காதல் கவிதை!
-----------------------------
நீ
ஏற்பதற்கோ
மறுப்பதற்கோ
அல்லவென் காதல்!!
ஒளிகாண் உருகிடும்
பனித்துளி போல்-நின்
விழிகாண் உருகிடு
முள்ளத்தை-நீ
ஒருமுறையேனும்
உணர்ந்தால் போதும்.
மற்ற படி-மீண்டும்
முதல்வரி படி !!
மேல்சொன்னதையும், ஏற்பையும் மறுப்பையும் கண்களால் காட்டி அட்சர சுத்தமாய் அதற்கு பொருந்திப்போகுமந்த புகைப்படத்தையும் மறந்திடுங்கள்!
காதல் கவிதைகளில் எனக்கத்தனை பிராப்தி இல்லை. கல்லூரி காலத்து மையலுக்காக நான் முதலும் கடைசியாய் Acrostic வடிவில் (ஒவ்வொரு வரியின் முதலெழுத்தையும் இணைக்கையில் அவள் பெயர் வருமாறு) எழுதிய கவிதை "அலகா எளுதிரிக்கு. நான் தமில் நல்லா பேஸ்வேன்.. பச்சே படிக்க வராது. Native மலபார்...." என்று தோல்வியிலும், டெல்லி காலங்களில் அனாயசமாக கிறுக்கிய
"அப் நீந்த் நஹி-
க்யோன்கி-
ஆபீஸ் மே
ஆஜ் சாந்த் நஹி-
தேரி ச்சுட்டி !!
வெற்றியிலும் முடிந்ததை இப்போது அறிவுப்பூர்வமாய் பார்க்கையில், காதல் -மொழி-(பெண்களின்) Brain இம்மூன்றுக்குமான அற்புத synthesizer வெறும் நாலு வரிக்கவிதை என்று விஞ்ஞானம் சொல்வதை ஏற்க தோன்றுகிறது. FMRI (Functional Magnetic Resonance Imaging) ஆய்வுப்படி, Specifically பெண்களின் Brain Sensors, காதல் கவிதைகளின் எதுகை, மோனை, புகழ்ச்சி, நெகிழ்ச்சி இவற்றுக்கெல்லாம் மயங்குவதற்கேற்ப "Pre-wired" ப்ரோக்ராமிங் இழைகளால் தூண்டப்படுவது தான், இன்றளவும் காதல் கவிதைகளின் வெற்றிக்கு காரணம்.
My dear Boys, உடனேயொரு கவிதைத்தொகுப்பை கொண்டு போய் நீங்கள் விரும்பும் பெண்ணிடம் கொடுத்து மடக்க யத்தனிக்காதீர். அதற்குமுன் நீங்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியமான ஒன்றுள்ளது. அதன் பெயர்...., "இவனோடிருக்கையில் நான் பாதுகாப்பாய் உணர்கிறேன்"... எனும்
"உள்ளுணர்வு "!!
#Charithraa's
-----------------------------
நீ
ஏற்பதற்கோ
மறுப்பதற்கோ
அல்லவென் காதல்!!
ஒளிகாண் உருகிடும்
பனித்துளி போல்-நின்
விழிகாண் உருகிடு
முள்ளத்தை-நீ
ஒருமுறையேனும்
உணர்ந்தால் போதும்.
மற்ற படி-மீண்டும்
முதல்வரி படி !!
மேல்சொன்னதையும், ஏற்பையும் மறுப்பையும் கண்களால் காட்டி அட்சர சுத்தமாய் அதற்கு பொருந்திப்போகுமந்த புகைப்படத்தையும் மறந்திடுங்கள்!
காதல் கவிதைகளில் எனக்கத்தனை பிராப்தி இல்லை. கல்லூரி காலத்து மையலுக்காக நான் முதலும் கடைசியாய் Acrostic வடிவில் (ஒவ்வொரு வரியின் முதலெழுத்தையும் இணைக்கையில் அவள் பெயர் வருமாறு) எழுதிய கவிதை "அலகா எளுதிரிக்கு. நான் தமில் நல்லா பேஸ்வேன்.. பச்சே படிக்க வராது. Native மலபார்...." என்று தோல்வியிலும், டெல்லி காலங்களில் அனாயசமாக கிறுக்கிய
"அப் நீந்த் நஹி-
க்யோன்கி-
ஆபீஸ் மே
ஆஜ் சாந்த் நஹி-
தேரி ச்சுட்டி !!
வெற்றியிலும் முடிந்ததை இப்போது அறிவுப்பூர்வமாய் பார்க்கையில், காதல் -மொழி-(பெண்களின்) Brain இம்மூன்றுக்குமான அற்புத synthesizer வெறும் நாலு வரிக்கவிதை என்று விஞ்ஞானம் சொல்வதை ஏற்க தோன்றுகிறது. FMRI (Functional Magnetic Resonance Imaging) ஆய்வுப்படி, Specifically பெண்களின் Brain Sensors, காதல் கவிதைகளின் எதுகை, மோனை, புகழ்ச்சி, நெகிழ்ச்சி இவற்றுக்கெல்லாம் மயங்குவதற்கேற்ப "Pre-wired" ப்ரோக்ராமிங் இழைகளால் தூண்டப்படுவது தான், இன்றளவும் காதல் கவிதைகளின் வெற்றிக்கு காரணம்.
My dear Boys, உடனேயொரு கவிதைத்தொகுப்பை கொண்டு போய் நீங்கள் விரும்பும் பெண்ணிடம் கொடுத்து மடக்க யத்தனிக்காதீர். அதற்குமுன் நீங்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியமான ஒன்றுள்ளது. அதன் பெயர்...., "இவனோடிருக்கையில் நான் பாதுகாப்பாய் உணர்கிறேன்"... எனும்
"உள்ளுணர்வு "!!
#Charithraa's