காதல் 29:
“என்னாச்சு மதி..? ஏன் அமைதியா இருக்க..?” என்றார் பார்வதி.
“ஒண்ணுமில்லை..!”
“உடம்புக்கு பரவாயில்லையா..?”
“ம்ம்..வினோதினி எங்க...?” என்றாள்.
“அவ ஸ்கூலுக்கு போய்ட்டா...அடுத்த வாரம் வர்றதா சொல்லியிருக்கா..!” என்றார் பார்வதி.
அவள் இப்படி உர்ரென்று வந்திருப்பது கண்டு பார்வதிக்கு உள்ளே சிறு பயம் இருக்கத்தான் செய்தது.
“முகிலன் தம்பி எங்க..?”
“எனக்குத் தெரியாது..!” என்றவள், அறைக்குள் சென்று விட்டாள்.
“என்னாச்சு இவளுக்கு..?” என்று பார்வதி யோசித்துக் கொண்டிருக்கும் போதே....
“சித்தி, உள்ள வரலாமா..?” என்ற குரலில் நிமிர்ந்தார்.
“தனபாண்டி,குணபாண்டி வாங்கப்பா..!” என்றார் சந்தோஷமாய்.
“சித்தப்பா இல்லையா சித்தி...!” என்றனர் இருவரும்.
“வெளிய போயிருக்கார்,வாங்க உட்காருங்க...காபி போடவா..?” என்றார் பார்வதி.
“அதெல்லாம் வேண்டாம் சித்தி. புதன் கிழமை நிச்சயம் பண்ண போறோம் சித்தி. நீங்களும், சித்தப்பாவும் கண்டிப்பா வந்துடனும்...!” என்றனர்.
“ரொம்ப சந்தோசம்ப்பா....நடக்குறது எல்லாமே நல்லதாத்தான் நடக்குது. ஆனா நாங்க வரதுனால உங்களுக்கு ஏதும் பிரச்சனை வந்துடாதா..?” என்றார்.
“என்ன வந்தாலும் பரவாயில்லை. நீங்க திலகா சித்தியை சொல்றிங்கன்னு புரியுது. அவங்களுக்கு பயந்து, நாங்க ஒவ்வொன்னையும் செய்ய முடியாது. அப்பாவும், அம்மாவும் டவுனுக்கு போயிருக்காங்க...இல்லைன்னா அவங்க தான் வந்திருப்பாங்க...! நீங்க எதைப் பத்தியும் யோசிக்காம, நாளைக்கு சாயந்தரமே வீட்டுக்கு வந்துடுங்க..!” என்றனர் இருவரும்.
“சரிப்பா..!” என்று பார்வதி சொல்ல,
“மதி எங்க...? முகிலன் வீட்டுக்கு போயிட்டதா கேள்விப்பட்டோம். இனியாவது சந்தோஷமா இருக்கட்டும் சித்தி..!” என்றனர் இருவரும்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, மதி உள்ளே இருந்து வர,
“வா மதி..! எப்ப வந்த...? நீயும்,முகிலன் மச்சானும் ஜோடியா பங்க்ஷனுக்கு வந்துடனும்..!” என்றனர்.
“சரிண்ணா..!!!” என்பதோடு முடித்துக் கொண்டாள்.அவர்கள் சென்றவுடன், மதியும் ஒரு பேக்குடன் வந்தாள்.
“என்னதிது மதி..!” என்றார் பார்வதி.
“அம்மா..! என்னோட திங்க்ஸ் கொஞ்சம் எடுத்துருக்கேன்..! நான் கிளம்புறேன்..!” என்றாள்.
“இந்தா இருக்கு அடுத்த வீடு..! அதுக்கு இவ்வளவு அக்கப்போறா..?” என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட பார்வதி,
“ம்ம் சரிம்மா..!” என்றார்.
மதி வந்த வேகத்தைப் பார்த்து, கொஞ்சம் பயந்து தான் போயிருந்தார். எங்கே கோபத்தில் வந்து விட்டாளோ என்று. ஆனால் மதியோ வந்த அரைமணி நேரத்தில் கிளம்பிவிட்டாள். பார்வதியும் அவளிடம் எதையும் தோண்டித் துருவிக் கேட்கவில்லை. ஆனால் அவளின் முகத்தைப் பார்த்தே, ஏதோ சரியில்லை என்று தோன்றியது.எதுவாக இருந்தாலும், முகிலன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை, இப்போது அவருக்கு முழுமையாய் இருந்தது. இனி மதியின் வாழ்க்கையைப் பற்றி அவர் கவலை கொள்ளத் தேவையில்லை.
மதி வீட்டிற்குள் நுழையும் போதே, பெரியசாமியும், மலரும் பரிதவிப்புடன் வாசலைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
மதியைப் பார்த்தவுடன் தான் அவர்களின் முகத்தில் நிம்மதி வந்தது.
“எல்லாரையும் ரொம்பப் படுத்துறோமோ...?கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ...?” என்று தனக்குள் யோசித்துக் கொண்டே, சென்றாள்.
“என்னம்மா மதி...? சட்டுன்னு போய்ட்ட. அதுவும் கோவமா வேற...? முகிலன் வேற கோவமா வெளிய போய்ட்டான்... என்ன பிரச்சனை உங்களுக்குள்ள...?” என்றார் மலர்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை அத்தை...சும்மா சின்னதா ஒரு வாக்குவாதம்.அவ்வளவு தான்..!” என்றாள் மதி.
பெரியசாமியும் அமைதியாக இருந்தார்.மதியும் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. அவரிடம், அவள் பேசுவதே இல்லை. அதுவே அவருக்குக் குற்ற உணர்ச்சியாய் இருந்தது. அவர் அமைதியாய் உள்ளே செல்ல,
“மாமாவுக்கு உடம்புக்கு முடியலையா அத்தை..?” என்றாள் எதுவும் அறியாதவள் போல்.
“இவளை எந்த வகையில் சேர்ப்பது..” என்று எண்ணிய மலர்,
“உனக்கு புரியலையா மதி. அவர் உன்கிட்ட பேசத் தயங்குறார். நீயாவது சகஜமா பேசலாம்ல..!” என்றார்.
“அவருக்கே அந்த தயக்கம் இருக்கும் போது, எனக்கு மட்டும் எப்படியத்தை உடனே தயக்கம் இல்லாமப் போகும். உங்க புள்ளைகிட்டையே நான் இன்னும் சரியா பேசலை..! எனக்கு மாமா மேல கோபம் இருந்தது உண்மைதான் அத்தை. ஆனா, அவரே எப்ப எங்க வீடு தேடி வந்தாரோ...அப்பவே நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்..! அவரை பீல் பண்ண வேண்டாம்ன்னு சொல்லுங்க..!” என்றாள் கொஞ்சம் சத்தமாகவே.
பெரியசாமியின் காதுகளிலும், அவள் சொன்னது நன்றாகவே விழுந்தது. மதியைப் பற்றிய அவருடைய கணிப்புகள் எல்லாம் அப்படியே சரிந்து விழ, ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டது அவருக்கு.
அப்போது வேகமாக வந்த ஒருவர்,
“மலரு...திலகா மக துர்கா மருந்தைக் குடிச்சுட்டாளாம்...முகிலன் தம்பி இருந்தா வர சொல்லு..!” என்று சொல்ல,
“முகிலன் இல்லையேக்கா...அவன் இப்பதான வெளிய போனான்..!” என்று மலரும் பதறிக் கொண்டு அவருடன் சென்றார். பெரியசாமிக்கும் அதிர்ச்சி. அவரும் செல்ல,
“எதுக்கு எல்லாரும் இப்படி ஓடுறாங்க...?” என்று புரியாமல் அவர்களின் பின்னே மதியும் சென்றாள்.
அலறியடித்துக் கொண்டு ஊரே திலகா வீட்டின் முன்பு கூட, பார்வதியும், மனோகரும் கூட வந்துவிட்டிருந்தனர்.
“பாவி மக...இப்படி அரளிக்காயை அரைச்சுக் குடிச்சுட்டாளே..!” என்று துர்காவை தன் மடியில் போட்டுக் கத்திக் கொண்டிருந்தார் திலகா.
“இப்படியே பார்த்துட்டு இருந்தா எப்படி...தூக்குங்க ஆஸ்பத்திரிக்கு..!” என்று சிலர் சொல்ல,
“அதுக்குள்ள,ஒன்னுகெடக்க ஒன்னு ஆகிடுச்சுன்னா..?” என்று சிலர் பயமுறுத்தினர்.
பார்வதி யாரையும் சட்டை செய்யாமல் உள்ளே சென்றவர், துவைக்க வைத்திருந்த சோப்பை நன்கு கரைத்துக் கொண்டு வந்தார்.
“சோப்புத் தண்ணிய ஊத்துவோம்...! உள்ள போன அரளி விதையெல்லாம் உடனே வந்துடும்...!” என்றபடி, துர்காவின் வாயைப் பிடித்து, சோப்புத் தண்ணீரை ஊற்ற ஆரம்பித்தனர். வயிற்றுக்குள் சென்ற சில நிமிடங்களில், அவள் தின்ற அரளி விதையெல்லாம், போன வேகத்திற்கு வெளியே வந்தது. துர்கா வாந்தி எடுத்துக் கொண்டிருக்க, அப்போது வந்தான் முகிலன்.
“விலகுங்க..! கொஞ்சம் காத்து வரட்டும்..!” என்றவன், அவளைப் பரிசோதிக்க, அவளின் நல்ல நேரம், எல்லாமே வெளியே வந்திருந்தது.
“பிராப்ளம் இல்லை. எதுக்கும் ஹாஸ்பிட்டல் போய், ஸ்டொமக் வாஷ் பண்ணிட்டா...எப்பவும் பயப்படத் தேவையில்லை..!” என்றான்.
“நீங்க டாக்டரு தானா...என்ன பண்ணணுமோ நீங்களே பண்ணிடுங்க..!” என்றார் திலகாவின் கணவர் கணபதி.
“அந்த வசதியெல்லாம் இங்க இல்லை மாமா. வீட்டில் வச்சு பண்ற விஷயம் இல்லை. நான் ஒரு இன்ஜெக்ஷன் போடுறேன். பக்கத்து ஊர்ல இருக்குற ஜிஹெச்ல கூட போய் அட்மிட் பண்ணுங்க..!” என்றான்.
“அதை நீ சொல்லாத...! உன்னால தான் என் மக இப்படிக் கெடக்குறா..?” என்று திலகா ஆங்காரமாய் கத்தத் தொடங்கினார்.
அதற்குள் விஷயம் கேள்விப் பட்டு துரையும் அங்கு வர, துர்காவை மறந்து, அங்கு சண்டையே வந்தது. மனைவியை வெறுப்புடன் பார்த்த கணபதி, யாரையும் கண்டு கொள்ளாமல், துர்காவை அழைத்துக் கொண்டு அவர் ஆஸ்பத்திரி செல்ல, அது கூட தெரியாமல் சண்டையில் இறங்கியிருந்தார் திலகா.
“என்ன சொல்றிங்க மதினி..! பார்த்துப் பேசுங்க...? உங்க மக மருந்தைக் குடிச்சதுக்கு, என் மகன் எப்படி காரணமாவான்..?” என்றார் மலர்.
“கட்டிக்கிறேன், கட்டிக்கிறேன்னு சொல்லி ஏமாத்திப் புட்டிங்க. அதான், அவ மனசு தாங்கம அரளி விதையை அரைச்சுக் குடிச்சுட்டா..!” என்றார் திலகா.
“நம்புற மாதிரி இல்லையே...?” என்றாள் மதி.
“ஏண்டி பேசமாட்ட...? என் மக வாழ்க்கையைக் கெடுத்துட்டு...நீ மட்டும் நல்லா இருந்துடுவியா..?” என்று கத்த,
“கண்டிப்பா நல்லா இருப்பேன். உங்களை மாதிரி யார் வாழ்க்கையையும் கெடுக்கணும்ன்னு நான் கனவுல கூட நினைச்சது கிடையாது. அதுக்காகவே நான் நல்லா தான் இருப்பேன். அப்பறம், நீங்க மாப்பிள்ளை பார்த்தது, மலர் அத்தை மகன் முகிலனை இல்ல. மதியோட புருஷன் முகிலனை. அடுத்தவ புருஷனை, தாம் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்குற தாயை எங்கையாவது பார்த்திருக்கிங்களா...?” என்று மதி கத்த, அவளின் கத்தலில் அந்த இடமே அமைதியாகியது.
முகிலன் மதியைப் பார்க்க, அவளோ அவனைக் கண்டு கொள்ளவில்லை.
“என்னாச்சு மதி..? ஏன் அமைதியா இருக்க..?” என்றார் பார்வதி.
“ஒண்ணுமில்லை..!”
“உடம்புக்கு பரவாயில்லையா..?”
“ம்ம்..வினோதினி எங்க...?” என்றாள்.
“அவ ஸ்கூலுக்கு போய்ட்டா...அடுத்த வாரம் வர்றதா சொல்லியிருக்கா..!” என்றார் பார்வதி.
அவள் இப்படி உர்ரென்று வந்திருப்பது கண்டு பார்வதிக்கு உள்ளே சிறு பயம் இருக்கத்தான் செய்தது.
“முகிலன் தம்பி எங்க..?”
“எனக்குத் தெரியாது..!” என்றவள், அறைக்குள் சென்று விட்டாள்.
“என்னாச்சு இவளுக்கு..?” என்று பார்வதி யோசித்துக் கொண்டிருக்கும் போதே....
“சித்தி, உள்ள வரலாமா..?” என்ற குரலில் நிமிர்ந்தார்.
“தனபாண்டி,குணபாண்டி வாங்கப்பா..!” என்றார் சந்தோஷமாய்.
“சித்தப்பா இல்லையா சித்தி...!” என்றனர் இருவரும்.
“வெளிய போயிருக்கார்,வாங்க உட்காருங்க...காபி போடவா..?” என்றார் பார்வதி.
“அதெல்லாம் வேண்டாம் சித்தி. புதன் கிழமை நிச்சயம் பண்ண போறோம் சித்தி. நீங்களும், சித்தப்பாவும் கண்டிப்பா வந்துடனும்...!” என்றனர்.
“ரொம்ப சந்தோசம்ப்பா....நடக்குறது எல்லாமே நல்லதாத்தான் நடக்குது. ஆனா நாங்க வரதுனால உங்களுக்கு ஏதும் பிரச்சனை வந்துடாதா..?” என்றார்.
“என்ன வந்தாலும் பரவாயில்லை. நீங்க திலகா சித்தியை சொல்றிங்கன்னு புரியுது. அவங்களுக்கு பயந்து, நாங்க ஒவ்வொன்னையும் செய்ய முடியாது. அப்பாவும், அம்மாவும் டவுனுக்கு போயிருக்காங்க...இல்லைன்னா அவங்க தான் வந்திருப்பாங்க...! நீங்க எதைப் பத்தியும் யோசிக்காம, நாளைக்கு சாயந்தரமே வீட்டுக்கு வந்துடுங்க..!” என்றனர் இருவரும்.
“சரிப்பா..!” என்று பார்வதி சொல்ல,
“மதி எங்க...? முகிலன் வீட்டுக்கு போயிட்டதா கேள்விப்பட்டோம். இனியாவது சந்தோஷமா இருக்கட்டும் சித்தி..!” என்றனர் இருவரும்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, மதி உள்ளே இருந்து வர,
“வா மதி..! எப்ப வந்த...? நீயும்,முகிலன் மச்சானும் ஜோடியா பங்க்ஷனுக்கு வந்துடனும்..!” என்றனர்.
“சரிண்ணா..!!!” என்பதோடு முடித்துக் கொண்டாள்.அவர்கள் சென்றவுடன், மதியும் ஒரு பேக்குடன் வந்தாள்.
“என்னதிது மதி..!” என்றார் பார்வதி.
“அம்மா..! என்னோட திங்க்ஸ் கொஞ்சம் எடுத்துருக்கேன்..! நான் கிளம்புறேன்..!” என்றாள்.
“இந்தா இருக்கு அடுத்த வீடு..! அதுக்கு இவ்வளவு அக்கப்போறா..?” என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட பார்வதி,
“ம்ம் சரிம்மா..!” என்றார்.
மதி வந்த வேகத்தைப் பார்த்து, கொஞ்சம் பயந்து தான் போயிருந்தார். எங்கே கோபத்தில் வந்து விட்டாளோ என்று. ஆனால் மதியோ வந்த அரைமணி நேரத்தில் கிளம்பிவிட்டாள். பார்வதியும் அவளிடம் எதையும் தோண்டித் துருவிக் கேட்கவில்லை. ஆனால் அவளின் முகத்தைப் பார்த்தே, ஏதோ சரியில்லை என்று தோன்றியது.எதுவாக இருந்தாலும், முகிலன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை, இப்போது அவருக்கு முழுமையாய் இருந்தது. இனி மதியின் வாழ்க்கையைப் பற்றி அவர் கவலை கொள்ளத் தேவையில்லை.
மதி வீட்டிற்குள் நுழையும் போதே, பெரியசாமியும், மலரும் பரிதவிப்புடன் வாசலைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
மதியைப் பார்த்தவுடன் தான் அவர்களின் முகத்தில் நிம்மதி வந்தது.
“எல்லாரையும் ரொம்பப் படுத்துறோமோ...?கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ...?” என்று தனக்குள் யோசித்துக் கொண்டே, சென்றாள்.
“என்னம்மா மதி...? சட்டுன்னு போய்ட்ட. அதுவும் கோவமா வேற...? முகிலன் வேற கோவமா வெளிய போய்ட்டான்... என்ன பிரச்சனை உங்களுக்குள்ள...?” என்றார் மலர்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை அத்தை...சும்மா சின்னதா ஒரு வாக்குவாதம்.அவ்வளவு தான்..!” என்றாள் மதி.
பெரியசாமியும் அமைதியாக இருந்தார்.மதியும் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. அவரிடம், அவள் பேசுவதே இல்லை. அதுவே அவருக்குக் குற்ற உணர்ச்சியாய் இருந்தது. அவர் அமைதியாய் உள்ளே செல்ல,
“மாமாவுக்கு உடம்புக்கு முடியலையா அத்தை..?” என்றாள் எதுவும் அறியாதவள் போல்.
“இவளை எந்த வகையில் சேர்ப்பது..” என்று எண்ணிய மலர்,
“உனக்கு புரியலையா மதி. அவர் உன்கிட்ட பேசத் தயங்குறார். நீயாவது சகஜமா பேசலாம்ல..!” என்றார்.
“அவருக்கே அந்த தயக்கம் இருக்கும் போது, எனக்கு மட்டும் எப்படியத்தை உடனே தயக்கம் இல்லாமப் போகும். உங்க புள்ளைகிட்டையே நான் இன்னும் சரியா பேசலை..! எனக்கு மாமா மேல கோபம் இருந்தது உண்மைதான் அத்தை. ஆனா, அவரே எப்ப எங்க வீடு தேடி வந்தாரோ...அப்பவே நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்..! அவரை பீல் பண்ண வேண்டாம்ன்னு சொல்லுங்க..!” என்றாள் கொஞ்சம் சத்தமாகவே.
பெரியசாமியின் காதுகளிலும், அவள் சொன்னது நன்றாகவே விழுந்தது. மதியைப் பற்றிய அவருடைய கணிப்புகள் எல்லாம் அப்படியே சரிந்து விழ, ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டது அவருக்கு.
அப்போது வேகமாக வந்த ஒருவர்,
“மலரு...திலகா மக துர்கா மருந்தைக் குடிச்சுட்டாளாம்...முகிலன் தம்பி இருந்தா வர சொல்லு..!” என்று சொல்ல,
“முகிலன் இல்லையேக்கா...அவன் இப்பதான வெளிய போனான்..!” என்று மலரும் பதறிக் கொண்டு அவருடன் சென்றார். பெரியசாமிக்கும் அதிர்ச்சி. அவரும் செல்ல,
“எதுக்கு எல்லாரும் இப்படி ஓடுறாங்க...?” என்று புரியாமல் அவர்களின் பின்னே மதியும் சென்றாள்.
அலறியடித்துக் கொண்டு ஊரே திலகா வீட்டின் முன்பு கூட, பார்வதியும், மனோகரும் கூட வந்துவிட்டிருந்தனர்.
“பாவி மக...இப்படி அரளிக்காயை அரைச்சுக் குடிச்சுட்டாளே..!” என்று துர்காவை தன் மடியில் போட்டுக் கத்திக் கொண்டிருந்தார் திலகா.
“இப்படியே பார்த்துட்டு இருந்தா எப்படி...தூக்குங்க ஆஸ்பத்திரிக்கு..!” என்று சிலர் சொல்ல,
“அதுக்குள்ள,ஒன்னுகெடக்க ஒன்னு ஆகிடுச்சுன்னா..?” என்று சிலர் பயமுறுத்தினர்.
பார்வதி யாரையும் சட்டை செய்யாமல் உள்ளே சென்றவர், துவைக்க வைத்திருந்த சோப்பை நன்கு கரைத்துக் கொண்டு வந்தார்.
“சோப்புத் தண்ணிய ஊத்துவோம்...! உள்ள போன அரளி விதையெல்லாம் உடனே வந்துடும்...!” என்றபடி, துர்காவின் வாயைப் பிடித்து, சோப்புத் தண்ணீரை ஊற்ற ஆரம்பித்தனர். வயிற்றுக்குள் சென்ற சில நிமிடங்களில், அவள் தின்ற அரளி விதையெல்லாம், போன வேகத்திற்கு வெளியே வந்தது. துர்கா வாந்தி எடுத்துக் கொண்டிருக்க, அப்போது வந்தான் முகிலன்.
“விலகுங்க..! கொஞ்சம் காத்து வரட்டும்..!” என்றவன், அவளைப் பரிசோதிக்க, அவளின் நல்ல நேரம், எல்லாமே வெளியே வந்திருந்தது.
“பிராப்ளம் இல்லை. எதுக்கும் ஹாஸ்பிட்டல் போய், ஸ்டொமக் வாஷ் பண்ணிட்டா...எப்பவும் பயப்படத் தேவையில்லை..!” என்றான்.
“நீங்க டாக்டரு தானா...என்ன பண்ணணுமோ நீங்களே பண்ணிடுங்க..!” என்றார் திலகாவின் கணவர் கணபதி.
“அந்த வசதியெல்லாம் இங்க இல்லை மாமா. வீட்டில் வச்சு பண்ற விஷயம் இல்லை. நான் ஒரு இன்ஜெக்ஷன் போடுறேன். பக்கத்து ஊர்ல இருக்குற ஜிஹெச்ல கூட போய் அட்மிட் பண்ணுங்க..!” என்றான்.
“அதை நீ சொல்லாத...! உன்னால தான் என் மக இப்படிக் கெடக்குறா..?” என்று திலகா ஆங்காரமாய் கத்தத் தொடங்கினார்.
அதற்குள் விஷயம் கேள்விப் பட்டு துரையும் அங்கு வர, துர்காவை மறந்து, அங்கு சண்டையே வந்தது. மனைவியை வெறுப்புடன் பார்த்த கணபதி, யாரையும் கண்டு கொள்ளாமல், துர்காவை அழைத்துக் கொண்டு அவர் ஆஸ்பத்திரி செல்ல, அது கூட தெரியாமல் சண்டையில் இறங்கியிருந்தார் திலகா.
“என்ன சொல்றிங்க மதினி..! பார்த்துப் பேசுங்க...? உங்க மக மருந்தைக் குடிச்சதுக்கு, என் மகன் எப்படி காரணமாவான்..?” என்றார் மலர்.
“கட்டிக்கிறேன், கட்டிக்கிறேன்னு சொல்லி ஏமாத்திப் புட்டிங்க. அதான், அவ மனசு தாங்கம அரளி விதையை அரைச்சுக் குடிச்சுட்டா..!” என்றார் திலகா.
“நம்புற மாதிரி இல்லையே...?” என்றாள் மதி.
“ஏண்டி பேசமாட்ட...? என் மக வாழ்க்கையைக் கெடுத்துட்டு...நீ மட்டும் நல்லா இருந்துடுவியா..?” என்று கத்த,
“கண்டிப்பா நல்லா இருப்பேன். உங்களை மாதிரி யார் வாழ்க்கையையும் கெடுக்கணும்ன்னு நான் கனவுல கூட நினைச்சது கிடையாது. அதுக்காகவே நான் நல்லா தான் இருப்பேன். அப்பறம், நீங்க மாப்பிள்ளை பார்த்தது, மலர் அத்தை மகன் முகிலனை இல்ல. மதியோட புருஷன் முகிலனை. அடுத்தவ புருஷனை, தாம் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்குற தாயை எங்கையாவது பார்த்திருக்கிங்களா...?” என்று மதி கத்த, அவளின் கத்தலில் அந்த இடமே அமைதியாகியது.
முகிலன் மதியைப் பார்க்க, அவளோ அவனைக் கண்டு கொள்ளவில்லை.