‘மாவு அரைக்கத் தெரியாதது ஒரு குத்தமா..? ஏதோ காஷ்மீர் தீவிரவாதி ரேஞ்சுக்கு ஆளாளுக்கு எகிறிக் குதிக்குறாங்க, அதும் மாமியார் சேமியா நான் என்னமோ அவங்க வீட்டு அரிசி, பருப்பை எடுத்து வேணுமுனு மாட்டுத் தொட்டியில் போட்டக் கணக்கா பேசுது, அய்யோ! அய்யோ! ஆண்டவா..’என புலம்பிக் கொண்டே நடந்தாள் தமயா.
மனமோ’அடியேய்! மாவு அரைக்க தெரியாதது குத்தமில்ல, ஆனா அத தெரியாதுனு சொல்லி எப்பிடினு கேட்டு அரைச்சிருக்கனும், அத விட்டுட்டு அரிசி, பருப்பை எடுத்து வேஸ்ட் பண்ணா வீட்டுப் பெரியவங்க சும்மா இருப்பாங்களா..? ஏன் உன் அம்மா மட்டும் அத பாத்து இருந்தா ஆடி அவரைக்காய் பறிச்சு இருக்கும்’என்றது.
‘வந்தா எனக்கு என்ன..? அந்த தொரையும் அங்க தானே இருந்தாரு, ஒரு வார்த்தை சரி தெரியாம பண்ணிட்டானு சொன்னா என்ன தலையை எடுத்துடுவாங்களா அம்மா, அக்கா, தம்பி பொண்டாட்டி எல்லாம்’ என சீறினாள்.
‘நேத்து ரொம்ப எதிர்ப்பார்த்தீயேனு சொன்னேன்’என மனம் எட்டிப் பார்த்தது.
‘அது நேத்து, ஏதோ வேலைக்குப் போக கேட்டாரே, போயிட்டு வரேனு சொல்லாம வந்துட்டேனு உறுத்தியது, ஆனா இன்னைக்கு யார் கிட்டையும் சொல்லல, என்னதுக்கு சொல்லனும்..? தேவையே இல்ல, சாப்பிடாம போறாளேனு ஒருத்தர் கேக்கலை, இந்த தொரையும் தான்..’என பின்னால் திரும்பவே இல்லை, புல்லட் சத்தம் நெருங்கி வந்தது.
‘ம்ம்ம்! உனக்கு சப்போர்ட் பண்ணா புல்லட்டை எதிர்ப்பார்ப்ப, இல்லனா திரும்பி பார்க்க மாட்ட.. நீயும் சுயநலவாதி தான் தமயந்தி’என்றது மனம்.
‘ஆமா! இப்ப என்ன..? நான் சுயநலவாதியா இருந்திருந்தா எப்பிடியோ வாழ்ந்திருப்பேன், விட்டுக் கொடுத்ததால் தான் இப்ப வெறும் வயித்தோடு நிக்குறேன்’என கண் கலங்கியது.
அவளை கடந்து புல்லட் சென்றது. அவளோ அவனை திரும்பியும் பார்க்கவில்லை, நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
கடந்து சென்றவன் புல்லட்டின் கண்ணாடி வழியே தன்னை பார்க்காத மனைவியை பார்த்தவாறே சென்றான்.
***
தமயா மருத்துவமனையில் நுழையும் போது அருகில் இருந்த டிபன் கடை கண்ணில் பட்டது.
‘எப்பிடி சாப்பிடாம வேலைப் பார்க்க முடியும்..?’என யோசித்தாள்.
தன் கைப்பையின் உள்ளுக்குள் இருந்த ஜிப்பில் தான் பணம் வைத்திருப்பாள். அதில் தேடினாள்.
நூறு ரூபாய் இரு தாள்கள், ஒரு ஐநூறு ரூபாய் மட்டுமே இருந்தது, சில சில்லரைகள் கிடந்தது.
கடைசி மாதம் சம்பளம் வரை அம்மா வீட்டில் கொடுத்து விட்டாள்.
இது அவசரத்துக்காக போட்டிருந்தது, இந்த மாத சம்பளம் வரும் வரை இது தான் பஸ் டிக்கெட்டுக்கு ஆகும்.
இப்ப சாப்பாடு வாங்கினால் செலவாகி விடும் என எண்ணியவள், மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.
தங்கமும், நதியாவும் காலை உணவை தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“வாடி தமயா! என்ன சோகமா தெரியுற..?”என கேட்டாள் தங்கம்.
“ஒன்னுமில்ல!”என தன் கைப்பையை ஓரமாக வைத்தவள், ரெஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டாள்.
“தமயா! உனக்கு ஒரு கவர் கொடுத்துட்டுப் போனாங்க, இந்தா”என நதியா எடுத்து ஒரு பையை நீட்டினாள்.
“எனக்கா..? யாரு கொடுத்தா..?”
“யாருனு தெரியலடி, ஒரு பையன் டிசர்ட், பேண்ட் போட்டு இருந்தான், இருபது வயசு தான் இருக்கும்.”
அவர்கள் சாப்பிட்டு முடித்ததால், எழுந்து கைகழுவ சென்றனர்.
நாற்காலியில் அமர்ந்தவள், யாராக இருக்கும்..? என யோசித்தவாறே, பையை பிரித்தாள்.
இரண்டு டிபன் பாக்ஸ் இருந்தது, ஒரு அடுக்கு மட்டுமே உள்ள ஒரு பாக்ஸ், இரு அடுக்குகள் கொண்ட மற்றொரு டிபன் பாக்ஸ்.
முதலில் தனியாக இருந்ததை திறந்துப் பார்த்தாள், அது இட்லி பொடியோடு காட்சியளித்தது.
அடுத்ததை திறந்துப் பார்த்தாள் லெமன் ரைஸ், ஊறுகாய் இருந்தது மதியத்திற்கு.
தமயாவிற்கு இது அந்த தொரையாக இருக்குமோ என சந்தேகம் வந்தது..
மனம்’ஏன் அவருக்கு வேற வேலை இல்லை பாரு..’
‘வேற யாரு நமக்கு அனுப்ப போறா..? அந்த வீட்டில் இந்தளவு யார் முயற்சிக்க போறாங்க.?’
இரண்டு அடுக்கின் அடியில் திறந்தவளுக்கு ஒரு பேப்பர் இருந்தது. பிரித்துப் படித்தாள்.
“பேஷ்ண்ட் பக்கத்தில் மயங்கி விழுந்துடாம இருக்க சாப்பாடு ரொம்ப முக்கியம், கோபமோ வருத்தமோ சாப்பாட்டில் காட்டக்கூடாது, சாப்புடு.”
அதை படித்தவளுக்கு முகத்தில் மாறுதல் வந்தது, அதில் லேசான சிரிப்பு எட்டிப் பார்த்தது ஆனாலும் அங்க பேச மாட்டாரோ..? என தோன்றியதால், அதே பேப்பரில், அடியில் எழுதினாள்.
“ரொம்ப தேங்க்ஸ், நான் மயங்கி விழாம இருக்க சாப்பாடு கொடுத்து விட்டதுக்கு,
கோபம், வருத்தம் வரக் காரணம் இல்லாமல் இல்லை, அந்த இடத்தில் எனக்காக பேசவும் யாரும் இல்ல, எதிர்ப்பார்க்க மாட்டேன் இனி.”
“நீயா கேக்குற இதை, நாங்க சமையலை பத்தி பேசினாலே திட்டுவ, வீட்டுலையும் அதே செய்றீங்க இங்கயும் அதே பேசுறீங்கனு..”
“ஆமாக்கா! எல்லாம் என் நேரம், நீங்க சொல்லுங்க மொதல”
“ம்ம்ம்! எந்த கிளாஸ்ல அரிசி எடுக்குறீயோ அதே கிளாஸ்ல உளுந்து எடு. அரிசி நாலு கிளாஸ்னா கருப்பு உளுந்து ஒரு கிளாஸ். அவ்ளோ தான். ஆனா வெள்ள உளுந்து தான் மூன்னு கிளாஸ் அரிசிக்கு ஒரு கிளாஸ் உளுந்துப் போடு. நல்லா ஊறனும் பொது பொதுனு தண்ணியை இழுத்துகிட்டு, கொறஞ்சது மூன்னு மணி நேரமாச்சும். அவ்ளோ தான் மொதல உளுந்தப் போட்டு மிருதுவா வரும் வரை அரைச்சுடு, அடுத்து அரிசியை போட்டு ரவா பதத்துக்கு கொஞ்சம் நைஸா அரைச்சுக்கோ. ஒரு தடவை அரைச்சா உனக்கே புரியும். வெந்தயம் போட்டுக்கோ ஒரு புடி. ஒரு கை அளவா உப்பு போட்டு கரைச்சு வை புளிச்சுடும்.”
“ஓ! இவ்வளவு இருக்கா. சரி அக்கா” என மண்டையை ஆட்டினாள்.
தங்கம்”என்னடி, காலையில் மாவு தான் உன் சோகத்துக்கு காரணமா..?”
“ம்ம்ம்!”என நடந்ததைக் கூறினாள்.
“பாருடி! புருசன் பூரிக்கு மாவு எல்லாம் பிசைஞ்சுக் கொடுத்து இருக்கார்.”என நதியாவும் கிண்டல் செய்தாள்.
“நான் திட்டு வாங்கியதை சொன்னா, நீ மாவு பிசைஞ்சதை பத்தி பேசிட்டு இருக்க..”
“அடியேய்! எது மனசுக்கு கஷ்டமா இருக்கோ அதையே நினைக்காத, நடந்ததில் எது இதமா இருக்கோ அதப் பத்தி யோசிச்சு சந்தோஷப்படு”என்றாள் தங்கம்.
“ம்ம்ம்! நேரமாகுது நான் கிளம்புறேன்.”
“அப்ப காலையில் வந்த கவர் உன் தொரைக் கொடுத்து அனுப்பியதா…?”
“ம்ம்ம்!”என அடுத்து பேசுவதற்குள் தமயா எழுந்து அந்த கவரோடு எஸ்கேப் ஆனாள்.
“தங்கம்! இவ வீட்டுக்காரரை பாக்கனும் ஒரு நாள்”என்றாள் நதியா.
“ஏன் நீ பாத்து என்ன சொல்ல போற..?”
“இல்லடி! இவளுக்கு ஏன் புடிக்கலனு தெரிஞ்சுகலாமுல”
“இவளுக்கு அழகு முக்கியமில்லைடி, வயசு தான் பிரச்சனை. அதுவும் உண்மை தான்டி. அவருக்கு நாற்பத்தைந்து. கொஞ்சம் கேக்கவே சங்கடமா தான் இருக்கு”
“ம்ம்ம்!”
****
தமயா வீட்டிற்கு சென்றதும், அரிசி, உளுந்து ஊற வைத்தாள்.
இரவு உணவுக்கு என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டு நின்றாள் அடுப்படியில்.
சரசு”ஏம்மா! காலையில சாப்பிடாம போயிட்டீயா.? புவனா சொன்னுச்சு, குடும்பம்னா இப்பிடி ஏதாச்சும் கூட, கொறச்சு நடக்கும் தான் அதுக்காக வயித்த காயப் போடக் கூடாது. சரியா..?”என்றார்.
தமயா தலையை அசைத்து “சரிங்கத்த!”என்றாள்.
மனதில்’இவங்க கொஞ்சம் நல்லவங்க தான் போல’என எண்ணினாள்.
“சரி! அரிசி உளுந்து ஊற வச்சு இருக்கீயா..?”
“ம்ம்ம்!”
“சரி! சாப்புட்டு முடிச்சுட்டு ஒன்பது மணிக்கு அப்புறம் அரைச்சு வை சரியா இருக்கும்.”
“ம்ம்ம்! சரிங்கத்த”
அவர் சென்றதும், ‘இன்னைக்கு பத்து மணிக்கு மேல தான் நீ தூங்கப் போற தமயா செல்லம்’என நினைத்து நொந்தாள்.
சங்கர்”ஏய்! நீயே சொல்லுடி பெரியப்பா கிட்ட..”
“இருடா சொல்றேன்”என்றாள் ஜோதி.
தமயந்தி அவர்கள் சத்தம் கேட்டு வெளியில் வர, ஜோதி ஃபோனில் இருந்தாள், அது கனிகாவின் ஃபோன் தான்.
“ஹலோ பெரியப்பா!”
“என்னடாம்மா!”
“அது நைட்டுக்கு எங்களுக்கு பரோட்டா வேணும்..”
“பரோட்டாவ..”என்றான் ஒரு மாதிரிக் குரலில்.
“ப்ளீஸ் பெரியப்பா, ஒரு மாசம் ஆச்சு அடிக்கடி தானே சாப்புடக் கூடாது”என கெஞ்சினாள்.
“ம்ம்ம்! சரி வை”என ஃபோனை வைத்தான்.
“ஐ! வாங்கிட்டு வரேனு சொல்லிட்டார்” என குதித்தாள் ஜோதி.
புவனா”மாமி! இன்னைக்கு நைட் உங்களுக்கு குக்கிங் வேலை இல்ல” என்றாள்.
தமயாவுக்கும்’ஹப்பாடா!’என்றிருந்தது.
சரசு”அய்யயே! நமக்கு அது எல்லாம் ஒத்து வராது, பெரிய மருமகளே! எனக்கும், உன் மாமாவுக்கும் கொஞ்சமா அரிசி போட்டு கஞ்சியா காய்ச்சி வச்சுடுப் போதும். ஒரு மாங்காய் போட்டு வச்சு இருக்கேன் வெங்காய கூடையில் அதையும், பச்சை மிளகாயுமே போட்டு அவிச்சுடு.”
“ம்ம்ம்!”என அடுப்படிக்குச் சென்றாள்.
அது ஒன்னும் சிரமமான வேலை இல்லை, அது மட்டுமில்லாமல் வயசானவங்களுக்கு பரோட்டா எல்லாம் நல்லதில்லை தான் என நினைத்து தமயா அவர் சொன்னப்படி செய்தாள்.
லலிதாவும், மரகதமும் டிவியில் இருந்தனர்.
“என்ன அத்தாச்சி! உங்கம்மா புது மருமகளை இந்த தாங்கு தாங்குறாங்க”
“அவ முறையா கல்யாணம் பண்ணி வந்தா, நீ அப்பிடியா வந்த…?”
“வந்தது என்னமோ அவசரத்துல தான் ஆனா என் அம்மா வீட்டுல முறையா செஞ்சாங்கள, இவளுக்கு என்ன போட்டாங்க…? ஒன்னும் இல்ல. கழுத்துல ஒரு செயின் தொங்குது. காதுல சின்ன தோடு அவ்ளோதான்.”
“ம்ம்ம்! என் பொண்ணை கட்டி வைக்குறேனு சொன்னேன், அவன் கேக்கல. அதுக்கு என்ன செய்றது..? இந்த சீமாட்டி தான் கிடைச்சா அவன் வயசுக்கு”
“அத சொல்லுங்க, ஆனாலும் வாய் ஜாஸ்தி தான் அத்தாச்சி, காலையில் ஏதோ சொன்னதுக்கு அப்பிடி பதில் பேசுறா..”
“பின்ன வேலைக்கு போறாள, அந்த திமிரு இருக்கும் தான்”
“ம்ம்ம்! உஷ்ஷ்ஷ்”என்றான் சரசு அவர்களை கடந்து உள்ளார செல்ல.
“லைட் போடாம போறாங்க..?”
“இப்ப போட்டா வெளங்கிடும்”
இருவருமே பேசியது ஹஸ்கி வாய்சில்.
சரசு டேபிளிலுக்கு சென்று தண்ணீரை தேடினார்.
பழக்கப்பட்ட இடம் என்பதால் லைட் போடாமலே நடந்தார்.
“நம்ம போகலாம மேல..? அம்மா அங்க தானே இருக்கு”
“ம்ம்ம்!”என அடி எடுத்து வைக்க, அவளின் கொலுசொலி கேட்க, உடனே அவளை தன்னோடு நிறுத்தினான்.
“இரு! அம்மா வெளியில் போகட்டும் உன் கொலுசு மாடியில் போற வரை கேக்கும் போல”
“ம்ம்ம்!”
அடுப்படிக்குள் சென்று லைட்டை போட்டு தண்ணீர் மோந்து கொண்டு, ஆப் செய்தார்.
வெளியில் வந்தவரை கண்டு பயந்து நளனோடு மேலும் ஒன்றி அவனின் பனியனை பிடித்துக் கொண்டு மறைந்தாள் அவனுள்.
அவனும்”உஷ்! காலை ஆட்டாத”என அவளை தன்னோடு அணைத்து மறைத்தான்.
இருவருக்குமே முதல் அனுபவம். எதிர்ப்பாராத அனுபவம் இது.
சரசு புலம்பிட்டே சென்றார் “மொதல ஒரு எலுமிச்சப் பழத்தை கட்டித் தொங்கவிடனும் வாசலில், இந்த கொலுசு சத்தம் கேட்டுட்டே இருக்கு” என்றவாறு.
தமயாக்கு சிரிப்பு வந்தது, வாயில் கை வைத்து சிரித்தாள்.
நளன் அவளை குனிந்துப் பார்த்தான்.
அப்போது தான் உணர்ந்தனர் இருவரின் அருகாமையை. சட்டென்று இருவருமே பிரிந்தனர் நொடியில்.
சரசு படுத்ததும், நளன் முன்னே நடக்க பின்னால் தமயா சென்றாள்.
மாடிப்படிகளில் ஏறினர். அப்போது நளனின் காலில் ஏதோ உறுத்தலாக படவும் கையில் எடுத்தான்.
அவன் குனிந்ததும்”என்ன..?”என கேட்டாள்.
“இங்கரே! செயின் கிடைச்சுட்டு”என காட்டினான்.
“எங்க…?”
“வா! ரூமுக்கு மொதல போகலாம்”என அறைக்குள் சென்று கையில் கொடுத்தான்.
“ஐ! ரொம்ப நன்றிங்க”என்றாள் மனம் மகிழ.
“ம்ம்ம்!”என சென்று அமர்ந்தான் அவன் இடத்தில்.
அந்த செயினை கழுத்தில் மாட்டினாள்.
“நல்ல வேளை கெடச்சுட்டு”
“ஏன் கிடைக்கலனா..?”
“இல்ல! நான் மொத மொத டெம்பரரியா வேலைக்கு சேர்ந்தப்ப ஆறு மாசம் சம்பளத்தை சேர்த்து தந்தாங்க, அதுல வாங்கின அரை பவுன் செயின் இது. எனக்கு பொக்கிஷம் மாதிரி, எனக்காக நான் போட்டு வந்ததும் இது மட்டும் தான்”
“ம்ம்ம்!”என கணக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.
கட்டிலில் அமர்ந்தவள், எதேச்சையாக அவன் பக்கம் திரும்ப, அவனின் பனியனில் அவளின் குங்குமம் இருந்ததை கவனித்தாள்.
‘எப்பிடி சொல்றது, இதோட காலையில் கீழே வருவாரே’என முழித்தாள்.
“இந்த பனியனை காலையில் மாத்திட்டு தானே போவீங்க..?”
“ஏன் மாத்தனும்..?”என்றான் கணக்கை எழுதியவாறு.
“இல்லல்ல! மாத்திட்டுப் போங்க”
அவளை திரும்பி பார்த்தான்.
“என்ன ஆச்சு உனக்கு…?”
தமயா விரலால் தன் நெற்றியை காட்டி அவன் பனியனைக் காட்டினாள்.
குனிந்துப் பார்த்தவனுக்கு புரிந்தது.
“மாத்திடுறேன், நீ போய் படு”என்றான் சாதரணமாக.
“ம்ம்ம்! தேங்க்ஸ்”
“இதுக்குமா நன்றி”
“எல்லாத்துக்கும் தான், பூரி மாவு, இட்லி, லெமன் ரைஸ், இப்ப செயின்.. ம்ம்ம்! முக்கியமா பரோட்டா.. எல்லாத்துக்கும் தான் போதுமா..?”என வேகமாக படுக்கைக்கு சென்று படுத்தாள்.
“அந்த பேப்பர் இன்னும் அங்க தான் இருக்கு..”
தமயாக்கு புரியவில்லை, புரிந்தப் போது எழுந்து அவள் வைத்த பேப்பரை எடுத்துப் பார்த்தாள்.
“எந்த இடத்தில் பேசனுமோ அங்க பேசுவேன், இனி எதிர்ப்பார்க்கலாம்”
“மணவாளன்”
தமயாக்கு ஏனோ மனம் லேசானது, அவனை பார்க்காமல் அருகில் கிடந்த பேனாவை எடுத்தாள்.
காதல் மழலை அவள் மணவாளன் அடுத்து…
ஹாய் ப்ரண்ட்ஸ் …
விமர்சனங்கள் தர அனைவருக்கும் நன்றி… தொடர்ந்து ஆதரவு தரவும்.