கதைக்களம் ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியமாகவும் மிக அழகாகவும் நகர்ந்தது.
இமயவரம்பன் :
பெயருக்கேற்றார் போல் விவேகமும் செயலில் தெளிவும் கருணையும் கொண்டவன். தன் தாயால் வஞ்சிக்கப்பட்டு தன் தேவதையால் மானம் காக்கப்பட்டு தன் நிலையை எண்ணி கதறிய போது மனம் கணக்க செய்தது... தன்னை அரவணைத்த நல் உள்ளம் கொண்ட சொந்தங்களை காத்து அவர்கள் வாழ்வில் ஒளியையும் பாதுகாப்பையும் தந்து நற்பெயருடன் வளர்ச்சிப் பாதையை திட்டமிட்டு நல்ல முறையில் செயல்படுத்தும் விதம் மனதை கவர்ந்தது.
ஹிமானி ஸம்ருத்தி:
மிகவும் மெல்லிய மனம் படைத்த அழகு தேவதைஇவள். தன் குடும்பத்தால் அதிர்ஷ்டமானவள் தெய்வீகமானவள் என்று கொண்டாடப்பட்டு அவளின் சிறகை முடக்கி கூட்டில் அடைத்து வைத்த தருணமும், ஒரு சராசரி பெண் பிள்ளைகளுக்கு உரிய ஏக்கங்களும், ஆசைகளும் இவளுக்கு தவிர்க்கப்பட்டு தனக்கு என்ன வண்ணம் பிடிக்கும் என்று கூட அறியாமல் பிறர் நலனுக்காக வருத்திக்கொண்டு செய்த செயல்களும் வேதனையாக இருந்தது. இவள் தனக்காக தன்னை அன்புடன் நேசிக்கும் உயிரானவன் கணவனாக அமைய கடவுளிடம் வேண்டி நின்ற வரம் விதியின் வலிமையால் இவள் கரம் சேர்ந்தது.
இமயன் -ஹிமானி :
இமயன் -ஹிமானி இருவர் மனதிலும் உள்ள காதல் ஒருவரை ஒருவர் அறியாமல் பூட்டி வைத்தாலும் அந்த காதலின் சக்தி இருவரையும் வெளிக்கொணர்ந்து அவர்களின் நேசத்தை வெளிப்படுத்தியது. கடவுளின் அருளால் இருவரும் கரம் சேர்ந்தனர்.
இமயன் தன் தேவதையின் தேவையையும், அவளது கல்வி மீதான ஆசையையும் நிறைவேற்றி தனது கனவு இல்லத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதை காணும் போது மனம் நிறைந்தது.
ஹிமானியும் தன் இதயாவுடன் அவன் உறவுகளையும் அன்புடன் அரவணைத்து அனைவர் மனதிலும் இடம் பிடித்து தன் மக்களுடன் அழகான வாழ்வை நிறைவாக கொண்டு செல்கின்றாள் .
வாழ்க வளமுடன் இதே காதலுடன்.
மதியழகன் -நித்ய கல்யாணி:
மதியழகன் தன் தாயை இழந்து தந்தையின் இன்னொரு வாழ்க்கையை அறிந்து அவரை வெறுத்து ஒதுக்கி தனது அத்தையின் அரவணைப்பில் வளர்ந்து ஆசிரியராக உயர்ந்து நின்று அனைவருக்கும் ஆதரவாக இருந்தான். இமயனுடன் இவனது பாசம் நெகிழ்ச்சியாக இருந்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இவனது வாழ்வில் நித்யா வசந்தத்தை வீச செய்தாள்
நித்ய கல்யாணி கலகலப்பும், பாசமும் அண்ணன் மீது உண்மையான அன்பும் கொண்டவள், ஹிமானிக்கு அன்பு தோழி. மதியுடன் வாழ்வை சிறப்புடன் வாழ்கின்றாள்.
மாணிக்கம் -பஞ்சவர்ணம்:
உண்மையில் இவர்கள் இல்லையென்றால் இமயன் மற்றும் மதியழகன் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும், இவர்கள் உண்மையில் மிகவும் பவித்திரமானவர்கள் தன் மக்களுடன் தன் அண்ணன் மக்களையும் பாரபட்சம் இன்றி அன்பு செலுத்தி அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
உஷா, ஜமுனா இருவரும் மனதை கவர்ந்தார்கள்.
நித்யா, யமுனா, உஷா மூவரும் தங்கள் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமையை அண்ணன் இமயனுக்கு அளித்து அவனை கவுரவ படுத்தினார்கள்.
கவியரசன் - மல்லி:
கதையின் ஆரம்பத்தில் இந்தக் கவியரசனை சுத்தமாக பிடிக்கவில்லை வாழ்க்கையை தன் போக்கில் அடங்காப் பிள்ளையாய் வலம் வருகிறான் என்று கோபமாக இருந்தது, ஆனால் அனைத்து மனிதர்களும் பிறப்பில் நல்லவர்களே என்பதை இவனது நல்ல மாற்றமும் புரிய வைத்தது மல்லியுடன் இவன் தன் வாழ்க்கையை உண்மையாக நேசித்து வாழ்ந்ததையும் காண முடிந்தது..
செல்வராணி- பாண்டியன்:
செல்வராணி : தாய் என்பவள் தன் பிள்ளைகளுக்கு பாரபட்சம் இன்றி நடப்பவர் ஆனால் இவரோ அகங்காரத்தில் உச்சம் என்று தான் என்னை நினைக்க வைத்தார், காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள் ஆனால் இவரோ இமயவரம்பன் மீது சுமத்தியப்பழியும் கொடூர தாக்குதலும் மனிதாபிமானம் அற்ற செயலும் இவரை பேயாக நினைக்க வைத்தது.. தன் தவறை மறைக்க ஊரார் மீது பழியை சுமத்தும் இவரை காலம் திருத்துமா என்பதும் சந்தேகமே.
பாண்டியன்: ஒரு மனிதனுக்கு பொறுமை தேவைதான் அதற்காக அனைத்திற்கும் பொறுமையை கடைப்பிடித்து தன் வாழ்க்கையோடு பிள்ளைகளின் வாழ்க்கையையும் வழிநடத்த தவறிவிட்டார் என்று தான் எனக்கு தோன்றியது...
தேவகி: சுயநலம்.
யாஷ், ஆன்சல், அன்சல், வம்சி, முன்ஜல், விராலி அனைவருமே தன்நலம் விரும்பிகளே .
ரன்வீர் -ஜமுனா .
சல்மா -பிரணத் : நிதர்சனம் உணர்ந்து காலம் கடந்தாலும் மகளையும் மகனையும் அரவணைத்து அவர்களுடன் இணைந்து சந்தோஷமாக எதிர்காலத்தை கடத்துவது மகிழ்ச்சி.
அனைவரது வாழ்விலும் நிச்சயம் ஏற்றத்தாழ்வுகள், தகாத நிகழ்வுகள் இருக்கத்தான் செய்யும், இவர்களும் அதனை கடந்து தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு ஆலமரமாக தாங்கி நிற்கும் உறவுகளின் பந்தத்தை நழுவவிடாமல் சிறப்பாக மகிழ்ச்சியாக வாழ்வதை காணும் போது நெகிழ்ச்சியாக இருந்தது.
கதையின் நிறைவு மனதிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.
@Renju vinodh போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தோழி.
Last edited: