“தமயா! நளன் நீ கன்சீவ் ஆன அடுத்த நாளே வந்து, என் கிட்ட சொல்லி ஆறு மாசம் வரை கிளாஸ் எடுங்க அப்புறம் ஃபோனில் சொல்லி தர முடியுமானு கேட்டு விசாரிட்டு தான் தெளிவானார்”என சிரித்தார்.
“அப்பிடியா! என் கிட்ட சொல்லவே இல்ல சார்”
“ஆமா தமயா! நானும் அன்னைக்கு தான் உன் கணவரை பார்த்தேன், ரொம்ப தங்கமானவர் உனக்காக எவ்ளோ முன் ஜாக்கிரதையா எவ்ளோ விஷயங்களை கேட்டு வச்சு இருக்கார் தெரியுமா..? எப்ப எக்ஸாம் தேதி வரும், உனக்கு எப்ப டெலிவெரி வரும், இப்பிடி பல யோசனைகளை கேட்டுட்டு தான் இவரை விட்டார்”என கூறினார் ஜெயா.
“சாரி சார்! அவருக்கு நான் டாக்டர் படிக்கனுமுனு ஒரு விஷ், அதான் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டார் போல, எனக்கு ஸ்கூல் படிக்கும் போது ஆசை இருந்தது, ஆனா அப்புறம் நர்ஸிங் படிச்சு மனசை தேத்திக்கிட்டேன், இப்ப குடும்பம், கணவர், பிள்ளைங்கனு வாழ தான் ஆசை, ஆனா அவரு என்ட்ரன்ட்ஸ் எக்சாம் எழுதிப் பாரு முதலிலுனு சொன்னதால் இப்ப இங்க வரேன் அவரோட மனநிம்மதிக்காக, ஆனா இன்னுமே எனக்கு இது எந்தளவு நடைமுறை சாத்தியமுனு புரியல சார்” என்றாள் மனதில் உள்ளதை மறைக்காமல்.
“தமயா! எதுக்கு சாரி சொல்ற, நான் கூட முதலில் நளன் சொல்லும் போது ஏதோ புது பொண்டாட்டி மயக்கம், இல்ல உன்னோட கட்டாயமுனு நினைச்சேன், ஆனா நீ இங்க வந்ததும் தான் புரிந்தது உனக்கு இருக்கும் திறமை, உன் மேல் அவருக்கும் இருக்கும் நம்பிக்கை பற்றி, அதனால நீ நெகட்டிவா யோசிக்காத” என்றார் காளி.
“ஆமா! தமயா, நீ முடிஞ்சளவு படி உன்னால ஃப்ரீ சீட் வாங்க முடிஞ்சா அது நளனுக்கு கிடைத்த வெற்றி தானே” என்றார் ஜெயா.
“புரியுதும்மா! ஆனா குழந்தைப் பத்தி யோசிக்க வேண்டி இருக்கே”என வயிற்றில் கை வைத்தாள்.
“தமயா! ஜெயா மான்டெஸ்சரி கோர்ஸ் முடிச்சுட்டு கிண்டர் கார்டன் நடத்துறா வீட்டிலே, நீ வெளியில் போர்டு பாத்ததில்லையா..? அந்த பிள்ளைங்க பெத்தவங்க சிலர் ரொம்ப க்ளோஸ் அவங்க எங்களை அப்பா, அம்மானு தான் சொல்வாங்க”
“ம்ம்ம்! பாத்தேன் ஆனா உங்களுக்கு பிள்ளைங்க இல்லைனு தெரியாது சார், அவரும் சொன்னதில்லையே..?”
“நளனுக்கும் தெரியாது, நான் என் குடும்ப விஷயத்தை பத்தி பேசியதில்லை, அவரும் கேட்க மாட்டார்”
“ஓ!”
“ஜெயாக்கு குழந்தைங்க இல்லைனு ஏக்கமே இல்லை தமயா, இங்க ஒரு மாசக் குழந்தையில் இருந்து ஆறு வயது வரை வராங்க, அவங்க எல்லாருமே அவளுக்கு புள்ளைங்க, எனக்கு இங்க வர பசங்க நீங்க எல்லாம் பிள்ளைங்க, இதான் எங்க வாழ்க்கை”
“நீங்க ரெண்டுப் பேரும் மேட் ஃபார் ஈச் அதர் சார், முகத்தில் எந்த வருத்தமும் தெரியல குழந்தை இல்லனு, அதனால தான் அந்த கடவுள் உங்களை தேர்ந்தெடுத்திருக்கார் போல, எங்களை மாதிரி பிள்ளைங்களுக்கு அப்பா, அம்மாவ இருக்க”என்றாள் சிரித்து சந்தோஷமாக.
“தமயா! ஒவ்வொருத்தருக்கும் ஒரு மாதிரி சூழ்நிலை அமையுது, அதை நம்ம வாழ்றதில் தான் முழு சந்தோஷமும் இருக்கு, பிள்ளை இல்லைனு ஏங்கிட்டு மூலையில் இருந்தா என்ன ஆகப்போது அது இயற்கையான ஒரு பந்தம். நாங்க புரிஞ்சிகிட்டோம்.”
“கரெக்ட் சார்,”
“ஆனா தமயா நீயும் ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோ”என்றார் ஜெயா.
“என்னம்மா சொல்லுங்க?”
ஜெயா கணவரைப் பார்த்தார்.
“தமயா! நளனோடு ஆசை தான் என்றாலும் அது உனக்குள்ள இருக்கும் விருப்பம் தான் டாக்டர் படிப்பு, அது ஒன்னும் ஆசைக்காக மட்டும் படிப்பதில்லை, முழு ஈடுபாடு வேணும் ஏனோ தானோனு படிச்சு டாக்டர் ஆகிட முடியாது, அதனால நீ குடும்பம், பிள்ளைனு யோசிக்காத, சரி! நீ குழந்தை பொறந்தா வேலையை விட்டுடப் போறீயா..?”
“இல்ல சார்!”
“அப்ப! குழந்தைப் பெத்துட்டு டெய்லி வேலைக்குப் போற மாதிரி காலேஜுக்கு போ”
“அதுக்கு பக்கத்தில் கிடைக்கனுமே சார் சீட்..”
“அதான் உன் திறமை தமயா, அதை தான் நளனும் ஆசைப்படுறார், அவரு ஒன்னும் காசு செலவுப்பண்ணி படிக்க வைக்க ஆசைப்படல, ஃப்ரீ சீட் பக்கத்துல உள்ள அரசாங்க மெடிக்கல் காலேஜ் கிடைச்சா உன்னோட டாக்டர் படிப்பு ஆசை நிறைவேறுமுனு நம்புறார். அது தப்பில்லையே..?”
“ஆனா, சார் கிடைக்கனுமே, அப்பிடியே கிடைச்சாலும் பிள்ளையை விட்டுட்டு போகனுமே..?”
“அதே மாதிரி தான், இங்க பாரு தமயா நமக்கு தகுந்த மாதிரி வாழ்க்கையை மாத்திக்கனும், உன் கணவர் ஊரு, குடும்பமுனு இல்லாம வெளிநாடு எதுக்குப் போனார், இப்ப கிராமத்தை விட்டு எதுக்கு கடை டவுனில் வச்சு இருக்கார், அதே மாதிரி தான் உன்னோட படிப்புக்கு தேவைனா நீங்களும் இடம் மாறிக்கலாம்” என்றார் ஜெயா.
“புரியலம்மா!”
“தமயா! இங்க இருந்து திருவாரூர் மெடிக்கல் பஸ்ஸில் போற தூரம், அந்த பக்கம் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் உன் ஊருக்குப் பக்கம், இது ரெண்டுல உனக்கு சீட் கிடைச்சா உன்னோட ஆசை நிறைவேறும். திருவாரூர் காலேஜ்னா நீ, நளன், டவுனுக்கே வீடு மாத்தி வந்துடலாம், குழந்தையை ஜெயா கிட்ட விட்டுட்டு போ, மாச மாசம் ஃபீஸ் உண்டுமா. மாலையில் நீயும், நளனும் குழந்தையை கூட்டிட்டுப் போங்க, இப்ப என்ன வருசம் முழுசுமா காலேஜ் போகப் போற, லீவுக்கு ஊருக்குப் போங்க, அதே அந்த பக்கம் காலேஜ்னாலும் பிரச்சனையே இல்ல, நளன் பிள்ளையை இங்க கூட்டிட்டு வந்துட்டு கூட்டிட்டுப் போகட்டும். எல்லாமே நம்ம எடுக்குற முடிவு தான் தமயா..”என்றார் காளி.
தமயாவிற்கு ஒரு மாதிரி யோசனை வந்தது, ஆமா தானே! இது கேட்க ஈஸியாக தானே இருக்கு என தோன்றியது. .
“இது எல்லாம் நடக்க, நீ முதலில் நல்லா படிச்சு, பக்கத்தில் சீட் வாங்க யோசிக்கனும்”
“சார்! புரியுது, கண்டிப்பா முயற்சி செய்றேன்..”
“வெரி குட்!”
***
நளன் வேகமாக போலிஸ் ஸ்டேசனை நோக்கி புல்லட்டை விரட்டினான், பின்னால் தர்மன் அமர்ந்திருந்தான்.
தமயாவிடம் லேட்டாக வருவேன் என சொல்ல காரணம் போலிஸ் ஸ்டேசனில் இருந்து வந்த அழைப்பு தான், அதை சொன்னால் பயம் கொள்வாள் என்று அரை மணி நேரத்தில் வருவதாக கூறினான்.
‘எதுக்கு மயில்சாமி அண்ணனானு கேட்டாங்க, இவன் எதுல மாட்டிகிட்டான்..? ஒரு வேளை அந்த கும்பலில் மாட்டிட்டானோ..?’என எண்ணிக் கொண்டே சென்றான், தர்மனோடு.
“எதுக்குடா வரசொன்னாங்க..?”
“தெரியலை போய் பாத்தா தான் தெரியும்..”என தம்பியை பத்தி சொல்லாமல் அழைத்து சென்றான் நண்பனும் மச்சானுமாகியவனை.
போலிஸ் ஸ்டேசன்..
உள்ளே நுழைய, எஸ் ஐ அமர்ந்திருந்தார். நளன் எழுத்தாளரிடம்”என் பேரு மணவாளன், இங்க இருந்து ஃபோன் வந்தது வர சொல்லி, மயில்சாமி..?”என நிறுத்தினான்.
“வாங்க மணவாளன், நல்லா இருக்கீங்களா..? என்ன விஷயமா வந்து இருக்கீங்க..?”
“நீங்களா சார், நான் நல்லா இருக்கேன், நீங்க நலமா..? என் பேரு சொல்லி வர சொன்னாங்க இங்க..?”
“அப்பிடியா..? சிதம்பரம் யாரு ஃபோன் பண்ணா?”என எழுத்தாளரை கேட்டார்.
“சார்! நம்ம கான்ஸ்ட்பிள் பரசு தான். அந்த மயில்சாமி கேஸ்..”
“ஓ! ஓகே.. மணவாளன், மயில்சாமி யாரு உங்களுக்கு..?”
“என் தம்பி தான் சார்!”
“அண்ணே!”என அழைத்தவனை திரும்பி பார்த்தனர் தர்மன், நளன்.
“ம்ம்ம்! அவரு மேல எப் ஐ ஆர் போட்டாச்சு”என்றார்.
தம்பியை கண்டவன் எழுந்து அங்கு செல்ல, நளனை கைப்பிடித்து அழுதான்.
“டேய்! என்னடா நடந்துச்சு..?”
“அண்ணே! நான் தப்பு பண்ணிட்டேன் என்னைய மன்னிச்சி காப்பாத்து”என அழுதுப் புலம்பினான்.
நளன்”சார்! இவன் கிட்ட தனியா பேசலாம..?”
“பேசுங்க, ஆனா வெளியில் போக முடியாது, அப்பிடியே பேசிட்டு வாங்க”
தர்மன்”என்னடா நடந்துச்சு..?”
“அது வந்து..”என சொல்ல தயங்கினான் சாமி.
நளனிற்கு புரியவும்”உனக்கே அது சொல்ல வெட்க கேடான செயலுனு தெரியுதுல, அதுவரை நல்லது”என்றான் கோபமாக.
“அண்ணே!”என அதிர்ந்தான்.
“என்ன நளன் பேசுற..? புரியல”
“அன்னைக்கு ஒரு கதை சொன்னேன்ல யாரோ ஒருத்தனு, அது யாரோ ஒருத்தன் இல்ல, இந்த நல்லவன் தான்”
“என்னடா சொல்ற..?டேய்! பொக்கிஷமா ரெண்டுப் பிள்ளைங்க, அந்த வயசுலே உன்னைய நம்பி வந்த ஒருத்தி இருக்கும் போது, கூத்தியா கேக்குதா உனக்கு..?” என தர்மன் எகிறினான்.
“அத்தான்! என்னைய மன்னிச்சுடுங்க நான் தப்பு பண்ணிட்டேன் அது இப்ப தான் புரியுது”என கதறினான்.
“சரி! இப்ப ஜெயிலுக்கு வர அளவுக்கு என்ன நடந்துச்சு..?”என கேட்டான் நளன்.
“அண்ணே! சங்கர் பேருல ஒரு இடம் ரெஜிஸ்டர் பண்ண, லலிதா நகையை அடகு வச்சுட்டுக் கொடுத்தேன் ஆனா அந்த மஞ்சுளாவும், அவ அண்ணனும் அவளோட பையன் பேருக்கு ரெஜிஸ்டர் பண்ணி, அவளை காடியன் ஆக்கி இருக்காங்க”
“உனக்கு தெரியாத முன்னாடியே..?”
“இல்லண்ணே! நான் இந்த ஒரு மாசமா அங்க சரியா போறதில்ல, அதனால போறப்ப சண்டை வர ஆரம்பிச்சது, மொதல ஃபீஸ் கட்ட காசு கேட்டேன் நான் கொடுத்த காசை தான்”
“எது நான் கொடுத்ததா..?”
“ம்ம்ம்!”
“சரி சொல்லு!”
“அந்த காசை அவ மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டா, சரினு வட்டிக்கு கொடுக்க சொல்லி கொடுத்த காசை கேட்டா அதும் இல்லனு அவ அண்ணனும் சொல்லிட்டான்”
“ம்ம்ம்! உன் காசு யாரோ ஒருத்தர் பிள்ளைக்கு போய் இருக்கு, பரவாயில்ல புண்ணியம் தான்டா.. அது சரி அந்த வட்டிக்கு கொடுத்த பணத்தை சொந்த வீட்டில் கொடுத்திருந்தா அசலாச்சும் மிஞ்சு இருக்குமேடா பொறம்போக்கு” என திட்டினான் தர்மன்.
“அத்தான்! அதிக ஆசைப்பட்டு புத்தி இல்லாம பண்ணிட்டேன்.”
“சரி! மேல சொல்லு”
“இப்ப ஒவ்வொன்னும் கணக்கு கேக்க, அவங்க நான் தனியா இருக்க பொண்ணு கிட்ட, வட்டிக்குப் பணம் கொடுத்துட்டு அவளை படுக்க கூப்புட்டு டார்ச்சர் பண்றேனு கேஸ் கொடுத்துட்டாங்க”
“அது சரி! அப்ப நீ கொடுத்த பணத்துக்கு என்ன பதில்டா?”என கேட்டான் தர்மன்.
“தர்மா! இவன் மேலயும் தப்பு இருக்கு, அவங்க இவனை மாட்டிவிட கேஸ் போட்டிருந்தாலும், அது உண்மை தானே இவன் அந்த பொண்ணு வீட்டுக்கு போயிட்டு வந்தது நிஜம், அத பாத்தவங்களும் இருக்காங்க, தமயா தோழி தங்கம் தான் இவனை அங்க பாத்துட்டு தமயா கிட்ட சொன்னது, அதுக்கு அப்புறம் நான் விசாரிச்சது, இப்பிடி ஏதோ மாட்டுவானு நினைச்சேன் மாட்டிட்டான்”
“உங்களுக்கு தெரிஞ்சிருந்தா முன்னாடியே என் கிட்ட கேட்டு இருக்கலாமுல அண்ணே”
“அப்ப கேட்டிருந்தா, நான் விரோதி மாதிரி ஒரேதா அந்த வீட்டுக்கே போயிருப்ப, அதான் பிள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ், உன் குடும்பத்து செலவுனு உன்னைய பாக்க சொன்னேன், தானா தெரியுதுல உனக்கு இப்ப, யாரு முக்கியமுனு”
“நளன்! அது எப்பிடி இவனோட பணத்தை ஆட்டைப் போட்டுட்டு இவனையும் உள்ள வச்ச அந்த கும்பலை சும்மா விட முடியும், வா போய் என்னனு கேட்டுட்டு வருவோம்..”
“தர்மா! அங்க இருக்கவங்க கிட்ட புள்ளைக்கு இவன் தான் அப்பனு சொல்லி வச்சு இருக்கா அந்த பொண்ணு, இப்ப அதையே மாத்தி இவன் தான் மிரட்டி சொல்ல சொன்னான், நைட் மட்டும் வந்துட்டு போவானு சொன்னா, அதையும் நம்புவாங்க, ஏனா தங்கமே சொன்னது இவன் ராத்திரிக்கு தான் அதிகமா போவானு, எப்பிடி வேணா மாத்தி பேசுற கும்பல், ரெண்டாவது இவன் பணம் கொடுத்தது ஒன்னும் லீகலா இல்ல, அத எப்பிடி திருப்பி வாங்க முடியும்..? போனது போகட்டும், இனி பொண்டாட்டி, பிள்ளைனு வாழட்டும்”என்றான் நளன்.
எஸ் ஐ யிடம் நடந்ததை விவரித்தான் நளன்.
அவரோ”மணவாளன்! நீங்கங்குறதால நான் உங்க பக்கமும் பாத்துப் பேசுறேன், ஏனா அவங்களுக்கு கொஞ்சம் அரசியல் பலம் இருக்கு, அது மட்டுமில்ல உங்க தம்பிக்கும் அந்த பொண்ணுக்கும் இல்லீகல் கனெக்சன் இருந்திருக்கு நீங்க சொன்னதை வச்சு பாத்தா, அப்ப இவரு நியாயமானவருனு நம்ம பேச முடியாது, பாருங்க இவரை வெளியில் விடாம ரெண்டு நாளாவது உள்ள வைக்கனுமுனு, வெள்ளிக்கிழமை கேஸ் போட்டு தள்ள வச்சுட்டாங்க, இனி திங்கட்கிழமை தான் ப்ரோஸிட் பண்ண முடியும், திங்கட் கிழமை வக்கீலோடு வாங்க, நான் ஏதாவது ஹெல்ப் பண்றேன். ஆனா அவங்களோட சகவாசத்தை உங்க தம்பியை நிறுத்திக்க சொல்லுங்க அதான் நல்லது, இல்லனா சாக்டையில் விழுந்த கதை தான்”என விளக்கினார்.
நளனிற்கும் வேறு வழியில்லை.
சாமயிடம் சொல்லி, புரிய வைத்துவிட்டு கிளம்ப நினைத்த வேளையில், அவனோ “அண்ணேனு” சின்ன பையன் போல் அழுததை நளனால் தாங்க முடியவில்லை.
“சரிடா! கண்டிப்பா நான் திங்கட்கிழமை கூட்டிட்டுப் போயிடுறேன்”என சமாதானம் செய்தான்.
“அண்ணே! லலிதா, பிள்ளைங்களுக்கு தெரிஞ்சா என்னைய பத்தி என்ன நினைப்பாங்க”என தலையில் அடித்து அழுதான்.
“சாமி! நான் யாரு கிட்டையும் சொல்லல, நீ பொறுமையா இரு”என அதற்கு மேல் நேரம் கடத்தாமல் புறப்பட்டான்.
***
தமயாவை கூட்டிக் கொண்டு வீட்டை நோக்கி புல்லட்டில் சென்றுக் கொண்டிருந்தான் நளன்.
“அடப்பாவத்த! இப்பிடியுமா ஒரு மனுசன் தண்டனை அனுபவிக்கனும்”
“அவன் பண்ணின தப்புக்கு தண்டனை”
“இருந்தாலும்”
“என்ன இருந்தாலும், பணத்தை சம்பாரிக்க ஆயிரம் வழியிருக்கு ஆனா நேர்மையா சம்பாரிக்கனும், வட்டிப்பணம் பல பேர் வயித்தெரிச்சலில் தான் முடியும், இவனுக்கு பொண்டாட்டி இருக்கும் போது தனியா வேற கேக்குது”
“பாவம் அக்கா, பிள்ளைங்களுக்கு தெரிஞ்சா..?”
“ம்ம்ம்! தெரிய வேண்டாம், ஏதாவது சொல்லி சமாளிக்கலாம்”
“ம்ம்ம்!”
“ஆனா தமயா! அவன் அழுததை என்னால ஏத்துக்கவே முடியல, என்ன இருந்தாலும் கூடப்பிறந்தவன் இல்லையா..?”
“ம்ம்ம்! புரியுது தொரை, ஏதோ இதுக்கு அப்புறம் நல்லது நடந்தா சரி”
“ம்ம்ம்!”
***
இரவு..
சாப்பிட்டு அறைக்கு வந்தனர்.
“உங்க தம்பி பத்தி எதுமே சொல்லல தொரை?”
“நைட் வெளியில் தங்குவானு நினைச்சுப்பாங்க, நாளைக்கு கேட்கும் போது நான் ஒரு வேலையா அனுப்பி இருப்பதா சொல்லுறேன்”
“ம்ம்ம்!”
இருவரும் கட்டிலில் படுத்தனர்.
“நீ மாத்திரை எல்லாம் போட்டீயா.?”
“ம்ம்ம்! ஆச்சு”
“இங்கரே! நீ ஏதோ சொல்லனுமுனு சொன்ன, என்னது..?”
“அது வந்து..”என ஆரம்பித்தவள், அவனை நெருங்கி ஒரு சைடாக படுத்து, மார்போடு கைப்போட்டு, காளி, ஜெயாக்கு குழந்தை இல்லைனு கூறினாள்.
“ஓ! குழந்தைங்க இல்லையா அவங்களுக்கு..?”
“ம்ம்ம்!”
“நானும் கேட்டதில்லை, போனா நம்ம கதை பேசிட்டு வந்துடுறது”
“ம்ம்ம்! சார் சொன்னாங்க தொரை, எல்லாத்தையும்”
“ம்ம்ம்!”என முழுக்கதையும் கூறினாள்.
“ஓ!”
“தெரியல! எந்தளவுக்கு நடைமுறை வாழ்க்கைக்கு உதவுமுனு தெரியல, அவங்க சொன்னது எல்லாம்”
“நீ பரீட்சையை மட்டும் நல்லா எழுது, அதுக்கு அப்புறம் வர முடிவை நான் பாத்துக்குறேன்”என தீவிர யோசனைக்கு சென்றான்.
***
அடுத்த நாள் லலிதா சாமியை பற்றிக் கேட்க, நளன் ஏததோ கூறி சமாளித்தான்.
அவளும் நளன் கூறியதால் சமாதானம் ஆனாள்.
ஆனால் விதி விடுமா என்ன..? மல்லி மூலம் வந்தது, தர்மன் போதையில் இரவில் மனைவியிடம் உளரிவிட்டான், அவளோ காலையில் வந்து நின்றாள் அம்மா வீட்டில்.
அனைத்தையும் போட்டு உடைக்க, வீடே ரணமானது, ஒரு பக்கம் சரசு, மறுப்பக்கம் லலிதா, நல்ல வேளை பிள்ளைகள் சனிகிழமை அரை நேரமுனு பள்ளி சென்றுவிட்டார்கள்.
மரகதத்திற்கும் மல்லி சொல்லியதால், அவளும் வந்து விட்டாள்.
அடுத்த வீட்டிற்குத் தெரியக் கூடாது என நளன் அனைவரையும் அதட்டி அடக்கினான்.
“ஏன் மாமா என் கிட்ட பொய் சொன்னீங்க.? என்னைய ஸ்டேசனுக்கு கூட்டிட்டுப் போங்க நான் நாக்குப் புடுங்குற மாதிரி நாலு கேள்விக் கேட்டுட்டு என் புள்ளைங்களை எங்கயாச்சும் அழைச்சுட்டு தனியா போறேன், இனி அந்தாளு கூட வாழ மாட்டேன்”என அழுதுப் புலம்பினாள்.
“ஆமான்டி! அவன் ஏதோ புத்திக் கெட்டுப் போய் பண்ணிட்டான், பொறுத்துப் போடி”என்றாள் மரகதம்.
“ஏன் அத்தாச்சி! நான் இப்பிடி போயிருந்தா புத்திகெட்டுனு சொல்வீங்களா..?”
“வாஸ்தவம் தான்டி”என வாயை மூடினாள் மரகதம்.
ஒரு வழியாக நளன் அடக்கி வைத்தான் அனைவரையும், பிள்ளைங்களுக்கு தெரியாமல்.
திங்கட்கிழமை வர, இருப்பக்கமும்
பேசியதால் அவன் பணமும் வேண்டாம், இனி அவனை தொல்லை செய்யக் கூடாது, “அதற்கு மேல் எதாச்சுனா நஷ்டம் இரண்டுப் பக்கமும் வரும்”என. எஸ் ஐ கண்டிக்க, அதே போல் ஒத்துக் கொண்டு கேஸை வாபஸ் வாங்கினர்.
****
வீட்டிற்கு வந்த சாமியிடம் சாமி ஆடினாள் லலிதா.
பிள்ளைகள் இல்லாதது வசதியாக போனதால், யாருமே வாயை திறக்கவில்லை.
“ஏ மாமியாரே! இனி என்னைய ஓடி வந்தவனு சொல்வீங்க, அப்பிடி சொல்லும் போது நானும் சும்மா இருக்க மாட்டேன்”என பத்ரகாளியாக மாறினாள்.
“ஏய்யா! நான் பத்தல உனக்கு, எவ புள்ளைக்கோ சம்பாரிச்சு கொடுத்தீயா? நாங்க எதுக்குடா உனக்கு, நானும் உன்னைய மாதிரி போயிட்டு வரவா, எவனாச்சும் உன்ன மாதிரி எனக்கு நாலு காசு தருவான்ல.. எம் புள்ளைங்களுக்கு ஆகுமுல”என்றவள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான் சாமி.
அதை பார்த்த அனைவருக்குமே அவன் நிலை பாவமாக இருந்தது.
நளன் சொல்லி தான் கூட்டிக் கொண்டு வந்தான் லலிதாவிற்கு தெரிந்து விட்டது, ஆனால் பிள்ளைகளுக்கு தெரியாதென்று.
ஆடியவாறு மலை இறங்கினாள் லலிதா, அவன் காலில் விழுந்த நேரம்.
வேறு வழியின்றி இறுதியில் மன்னித்தாள் கணவனை.
நளன் தர்மனை மொத்தியது தனிக்கதை ஆனால் சொல்ல முடியாத அடிகள், பாவம் அவன் நிலை. ‘குடிக்கும் போது பொண்டாட்டி கிட்டவே போககூடாது’என முடிவு எடுத்திருந்தான்.
வீடு பழைய நிலைக்கு திரும்பவில்லை என்றாலும், நளனும், தமயாவும் மாற்ற முயற்சி எடுத்து வெற்றியும் பெற்றனர், அந்த ஒரு மாதத்தில்.
பிள்ளைகளுக்கு பெரியவர்கள் சண்டை என மட்டுமே விளங்கியது.