“ஏங்க! கனிகா மேல எந்த தப்பும் இல்ல, நான் தான் இந்த ஐடியா கொடுத்தது” என்றான் தருண்.
“அவருக்கு வேணா இது சாதரணமா இருக்கலாம், நீ யோசிக்க வேண்டாம கனிகா, உனக்கு அப்புறம் புவனா இருக்காள..? நீ இப்பிடி பண்ணா அவளோட வாழ்க்கையும் சேர்ந்து பாதிக்காத..? சரி விடு, இப்ப இது எல்லாம் சகஜமா போயிட்டு ஆனா உன் மாமா உங்களை ரொம்ப நம்புறாருல”
“என்ன மாமி செய்ய சொல்றீங்க.? இவரை எனக்கு புடிச்சு இருக்கு, அப்பா ஏததோ சொல்லி கெடுத்துட்டார், வேற என்ன தான் நான் பண்றது..?”
“சரி! மாமா கிட்ட சொல்ல வேண்டியது தானே, உனக்கு இவரைப் புடிச்சு இருக்குனு..? அது இருக்கட்டும் இவரை எப்பிடி புடிச்சது..? அவ்ளோ பிரச்சனை நடந்தப் பிறகும்.”
“மாமி! இவரை எனக்கு முன்னாடியே தெரியும்..”
“புரியல!”
“இவர் ப்ரண்ட் ஒருத்தர் என்னைய பொண்ணுப் பாக்க வந்தப்ப, கூட வந்தவர். அப்பா அந்த மாப்பிள்ளை வீட்டில் அதிகமா வரதட்சனை கேக்குறாங்கனு நிறுத்திட்டார், அதுக்கு அப்புறம் இவர் என்னைய வெளியில் பார்த்து என்னைய விரும்புவதா சொன்னார், நான் முடியாதுனு சொல்லி மறுத்தேன், அடிக்கடி வந்து கெஞ்சினார் எனக்கும் புடிக்க ஆரம்பிச்சுட்டு, சரினு அவங்க வீட்டில் வரதட்சனைப் பத்தி பேசக் கூடாதுனு சொல்லி என்னைய பொண்ணு பாக்க வந்தார், புரோக்கர் மூலமா என் ஃபோட்டோவை அவங்க வீட்டில் கொடுக்க சொல்லி, எதேச்சையாக நடப்பது போல் மாத்தி எல்லாம் பண்ணா அப்பா அதையும் களைச்சுவிட்டார்.”
“ஓ! இவ்ளோ பண்ணதுக்கு மாமா கிட்ட சொல்லி இருந்தா, ஏதாவது பண்ணி இருப்பாருல.”
“மாமா ஒத்துப்பாரானு பயம் மாமி, மாமா கிட்ட சொல்லி மறுபடியும் அப்பா ஏதாவது பேசி பிரச்சனை ஆனா, அதான் கல்யாணம் பண்ணிட்டா எதுவும் பேச முடியாதேனு யோசிச்சோம்”
“தமயா! அவ சொல்றதில் என்ன தப்பு இருக்கு, அவங்க அப்பா பத்தி தான் சொல்லி இருக்கீயே, அப்ப இப்பிடி தான் செய்ய முடியும்”என்றாள் நதியா.
“ம்ம்ம்! அது என்னவோ உண்மை தான்.”
“மாமி! ப்ளீஸ் மாமி! நீங்களே எங்க கல்யாணத்தை நடத்தி வச்சுடுங்க, எங்களுக்கு வேற வழித் தெரியல, அவரு வீட்டில் என் அப்பா மேல கோபம் போகவே இல்லையாம், வேற பொண்ணு பாக்கலாமுனு முடிவுப் பண்ணிட்டாங்க”
தருண்”ஆமாங்க! என் வீட்டில் இவளை தான் புடிச்சு இருக்குனு சொல்லியும், இவ குடும்பம் சரிவராதுனு வேற இடத்தில் பொண்ணுப் பாக்குறாங்க”
என்றான்.
“சரி! உங்க வீட்டில் சந்தேகம் வரலையா.? இவளை புடிச்சு இருக்குனு சொன்னதும், ஏற்கனவே பழக்கமானு.”
“அது சொல்லிட்டேன், என் ப்ரண்டுக்கு பாக்கப் போனப்ப இவளை புடிச்சுட்டுனு”
“ஏங்க ப்ரண்ட்டுக்கு பாத்த பொண்ணை உங்களுக்கு புடிச்சுட்டு சொல்றீங்க, அவருக்கு இவ பேசி முடிச்சு இருந்தா எப்பிடி இவளை ப்ரண்டு பொண்டாட்டியா ஃபேஸ் பண்ணி இருப்பீங்க..?” என கேட்டாள் கொஞ்சம் கடுப்பாக.
“அய்யோ! அப்பிடியில்லங்க, முதல் தடவை பாத்தப்ப நல்லா இருக்கானு தோணுச்சு, ப்ரண்டு கிட்ட கூட சொன்னேன் பொண்ணு நல்லா இருக்காங்க ஓகே சொல்லுடானு, ஆனா இவ அப்பா பண்ண கலவரத்தில் அவனுக்கு விருப்பம் இல்லனு சொல்லிட்டான். அடுத்த தடவை இவங்களை வெளியில் பாக்கும் போது தான், நம்ம கல்யாணம் பண்ணா என்னனு எண்ணம் வந்துச்சு, அப்புறம் தான் ப்ரோப்ஸ் பண்ணேனுங்க, மத்தப்படி தப்பான ஆளு இல்லங்க நான்”என தன்னிலையை விளக்கினான்.
“கனிகா! இப்ப நீ கல்யாணம் பண்ணிப்பதில் எனக்கு ஒன்னும் பிரச்சனையில்ல, ஆனா இப்பிடி ஒரு விஷயத்தை கண்ணால் பாத்துட்டு நானே நின்னு கல்யாணம் பண்ணி வைக்குறது உன் மாமாக்கு தெரியாம செய்ய முடியாது”
“மாமி! மாமாக்கு தெரிஞ்சா என்ன சொல்வாருனு பயமா இருக்கு.?”
“அதுக்காக அவருக்கு தெரியாம நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன், கண்டிப்பா முடியாது, அவரை இங்க வர சொல்றேன் நானே பேசி சம்மதிக்க வைக்குறேன் கவலைப்படாத”
தர்மனோ பட்டென்று”அது எல்லாம் இ மு இப்ப இ பி, உன் மாமனுக்கு நல்லாவே புரியும்” என்றான்.
நதியா”அது என்னங்க இ மு, இ பி” என கேட்டாள் முக்கியக் கேள்வியாக.
“அதான்மா இங்கரே வரும் முன், இங்கரே வந்த பின்”என்றான் நக்கலாக.
“நீ கொஞ்சம் வாயை மூடுடா”என்ற நளன், “கனிகா! எதையுமே சொல்லி தான் புரிய வைக்கனும், எல்லாரும் எல்லாத்தையும் கத்துகிட்டு வரதில்ல, உன் மனசுல இருப்பதை சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி நான் பேசப் போறேன்”
கனிகாவிற்கு மனம் நிம்மதியாக, தமயாவை விட்டு தைரியமாக வெளியில் வந்தவள், தருண் கையைப் பிடித்து
“மாமா! எனக்கு இவரை தான் புடிச்சு இருக்கு, எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்க மாமா”என்றாள்.
“அதான் மனசுல இருப்பதை சொல்லிட்டாள, கல்யாணத்தை பண்ணி வச்சுடலாங்க”என்றாள் தமயா.
“அண்ணே! உங்க பொண்டாட்டி நீங்க வந்து தான் கல்யாணமுனு சொல்லிட்டா, பாவம் இனியும் அவங்கள ஏமாத்தாம கல்யாணத்தை பண்ணி வைங்க” என்றாள் நதியா.
“நீங்க ரெண்டுப்பேரும் யாரும் இல்லாதவங்க இல்ல, பெத்தவங்க இருக்கும் போது இப்பிடி திருட்டு தனமா கல்யாணம் பண்ண, அதுவும் நானும் சேர்ந்து பண்ணி வச்சா அது ரொம்ப தப்பு, இருங்க”என நளன் தன் ஃபோனை எடுத்து பாண்டிற்கு அழைத்தான்.
கனிகா”மாமி! அப்பா வந்தா ஏதாவது சண்டை வந்துடும், நீங்க வேணானு சொல்லுங்க மாமி”என கெஞ்சினாள்.
“இரு கனிகா, அப்பிடி ஆகாம பாத்துக்கலாம், பேசாம நில்லு இன்னைக்கு கோயிலை விட்டுப் போகும் போது, நீங்க புருசன், பொண்டாட்டியா தான் போவீங்க, சரியா”
“ம்ம்ம்!”என மனதில் பயத்தோடு நின்றாள்.
தருணிடம் நம்பர் வாங்கி அவனோட பெற்றோரை வருமாறு சொன்னான்.
மரகதம் அந்த நேரம் பார்த்து அம்மா வீட்டில் இருந்ததால், லலிதாவோடு வருமாறு கூறினான்.
அனைவரும் வரவும், சாமி நினைவிற்கு வந்தான், உடனே அவனுக்கும் அழைத்தான்.
ஒரு மாதத்திற்கு மேலாக பேசாமல் இருப்பவன் திடீர் என்று அழைக்கவும் சாமி ஃபோனை எடுக்கவும், கோவில் பெயர் சொல்லி, உடனே “அங்க வா!” கூறிவிட்டு ஃபோனை கட் செய்தான்.
சாமியும் புரியாமல் கிளம்பினான்.
ஒரு மணிநேரம் ஆகியது அனைவரும் வந்து சேருவதற்கு, அனைவருமே ஐந்து, பத்து நிமிட வித்தியாசத்தில் வந்து சேர்ந்தனர்.
பாண்டி வந்ததும் கனிகாவை மாலையோடு பார்க்க அதிர்ச்சியாக நின்றார்.
கனிகா கையைப் பிடித்த தமயா “அத்தாச்சி! பொறுமையா இருங்க, கல்யாணம் ஒன்னும் ஆகல, வெறும் மாலை மட்டும் தான் போட்டு நிக்குறா”என்றாள்.
ஆளாளுக்கு அப்போது தான் வந்தவர்கள் கத்தினர்.
நளன் அனைவரையும் அமைதியாக்கினான்.
தமயா வந்ததையும், அவர்கள் முடிவு, தான் வந்தது என அடுத்தடுத்து விளக்கினான்.
“ஓ! அவனை பொண்ணு பாக்க வர சொன்னது நீ தானே, திருட்டு கழுதை” என எகிறினார் பாண்டி.
“மாமா! பொறுமையா இருங்க”என அதட்டினான் நளன்.
தருண் அப்பா”இந்த குடும்பம் நமக்கு சரிவராதுனு சொன்னேன்லடா அப்புறம் என்ன ம**** தாலிக் கட்ட வந்து நிக்குற..?”என தாம் தூம் என குதித்தார்.
“அப்பா! எனக்கு பொண்டாட்டினா இவ தான். அது மாறாது”என்றான் அழுத்தமாக.
தமயா கனிகாவிடம் மெல்ல”பாரு! அவரு அப்பா பேசியதும் எவ்வளவு அழுத்தமா சொல்றார் நீ தான் வேணுமுனு, நீ வாயை மூடிட்டு நிக்குற, இதான் சமயம் மனசுல இருப்பதை சொல்லிடு”என்றாள்.
கனிகாவிற்கு புரியவும் உடனே”எனக்கும் புருசனா இவர் தான், இவரை விட்டு போக மாட்டேன்”என்றாள் வேகமாக.
கனிகா தமயாவை கட்டிப் பிடித்தவாறு கண்கள் கலங்கினாள்.
“யோவ்! இது கோயிலுனு பாக்குறேன், இல்ல இப்ப நீ சொன்ன வார்த்தைக்கு காலில் கிடப்பது தான் பேசியிருக்கும், உன் பொண்ணுக் கூட படிச்ச புள்ளைங்க ஊருல கையில் ரெண்டுப்பிள்ளையோட போதுங்க, வெட்கமா இல்ல உனக்கு, அவளுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி வைக்க துப்பில்ல, இப்ப பேச வந்துட்ட, நீ கல்யாணம் பண்ணி வைக்கவா இருந்த, உண்மையை சொல்லு..? மாமனு மரியாதை கெட்டுப் போயிடும். அமைதியா நில்லு, உன்னைய வர சொன்னது பெத்தக் கடனுக்கு அப்பனு பேருக்கு நிக்க தான்”என அதட்டினான் நளன்.
“இவரு இப்பிடி பட்ட குணத்தோட இருக்காரே இந்த பொண்ணு எங்க வீட்டுக்கு வந்தா நாளைக்கு நல்லது, கெட்டதுக்கு சொந்தத்து மத்தியில் சரியா இருக்குமா தம்பி, எனக்கு என் புள்ள விருப்பம் தான் ஆனா..?”என நிறுத்தினார் தருண் அம்மா.
தமயா மரகத்திடம் சென்று “அத்தாச்சி! இப்ப நீங்க உத்தரவாதம் கொடுத்தா தான் அவங்க மனசு மாறுவாங்க, உங்க மனசுல கனிகாவுக்கு கல்யாணம் நடக்கனுமுனு தான் ஆசை”
“ஆமான்டி! ஏதோ இம்புட்டு தூரம் வந்துட்டே, தாலி ஏறிட்டா சந்தோஷப்பட மாட்டேனா என்ன..?”
“அப்ப பேசுங்க, எப்பயும் உங்க புருசன் பேசி தானே அவ கல்யாணம் நிக்குது, இன்னைக்கு நீங்க பேசி நடத்தி வைங்க” என ஏற்றிவிட்டாள் அவளின் மகளுக்கான ஆசை, புருசன் மீதான கோபத்தை.
தருண் அப்பா, அம்மா மீண்டும் மீண்டும் அதையே கூறிக் கொண்டிருந்தனர் நளனிடம்.
“இங்க பாருங்க, எம் பொண்ணுக்கு என் புருசன் குணம் கிடையாது, என் தம்பி தான் எம் பொண்ணுங்களை வளர்த்து ஆளாக்குனவன், அவனை மட்டும் நம்புங்க, பெத்த கடமைக்காக நான் சொல்றேன், எம் பொண்ணு வாழ்க்கை நல்லா அமைய சொல்றேன், எம் புருசன் செத்துட்டதா நினைச்சுக்கோங்க இந்தா இந்த அம்மன் முன்னாடியே சொல்றேன், இப்பிடி பட்ட ஆளு அப்பனே இல்ல, எம் பொண்ணுக்கு முழுப் பொறுப்பும் இந்த என் தம்பி தான்,”என்றார் மரகதம்.
“அடியேய்! நான் உசுரோடு இருக்கும் போது, செத்துட்டேனு சொல்ற, உன் தம்பி இருந்தா போதுமா.? நான் அப்பன்டி, இவனுங்க காலில் விழுந்து பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனுமுனு அவசியமா..?” என்ற பாண்டியை கொலை வெறியோடு பார்த்தார் மரகதம்.
“யோவ்! துப்புக் கெட்ட மனுசா, அந்த துப்பு இருந்தா இன்னேரம் என் புள்ள ஒரு வீட்டுக்கு வாக்கப்பட்டு போயிருக்காதா.? என்ன செஞ்ச நீ..? அப்பனா என்ன செஞ்ச நீ.? என் தம்பி செஞ்சான் எல்லாம், அவன் பாத்துப்பான் எம் பொண்ணு கல்யணத்தை நீ தேவையே இல்ல, ஒன்னுத்துக்கும் ஆகாதவன் இருந்தா என்ன செத்தா என்ன..? என்ன செத்தா பதினாறு நாளு வெளியில் உட்காந்துட்டு உள்ள போகனும், அவ்ளோ தானே, நீ இருந்தாலும் அதான் இல்லனாலும் அதான்.”
“ஓ! அந்தளவு ஆகிட்டா, நான் தேவையில்ல, அப்ப உன் பொண்ணுக்கு நகை, பாத்திரம், பண்டம் எல்லாமே உன் தம்பி செய்வான், அப்பிடியே அடுத்தவளையும் கரை சேப்பான். போயிடு உன் ஆத்தா வீட்டுக்கு”என்றார் மரகதத்தின் பேச்சால் கோபம் அதிகமாகி.
“ஏனுய்யா ஏன்! நான் ஆத்தா வீட்டுக்குப் போகனும்! எனக்கு என்ன ஆம்பள புள்ளையா இருக்கு சொத்து சேத்து தூக்கி கொடுக்க, இருக்குற ரெண்டு ஏக்கர் நிலத்தில் பாதியை வித்து அவங்களுக்கு செய்வேன், மீதியை நான் வச்சுப்பேன், அது ஒன்னும் நீ சம்பாரிச்சதில்ல, இவன் வாங்கி கொடுத்தது, என் பேருல இருக்கு. எனக்கு அது போதும், நான் நிம்மதியா கடைசிவரை இருக்க என் தம்பி வழிப் பண்ணி வச்சுட்டான், ஆத்தா வீட்டுக்குப் போகனுமாமே.. நீ வீட்டுப் பக்கம் வந்துடாத கொலைப் பண்ணிடுவேன், இல்ல சோத்துல வெஷத்தை வச்சுடுவேன்.” என்று காளியாக மாறிப் பேசினார் மரகதம்.
மேலும்”ஏங்க! அந்த ஆளு இல்லங்க எங்க குடும்பத்தில, நீங்க உங்க பையனுக்கு எம் பொண்ணை கட்டிவைங்க, அவ ஆசைப்படி இதாவது நடக்கட்டும்”என கெஞ்சிக் கேட்டார்.
தருண் பெற்றவர்கள், அவரை தடுத்து”அச்சோ! என்னங்க நீங்க, அவரோட குணம் தான் புடிக்கலனு சொன்னோம், மத்தப்படி பொண்ணுப் புடிச்சு தான் அன்னைக்கு சரினு ஒத்துகிட்டோம். எங்க பையனுக்கு புடிச்சு இருக்குனா, நாங்க இதுக்கு மேல மல்லுக்கட்ட முடியுமா..? சம்மதம்”என்றார் தருண் அப்பா, அம்மாவும் சரி என்றார்.
அனைவரும் ஒத்துப் போகியதால், கல்யாணத்திற்கு தயார் செய்யப்பட்டது.
சாமியும் கனிகா கல்யாணம் நடந்தால் சரியென்று, நளன் கூறியப் பொருட்களை வாங்க சென்றான், அருகில் இருந்த கடை வீதிக்கு.
மல்லிகா தர்மன் போன் செய்த நேரத்தில் கிளம்பி இப்போது தான் வந்து சேர்ந்தாள்.
தமயாவை ஓரம் கட்டி”ஏன்டி! உன் ஓப்பாடியாருக்கு புருசனின் வண்டவாளம் தெரியாதா.?”
“தெரியாது, நீ கம்முனு இரு”
“அது எப்பிடி தமயா, பாவமுல அவங்க”
“புரியுது, தொரைக்கு தெரியும், அவர் முடிவு தான்”
“ஆனா, உன் கொழுந்தன் இப்ப அதிகம் வரதில்லை போல அங்க, தெரியல நான் பாத்தவரை”
“ம்ம்ம்! ஆனா நெறைய கொடுத்திருக்கார் போல பணம், நகை அடகு வச்சு எல்லாம், என்ன ஆகப் போகுதோ..?”
“ம்ம்ம்! உன் குடும்பத்துல மொத்த கிறுக்கும் ஒன்னா இருக்குடி”
“இப்ப தான் ஒன்னு ஒன்னா தெளிஞ்சுட்டு வருது”என சிரித்தாள் தமயா..
“இங்கரே! இங்க என்ன பண்ற..?”என நளன் அழைத்தான்.
“இதோ வரேன் தொரை”என ஓடினாள்.
“பாத்து வா, அங்க அக்கா கூப்புடுது”
“ம்ம்ம்!”
“எப்பிடியோ உன் கண்ணுல பட்டதலா எல்லாம் நல்லா முடிஞ்சுட்டு தமயா..”
“அதான் தமயா ஸ்பெஷல் தொரை, என் கண்ணுல பட்டா எல்லாம் சிறப்பா முடியும்”என சிரித்தாள்.
“அது என்னவோ உண்மை, நான் முதற்கொண்டு டீச்சர், எனக்கு காதல் புரியாதுனு கனிகா சொல்லலனு சொல்லும் போது எனக்கே கொஞ்சம் வெட்கமாப் போச்சு, அந்த கிளாஸ் டீச்சரே எதிரில் நிக்குறானு நினைச்சி”என்றான் மெதுவாக.
“ம்ம்ம்! தெரியுமே தொரை, பாத்தேனா”
“சரி வா, போகலாம்”
“ம்ம்ம்!”ஒரு நிமிஷம் என அவனின் சட்டையில் இருந்த பாக்கெட்டில் சில்லரையாக இருந்த பணத்தை எடுத்தவள், அதில் ஐநூறு ரூபாயை எடுத்துக் கொண்டு மிச்சத்தை வைத்தாள்.
“எதுக்கு இது..?”
“அத்தாச்சிக்கு தான், அவங்க சும்மா வந்து இருப்பாங்கள, பொண்ணு மாப்பிள்ளைக்கு கொடுக்கனுமே.”
“ம்ம்ம்! சரி தான்”என உள்ளே சென்றார்கள்.
பாண்டி ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றார்.
தர்மன்”விடுங்க சகல, அண்ணி தானே திட்டுறாங்க, இதுக்கு அப்புறம் வாயை தொறக்காம நில்லுங்க, இதுக்கு அப்புறம் கோச்சுட்டுப் போய் என்ன ஆகப்போது, ஏதோ கிடைப்பதை வச்சுட்டு வாயை அடக்கிட்டு இருங்க, இல்ல சொன்ன மாதிரி வெஷத்தை எதும் வச்சுடப் போறாங்க”என குத்திக் காட்டி நக்கல் அடித்து, ஓரமாக நிக்க வச்சான்.
ஐயர் மந்திரம் ஓதினார், அனைவர் முன்னிலையிலும் தருண் கனிகா கழுத்தில் தாலியை கட்டினான்.
பூ போட்டு ஆசிர்வாதம் செய்தனர். மல்லிகா இங்கு நடந்தது தெரியாமல் பாண்டி கையில் பூ கொடுக்க, அவரும் வாங்கி வீசினார், எப்பிடியோ போங்கள், எனக்கு சோறு கிடைத்தால் போதுமென்று.
பாண்டி மாதிரி ஆட்கள் நிஜ வாழ்க்கையில் உண்டு, திருந்த எல்லாம் வாய்ப்பே இல்லை, கதைக்காக எல்லாம் திருத்தவும் முடியாது.
மரகதத்திற்கு இப்போது தான் மனது குளிர்ந்தது.
தமயா அவரின் கையில் பணத்தைக் கொடுத்து ஆசிர்வாதம் செய்யும் போது கொடுக்க சொன்னாள்.
அனைத்தும் முடிந்து கனிகாவை அழைத்து செல்ல ஏற்பாடு ஆகியது.
தமயா, நளன், சாமி, லலிதா கூட சென்றனர்.
அவர்களை வீட்டில் விட்டு திரும்பினைர், தமயா புல்லட்டில் அமர்ந்தப்படி நளன் தோளில் கை வைத்து சாய்ந்தாள்.
“இங்கரே! என்ன ஆச்சு.?”என ஓரமாக புல்லட்டை நிறுத்தினான்.
பின்னால் வந்த சாமியும், லலிதாவும் அவர்கள் அருகில் வந்து நிறுத்தினர்.
“தலை சுத்துது!”என அவனை பிடித்தப்படி இறங்கினாள்.
லலிதா வந்து விசாரித்தாள். “என்ன தமயா..?”
“அக்கா! எனக்கு தெரியாம இல்ல, நாள் தள்ளிப் போய் இருக்கு, ஆனா டெஸ்ட் பண்ணி பாக்கல, ஏற்கனவே இப்பிடி லேட் ஆகி வந்துட்டு, அதான் லேட்டா டெஸ்ட் பண்ணலாமுனு நினைச்சேன்.”
“சரி வா, இப்பவே போய் டெஸ்ட் பண்ணிடுவோம்”
நளன் தமயாவையே பார்க்க, “ஒன்னும் இல்லங்க, ஹாஸ்பெட்டல் போய் டெஸ்ட் பண்ணிட்டு சொல்றேன்”என்றாள்.
நளனும் தலையை ஆட்டினான். அவனிடம் சொல்லி இருந்தாள் தான், பீரியட்ஸ் வரலை என்று.
வீட்டில் சரசு, லலிதாவுக்குமே தெரியும் அந்த மாதம் அவள் தலைக்கு ஊற்ற வில்லை என்று ஆனாலும் நாள் ஆகட்டுமே என காத்திருந்தனர்.
பிளட் டெஸ்ட் கொடுத்து விட்டு காத்திருந்தனர்.
“ஏன் தமயா, இந்த கிட்னு சொல்றாங்கள அதுல பாக்கலையா நீ..?”
“இல்லக்கா, ஒரேதா பிளட் டெஸ்ட் கொடுக்கலாமுனு வெயிட் பண்ணினேன்.”