அத்தியாயம் – 1௦
வனமாலியின் கேள்வி, அவன் அறிந்து கேட்டானா இல்லை அவனையும் மீறி கேட்டானா அது அவனுக்கே தெரியாது.. ஆனால் கேட்டவனும் திகைத்தான், அந்த கேள்வியை தாங்கியவளும் திகைத்தாள். இருவரின் பேச்சும் நின்றுவிட, கமலியின் கண்ணீர் அவள் விழிகளிலேயே தங்கிவிட, இமைக்கவும் மறந்து, இதழ்கள் லேசாய் விரிந்து, பார்வை அவன் முகத்தினில் நிலைத்திட, வனமாலியும் ஏறக்குறைய அதே நிலையில் தான் இருந்தான்.
அவனின் பார்வையில் ஒரு தீவிரம்.. இதற்கு பதில் சொல்லிவிடேன் என்ற ஒரு தீவிரம் அது.. உன்னால் முடியுமா என்ற தீவிரம் அது.. அவன் சொன்ன வார்த்தைகள் எல்லாம் பேச்சிற்கு வரவில்லை, அவன் மனதினில் இருந்து வந்தது என்று அவனின் அந்த பார்வை சொல்லிவிட, கமலிக்கு சத்தியமாய் இது பதில் சொல்ல முடியாத ஓர் நிலைதான்..
வனமாலிக்குமே கூட அடுத்து என்ன பேச என்று தெரியாத ஓர் நிலை. ஆக மொத்தம் இருவருக்குமே தன்னிலை மறந்த நிலை அது.
அத்தனை நேரம் கமலியின் மனதில் இருந்த வேதனை, சிவகாமியின் உடல்நிலை எண்ணி மனதில் இருந்த ஒருவித பயம் எல்லாம் தாண்டி இப்போது, இங்கே வனமாலியின் அருகே, அவனின் பார்வையை தாங்கி அவள் மனதில் ஓர் அமைதி ஏற்பட, ஆனால் கமலிக்கு அவ்வமைதியை பிடித்து வைத்துகொள்ள பிடிக்கவில்லை.
இவனால் எனக்கு இப்படியொரு அமைதியும் நிம்மதியும் வேண்டவும் வேண்டாம் என்ற வெறுப்பு அவளுள் அப்போது பிறக்க, வேகமாய் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்..
நொடிப் பொழுது தடுமாற்றம், அவன் கண்டிருப்பானோ என்ற ஐயம்.. கண்டிருந்தாலும் பரவாயில்லை, இவனால் எனக்கு எவ்வித மன நிறைவும் வேண்டாம் என்ற பிடிவாதமும் சேர்ந்த, கண்களையும் முகத்தையும் அழுந்த துடைத்தவள்,
“நீங்க கிளம்பலாம்...” என்று வெற்று குரலில் சொல்ல,
“என்னைப் பார்த்து சொல்லு..” என்றான் அவனோ பிடிவாதமாய்.
“ம்ம்ச்... நான் பார்த்துப்பேன் நீங்க போங்க...”
“ஒண்ணு என்னைப் பார்த்து சொல்லு.. சொன்னாலும் நான் போகப்போறதில்லை..” என்ற அவனின் பேச்சில் திரும்பியவள்,
“தெரியாம கூப்பிட்டுட்டேன் உங்களை..” என்றாள் வெடுக்கென்று..
“அது உன்னிஷ்டம்.. பட் நான் உனக்காக வரலை..” என்று கடுப்பாய் சொன்னவன், கைகளை கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்துகொள்ள, கமலியோ பழையபடி ஜன்னல் கம்பியில் சாய்ந்துகொண்டாள்..
சிவகாமிக்கு எதுவும் அச்ச்சம்கொள்ளும் விதத்தில் இருக்காது என்று இருவரின் உள்ளுணர்வுமே சொல்ல, அதையும் தாண்டி மருத்துவர்கள் வந்து என்னவென்று சொல்லும்வரைக்கும் ஒருவித படபடப்பு இருந்தது நிஜம்தான். ஆனால் இப்போதோ அது மட்டுப்பட்டு இருக்க, வனமாலியின் பார்வை கமலியின் முகத்தினில் நிலைத்திருந்தது.
அவன் பார்க்கிறான் என்று தெரிந்தும் சிறிது நேரம் சும்மா இருந்தவள், பின் இவன்புறம் திரும்பாமலே “நீங்க கிளம்புங்களேன்...” என,
அவள் குரலில் முன்னிருந்த அந்த பிடிவாதம் அற்று, இப்போது வேறென்னவோ ஓர் உணர்வு.. நீ என்னை பார்ப்பதை என்னால் தாங்க முடியவில்லை என்ற ஓர் உணர்வு அதில் பிரதிபலிக்க,
வனமாலியோ அப்போதும் “என்னைப் பார்த்து சொல்லேன்...” என்றான் அவளைப் போலவே..
“ப்ச்...” என்று உதடு மட்டும் அசைத்தவள், அப்படியே அமர்ந்திருக்க, அதன்பின்னே வனமாலியும் எதுவும் கேட்கவில்லை..
மீண்டும் ஓர் மௌனம்.. ஏற்கனவே நள்ளிரவு.. அந்த இரவு நேர மௌனத்தையும் தாண்டி இவர்களுக்குள் வலுக்காட்டயமாய் ஒரு மௌனபாசை நடந்தேரிக்கொண்டு இருக்க, அதை கலைக்கும் விதமாய் நல்ல வேலையாக மருத்துவர் அவர் பணி முடித்து வெளியே வந்தார்..
கதவு திறக்கும் சத்தம் கேட்டு இருவருமே வேகமாய் எழுந்திவிட, இவர்களை நோக்கி வந்த மருத்துவரோ “நத்திங் டூ வொர்ரி.. ப்ரசர் ரொம்ப இன்க்ரீஸ் ஆகிருக்கு. அல்ரடி கொஞ்சம் டிப்ரஷன்ல இருப்பாங்க போல. ட்ரீட்மென்ட் பண்ணிருக்கோம்.. எதுக்கும் ஒரு டூ டேஸ் இங்க இருக்கட்டும்.. நாளைக்கு மார்னிங் ரூம்க்கு மாத்திடுவாங்க.. டேக் கேர்...” என்று சொல்லிச் செல்ல,
இருவருக்குமே மனதில் ‘அப்பாடி...’ என்ற ஒரு உணர்வு..
ஆனாலும் சிவகாமியின் நிலை எண்ணி, அவர் வாழ்வில் கடந்து வந்த பாதை எண்ணி ஒரு வருத்தம்.. இத்தனை வருடங்கள் திடமாய் இருந்துவிட்டார் ஆனால் இப்போது வயாதாக ஆக அவராலும் தான் எத்தனை தாங்கிட முடியும்.. எத்தனை கடந்திட முடியும்..
சிறப்பு பிரிவு அறைக்கு எதிரே இருந்த இருக்கை ஒன்றில் கமலி இப்போது அமர்ந்துகொள்ள, வனமாலியோ
“திடீர்னு ஏன் அத்தைக்கு இப்படியாச்சு..” என்று கேட்டான்..
வந்தமைக்கு இத்தனை நேரத்தில் கேட்டிருக்கவேண்டும் ஆனால் இப்போது கேட்க, அவளோ “ரொம்ப சீக்கிரம் கேட்டாச்சு..” என்றாள் குத்தலாய்..
“சரி நீயும் லேட் பண்ணாம பதில் சொல்லு..” என்று கேட்டவனும் அவளின் அருகே வந்து அமர,
“ம்ம் கொஞ்சம் டென்சன் ஆகிட்டாங்க..” என்றாள் முகத்தை வேறுபக்கம் திருப்பி..
‘எதோ நடந்திருக்கு...’ என்று யூகித்தவன்,
“ஏன் நீ எதுவும் சண்டை போட்டியா??” என்று கேட்க, அவளோ “ம்ம்ச் என்னைப் பார்த்தா சும்மா சும்மா எல்லார் கூடவும் சண்டை போடறவ போல இருக்கா??” என்றாள் வேகமாய்..
“அட நான் நார்மலாதான் கேட்டேன்..”
“அம்மாவும் இதைதான் கேட்டாங்க... இப்போ நீங்க.. நான் என்ன சண்டையா போடுறேன் எப்பவும்...” என்று வெடுக்வெடுக்கென்று அவளின் வார்த்தைகள் வர,
‘ஹ்ம்ம் இப்போ இவ என்ன சமையலா செய்றா...’ என்று ஒரு கேள்வி வந்து கிண்டியது அவன் மனதை..
“என்ன அமைதியா இருக்கீங்க... உங்கக்கூட சண்டை போட்டேனான்னு அம்மாவும், அம்மா கூட சண்டை போட்டியான்னு நீங்களும் கேட்டா நான் என்ன சொல்ல?? அப்போ எதுவுமே நான் பேசக்கூடாதா??” என்றவளின் முகம் கசங்கலாய் ஒரு பாவனையை வெளிப்படுத்த,
வனமாலியின் கேள்வி, அவன் அறிந்து கேட்டானா இல்லை அவனையும் மீறி கேட்டானா அது அவனுக்கே தெரியாது.. ஆனால் கேட்டவனும் திகைத்தான், அந்த கேள்வியை தாங்கியவளும் திகைத்தாள். இருவரின் பேச்சும் நின்றுவிட, கமலியின் கண்ணீர் அவள் விழிகளிலேயே தங்கிவிட, இமைக்கவும் மறந்து, இதழ்கள் லேசாய் விரிந்து, பார்வை அவன் முகத்தினில் நிலைத்திட, வனமாலியும் ஏறக்குறைய அதே நிலையில் தான் இருந்தான்.
அவனின் பார்வையில் ஒரு தீவிரம்.. இதற்கு பதில் சொல்லிவிடேன் என்ற ஒரு தீவிரம் அது.. உன்னால் முடியுமா என்ற தீவிரம் அது.. அவன் சொன்ன வார்த்தைகள் எல்லாம் பேச்சிற்கு வரவில்லை, அவன் மனதினில் இருந்து வந்தது என்று அவனின் அந்த பார்வை சொல்லிவிட, கமலிக்கு சத்தியமாய் இது பதில் சொல்ல முடியாத ஓர் நிலைதான்..
வனமாலிக்குமே கூட அடுத்து என்ன பேச என்று தெரியாத ஓர் நிலை. ஆக மொத்தம் இருவருக்குமே தன்னிலை மறந்த நிலை அது.
அத்தனை நேரம் கமலியின் மனதில் இருந்த வேதனை, சிவகாமியின் உடல்நிலை எண்ணி மனதில் இருந்த ஒருவித பயம் எல்லாம் தாண்டி இப்போது, இங்கே வனமாலியின் அருகே, அவனின் பார்வையை தாங்கி அவள் மனதில் ஓர் அமைதி ஏற்பட, ஆனால் கமலிக்கு அவ்வமைதியை பிடித்து வைத்துகொள்ள பிடிக்கவில்லை.
இவனால் எனக்கு இப்படியொரு அமைதியும் நிம்மதியும் வேண்டவும் வேண்டாம் என்ற வெறுப்பு அவளுள் அப்போது பிறக்க, வேகமாய் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்..
நொடிப் பொழுது தடுமாற்றம், அவன் கண்டிருப்பானோ என்ற ஐயம்.. கண்டிருந்தாலும் பரவாயில்லை, இவனால் எனக்கு எவ்வித மன நிறைவும் வேண்டாம் என்ற பிடிவாதமும் சேர்ந்த, கண்களையும் முகத்தையும் அழுந்த துடைத்தவள்,
“நீங்க கிளம்பலாம்...” என்று வெற்று குரலில் சொல்ல,
“என்னைப் பார்த்து சொல்லு..” என்றான் அவனோ பிடிவாதமாய்.
“ம்ம்ச்... நான் பார்த்துப்பேன் நீங்க போங்க...”
“ஒண்ணு என்னைப் பார்த்து சொல்லு.. சொன்னாலும் நான் போகப்போறதில்லை..” என்ற அவனின் பேச்சில் திரும்பியவள்,
“தெரியாம கூப்பிட்டுட்டேன் உங்களை..” என்றாள் வெடுக்கென்று..
“அது உன்னிஷ்டம்.. பட் நான் உனக்காக வரலை..” என்று கடுப்பாய் சொன்னவன், கைகளை கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்துகொள்ள, கமலியோ பழையபடி ஜன்னல் கம்பியில் சாய்ந்துகொண்டாள்..
சிவகாமிக்கு எதுவும் அச்ச்சம்கொள்ளும் விதத்தில் இருக்காது என்று இருவரின் உள்ளுணர்வுமே சொல்ல, அதையும் தாண்டி மருத்துவர்கள் வந்து என்னவென்று சொல்லும்வரைக்கும் ஒருவித படபடப்பு இருந்தது நிஜம்தான். ஆனால் இப்போதோ அது மட்டுப்பட்டு இருக்க, வனமாலியின் பார்வை கமலியின் முகத்தினில் நிலைத்திருந்தது.
அவன் பார்க்கிறான் என்று தெரிந்தும் சிறிது நேரம் சும்மா இருந்தவள், பின் இவன்புறம் திரும்பாமலே “நீங்க கிளம்புங்களேன்...” என,
அவள் குரலில் முன்னிருந்த அந்த பிடிவாதம் அற்று, இப்போது வேறென்னவோ ஓர் உணர்வு.. நீ என்னை பார்ப்பதை என்னால் தாங்க முடியவில்லை என்ற ஓர் உணர்வு அதில் பிரதிபலிக்க,
வனமாலியோ அப்போதும் “என்னைப் பார்த்து சொல்லேன்...” என்றான் அவளைப் போலவே..
“ப்ச்...” என்று உதடு மட்டும் அசைத்தவள், அப்படியே அமர்ந்திருக்க, அதன்பின்னே வனமாலியும் எதுவும் கேட்கவில்லை..
மீண்டும் ஓர் மௌனம்.. ஏற்கனவே நள்ளிரவு.. அந்த இரவு நேர மௌனத்தையும் தாண்டி இவர்களுக்குள் வலுக்காட்டயமாய் ஒரு மௌனபாசை நடந்தேரிக்கொண்டு இருக்க, அதை கலைக்கும் விதமாய் நல்ல வேலையாக மருத்துவர் அவர் பணி முடித்து வெளியே வந்தார்..
கதவு திறக்கும் சத்தம் கேட்டு இருவருமே வேகமாய் எழுந்திவிட, இவர்களை நோக்கி வந்த மருத்துவரோ “நத்திங் டூ வொர்ரி.. ப்ரசர் ரொம்ப இன்க்ரீஸ் ஆகிருக்கு. அல்ரடி கொஞ்சம் டிப்ரஷன்ல இருப்பாங்க போல. ட்ரீட்மென்ட் பண்ணிருக்கோம்.. எதுக்கும் ஒரு டூ டேஸ் இங்க இருக்கட்டும்.. நாளைக்கு மார்னிங் ரூம்க்கு மாத்திடுவாங்க.. டேக் கேர்...” என்று சொல்லிச் செல்ல,
இருவருக்குமே மனதில் ‘அப்பாடி...’ என்ற ஒரு உணர்வு..
ஆனாலும் சிவகாமியின் நிலை எண்ணி, அவர் வாழ்வில் கடந்து வந்த பாதை எண்ணி ஒரு வருத்தம்.. இத்தனை வருடங்கள் திடமாய் இருந்துவிட்டார் ஆனால் இப்போது வயாதாக ஆக அவராலும் தான் எத்தனை தாங்கிட முடியும்.. எத்தனை கடந்திட முடியும்..
சிறப்பு பிரிவு அறைக்கு எதிரே இருந்த இருக்கை ஒன்றில் கமலி இப்போது அமர்ந்துகொள்ள, வனமாலியோ
“திடீர்னு ஏன் அத்தைக்கு இப்படியாச்சு..” என்று கேட்டான்..
வந்தமைக்கு இத்தனை நேரத்தில் கேட்டிருக்கவேண்டும் ஆனால் இப்போது கேட்க, அவளோ “ரொம்ப சீக்கிரம் கேட்டாச்சு..” என்றாள் குத்தலாய்..
“சரி நீயும் லேட் பண்ணாம பதில் சொல்லு..” என்று கேட்டவனும் அவளின் அருகே வந்து அமர,
“ம்ம் கொஞ்சம் டென்சன் ஆகிட்டாங்க..” என்றாள் முகத்தை வேறுபக்கம் திருப்பி..
‘எதோ நடந்திருக்கு...’ என்று யூகித்தவன்,
“ஏன் நீ எதுவும் சண்டை போட்டியா??” என்று கேட்க, அவளோ “ம்ம்ச் என்னைப் பார்த்தா சும்மா சும்மா எல்லார் கூடவும் சண்டை போடறவ போல இருக்கா??” என்றாள் வேகமாய்..
“அட நான் நார்மலாதான் கேட்டேன்..”
“அம்மாவும் இதைதான் கேட்டாங்க... இப்போ நீங்க.. நான் என்ன சண்டையா போடுறேன் எப்பவும்...” என்று வெடுக்வெடுக்கென்று அவளின் வார்த்தைகள் வர,
‘ஹ்ம்ம் இப்போ இவ என்ன சமையலா செய்றா...’ என்று ஒரு கேள்வி வந்து கிண்டியது அவன் மனதை..
“என்ன அமைதியா இருக்கீங்க... உங்கக்கூட சண்டை போட்டேனான்னு அம்மாவும், அம்மா கூட சண்டை போட்டியான்னு நீங்களும் கேட்டா நான் என்ன சொல்ல?? அப்போ எதுவுமே நான் பேசக்கூடாதா??” என்றவளின் முகம் கசங்கலாய் ஒரு பாவனையை வெளிப்படுத்த,