காதல் சொல்ல வந்தேன்
தயங்கி தயங்கி ஒரு வழியாக அவளை நெருங்கினேன்.இதயத்திற்குள் ஏதோ ஓர் படபடப்பு எனக்குள் நானே தைரியம் வர வைத்து கொண்டு அவளை நோக்கி முன்னேறினேன்.நான் அவளை பார்க்க வருவது அவளுக்கும் தெரியும் ஆனால் அவளோ கல் நெஞ்சக் காரி அல்லவா அதான் கண்டுக்கொள்ளாமல் என்னை கடந்து விட்டாள்....
என்னை கடந்த என்னவளின் பெயரை சொல்லி அழைத்தேன் .அவள் முறைத்து கொண்டே அவள் காந்த குரலில் கனக்க என்னவென்று கேட்டாள்.மீண்டும் எனக்குள் தடுமாற்றம் அது அது வந்து என்று இழுத்தேன் .என்ன இழுக்கிறாய் என்றாள்.ஒன்றும் இல்லை என்று திரும்பி வந்துவிட்டேன்.
என்ன ஆனாலும் சரி இன்று காதல் சொல்லியே ஆக வேண்டும் என்று எனக்குள் தைரியம் வர வைத்து மீண்டும் அழைத்து அவள் இரு கண்களையும் பார்த்து
உன்னை என்று பார்த்தேனோ அன்று முதல் உன் நினைவுகளாகவே உள்ளது எங்கு பார்த்தாலும் உந்தன் பிம்பமே தெரிகிறது.என்னால் உன் நினைவுகளை மறக்க முடியவில்லை.உன்னிடம் பேசுவதற்கே பயம் தான் எனக்கு இருப்பினும் இன்று உன்னிடம் என் காதலை சொல்லியே ஆக வேண்டும் என்று தைரியம் வர வைத்து கொண்டு சொல்ல வந்தேன்.என்ளு என்று கூறினேன்.அவள் முறைத்தாள்.எனக்கோ இதயம் பதபதத்தது கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது.சிறிது நேரம் அமைதி காத்தவள்.என் கண்ணத்தில் முத்தமிட்டு இதை சொல்ல உனக்கு இவ்வளவு நாளா என்று கேட்டாள்.எனக்குள் இனம் புரியாத இன்பம் .அந்த தருணத்தை வார்த்தையால் சொல்ல முடியவில்லை.என்னை சுற்றி ஆயிர கணக்கான வண்ணத்துப்பூச்சி பறப்பது போல் இன்பத்தில் துள்ளி குதித்தேன்.....
காதல் சொல்ல வந்த என்னை கன நேரத்தில் கள்வனாக மாற்றிவிட்டாயடி....
மலரும் காதல்....
தனிமையின் ரசிகன்
Last edited by a moderator: