ரயிலில் சந்தோசமாக வந்து கொண்டிருந்த அந்த சிறிய குடும்பத்திற்கோ காத்திருந்த ஆபத்து தெரியவில்லை ! அடுத்த நிறுத்தத்தில் தான் இறங்க வேண்டும் ..பேசேன்ஜ்ர் வண்டி என்பதால் சிறு சிறு ஊர்களிலும் நின்று செல்லும். ஊரில் நடக்கும் விஷயங்களை தாமரை தன் முறை மாமனிடம் சொல்ல இருவருமாக சண்முகத்தையும் விசாலாட்சியையும் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று முந்தைய நிலையத்திலேயே காத்திருந்தனர்.
தாமரை கழிப்பிடம் சென்றிருக்க விசாலாட்சி மட்டும் ரயிலில் இருந்து இறங்கினாள்.
"என்ன அண்ணா ? தாமரை எங்கே ?" என்று கேட்டுக் கொண்டிருக்க சண்முகமோ அழும் குழந்தையை சமாதான படுத்தி கொண்டு ரயிலின் உள்ளேயே அமர்ந்திருந்தான். விடிந்தும் விடியாத நிலையில் ஆளரவமில்லாத அந்த ரயில் நிலையத்தில் குழந்தையின் அழுகை குரல் மட்டும் ஒலித்து கொண்டிருந்தது.
தாமரையின் மாமன் தன் தலையில் துண்டை தலைப்பாகையாக கட்டியிருக்க அவனை சண்முகம் என்று நினைத்து அவர்களை தேடி வந்த ராஜதுரையின் ஆட்கள் இருவரையும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆயுதங்களால் தாக்க ..ஓரிரு நொடிகளில் எல்லாம் முடிந்துவிட்டது.
பக்கத்து கோச்சில் பயணித்துக் கொண்டிருந்த சொக்கலிங்கம் தன் ஊருக்கு போய் கொண்டிருந்தவர் ..உடனே நிலைமையை உணர்ந்து கொண்டார்.குழந்தையோடு கீழே இறங்க முற்பட்ட சண்முகத்தை இழுத்து பிடித்தவர் ..அவனை கீழே இறங்க விடவில்லை!
இதற்குள் ரயில் கிளம்ப ..கழிப்பிடம் சென்று திரும்பி வந்த தாமரை விக்கித்து நின்றுவிட்டாள் தன் மனம் கவர்ந்தவனும் உயிர் தோழியும் பிணமாய் கிடப்பதை பார்த்து!
தன் மகள் இறந்துவிட்டாள் என்ற செய்தியறிந்த பொன்னுத்தாயி மிகவும் மனம் உடைந்துவிட்டார்.
அவளை கடைசியாக பார்க்க கூட அனுமதிக்கவில்லை யாரும் !
அவளது நகைகளை மட்டும் வேலன் எடுத்து வந்து தர அவளது திருமாங்கல்யத்தை பத்திரமாக தன் சேலையிலேயே முடிந்து வைத்திருப்பார். தன் மகளின் நினைவாக இருப்பது அதுவும் ஒரே ஒரு புகைப்படமும் தான். சிங்காரவேலனுக்கு தங்கை மீது அவ்வளவு பாசம் .ஆனால் தம்பிகள் சித்தப்பாக்களின் போதனையில் அவள் செய்தது இமாலய தவறு .அதற்கு இந்த தண்டனை தேவைதான் என்று நம்பினார்.. நம்பவைக்கப்பட்டார்.
வடிவுக்கு பெரும் அதிர்ச்சி! அப்போது அவள் நிறை மாத கர்ப்பிணி ! தன் அன்புக்குரிய தோழியாகவும், அத்தை மகளாகவும் அன்பு நாத்தனாராகவும் இருந்தவள் இப்படி போய்விட்டாள் என்றதும் அவர் மனம் கலங்கியது.. அதிர்ச்சியில் மயங்கி விழ ரத்தப்போக்கு ஏற்பட்டு குழந்தையும் வயிற்றிலேயே இறக்க அதற்கும் விசாலாட்சியே காரணம் என்றார் வேலன். ஆக மொத்தம் தன் தங்கை மீது உள்ள கோபம் அவள் இறப்பிற்கு பின்னரும் குறையவில்லை .
அவள் பெயரையே யாரும் எடுக்கக்கூடாது என்று கூறியவர் அப்படியே செய்தும் வருகிறார் இத்தனை வருடங்களாக.
சண்முகத்தை தன்னுடன் அழைத்து சென்றவர் ராமேஸ்வரத்தில் தன் வீட்டிலேயே தங்க வைக்க சண்முகத்தின் இருப்பிடம் யாரும் அறியவில்லை.
கதிரையும் யாரும் அறியவில்லை.
தன் கண் முன்னால் தன் தோழியும் வருங்கால கணவனும் கொலையுண்டு கிடப்பதை பார்த்த தாமரை வெகு நாளாக சித்தம் கலங்கிய நிலையிலேயே இருந்தார்.. பின்பு தாய் மாமனான சொக்கலிங்கம் அவளை மணக்க ..கதிரின் முகம் பார்த்து மெல்ல தேறினார்.
இவ்வளவு நாட்களாக மறைத்து வைத்திருந்த உண்மைகள் இப்போது வெளிப்பட்டு விட்டன.
நடந்தவைகளை நாதன் என்ற சண்முகநாதன் சொல்லிக் கொண்டு வர உள்ளே நுழைந்த ரெங்கசாமிக்கு கண்கள் கலங்கின. "எப்பா சண்முகம் நீ உயிரோட தான் இருக்கியா ?" என்றவர் அன்புச்செல்வனை காட்டி "இது உன் தங்கச்சி மவன் பா ..சித்ரா மகன் " என்று சொல்லவும் அன்பிற்கும் அப்போதுதான் புரிந்தது கதிரின் சாயல் ஏன் பரிச்சயமாக தோன்றியது என்று .
சண்முகமும் விசாலாட்சியும் ஊரை விட்டு சென்ற பின்னர் ஏற்பட்ட கலவரத்தில் அன்று ஊருக்குள் வந்திருந்த சித்ராவும் அவள் கணவனும் இறந்திருந்தனர்.
தன் தாய் மட்டுமின்றி தன் அத்தையும் மாமனும் கூட அநியாயமாக உயிர் விட்டதை அறிந்த கதிருக்கு தாங்கவில்லை ..அதுவரை விபத்தில் உயிர் இழந்ததாக நினைத்திருந்தான் .
தன்னவளுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற பயத்தோடு இருந்தான்.
அங்கு கண்மணியும் அழுதபடி உண்ணாமல் உறங்காமல் தன்னவனை நினைத்திருந்தாள்.
தன் உறவினரின் உண்மை முகம் முழுமையாக வெளிப்பட்டதும்..என்ன நடக்குமோ என்ற பயம் கூடியது..கதிருக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என்ற பயம் கூடியது.
தாமரை கழிப்பிடம் சென்றிருக்க விசாலாட்சி மட்டும் ரயிலில் இருந்து இறங்கினாள்.
"என்ன அண்ணா ? தாமரை எங்கே ?" என்று கேட்டுக் கொண்டிருக்க சண்முகமோ அழும் குழந்தையை சமாதான படுத்தி கொண்டு ரயிலின் உள்ளேயே அமர்ந்திருந்தான். விடிந்தும் விடியாத நிலையில் ஆளரவமில்லாத அந்த ரயில் நிலையத்தில் குழந்தையின் அழுகை குரல் மட்டும் ஒலித்து கொண்டிருந்தது.
தாமரையின் மாமன் தன் தலையில் துண்டை தலைப்பாகையாக கட்டியிருக்க அவனை சண்முகம் என்று நினைத்து அவர்களை தேடி வந்த ராஜதுரையின் ஆட்கள் இருவரையும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆயுதங்களால் தாக்க ..ஓரிரு நொடிகளில் எல்லாம் முடிந்துவிட்டது.
பக்கத்து கோச்சில் பயணித்துக் கொண்டிருந்த சொக்கலிங்கம் தன் ஊருக்கு போய் கொண்டிருந்தவர் ..உடனே நிலைமையை உணர்ந்து கொண்டார்.குழந்தையோடு கீழே இறங்க முற்பட்ட சண்முகத்தை இழுத்து பிடித்தவர் ..அவனை கீழே இறங்க விடவில்லை!
இதற்குள் ரயில் கிளம்ப ..கழிப்பிடம் சென்று திரும்பி வந்த தாமரை விக்கித்து நின்றுவிட்டாள் தன் மனம் கவர்ந்தவனும் உயிர் தோழியும் பிணமாய் கிடப்பதை பார்த்து!
தன் மகள் இறந்துவிட்டாள் என்ற செய்தியறிந்த பொன்னுத்தாயி மிகவும் மனம் உடைந்துவிட்டார்.
அவளை கடைசியாக பார்க்க கூட அனுமதிக்கவில்லை யாரும் !
அவளது நகைகளை மட்டும் வேலன் எடுத்து வந்து தர அவளது திருமாங்கல்யத்தை பத்திரமாக தன் சேலையிலேயே முடிந்து வைத்திருப்பார். தன் மகளின் நினைவாக இருப்பது அதுவும் ஒரே ஒரு புகைப்படமும் தான். சிங்காரவேலனுக்கு தங்கை மீது அவ்வளவு பாசம் .ஆனால் தம்பிகள் சித்தப்பாக்களின் போதனையில் அவள் செய்தது இமாலய தவறு .அதற்கு இந்த தண்டனை தேவைதான் என்று நம்பினார்.. நம்பவைக்கப்பட்டார்.
வடிவுக்கு பெரும் அதிர்ச்சி! அப்போது அவள் நிறை மாத கர்ப்பிணி ! தன் அன்புக்குரிய தோழியாகவும், அத்தை மகளாகவும் அன்பு நாத்தனாராகவும் இருந்தவள் இப்படி போய்விட்டாள் என்றதும் அவர் மனம் கலங்கியது.. அதிர்ச்சியில் மயங்கி விழ ரத்தப்போக்கு ஏற்பட்டு குழந்தையும் வயிற்றிலேயே இறக்க அதற்கும் விசாலாட்சியே காரணம் என்றார் வேலன். ஆக மொத்தம் தன் தங்கை மீது உள்ள கோபம் அவள் இறப்பிற்கு பின்னரும் குறையவில்லை .
அவள் பெயரையே யாரும் எடுக்கக்கூடாது என்று கூறியவர் அப்படியே செய்தும் வருகிறார் இத்தனை வருடங்களாக.
சண்முகத்தை தன்னுடன் அழைத்து சென்றவர் ராமேஸ்வரத்தில் தன் வீட்டிலேயே தங்க வைக்க சண்முகத்தின் இருப்பிடம் யாரும் அறியவில்லை.
கதிரையும் யாரும் அறியவில்லை.
தன் கண் முன்னால் தன் தோழியும் வருங்கால கணவனும் கொலையுண்டு கிடப்பதை பார்த்த தாமரை வெகு நாளாக சித்தம் கலங்கிய நிலையிலேயே இருந்தார்.. பின்பு தாய் மாமனான சொக்கலிங்கம் அவளை மணக்க ..கதிரின் முகம் பார்த்து மெல்ல தேறினார்.
இவ்வளவு நாட்களாக மறைத்து வைத்திருந்த உண்மைகள் இப்போது வெளிப்பட்டு விட்டன.
நடந்தவைகளை நாதன் என்ற சண்முகநாதன் சொல்லிக் கொண்டு வர உள்ளே நுழைந்த ரெங்கசாமிக்கு கண்கள் கலங்கின. "எப்பா சண்முகம் நீ உயிரோட தான் இருக்கியா ?" என்றவர் அன்புச்செல்வனை காட்டி "இது உன் தங்கச்சி மவன் பா ..சித்ரா மகன் " என்று சொல்லவும் அன்பிற்கும் அப்போதுதான் புரிந்தது கதிரின் சாயல் ஏன் பரிச்சயமாக தோன்றியது என்று .
சண்முகமும் விசாலாட்சியும் ஊரை விட்டு சென்ற பின்னர் ஏற்பட்ட கலவரத்தில் அன்று ஊருக்குள் வந்திருந்த சித்ராவும் அவள் கணவனும் இறந்திருந்தனர்.
தன் தாய் மட்டுமின்றி தன் அத்தையும் மாமனும் கூட அநியாயமாக உயிர் விட்டதை அறிந்த கதிருக்கு தாங்கவில்லை ..அதுவரை விபத்தில் உயிர் இழந்ததாக நினைத்திருந்தான் .
தன்னவளுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற பயத்தோடு இருந்தான்.
அங்கு கண்மணியும் அழுதபடி உண்ணாமல் உறங்காமல் தன்னவனை நினைத்திருந்தாள்.
தன் உறவினரின் உண்மை முகம் முழுமையாக வெளிப்பட்டதும்..என்ன நடக்குமோ என்ற பயம் கூடியது..கதிருக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என்ற பயம் கூடியது.
Last edited: