“தமயா! உனக்கு தான் டேட் எக்ஸ்டென்ட் ஆனது தெரிஞ்சிருக்கனுமே, ஏன் இவ்ளோ லேட்டா செக் பண்ற..?”என கேட்டார் டாக்டர் மீனா.
“டு டைம்ஸ் டேட் எக்ஸ்ட்ரா ஆகும் போது செக் பண்ணி கொஞ்சம் கஷ்டமாச்சு மேடம் அதான், இந்த தடவை நாள் ஆகட்டுமுனு வெயிட் பண்ணினேன்”
நளனும், லலிதாவும் வெளியில் டாக்டர் இருக்கையின் எதிர்புறம் அமர்ந்திருந்தனர்.
சாமி டாக்டர் அறையின் வெளியில் நின்றான்.
டாக்டர் தமயாவிற்கு ஸ்கேன் செய்தபடி உள் அறையில் நின்று இந்த கேள்வியைக் கேட்டார்.
“ஓகே! நோ ப்ராப்ளம், குழந்தைக்கு ஹார்ட் பீட் வந்துட்டு, இட்ஸ் வெரி ஃபைன் நீயே பாரு”என காட்டினார்.
அவளின் மனதில் அத்தனை சந்தோஷம், அதை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை, கண்கள் கலங்கி நின்றது அந்த ஸ்கீரினை பார்த்தவாறு.
‘என் குழந்தை இல்லல்ல தொரையோட வாரிசு, எங்க பிள்ளை’என மாறி மாறி சண்டையிட்டாள் மனதோடு.
“என்ன தமயா ஹேப்பியா..?”
“ம்ம்ம்! ரொம்ப, எனக்கு ஒரே ஒரு ஹேல்ப் வேணும் மேடம், பொதுவா இங்க அப்பிடி நீங்க செய்ய மாட்டீங்க, எனக்கு கொஞ்சம் ஆசையா இருக்கு”என நிறுத்தினாள்.
“என்ன தமயா ஹெல்ப் வேணும்..?”
“இந்த ஹார்ட்பீட் ஸ்கீரினை என் கணவருக்கு காட்டனும் மேடம், ப்ளீஸ் கூப்புடுறீங்களா…?”
“ஹஹஹ! இது எல்லாம் நடக்குறது தான் தமயா, இங்க யாரும் கேக்க மாட்டாங்க பாக்கனுமுனு, நம்ம ஹாஸ்பெட்டலுக்கு முக்கால்வாசி கிராம புற மக்கள்தானே வராங்க, அவங்களும் அம்மா, மாமியாருனு கூட கூட்டிட்டு வராங்க, சோ நானும் கணவரை கூப்புட்டு காட்டுறதில்லை ஹார்ட் பீட் வியூ எல்லாம், ஆனா நிறைய இடத்தில் நடக்குது, டோன்ட் வொரி நான் வர சொல்றேன், அவரு நேம் என்ன..?”
“மணவாளன்!’
வெளியில் வந்த டாக்டர்”மிஸ்டர் மணவாளன், நீங்க கொஞ்சம் உள்ள வாங்க”என அழைத்தார்.
அவன் புரியாமல், தமயாவிற்கு எதுவும் பிரச்சனையோ என யோசித்தப்படி, லலிதாவை பார்த்தான்.
நளன் எழுந்து உள்ளே சென்றான், தமயா படுத்திருந்தாள், இடுப்புக்கு கீழ் துணிப் போர்த்தப்பட்டிருந்தது.
தமயாவை கேள்வியாக பார்த்தவன், கொஞ்சம் சங்கடப்பட்டு நின்றான், அவனுக்கு இது புதிது என்பதை தாண்டி பழக்கப்படாதவன் மருத்துவமனைக்கு துணைக்கு வந்து எல்லாம்.
தமயா அமைதியாக அவனையே பார்த்தாள்.
“மணவாளன்! இங்க பாருங்க இந்த ஸ்கீரினை, இதில் இப்பிடி போகுது பாருங்க, இந்த இடத்தில் தெரியுறது தான் உங்க குழந்தையோடு இதய துடிப்பு, குழந்தை நல்லா இருக்கு”என்று அவர் கூறியதும், அப்பிடியே நின்றான் விழிகள் நிலைக்குத்தி பார்த்தவாறு.
“அது எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல, தமயா உனக்கு எந்த கஷ்டமும் தெரியலைனா எப்பயும் போல வேலைக்கு வரலாம், வேணுனா லாஸ்ட்டா மேட்ர்னிட்டி லீவ் எடுத்துக்கலாம்”
“ம்ம்ம்! கண்டிப்பா டாக்டர்”
“அப்பிடினா என்ன டாக்டர்..?”என கேட்டாள் லலிதா.
“கர்ப்பக்காலத்தில் மகப்பேறுக்கான லீவ்மா அது”
“ஓ! ஏன் தமயா வேலைப் பாத்தே தான் ஆகனுமா என்ன.? விடு புள்ளையை பெத்துட்டு அது ஸ்கூல் போகும் போது மெதுவா வந்துக்கலாம்” என்றாள் லலிதா.
“ஏன்மா! பொம்பளைங்களுக்கு தான் இப்பிடி ஒரு எண்ணம் புள்ளை உண்டாகிட்ட வாழ்க்கையே மாத்தி வாழனுமுனு தலைகீழாக திருப்புறது, இப்ப என்ன கஷ்டம் தமயா எப்பயும் போல வேலைக்கு வரப்போறா, குழந்தை பிறந்ததும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு, தினசரி வாழ்க்கையை தொடங்க வேண்டியது தான், புள்ளைங்க ஸ்கூல் போய் தான் நம்ம கேரியரை பாக்கனுமுனா அது கடைசிவரை நடக்காது, வீட்டில் அம்மா, மாமியார் இருந்தா அவங்களுக்கு பேரப்பிள்ளை பாக்குறது தானே வேலை, நான் எல்லாம் என் பொண்ணு வயிற்றில் இருக்கும் போதே, டெலிவெரியே பாத்து இருக்கேன், ரெகுலரா டியூட்டிக்கு வந்தேன்”என சிரித்தார் மீனா.
“ஆத்தாடி! எப்பிடி டாக்டர்..?”
“எல்லாம் நம்ம மனசு தான்மா, நமக்கு முடியலை வலினு படுத்தா படுக்கை தான், அதே அதை தட்டிவிட்டுட்டு அடுத்த வேலை பாக்கப் போனா அந்த வலியே மறந்துடும் நமக்கு, அப்பிடி தான் குழந்தையை சுமப்பதும் எந்த மெடிக்கல் இஷ்யும் இல்லனா நம்ம சாதரண தினசரி வாழ்க்கையில் இருக்க வேண்டியது தான். அதும் தமயாக்கு இந்த ஃபீல்டு பத்தி நல்லா தெரியும். கவலையே வேணாம் நளன், உங்க வைய்ப் வேலைக்கு வரலாம்”என்றார் டாக்டர்.
நளன் வேலையை தாண்டி விசாரித்தது கிளாஸ் வந்துவிட்டுப் போகும் காரணத்திற்காக.
டாக்டர் நம்பிக்கையான வார்த்தைகள் சொல்ல, அவன் முகம் தெளிவானது.
வெளியில் வந்தனர் டாக்டர் அறையில் இருந்து.
அன்று தங்கத்தின் பிள்ளைக்கு பிறந்தநாள் என்பதால் தான் கோவிலிற்கு சென்றது மூவரும், ஒரு மணி நேர இடைவேளியில்
அங்கு ஏததோ நடந்தமையால், தங்கமும், நதியாவும் திரும்பினர், தமயா நாளை வருவதாக சென்றாள், இப்போது மருத்துவமனைக்கு வந்தவளை விஷயம் அறிந்து கட்டிப்பிடித்து வாழ்த்துக் கூறினர் தோழிகள்.
தமயாவிற்கு கோபம் வந்தது, அவனிடம் தன் சந்தோஷத்தை சொல்லி வெளிப்படுத்தும் வாய்ப்பு அந்த புல்லட் தனிமை மட்டும் தான் என யோசித்து வைத்திருந்தாள். தன்னிடம் கேட்காமலே சரியென்று சொல்கின்றானே என கடுப்பானாள்.
“செரி! நீங்க கிளம்புங்க நான் வெளியில் போயிட்டு வரேன்”என்றான் சாமி.
“என்ன வேலைடா…?”என கேட்டான் நளன் தம்பியிடம் இன்று பேசியதால் இருவருக்கும் அந்த திரை விலகியிருந்தது.
“ஒரு பார்ட்டி இடம் பாக்க வாரேனு சொன்னுச்சுண்ணே அதான் போய் காட்டிட்டு வரேன்”
“நீங்க வாங்க பஸ் ஏத்தி விட்டு, நான் கடைக்குப் போயிட்டு வரேன் நீங்க போயிட்டு இருங்க”என்றான் நளன்.
“பஸ் ஏற நாங்களே போயிருக்கோம், நீங்க போய் கடையை பாருங்க, வாங்க அக்கா, ஹேய் வரேனுடி”என சொல்லிட்டு நிற்கவில்லை நடந்தாள் தமயா.
லலிதாவும் கூடவே நடந்தாள்.
நளன் தமயாவின் பதிலில் ஒரு வித்தியாசம் தெரிய புரியாமல், அவளையே பார்த்தான்.
“அண்ணே! குழந்தையோட ஹார்ட் பீட் எல்லாம் புருசனுக்கு காட்டுறது ஒரு கிப்ட் மாதிரி, உங்களுக்கு கிடைச்சிருக்கு அந்த வாய்ப்பு, கொடுத்து வச்சவரு நீங்க”என்றாள் தங்கம்.
“ஏய்! அந்த கிப்ட் கொடுத்ததே நம்ம தமயா தான், டாக்டர் கிட்ட கேட்டு நான் உள்ள தானே நின்னேன்”என பெருமையாக சொன்னாள் நதியா.
நளனும் யோசனையோடு”சரி! நான் கிளம்புறேன்மா”என விலகி நடந்தான்.
***
சரசுக்கு அது ஆசையிலும் பேராசையாக இருந்தது இத்தனை நாட்கள்.
செய்தி கேட்டு, தமயாவை முகம் வருடி முத்தம் கொடுத்தார்.
“என் மகராசி! இது போதும், புள்ளையை பெத்துக் கொடுத்துடு என் கையில் அது போதும்”என்றார்.
“ஆத்தா! நாங்களும் இருக்கோம் உன் பேரப்பிள்ளைங்க”என்றாள் ஜோதி வேண்டுமென்றே.
“நீங்களும் பேரப்புள்ளைவ தான்டி ராஜாத்தி, ஆனாலும் இப்ப உண்டாகி இருக்குறது என்னோட தவத்துக்காக கெடைச்ச வாரிசுடி, இத்தனை வருச ஏக்கத்தை போக்க வந்து இருக்கு எம் மூத்தப் புள்ள வாழ்க்கைக்கு”என மகிழ்ச்சியில் கண்ணை துடைத்துக் கொண்டார்.
தமயாவிற்கு அது புரிந்தது, லலிதா”தமயா! நீ உட்காரு, அத்த விடிய விடிய பேசுவாவோ அவ்வளவு சந்தோஷம்” என குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க சென்றாள்.
தமயா ஹாலில் அமர்ந்தாள்.
“ஏ ஆத்தா! எனக்கு தம்பியா, தங்கச்சியா பொறக்கும், ஆசையா இருக்கு ஆத்தா பெரியம்மா நான் தான் வச்சுப்பேன் சொல்லிட்டேன்” என்றாள் ஜோதி.
தமயா சிரித்தாள். “எந்த புள்ளையா இருந்தா என்னடி, உன் பெரியப்பனுக்கு புள்ள பொறக்காதனு தவிச்சு கெடந்தேன், அவன் பேரு சொல்லி என் அப்பனு சொல்ல ஆம்பளையா, பொம்பளையா எப்பிடியோ நல்ல படியா பொறந்தா சரி”என்றார் சரசு.
அவருக்கும் பெருங்குறை தீர்ந்தது என மகிழ்ச்சியில் மனதில் துள்ளிக் குதித்தார்.
ஆனால் தாங்கி, கொஞ்சி, அணைக்க வேண்டியவனோ அருகில் இல்லாததால் முழுமையாக தன் சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை தமயாவால்.
இரவு..
அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். சாமி கூட வந்து விட்டான் வீட்டிற்கு.
நளன் வரவில்லை. தமயா இரவு உணவை முடித்துவிட்டு, அறைக்குள் சென்றுப் படுத்தாள் கட்டிலில்.
கோபமாக இருந்ததால், நளனிற்கு போன் செய்யவில்லை.
பத்து மணியை தாண்டிய போது, நளன் அறைக்குள் நுழைந்தான்.
இரவு விளக்கு மட்டுமே எரிந்தது. தமயாவிற்கு அவன் வந்தது தெரிந்தமையால் சும்மா கண்களை மூடி படுத்திருந்தாள்.
நளன் அறையின் விளக்கை போட்டு தமயாவை பார்க்க அவளின் கண்கள் மூடியிருந்தது.
தன் சாவி, பர்ஸ், பையை டேபிளில் வைத்தவன்,
பிறகு சென்று உடைகளை மாற்றி விட்டு வந்து அமர்ந்தான் கட்டிலில்.
“இங்கரே!”
தமயாவிடம் பதிலில்லை.
“இங்கரே! நீ தூங்கலைனு தெரியும்”
சட்டென்று முழித்தவள், அவனை முறைத்துக் கொண்டே”ஆமா! இப்ப என்ன அதுக்கு..?”
சிரித்தவன்”உன்ன மாதிரியே பிள்ளை பொறக்கப் போகுது”என்று கூறியவாறு.
“ஏன்! என்ன மாதிரி பொறந்தா உங்களுக்கு புடிக்காதோ”என எழுந்து அமர்ந்து முகத்தை சுளித்தப்படி கேட்டாள்.
அவளை தன் அருகில் இழுத்து அணைத்தவன், “இங்கரே! அது எப்பிடி புடிக்காம போகும், ரொம்ப புடிக்கும் நான் சமாளிச்சுப்பேன் உன்னையும், உன்னோட மாதிரியையும்”என அவளின் நெற்றியில் முத்தம் வைத்தான், மகிழ்ச்சியாக.
“போங்க தொரை! நான் இந்த விஷயம் தெரிஞ்சதும் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா.? உங்க கூட புல்லட்டில் வரும் போது சொல்லி தனியா சந்தோஷமா வரலாமுனு நினைச்சா, அக்கா கேட்டதும் என் கிட்ட ஓகேவானு கேக்காம சரினு சொல்லிட்டீங்க, சரி வீட்டுக்காவது சீக்கிரம் வரனுமுல இப்ப மணி எத்தனை தெரியுமா.?”என முகம் வாடியதோடு கேட்டாள்.
“ம்ம்ம்! லலிதா கேட்டதும் எனக்கும் அது சரினு பட்டுச்சு அதான் உடனே சரினு சொல்லிட்டேன். அதுவும் நல்லதா போச்சு தமயா”என்றான் அவளை தன் மார்பில் அணைத்தப்படி.
“ஏங்க தொரை..?”
“நான் போயிட்டிருந்த புல்லட்டில் ஒரு டெம்போ வந்து மோதிட்டு பின்னாடி”
“அச்சசோ! உங்களுக்கு ஒன்னும் ஆகலையே..?”என நிமிர்ந்து அவனை ஆராய்ந்தாள்.
“பயப்புடா, பெருசா அடிப்படல ஆனா தப்பிச்சது பெரிய விஷயம் தான்..”
“என்ன சொல்றீங்க..?”
“நான் விழுந்த இடத்தில் அப்ப தான் ஒரு லாரி கிராஸ் ஆனுச்சு, நல்ல வேளை அது போனுச்சு நான் விழுந்தேன், புல்லட் வெயிட் அதோட ஸ்பீட் கம்மி, அதனால லேசான அடியோடு போச்சு, டெம்போ கன்ட்ரோல் இல்லாம வந்துட்டு, புல்லட் மெக்கானிக் ஷாப்ல இருக்கு, நான் பஸ்ல வந்தேன் அதான் லேட்”
“ம்ம்ம்! சந்தோஷமான விஷயம் நமக்கு வரும் போது இப்பிடி ஆக்ஸிடென்ட்னு சொல்றீங்க தொரை, கஷ்டமா இருக்கு”
என்றாள் வருத்தமாக.
அவளை தோள் தொட்டு விலக்கியவன்”இன்னொரு தடவை இப்பிடி பேசாத தமயா, நம்ம புள்ள வந்த நேரம் தான் உன்னைய பஸ்ல போக வச்சுட்டு, என்னைய பெரிய விபத்தில் காப்பாத்தி இருக்கு, ஒரு வேளை அந்த டெம்போ மோதும் போது, லாரியும் வந்திருந்தா எனக்கு முன்னாடி நீ தான் விழுந்திருப்ப”என்றான் சற்று அழுத்தமாக.
“இல்லங்க, வீட்டுல யாரும் அப்பிடி நினைச்சுடக் கூடாதுனு பயமா இருக்கு, அன்னைக்கு அம்மாக்கு விபத்து ஆனப்ப அத்தாச்சி வீட்டுக்காரர் உங்களை அப்பிடி தானே சொன்னார்”
“இங்கரே! மொதல இங்க யாருக்கும் நம்ம புள்ள பத்தி பேச வாய்ப்பே கொடுக்க மாட்டேன் நான், விபத்து நடந்தது பத்தி எல்லாம் சொல்ல மாட்டேன், புல்லட் ரிப்பேருனு சொல்லிக்குறேன், நீ கண்டதை யோசிக்காத, உனக்குமே நீ கோபமா இருந்ததால் தான் சொன்னேன்”
தமயாவிற்கு அவனின் நேர்மறையான எண்ணத்தை நினைத்து கண்கள் கலங்கியது, அவனை சட்டென்று அணைத்து அவன் முகம் முழுவதும் முத்தம் கொடுத்தவள்”நம்ம பிள்ளை உங்களை மாதிரி குணத்தில் தான் பொறக்கனும் தொரை”என்றாள் கண்களில் நீர் வழிய.
“அத ஏன் அழுதுகிட்டே சொல்ற”என கிண்டல் செய்தவனை, அடித்தாள்.
“இரு வரேன்”என அவன் கொண்டு வந்த பையை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.
“என்னது இது..?”
“இங்கரே! டாக்டர் கூப்புட்டு நம்ம புள்ள இதய துடிப்பு காட்டியதும், என் இதய துடிப்பு நின்னு துடிச்சது சந்தோஷத்தில். அந்தளவு மகிழ்ச்சி, அது உன்னால தானே, நான் அப்பா ஆகப் போறேன், நீ அம்மா ஆகப்போற, எனக்கு பரிசு நீ காட்டிட்ட இதய துடிப்பை, ஆனா நான் என்ன கொடுப்பதுனு தெரியல, மத்தவங்களுக்குனா உன் கிட்ட கேட்டு செய்யலாம். உனக்குனா..? அதான் ஏதோ எனக்கு தோணுனதை வாங்கினேன் பிரிச்சுப் பாரு”
புடவை அது. எடுத்து வெளியில் பார்த்தவளுக்கு அழகா தெரிந்தது . எப்பிடி அழகாக தெரியாமல் போகும் அவனின் அன்பு காதல் பரிசு அல்லவா அது!
“நல்லா இருக்கா..?”
“ம்ம்ம்! சூப்பரா இருக்கு. உங்களுக்கு புடவை எல்லாம் எடுக்க தெரியுமா.?”
“தெரியாது, எனக்கு உனக்காக என்ன வாங்கனுமுனு தோண, புடவை தான் ஞாபகம் வந்துச்சு நீ அதுல ரொம்ப நல்லா இருப்பல”
“அப்பிடியா..?”என ஒரு மாதிரி லுக் விட்டாள்.
“சரி! நான் சொல்றதில்லை தான், ஆனா நீ புடவை கட்டும் போது எல்லாம் எனக்கு தனி அழகா தெரிவ, அதான் புடவையே எடுத்துட்டேன்”
“ஹப்பா! ஒரு வழியா சொல்லிட்டீங்க”
“என்னனு.?”
“புடவையில் தனி அழகா தெரிவேனு தான்”
அவளை கண்டு சிரித்தான்.
“ஆனாலும் தொரை உங்களை அப்பப்ப நான் டீச்சரா மாறி தான் காதலை வாங்க வேண்டியிருக்கு” என அவனின் இரு கன்னங்களையும் பிடித்து ஆட்டினாள்.
“இங்கரே! என்ன செய்ற..?”என அவளை தடுக்காமல் கேட்டான்.
“ம்ம்ம்! இனி நான் என்ன செஞ்சாலும் நீங்க சைலன்டா தான் இருக்கனும், ஏனா இங்க உங்க பிள்ளை இருக்குல”என கண்களில் மிரட்டி வயிற்றை தொட்டு காட்டினாள்.
“ம்ம்ம்!”என அவளின் புடவையை விலக்கிட்டு வயிற்றில் கை வைத்தவன், “எவ்ளோ சந்தோஷம் தெரியுமா, இது எல்லாம் நான் கனவில் கூட நினைக்காதது.”என அவளின் வயிற்றினை தொட்டுத் தடவினான்.
“எனக்கு எப்பிடி சந்தோஷப்படனும் கூட தெரியல தமயா, உன் கிட்ட சொல்ல வரல, ஆனா நீயும், இந்த பிள்ளையும் தான் என் வாழ்க்கையின் அர்த்தமுனு தோணுது”என அவளை இடுப்போடு அணைத்து வயிற்றில் காது வைத்தவாறு படுத்தான்.
அவனின் தலைமுடிகளை வருடியவள், “நீங்க சொல்ல எல்லாம் வேணாம் எனக்கு புரியுது தொரை, எனக்கும் உங்களை மட்டுமே பாத்துட்டே இருங்க மனசு ஏங்குது தெரியுமா..?”என அவன் தலையில் முத்தம் வைத்தாள்.
“ம்ம்ம்! பாத்துட்டே இரு”
“விடிஞ்சுடுமே”
“பரவாயில்ல!”
“தேறிட்டீங்க மழலை மணவாளன்”
“நீ ஆசைப்படுறனா அத செய்யாம இருப்பேனா இனி”
“ம்ம்ம்!”என அவனை தன்னோடு அணைத்தவள், நினைவு வர,
“சாப்பிட்டீங்களா…?”