வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(15)
“ சிந்தியாவோட சொந்த ஊரு கோயம்பத்தூர் பக்கம். அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கான். ருத்ரனும் சிந்தியாவும் இங்க காலேஜ் ஒண்ணா படிச்சாங்க. அப்புறம் ருத்ரன் வெளிநாடு போய் படிக்கறது தெரிஞ்சு அவளும் அங்க படிக்க போயிருக்கா.”
“ அவுங்க ரெண்டு பேரும் காதலிச்சது எப்பிடி தெரியும்மா உங்களுக்கு??”
“ அது இந்த விபத்து நடந்ததை கேள்விப்பட்டு வெளிநாட்டுல ருத்ரன்கூட படிச்சவங்க இங்க இவனை பார்க்க வந்தாங்க. அப்போ சிந்தியா இறந்த விஷயத்தை கேள்வி பட்டு அவுங்க சொன்னாங்க ருத்ரனும் சிந்தியாவும் காதலிச்சதாவும் எங்க போனாலும் ஒன்னாதான் சுத்துவங்களாம்.
அதோட இந்த சிந்தியா அவுங்க அண்ணன் கல்யாணத்துக்காக இந்தியா வந்துருக்கா. அவளை தனியா விட மனசு இல்லாம இவனும் துணைக்கு கிளம்பிருக்கான். ஆனா இங்க எங்ககிட்ட சொல்லவே இல்ல அவன் வரதை பத்தி.
ஆனா ஏர்போர்ட்ல இருந்து கார்ல வரும்போது லாரியோட கார் மோதி விபத்து ஆகிடுச்சு. அதுல அந்த பொண்ணு அங்கேயே இறந்துடுச்சு. நம்ம ருத்ரன்தான் இப்படி சுயநினைவு இல்லாம கோமாவுக்கு போய்ட்டான்”
“ அப்போ… அப்போ…. அந்த பொண்ணு இறந்தது சாருக்கு தெரியாதாமா??”
“ இல்லைன்னுதான் நினைக்குறேன் தென்றல். பாப்போம் அதை சொல்லும்போது எப்படி என்னன்னு நடந்துக்குவான்னு கவலையா இருக்கு. சரி வா உள்ள போலாம்” என கூறிவிட்டு ஜானவி வீட்டிற்குள் செல்ல தென்றலும் அமைதியாக அவரை பின்தொடர்ந்தாள்.
சிம்மவர்மன் அறையில் கட்டி லில் அமர்ந்து செல்லை பார்த்துக்கொண்டிருந்த நித்யவதியை கண்ட சிம்மவர்மன்,
‘ என்ன இவ காலையில வேலைக்கு போயே ஆவேன்னு அவ்வளவு பேசிட்டு இப்போ உட்கார்ந்து செல்லை பார்த்துகிட்டு இருக்கா. ஏன் போல ஒரு வேளை யாரும் மறுபடியும் போக கூடாதுன்னு சொல்லிட்டாங்களோ??’ எண்ணிக்கொண்டு நித்யவதின் அருகில் நின்று
“ ஹம்ம்ஹும்” என செருமினான் அதனை கவனிக்காது தொடர்ந்து செல்லை பார்த்துக்கொண்டிருந்த நித்யவதியை கண்டு முறைப்புடன் சற்று சத்தமாக செரும
“ என்ன அத்தான் கிஸ் வேணுமா??”
“ என்னது!!???” என சிம்மவர்மன் அதிர்ந்து நின்றுவிட்டான்.
“ இல்ல அத்தான் இருமுறிங்களே தொண்டையில கிச் கிச்சா மாத்திரை எதுவும் வேணுமான்னு சுருக்கமா கேட்டேன்” என அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கூறிய நித்தியவதியை கண்டு பல்லை கடித்த
“ ஒரு மண்ணு வேண்டாம். நீ என்னமோ வேலைக்கு போயே ஆவேன்னு குதித்த. ஆனா இன்னும் கிளம்பவே இல்ல”
“ ஓ!!... அதுவா ருத்ரனுக்கு சரி ஆகிடுச்சுல அதான் சந்தோஷத்துல இன்னைக்கு லீவ் போட்டுட்டேன்”
“ உனக்கு சந்தோசமா??. நியாயமா பார்த்தா நீ கவலைலபடணும்” என தலையை சாய்த்து வலது கையை தாடையில் வைத்து யோசனையில் கூறிய சிம்மவர்மனிடம்
“ எனக்கு புரியல அத்தான். என்ன சொல்றிங்க?. நான் எதுக்கு கவலையில இருக்கனும்” என நித்யவதி கேட்க
“ பின்ன இல்லையா ருத்ரன் இவ்வளவு சீக்கிரம் குணமாகிடுவான்னு தெரிஞ்சிருந்தா இவ்வளவு சீக்கிரம் நீ பிடிக்காம என்னைய அவசர பட்டு கல்யாணம் பண்ணிருக்க தேவை இல்ல. அதனால சொன்னே” என சாதாரணமான குரலில் சிம்மவர்மன் கூறி முடிக்க
சட்டென்று கலங்கிய விழிகளை சிம்மவர்மனுக்கு காட்டாது
“ கவலையா??. அது என்னமோ உண்மைதான். உங்களை போய் காதலிச்சேன்ல நான் கவலை படவேண்டியதுதான்”
உடனே போலியாக அதிர்ந்த சிம்மவர்மன் “ ஏது!!.... நீ என்னைய காதலிச்ச??. இதை நீ சொன்னவுடன் நான் நம்பணுமா??” என நக்கல் குரலில் வினவ
“ நான் உங்களை நம்ப சொல்லவே இல்லையே.”
“ அப்புறம் எதுக்கு என்கிட்டே சொல்ற??”
“ யாரை காதலிக்குறோம்ன்னு சம்மந்த பட்டவங்கட்டத்தானே சொல்ல முடியும்”
“ ஆனா நான் நம்பலை”
“ அது எனக்கு கவலை இல்ல”
“ ஏய்!!!.... என்ன திமிரா???”
“ அப்பிடி உங்களுக்கு தெரிஞ்சா அப்போ அப்படித்தான்”
“ ஏய்!!... ச்சை… உன்கிட்ட போய் மனுஷன் பேசுவானா??”
“ ஆனா நீங்க பேசுறீங்க”
“ தப்புதான் தப்புதான் என் இயல்பை மீறி உன்கிட்ட போய் வாயை குடுத்தேன் பாரு என்னைய சொல்லணும்” என கோவமாக சலித்துக்கொண்டு கூறிவிட்டு அறையை விட்டு சிம்மரவர்மன் வெளியேற எண்ணுகையில்
“ சிம்முத்தான்….” என சற்றே கொஞ்சல் குரலில் அழைத்த நித்யவதியை கண்டு பல்லை கடித்துக்கொண்டு சிம்மவர்மன்
‘ என்ன’ என்ற தோரணையில் நிற்க
“ இவ்வளவு பேசுனோம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்”
“ என்னது??”
“ அது…. அது…” என சிம்மவர்மனை நெருங்கிய நித்யவதி
“ அது I love u சிம்முதான்” என சிம்மவர்மனின் வலது கன்னத்தில் தனது இதழ்
பதித்துவிட்டு சிம்மவர்மனின் அதிர்ந்த தோற்றத்தை கண்ட திருப்தியுடன் அறையைவிட்டு ஓடிவிட்டாள்.
சில மணி துளிகளில் அதிர்வில் இருந்து மீண்ட சிம்மவர்மன் “ very dangerous” என தலையை உலுக்கிக்கொண்டு ஆபிஸ்க்கு கிளம்பினான். ஆனால் உதட்டில் சிறு வெட்க புன்னகை உண்டானதோ!!!!....
அதே நேரம் அறையை விட்டு வெளியே வந்த நித்யவதி
“ ஐயையோ!!!... நித்தி என்ன பண்ணி வச்சுருக்க. உன்னைய கடுப்பேத்துறாருன்னு சிங்கத்துக்கு மூஞ்சிய சொறிஞ்சுவிட்டுருக்கியே. சும்மாவே இருமுறேன்னு உருமாவாரு. போச்சு எதோ விளையாட்டா பண்ணப்போய் என்ன நடக்கபோகுதோ”.
என சற்றே பயத்துடன் எண்ணி ஹாலில் இருந்த சோபாவில் அமர அதே நேரம்
சிம்மவர்மன் கிளம்பி வெளியே வர;
சிம்மவர்மன் நித்யவதியை கண்டும் காணாதவாறு செல்ல எண்ணுகையில் அதனை கண்டு கொண்ட நித்யவதிக்கு மீண்டும் சிம்மவர்மனை சீண்டும் எண்ணம் வர வேகமாக நெருங்கினாள்.
அவளின் வேகத்தில் சற்றே தனது நடையை நிறுத்தி பதட்டத்தை மறைத்து “ என்ன??” என முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு சிம்மவர்மன் வினவ
‘ அச்சச்சோ சிம்மு கம்முன்னு இருக்குன்னு நினைச்சா சும்மா கும்முன்னு விறைச்சுக்கிட்டு நிற்குறாரே. எப்பிடி சமாளிக்குறது’ என மனதில் எண்ணிக்கொண்டு
“ அத்….. அத்தான்…. அது…. அது….” என நித்யவதி தயங்க
“ சும்மா பயந்தமாதிரி நடிக்காம என்னன்னு சொல்லு” என மீண்டும் சிம்மவர்மன் கடின குரலில் கேட்க
“ இல்ல காபீ சாப்பிட்டீங்களா டிபன் சாப்பிட்டீங்களான்னு கேட்க…….” என இழுக்க சிம்மவர்மன் அதற்கு பதில் கூறாது பல்லை கடித்துக்கொண்டு முறைத்துவிட்டு சென்றுவிட
“ அப்பாடா தப்பிச் சோம். நீ எல்லாம் திருந்தவே மாட்டடி” என தன்னைத்தானே திட்டிக்கொண்டிருக்கும் போது தோட்டத்தில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தனர் ஜானவியும் தென்றலும்.
“ அப்புறம் அத்தை உங்க சின்ன பையன் குணமாகிட்டாரு. எனக்கு என்ன ட்ரீட்டு ஹ்ம்ம்”
“ என் மருமக இந்த வீட்டு வேலைக்காரியா மாறி இருக்கா அவகிட்ட என்ன வேணுன்னு சொல்லி செய்ய சொல்லு நித்தி” தென்றலை முறைப்புடன் பார்த்துக்கொண்டு கூற
“ என்ன அத்தை சொல்றிங்க??. யாரு வேலைக்காரி??” என புரியாமல் கேட்க
“ இதோ இங்க இருக்காங்களே தியாகத்தின் மறு உருவம் அவுங்கதான்” என தென்றலை காட்டி கூறிய ஜானவியிடம்
“ என்ன அத்தை தென்றலை எதுக்கு வேலைக்காரின்னு சொல்றீங்க??” என குழப்பத்துடன் நித்யவதி வினவ
ஜானவி மாயாவதி லீலாவதியின் பேச்சு ருத்ரனின் உடநிலை என காலையில் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறிமுடிக்க. அதனை கேட்ட நித்யவதி,
“ நீ என்ன லூசா தென்றல்??. இதை வாழ்க்கைன்னு நினைச்சியா இல்ல நாடகம்ன்னு நினைச்சியா?” என நித்தியவதி கடிய
“ இல்ல அதுவந்து சாரோட உடம்புக்கு……”
“ என்ன உடம்புக்கு நீ வேலைக்காரின்னு சொன்னவுடன் எழுந்து துள்ளி ஓடப்போறானா இல்ல பாவப்பட்டு உன்னைய ஏத்துக்க போறானா. இப்படி எதுவும் நீ சொல்லப்போற பொய்யால நடக்க போறது இல்ல. நீ கஷ்ட படப்போற மத்தவங்க அதை கைகட்டி வேடிக்கை பார்க்கப்போறாங்க. இப்படி நீ கஷ்படவா உன் பாட்டியும் என் அத்தையும் உனக்கு இந்த வாழ்க்கை நிலைக்கணும்ன்னு வேண்டிக்கிட்டு இருக்காங்க”
“ நான் என்ன புதுசாவா கஷ்டப்படப்போறேன் இதுவரைக்கும் நான் எங்க அத்தை வீட்டுல எப்பிடி இருந்தேனோ அப்பிடித்தான் இங்க இருக்க போறேன் இதுல என்னங்க இருக்கு”
“ ஓ!!... அப்போ உனக்கே உன் வாழ்க்கை பத்தி அக்கறை இல்லாதப்போ மத்தவங்க என்னதான் அழுதாலும் ஒன்னும் செய்யமுடியாது தென்றல்” என கூறிவிட்டு யோசனையுடன் நித்யவதி சோபாவில் அமர்ந்து இருந்த ஜானவியின் அருகில் அமர, அங்கே அமைதி நிலவியது.
‘ என்ன ரெண்டு பேரும் அமைதியா இருக்காங்க. நான் என்ன தப்பு பண்ணறேன்னு என்னைய திட்டுறாங்க. எனக்கே தெரியும் இந்த வாழ்க்கை என்னோட தகுதிக்கு மீறினது. அதோட நான் எட்டாவதுதான் படிச்சுருக்கேன். சார் வெளிநாடு எல்லாம் போய் படிச்சுருக்காங்க.
வசதிலையும் ஏணி வச்சா கூட எட்டாது. இது என்ன கதையா இல்ல சினிமாவா பார்த்தவுடன் காதல் வறதுக்கு. அப்படி பார்த்தாலும் சாருக்கு ஏற்கனவே காதலும் இருக்கு. இப்படி எல்லா பக்கமும் தடையா இருக்குற வாழ்க்கைல நான் என்னதான் செய்றதாம்??.
முடிஞ்ச அளவுக்கு வயசான காலத்துல என் ஆத்தாவுக்கு சுமையா இல்லாம இங்க எதோ குடுக்குற வேலைய பார்த்துகிட்டு இருக்கலாம்ன்னா அதுக்கு சண்டைக்கு வாரங்க” என மனதில் பலவித எண்ணங்களுடன் சலித்துக்கொண்டு ஜானவியின் அருகில் அமர்ந்த தென்றல்
“ அம்மா எனக்கு என்ன செய்றேன் ஏது செய்றேன்னு தெரியல. நீங்க என்ன சொல்றிங்களோ அப்படியே செய்றேன். அது இந்த வீட்டை விட்டு போக சொன்னாலும் சரி” என விரக்தியாக கூறிய தென்றலை கண்டு
“ பார்த்தியா நித்தி இப்போ கூட எப்பிடிம்மா என் வாழ்க்கையை சரி பண்றது என் புருசனுக்கு எப்பிடி என்னைய பிடிக்கவைக்கிறதுன்னு கேட்குறாளா இங்க இருந்து போறதுல குறியா இருக்கா” என ஜானவி குறைபட
“ சிந்தியாவோட சொந்த ஊரு கோயம்பத்தூர் பக்கம். அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கான். ருத்ரனும் சிந்தியாவும் இங்க காலேஜ் ஒண்ணா படிச்சாங்க. அப்புறம் ருத்ரன் வெளிநாடு போய் படிக்கறது தெரிஞ்சு அவளும் அங்க படிக்க போயிருக்கா.”
“ அவுங்க ரெண்டு பேரும் காதலிச்சது எப்பிடி தெரியும்மா உங்களுக்கு??”
“ அது இந்த விபத்து நடந்ததை கேள்விப்பட்டு வெளிநாட்டுல ருத்ரன்கூட படிச்சவங்க இங்க இவனை பார்க்க வந்தாங்க. அப்போ சிந்தியா இறந்த விஷயத்தை கேள்வி பட்டு அவுங்க சொன்னாங்க ருத்ரனும் சிந்தியாவும் காதலிச்சதாவும் எங்க போனாலும் ஒன்னாதான் சுத்துவங்களாம்.
அதோட இந்த சிந்தியா அவுங்க அண்ணன் கல்யாணத்துக்காக இந்தியா வந்துருக்கா. அவளை தனியா விட மனசு இல்லாம இவனும் துணைக்கு கிளம்பிருக்கான். ஆனா இங்க எங்ககிட்ட சொல்லவே இல்ல அவன் வரதை பத்தி.
ஆனா ஏர்போர்ட்ல இருந்து கார்ல வரும்போது லாரியோட கார் மோதி விபத்து ஆகிடுச்சு. அதுல அந்த பொண்ணு அங்கேயே இறந்துடுச்சு. நம்ம ருத்ரன்தான் இப்படி சுயநினைவு இல்லாம கோமாவுக்கு போய்ட்டான்”
“ அப்போ… அப்போ…. அந்த பொண்ணு இறந்தது சாருக்கு தெரியாதாமா??”
“ இல்லைன்னுதான் நினைக்குறேன் தென்றல். பாப்போம் அதை சொல்லும்போது எப்படி என்னன்னு நடந்துக்குவான்னு கவலையா இருக்கு. சரி வா உள்ள போலாம்” என கூறிவிட்டு ஜானவி வீட்டிற்குள் செல்ல தென்றலும் அமைதியாக அவரை பின்தொடர்ந்தாள்.
சிம்மவர்மன் அறையில் கட்டி லில் அமர்ந்து செல்லை பார்த்துக்கொண்டிருந்த நித்யவதியை கண்ட சிம்மவர்மன்,
‘ என்ன இவ காலையில வேலைக்கு போயே ஆவேன்னு அவ்வளவு பேசிட்டு இப்போ உட்கார்ந்து செல்லை பார்த்துகிட்டு இருக்கா. ஏன் போல ஒரு வேளை யாரும் மறுபடியும் போக கூடாதுன்னு சொல்லிட்டாங்களோ??’ எண்ணிக்கொண்டு நித்யவதின் அருகில் நின்று
“ ஹம்ம்ஹும்” என செருமினான் அதனை கவனிக்காது தொடர்ந்து செல்லை பார்த்துக்கொண்டிருந்த நித்யவதியை கண்டு முறைப்புடன் சற்று சத்தமாக செரும
“ என்ன அத்தான் கிஸ் வேணுமா??”
“ என்னது!!???” என சிம்மவர்மன் அதிர்ந்து நின்றுவிட்டான்.
“ இல்ல அத்தான் இருமுறிங்களே தொண்டையில கிச் கிச்சா மாத்திரை எதுவும் வேணுமான்னு சுருக்கமா கேட்டேன்” என அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கூறிய நித்தியவதியை கண்டு பல்லை கடித்த
“ ஒரு மண்ணு வேண்டாம். நீ என்னமோ வேலைக்கு போயே ஆவேன்னு குதித்த. ஆனா இன்னும் கிளம்பவே இல்ல”
“ ஓ!!... அதுவா ருத்ரனுக்கு சரி ஆகிடுச்சுல அதான் சந்தோஷத்துல இன்னைக்கு லீவ் போட்டுட்டேன்”
“ உனக்கு சந்தோசமா??. நியாயமா பார்த்தா நீ கவலைலபடணும்” என தலையை சாய்த்து வலது கையை தாடையில் வைத்து யோசனையில் கூறிய சிம்மவர்மனிடம்
“ எனக்கு புரியல அத்தான். என்ன சொல்றிங்க?. நான் எதுக்கு கவலையில இருக்கனும்” என நித்யவதி கேட்க
“ பின்ன இல்லையா ருத்ரன் இவ்வளவு சீக்கிரம் குணமாகிடுவான்னு தெரிஞ்சிருந்தா இவ்வளவு சீக்கிரம் நீ பிடிக்காம என்னைய அவசர பட்டு கல்யாணம் பண்ணிருக்க தேவை இல்ல. அதனால சொன்னே” என சாதாரணமான குரலில் சிம்மவர்மன் கூறி முடிக்க
சட்டென்று கலங்கிய விழிகளை சிம்மவர்மனுக்கு காட்டாது
“ கவலையா??. அது என்னமோ உண்மைதான். உங்களை போய் காதலிச்சேன்ல நான் கவலை படவேண்டியதுதான்”
உடனே போலியாக அதிர்ந்த சிம்மவர்மன் “ ஏது!!.... நீ என்னைய காதலிச்ச??. இதை நீ சொன்னவுடன் நான் நம்பணுமா??” என நக்கல் குரலில் வினவ
“ நான் உங்களை நம்ப சொல்லவே இல்லையே.”
“ அப்புறம் எதுக்கு என்கிட்டே சொல்ற??”
“ யாரை காதலிக்குறோம்ன்னு சம்மந்த பட்டவங்கட்டத்தானே சொல்ல முடியும்”
“ ஆனா நான் நம்பலை”
“ அது எனக்கு கவலை இல்ல”
“ ஏய்!!!.... என்ன திமிரா???”
“ அப்பிடி உங்களுக்கு தெரிஞ்சா அப்போ அப்படித்தான்”
“ ஏய்!!... ச்சை… உன்கிட்ட போய் மனுஷன் பேசுவானா??”
“ ஆனா நீங்க பேசுறீங்க”
“ தப்புதான் தப்புதான் என் இயல்பை மீறி உன்கிட்ட போய் வாயை குடுத்தேன் பாரு என்னைய சொல்லணும்” என கோவமாக சலித்துக்கொண்டு கூறிவிட்டு அறையை விட்டு சிம்மரவர்மன் வெளியேற எண்ணுகையில்
“ சிம்முத்தான்….” என சற்றே கொஞ்சல் குரலில் அழைத்த நித்யவதியை கண்டு பல்லை கடித்துக்கொண்டு சிம்மவர்மன்
‘ என்ன’ என்ற தோரணையில் நிற்க
“ இவ்வளவு பேசுனோம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்”
“ என்னது??”
“ அது…. அது…” என சிம்மவர்மனை நெருங்கிய நித்யவதி
“ அது I love u சிம்முதான்” என சிம்மவர்மனின் வலது கன்னத்தில் தனது இதழ்
பதித்துவிட்டு சிம்மவர்மனின் அதிர்ந்த தோற்றத்தை கண்ட திருப்தியுடன் அறையைவிட்டு ஓடிவிட்டாள்.
சில மணி துளிகளில் அதிர்வில் இருந்து மீண்ட சிம்மவர்மன் “ very dangerous” என தலையை உலுக்கிக்கொண்டு ஆபிஸ்க்கு கிளம்பினான். ஆனால் உதட்டில் சிறு வெட்க புன்னகை உண்டானதோ!!!!....
அதே நேரம் அறையை விட்டு வெளியே வந்த நித்யவதி
“ ஐயையோ!!!... நித்தி என்ன பண்ணி வச்சுருக்க. உன்னைய கடுப்பேத்துறாருன்னு சிங்கத்துக்கு மூஞ்சிய சொறிஞ்சுவிட்டுருக்கியே. சும்மாவே இருமுறேன்னு உருமாவாரு. போச்சு எதோ விளையாட்டா பண்ணப்போய் என்ன நடக்கபோகுதோ”.
என சற்றே பயத்துடன் எண்ணி ஹாலில் இருந்த சோபாவில் அமர அதே நேரம்
சிம்மவர்மன் கிளம்பி வெளியே வர;
சிம்மவர்மன் நித்யவதியை கண்டும் காணாதவாறு செல்ல எண்ணுகையில் அதனை கண்டு கொண்ட நித்யவதிக்கு மீண்டும் சிம்மவர்மனை சீண்டும் எண்ணம் வர வேகமாக நெருங்கினாள்.
அவளின் வேகத்தில் சற்றே தனது நடையை நிறுத்தி பதட்டத்தை மறைத்து “ என்ன??” என முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு சிம்மவர்மன் வினவ
‘ அச்சச்சோ சிம்மு கம்முன்னு இருக்குன்னு நினைச்சா சும்மா கும்முன்னு விறைச்சுக்கிட்டு நிற்குறாரே. எப்பிடி சமாளிக்குறது’ என மனதில் எண்ணிக்கொண்டு
“ அத்….. அத்தான்…. அது…. அது….” என நித்யவதி தயங்க
“ சும்மா பயந்தமாதிரி நடிக்காம என்னன்னு சொல்லு” என மீண்டும் சிம்மவர்மன் கடின குரலில் கேட்க
“ இல்ல காபீ சாப்பிட்டீங்களா டிபன் சாப்பிட்டீங்களான்னு கேட்க…….” என இழுக்க சிம்மவர்மன் அதற்கு பதில் கூறாது பல்லை கடித்துக்கொண்டு முறைத்துவிட்டு சென்றுவிட
“ அப்பாடா தப்பிச் சோம். நீ எல்லாம் திருந்தவே மாட்டடி” என தன்னைத்தானே திட்டிக்கொண்டிருக்கும் போது தோட்டத்தில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தனர் ஜானவியும் தென்றலும்.
“ அப்புறம் அத்தை உங்க சின்ன பையன் குணமாகிட்டாரு. எனக்கு என்ன ட்ரீட்டு ஹ்ம்ம்”
“ என் மருமக இந்த வீட்டு வேலைக்காரியா மாறி இருக்கா அவகிட்ட என்ன வேணுன்னு சொல்லி செய்ய சொல்லு நித்தி” தென்றலை முறைப்புடன் பார்த்துக்கொண்டு கூற
“ என்ன அத்தை சொல்றிங்க??. யாரு வேலைக்காரி??” என புரியாமல் கேட்க
“ இதோ இங்க இருக்காங்களே தியாகத்தின் மறு உருவம் அவுங்கதான்” என தென்றலை காட்டி கூறிய ஜானவியிடம்
“ என்ன அத்தை தென்றலை எதுக்கு வேலைக்காரின்னு சொல்றீங்க??” என குழப்பத்துடன் நித்யவதி வினவ
ஜானவி மாயாவதி லீலாவதியின் பேச்சு ருத்ரனின் உடநிலை என காலையில் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறிமுடிக்க. அதனை கேட்ட நித்யவதி,
“ நீ என்ன லூசா தென்றல்??. இதை வாழ்க்கைன்னு நினைச்சியா இல்ல நாடகம்ன்னு நினைச்சியா?” என நித்தியவதி கடிய
“ இல்ல அதுவந்து சாரோட உடம்புக்கு……”
“ என்ன உடம்புக்கு நீ வேலைக்காரின்னு சொன்னவுடன் எழுந்து துள்ளி ஓடப்போறானா இல்ல பாவப்பட்டு உன்னைய ஏத்துக்க போறானா. இப்படி எதுவும் நீ சொல்லப்போற பொய்யால நடக்க போறது இல்ல. நீ கஷ்ட படப்போற மத்தவங்க அதை கைகட்டி வேடிக்கை பார்க்கப்போறாங்க. இப்படி நீ கஷ்படவா உன் பாட்டியும் என் அத்தையும் உனக்கு இந்த வாழ்க்கை நிலைக்கணும்ன்னு வேண்டிக்கிட்டு இருக்காங்க”
“ நான் என்ன புதுசாவா கஷ்டப்படப்போறேன் இதுவரைக்கும் நான் எங்க அத்தை வீட்டுல எப்பிடி இருந்தேனோ அப்பிடித்தான் இங்க இருக்க போறேன் இதுல என்னங்க இருக்கு”
“ ஓ!!... அப்போ உனக்கே உன் வாழ்க்கை பத்தி அக்கறை இல்லாதப்போ மத்தவங்க என்னதான் அழுதாலும் ஒன்னும் செய்யமுடியாது தென்றல்” என கூறிவிட்டு யோசனையுடன் நித்யவதி சோபாவில் அமர்ந்து இருந்த ஜானவியின் அருகில் அமர, அங்கே அமைதி நிலவியது.
‘ என்ன ரெண்டு பேரும் அமைதியா இருக்காங்க. நான் என்ன தப்பு பண்ணறேன்னு என்னைய திட்டுறாங்க. எனக்கே தெரியும் இந்த வாழ்க்கை என்னோட தகுதிக்கு மீறினது. அதோட நான் எட்டாவதுதான் படிச்சுருக்கேன். சார் வெளிநாடு எல்லாம் போய் படிச்சுருக்காங்க.
வசதிலையும் ஏணி வச்சா கூட எட்டாது. இது என்ன கதையா இல்ல சினிமாவா பார்த்தவுடன் காதல் வறதுக்கு. அப்படி பார்த்தாலும் சாருக்கு ஏற்கனவே காதலும் இருக்கு. இப்படி எல்லா பக்கமும் தடையா இருக்குற வாழ்க்கைல நான் என்னதான் செய்றதாம்??.
முடிஞ்ச அளவுக்கு வயசான காலத்துல என் ஆத்தாவுக்கு சுமையா இல்லாம இங்க எதோ குடுக்குற வேலைய பார்த்துகிட்டு இருக்கலாம்ன்னா அதுக்கு சண்டைக்கு வாரங்க” என மனதில் பலவித எண்ணங்களுடன் சலித்துக்கொண்டு ஜானவியின் அருகில் அமர்ந்த தென்றல்
“ அம்மா எனக்கு என்ன செய்றேன் ஏது செய்றேன்னு தெரியல. நீங்க என்ன சொல்றிங்களோ அப்படியே செய்றேன். அது இந்த வீட்டை விட்டு போக சொன்னாலும் சரி” என விரக்தியாக கூறிய தென்றலை கண்டு
“ பார்த்தியா நித்தி இப்போ கூட எப்பிடிம்மா என் வாழ்க்கையை சரி பண்றது என் புருசனுக்கு எப்பிடி என்னைய பிடிக்கவைக்கிறதுன்னு கேட்குறாளா இங்க இருந்து போறதுல குறியா இருக்கா” என ஜானவி குறைபட