உயிர் ❤❤❤3
அலுவலகத்தில் ஒரு கோப்பில் மூழ்கியிருந்த நிலாவின் அடிவயிற்றில் சுரீன்றென்ற வலி.அவளுக்கு புரிந்து விட்டது. மாதம் ஒரு முறை அனுபவிக்கும் நரக வலி என்பது...
அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் வலி தாங்க முடியாமல் கண்ணீர் வந்து விட்டது.
வீட்டிற்கு வந்ததும் குளித்து விட்டு கட்டிலில் படுத்தவள் வலி தாங்காமல் "ஐயோ வலிக்குது அத்தான்" என முனகியவரே உறங்கிப்போனாள்.
இங்கோ அனைவரும் மாலை ஆறு மணி அளவில் சிவாவின் வீட்டை வந்தடைந்தனர் .
ஆதியின் நிலையோ முழுதாய் ஐந்து வருடத்திற்கு பிறகு தான் பிறந்து வளர்ந்த வீட்டை பார்க்க சற்றே கலங்கினாலும் காட்டிக்கொள்ளவில்லை.
ஆதியிடம் வந்த கிருஷ்ணன்
தம்பி "உன் மொபைல் நம்பர் குடு" என கேட்க,"எதுக்குங்க சார் ஓனர் நம்பர் அவர்கிட்ட இருக்கும் வாங்கிக்கோங்க" என்று கூறி அஷ்வினை கை காட்ட,"அவர் நம்பர் எதுக்கு? உன் நம்பர் தான் வேணும் கல்யாணத்துக்கு நீ கண்டிப்பா வரணும் அதுக்குத்தான் உன் நம்பர்" என்று கூறினார்.
ஆதியோ "யார்க்கு கல்யாணம்" , கேட்க ."இதோ என் பையன் அர்ஜுன்கும் அவங்க பொண்ணு அஸ்வினிக்கும் தான்" என கூற...
அப்போது சாரதா "என்ன அண்ணே? என்ன பேசற நீ... அவன் ஒரு டிரைவர் அவன போய் விசேஷத்துக்கு கூப்பிடுற" என அருவருப்பாய் முகம் சுளித்தார்.
அவரின் பேச்சில் அனைவரும் அதிர்ந்து போய் ஆதியை பார்க்க அவனோ எந்த வித ரியாக்ஷன் இல்லாமல் அமைதியாக நின்றான்.
கிருஷ்ணன் "சாரதா அந்த பையன் கிட்ட மன்னிப்பு கேளு ஒருத்தங்க செய்ற வேலைய வெச்சு என்னிக்குமே மத்தவங்கள தப்பா பேசக்கூடாது" என்றார்.
சாரதா "நான் ஏன் இந்த வேலைக்கார பையன் கிட்ட மன்னிப்பு கேட்கணும்? என்னால முடியாது" என கூறி விட்டு அவர்களின் காரில் சென்று அமர்ந்து விட்டார்.
கதிர் வேலன் மனைவியின் பேச்சில் எந்த வித பிரதிபலிப்பையும் காட்டாமல் நின்றிருந்த ஆதியிடம் "தம்பி அவ பேசுனத்துக்கு நா மன்னிப்பு" என அவர் முடிக்கும் முன் இடை மறித்தவன் "வேணாம் சார்.மன்னிப்பெல்லாம் வேண்டாம் எனக்கு இது பழகுனதுதான் "என விரக்தியாய் சிரித்தவாறே கூறினான்.
அவன் அப்படி கூறியதில் அஷ்வின் அழுதே விட்டான்... மற்றவர்கள் இறங்கியுவுடன் உள்ளே சென்று விட்டதில் இது யாருக்குமே தெரியாமல் போனது.
ஆதி சோட்டுவை அழைத்து கொண்டு சென்றுவிட்டான்...
..........................................
ஆதி வீட்டின் உள்ளே நுழைய,வீடு இருளுடன் காணப்பட்டது.
நிலாவை தேட கட்டிலில் வயிற்றை பிடித்து கொண்டு பாவமாக உறங்குபவளைத்தான்.
அவளை பார்த்ததுமே புரிந்து கொண்டான் அவளின் வலியை...
மற்ற நாட்களில் தான் வீட்டில் நுழையும் முன்னே.,ஓடி வந்து அணைத்து தோளில் தொங்கிக்கொண்டே கிள்ளை மொழி பேசுபவள்.இந்த மூன்று நாட்களில் வாடிய மலராய் சுருண்டு விடுகிறாள்.
வேகமாய் உள்ளே சென்றவன் அவளுக்கு சாப்பிட உணவை செய்து எடுத்து வந்தவன்... அவளை எழுப்பி தோளில் சாய்த்து கொண்டு உணவு வேண்டாம் என்று மறுத்தவளை வற்புறுத்தி உண்ண வைத்தான்.
இரவில் தூங்கும் முன் அடிவயிற்றில் நல்லெண்ணெய் தேய்த்து, சுடு தண்ணீரை ஹாட் பாக்கில் வைத்து அவளின் வலியை குறைக்க உதவியவன், அவளை தன் மடியில் தாயாய் தாங்கி உறங்க வைத்தான்.
அவளின் வலியை உணர்ந்தவன். எந்த முக சுளிப்புமின்றி அவளை அந்த மூன்று நாட்களில் எப்போதுமே கவனமாய் பார்த்துக்கொள்வான்.
வலியில் தன் கூட்டில் நத்தையாய் சுருங்கியவள்... உடல்நிலை சரியானதும் மீண்டும் தன் குரங்கு சேட்டையை ஆரம்பித்து விட்டாள்...
அன்று ஆதி விடுமுறை எடுத்து கொண்டு வீட்டிலிருக்க, நிலாவும் அன்று விடுப்பு எடுத்து கொண்டாள்.
காலை உணவை முடித்து விட்டு ஆதி தொலைக்காட்சில் மூழ்கியிருக்க,அவனின் அருகில் வந்த நிலா, "மாமா" என்று பாசமாக கூப்பிட...
ஆதியோ மனதில் " மாமாவா இந்த குட்டிக்குரங்கு பாசமா மாமான்னு கூப்பிட்ட ஏதாச்சும் வில்லங்கம் வச்சுருக்குமே!"என புலம்பிக்கொண்டே சிரித்தவாறே முகத்தை வைத்துக்கொண்டு "என்ன இனிமா?என்னாச்சு? என்ன வேணும் சொல்லுங்க" என்று கேட்டான்.
நிலா "அது இன்னிக்கு நல்ல நாள் அதுனால" என்று இழுக்க,
ஆதி "சொல்லு அதுக்கு என்ன?அன்னிக்கு வாங்கிட்டு வந்த புக்ஸ் எல்லாம் அப்டியே இருக்குஅத எடுத்து படிக்கலாம்ல ப்ளீஸ்...இப்போ இருந்து ஸ்டார்ட் பண்ணா இன்னும் மூணு மாசத்துல எக்ஸாம் இருக்கு.அதுக்கு கரெக்ட் ஆஹ் இருக்கும்"என்று கூறினாள்.
ஆதியோ அவளை தன் அருகில் இருத்திக்கொண்டு "நான் சொல்றத கேளு... நீ ரொம்ப குட்டிப்பொண்ணு இதெல்லாம் யோசிக்காம உன் வேலைல கான்சென்ரேட் பண்ணு" என்று கூற...
நிலா "என்ன குட்டிப்பொண்ணு எனக்கு கல்யாணம் ஆயிருச்சு... நா ஒரு பெரிய கம்பெனி ல வேலை பாக்கறேன் நா பெரிய பொண்ணு தான் நீங்க தான் இன்னும் என்ன குட்டி குட்டி னு என்ன செல்லம் குடுத்து கெடுக்குறீங்க... நா சொல்ல வரத மொத கேளுங்க ப்ளீஸ்...நீங்க இப்படி இருக்கறது கஷ்டமா இருக்கு...நான் உங்க லைப் ல வராம இருந்திருந்தா இந்நேரம் நீங்க உங்க லட்சியத்தை அடஞ்சிருப்பிங்க எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு" என்று கண்கலங்கியவரே கூறினாள்.
அவள் அழுததில் பதறியவன்...
"நீ இவ்ளோ பீல் பண்ணுவேன்னு எனக்கு தெரியாது நிலா "என்று கூற...
அவளோ "நா கேக்க மாட்டேன் நீங்க என்ன இனி னு சொல்லுங்க" (அட லூசே ?)அதில் சிரித்தவன்...
ஆதி "இங்க பாரு நான் சொல்றத நல்லா கேளு,நான் போலீஸ் ஆகணும் னு ஆசைப்பட்டனு உனக்கு யாரு சொன்னது.ராகவ் தானே"....(ஆதி child hood friend).போலீஸ் ஆகணும்னு நெனச்சேன் ஆனா நான் கிரைம் பிரான்ச் ல (cid) வேலை பாக்கணும்னு நெனச்சேன். அதுக்கு நல்ல ரேங்க், யூனிவர்சிட்டி ல படிச்சிருக்கணும் அதுக்கு ஏஜ் லிமிட் இருக்கு 23-27. எனக்கு வயசு இருந்தாலும் அதுக்கு நல்ல பயிற்சி இருக்கனும்.அதெல்லாம் இப்போ என் மைண்ட்ல இல்ல".
"நாம லைப் ல நல்ல நிலைமைக்கு போகணும்.பிசினஸ் பண்ணனும்... அப்புறம் எல்லார் முன்னாடியும் தலை நிமிர்ந்து நிக்கணும். யார் கிட்டயும் அசிங்க படக்கூடாது.நம்மள பெத்தவங்க இவங்களயா நாம அன்னிக்கு நல்லாருக்க மாட்டேன்னு சாபம் கொடுத்தோம்னு வருத்தப்படணும்... அதான் எனக்கு இப்போ இருக்க ஒரே குறிக்கோள். ஆனா கொஞ்சம் லேட் ஆயிருச்சு" என்று கூறினான்.
நிலா "நீங்க நெனச்ச எல்லாமே நடக்கும் அத்தான்.ஆனா ஏன் லேட் ஆயிருச்சு னு சொன்னிங்க, புரியல... நம்ம அப்போ இருந்த நெலமைல இப்போ ஓகே தான"என்று சந்தேகமாக கேட்டாள்.
ஆதி "இல்லடா நா யார் முன்னாடி நல்லா இருக்கணும்னு நெனைச்சனோ அதுவே நடக்கல"என்று வருத்தமாக கூறினான்.
நிலா "நீங்க என்ன சொல்றிங்க"என்று புரியாமல் கேட்க...
ஆதி "என் குடும்பத்தை பார்த்தேன். அவங்களுக்கு தான் நான் டிரைவர் ஆஹ் போனேன். வேலை பார்த்தது வருத்தம் இல்ல. அவங்க அவங்க லைப்ல முன்னேறிட்டாங்க,நான் மட்டும் இப்டியே இருக்கேனு கஷ்டமா இருந்துச்சு அவ்ளோ தான் என் அக்கா அஷ்வினி கைனோ வா இருக்கா. அவளுக்கு கல்யாணம். அப்புறம் ஆதவனுக்கு மேரேஜ் ஆயிருச்சு.
எல்லாரும் என்ன பார்த்து ஷாக் ஆகிட்டாங்க. எனக்கு கோவம் தான் வந்துச்சு... அன்னிக்கு கொஞ்ச பொறுமையா அவங்க நம்ம சொல்றத கேட்ருக்கலாம்னு அம்மாவும் அஷ்வின் அண்ணாவும் தான் ரொம்ப அதிர்ச்சி ஆயிட்டாங்க" என்று கூற...
நிலா "நீங்க போய் ஆண்ட்டி கிட்ட பேசியிருக்கலாம்ல"என்று கேட்டாள்.
ஆதி "என்ன பேசறது?எனக்கு ஒண்ணும் தோணல,ஓகே விடு
நம்ம இதுக்கு மேல என்ன செய்யணும்னு கொஞ்சம் ஐடியா வச்சிருக்கேன் பாத்துக்கலாம்" என்று கூறியவன்.
அவளிடம் "நீ இன்னிக்கு லஞ்ச்க்கு ஏதாச்சும் ஸ்பெஷல் ஐட்டம்ஸ் செய். இன்னிக்கு எல்லா பிரண்ட்ஸ் உம் வராங்க என்று கூறியவரே எழுந்தவனிடம்,ஆனா யாரும் எங்கிட்ட ஏதும் சொல்லல.அது மட்டும் இல்லாம நம்மள விட்டு அவுட்டிங் கூட போய்ட்டு வந்துட்டாங்க,வரட்டும் பேசிக்கிறேன் என்று முறைத்து ?விட்டு சென்று விட்டாள்...
மதியம் 1:30மணியளவில் அந்த ஒன்பது பேர் கொண்ட வால் இல்லாத வானர் படை நிலாவின் இல்லத்தில் நுழைந்தது. வாசலில் வண்டி நிறுத்தும் போதே சத்தத்தில் ஆதி வெளியே வந்துவிட்டான்...
ஆதி "டேய் சத்தம் போடாம வாங்கடா"...
"ஏன்டா, என்னாச்சு?" என ஆதியின் தோழி அனுயா கேட்க...
ஆதி "நீங்க வரேன்னு அவகிட்ட சொல்லல அதான் என் செல்லக்குட்டி கோவத்துல இருக்குது "என்று சிரித்தவறே கூற...
"அதெப்படி மச்சான் பொண்டாட்டி கோவமா இருங்காங்கறத கூட இப்படி ரொமான்டிக் கா சொல்ற" என்ற அருணின் தலையில் கொட்டியவன் உள்ள வாங்க என்று அழைத்து சென்றான்.
ஆதியின் நண்பர்கள் (அருண், ராகவ், பிரவீன், சூர்யா,ஹரிஷ், அனுயா )
(நிலாவின் தோழிகள் நதியா, சாஹித்யா, சௌமியா )
ராகவ், சாஹித்யா ஹஸ்பண்ட் வைப்...
ஹரிஷ், அனுயா லவ்வர்ஸ்...
இவங்கெல்லாம் ஒண்ணா தான் இருப்பாங்க எப்போவும்... இப்போ இவங்க வீட்டுக்கு வரத முத அவகிட்ட சொல்லலைனு ?... கோவம் நிலாக்கு ️...
சமையலறையில் உருட்டிகொண்டிருந்த நிலாவின் அருகில் சென்ற சாஹி அவளின் பின்னே நின்று "பே" என்று கத்த எந்த அசைவும் தன் வேலையை கவனித்துகொண்டிருந்தாள்.
அவளை தன் புறம் திருப்பிய சாஹி... "சாரி நீலு நீ உன்னால வரமுடியாது னு சொன்னதால தான் நாங்க எல்லாரும் அவுட்டிங் போனோம் சாரி டா"காதை பிடித்து மன்னிப்பு கேட்க ...
நிலா "சரி பரவால்ல விடு" ??? என்று கூறியவள் சமைத்ததை எடுத்து வைத்து கொண்டு இருந்தாள்.
நடுவீட்டில் பாயை விரித்து, சமைத்ததை பெண்கள் அனைவரும் கொண்டு வந்து வைக்க, சமையல் வாசம் தூக்கியது.
ராகவ் "ஆஹா! ஆஹா என்ன மணம்.என்ன மணம்,வாசம் ஆளையே தூக்குது இதுலயே வயிறு நிறைஞ்சுரும் போலவே" என்று நாக்கை சுழற்றி கொண்டே கூற,
"அப்டியா வயிறு நிறைஞ்சுதா
ரொம்ப சந்தோசம்... உனக்கு பசி போயிருச்சுல்ல போய் டிவி பாரு... சாப்பாடு மிச்சம் ஆகும்"என்று ஹரிஷ் கூற...
ராகவ் "ஆத்தி... அட கிராதக?... நான் உனக்கு என்னடா பாவம் பண்ணேன்... இது எல்லாரும் சொல்ற வார்த்தை தான அவசரப்பட்டு சொன்னது தப்பா..."என்றவன்,
(மைண்ட் வாய்ஸ்ல் இதுக்கு மேல பேசுனா சோறு கிடைக்காது... பேசாம சாப்ட்ருவோம் ?...)இது ஒரு பொழப்பு?... (மை மைண்ட் வாய்ஸ்)...
"அட!என்னடா தங்கச்சி வேடிக்கை பாக்குற,சோத்த போடு... கொலை பசி" என கூற...
சாஹித்தியவோ... "அட பாவி... காலைல தான ஆறு பூரி, நாலு தோசை சாப்பிட்ட என்னவோ பத்து நாளா சாப்பிடாத மாறி பேசுற"என்க...
அச்சோ!"ஹிது மா...பப்ளிக்... பப்ளிக்" என கூறி விட்டு... அனைவரையும் திரும்பி பார்க்க அவர்களோ ஒரு சேர காரிதுப்பினர்.
மட்டன் பிரியாணி,கத்திரிக்காய் கிரேவி, சிக்கன் வறுவல், முட்டை, தயிர் என்றே அசத்தி இருந்தாள்.
சௌமியாவோ "இப்போ... சோறு போடுவீங்களா என்ன" என பாவமாக கேட்டததில் சிரித்த ஆதி...
" இனி மா எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வை என கூற...
பிரவீனோ "குட்டிமா நீயும் உக்காரு எல்லாரும் எடுத்து வச்சுக்கலாம்" என கூறி அனைவரும் உண்டனர்.
வயிறார உணவு உண்டவர்கள்... வீட்டிற்கு முன் உள்ள வராண்டாவில் அமர்ந்து ஒருவரையோருவர் கிண்டல் செய்து கொண்டும் ஓய்வாக அமர்ந்திருந்தனர்.
மாலை அனைவரும் கடற்கரைக்கு சென்றனர்.
to be continued...
அலுவலகத்தில் ஒரு கோப்பில் மூழ்கியிருந்த நிலாவின் அடிவயிற்றில் சுரீன்றென்ற வலி.அவளுக்கு புரிந்து விட்டது. மாதம் ஒரு முறை அனுபவிக்கும் நரக வலி என்பது...
அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் வலி தாங்க முடியாமல் கண்ணீர் வந்து விட்டது.
வீட்டிற்கு வந்ததும் குளித்து விட்டு கட்டிலில் படுத்தவள் வலி தாங்காமல் "ஐயோ வலிக்குது அத்தான்" என முனகியவரே உறங்கிப்போனாள்.
இங்கோ அனைவரும் மாலை ஆறு மணி அளவில் சிவாவின் வீட்டை வந்தடைந்தனர் .
ஆதியின் நிலையோ முழுதாய் ஐந்து வருடத்திற்கு பிறகு தான் பிறந்து வளர்ந்த வீட்டை பார்க்க சற்றே கலங்கினாலும் காட்டிக்கொள்ளவில்லை.
ஆதியிடம் வந்த கிருஷ்ணன்
தம்பி "உன் மொபைல் நம்பர் குடு" என கேட்க,"எதுக்குங்க சார் ஓனர் நம்பர் அவர்கிட்ட இருக்கும் வாங்கிக்கோங்க" என்று கூறி அஷ்வினை கை காட்ட,"அவர் நம்பர் எதுக்கு? உன் நம்பர் தான் வேணும் கல்யாணத்துக்கு நீ கண்டிப்பா வரணும் அதுக்குத்தான் உன் நம்பர்" என்று கூறினார்.
ஆதியோ "யார்க்கு கல்யாணம்" , கேட்க ."இதோ என் பையன் அர்ஜுன்கும் அவங்க பொண்ணு அஸ்வினிக்கும் தான்" என கூற...
அப்போது சாரதா "என்ன அண்ணே? என்ன பேசற நீ... அவன் ஒரு டிரைவர் அவன போய் விசேஷத்துக்கு கூப்பிடுற" என அருவருப்பாய் முகம் சுளித்தார்.
அவரின் பேச்சில் அனைவரும் அதிர்ந்து போய் ஆதியை பார்க்க அவனோ எந்த வித ரியாக்ஷன் இல்லாமல் அமைதியாக நின்றான்.
கிருஷ்ணன் "சாரதா அந்த பையன் கிட்ட மன்னிப்பு கேளு ஒருத்தங்க செய்ற வேலைய வெச்சு என்னிக்குமே மத்தவங்கள தப்பா பேசக்கூடாது" என்றார்.
சாரதா "நான் ஏன் இந்த வேலைக்கார பையன் கிட்ட மன்னிப்பு கேட்கணும்? என்னால முடியாது" என கூறி விட்டு அவர்களின் காரில் சென்று அமர்ந்து விட்டார்.
கதிர் வேலன் மனைவியின் பேச்சில் எந்த வித பிரதிபலிப்பையும் காட்டாமல் நின்றிருந்த ஆதியிடம் "தம்பி அவ பேசுனத்துக்கு நா மன்னிப்பு" என அவர் முடிக்கும் முன் இடை மறித்தவன் "வேணாம் சார்.மன்னிப்பெல்லாம் வேண்டாம் எனக்கு இது பழகுனதுதான் "என விரக்தியாய் சிரித்தவாறே கூறினான்.
அவன் அப்படி கூறியதில் அஷ்வின் அழுதே விட்டான்... மற்றவர்கள் இறங்கியுவுடன் உள்ளே சென்று விட்டதில் இது யாருக்குமே தெரியாமல் போனது.
ஆதி சோட்டுவை அழைத்து கொண்டு சென்றுவிட்டான்...
..........................................
ஆதி வீட்டின் உள்ளே நுழைய,வீடு இருளுடன் காணப்பட்டது.
நிலாவை தேட கட்டிலில் வயிற்றை பிடித்து கொண்டு பாவமாக உறங்குபவளைத்தான்.
அவளை பார்த்ததுமே புரிந்து கொண்டான் அவளின் வலியை...
மற்ற நாட்களில் தான் வீட்டில் நுழையும் முன்னே.,ஓடி வந்து அணைத்து தோளில் தொங்கிக்கொண்டே கிள்ளை மொழி பேசுபவள்.இந்த மூன்று நாட்களில் வாடிய மலராய் சுருண்டு விடுகிறாள்.
வேகமாய் உள்ளே சென்றவன் அவளுக்கு சாப்பிட உணவை செய்து எடுத்து வந்தவன்... அவளை எழுப்பி தோளில் சாய்த்து கொண்டு உணவு வேண்டாம் என்று மறுத்தவளை வற்புறுத்தி உண்ண வைத்தான்.
இரவில் தூங்கும் முன் அடிவயிற்றில் நல்லெண்ணெய் தேய்த்து, சுடு தண்ணீரை ஹாட் பாக்கில் வைத்து அவளின் வலியை குறைக்க உதவியவன், அவளை தன் மடியில் தாயாய் தாங்கி உறங்க வைத்தான்.
அவளின் வலியை உணர்ந்தவன். எந்த முக சுளிப்புமின்றி அவளை அந்த மூன்று நாட்களில் எப்போதுமே கவனமாய் பார்த்துக்கொள்வான்.
வலியில் தன் கூட்டில் நத்தையாய் சுருங்கியவள்... உடல்நிலை சரியானதும் மீண்டும் தன் குரங்கு சேட்டையை ஆரம்பித்து விட்டாள்...
அன்று ஆதி விடுமுறை எடுத்து கொண்டு வீட்டிலிருக்க, நிலாவும் அன்று விடுப்பு எடுத்து கொண்டாள்.
காலை உணவை முடித்து விட்டு ஆதி தொலைக்காட்சில் மூழ்கியிருக்க,அவனின் அருகில் வந்த நிலா, "மாமா" என்று பாசமாக கூப்பிட...
ஆதியோ மனதில் " மாமாவா இந்த குட்டிக்குரங்கு பாசமா மாமான்னு கூப்பிட்ட ஏதாச்சும் வில்லங்கம் வச்சுருக்குமே!"என புலம்பிக்கொண்டே சிரித்தவாறே முகத்தை வைத்துக்கொண்டு "என்ன இனிமா?என்னாச்சு? என்ன வேணும் சொல்லுங்க" என்று கேட்டான்.
நிலா "அது இன்னிக்கு நல்ல நாள் அதுனால" என்று இழுக்க,
ஆதி "சொல்லு அதுக்கு என்ன?அன்னிக்கு வாங்கிட்டு வந்த புக்ஸ் எல்லாம் அப்டியே இருக்குஅத எடுத்து படிக்கலாம்ல ப்ளீஸ்...இப்போ இருந்து ஸ்டார்ட் பண்ணா இன்னும் மூணு மாசத்துல எக்ஸாம் இருக்கு.அதுக்கு கரெக்ட் ஆஹ் இருக்கும்"என்று கூறினாள்.
ஆதியோ அவளை தன் அருகில் இருத்திக்கொண்டு "நான் சொல்றத கேளு... நீ ரொம்ப குட்டிப்பொண்ணு இதெல்லாம் யோசிக்காம உன் வேலைல கான்சென்ரேட் பண்ணு" என்று கூற...
நிலா "என்ன குட்டிப்பொண்ணு எனக்கு கல்யாணம் ஆயிருச்சு... நா ஒரு பெரிய கம்பெனி ல வேலை பாக்கறேன் நா பெரிய பொண்ணு தான் நீங்க தான் இன்னும் என்ன குட்டி குட்டி னு என்ன செல்லம் குடுத்து கெடுக்குறீங்க... நா சொல்ல வரத மொத கேளுங்க ப்ளீஸ்...நீங்க இப்படி இருக்கறது கஷ்டமா இருக்கு...நான் உங்க லைப் ல வராம இருந்திருந்தா இந்நேரம் நீங்க உங்க லட்சியத்தை அடஞ்சிருப்பிங்க எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு" என்று கண்கலங்கியவரே கூறினாள்.
அவள் அழுததில் பதறியவன்...
"நீ இவ்ளோ பீல் பண்ணுவேன்னு எனக்கு தெரியாது நிலா "என்று கூற...
அவளோ "நா கேக்க மாட்டேன் நீங்க என்ன இனி னு சொல்லுங்க" (அட லூசே ?)அதில் சிரித்தவன்...
ஆதி "இங்க பாரு நான் சொல்றத நல்லா கேளு,நான் போலீஸ் ஆகணும் னு ஆசைப்பட்டனு உனக்கு யாரு சொன்னது.ராகவ் தானே"....(ஆதி child hood friend).போலீஸ் ஆகணும்னு நெனச்சேன் ஆனா நான் கிரைம் பிரான்ச் ல (cid) வேலை பாக்கணும்னு நெனச்சேன். அதுக்கு நல்ல ரேங்க், யூனிவர்சிட்டி ல படிச்சிருக்கணும் அதுக்கு ஏஜ் லிமிட் இருக்கு 23-27. எனக்கு வயசு இருந்தாலும் அதுக்கு நல்ல பயிற்சி இருக்கனும்.அதெல்லாம் இப்போ என் மைண்ட்ல இல்ல".
"நாம லைப் ல நல்ல நிலைமைக்கு போகணும்.பிசினஸ் பண்ணனும்... அப்புறம் எல்லார் முன்னாடியும் தலை நிமிர்ந்து நிக்கணும். யார் கிட்டயும் அசிங்க படக்கூடாது.நம்மள பெத்தவங்க இவங்களயா நாம அன்னிக்கு நல்லாருக்க மாட்டேன்னு சாபம் கொடுத்தோம்னு வருத்தப்படணும்... அதான் எனக்கு இப்போ இருக்க ஒரே குறிக்கோள். ஆனா கொஞ்சம் லேட் ஆயிருச்சு" என்று கூறினான்.
நிலா "நீங்க நெனச்ச எல்லாமே நடக்கும் அத்தான்.ஆனா ஏன் லேட் ஆயிருச்சு னு சொன்னிங்க, புரியல... நம்ம அப்போ இருந்த நெலமைல இப்போ ஓகே தான"என்று சந்தேகமாக கேட்டாள்.
ஆதி "இல்லடா நா யார் முன்னாடி நல்லா இருக்கணும்னு நெனைச்சனோ அதுவே நடக்கல"என்று வருத்தமாக கூறினான்.
நிலா "நீங்க என்ன சொல்றிங்க"என்று புரியாமல் கேட்க...
ஆதி "என் குடும்பத்தை பார்த்தேன். அவங்களுக்கு தான் நான் டிரைவர் ஆஹ் போனேன். வேலை பார்த்தது வருத்தம் இல்ல. அவங்க அவங்க லைப்ல முன்னேறிட்டாங்க,நான் மட்டும் இப்டியே இருக்கேனு கஷ்டமா இருந்துச்சு அவ்ளோ தான் என் அக்கா அஷ்வினி கைனோ வா இருக்கா. அவளுக்கு கல்யாணம். அப்புறம் ஆதவனுக்கு மேரேஜ் ஆயிருச்சு.
எல்லாரும் என்ன பார்த்து ஷாக் ஆகிட்டாங்க. எனக்கு கோவம் தான் வந்துச்சு... அன்னிக்கு கொஞ்ச பொறுமையா அவங்க நம்ம சொல்றத கேட்ருக்கலாம்னு அம்மாவும் அஷ்வின் அண்ணாவும் தான் ரொம்ப அதிர்ச்சி ஆயிட்டாங்க" என்று கூற...
நிலா "நீங்க போய் ஆண்ட்டி கிட்ட பேசியிருக்கலாம்ல"என்று கேட்டாள்.
ஆதி "என்ன பேசறது?எனக்கு ஒண்ணும் தோணல,ஓகே விடு
நம்ம இதுக்கு மேல என்ன செய்யணும்னு கொஞ்சம் ஐடியா வச்சிருக்கேன் பாத்துக்கலாம்" என்று கூறியவன்.
அவளிடம் "நீ இன்னிக்கு லஞ்ச்க்கு ஏதாச்சும் ஸ்பெஷல் ஐட்டம்ஸ் செய். இன்னிக்கு எல்லா பிரண்ட்ஸ் உம் வராங்க என்று கூறியவரே எழுந்தவனிடம்,ஆனா யாரும் எங்கிட்ட ஏதும் சொல்லல.அது மட்டும் இல்லாம நம்மள விட்டு அவுட்டிங் கூட போய்ட்டு வந்துட்டாங்க,வரட்டும் பேசிக்கிறேன் என்று முறைத்து ?விட்டு சென்று விட்டாள்...
மதியம் 1:30மணியளவில் அந்த ஒன்பது பேர் கொண்ட வால் இல்லாத வானர் படை நிலாவின் இல்லத்தில் நுழைந்தது. வாசலில் வண்டி நிறுத்தும் போதே சத்தத்தில் ஆதி வெளியே வந்துவிட்டான்...
ஆதி "டேய் சத்தம் போடாம வாங்கடா"...
"ஏன்டா, என்னாச்சு?" என ஆதியின் தோழி அனுயா கேட்க...
ஆதி "நீங்க வரேன்னு அவகிட்ட சொல்லல அதான் என் செல்லக்குட்டி கோவத்துல இருக்குது "என்று சிரித்தவறே கூற...
"அதெப்படி மச்சான் பொண்டாட்டி கோவமா இருங்காங்கறத கூட இப்படி ரொமான்டிக் கா சொல்ற" என்ற அருணின் தலையில் கொட்டியவன் உள்ள வாங்க என்று அழைத்து சென்றான்.
ஆதியின் நண்பர்கள் (அருண், ராகவ், பிரவீன், சூர்யா,ஹரிஷ், அனுயா )
(நிலாவின் தோழிகள் நதியா, சாஹித்யா, சௌமியா )
ராகவ், சாஹித்யா ஹஸ்பண்ட் வைப்...
ஹரிஷ், அனுயா லவ்வர்ஸ்...
இவங்கெல்லாம் ஒண்ணா தான் இருப்பாங்க எப்போவும்... இப்போ இவங்க வீட்டுக்கு வரத முத அவகிட்ட சொல்லலைனு ?... கோவம் நிலாக்கு ️...
சமையலறையில் உருட்டிகொண்டிருந்த நிலாவின் அருகில் சென்ற சாஹி அவளின் பின்னே நின்று "பே" என்று கத்த எந்த அசைவும் தன் வேலையை கவனித்துகொண்டிருந்தாள்.
அவளை தன் புறம் திருப்பிய சாஹி... "சாரி நீலு நீ உன்னால வரமுடியாது னு சொன்னதால தான் நாங்க எல்லாரும் அவுட்டிங் போனோம் சாரி டா"காதை பிடித்து மன்னிப்பு கேட்க ...
நிலா "சரி பரவால்ல விடு" ??? என்று கூறியவள் சமைத்ததை எடுத்து வைத்து கொண்டு இருந்தாள்.
நடுவீட்டில் பாயை விரித்து, சமைத்ததை பெண்கள் அனைவரும் கொண்டு வந்து வைக்க, சமையல் வாசம் தூக்கியது.
ராகவ் "ஆஹா! ஆஹா என்ன மணம்.என்ன மணம்,வாசம் ஆளையே தூக்குது இதுலயே வயிறு நிறைஞ்சுரும் போலவே" என்று நாக்கை சுழற்றி கொண்டே கூற,
"அப்டியா வயிறு நிறைஞ்சுதா
ரொம்ப சந்தோசம்... உனக்கு பசி போயிருச்சுல்ல போய் டிவி பாரு... சாப்பாடு மிச்சம் ஆகும்"என்று ஹரிஷ் கூற...
ராகவ் "ஆத்தி... அட கிராதக?... நான் உனக்கு என்னடா பாவம் பண்ணேன்... இது எல்லாரும் சொல்ற வார்த்தை தான அவசரப்பட்டு சொன்னது தப்பா..."என்றவன்,
(மைண்ட் வாய்ஸ்ல் இதுக்கு மேல பேசுனா சோறு கிடைக்காது... பேசாம சாப்ட்ருவோம் ?...)இது ஒரு பொழப்பு?... (மை மைண்ட் வாய்ஸ்)...
"அட!என்னடா தங்கச்சி வேடிக்கை பாக்குற,சோத்த போடு... கொலை பசி" என கூற...
சாஹித்தியவோ... "அட பாவி... காலைல தான ஆறு பூரி, நாலு தோசை சாப்பிட்ட என்னவோ பத்து நாளா சாப்பிடாத மாறி பேசுற"என்க...
அச்சோ!"ஹிது மா...பப்ளிக்... பப்ளிக்" என கூறி விட்டு... அனைவரையும் திரும்பி பார்க்க அவர்களோ ஒரு சேர காரிதுப்பினர்.
மட்டன் பிரியாணி,கத்திரிக்காய் கிரேவி, சிக்கன் வறுவல், முட்டை, தயிர் என்றே அசத்தி இருந்தாள்.
சௌமியாவோ "இப்போ... சோறு போடுவீங்களா என்ன" என பாவமாக கேட்டததில் சிரித்த ஆதி...
" இனி மா எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வை என கூற...
பிரவீனோ "குட்டிமா நீயும் உக்காரு எல்லாரும் எடுத்து வச்சுக்கலாம்" என கூறி அனைவரும் உண்டனர்.
வயிறார உணவு உண்டவர்கள்... வீட்டிற்கு முன் உள்ள வராண்டாவில் அமர்ந்து ஒருவரையோருவர் கிண்டல் செய்து கொண்டும் ஓய்வாக அமர்ந்திருந்தனர்.
மாலை அனைவரும் கடற்கரைக்கு சென்றனர்.
to be continued...