அத்தியாயம்: 20
சகாயம் ஏதோ யோசித்தபடி அமர்ந்துக்கொண்டிருந்தான்.. விக்கிக்கு அவனின் யோசனை பிடிபடவில்லை, பிடிக்கவுமில்லை.
"என்ன சகாயம் நான் மேல வந்துடுவேனோன்னு பயப்படுறியோ?"
"விக்கி அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை, நான் யோசிச்சுக்கிட்டு இருக்கிறது உன்னை பத்தி இல்ல, அந்த கலெக்டரும், அந்த பொண்ணு சமீராவை பத்தியும் தான். நீ ஏன் அவங்களை கொல்லாம வச்சிருக்க?"
"யோவ் சகாயம்! இங்க பாரு எத்தனை கொலை தான் செஞ்சுக்கிட்டு இருக்கிறது? ஏற்கனவே அந்த பிரெஸ்ஸு பெரிசு (விஸ்வநாதன்), பிறகு அது அனுப்பின ஊமையனையும்(லோகு), அனாதை கழுதையும்(சேரன்) போட்டு தள்ளியாச்சு!! நான் மேல வரதுக்கு கொலை செஞ்சாலும் அதுல ஒரு நியாமிருக்கு, நீ மாட்டிக்க கூடாதுன்னு நான் ஏன் அவங்களை கொல்லனும்? அதுமட்டுமில்லை, அவங்க உயிரோடு இருக்கிறது தான் எனக்கு நல்லது!" என்றான் விக்கி
"உனக்கு நல்லதா? புரியலையே விக்கி!"
"இந்த கேசுலேர்ந்து என்னை வெளிய கொண்டு வரவரைக்கும் அவங்க உயிரோட நான் விளையாடமாட்டேன். உன்னையும் அவங்ககிட்ட நெருங்க விடமாட்டேன்.. இப்போ புரியுதா சகாயம்?"
அவனின் கேள்வியில் தலையில் அடித்துக்கொண்டு, "இன்னும் கொஞ்சம் கூட பணம் தரேன் விக்கி! இந்த குண்டுவெடிப்பு கேஸை நீயே டீல் செஞ்சுக்க!"
"பாத்தியா உன் புத்திய காட்டிட்டே!"
"இல்லை விக்கி! என் மேல இப்போ கட்சிக்கு கொஞ்சம் அதிருப்தி! இப்போ போய் இந்த கேசுல நானும் சம்பந்த பட்டிருக்கேன்னு தெரிஞ்சா, என்ன நடக்கும்ன்னு நீயே யோசிச்சு பாரு விக்கி!"
"ஹா. ஹா! யோவ் சகாயம்! உன்னை பத்தி எல்லாருக்கும் ஓரளவிற்கு தெரியும்.. அத்த விட்டுட்டு நம்ம மேட்டரை கவனி!! நீ குண்டுவெடிப்பு கேசுல ஒண்ணும் கிழிக்க வேணாம்.. அதெல்லாம் நானே பார்த்துக்கிறேன்.. இப்போ இந்த தூத்துக்குடில நடத்தப்போற கலவரத்துக்கு மட்டும் கொஞ்சம் கைகொடு.."
தூத்துக்குடியில் இருக்கும் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளினால் மக்கள் நோய்வாய் பட்டு அவதிக்குள்ளானதால், அவர்கள் அனைவரும் இணைந்து பலநாட்களாக போராட்டம் நடத்திவருகின்றனர்.
அந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதே அந்த தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்.
அவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்!!
அதனால் ஆளுங்கட்சிக்கு அனைத்து பக்கமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதால், அந்த கட்சியின் தலைமை விக்கிக்கு அழைத்து, அந்த சட்ட மன்ற உறுப்பினரை கொலை செய்ய சொன்னது.
அதற்கு பதிலாக அங்கே நடக்கும் இடை தேர்தலில் விக்கியை நிறுத்த முடிவு செய்திருப்பதையும் விக்கியிடம் கட்சி தலைமை சொல்லியிருந்தது..
அதற்காகவே தான் சகாயத்தை காப்பாற்றி அங்கிருந்த மருத்துவரையும், அவனிடத்திற்கு கூட்டி கொண்டு சென்றான்..
"விக்கி இப்போ சொல்லு அடுத்த குண்டுவெடிப்பு நடத்திடலாமா?"
"அதெல்லாம் சரி வராது சகாயம், அப்படி செஞ்சா மக்கள் கோபம் ஆளுங்கட்சி மேல தான் திரும்பும். அப்போ எனக்கு யாருமே ஓட்டு போட மாட்டாங்க. கலவரம் செய்யணும் ஆனா செய்யக்கூடாது!! அதே மாதிரி நம்ம கட்சி மேல கோவம் வரக்கூடாது பரிதாபம் தான் வரணும்..
"ஒட்டு எல்லாம் போட வச்சிடலாம் விக்கி. அதுக்கெல்லாம் கைவசம் நிறய ஆளுங்க இருக்கு! எனக்கு என்னமோ குண்டுவெடிப்பு நடத்தறது தான் நல்ல வழி(!) ன்னு நினைக்கிறேன்." என்று சொன்ன சகாயத்தின் வார்த்தைகளில் வன்மம் மட்டுமே இருந்தது..
இவனை(விக்கி) ஒழித்து கட்ட தான் நினைக்கும்போது கட்சி அவனுக்கு முக்கியத்துவம் தருவது சகாயத்திற்கு அறவே பிடித்தம் இல்லை.. அதுமட்டுமில்லாமல் அரசியலில் தன்னை விட ஒரு படி முன்னேறி விடுவானோ என்ற பயமும் சேர்ந்த காரணத்தால் தான் குண்டுவெடிப்பையே வலியுறுத்திக்கொண்டிருந்தான் சகாயம்.
"நான் சொல்வதை நீ கேட்டு நடப்பதற்கு தான் உன்னை கூட்டிக்கிட்டே வந்தேன். இதே மாதிரி பேசிக்கிட்டே இருந்தேன்னு வை, போட்டு தள்ளிட்டு போய்க்கிட்டே இருப்பேன்.
என்ன எனக்கு ஆளுங்க இல்லாம உன் கிட்ட கெஞ்சிட்டு இருக்கேனு நினைப்போ? நீயும் நானும் கூட்டாளிங்கன்னு கட்சில இருக்கிற மத்தவங்களுக்கு தெரிஞ்சா, ஒரு பய நம்ம முன்னாடி வால் ஆட்டமாட்டானானுங்க!
நம்ம மேலயும் ஒரு பயமிருக்கும். அதுக்கு தான் உன்னை என் கூட சேர்த்துக்கிட்டேன். அதனால பெரிய கனா, கினா காணாம நான் சொல்லுவதை மட்டும் செய்.” என்றான் விக்கி.
சகாயம் விக்கியின் மிரட்டலுக்கு அடிபணிந்து தான் ஆக வேண்டியிருந்தது. அவன் உயிர் மீதான ஆசை(!) மற்ற உயிர்களை துச்சமென நினைக்கவைத்தது..
இவர்கள் விக்கியின் இடத்தில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் தான், பூங்காவில் கோவிந்த், எடிட்டரிடம் சமீராவைப் பற்றி கேட்டுக்கொண்டிருந்தான்.
"என்ன மிஸ்டர். கோவிந்த் ஒண்ணுமே பேசாம இருக்கீங்க?"
"ஒண்ணுமில்லை சார், ப்ளீஸ் கொஞ்சம் புல் டீடெயில்ஸ் கொடுக்கறீங்களா?"