இதயம் கேட்கும் காதல்…
பகுதி 17
அமைதியாய் கழிந்த உணவு வேளையின் போதே, இதழினி முகத்தில் தெரிந்த சிறு குழப்பத்தை கண்டு கொண்ட செழியன், அதை அறிந்து சரி செய்யும் நோக்கோடு, "லிப்ஸ், கொஞ்ச நேரம் நம்ம தோட்டத்துல இருக்கலாமா?! உனக்கு ஒண்ணும் டையர்டா இல்லையே?!" என்றிட,
"அப்படியெல்லாம் இல்லைங்க, தோட்டத்துக்கே போலாம்.." என்று சொல்லி, செழியனோடு தோட்டத்தில் இருந்த மல்லிகை பந்தலுக்கு வந்தவர்கள், அங்கிருந்த கல்மேடை போன்ற அமைப்பில் அமர்ந்தனர்.
தோட்டத்திற்கு வந்து சில நிமிட நேரம் கழிந்தும், பலத்த யோசனையோடு இருந்த இதழினியை பார்த்திருந்த செழியனுக்கு குழப்பமே மிஞ்சியது.
அவளை சரி செய்யும் பொருட்டு, "லிப்ஸ் ரூம்ல இருக்கற வரை சரியா இருந்தே, இப்ப வெளிய வந்து இவ்வளவு நேரம் டீப்பா யோசிக்கறத பார்த்தா, கத்து கொடுத்த பாடம் சரியா புரியலை போலவே..! அப்படி இருந்தா சொல்லு, நல்லா மறுபடியும் தெளிவா சொல்லி கொடுக்கறேன். அதவிட்டுட்டு ஹனிமூன் போற இடத்துல சொதப்பிடாத…" என்று தன் ஒற்றை கண்சிமிட்டி கேட்டவனின் பாவனையில்,
இதுவரை இருந்த மனநிலை சற்று மாறி, இரவின் நிகழ்வுகளும், அப்போது அவளின் காதுகளில் அவனுரைத்த சில ரகசிய சீண்டல் பேச்சுக்களும் நினைவில் எழ, அந்த மாலை வானத்திற்கு போட்டியாக மாறி போனது பெண்ணவளின் மதி வதனம்.
"ஓய், லிப்ஸ் இப்படியெல்லாம் உன் ஃபேஷ், வர்ண ஜாலம் காட்டினா மனுஷன் எப்படி ஸ்டெடியா இருக்க முடியும் சொல்லு…?!" என்றபடியே அவளை நோக்கி, தனது முகத்தை கொண்டு வந்தவனை, தனது கரம் கொண்டு தடுத்தவள்,
"என்னங்க இப்படி, ஓப்பன் ப்ளேஸ்ல, கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம…" என்று வெக்கத்தோடு சிணுங்கிட,
"லிப்ஸ், யூ நோ, அந்த காலத்துல ஆதி மனிதன், ஆதம் ஏவல் எல்லாம் இந்த மாதிரி இயற்கையோட தான் அவங்க வாழ்க்கையையே வாழ்ந்தாங்க. நீ என்னடான்னா, நம்ம வீட்டு தோட்டத்துல பக்கம் வந்தாலே இப்படி ஜர்க் ஆகுற. இதுல செல்லமா சிணுங்கி, நல்ல பையனா இருந்தவன கெடுக்கறதே நீ தான்.." என்று அவன் ஆரம்பத்தது தான் என்பதை மறைத்து, அவளையே காரணியாக்கியவன் கண்டு முறைத்த இதழினியை நெருங்கி தோளோடு அணைத்தவன்,
"இதழினி, உன் மனசுல எதையோ யோசிச்சு குழம்பறேன்னு புரியாதுடா, பட், அது என்னன்னு நீயா சொன்னா தானே எனக்கு புரியும். சில விசயத்தை நானா புரிஞ்சுக்கலாம். எல்லாமே அப்படி முடியுமா.. நானும் சாதாரண மனுஷன் தான் மஹானோ, மகரிஷியோ இல்ல, அடுத்தவங்க மனசுல நினைக்கற எல்லாத்தையும் சொல்லாம தெரிஞ்சுக்க.." என்றதும்,
அவனின் இத்தனை நேர சீண்டலுக்கான அர்த்தம் புரிந்திட, அவனின் தன் மீதான காதலும், தனது முகத்தினை பார்த்தே, தனது மனதை படித்து, அதை தீர்க்க நினைப்பவனின் மீது, இன்னும் இன்னும் காதல் கூடி கொண்டே சென்றது இதழினிக்கு…
"இல்லைங்க.. எனக்கு நீங்க கொஞ்சம் வசதியான வீட்டு பையன்னு காலேஜ்லயே தெரியும். அதனாலையே உங்க விளையாட்டு தனமான பேச்சை ரசிச்சாலும், உங்க மேல ஏதோ ஒரு நேரத்தில ஏற்பட்ட ஈர்ப்பை கூட, 'இது ஒத்துவராது' ன்னு நினச்சி ஒதுங்கி போயிருக்கேன்.
நீங்க காதலை சொன்ன சமயத்தில அதை பத்தி சிந்திக்கற நிலைமையில சுத்தமா நான் இல்ல. அதான் மறுத்து பேசிட்டு போயிட்டேன். அதுக்கு அப்புறமும் நான் அதை பத்தி யோசிக்க, என் குடும்ப சூழ்நிலை ஒத்துழைக்கல.
சரி, நீங்க என் வாழ்க்கையில எங்கையுமே இல்லைன்னு இருந்த நேரத்தில, ஹரிஹரன் சார் என்னை பெண் பார்க்க வந்தாங்க. அதுவரை கூட எனக்கு எதுவுமே தோணல. ஆனா, அதுக்கு பின்னாடி ஏனோ உங்க நினைப்பு தான் என் மனசுல.
அப்ப கூட, நீங்க உங்க வசதிக்கு, இத்தனை நாள்ல வேற வாழ்க்கைன்னு நீங்க போயிருப்பீங்கன்னு தான் நான் நினைச்சிட்டு இருந்தேன்.
அதெல்லாம் இல்ல, எப்பவும் நீ எனக்கு தான்னு எனக்காக காத்திருந்து, இவ்வளவு தூரம் எல்லாம் செஞ்சு, கல்யாணம் பண்ணியிருக்கீங்க ன்னா உங்க காதல் எவ்வளவு உண்மையானதா, உயர்வா இருந்திருக்கும்.
பகுதி 17
அமைதியாய் கழிந்த உணவு வேளையின் போதே, இதழினி முகத்தில் தெரிந்த சிறு குழப்பத்தை கண்டு கொண்ட செழியன், அதை அறிந்து சரி செய்யும் நோக்கோடு, "லிப்ஸ், கொஞ்ச நேரம் நம்ம தோட்டத்துல இருக்கலாமா?! உனக்கு ஒண்ணும் டையர்டா இல்லையே?!" என்றிட,
"அப்படியெல்லாம் இல்லைங்க, தோட்டத்துக்கே போலாம்.." என்று சொல்லி, செழியனோடு தோட்டத்தில் இருந்த மல்லிகை பந்தலுக்கு வந்தவர்கள், அங்கிருந்த கல்மேடை போன்ற அமைப்பில் அமர்ந்தனர்.
தோட்டத்திற்கு வந்து சில நிமிட நேரம் கழிந்தும், பலத்த யோசனையோடு இருந்த இதழினியை பார்த்திருந்த செழியனுக்கு குழப்பமே மிஞ்சியது.
அவளை சரி செய்யும் பொருட்டு, "லிப்ஸ் ரூம்ல இருக்கற வரை சரியா இருந்தே, இப்ப வெளிய வந்து இவ்வளவு நேரம் டீப்பா யோசிக்கறத பார்த்தா, கத்து கொடுத்த பாடம் சரியா புரியலை போலவே..! அப்படி இருந்தா சொல்லு, நல்லா மறுபடியும் தெளிவா சொல்லி கொடுக்கறேன். அதவிட்டுட்டு ஹனிமூன் போற இடத்துல சொதப்பிடாத…" என்று தன் ஒற்றை கண்சிமிட்டி கேட்டவனின் பாவனையில்,
இதுவரை இருந்த மனநிலை சற்று மாறி, இரவின் நிகழ்வுகளும், அப்போது அவளின் காதுகளில் அவனுரைத்த சில ரகசிய சீண்டல் பேச்சுக்களும் நினைவில் எழ, அந்த மாலை வானத்திற்கு போட்டியாக மாறி போனது பெண்ணவளின் மதி வதனம்.
"ஓய், லிப்ஸ் இப்படியெல்லாம் உன் ஃபேஷ், வர்ண ஜாலம் காட்டினா மனுஷன் எப்படி ஸ்டெடியா இருக்க முடியும் சொல்லு…?!" என்றபடியே அவளை நோக்கி, தனது முகத்தை கொண்டு வந்தவனை, தனது கரம் கொண்டு தடுத்தவள்,
"என்னங்க இப்படி, ஓப்பன் ப்ளேஸ்ல, கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம…" என்று வெக்கத்தோடு சிணுங்கிட,
"லிப்ஸ், யூ நோ, அந்த காலத்துல ஆதி மனிதன், ஆதம் ஏவல் எல்லாம் இந்த மாதிரி இயற்கையோட தான் அவங்க வாழ்க்கையையே வாழ்ந்தாங்க. நீ என்னடான்னா, நம்ம வீட்டு தோட்டத்துல பக்கம் வந்தாலே இப்படி ஜர்க் ஆகுற. இதுல செல்லமா சிணுங்கி, நல்ல பையனா இருந்தவன கெடுக்கறதே நீ தான்.." என்று அவன் ஆரம்பத்தது தான் என்பதை மறைத்து, அவளையே காரணியாக்கியவன் கண்டு முறைத்த இதழினியை நெருங்கி தோளோடு அணைத்தவன்,
"இதழினி, உன் மனசுல எதையோ யோசிச்சு குழம்பறேன்னு புரியாதுடா, பட், அது என்னன்னு நீயா சொன்னா தானே எனக்கு புரியும். சில விசயத்தை நானா புரிஞ்சுக்கலாம். எல்லாமே அப்படி முடியுமா.. நானும் சாதாரண மனுஷன் தான் மஹானோ, மகரிஷியோ இல்ல, அடுத்தவங்க மனசுல நினைக்கற எல்லாத்தையும் சொல்லாம தெரிஞ்சுக்க.." என்றதும்,
அவனின் இத்தனை நேர சீண்டலுக்கான அர்த்தம் புரிந்திட, அவனின் தன் மீதான காதலும், தனது முகத்தினை பார்த்தே, தனது மனதை படித்து, அதை தீர்க்க நினைப்பவனின் மீது, இன்னும் இன்னும் காதல் கூடி கொண்டே சென்றது இதழினிக்கு…
"இல்லைங்க.. எனக்கு நீங்க கொஞ்சம் வசதியான வீட்டு பையன்னு காலேஜ்லயே தெரியும். அதனாலையே உங்க விளையாட்டு தனமான பேச்சை ரசிச்சாலும், உங்க மேல ஏதோ ஒரு நேரத்தில ஏற்பட்ட ஈர்ப்பை கூட, 'இது ஒத்துவராது' ன்னு நினச்சி ஒதுங்கி போயிருக்கேன்.
நீங்க காதலை சொன்ன சமயத்தில அதை பத்தி சிந்திக்கற நிலைமையில சுத்தமா நான் இல்ல. அதான் மறுத்து பேசிட்டு போயிட்டேன். அதுக்கு அப்புறமும் நான் அதை பத்தி யோசிக்க, என் குடும்ப சூழ்நிலை ஒத்துழைக்கல.
சரி, நீங்க என் வாழ்க்கையில எங்கையுமே இல்லைன்னு இருந்த நேரத்தில, ஹரிஹரன் சார் என்னை பெண் பார்க்க வந்தாங்க. அதுவரை கூட எனக்கு எதுவுமே தோணல. ஆனா, அதுக்கு பின்னாடி ஏனோ உங்க நினைப்பு தான் என் மனசுல.
அப்ப கூட, நீங்க உங்க வசதிக்கு, இத்தனை நாள்ல வேற வாழ்க்கைன்னு நீங்க போயிருப்பீங்கன்னு தான் நான் நினைச்சிட்டு இருந்தேன்.
அதெல்லாம் இல்ல, எப்பவும் நீ எனக்கு தான்னு எனக்காக காத்திருந்து, இவ்வளவு தூரம் எல்லாம் செஞ்சு, கல்யாணம் பண்ணியிருக்கீங்க ன்னா உங்க காதல் எவ்வளவு உண்மையானதா, உயர்வா இருந்திருக்கும்.
Last edited: