“அம்மாடியோவ்! வேணா வேணாம்”என அலறினாள் மல்லி, அவளுக்கு பிரசவம் என்றால் சாவு மாதிரி பயம்.
***
மாமியாரை சபரி மூலம் அழைத்து வர செய்தான் நளன், வீட்டின் பக்கவாட்டு பகுதிக்கு.
கூட தர்மனும் நின்றான். “என்ன சேதி மாப்பிள்ளை வர சொன்னீங்கனு புள்ள சொன்னான்..?”என சொர்ணம் மெதுவாக கேட்டார்.
சபரி கையில் ஒரு கவரை கொடுத்து அம்மா கையில் கொடுவென கண்ணைக் காட்டியவன், “இதை நீங்க வளைகாப்பில் தமயாக்கு போட்டு விடுங்க”என்றான்.
அவர் பிரிக்க, அதில் இரண்டு தங்க வளையல்கள் இருந்தது.
“இது!”
“நான் வாங்கினது தான், இரண்டும் சேர்த்து ரெண்டு பவுன் கொஞ்சம் கூடுதல். நீங்க போடுங்க உங்க பொண்ணுக்கு”
மாமியாரிடம் பெரிதாக பேசியதில்லை நளன், வந்தால் ‘வாங்க!’ போகும் போது
‘போயிட்டு வாங்க, வரேன்’இவ்ளோ தான். இன்று தான் முழுமையாக மூன்று வார்த்தைகள் சேர்த்து பேசுகின்றான்.
“மாப்பிள்ள! உங்க மனசு போல நீங்க என் பொண்ணுக் கூட ரொம்ப வருஷம் வாழுவீங்க, ஆனா இத நான் வாங்கிட்டுப் போய் போட்டு விட்டா அவ முகத்துல சந்தோஷம் வராது, எப்பிடி வாங்கின, ஏதுனு யோசனை தான் வரும், நீங்க கொடுத்ததுனு தெரிஞ்சா திட்டுவா, அவள பத்தி உங்களுக்கே தெரியும், வேணாம் மாப்பிள்ளை நீங்க வச்சிருந்து கொடுங்க”என்றார் பிடிவாதமாக.
இளம் வயதிற்கே உரிய துடுக்கில் சபரி”மாமா! நீங்க தானே பாத்து வாங்கிருக்கீங்க, நீங்களே போட்டு விடுங்க அக்காக்கு”என்றான்.
“நீ சின்னப் பையன் புரியாம பேசுற, பேசாம இரு”என்றான் நளன், அனைவர் முன்னிலையில் எப்பிடி போடுவதென்று, தனி அறையில் தமயா கால் பிடித்து விட சொன்னால் கூட செய்ய தயங்காதவன், அனைவர் முன்னிலையில் இதை போட்டு விட தயங்கினான்.
“மச்சான்! என்னடா தாலிக் கட்டி பிள்ளை பொறக்கப் போகுது, இப்ப போய் வளையல் மாட்டிவிட வெட்கப்படுற, அது எல்லாம் நீயே போடு, வா போகலாம்” என உள்ளே அழைத்துச் சென்றான் தர்மன்.
இவற்றை மேல் அறையில் இருந்து பார்த்து விட்டு தான், தமயா, மல்லி கீழிறங்கியது பேசி, கிண்டல் செய்தவாறு.
நளனும் உள்ளே வந்ததும், நடந்து வரும் மனைவியை கண் எடுக்காமல் பார்த்தான்.
தமயா கல்யாணப் புடவையில் அளவான அலங்காரத்தோடு, கழுத்தில் தாலிச்செயின், நளன் வாங்கி தந்த சின்ன டாலர் செயின் மட்டுமே போட்டிருந்தாள்.
காதில் சிறிய ஜிமிக்கி, கண்ணாடி வளையல் பேருக்கு ஒன்று.
அந்த எளிமையிலும் மிகுந்த அழகாக தெரிந்தாள், காரணம் பெண்ணிற்கு ஆபரணமின்றி விலை மதிக்க முடியாத அழகை தரும் ஒரு பொன் நகை தாய்மையின் புன்னகை மட்டுமே.
அந்த தாய்மை பதவியை அடையப் போகும் தமயாவின் கன்னங்கள் மிளிர்ந்தது பௌர்ணமி நிலவாக.
அவனை கடந்து செல்லும் போது, மனம் அவளோடு ஓடியது பிடிமானம் இன்றி. இங்கரே எப்பிடி பட்ட வசீயகாரினு புரியாமல் தொரையின் மனசு வசியத்தில் மாட்டியது.
தமயா நாற்காலியில் அமரவும் வரிசையாக நலுங்கு முறைகள் தொடங்கியது.
சந்தனம், குங்குமம், பூ இறுதியில் கண்ணாடி வளையல்கள் அனைவரும் ஒவ்வொன்றாக முறையை செய்ய ஆரம்பித்தனர்.
சாதரணமான முகம் சந்தனத்தில் சாலையாக மாறியது.
தூரமாக நின்று வேடிக்கைப் பார்த்த நளனை அவ்வப்போது தமயாவின் விழிகள் தீண்டி மீண்டது.
முடிந்தது என திருஷ்டி கழிக்க தொடங்க, சொர்ணம் தர்மனை கண் காட்டினார்.
தர்மனும்”ஏ மச்சான்! இங்க வா, வந்து தங்கச்சிக்கு அதை போட்டு விடு” என்றான்.
“என்னதுங்க கொழுந்தனாரே..?” என கேட்டார் மரகதம்.
“பாக்க தானே போறீங்க”என சிரித்தான் அவன்.
நளனிற்கு கூச்சமாக இருந்தாலும், இது தமயாவே மாடியில் ஆசையாக கேட்டது தானே என மனசு நினைவுப் படுத்த, சற்று தைரியம் வந்து, தமயா அருகில் சென்றான்.
மல்லி சந்தனத்தட்டை எடுத்து நீட்டினாள். “இந்தா அண்ணே! நாங்க மாடியில் இருந்து பாத்தோம், நீயும் அத்தையும் பேசியதை”என நக்கல் அடித்து சிரித்தாள்.
நளன் தமயாவை பார்க்க, கண்களால் ‘ஆமாம்’ என சந்தனம் வைக்க கையை நீட்டினாள்.
மெல்ல சிரித்தவன், கன்னம், கை என சந்தனத்தை தடவினான். பிறகு குங்குமம், பூவை தலையில் போட்டதும்.
தன்னிடம் இருந்த அந்த வளையல்களை எடுத்து மாட்டிவிடத் தொடங்கினான்.
அதை கண்டவர்கள் தங்க வளையல் என முணு முணுத்தனர்.
லலிதா”மாமா! வளையல் புள்ளைக்கா, இல்ல தமயாக்காகவா..?”எனக் கேட்டு சிரித்தாள்.
“ரெண்டுப் பேருக்கும் தான், அவங்க தனி தனியா இல்லையே லலிதா”என கூறியப் படி வளையல் போட்டவன், கூடுதல் தைரியம் வர, கண்ணாடி வளையல்களை எடுத்து மாட்டி விட்டான்.
தமயாவிற்கு அந்த தருணமே பொக்கிஷப் படமாக இருந்தது, அதை நனவாக்க சபரி கிட்ட கண் காட்டினாள் ஃபோட்டோ எடுவென்று.
தங்கமும், நதியாவும் குடும்பத்தோடு வந்திருந்தனர்.
சபரியும் அவளோட ஃபோனை வாங்கி ஃபோட்டோ எடுத்தான், நளன் தமயாவை எழுப்பி நிற்க குடும்பமே நின்று ஃபோட்டோ எடுத்தது.
அனைத்தும் முடிந்து புது வீட்டிற்கு அழைத்து சென்றனர்..
புது வாடகை வீடு, இரண்டு அடுக்கு கட்டிடத்தில் கீழ் தளத்தில் இருந்தது.
அது காளி- ஜெயா வீட்டின் பக்கத்திலே அமைந்திருந்தது.
அவர்களை நளன் அழைத்திருந்தமையால், வந்து ஆசிர்வதித்தனர்.
அவரும் சந்தோஷமாக போட்டுவிட்டார். அவர்களை மற்றவர்களுக்கு “பக்கத்து வீட்டினர், எனக்கு முன்னாடியே தெரிந்தவர்”என நளன் அறிமுகப்படுத்தினான்.
காளி வீடு தனி வீடு அருகில்.
சொர்ணம் கடைசி மாதத்தில் வந்து தங்குவதாக கூறிவிட்டு கிளம்பினார்.
மற்றவர்களும் கிளம்பினர்.
****
இரவு…
நளனும், தமயாவும் மட்டுமே அந்த வீட்டில் இருந்தனர்.
இரண்டு அறைகள், ஹால், அடுப்படி, சாமி அறைக்கு பதிலாக சிறிய அலமாரி, என நளன் ஏற்கனவே அனைத்தையும் ரெடிச் செய்து வைத்திருந்தான்.
“ஏங்க தொரை! சின்ன வீடா இருந்தாலும் சொந்த வீடுனா ஒரு சந்தோஷம் தான் இல்லையா…? அம்மா வீட்டிலும், நம்ம வீட்டிலும் தெரியும் ஒரு உரிமையான உணர்வு, இந்த வீட்டில் ஒட்டவே இல்லை அதான் உணர்வு வரல”என்றாள்.
ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தப்படி.
வீட்டின் கதவை மூடிட்டு திரும்பியவன், “ம்ம்ம்! உண்மை தான், எல்லாம் சரியா நடந்தா சொந்தமா வீடே வாங்கிடலாம், கவலைப்படாத”என அவள் அருகில் வந்தான்.
“தூங்கப் போகலமா…?”
“ம்ம்ம்!”
“சரி, வா”என அவளின் கையைப் பிடித்தான் எழுவதற்கு.
“ம்ம்! உகும்!”
“என்ன தமயா.?”
“என் ஆசை எல்லாம் நிறைவேறனும், அதனால இப்ப இருந்து ஸ்டார்ட் பண்ணுங்க”
சிரித்தவன்”சொல்லு!”என்றான்.
இரு கைகளையும் நீட்டி”தூக்கிட்டுப் போங்க”
தலையை குலுக்கியவன், தமயாவை மெல்ல இரு கைகளிலும் தூக்கிட்டு படுக்கும் அறைக்குள் சென்று, கட்டிலில் அமர வைத்தான்.
“ம்ம்ம்! சூப்பர் தொரை”
“என்ன சூப்பர்..?”
“உடனே செஞ்சுட்டீங்க”
“ம்ம்ம்!”என மட்டுமே சொல்லிவிட்டு, ஹாலிற்கு சென்று தண்ணீர் எடுத்துட்டு வந்து பெட் ரூமையும் சாற்றினான்.
“நம்ம வீட்டில் தான் யாருமே இல்லையே தொரை, அப்புறம் ஏன் சாத்துறீங்க..?”
“அது என்னவோ பழகிட்டு விடு”
“ம்ம்ம்! காலையில் இருந்து நடந்ததில் டயர்டு ஆகிட்டு தொரை”என கால்களை ஆட்டினாள்.
“தொரை!”
“ம்ம்ம்!”
“கால் வலிக்குது!”என அவனை தலை சாய்த்துப் பார்த்தாள்.
“இது ஆசையா, இல்ல கால் வலியா..?”
“ம்ம்ம்! கால் வலியால் வந்த ஆசை தொரை”
“இங்கரே! நீ இருக்க பாரு, சரியான ஆளு, எப்பிடி எல்லாம் பேசுற தெரியுமா..?”
“என் செல்ல தொரைல, ப்ளீஸ். உண்மையில் கால் வலிக்குது, ஓ! பொண்டாட்டி கால் புடிக்க கூடாதா..?”
“யாரு சொன்னா..? வரேன் இரு”என அவள் எதிரில் வந்தமர்ந்தவன், கால்களை எடுத்து மடியில் வைத்து மெதுவாக அமுக்க ஆரம்பித்தான்.
“ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு தொரை, இங்க”
“புது இடமுல, போக போக மாறிடும்”
“ம்ம்ம்!”
“இங்கரே! நாளையில் இருந்து காலையில் சமையல் மட்டும் நம்ம சேந்து பண்ணலாம், பாத்திரம், வீடு கூட்ட நம்ம கடைக்கு வேலைக்கு வர ஒரு அம்மா வரும், தினமும் இரண்டு மணி நேரம். சரியா..? நீ வேலைக்குப் போயிட்டு, கிளாஸ் போயிட்டு வா, நைட் நான் வந்ததும் சேந்து சமைச்சுகலாம்”
“அப்பிடியா…? என் கிட்ட சொல்லவே இல்ல, நானே பாத்துப்பேன் எதுக்கு ஆள்”
“குழந்தை பிறந்தா தேவைப்படும் அதான் இப்பவே வரட்டுமுனு ஏற்பாடு பண்ணிட்டேன், அவங்க நம்ம கடைக்கு வரதால பிரச்சனையில்ல, உனக்கு எதும் வேணுனா உடனே நட்டுக்கு ஃபோன் பண்ணு வந்துடுவான்”
“ம்ம்ம்!”
“அப்புறம் இந்த மாசம் மட்டும் வேலைக்குப் போ, அடுத்த மூன்னு மாசம் லீவ் போட்டுக்கலாம..?”
“ம்ம்ம்!”
“வேற, அவ்ளோ தான், நல்லா படி சரியா?”
“ம்ம்ம்!”
நளன் அவளை பார்த்தான் அதுவரை கால்களை அமுக்கியவாறு, பேசியவன்.
“என்ன…?”என்றாள் புருவத்தை உயர்த்தி.
“ம்ம்ம்! மட்டும் சொல்றீயேனு பாத்தேன்”
“நீங்க தான் இப்ப எனக்கு வாத்தியார மாறீட்டீங்க தொரை”என சிரித்தாள்.
இரு கைகளை நீட்டி அருகில் அழைத்தாள், நளனும் எழுந்து அருகில் செல்ல, அவனை இடுப்போடு கட்டிக் கொண்ட தமயா”ஐ லவ் யூ தொரை” என்றாள்.
அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன்”ம்ம்ம்! நானும் சொல்லனுமா.?”
“வேணாம்! வேணாம்! நீங்க தான் ஒவ்வொரு செயலிலும் காதலை சொல்றீங்களே, அதுப் போதும், வார்த்தைகளாய் சொன்னால் அதுல வேல்யூ இருக்காது”
“அப்ப நீ மட்டும் சொல்ற..?”
அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், “போங்க தொரை! இப்பவும் நான் டீச்சர் நீங்க மழலை தான், ஆனா உங்க பக்கத்தில் நான் டால் அடிக்குறேன் காதலில். என்ன செய்றது அதான் இப்பிடி சொல்லி அதை சமன் செய்றேன் தொரை”என அவனை கட்டிக் கொண்டாள்.
“இங்கரே! இங்க என்ன போட்டியா நடக்குது, யாரு பெருசுனு, நம்ம மனசுல இருப்பது நம்மளை செய்ய வைக்குது”
“அதான் தொரை உங்க மனசு மாதிரி என் மனசு யோசிக்கலையே”
“ஏன் யோசிக்கல.? கல்யாணத்தின் முதல் நாள் பாத்த நீயாயிதுனு நினைக்குற அளவுக்கு யோசிக்குது உன் மனசு, அதுவே எனக்கு சந்தோஷம், இப்ப நம்ம வாரிசு வரப்போது, அது ஒன்னு போதாத நமக்கு தமயா”
“ம்ம்ம்! உங்களை போய் வேணானு சொன்னேனு இப்பவும் ஃபீல் பண்ணுறேன் தெரியுமா.?”
அவளை நிமிர்த்தியவன் அருகில் அமர்ந்து, தன் மார்பில் சாய்த்து”சரி! பழசை பேசாத, தூங்கு”
“ம்ம்ம்!”
***
தினசரி வாழ்க்கை கால அட்டவணைப்படி நகர்ந்தது.
தமயாவின் எட்டாவது மாதத்தின் இறுதியில் நீட் தேர்வு வந்தது.
தேர்விற்கு கிளம்பும் போதே மனதில் பயம், பரீட்சையை நினைத்து.
நளன், காளி, ஜெயா ஆறுதல் கூறி அனுப்பினர்.
“தமயா! நல்லா தெரிஞ்சா மட்டும் அட்டென்ட் பண்ணு, இல்லனா கை வைக்காத, நெகட்டிவ் மார்க் இருக்கு புரியுதா”என காளி அறிவுறுத்தினார்.
தேர்விற்கு அனுப்பிவிட்டு வெளியில் காத்திருந்தவனுக்கு தமயா நல்ல படியாக எழுத வேண்டும் என்ற பயம் கடவுளை வேண்ட வைத்தது.
மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆக, அதே பயத்தோடு நின்றான் நளன்.
தேர்வு முடிந்து வெளியில் வரத் தொடங்கினர், நளன் ஆவலாக காத்திருந்த நேரத்தில் தமயா மெல்ல நடந்து வந்தாள்.
அவளை கண்டதும் வேகமாக சென்று கைப்பிடித்து அழைத்து வந்தவன், “ரொம்ப நேரம் உட்காந்தியே இருந்தது கஷ்டமா இருக்குதா..?”
“தமயாவும் பரீட்சை தான் எழுதிட்டு வரா டாக்டர்”என்றான் நளன், அவன் பதிலில் காட்டம் தெரிந்தது.
அது நன்கு விளங்கியது குணாக்கு.
“சாரி மிஸ்டர் மணவாளன், தமயாவை மட்டம் தட்டியது தப்பு தான், ஆனா இதை நான் எதிர்ப்பார்க்கலை”
“ச்சே! ச்சே! சொல்ல போனா உங்களுக்கு நான் நன்றி தான் சொல்லனும், நீங்க அப்பிடி மட்டம் தட்டலனா எனக்குமே இவளை டாக்டர் ஆக்க யோசனையே வந்திருக்காது”
“உங்களை மாதிரி எனக்கு மனசில்லைனு புரியுது, இதுவே எனக்கு சரியான பதிலடியா தோணுது, சாரி! தமயா”
“அய்யோ குணா! எதுக்கு சாரி எல்லாம், நம்ம படிக்கும் போதே அப்பிடி தானே, சொல்ல போனா உங்களுக்கு போட்டிக்காகவே நான் படிப்பேன்”என சிரித்தாள்.
“ம்ம்ம்! கங்கிராட்ஸ் ஃபார் பியூச்சர் டாக்டர்”
“வெயிட்! இன்னும் ரிசல்ட் வரட்டும்”
“இந்த எக்ஸாம் எழுதுற வரை தான் உனக்கு இது எட்டா கனி தமயா, சொல்ல போனா உன் கனவையே உன்னோட புருசன் கையில் கொடுத்துட்டார், அதை கையில் புடிச்ச நீ கலைய விட்ருவீயா என்ன..? நனவாக்கிடுவனு நம்புறேன். ஆல் தி பெஸ்ட். நான் கிளம்புறேன். பை மணவாளன், யூ ஆர் கிரேட்”என கையை கொடுத்தான்.
குணா சென்றதும், நளன் தமயாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.
அவர்கள் எதிர்ப்பார்க்க வில்லை என்று சொல்ல முடியாது, ஆனால் சொல்லி தானே ஆகனும் என்ற எண்ணம் இருந்தது, அது தானாக தெரிந்து விட்டது சங்கர் மூலமாக என அமைதியாகினர், அன்று இரவே அவர்களை தேடி வந்து சேர்ந்த குடும்பத்தை கண்டு.
சரசு பேசுவதை நிறுத்தவே இல்லை, “ஏன்டா! தானே ராசா தானே மந்திரினு ஆடுறீயா..? இப்ப தானே தெரியுது எல்லாம் இவ போட்ட மந்திரமுனு. இதுக்கு தான் தனியா வந்தீயா.? என்னத்துக்குடா இவளுக்கு படிப்பு, புள்ளப் பொறந்தா யாரு பாக்குறது.? சரி! அதுக்கு பால் கொடுக்கனும், இன்னும் என்னவோ இருக்கு..”என அடுக்கிக் கொண்டே போனார்.