அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவருக்கும் விடியல் அழகாக விடிந்தது,
ஆனால் நளன், தமயந்திக்கு அடுத்து என்ன என்ற புரியாத மனநிலையில் தான் விடிந்தது.
இரவு முழுவதும்…. தமயாவின் மனநிலை இது தான்.
புது இடம், மனம் நிறைய துக்கம் தன் வாழ்க்கை இப்பிடி ஆகி விட்டென்ற ஆதங்கம் மட்டுமே நிறைந்திருந்தது, இந்த மனநிலையில் நித்திரைக் கொள்ள அது என்ன மனிதப் பிறவி அல்லாத ஜீவனா என்ன…?
தமயந்தி இரவு எல்லாம் புரண்டு புரண்டுப் படுத்தாள்.
அவளின் அசைவுகள் ஒவ்வொன்றும் கால் கொலுசொலியில் இதோ நான் திரும்புறேன், இதோ நான் அசையுறேன், இதோ நான் முண்டுகிறேன் என சொல்லாமல் சொல்லியது நளனுக்கு.
பகல் முழுவதும் தான் பார்க்கும் வேலையில் இரவு அடித்துப் போட்டது போல் தூங்கும் நளன், இன்று ஏனோ அழுத்தமான மனநிலையில் கண்கள் மூடியும் நித்திரைக் கொள்ளாமல், தன் வாழ்க்கையை நினைத்து புரியாமல் தவித்தான்.
புது மனைவியின் கொலுசொலி அவ்வப்போது அசைந்து நீ என் வாழ்க்கையை சிதறடித்து விட்டாய் என சொல்லாமல் சொல்லியது.
****
மணவாளன்…
சரசம்மா- உடையப்பா தம்பதியின் ஆண் பிள்ளைகளில் மூத்த மகன், கணக்கில் இரண்டாவதுப் பிள்ளை.
மூத்தவள் மரகதம், மூன்றாவது மகன் மயில்சாமி, நான்காவது மகள் மல்லிகா.
உடையப்பா உழைப்பாளி தான் ஆனா என்ன பயன், கூலி வேலை சம்பாரிப்பு மூலம் கிடைத்ததை பாதி வீட்டுக்கு, பாதி மதுப்போதைக்கு என வாழ்ந்தார்.
அவரை நம்பாத சரசு இட்லிக் கடை வைத்து, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார்.
நளன் பத்தாம் வகுப்பிற்கு பிறகு தொழிற்கல்வி சேர்ந்தான், அதன் மூலம் சென்னைக்கு சென்று ஸ்கீல்டு அடித்ததால், அந்த வயதிலே ஒப்பந்தத்தில் வெளிநாடு செல்ல வாய்ப்புக் கிடைத்தது.
ஆனால் ஒரு லட்சம் முன் பணமாக கேட்டதன் விளைவு வட்டிக்குக் கடன் வாங்கி கொடுத்து வெளிநாடு சென்றான்.
முதலில் வாங்கிய கடனை வட்டியோடு அடைத்த நேரத்தில், மூத்தவள் கல்யாணப் பேச்சுவார்த்தை வந்தது.
வேலையும் ஒப்பந்தம் முடிய, கிடைக்கும் வேலைக்கு போக முடிவுச் செய்து அங்கு விசா இன்றி ஒழிந்து மறைந்து வேலையைத் தொடர்ந்தான்.
அக்கா கல்யாணத்தை கடன் வாங்கி சிறப்பாக நடத்தினான் முத்துபாண்டி என்றவனோடு.
பிறகு அந்த கடனை முடித்து நிமிர்ந்தப் போது, அவனின் இளமை, வேலைச் செய்யும் திறமை, வலுவைக் கண்டு வியந்த ஒரு முதலாளி விசாவோடு சரியான வேலையை தந்தார், ரிப்பேர் ஆகும் ஒரே கம்பேனி எலட்ரானிங்க்ஸ் பொருட்களை பழுதுப் பார்க்கும் பிராண்டெடு நிறுவனத்தில்.
அனுபவத்தால் சம்பளம் நிலையாக மாறியது. இருபதுகளில் வயதை தொட்டுக் கொண்டு நின்றான்.
திருமணத்திற்கு சரியான வயது, ஆனால் பாவம் அவன் நேரம் தம்பி மயில்சாமி லலிதாவை திருமணம் செய்து வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டான், வீட்டில் சண்டை வெடித்தது.
நளன் இன்னும் தாய் நாட்டிற்கே வராமல் உழைக்க, தம்பியோ அண்ணனின் சம்பாரிப்பில் குடும்பத்தை ஆரம்பித்தான்.
சரசுக்கும், லலிதாவிற்கும் ஒற்றுப்போகவே இல்லை.
வேலையே இல்லாமல் சுற்றும் சாமிக்கு லலிதா பொண்டாட்டினாது மட்டுமில்லாமல் பிள்ளைகளுமே அடுத்தடுத்து பிறந்தனர், ஒரு பையன், ஒரு பெண் என…
குடும்பம் விரிய ஒண்டிக்குடித்தன வீடு இடம் தாங்கவில்லை, சரசு மகனிடம்”ஏப்பா! ஒரு வீட்டைக் கட்டு உனக்கும் கல்யாணத்தை முடிச்சுடலாம்”என்றார். பின்னே பெண் கொடுப்பவர் வீடு இருக்கின்றதா என்று தானே முதலில் கேட்கிறார்கள்.
வீட்டு வேலை ஆரம்பித்ததும், நளன் ஊருக்குப் போய் என்ன பண்ணப் போகின்றோம் என விடுப்பு சம்பளத்தை வாங்கி வீட்டிற்கே அனுப்பினான்.
இதற்கிடையில் வீடு கட்டி முடியும் தருவாயில் மல்லியை விரும்பிப் பெண் கேட்டான் தர்மன், நளனின் நண்பன்.
தர்மன் நல்லவன், அவனின் பெற்றோர் கறாராக இருந்தனர் வரதட்சணை விஷயத்தில்.
தர்மன் குணத்திற்காக மல்லியை கட்டிக்கொடுத்தனர், வெளியில் தேடி அலையாமல்.
அது மட்டுமில்லாமல் மூத்த மாப்பிள்ளை பாண்டி ஒருத்தர் போதும் அந்த குடும்பத்திற்கு அரக்கனாக இருப்பது என முடிவெடுத்தனர்.
மனிதன் எந்நேரமும் சுரண்டிகிட்டே இருப்பார் நளனிடம்.
பாண்டி- மரகத்திற்கு இரண்டும் பெண்கள், அவர்களுக்கு காதுக் குத்தியது, மொட்டை அடித்தது, பெரிய மனுசியானது என ஓரளவு சுரண்டி முடித்து விட்டார்.
இறுதியாக தன் மூத்த மகள் கனிகாவை நளனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பதற்கு பிளான்போட அவனோ முடியாதென்று ஒரே போடாகப் போட்டான்.
கனிகாக்கும் இருபத்து ஐந்து வயது இருக்கும். இரண்டாவது மகள் புவனா.
வீடுக் கட்டி பால் காய்ச்சுவதற்கு ஊருக்கு நளன் வரும் போது முப்பதை கடந்து நாற்பதை தொடக் காத்திருந்தான்.
சரசு விடாமல் பெண் பார்க்க தொடங்க எல்லாத்தையும் தகர்த்தி விட்டார் பாண்டி.
அப்பிடியே தள்ளிப் போக நாற்பதை கடந்ததும் மனம் வெறுத்த நளன் கல்யாணமே வேண்டாமென்று முடிவு எடுத்துட்டான்.
ஆனா சரசு, தர்மன் விடாமல் முயற்சித்தனர்.
வசதி, சொந்த ஊரில் எலக்ட்ரான்னிங்க்ஸ் ரிப்பேர், புது பொருட்கள் விற்பனை என ஒரு புது கடையை திறந்து செட்டில் ஆனாலும் கல்யாண வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது.
இனி எல்லாம் சரிக்கு சமமா பெண் பார்த்தால் வேலைக்கு ஆகாதென்று, தர்மன் தூரத்து சொந்தமான ஏழ்மையில் நிற்கும் தமயந்திக் குடும்பத்தை பேசி முடித்தான் ரகசியமாக.
சரசும், பாண்டிக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்.
நளன் பெண்ணின் வயதிற்கு மட்டும் கட்டளைப் போட்டு இருந்தான், முப்பதைந்து வயதானப் பெண் ஏழ்மையா இருந்தாலும் பரவாயில்லை அப்பிடி இல்லைனா கல்யாணப்பேச்சை விடுங்களென்று கூறிவிட்டான்.
ஆனா அவன் கண்டிசனுக்கு கிடைக்கனுமே. ஒரு தாயாக இரண்டாம் தாரமாக வரும் பெண்ணை எடுக்க மனமில்லை சரசுக்கு.
தமயந்தி குடும்பம் மாட்டியதால் வயசைக் கூடுதல் செய்து எப்பிடியோ தமயந்தி அம்மாவை சரிப்பண்ணி கல்யாணத்தை முடித்தப் பெருமை தர்மனை சேரும்.
***
இன்று…
விடியற்காலையில் கண் மூடியே விடிந்ததை உணர்ந்து முதலில் எழுந்தது தமயந்தி தான்.
சீக்கிரம் எழுந்து குளிப்பதற்கு சென்றாள், இங்க ஏதோ புதுமணத் தம்பதியாக இருக்கோம் என்று அவர்கள் கற்பனை செய்திட விடாமல் குளித்து முடித்துவிட்டு கீழே சென்றாள்.
அவள் எழுந்து குளித்துவிட்டு கீழே போற வரையிலும் கண்களை மூடி இருந்த நளன் எழுந்து அவன் வேலையைத் தொடர்ந்தான்.
எட்டு மணிக்கு குளித்து விட்டுக் கடைக்கு கிளம்ப தயாராகினான்.
சில மணி நேரத்தில் மேலே வந்தவளை, கண்ணாடி முன் நின்று தலை சீவியவாறு நோட்டமிட்டான்.
வந்தவள் முகத்தைச் சுளித்து வாய் விட்டே யாரையோ திட்டிக் கொண்டு கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள்.
முதலில் யோசித்தவன் பிறகு”என்ன நடந்துச்சு…?”என கேட்டான்.
அவன் கேட்பான், இல்ல கேட்க வேண்டும் என்று அவள் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் கேட்டதும்,
“இங்க பாருங்க, உங்க அக்கா பொண்ணு என்னைய அத்தைனு கூப்புட்டுச்சு பரவாயில்ல, ஏன் உங்க தம்பி அண்ணினு கூப்புட்டாரு அதுக்கூட ஒரு முறை, ஏன் அவங்க புள்ளைங்க பெரியம்மானு சொன்னுச்சுங்க, அத கூட ஜீரணிச்சேன். ஆனா உங்க தம்பி மனைவி அவங்க என்னைய அக்கானு கூப்புடுறாங்க, அதை என்னால ஜீரணிக்கவே முடியல..? உங்க தப்பான கணக்குப்படி எனக்கு முப்பதைந்து வயசானாலும் அவங்களுக்கு நான் அக்காவ..?”என்றாள் கடுப்பாக.
நளன் அதுவரை சீவியதை நிறுத்திருந்தவன் அதை தொடர்ந்தான்.
மனதில்’இது என்ன வித்தியாசமான பஞ்சாயத்தா இருக்கும் போல..?’என எண்ணி, பதில் சொல்லாமல் நின்றான்.
“என்னமோ பெருசா கேட்டிங்களேனு சொன்னா, ஒரு பதிலும் இல்ல, எல்லாம் என் நேரம்”என முகத்தைச் சுளித்தாள்.
அப்போது சரசு கீழிருந்து அழைத்தார் தமயந்தியை.
அவளோ எனக்கென்ன என்று அமர்ந்திருந்தாள்.
கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தவன், வெளியில் சென்று எட்டிப் பார்த்து”என்னம்மா..?”
“எங்க உன் பொண்டாட்டி, புது மருமகளைப் பாக்க நாலுப் பேரு வருவாங்க, கீழ வரசொல்லு. மாடி அறைனா இவளுங்களுக்கு வசதியா போயிடுது, ஓடி ஒழிய”என்றார் புலம்பியவாறு.
“பாத் ரூமுல இருக்கா வர சொல்றேன். நீ கத்தாம இரு.”என்றான் சற்று அழுத்தமானக் குரலில்.
நளன் அதிகம் வெளிநாட்டு வாழ்க்கையில் இருக்க அங்கு அனைவரிடமும் ஒரு விலக்கம் இருக்கும், ஒட்டுதல் இன்றி. என்னனா என்ன..? தர்மன் கிட்ட நல்லா பேசுவான்.
தம்பி பசங்களிடம் அதுவும் பெண்ணிடம் மட்டும் உரிமையாக பேசுவான், அவர்களுக்கும் எல்லாமே பெரியப்பா தான்.
உள்ளே வந்தவன் கதவை சாற்றிவிட்டு,
“இங்க பாரு, நல்லதோ கெட்டதோ கல்யாணம் ஆகிட்டு, உன் அம்மாவும் சேர்ந்து தான் வயசை மாத்தி சொல்லி இருக்காங்க, அதே மாதிரி தான் என் அம்மாவும் என் மேல இருந்த பாசத்தால என் கிட்ட மறைச்சு இருக்காங்க. இப்ப உன்னைய யாரும் இங்க கட்டாயப்படுத்தல என் கூடப் படு, பிள்ளைப் பெத்துக் கொடுனு, உனக்கு விருப்பம் இல்லைனா தாலியைக் கழட்டிக் கொடுத்துட்டுப் போயிட்டே இரு, ஆனா இங்க இருக்கவரை என் குடும்பத்தோடு ஒத்து தான் இருக்கனும், இப்பிடி என் அம்மா கூப்புட்டு எனக்கென்னனு இருக்குறது இதான் கடைசியா இருக்கட்டும். உனக்கு என்னைய புடிக்கல சரி, அதை இந்த அறைக்குள்ள வச்சுக்கோ கூடவோ, குறைச்சியோ இந்த அறைக்குள்ள எவ்ளோ வேணா என்னைய பேசு ஆனா வெளியில் இல்ல புரியுதா போ..” என்றான் அதட்டியப்படி அழுத்தமாக.
அவனின் அதட்டலில் அப்பிடியே எழுந்து நின்றாள், மூச்சுப் பேச்சு இல்லாமல்.
நைட் நம்ம அப்பிடி நடந்துகிட்டப்ப இருந்தவனா இவன் என்ற ஆச்சிரியத்தில் அதிர்ச்சியில்.
***
காலை உணவு பரிமாறப்பட்டது நளன், மயில், தர்மன் அமர்ந்து சாப்பிட்டனர்.
பாண்டி இன்னும் வரவில்லை, கல்யாணத்தை முடித்துக் கொண்டு கோயிலோடு போனவர் தான்.
லலிதாவும், கூட தமயந்தியும் பரிமாறினர்.
மயில் பையன் சங்கர் பன்னிரெண்டாவது படிக்கின்றான், பொண்ணு ஜோதி பத்தாவது.
“பெரியப்பா! ஸ்கூல் பீஸ் டேட் வந்துட்டு பிராக்டில் செய்ய அனுப்ப மாட்டாங்க” என்றான் சங்கர்.
“ம்ம்ம்! கட்டிலாம் சாப்புடு நீ”
“பெரியப்பா! எனக்கு பர்த்டே வருது.. புது ட்ரஸ் வேணும்..”என்றாள் ஜோதி.
“வாங்கிடலாமடா.”
“ஏன் உங்க அப்பா எதிரில் தானே இருக்கார், இன்னுமா பெரியப்பா எல்லாத்துக்கும்”என்றான் தர்மன்.
“அத்தான்! ரியல் எஸ்டேட்டில் ஒன்னும் வருமானம் இல்ல. நீங்க வேற..?”என்றான் சாமி.
“ம்ம்ம்உகூம்! உனக்கு என்னைக்கு தான் வருமானம் இருக்கப் போகுதோ”என இழுத்தார் சரசு.
“அம்மா! சாப்பிட்டீயா..?”என கேட்டான் நளன்.
“ம்ம்ம்! இல்ல”
“சாப்பாடு வை லலிதா அம்மாக்கு” என்றான் ஒரு அதட்டுதலோடு.
அது தமயந்திக்கு நெஞ்சில் பக்கென்று ஏறியது, அவனின் அழுத்தமான குரல் கேட்டதால்.
‘குடும்பமே இவனுக்கு பயப்புடும் போல’ என யோசித்தவளை, லலிதாவின் குரல் களைத்தது.
“அக்கா! அத்தைக்கு சாப்பாடு வைங்க, நீங்க தானே புது மருமக”என இழுத்தாள் லலிதா.
நளன் குரலை செருமியவாறு, “லலிதா! நீ சாமி பொண்டாட்டி தான், எனக்கும் தம்பி பொண்டாட்டி தான் சின்ன மருமக தான், இல்லனு சொல்லலை, அதுக்காக இப்ப வந்த மூத்த மருமக உனக்கு அக்கா ஆகிடுவாள, சும்மா பேரை சொல்லிக் கூப்புடு”என்றான் அவளை பார்க்காமல் சாப்பிட்டவாறு.”சரிங்க மாமா!”என்றாள் தலையை ஆட்டியவாறு, மனதில்’பொண்டாட்டியை வயசு கூட்டி சொன்னது புடிக்கலையோ’ என கழுத்தை நொடித்தாள். தமயந்திக்கு ஆச்சிரியம், ‘நம்ம கிட்ட பதில் பேசல, ஆனா நம்ம சங்கடத்தைப் போக்கிட்டானே, என்னமோ இந்த கொடுப்பினையாச்சும் கிடைச்சுதே’என நிம்மதியானாள்.
காதல் மழலை அவள் மணவாளன் அடுத்து…
உங்களின் கருத்துக்களை விமர்சனங்களாக கொடுக்கவும். ????