நான் ரொம்ப ஸ்ட்ரிட் டீச்சரென்று கூறிய தமயாவை பார்த்து நின்ற நளன், அவள் கட்டிலில் புடவையோடு படுத்திருந்ததை கவனித்து”சரி! நீ டிரஸ் மாத்தலையா..?”
“இல்ல!”
நளன் சென்று அறை விளக்கை ஆப் பண்ணிட்டு, இரவு விளக்கைப் போட்டு விட்டு வந்து படுக்கையில் படுத்தான்.
இருவருமே பார்க்க முடியாத நிலாவை நோக்கி படுத்திருந்தனர்.
தனித் தனியாக இருந்த போதே அந்த நிலாவை தூது செல்ல அழைக்கவில்லை, இப்ப எதற்கு அது..? நிலா இல்லைனா எங்களால் சேர முடியாதா..? நாங்க வேற மாதிரி என எகத்தாளமாக இரு மனங்களும் உரையாடியது.
ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த நிலவு, குரலை மட்டும் அனுப்பியது ஒளியாக, ‘எப்பிடி உங்க உடல் ரெண்டுக்கும் இடைவெளி மூன்று அடி தொலைவில் கெடக்குதே அதான் அந்த வேற மாதிரியா..?’ என நக்கலடித்தது.
இரு மனங்கள் மட்டுமே திரும்பி பார்த்தது, முகத்தை சுளித்து விட்டு, நிலவிடம்’நீ மொதல இங்க எட்டி பாக்காம போ, அந்த இடைவெளியை காத்து நுழைய முடியாம நாங்க பாத்துக்குறோம்’ என அதட்ட, எனக்கென்ன என்று நிலவு தன் ஒளியை மறைத்தது.
ஏதோ ஒரு உணர்வு உலுக்க, அது தன் மனம் என உணர்ந்த நளன்”இங்கரே!” என்றழைத்தான்.
“ம்ம்ம்!”என்றாள் தமயாவும் மனதின் உலுக்கலில் உணர்வு வரவும்.
“நம்ம மட்டும் தனியா கோயிலுக்குப் போக நான் ஆசைப்பட்டீயா..?”
“எனக்கு வரல, இப்பிடி கட்டிலில் படுத்து பழக்கமில்ல, புதுசா இருக்கு, ஏதோ பகலில் சும்மா தலை சாய்த்து எழுந்து இருக்கேன் இதுல”
“வேணுனா, தரையில் படுத்துக்கலாமா..?”
“எப்பிடி..? பழைய மாதிரியா..?”என்றாள் முகத்தை மட்டும் அவன் பக்கம் திருப்பி.
“இல்ல! நீ தானே சொன்ன இப்பிடி படுப்பது புதுசா இருக்குனு”
“ஆமா! அதுக்காக..? இதை பழகிக்கலாம் பிரச்சனையில்ல” என்றாள் குரலில் கோபத்தை காட்டி.
“ம்ம்ம்!”என்றான் எதுவும் சொல்லாமல்.
“தொரை!”
“சொல்லு!”
“உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்”
“என்ன..?”
“காலையில் நான் தலை குளிச்சுட்டுப் போனதும் மாமியார் சேமியா ஒன்னு கேட்டாங்க.” என்றாள் ஒரு ஃப்லோவில்.
நளன் திரும்பி அவளை பார்த்தான் கேள்வியாக.
‘ஷ்ஷ்ஷ்!’என நாக்கை கடித்தவள், அவன் பக்கம் திரும்பி”அது! சும்மா, நம்ம தொரை, இங்கரே மாதிரி, செல்லமா” என முகத்தில் கெஞ்சலை கொண்டு வந்தாள்.
அந்த கெஞ்சலில் கொஞ்சம் விழுந்தவன் “ம்ம்ம்! அம்மா என்ன கேட்டுச்சு..?”
“நான் வீட்டுல இல்லையானு, அதான் பீரியட்ஸானு..?”என கூறியவள், அப்பிடியே நிறுத்தி அவன் புறம் திரும்பி,
“பீரியட்ஸ்னா என்னனு தெரியுமா உங்களுக்கு..?”என சந்தேகமாக கேட்டாள்.
“அக்கா வயசுக்கு வந்தப்ப அத பத்தி தெரியாது, ஏதோ செய்றாங்கனு நினைச்சேன், மல்லிகா வந்தப்ப நான் வெளிநாட்டில் இருந்தேன், ஆனா ஜோதி வயசுக்கு வந்தப்ப தான் தெரியும், மாச மாசம் பேட் நான் தான் வாங்கி தருவேன் புள்ளைக்கு, என் கிட்ட மொதல எழுதி தரும், இப்ப பழக்கமாச்சு”
மண்டையில் இப்ப தான் அது உரைக்க, “ஓ! இங்கரே நான் இத பத்தி யோசிக்கவே இல்ல, புரியுது”என்றான்.
“ம்ம்ம்! எனக்கு அவங்க அப்பிடி கேட்டது புடிக்கலை, கல்யாணம் ஆனதும் பீரியட்ஸ் பத்தி உடனே விசாரிப்பது இது என்ன தான் முறையோ, எனக்கு புடிக்கவே இல்ல”என்றாள் வருத்தமாக.
“சரி விடு! நான் அம்மா கிட்ட சொல்லி வைக்குறேன், இதப் பத்தி எல்லாம் பேசாதுனு”என்றான் ஆறுதலாக.
“வேணாம், அவங்க தப்பா நினைப்பாங்க நான் சொல்லி தான் சொல்றீங்கனு, பரவாயில்ல விடுங்க, வயசானவங்க”
“ம்ம்ம்!”
சிறு அமைதிக்குப் பின்..
“தொரை!”
“ம்ம்ம்!”
“எனக்கு அவங்க கேட்டது தான் புடிக்கல, ஆனா எதுக்காக அவங்க கேட்டாங்களோ அந்த காரணம் புடிச்சு இருக்கு”என்றாள் பட்டும் படாமல்.
நீ நேராக சொன்னாலே அந்த மழலைக்கு புரியாது, இதுல டீச்சரம்மா காது சுற்றிப் போறீங்க, பார்ப்போம் உன் தொரை என்ன பதில் சொல்கிறான் என்று, தமயா மனம் எட்டிப் பார்த்தது.
பயப்புள்ள”ம்ம்ம்ம்! சரி தூங்கு”என்றான்.
தமயா அவனை திரும்பி பார்த்துவிட்டு, கோபமாக”ரொம்ப நன்றி!”என திரும்பி படுத்துக் கொண்டாள்.
நளனுக்கு புரியவில்லை எதற்கு நன்றி சொல்கிறாள் என, அவன் மனம் ‘என்னத்துக்குடா ‘ம்ம்ம்! சொல்லி தூங்க சொன்ன..?’என கேட்டது.
அவனும் தமயா சொன்னதை பற்றி யோசித்தான், ‘அம்மா சொன்னது புடிக்கல ஆனா அவங்க கேட்டதுக்கான காரணம் புடிச்சு இருக்குனா, அந்த காரணம் பேரப்பிள்ளை! ஓ..?’என்ற அவனை, அவனின் மனம் முறைத்தது..
அவள் பக்கம் முழுவதுமாக திரும்பியவன்”இங்கரே!”என அழைத்தான்.
“என்ன…?”என்றாள் திரும்பாமல்.
“இப்ப நீ என்ன சொன்ன..?”
“நான் என்ன சொன்னேன்..? ஒன்னும் சொல்லல, தூங்குங்க தொரை”என்றாள் கடுப்பாக கண்கள் கலங்க, குரல் தடுமாறியது.
அவளும் பாவம் எவ்வளவு தான் இறங்கி வழியக்கப் போக முடியும், பெண் என்ற ஒரு உணர்வு வரதானே செய்யும், ஆனால் அதையும் தாண்டி அவனிடம் உணர்வுகளை கேட்டு தான் வாங்கி அனுப்பவிக்கின்றாள்.
அவளின் குரல் தடுமாற்றம் அவனை உலுக்காமல் இருக்க முடியுமா…?
“இங்கரே! திரும்பு மொதல.”
“முடியாது! நீங்க தூங்குங்க, எனக்கும் தூக்கம் வருது”என்றாள் கண்கள் நீரை அருவியாய் கொட்ட, மூக்கை உறிஞ்சியவாறு.
“இங்கரே! எனக்கு புரியுது, திரும்புனு சொல்றேன்ல” என்றான்.
“என்ன புரிஞ்சது இப்ப..?”என்றாள் அதே நிலையிலே, கோபமாக.
“ம்ம்ம்! நீ ரொம்ப ஸ்ட்ரிட் டீச்சருனு தான்” என சிரித்தான் மெல்ல.
“ஆமா! போங்க இனிமே நான் எதும் சொல்லி தர மாட்டேன், நீங்களா புரிஞ்சுக்கோங்க இல்லனா எப்பிடியோ போங்க, எனக்கு வாய்ச்சது இதானு நினைச்சுக்குறேன், சரியான மக்கு”என்றாள் கோபமாக.
“இங்கரே! ஒரே நாளில் நான் இவ்ளோ வேகமாக உன் கிட்ட கத்துக்கிட்டு வரேன்,
மக்குனு சொல்ற, மொதல திரும்புனு சொல்றேன்ல”
“முடியாது போங்க”
“இங்கரே! சரி நான் மக்கு தான், ஆனா இப்ப தான் புரிஞ்சுக்கிட்டேன்ல, இந்த பக்கம் திரும்பு”என கிட்ட தட்ட கெஞ்சிக் கொண்டு இருந்தான்.
நளன் இப்பிடி ஒரு நிலைக்கு தள்ளப்படுவான் என அவன் கனவிலும் நினைக்கவில்லை.
நேற்று காலையில் அவன் வாழ்க்கையே வேற மாதிரி தெரிந்தது தமயாவை கல்யாணம் செய்தபின் அவனுக்கு மனம் நொந்தவாறு, ஆனால் இப்போது அவளிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கான்.
அவனை கெஞ்ச வைப்பது தான் தமயா டீச்சரின் பாடத்தில் ஒரு பகுதியோ என்னவோ..? திரும்பாமல் அவனின் கெஞ்சல் அதிகமாக அது தான் வேணும் அந்த பேதைக்கு என்பது போல் முறுக்கினாள்.
ஏனோ நளனின் அந்த பரிமாணம் அவளுக்கு பிடிக்க தமயாவின் கோபத்தை விடாமல் தொடர்ந்தாள். ஆனால் இன்னும் அவனிடம் எதையோ எதிர்ப்பார்த்த பேதை மனம் கண்ணீரை சிந்தியது.
“ம்ம்ம்! தொரைக்கு நக்கலா..? நான் ஒரு பொண்ணு, எப்பிடி நேரா சில விஷயத்தை சொல்ல முடியும்”
“நீ தானே மொத ராத்திரி அன்னைக்கு பேசின தைரியமா..?”
“அது கோபத்துல பேசினேன், ஆனா இப்ப அப்பிடி பேச வரல, நான் என்ன செய்ய..?”
“அதே தான் எனக்கும், மனசுல ஆசை இருக்கு ஆனா அத தேவையான நேரத்தில் சரியா வெளிப்படுத்த தெரியல, ஒரு வேளை வயசு காரணமோ என்னவோ..?”என்றான் சலித்தவாறு திரும்பி மல்லாக்க விட்டத்தை பார்த்தவாறு. .
“அப்பிடி எல்லாம் இல்ல, உங்ளுக்கு இப்பிடி ஒரு சூழ்நிலை தானா அமையல, நீங்களும் அமைச்சுக்கல, அதனால இப்ப வெளிப்படுத்த யோசிக்குறீங்க, இப்ப தான் நான் வந்துட்டேன்ல, என் கிட்ட வெளிப்படுத்துங்க உங்க ஆசையை எல்லாம்”என்றாள் நொடியில் திரும்பி அவன் மார்பில் தலை வைத்து வயிற்றோடு கைப் போட்டவாறு.
அவளின் செய்கையில் சிரித்தவன், அவளை ஒரு கையால் அணைத்தான்.
சட்டை இல்லாத அவன் மேனியில் தலை வைத்தவளுக்கு வாசனை திரவியத்தோடு வந்த வியர்வை ஒரு விதமான உணர்வை ஏற்படுத்தியது.
அந்த வாசத்தை நாசியில் ஏற்றியவள், அந்த வெற்று மார்பில் முத்தம் வைத்தாள்.
“இங்கரே!”
“ம்ம்ம்!”
“உண்மையிலே என்னைய புடிச்சு இருக்கா..?”
“எத்தனை தடவை கேப்பீங்க..? அப்புறம் தொரைக்கு மரியாதை கெடைக்காது சொல்லிட்டேன்” என்றவள் நிமிர்ந்து அவன் முகம் முழுவதும் மாறி மாறி எது கண், மூக்கு, இதழ்கள், நெற்றி, கன்னங்கள், தாடை என தெரியாமல் தொடர்ந்து முத்தத்தை வைத்து அவன் விழிகளைப் பார்த்தவள், “இதுக்கு மேல எனக்கு சொல்ல தெரியல தொரை, ரொம்ப புடிச்சு இருக்கு, உண்மையா புடிச்சு இருக்கு”என்றாள்.
அவனுக்கு உண்மையிலே அது என்ன உணர்வுனு தெரியவில்லை, தன் மிக அருகில் இருந்த முகத்தையே பார்த்தவனுக்கு, அவள் கூறிய ‘புடிச்சு இருக்குனு’ சொன்ன வார்த்தைகள் ஆழ்மனம் வரை சென்று, பெரிய தாக்கதை ஏற்படுத்திருக்க வேண்டும் இல்லையேல் கண்டிப்பா அதை செய்திருக்க வாய்ப்பில்லை, அதும் அந்த மக்கு தொரை.
எதிரில் இருந்த தமயாவின் முகத்தை நொடியில் பற்றியவன், இதழோடு இதழ் பதித்து முத்தத்தைக் கொடுத்தான்.
தமயாவிற்கே விழிகள் ஆச்சிரியத்தில் விரிந்தது, ஆனால் நளனின் கண்களில் நீர் வழிந்தது.
அதை கவனித்த தமயாவிற்கு ஏனோ மனதை வருத்த, அவளை அறியாமல் கண்ணீர் வெளியேறியது.
நளனா அது..? என்ற கேள்வி இருவரிடமும் இல்லை, அது இயற்கை.
ஒருவன் இயந்திரமாக வாழ்கிறான் என்றால் அது அவனின் சூழ்நிலை, அவனை இயந்திர வாழ்க்கைக்கு மாற்றிவிட்டது.
அன்பு, பாசம், ஏக்கம், காதல், விருப்பம், வெறுப்பு அனைத்தையும் வெளிப்படுத்த இடம், பொருள், ஏவல் என்ற காரணிகள் அற்று மனதிலே அடங்கியிருந்தது இத்தனை நாட்கள்.
தாம்பத்யம் என்பது பிறர் கூறி கற்க கூடிய உணர்வு அல்ல, அது இரு மனங்கள் தாங்கிய உணர்வலைகள்.
இயற்கையாய் ஒன்றிய காதல் மனங்கள் இணையும் போது தானாக கற்று தேறக் கூடிய வாழ்க்கை தான் தாம்பத்யம்.
நளனுக்கு அப்பிடிப்பட்ட வாழ்க்கை தமயா மூலமாக கிடைக்க வேண்டும் என்றிருக்க, அவன் வாழ்க்கை இத்தனை நாட்கள் துறவறத்தில் இருந்தது.
இத்தனை நாட்கள் வாழ்க்கையின் அத்தியாயத்தில் இப்பிடி ஒரு விஷயம் இருக்கு என்பதை உணர்ந்து நளன் அனுபவிக்க தொடங்கினான். அந்த அனுபவத்தை கொடுத்த தமயாவிற்கு தன்னால் வலி உண்டாகிட கூடாது என்பதில் கவனமாக இருக்க, தொடங்கினர் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையை.
ஒருவரை ஒருவர் புரிதல் கொள்ள, ஆசைகள் தீர தீர ஆசைக் கொண்டனர்.
வயசு அவர்கள் அருகில் கூட நெருங்க முடியவில்லை, காதல் வந்து விட்டால் போதாத..?
நிலவு எட்டிப் பார்க்க கூடாது என இரு மனங்களும் காவல் காத்தது அதன் உடல்கள் கூடலான நேரத்தில்.
இடைவெளியா..? அது எங்கே..? என்பது போல் நளனும், தமயந்தியும் பிணைந்திருக்க, அந்தரங்கம் அழகாக கவிதையில் மூழ்கியது.
விடியாத இரவாக நீள முடியாது, போர்வைக்குள் இரு உயிர்கள் மட்டுமே இருக்க, நித்திரைக்கு சென்றிருந்தனர்.
நளனின் மார்பில் தமயா தலை இருக்க, உடல்கள் போர்வையால் மறைக்கப்பட்டிருந்தது.
தாம்பத்ய அஸ்திவாரம் ஆரம்பமாகியது இனிதாக.
பொழுது விடியலை நோக்கி சென்றது.
“மனதிலும் புகுந்து
உயிரிலும் கலந்து
உணர்வில் மீண்ட
இரு மனங்கள்”