன உணர்வை ஏற்படுத்தியது அந்த நிகழ்வு, அவன் கற்பனையிலும் நினைக்காதது, ஏதோ உழைத்தோம், சம்பாரித்தோம், குடும்பத்துக்கு தேவையானதை செய்கின்றோம் இது தான், இப்பிடி தான் ஓடுகிறது வாழ்க்கை அவனுக்கு.
அனைத்து சுய ஆசைகளையும் துறந்து பல வருடங்கள் ஆகியிருந்தது.
இன்று தமயந்தி மூலம் அவனின் ஆழ்மனம் துளிரத் தொடங்கியது.
“ம்ம்ம! எனக்கு போதும் தொரை, நீங்க சாப்புடுங்க”என்றாள் அடுத்த தோசையை ஊற்றியவாறு.
இருவருக்குமே அடுத்தக் கட்ட நெருக்கத்திற்கு மனம் விரும்பினாலும் மாட்டிற்கு மூக்கு கயிறு யாரு போடுறதென்ற போட்டி, தயக்கம்.
படுக்கையில் படுத்ததும் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி தான் படுத்திருந்தனர்.
“தூங்கலையா…?”என கேட்டான்.
“இல்ல!”
“உன்னய திட்டிட்டு அப்புறம் கஷ்டமாச்சு, காலையிலே மனசு சரியில்லாம தான் கிளம்பினேன், கிளம்பும் போது சங்கர் கிட்ட கடை நோட்டை எடுத்து வர சொன்னா அவன் மாத்தி நம்ம எழுதுற நோட்டை எடுத்துட்டு வந்துட்டான், ஆனா அதுவும் நல்லதா போச்சு”
“ம்ம்ம்! நீங்க திட்டலனா எனக்கு புரிஞ்சு இருக்காது போல, நேத்து இன்னேரம் எல்லாம் அழுது புலம்பிட்டு இருந்தேன், ஆனா இப்ப எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா..?”
“ஏங்க இப்பிடி கேக்குறீங்க…? இல்லாமலா நான் விடிஞ்சதும் ஓடியாந்தேன்”என்றாள் வருத்தமாக.
“ம்ம்ம்!”
“உங்களுக்கு சந்தேகம் வரதில் தப்பில்லை, நான் அப்பிடி தானே நடந்துகிட்டேன், ஏதோ ஒரு தப்பான புரிதல் எனக்கு, ஆனா உங்களை பக்கத்தில் பார்த்ததும் என் எண்ணம் தப்புனு புரிஞ்சுட்டு, வயசு வெறும் நம்பருனு உறைச்சுட்டு, உங்களை மாதிரி ஒருத்தர் கெடைப்பதுக்கு தான் என்னைய கடவுள் ஏழையா படைச்சாரோ என்னவோ..” என்றாள் கண் கலங்க.
அவளை நேருக்கு நேர் பார்த்தவன்,”இங்கரே! இப்ப எதுக்கு நீ கண்ணு கலங்குற..? இனி நீ அழுகவே கூடாது, சரியா..? நீ ஈஸியா சொல்லிட்ட, ஆனா உண்மை இந்த வயசுல எனக்கு நீ கிடைக்கனுமுனு இருக்கு பாரு, அதுக்கு நான் என்ன செஞ்சேனு தெரியல”என விரக்தியா சிரிச்சான்.
“ம்ம்ம்! எனக்கா புரியலனாலும் நீ தான் வாய் விட்டே தான் சொல்லி தரீயே, ஊட்டி விட சொன்ன மாதிரி, அப்புறம் எனக்கு என்ன கவல, சொல்லி தா கத்துக்குறேன்”என பற்கள் தெரியாமல் சிரித்தான்.
“நானு நர்ஸ், டீச்சர் ஒன்னுமில்ல தொரை”
“இங்கரே! எனக்கு நீ தான் டீச்சர்” என்றான் சட்டென்று.
“ஆள் வளர்ந்த அளவுக்கு மனசு வளரலை, அதுல கொஞ்சமாச்சும் காதல் இருக்கா..? இருந்தா வேணா நான் டீச்சர் ஆகி சொல்லி தரேன்”
“இல்லாம எப்பிடி போகும்..? என்னையும் ஒருத்தி தேடுறா, எனக்காக ஏங்குறா, என்னைய எதிர்ப்பார்க்குறனா, எல்லாம் இருக்கு, இங்கரே! உன் கிட்ட சொல்ல என்ன இப்ப…? நான் ஒரு மாதிரி வாழ்ந்துட்டேன் இதுவரை, நீ நினைக்குற மாதிரி புருசனா, உன் ஆசைக்கு ஏத்த மாதிரி இருக்க முடியுமானு தெரியல, ஆனா என் மனசால உன்னைய புடிக்கும், நீ என் பொண்டாட்டி, உனக்காக எல்லாம் செய்வேன் அவ்ளோதான்”என்றான் அவளையே பார்த்தவாறு.
தமயா அடுத்த நாளில் இருந்து தான் வேலைக்குப் போக வேண்டும்.
சரி! இன்னைக்கு வீட்டில் இருப்பதால் தலைக் குளித்து விடலாம் என தலைக் குளித்துவிட்டு பாவாடை, ஜாக்கெட்டோடு துண்டைப் போர்த்தியவாறு வெளியில் வந்தாள்.
நளன் அறையில் நின்று யாருடனோ ஃபோன் பேசிக் கொண்டிருக்க, தமயா வந்ததும், வழக்கம் போல் பால்கனி பக்கம் நகரப் போனவனின் கையைப் பிடித்து தடுத்தவள், செய்கையால்
பிரச்சனையில்லை நில்லுங்க என சொல்லிவிட்டு, துண்டை எடுத்துவிட்டு புடவையை கட்ட ஆரம்பித்தாள்.
நளனும் அவளுக்கு எதிரில் திரும்பியவாறு ஃபோன் பேச, அவன் நேரம் எதிரில் கண்ணாடி.
கண்ணாடியில் மனைவி புடவை கட்டுவதைப் பார்த்தவனுக்கு கொஞ்சம் இல்லை ரொம்பவே தாக்கமானது.
ஃபோனில் பேசுறவனை கட் பண்ணிட்டு பாத்ரூமுக்குள் நுழைய நினைக்க, அவனோ விடாமல் அடுத்தடுத்து கேள்விக் கேட்க, முடியாத உணர்வோடு சொல்லி முடிக்கவும், தமயா புடவைக் கட்டி முடிக்கவும் சரியாக இருந்தது.
“ரொம்ப நேரமாச்சு போல தொரை, நான் போய் டீ போட்டாங்களானு பாக்குறேன், நீங்க வாங்க கீழ”என வேகமாக சென்றாள்.
நளன் தலையை ஆட்டியவாறு’ம்ம்ம்’என்றான். உணர்வுகள் அவனை மீறி அவனின் இங்கரே பின்னாலே போக, அதை தடுத்து குளிக்க சென்றான்.
தமயா சென்ற நேரம், அப்போது தான் எழ ஆரம்பித்திருந்தனர் வீட்டினர்.
சரசு பால் கறந்து வைத்தார். லலிதா அடுப்படியில் பாத்திரங்களை ஒதுங்க வைத்தவாறு இருந்தாள்.
தமயா பாலை எடுத்துக் கொண்டு அடுப்படிற்குள் செல்ல, “அக்கா!”என்றாள் ஓப்பாடியாரை.
“ம்ம்ம்! என்ன அடுப்பு எல்லாம் மாவா இருக்கு, உன் புருசன் நைட் சாப்புட்டு வரலையா..?”
“இல்லக்கா! வர வழியில் கடை மூடிட்டாங்களாம், அதான் தோசை ஊத்திக் கொடுத்தேன், தூக்கம் வந்துட்டு துடைக்காம போயிட்டேன், விடுங்க நான் துடைக்குறேன்”
“துடைச்சுட்டேன், நீ டீயைப் போடு மெதுவா சமைக்கலாம், இன்னைக்கு ஸ்கூல் தான் இல்லையே, ஆமா! நீ வேலைக்குப் போகனுமா…?”
“நாளைக்கு தான் போகனும்”என பாலை ஊற்றி அடுப்பில் வைத்தாள்.
“அக்கா! இது கொதிக்கட்டும் நான் வந்துடுறேன், தலையை உதறிட்டு”என பின் வாசல் வெயிலிற்கு சென்று தலையை உதறினாள்.
சரசு சாணம் அள்ளிப்போட்டு கொண்டிருக்க, தமயாவை பார்த்ததும்
“என்ன காலையிலே தலை குளிச்சு இருக்க..? வீட்டுல இல்லையா”எனக் கேட்டார்.
“இன்னைக்கு ஞாயிறுனு குளிச்சேன் அத்த, அது எல்லாம் இல்ல”என்றாள் பட்டும் படாமல் மெல்ல.
“ம்ம்ம்! கடைசியா எப்ப வீட்டுக்கு வெளி குளிச்ச..?”
“அம்மா வீட்டுக்குப் போனப்ப தான்” என்றாள் சற்று கடுப்பாக, அவர் எதுக்கு கேட்கிறார் என்று புரிந்தாலும், அவளுக்கு அப்பிடி கேட்பது பிடிக்கவில்லை.
“ம்ம்ம்! ஏதோ காலாகாலத்துல ஒன்னு வந்துட்டா போதும் கடவுளே!”என வேண்டிக் கொண்டு விலகி நடந்தார்.
அவருக்கு மூத்த மகன் வயசாகி கல்யாணம் பண்ணியதால் சட்டுபுட்டென்று ஒரு வாரிசு வேண்டும் என்ற ஆசை.
லலிதா பாத்திரம் கழுவிகொண்டே மாமியார் பேசியதை கேட்டப்படி இருந்தாள்.
‘கெழவிக்கு மூத்த மகனுக்கு பத்து மாசத்துலே புள்ள பொறந்து தவழ்ந்துடனுமுனு பேராசைய பாரு’ என கழுத்தை நொடித்துக் கொண்டாள்.
தமயா தலையின் நடுவில் கிளச்சரை மாட்டிவிட்டு அடுப்படிற்குள் வந்து கொதித்த பாலில் டீ தூள் போட்டுக் கொண்டிருந்தாள்.
“என்ன தமயா, மாமியாருக்கு பேரப் பிள்ளை பாக்க அதுக்குள்ள ஆசை வந்துட்டுப் போல..?”என்றாள் நக்கலாக.
“ம்ம்ம்! வயசானவங்க அவங்களுக்கு வர ஆசை தானே அக்கா”என்றாள் அவளுக்கு மாமியார் கேட்டது பிடிக்கலை என்றாலும்.
“என்னக்கா பேசிட்டு இருக்குறீங்க…? உங்களுக்கு….?” என நிறுத்தினாள் கோபமாக.
“நான் ஒன்னும் உன் அறையை எட்டிப் பாக்கலம்மா, காலையில மொட்ட மாடிக்கு வந்தேன், அப்ப கதவு துறந்து இருந்துச்சு, உன் புருசன் படுத்து இருந்தார், அங்குட்டு உன் பாய் கெடந்துச்சு நீ குளிச்சுட்டு இருந்த போல, அப்ப நான் சொன்னது சரியா..? நீங்க தனி தனியா தான் தூங்குறீங்களா..?” என கேட்டாள் ஆர்வமாக.
“அக்கா! எங்க அந்தரங்கத்தை பத்தி தெரிஞ்சுக்க ஆசைப்படாதீங்க, இனி கதவு துறந்து இருந்தாலும் எட்டி பாக்காதீங்க, ஏனா எட்டி பாத்தா தான் கட்டிலுக்கு மறுப்பக்கம் கெடந்த பாய் படுக்கை தெரியும்.”என்றாள் கடுப்பாக.
கொதித்த டீ போல அவளின் மனமும் கொதித்தது.
“ம்ம்ம்! நான் ஒன்னும் எட்டி பாக்கல, கதவு திறந்து வைக்குற அளவுக்கு உங்க அந்தரங்கம் இருக்கு, அத மொதல பாரு என் கிட்ட எகிறி குதிக்குற? ஏன் வயசானவரை கட்டிக்கிட்டனு வருத்தமோ..? அவருக்கு சீக்கிரம் ஒரு புள்ள பொறந்தா தான் மதிப்பாங்க உன்னையும், அவரையும் இல்லனா வெத்துவெட்டுனு தான் சொல்லுவாங்க பாத்துக்கோ”என்றாள் அவளும் விடாமல்.
“உங்க அதிகப்படியான கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்ல, அவசியமும் இல்ல, அவரு என் புருசன் அதை நிரூபிக்க புள்ள பெத்தா தான் நம்புவீங்கனா அதுக்கு வேற ஆளப் பாருங்க, அடுத்த பத்து மாசத்தில் புள்ளையை பெத்துட்டா அவங்க புருசன், பொண்டாட்டி இல்லனா வெத்து வெட்டா..? வெறும் புள்ளைங்களை மட்டும் பெத்துட்டு நிறைய பேரு வெத்து வெட்டா இருக்காங்க”என்றாள் பட்டென்று.
லலிதாவுக்கு கோபம் வந்தது, “ஏய்! நீ யார சொல்ற.?”
தமயா நக்கலாக சிரித்து”நான் பொதுவா சொன்னேன், ஏன் உங்களுக்கு சுடுது..?இந்தாங்க டீயை குடிங்க, ரொம்ப பேசி டயர்டா ஆகிட்டீங்க”என மாமியாருக்கு டீ கொடுக்க சென்றாள்.
நளன் பேப்பர் படித்துக் கொண்டு டீ குடித்தப்படி இருந்தான் ஹாலில்.
தமயா ஜோதிக்கு கணக்கு சொல்லிக் கொடுத்தாள் எதிரில் அமர்ந்து.
“பெரியம்மா! இது எப்பிடி வரும்..?”
“இது…”என ஒரு வெற்றுப் பேப்பரில் போட்டு காட்டினாள்.
“ஐ! ஈஸியா இருக்கே.”என இருவரும் பாடத்தை கவனித்தனர்.
நளன் பேப்பரை படித்துக் கொண்டே எதிரில் இருந்த இங்கரேவை அப்பப்ப கவனித்தான்.
பச்சை கலரில் பிளைன் காட்டன் புடவையும், மெஜெந்தா கலரில் முழங்கையை தொடாத பிளவுஸ் அணிந்து, தலைமுடிகள் பரவலாக கிடக்க நடுவில் கிளச்சரில் அடங்கியது போக, புத்தம் புது ரோஜாவாக தெரிந்தாள் அவன் விழிகளுக்கு.
அவள் அறியாத வண்ணம் ரசித்துக் கொண்டிருந்தான்.
தமயா”ஜோதி! நீ என்ன படிக்கப் போற..?”
“நானா! பெரியப்பாக்கு நான் டாக்டர் ஆகனுமுனு ஆசை பெரியம்மா, சின்ன வயசுல இருந்து அதான் வாங்கி கொடுப்பார் விளையாட”என்றாள் சிரித்தப்படி.
தமயா தன் தொரையை நிமிர்ந்து பார்க்கவும், திருட்டுப் பூனை மாட்டியது போல் முழித்தான் அவன்.
“ம்ம்ம்! என் பெரியப்பா ஆசை தான் என் ஆசை பெரியம்மா”என்றாள் சற்றும் யோசிக்காமல்.
தமயாவிற்கு பிரமிப்பாக இருந்தது, இந்த பிள்ளைங்களை எவ்வளவு புரிதலோடு வைத்து இருக்கின்றான் என்று, அந்த பிள்ளைகள் பாசத்தை நினைக்கும் போது லலிதா- சாமி ஒரு பொருட்டாவே தெரியவில்லை அவளுக்கு.
“ஜோதி! என் ஆசை கெடக்கட்டும், உன் பெரியம்மா கேக்குறதும் சரி தானே. உனக்கு புடிச்சதை படிடா”என்றான் நளன்.
“ம்ம்ம்! சரி பெரியப்பா, அப்ப யோசிச்சு சொல்றேன் பெரியம்மா”என்றாள்.
“ம்ம்ம்!”
***
தமயா காலை உணவை சமைத்து முடித்து அறைக்கு திரும்பினாள்.
நளன் கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டு நின்றான்.
வேஷ்டி கட்டி, கை இல்லாத பனியன் அணிந்தவாறு நின்றான். சட்டை இன்னும் அணியவில்லை.
உள்ளே வந்த தமயா”சாப்பாடு ரெடி, இன்னைக்கு கடைக்குப் போகனுமா..?”
“இல்ல! அந்த புதுமனை விழாக்கு தான் போக கெளம்பிட்டு இருக்கேன், அங்க சாப்புட்டுகிறேன், மறந்துட்டேன் சொல்ல”
“ம்ம்ம்!”என கட்டிலில் அமர்ந்தாள்.
கண்ணாடி வழியே அவளை பார்த்தவன், “என்ன ஒரு மாதிரி இருக்க.?”என்றான் சீப்பை வைத்து விட்டு, அவள் அருகில் வந்து.
காலையில் நடந்ததை சொல்வதற்கு அவளுக்கு மனம் வரவில்லை.
“ம்ம்ம்! அதுக்கென்ன போகலாம்”என சட்டையை எடுக்க சென்றான் கப்போர்டு பக்கம்.
எழுந்து அவன் முன் சென்றவள், சட்டையை எடுப்பதற்குள், அவனை தன் பக்கம் திருப்பினாள்.
நினைவு வந்தவள் அறையின் கதவை சாற்றிவிட்டு வர, நளன் புருவத்தை சுருக்கிப் பார்த்தான்.
“இப்ப சொல்லுங்க, இந்த புடவை நல்லா இருக்கா?”என்றாள் அவன் முன் நின்று.
“ம்ம்ம்! நல்லா இருக்கு”
“புடவை நல்லா இருக்கா..? இல்ல புடவையில் நான் நல்லா இருக்கேனா..?”
“ரெண்டும் தான், இங்கரே என்னாச்சு உனக்கு…?”
“அப்ப நான் நல்லா இருக்கேனு தானே என்னைய பாத்தீங்க கீழ பேப்பர் படிக்கும் போத, அத சொன்னா என்ன..? இங்கரே! இங்கரே! நீ இந்த புடவையில் அழகா இருக்க, அம்சமா இருக்கனு, நான் கேட்டா தான் சொல்வீங்களா.?”என்றாள் அவள் இடுப்பில் இரு கைகளையும் வைத்து மிரட்டியவாறு.
நளனுக்கு வாயிற்குள் சிரிப்பு வர, அது முடியாமல் வாய்விட்டே சிரித்தான்.
தலையை குலுக்கிவிட்டு, அவளை சட்டென்று ஒரு கையால் தன் மார்போடு அணைத்தவன், “நான் தான் சொன்னேன்ல எனக்கு மனசுல இருக்கு ஆனா வெளிப்படுத்த வரலனு, இப்பிடி டீச்சர் மாதிரி மிரட்டினா இந்தா தானா வந்துட்டு பாரு”என மறு கையால் அவளின் முகத்தில் இருந்த முடிகளை ஒதுக்கி விட்டு, நெற்றியோடு வருடியவன்,
“இந்த புடவையில் நீ பனியில் பூத்த ரொஜா பூ மாதிரி இருக்க”என்று அவளின் இடையை மேலும் இறுக்கினான், இடது கையால் அணைத்ததால் கை சென்றது வெற்றிடையில்.
அவன் கைப்பட்ட உணர்வும், நளன் கூறிய வார்த்தைகளும் தமயாவை மேலும் தாக்கியது, அவனையே பார்த்தாள் விழி மூடாமல்.