இதயம் கேட்கும் காதல்…
பகுதி 15
அபிதா, சொன்னதை கேட்ட பின்பு மனம் ஒரளவு சமாதானம் அடைந்தாலும், இதழினியிடம் இது குறித்து பேசிட வேண்டும் என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தவன், சில நிமிடத்தில் தன்னிலைபடுத்தி கொண்டான். அதன் பின் நிச்சயதார்த்தத்திற்காக வர சொன்னது நியாபகம் வர, அவசரமாக அறையை விட்டு வெளியேற போனவன், அப்போது தான் சந்துரு நின்றிருந்த நிலையையே கவனித்தான்.
'என்னடா இது இப்படி ஒரு பரவசநிலையில நிக்கறான்?! சம்திங் ராங்…!!!' என்று மனதில் நினைத்தவன், அவனை நெருங்கி முதுகில் 'சட்..' டென ஒரு அடி கொடுக்க, அப்போது தான், அபியின் நினைவில் கனவுலகில் மிதந்து கொண்டிருந்த சந்துரு பூலோகம் திரும்ப, விழுந்த அடியின் தாக்கத்தால் முதுகை வருட கஷ்டப்பட்டவாறே,
'செழியா.. ஏன்டா?!' என்பதான பார்வை பார்க்க, "கனவு கண்டது போதும், அங்க கூப்பிடுறாங்க. அத முடுச்சிட்டு வந்து உன்னை கவனிக்கறேன்.. இப்ப வா.." என்ற படி முன்னே செல்ல, அவனை தொடர்ந்து, தனது கனவை கலைத்த, செழியனை மனதில் வறுத்தெடுத்த படி, பின்னால் சென்றான் சந்துரு.
நிச்சய பத்திரிக்கை வாசிக்க, துவங்கவும் மணமகனாய், தனது முழு உயரமும், கம்பிரமும் மின்ன, ஆணழகனாய் மேடை ஏறினான் செழியன்.
மேடையில், மெல்ல இதழினியின் அருகே வந்தததும், யாரும் அறியா வண்ணம், தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவளின் ரசனை பார்வையோடு, தன் பார்வையை கலந்தவன்.. சட்டென தன் ஒற்றை கண் சிமிட்டி, முத்தமிடுவது போல செய்கை காட்ட, அதிர்ச்சியிலும், வெக்கத்தாலும் முகம் சிவக்க தலைகவிழந்தாள் செழியனின் இதழினி.
இதழினிக்கோ, செழியனின் இந்த செயலை எதிர்பார்க்காததால் வந்த வெக்கம் ஒரு புறம், யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்களோ என்ற சிந்தனை ஒரு புறமென தவிக்க, அதே நேரம் இதுவரை மனதை அழுத்திய பாரம் சென்ற இடம் தெரியாது மறைந்ததால், ஏற்பட்ட ஆனந்தம் அவளின் அழகை மேலும் கூட்டிய அத்தருணம், நீங்கா ஓவியமாய் பதிவானது நிழல்படமாய்….
அதுவரை இருந்த குழப்பம் நீங்கியதாலும், இப்போதைய வெக்கத்தாலும், அவளின் முகம் காட்டும் வர்ண ஜாலத்தில், அவள் மேல் ஏற்கனவே பித்தாகி நின்றவன் நிலை இப்போது சொல்லவும் வேண்டுமோ.. மோன நிலையில் அவளை விழி வழி உள்வாங்கியபடி நின்றவனை, சந்துரு மற்றும் நண்பர்கள் குலாம் சேர்ந்து கலாய்க்க, அதன் விளைவால் மீண்டவனும்
வெக்கத்தில் முகம் சிவந்தான்.
மங்கள பத்திரிக்கை வாசித்து முடித்தவுடன் மோதிரம் மாற்றிக்கொள்ள சொன்ன நொடி, சிறு புன்னகையோடு, அவள் முன் ஒற்றை காலில் மண்டியிட்டு அமர்ந்தவன், தனது ஒரு கையில் மின்னும் வைர மோதிரத்தை அவளை நோக்கி நீட்டி, "வில் யூ மேரி மீ" என்றதும்..
அவனின் உயரம், கம்பீரம் தாண்டி, தன் காதலுக்காய், இத்தனை வருடம் காத்திருந்த அவனின் நேசத்தில் கண்கள், ஆனந்த கண்ணீர் வடிய.. அதற்கு மாறாய் இதழ்களில் புன்னகை சிந்த, வார்த்தை வெளிவராத நிலையில், தலையை, "ஆம். " என ஆட்டிய நேரம், அவளின் விரல் பற்றி தனது காதலின் பரிசாய் அந்த மோதிரத்தை அணிவித்தான், இதழினியின் இதயம் கவர்ந்தவன்.
அடுத்து அவளும் அவனுக்கு மோதிரம் அணிவிக்க.. அவளை நெருங்கி நின்றவன். "ஏன் லிப்ஸ்.. என்னை கல்யாணம் பண்ணறது அவ்வளவு கொடுமையா….வா.. இருக்கு.?????" என்றதும் புரியாது, அவனின் முகம் பார்த்து, விழித்தவளை நேருக்கு நேர் பார்த்தவன்,
"இல்ல... கண்ணுல இருந்து டேம் ஓப்பன் ஆகி, வாட்டர் பால்ஸ் கொட்டுதே.. அதான் டவுட்ல கேட்டேன் " என்று புன்னகையோடு குறும்பாய் கேட்க, தான் அழுகையோடு அவனுக்கு அளித்த சம்மதத்திற்கு கலாய்ப்பதை உணர்ந்தவள்.. மெல்ல அவனின் முகம் பார்த்து சிரிக்க…
"இது எவ்வளவு அழகா இருக்கு… அதவிட்டுட்டு டேமை ஓப்பன் பண்ணிட்டு.. ஏற்கனவே மண்டபம் புல்லாகி இருக்கு… நீ செய்யற வேலைக்கு இருக்கற தண்ணி பஞ்சத்துக்கு குடத்தை தூக்கிட்டு, ஊரே வந்திட போகுதும்மா…!" என்றபடி, சிரித்தவனை கண்டு,
இதுவரை இருந்த நிலை மாறி, உரிமையோடு தன்னவனை முறைக்க,
"லிப்ஸ், எல் எல் ஆர் போட்டதுமே இப்படி முறைக்கற.. நாளைக்கி ப்ராப்பரா லைசன்சே கிடச்சிடுமே… அப்ப என்னோட நிலைமை…" என்றதும், தான் செய்த செயல் நினைவில் எழ, "சாரி.. தெரியாம…." என்று தடுமாறி சொல்லி, சஞ்சலமும், கூச்சமும் கூட அவசரமாக தலை கவிழந்தவளை நெருங்கியவன்,
"இதழினி, இப்ப இந்த நிமிஷம் முதல், நம்ம வாழ்க்கையோட கடைசி நிமிஷம் வரை, சந்தோஷத்திற்காக கூட உன் கண் கலங்ககூடாது... அதே மாதிரி நான் எப்படி உன்கிட்ட உரிமையா எல்லாமே பேசறேனோ, அதே அளவு என்னை கண்டிக்கவும், தப்பு செஞ்சா தண்டக்கவும் கூட உனக்கு உரிமை இருக்கு.. பட் எதுவானாலும் நம்ம ஒண்ணா இருந்து தான் செய்யனும்.. பிரிவுங்கற பேச்சே வரக்கூடாது.
அப்படி நடந்தா, அது என் காதலோட ஆழத்தை நான், உனக்கு உணர்த்த தவறிட்டேன்னு அர்த்தம்" என்ற வார்த்தையில் இருந்த அழுத்தமும், சொன்ன தோணியும்,
பகுதி 15
அபிதா, சொன்னதை கேட்ட பின்பு மனம் ஒரளவு சமாதானம் அடைந்தாலும், இதழினியிடம் இது குறித்து பேசிட வேண்டும் என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தவன், சில நிமிடத்தில் தன்னிலைபடுத்தி கொண்டான். அதன் பின் நிச்சயதார்த்தத்திற்காக வர சொன்னது நியாபகம் வர, அவசரமாக அறையை விட்டு வெளியேற போனவன், அப்போது தான் சந்துரு நின்றிருந்த நிலையையே கவனித்தான்.
'என்னடா இது இப்படி ஒரு பரவசநிலையில நிக்கறான்?! சம்திங் ராங்…!!!' என்று மனதில் நினைத்தவன், அவனை நெருங்கி முதுகில் 'சட்..' டென ஒரு அடி கொடுக்க, அப்போது தான், அபியின் நினைவில் கனவுலகில் மிதந்து கொண்டிருந்த சந்துரு பூலோகம் திரும்ப, விழுந்த அடியின் தாக்கத்தால் முதுகை வருட கஷ்டப்பட்டவாறே,
'செழியா.. ஏன்டா?!' என்பதான பார்வை பார்க்க, "கனவு கண்டது போதும், அங்க கூப்பிடுறாங்க. அத முடுச்சிட்டு வந்து உன்னை கவனிக்கறேன்.. இப்ப வா.." என்ற படி முன்னே செல்ல, அவனை தொடர்ந்து, தனது கனவை கலைத்த, செழியனை மனதில் வறுத்தெடுத்த படி, பின்னால் சென்றான் சந்துரு.
நிச்சய பத்திரிக்கை வாசிக்க, துவங்கவும் மணமகனாய், தனது முழு உயரமும், கம்பிரமும் மின்ன, ஆணழகனாய் மேடை ஏறினான் செழியன்.
மேடையில், மெல்ல இதழினியின் அருகே வந்தததும், யாரும் அறியா வண்ணம், தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவளின் ரசனை பார்வையோடு, தன் பார்வையை கலந்தவன்.. சட்டென தன் ஒற்றை கண் சிமிட்டி, முத்தமிடுவது போல செய்கை காட்ட, அதிர்ச்சியிலும், வெக்கத்தாலும் முகம் சிவக்க தலைகவிழந்தாள் செழியனின் இதழினி.
இதழினிக்கோ, செழியனின் இந்த செயலை எதிர்பார்க்காததால் வந்த வெக்கம் ஒரு புறம், யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்களோ என்ற சிந்தனை ஒரு புறமென தவிக்க, அதே நேரம் இதுவரை மனதை அழுத்திய பாரம் சென்ற இடம் தெரியாது மறைந்ததால், ஏற்பட்ட ஆனந்தம் அவளின் அழகை மேலும் கூட்டிய அத்தருணம், நீங்கா ஓவியமாய் பதிவானது நிழல்படமாய்….
அதுவரை இருந்த குழப்பம் நீங்கியதாலும், இப்போதைய வெக்கத்தாலும், அவளின் முகம் காட்டும் வர்ண ஜாலத்தில், அவள் மேல் ஏற்கனவே பித்தாகி நின்றவன் நிலை இப்போது சொல்லவும் வேண்டுமோ.. மோன நிலையில் அவளை விழி வழி உள்வாங்கியபடி நின்றவனை, சந்துரு மற்றும் நண்பர்கள் குலாம் சேர்ந்து கலாய்க்க, அதன் விளைவால் மீண்டவனும்
வெக்கத்தில் முகம் சிவந்தான்.
மங்கள பத்திரிக்கை வாசித்து முடித்தவுடன் மோதிரம் மாற்றிக்கொள்ள சொன்ன நொடி, சிறு புன்னகையோடு, அவள் முன் ஒற்றை காலில் மண்டியிட்டு அமர்ந்தவன், தனது ஒரு கையில் மின்னும் வைர மோதிரத்தை அவளை நோக்கி நீட்டி, "வில் யூ மேரி மீ" என்றதும்..
அவனின் உயரம், கம்பீரம் தாண்டி, தன் காதலுக்காய், இத்தனை வருடம் காத்திருந்த அவனின் நேசத்தில் கண்கள், ஆனந்த கண்ணீர் வடிய.. அதற்கு மாறாய் இதழ்களில் புன்னகை சிந்த, வார்த்தை வெளிவராத நிலையில், தலையை, "ஆம். " என ஆட்டிய நேரம், அவளின் விரல் பற்றி தனது காதலின் பரிசாய் அந்த மோதிரத்தை அணிவித்தான், இதழினியின் இதயம் கவர்ந்தவன்.
அடுத்து அவளும் அவனுக்கு மோதிரம் அணிவிக்க.. அவளை நெருங்கி நின்றவன். "ஏன் லிப்ஸ்.. என்னை கல்யாணம் பண்ணறது அவ்வளவு கொடுமையா….வா.. இருக்கு.?????" என்றதும் புரியாது, அவனின் முகம் பார்த்து, விழித்தவளை நேருக்கு நேர் பார்த்தவன்,
"இல்ல... கண்ணுல இருந்து டேம் ஓப்பன் ஆகி, வாட்டர் பால்ஸ் கொட்டுதே.. அதான் டவுட்ல கேட்டேன் " என்று புன்னகையோடு குறும்பாய் கேட்க, தான் அழுகையோடு அவனுக்கு அளித்த சம்மதத்திற்கு கலாய்ப்பதை உணர்ந்தவள்.. மெல்ல அவனின் முகம் பார்த்து சிரிக்க…
"இது எவ்வளவு அழகா இருக்கு… அதவிட்டுட்டு டேமை ஓப்பன் பண்ணிட்டு.. ஏற்கனவே மண்டபம் புல்லாகி இருக்கு… நீ செய்யற வேலைக்கு இருக்கற தண்ணி பஞ்சத்துக்கு குடத்தை தூக்கிட்டு, ஊரே வந்திட போகுதும்மா…!" என்றபடி, சிரித்தவனை கண்டு,
இதுவரை இருந்த நிலை மாறி, உரிமையோடு தன்னவனை முறைக்க,
"லிப்ஸ், எல் எல் ஆர் போட்டதுமே இப்படி முறைக்கற.. நாளைக்கி ப்ராப்பரா லைசன்சே கிடச்சிடுமே… அப்ப என்னோட நிலைமை…" என்றதும், தான் செய்த செயல் நினைவில் எழ, "சாரி.. தெரியாம…." என்று தடுமாறி சொல்லி, சஞ்சலமும், கூச்சமும் கூட அவசரமாக தலை கவிழந்தவளை நெருங்கியவன்,
"இதழினி, இப்ப இந்த நிமிஷம் முதல், நம்ம வாழ்க்கையோட கடைசி நிமிஷம் வரை, சந்தோஷத்திற்காக கூட உன் கண் கலங்ககூடாது... அதே மாதிரி நான் எப்படி உன்கிட்ட உரிமையா எல்லாமே பேசறேனோ, அதே அளவு என்னை கண்டிக்கவும், தப்பு செஞ்சா தண்டக்கவும் கூட உனக்கு உரிமை இருக்கு.. பட் எதுவானாலும் நம்ம ஒண்ணா இருந்து தான் செய்யனும்.. பிரிவுங்கற பேச்சே வரக்கூடாது.
அப்படி நடந்தா, அது என் காதலோட ஆழத்தை நான், உனக்கு உணர்த்த தவறிட்டேன்னு அர்த்தம்" என்ற வார்த்தையில் இருந்த அழுத்தமும், சொன்ன தோணியும்,