காதலுக்கு வயதில்லை என்பதற்கு உதாரணமாக இரண்டு ரகங்கள் உண்டு. முதல் ஒன்று மீசை அரும்பும் வயது காதல், இரண்டாவது நரை தெரியும் வயது காதல், மீசை முளைத்த காதலுக்கும், நரை விழுந்த காதலுக்கும் அனுபவம் கொண்ட அறிவு மட்டுமே வித்தியாசம்.
மீசை அரும்பிய வயதின் காதல் எதையும் செய்ய துணியும், நரை தொடங்கிய வயதின் காதல் எதையும் செய்ய யோசிக்கும்.
நளனிற்கு அமைந்தது இதில் இரண்டாவது ரகம், ஆனால் சாமி முதல் ரகத்தை துணிந்து முடித்தவன். அது என்னவோ இரண்டுப் பிள்ளைகள் பிறந்தும் காதல் கைக்கூடாதது போல் தோன்றியது சாமிக்கு.
அதற்கு காரணம் அவனே, காதலித்து மணம் முடித்தா ஒருத்தி இடத்தில் வேறொருத்தியை நினைக்க செய்தவனை லலிதா மன்னித்தாலும் மனம் ஏனோ நெருங்கவில்லை, பேசவே இல்லை.
எதுவாக இருந்தாலும் பிள்ளைகள் மூலமாக தான் தூது செல்லும்.
தமயா இதை காணாமல் இல்லை, ஆனால் லலிதாவிடம் நேரடியாக அவளால் சொல்ல இயலவில்லை, ‘பேசுங்கக்கானு, எப்பிடி சொல்ல முடியும்..? நாம் அந்த இடத்தில் இருந்தால்’ என யோசிக்க தமயா ஒதுங்கினாள்.
ஆனால் சாமி ஒவ்வொரு தடவையும் பேச முயற்சிப்பது தெரிந்தது.
நாட்கள் நகர்ந்தது, காலக்கொடுமைனு சொல்வார்காளே!, ?? அப்பிடி ஒரு விஷயம் சாமிக்கு நடந்தது.
நளன் சாமிக்கு அறிவுரை சொன்ன நாள் அது, அறிவுரை தானே அதில் என்ன அதிசயம் இருக்கு..? என்று யோசித்தால், அதிசயமே அசந்து போகும் நளனின் காதல் பாட அறிவுரை அதிசயமே!
சாமி”என்ன அண்ணே சொல்றீங்க..?”
“டேய்! நீயும் சும்மா போய் போய் பேசு பேசுனு கெஞ்சுனா வேலைக்கு ஆகாது, ஏதாவது வாங்கி கொடுடா, பூ, புடவை இந்த மாதிரி, படிக்குற காலத்துல என்ன பண்ணி காதலிச்ச அதை கொஞ்சம் மூளையில் தூசி தட்டி எழுப்புடா” என்றான் தம்பியிடம்.
“அப்பிடி எல்லாம் இல்லங்க, கொஞ்சம் மூச்சு வாங்குது, ஏழு ஆரம்பிச்சுட்டுல அதான்”என்றாள் வயிற்றில் கை வைத்து.
“ம்ம்ம்! வயிறு தெரியுதுல இப்ப நல்லா” என அவளை தன் அருகில் அமர வைத்தான்.
“கண்ணு வைக்காதீங்க, எனக்கே இப்ப தான் தெரியுதேனு நிம்மதியா இருக்கு”
“ஏன்..?”
“இல்ல! பாக்குறவங்க எல்லாம் ஏன் வயிறே தெரியலனு கேக்குறாங்க, எனக்கு புரியும் ஆனா மத்தவங்க கேக்கும் போது கஷ்டமா இருக்கு, எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது தொரை”
“ம்ம்ம்! நீ ஏற்கனவே நோஞ்சான் உடம்பு அதான் தெரியலனு சொல்லு”என சிரித்தான்.
“யாரு நானா..? சொல்லுவீங்க, பாருங்க நான் கரெக்டா தான் இருக்கேன்”என எழுந்து கண்ணாடியில் தன்னை சுற்றி சுற்றிப் பார்த்தாள்.
“இங்கரே! நீ சரியா தான் இருக்க, குழந்தை ஆரோக்கியமா இருக்குனு டாக்டர் சொல்லிட்டாங்க, நீ ஏன் கவலைப்படுற..? உனக்கே தெரியுமுல”
“தெரியும்! ஆனா நானும் பொண்ணு தானே, இயற்கையா ஒரு பயம், அவ்ளோ தான்”என தன் புடவையை விலக்கிட்டு வயிறை மட்டும் கண்ணாடியில் பாத்து தடவினாள்.
நளன் அவளையே பார்த்தான்.
“என்ன லுக்..?”
“கிட்ட வா, சொல்றேன்”
“முடியாது!”
“இங்கரே!”
“என்ன தொரை!”என அவன் முன் நின்றாள்.
அவளின் வெற்று வயிற்றில் முத்தம் வைத்தான்.
அந்த நொடி அவளின் குழந்தை அசைவை பரிசாகக் கொடுக்க, “ஆ!” என்றாள்.
“இங்கரே! என்ன ஆச்சு..?”
“ஒன்னுமில்லங்க குழந்தை அசையுது, பாருங்க நீங்களே”என வயிற்றில் அவன் கையை எடுத்து ஆங்கங்கே வைத்தாள்.
ஒரு இடத்தில் இல்லாமல் அலைந்த குழந்தையை பிடித்தவாறு.
நளனிற்கு அது புது விதமாக இருந்தது. “இன்னைக்கு புதுசா இருக்கு, ஒரு மாதிரி இருக்கு தமயா.”
“ம்ம்ம்! எனக்குமே தான் வலியில்லை ஆனா ஒரு மாதிரி கூசுது, புல்லரிக்குது, அப்பிடியே ஏதோ ஒரு பிரமிப்பு தெரியுது தொரை, குழந்தை வளர ஆரம்பிச்சுட்டு அதான் நல்ல மூவ்மென்ஸ் இருக்கு” என்றாள் வயிற்றில் அவன் கையைப்பிடித்த படியே.
“எனக்கு ஒரு மாதிரி பயமா இருக்கு தமயா, அன்னைக்கு அந்த பொண்ணுக்கு நீ டெலிவெரி பாத்தீயே அப்ப அந்த பொண்ணு கத்துனது எனக்கு பயமா இருந்துச்சு, அந்த மாதிரி தான் வலிக்குமா..? நான் நேரில் அப்ப தான் கேட்டேன் அப்பிடி கத்தி பிரசவத்தில், படத்தில் பார்ப்பதோடு சரி”
“ம்ம்ம்! வலி இருக்கும், ஆனா பயப்புடாதீங்க”என அவனை தன் வயிற்றோடு அணைத்தாள்.
அவன் காது அவள் வயிற்றில் இருந்த போது, உள்ளுக்குள் கடக் முடக்கென்ற தண்ணீர் சத்தம் கேட்டது.
அவனுக்கு ஆசையாக இருந்தது அதை கேட்க, “நம்ம பேசுறது குழந்தைக்கு கேக்குமா..?”
நிமிர்ந்தவன்”இங்கரே! அது எல்லாம் இல்ல, என்னைய அப்பா, உன்னைய அம்மா அப்பிடி தான் கூப்புடனும்” என்றான் வீம்பாக.
“ஹஹஹ!”என அவனை தன்னோடு அணைத்தவள், “தொரை! நம்ம குரல் மட்டும் தான் குழந்தைக்கு கேட்கும், நான் அம்மானு அதுக்கு தெரியும் கூடவே இருக்க குரல், அப்புறம் உங்களையும் கண்டிப்பா தெரியும், நீங்க தான் நைட் தினமும் பிள்ளை கிட்ட பேசாம தூங்குறதில்லையே” என்றாள்.
“ம்ம்ம்! பின்ன என் வாழ்க்கைக்கு அர்த்தத்தை தந்த பௌர்ணமி வெளிச்சம் இது”
“அப்ப யாரு பௌணர்மி..?”
“அது என் பொண்டாட்டி”என புருவத்தை உயர்த்தி சிரித்தான்.
“அவ என்ன அவ்ளோ பெரிய ஆளா…?”
“இல்ல! இல்ல! சின்ன ஆள் தான், ஈஸியா தூக்குற வெயிட் தான்”என அவளை அப்பிடியே தூக்கியவன், நெற்றியில் முத்தம் வைத்து, கட்டிலில் படுக்க வைத்தான்.
இரவு விளக்கைப் போட்டவாறு அவள் அருகில் வந்து படுத்தவன், “இங்கரே! உன் கிட்ட ஒன்னு கேக்கனும்..?”
“ம்ம்ம்! கேளுங்க”என அவன் பக்கம் திரும்பி படுத்தாள், சைடாக தான் படுக்க முடியும் என்பதால்.
“நான் என்ன முடிவு எடுத்தாலும், நீ சரினு சொல்லுவ தானே”
“ம்ம்ம்! அதுல என்ன சந்தேகம்..? இப்ப வரை அப்பிடி தானே இருக்கேன், நீங்க எதையும் சரியா யோசிப்பீங்கனு நம்புறேன்”
“அப்ப சரி, நாளைக்கு ஞாயிறு லீவ். உன் அம்மாவை தம்பியோடு வரச்சொல்லு காலையில். நானும், அக்கா, தர்மனை வர சொல்றேன், உன் வளைகாப்பு பத்தி பேசனும்”
“ஐ! நிஜமாவ..? சந்தோஷமா இருக்கு தொரை, கண்ணாடி வளையல்கள் போடப் போறேன், எப்ப தேதி வைக்கப் போறீங்க..?”
“அத தான் நாளைக்குப் பேசுவோம்”
“ம்ம்ம்!”
இருவரும் தூங்க தொடங்கினர்.
****
காலை பத்து மணி இருக்கும் அனைவரும் வீட்டில் இருந்தனர்.
சொர்ணமும் சபரி, சின்ன மகளோடு வந்திருந்தார்.
தர்மன், மல்லிகா, மரகதம், புவனா, பாண்டியை மரகதம் கூப்பிடவில்லை, நளன் தான் ஃபோன் செய்து அழைத்தான்.
சாமி, லலிதா, பிள்ளைகள் வீட்டிலே இருந்தனர்.
“என்ன மச்சான்! எல்லாரையும் வர சொல்லி இருக்க..?”என கேட்டான் தர்மன்.
சொர்ணமும் சரசு பக்கத்தில் அமர்ந்திருந்தார் ஓரமாக.
சபரி சங்கரோடு சேர்ந்து அமர்ந்திருந்தான்.
தமயா தங்கையும் வந்திருக்க ஜோதியோடு பேசிக் கொண்டு இருந்தாள்.
“தமயாக்கு வளைகாப்பு இந்த மாசமே செய்யலாமுனு பேச தான் வர சொன்னேன்”
“என்ன நளனா அவசரம்..? ஒன்பதில் மெல்ல போட்டுக்கலாம்”என்றார் சரசு.
அதை கேட்ட அனைவருக்குமே அதிர்ச்சி என்றால் தமயாவிற்கு பேரதிர்ச்சி, ‘ஓ! இதான் அந்த முடிவா..?’என யோசித்தாள்.
“நளனா! என்னதுக்குப்பா இப்பிடி எல்லாம் பேசுற?”என்றார் சரசு.
“அண்ணே! என்ன பேசுறீங்க…? ஏன் தனியா போகனும்..?”என கேட்டான் சாமி.
“அதானே மாமா, எங்களுக்கு புரியல” என்றாள் லலிதா.
“இங்க பாருங்க, நான் ஒன்னும் சண்டைப் போட்டு போறோனு சொல்லல, எனக்கு கடை வேலை அங்க தான், தமயாக்கும் வேலைக்கு போறா, ரெண்டுப் பேரும் டெய்லி போயிட்டு வரதுக்கு பக்கத்துலே தங்கிட்டா வசதியா இருக்கும், அது மட்டுமில்ல எங்களுக்கு சில வேலைகள் இருக்கு, அதுக்கு நாங்க அங்க போனா சரியா இருக்கும்”
“அப்பிடி என்ன வேலை மாப்பிள்ளை..?” என கேட்ட பாண்டியிடம்.
“அவசியம் சொல்லனுமா மாமா.?”
“நீ சொல்ல மாட்டேனு தெரியுது”என வாயை மூடினார்.
“சரி மாமா! தமயா இந்த நிலமையில் எப்பிடி தனியா இருப்பா..?”எனக் கேட்டாள் லலிதா.
“நான் அங்க தானே இருக்கேன், ஃபோன் பண்ணா போகப்போறேன், அதோட அங்க ஹாஸ்பெட்டல் பக்கமா தான் வீடு பாத்திருக்கேன்”
“அப்ப வீடு பாத்துட்டு தான் எங்க கிட்ட சொல்றீயாட..?”எனக் கேட்டாள் மரகதம்.
“வீடு தேடினேன், சரியா அமைஞ்சது சரினு அட்வான்ஸ் கொடுத்துட்டேன், இதுல என்ன இருக்கு..?”
“அப்ப நீ தனியா போறதில் முடிவா இருக்க..?”என கேட்டார் சரசு.
“ஆமாம்மா!”
“இது உன் பொண்டாட்டியோட ஆசையாட..?”என்றார் சட்டென்று மாமியாருக்கே உள்ள சந்தேகத்தில் கொஞ்சம் விதிவிலக்கு இல்லாமல்.
“ஏய் தமயா! நீ தான் இப்பிடி எதும் சொல்லி வச்சீயாடி”என கேட்டார் சொர்ணம்.
தமயாவிற்கு கோபம் தான் வந்தது.
“அவளுக்கு எதுமே தெரியாது, இது முழுக்க முழுக்க என் முடிவு, அதை நீங்க நம்புனாலும் சரி இல்லைனாலும் சரி எனக்கும், அவளுக்கும் கவலையில்ல” என்றான் தெளிவாக.
“எதுக்குடா இப்பிடி அவசரமா முடிவு எடுக்குற..? பொறுமையா குழந்தை பிறந்து ஸ்கூலில் சேக்கும் போது போகலாமுல, அதுவரை இங்க அத்த, லலிதா இருக்காங்க, தமயா அம்மா இருக்காங்க பாத்துப்பாங்கள”என்றான் தர்மன்.
“இப்ப என்ன நான் உங்க எல்லாரு கூடவும் சண்டைப் போட்டா போறேனு சொல்றேன், இல்ல உங்க யாரையும் அங்க வரவேண்டாமுனு சொன்னேனா, தங்க கூடாதுனு சொன்னேனா, யாரு எப்ப வேணாலும் வாங்க, நாங்களும் லீவில் வரோம், தங்குறோம்”என்றான்.
“நீங்க இல்லாம எப்பிடி அண்ணே, நாங்க மட்டும் தனியா இருப்பது.”என இழுத்தான் சாமி.
சங்கரும், ஜோதியும் அதே கூறினர்.
“இருக்கனும், உன் பொண்டாட்டி, புள்ளைங்கனு இருந்து தான் ஆகனும், நான் இல்லனா எப்பிடி இருக்குமுனு தெரியனும் அதான் உனக்கு நல்ல வாழ்க்கையா இருக்கும், எனக்கும் சில வேலைகள் இருக்குடா, என் பொண்டாட்டி, பிள்ளைங்கனு இனி வரக் காலத்தில் தனியா வாழ ஆசைப்படுறேன், இதுக்கு அப்புறம் எனக்கு கிடைக்குற ஒவ்வொரு நாளும் கடவுளோடு கொடுப்பினை தான், அத நான் என் விருப்பப்படி வாழ நினைக்குறேன்”என்றான் ஆதங்கமாக.
தமயாவிற்கு கண்கள் கலங்கியது, தொரைக்கு மனதில் இப்பிடி எல்லாம் ஆசை இருக்கிறதா என்று, புரியவில்லை அவளுக்கு.
நளனின் பேசியதில் இருந்து புவனா, “மாமா இத்தனை நாளா நம்ம எல்லாருக்காக தானே வாழ்ந்தார், இப்ப அவரோட விருப்பதை சொல்லும் போது ஏன் தடுக்குறீங்க…? ஏன் இன்னும் அவரு உங்களுக்கு கொடுத்துட்டே இருக்கனுமா..? நீங்க போங்க மாமா மாமியோடு உங்க விருப்பப் படி, நான் வருவேன் அடிக்கடி உங்க வீட்டுக்கு”என்றாள் உண்மையும் கிண்டலுமாய்.
என்றுமே பேசாத நளனின் தந்தை “அவன் ஆசைப்படுறான் சரசு, இப்ப என்ன நம்மளை உதறிட்டா போறான், என் பொறுப்பை அவன் தானே சுமந்தான், இப்ப அவன் புள்ள, பொண்டிட்டினு வாழ நினைக்குறான், வாழட்டுமே, இந்தா பஸ் போது நம்ம போய் பாத்துட்டு வரலாம் நீ பேசாம இரு, ஏப்பா நளனா நீயும், மருமவளும் எப்ப கிளம்புறீங்க.?”
“வளைகாப்பு முடிச்சுட்டு அன்னைக்கே கிளம்பலாமுனு”
முதலில் யோசித்தவர்கள் பிறகு மனம் மாறினர்.
இரவில்…
தமயாவிற்கு ஏனோ உறுத்தலாக இருந்தது, அவனின் முடிவு சரியா..? என யோசித்து அவனோடு பேசாமல் இருந்தாள்.
அறைக்கு வந்ததும் வராதுமாய் நளன்”இங்கரே! ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு..? காலையில் இருந்து”
“உங்களுக்கு தெரியாதா.?”
“தெரியுது, இதான் என் முடிவு தமயா”
“ஏன் தொரை திடீருனு இப்பிடி ஒரு முடிவு எடுத்து இருக்கீங்க..? இதுக்கு நான் தானே காரணம். எக்ஸாம் எழுத, கிளாஸ்க்கு போகனு தானே அங்க வீடு மாத்துறீங்க..?”
“ஆமா!”
“அப்ப நான் தானே காரணம், இது வீட்டில் தெரிஞ்சா என்னைய பத்தி என்ன நினைப்பாங்க தொரை”
“என்ன நினைப்பாங்க..?”
“வீட்டை விட்டு போக என்னோட படிப்பு, என்னோட ஆசை, நான் பொண்டாட்டினு உங்களை மயக்கிட்டேன் இன்னும் என்ன வேணாலும் சொல்லுவாங்க, இது தேவையா…? புள்ளையை பெத்து பாத்துக்காம இது என்ன படிக்கப் போவது அதுவும் டாக்டர்.. இப்பிடி பல கிண்டல் பேச்சு தானே வரப்போது” என கண் கலங்கினாள்.
“இங்கரே!”என அவளை தன்னோடு அணைக்க, வயிறு இடித்தது.
“பாரு புள்ளை கிட்ட அனுமதி வாங்கனும் போல இனி, கட்டி புடிக்க கூட முடியல”என அவளை ஒரு பக்கமாக தன் தோளில் சாய்த்தவன்.
“நீ பரீட்சை எழுதப் போறேனு யாருக்கும் தெரியாது, அப்பிடியே தெரிஞ்சாலும் பிரச்சனையில்ல, அப்புறம் பொண்டாட்டி மயக்கலனா எப்பிடி நான் புருசன் ஆக முடியும்..? நீ பரீட்சை எழுது அடுத்து ரிசல்டை பாத்துட்டு முடிவுப் பண்ணுவோம், கிடைச்சா படி இல்லையா வேலைக்குப் போ, நம்ம தனியா தான் இருக்கப் போறோம்”
“இது சுயநலமா தோணுதே எனக்கு..?”
“என்ன சுயநலம்…? மத்தவங்களை கஷ்டப்பட விட்டுட்டு நான் எனக்கென்னனு போக நினைக்கல, அக்கா, தம்பி, தங்கச்சி எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கையை பாக்குறாங்க, நானும் என் குடும்பத்தை பாக்கப்போறேன். அப்பா, அம்மா இங்க, இல்லனா அங்க இருப்பாங்க பிரச்சனையில்ல”
“எனக்கு என்னவோ ஒரு மாதிரி இருக்கு தொரை, நான் தான் மூலக்காரணமுனு”
“பேசாம தூங்கு”என்றான் வேகமாக, அவனும் படுத்து, அவளை படுக்க வைத்தவாறு.
அடுத்து பேசவே இல்லை. தமயாவின் மனம் கஷ்டமாக, “கோபமா..?”
“இல்ல!”
“நீங்க இல்லனு சொல்றதிலே தெரியுது”
“பின்ன என்ன தமயா, நானும் காலையில் இருந்து எவ்ளோ தான் சமாளிப்பேன் எல்லாரையும், நல்லவனா இருப்பது தப்பு போல, அதனால தானே எல்லாரும் விட்டுட்டு இருக்க யோசிக்குறாங்க, நீயும் அவங்கள மாதிரியே பேசுற.? எது சுயநலம்..? இத்தனை நாள் நான் பொதுநலமா தானே இருந்தேன், இப்ப நான் பொண்டாட்டி பிள்ளைனு யோசிப்பது தப்பா..? பொண்டாட்டி மயக்கிட்டாளானு கேட்டா ஆமா, நான் என்னைய உணர்ந்தது உன்னால தானே, இனி வரும் வாழ்க்கையும் உனக்காக வாழ தோணுது, அதுக்காக தம்பி, அக்கா, தங்கச்சி குடும்பத்தை அம்போனு விடல, என்னால எல்லாரையும் பாத்துக்க முடியும் எங்க இருந்தாலும் அதுக்கான மனசு என் கிட்ட இருக்கு”என்றான் கண்கள் கலங்கினாலும் வெளியிடாமல் விட்டத்தைப் பார்த்தவாறு.
தமயாவிற்கு கட்டுப்படுத்த முடியவில்லை கண்ணீரை, அவன் மார்பில் தலை வைத்து, “சாரி!”என அழுதாள்.
அவளின் கண்ணீர் பட, அதை துடைத்தவன்”புள்ளைக்கு வலிக்கப் போகுது இப்பிடி அழுகாத.?”
“அப்ப நான் அழுதா பிரச்சனையில்ல, பிள்ளைக்கு வலிக்குமுனு சொல்றீங்க..?” என முறைத்தாள்.
“நீ அழுதா தான் நான் இருக்கேன்ல தொடைக்க”என சிரித்தான் மெல்ல பற்கள் தெரியாதவாறு.
“தொரை! ஏன் இப்புடி என்னைய கொல்லுறீங்க உங்க அன்பால, காதலால எனக்கு மூச்சு முட்டுது, முடியல உங்களுக்காக நான் என்ன செஞ்சேனு தெரியல செய்யப் போறேனு தெரியல ” என அவனின் முகத்தில் கன்னா பின்னாவென்று முத்தத்தை வைத்தாள்.
“எனக்காக நீ ஒன்னும் செய்ய வேண்டாம், நல்லா படிச்சு பரீட்சை எழுதுங்க டாக்டரம்மா”என்றான் அவளின் விழிகளை நோக்கியவாறு, முகத்தை தன் அருகில் ஏந்தி.
“என்னால முடியுமா.?”
“கண்டிப்பா!”
“ம்ம்ம்! தொரை, நீங்க என் ஆசையை உங்க ஆசையா மாத்திகிட்டு என்னைய வளைக்குறீங்கனு புரியுது, தெரியல! நடக்குதானு, ஆனா நீங்க என் கூட ரொம்ப நாள் இருக்கனும் அது போதும் எனக்கு.”என அவனை விடாமல் அவன் கையை தன் வயிற்றில் இழுத்து வைத்தவாறு கண்களை மூடினாள்.
நளனும் குழந்தையின் அசைவில் கைகளை நெளிய தன் மனைவி நெற்றியில் முத்தம் வைத்துக் கொண்டே கண்களை மூடினான்.
****
அன்று தமயாவின் வளைகாப்பு.
வீட்டிலே உறவினர்கள், நண்பர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
தமயா தன் அறையில் கல்யாணப் புடவையை கட்டிக் கொண்டிருந்தாள்.
லலிதா கட்டி விடுகிறேனு சொல்லியும் நானே கட்டிகிறேன் என அவளை அனுப்பி விட்டாள்.
கண்ணாடியை பார்த்து மெதுவாக கட்டத் தொடங்கினாள்.
“இங்கரே! அதான் லலிதா கட்டி விடுறேனு சொன்னுச்சுல, தனியா கஷ்டப்படுற..?”என கேட்டுக் கொண்டே நளன் கிளம்பினான்.
“அதுவா! அதான் தனி வீடுப் போறோமே சொல்றேன்..”என சிரித்தாள்.
“வீட்டு வேலையா..?”
“செய்ய மாட்டீங்களா தொரை..?”
“மாட்டேனு சொன்னா விடவா போற, ஆனா நமக்கு மட்டும் தான் தெரியனும், சரியா..?”
“ஏன்..?”
“என்ன இருந்தாலும், நான் யாருனு வெளியில் ஒரு வட்டம் இருக்குல பொண்டாட்டி, அதுக்கு தான் சொல்றேன்”
“ம்ம்ம்! கீழே விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டலனு காமிக்கனும்”
“ம்ம்ம்! உனக்கு தேவை எதுவோ, அது எல்லாம் நடக்கும், போதுமா, இப்ப கிளம்பி வா” என அவளை நெற்றியில் முட்டி கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு,
“இது கீழே முடியாதுல, அதான்”என மறுபடியும் கன்னத்தில் முத்தம் வைத்தான்.
“ஆனா வளையல் போட்டு விடுறீங்களா.?”
“அதான் கீழே போட்டு விடுவாங்கள.?”
“நீங்கப் போடனும்”
கீழே நளனை அழைக்கும் குரல் கேட்டது.
“நானா…? நீ வா முதலில் கீழ.. நேரமாகுது”என வேகமாக சென்றான்.
தமயா முகத்தை சுளித்து விட்டு, கிளம்பவும் மல்லி வந்து அழைத்து சென்றாள்.