இதயம் கேட்கும் காதல்…
பகுதி 16
மாலை நெருங்கும் வேளையில், செழியனின் இல்லத்திற்கு வந்து சேர்ந்த பதுமணத் தம்பதியரை, அங்கிருந்த மூத்த பெண்மணி ஆலம் சுற்றி வரவேற்க,
தன் வாழ்வை வசந்தமாய் மாற்ற வந்த, தன் கணவன் செழியனுடன் மனதில் நிறைவுடனும், அளவில்லா சந்தோஷத்தோடும், தனது வலது கால் பதித்து, அவனின் கரம் பற்றி இல்லத்தில் நுழைந்தாள் செழியனின் இதழினி.
இதழினியை, செழியனோடு பூஜை அறைக்கு அழைத்து சென்ற சந்திரா, விளக்கை ஏற்ற சொல்ல, அதன் படி செய்தவள், அடுத்ததாக அங்கிருந்த செழியனின் தந்தையையும், அவனின் பெரிய தந்தையையும் வணங்கிவிட்டு, வரவேற்பரைக்கு அழைத்து வரப்பட்டாள்.
அடுத்த சடங்காய், மணமக்களுக்கு பால், பழம் கொடுத்து முடிக்க, 'அப்பாடா, ஒரு வழியா எல்லாம் ஓவர். இப்பவாச்சும் என் பொண்டாட்டி கூட தனியா நாலு வார்த்தை ப்ரீ யா பேச விட்டா சரி..!' என்று நினைத்து முடிக்கும் முன்..
சந்திரா, "அம்மாடி இதழினி, நீ போய் கீழ இருக்கற, என்னோட ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுடா. காலைல நேரமே எழுந்து, இதுவரைக்கும் சடங்கு, சம்பிரதாயமுன்னு உனக்கு உக்கார கூட டைம் கிடைக்கல. போடாம்மா…" என்றதும்,
சரியென தலையாட்டி அவர் சொன்ன அறைக்கு இதழினி செல்ல, கடுப்போடு தனது தாயை மறைமுகமாய் முறைத்துக் கொண்டிருந்தான் செழியன்.
'செழியன் உனக்கு முதல் வில்லியே, உன் மூன் தான். உன்னோட ப்ளான் எல்லாத்தையும், எப்படியோ தெரிஞ்சு கரெக்ட்டா ஆப்பு வச்சிடுச்சு.
மொதல்ல ஹனிமூன் போயிட்டு வந்ததும், மூனுக்கு டிக்கெட் புக் பண்ணி, ஆல் இண்டியா டூர் அனுப்பிடனும். காசில இருந்து கன்னியாகுமரி வரைக்கும் சுத்திட்டு வர்றதுக்குள்ள, ஒரு புள்ளைய பெத்து கையில கொடுத்திட்டா, நம்ம சைடே வராது.
இல்லாட்டி, மருமகள கைக்குள்ள போட்டுக்கிட்டு என்னைய கவுத்திடும். மாமியார், மருமக கூட்டணி சேர்ந்தா, ரொம்ப டேன்ஜர். செழியா பீ அலார்ட்!' என தீவிர யோசனையில் இருந்தவனிடம் வந்த சந்திரா,
"செழியா, நீ என்னடா இப்படி உக்காந்திருக்க. போ, போய் நீயும் உன் ரூம்ல ரெஸ்ட் எடு. இல்ல சந்துரு வெளிய இருக்கான் பாரு. அவன் கூட போய் வேலைய பாரு" என்றபடியே உறவுகளை கவனிக்க சந்திரா செல்ல, தனது விதியை நொந்த படி, சந்துருவை தேடி சென்றான் செழியன்.
சந்துருவை நாடி வந்தவன், பேச்சு தொழில் பற்றி செல்ல, செழியனின் மனமும் அதனுள் சென்று நின்றது. அதோடு, இன்னும் இரு வாரங்கள், சந்துரு மட்டுமே எல்லா இடத்திலும் பார்க்க வேண்டிய நிலை என்பதால், எல்லாமே சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வதும், அடுத்து எந்த எந்த வேலைகளை முதலில் முடிப்பது என்பது தொடர்பான விசயங்களில் மூழ்கி போக, நேரமும் விரைந்திருந்தது.
வந்திருந்த சில உறவுகளும் இரவு உணவோடு விடை பெற, சந்துருவும் கிளம்பிய பின், செழியனுக்கும் இதழினிக்கும் உணவை கொடுத்த சந்திரா, மீண்டும் தனது அறைக்கு இதழினியை அழைத்து செல்ல,
"என்னடா செழியா, இந்த மூன் இப்படி வச்சு செய்யுது உன்னை… கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா சுத்த விட்டும் போலவே…" என வாய்விட்டே புலம்பிட படியே, மேலே தனது அறைக்கு சென்றவனுக்கு, தனது அறையின் அலங்காரமே, 'அப்பாடா.. நம்ம நினைச்ச மாதிரி இல்ல..' என்ற ஆசுவாசத்தை தர.. தன் நினைப்பை எண்ணி, தனது பின்னந்தலையை கோதியவன், துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றான்.. இதழினி வருவதற்குள் தயாராகிட எண்ணி…..
சந்திராவும், மதியும் தந்த புடவை, நகையை அணிந்து, எளிமையாய் தயாரானவளுக்கு தலையில் மல்லிகை பூச்சூடி, நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தி அனுப்பினர் கையில் பாலோடு…
இதழினிக்கோ, செழியன் மதியம் பார்த்த பார்வையே மீண்டும் மீண்டும் மனதில் தோன்றி இம்சித்தது.
எவ்வளவு தான் மெதுவாக சென்ற போதும், அவனின் அறை வந்து விட, மனதில் இருந்த பதட்டம், பயம் கலந்த தவிப்போடு உள்ளே செல்வதற்கு தயங்கி நின்றாள் இதழினி.
அவளின் தயக்கம் உணர்ந்தவன் போன்று சரியாக அதே நேரம், தனது அறையின் கதவை திறந்து, சிறு புன்னகையோடு எதிர் கொண்டான் இதழினியின் மணவாளன்.
அவனின் முகம் பார்க்க நாணி, தலை கவிழ, அது கூட அவனின் மோகத்தை கூட்டவே செய்தது. ஆனாலும் அவளின் நிலை உணர்ந்து, "என்ன மேடம் இப்படியே பாலை கொடுத்திட்டு, எஸ் ஆகிடலாமின்னு யோசனையா?!" என குறும்பாக, கைகளை கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்து நின்று கேட்க..
அவனின் பேச்சில், தான் நிற்கும் இடம் உணர்ந்து, உள்ளே செல்ல பார்த்தால், செழியன் நகர்ந்தால் மட்டுமே, அவளால் உரசாமல் செல்ல முடியும் என்பதை போல அவன் நிற்க, பெண்ணவள் தவிப்பு தான் அதிகரித்தது.
இதற்கு மேலும் சீண்டிக் கொண்டிருந்தால், 'அவள் வந்த வழியே ஓடிவிடுவாளோ?! அல்லது மயங்கி விழுந்து தனது ஆசைக்கு வேட்டு வைத்திடுவாளோ?!' என்ற அச்சம் தோன்ற,
பகுதி 16
மாலை நெருங்கும் வேளையில், செழியனின் இல்லத்திற்கு வந்து சேர்ந்த பதுமணத் தம்பதியரை, அங்கிருந்த மூத்த பெண்மணி ஆலம் சுற்றி வரவேற்க,
தன் வாழ்வை வசந்தமாய் மாற்ற வந்த, தன் கணவன் செழியனுடன் மனதில் நிறைவுடனும், அளவில்லா சந்தோஷத்தோடும், தனது வலது கால் பதித்து, அவனின் கரம் பற்றி இல்லத்தில் நுழைந்தாள் செழியனின் இதழினி.
இதழினியை, செழியனோடு பூஜை அறைக்கு அழைத்து சென்ற சந்திரா, விளக்கை ஏற்ற சொல்ல, அதன் படி செய்தவள், அடுத்ததாக அங்கிருந்த செழியனின் தந்தையையும், அவனின் பெரிய தந்தையையும் வணங்கிவிட்டு, வரவேற்பரைக்கு அழைத்து வரப்பட்டாள்.
அடுத்த சடங்காய், மணமக்களுக்கு பால், பழம் கொடுத்து முடிக்க, 'அப்பாடா, ஒரு வழியா எல்லாம் ஓவர். இப்பவாச்சும் என் பொண்டாட்டி கூட தனியா நாலு வார்த்தை ப்ரீ யா பேச விட்டா சரி..!' என்று நினைத்து முடிக்கும் முன்..
சந்திரா, "அம்மாடி இதழினி, நீ போய் கீழ இருக்கற, என்னோட ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுடா. காலைல நேரமே எழுந்து, இதுவரைக்கும் சடங்கு, சம்பிரதாயமுன்னு உனக்கு உக்கார கூட டைம் கிடைக்கல. போடாம்மா…" என்றதும்,
சரியென தலையாட்டி அவர் சொன்ன அறைக்கு இதழினி செல்ல, கடுப்போடு தனது தாயை மறைமுகமாய் முறைத்துக் கொண்டிருந்தான் செழியன்.
'செழியன் உனக்கு முதல் வில்லியே, உன் மூன் தான். உன்னோட ப்ளான் எல்லாத்தையும், எப்படியோ தெரிஞ்சு கரெக்ட்டா ஆப்பு வச்சிடுச்சு.
மொதல்ல ஹனிமூன் போயிட்டு வந்ததும், மூனுக்கு டிக்கெட் புக் பண்ணி, ஆல் இண்டியா டூர் அனுப்பிடனும். காசில இருந்து கன்னியாகுமரி வரைக்கும் சுத்திட்டு வர்றதுக்குள்ள, ஒரு புள்ளைய பெத்து கையில கொடுத்திட்டா, நம்ம சைடே வராது.
இல்லாட்டி, மருமகள கைக்குள்ள போட்டுக்கிட்டு என்னைய கவுத்திடும். மாமியார், மருமக கூட்டணி சேர்ந்தா, ரொம்ப டேன்ஜர். செழியா பீ அலார்ட்!' என தீவிர யோசனையில் இருந்தவனிடம் வந்த சந்திரா,
"செழியா, நீ என்னடா இப்படி உக்காந்திருக்க. போ, போய் நீயும் உன் ரூம்ல ரெஸ்ட் எடு. இல்ல சந்துரு வெளிய இருக்கான் பாரு. அவன் கூட போய் வேலைய பாரு" என்றபடியே உறவுகளை கவனிக்க சந்திரா செல்ல, தனது விதியை நொந்த படி, சந்துருவை தேடி சென்றான் செழியன்.
சந்துருவை நாடி வந்தவன், பேச்சு தொழில் பற்றி செல்ல, செழியனின் மனமும் அதனுள் சென்று நின்றது. அதோடு, இன்னும் இரு வாரங்கள், சந்துரு மட்டுமே எல்லா இடத்திலும் பார்க்க வேண்டிய நிலை என்பதால், எல்லாமே சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வதும், அடுத்து எந்த எந்த வேலைகளை முதலில் முடிப்பது என்பது தொடர்பான விசயங்களில் மூழ்கி போக, நேரமும் விரைந்திருந்தது.
வந்திருந்த சில உறவுகளும் இரவு உணவோடு விடை பெற, சந்துருவும் கிளம்பிய பின், செழியனுக்கும் இதழினிக்கும் உணவை கொடுத்த சந்திரா, மீண்டும் தனது அறைக்கு இதழினியை அழைத்து செல்ல,
"என்னடா செழியா, இந்த மூன் இப்படி வச்சு செய்யுது உன்னை… கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா சுத்த விட்டும் போலவே…" என வாய்விட்டே புலம்பிட படியே, மேலே தனது அறைக்கு சென்றவனுக்கு, தனது அறையின் அலங்காரமே, 'அப்பாடா.. நம்ம நினைச்ச மாதிரி இல்ல..' என்ற ஆசுவாசத்தை தர.. தன் நினைப்பை எண்ணி, தனது பின்னந்தலையை கோதியவன், துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றான்.. இதழினி வருவதற்குள் தயாராகிட எண்ணி…..
சந்திராவும், மதியும் தந்த புடவை, நகையை அணிந்து, எளிமையாய் தயாரானவளுக்கு தலையில் மல்லிகை பூச்சூடி, நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தி அனுப்பினர் கையில் பாலோடு…
இதழினிக்கோ, செழியன் மதியம் பார்த்த பார்வையே மீண்டும் மீண்டும் மனதில் தோன்றி இம்சித்தது.
எவ்வளவு தான் மெதுவாக சென்ற போதும், அவனின் அறை வந்து விட, மனதில் இருந்த பதட்டம், பயம் கலந்த தவிப்போடு உள்ளே செல்வதற்கு தயங்கி நின்றாள் இதழினி.
அவளின் தயக்கம் உணர்ந்தவன் போன்று சரியாக அதே நேரம், தனது அறையின் கதவை திறந்து, சிறு புன்னகையோடு எதிர் கொண்டான் இதழினியின் மணவாளன்.
அவனின் முகம் பார்க்க நாணி, தலை கவிழ, அது கூட அவனின் மோகத்தை கூட்டவே செய்தது. ஆனாலும் அவளின் நிலை உணர்ந்து, "என்ன மேடம் இப்படியே பாலை கொடுத்திட்டு, எஸ் ஆகிடலாமின்னு யோசனையா?!" என குறும்பாக, கைகளை கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்து நின்று கேட்க..
அவனின் பேச்சில், தான் நிற்கும் இடம் உணர்ந்து, உள்ளே செல்ல பார்த்தால், செழியன் நகர்ந்தால் மட்டுமே, அவளால் உரசாமல் செல்ல முடியும் என்பதை போல அவன் நிற்க, பெண்ணவள் தவிப்பு தான் அதிகரித்தது.
இதற்கு மேலும் சீண்டிக் கொண்டிருந்தால், 'அவள் வந்த வழியே ஓடிவிடுவாளோ?! அல்லது மயங்கி விழுந்து தனது ஆசைக்கு வேட்டு வைத்திடுவாளோ?!' என்ற அச்சம் தோன்ற,