அத்தியாயம் – 14
வனமாலியும் கமலியும் அப்போது தான் வனமாலியின் வீடு வந்திருந்தனர். முதல் நாள் திருமணம், அது இதென்ற எவ்வித பரபரப்பும் இல்லை. இருவரும் எப்போதும் போலிருக்க, வீட்டில் இருந்த ஒருசில விருந்தினர்களும் கிளம்பியிருக்க, வீட்டினில் ஒருவித அமைதியே நிலவியது.
சிவகாமியோ “நீங்க அங்க போயிடுங்க.. அங்க வந்து தான் மறுவீடுக்கு கூப்பிடனும்..” என்றிருந்தார் மகளிடம்.
“ம்ம்மா அப்போ நீ அங்க வருவியா??!!”
“ஏன் வந்தா என்ன?? இப்போ அது என் பொண்ணு வீடு...” என்று சிவகாமி மிடுக்காய் கூற, “ம்ம்ம்...” என்றுமட்டும் சொல்லிக்கொண்டாள் கமலி.
காலையில் எழுந்ததுமே, வனமாலியை தான் பார்த்தாள், கட்டிலில் சற்றே தள்ளி படுத்திருந்தான். அவன் ஒரு ஓரம் இவள் ஒரு ஓரம் என்றெல்லாம் இல்லை. ஒட்டியும் இல்லாது கொஞ்சம் தள்ளி படுத்திருக்க, கமலிக்கு முதல் நாள் இவன் சொன்னது தான் நினைவில் வந்தது.
“திடீர்னு கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சா.. சோ...” என்று வனமாலி இழுக்க, “சோ...!!” என்றாள் இவளும் அவனைப் போலவே..
வேறெதுவோ சொல்ல வந்தவன் “உனக்கு டென்சன் இல்லையா?? ஹாயா இருக்க??” என்றான் அவள் என்னதான் சொல்கிறாள் என்று பார்க்க.
அவளோ “நியாயமா பார்த்தா நான் இந்நேரம் எல்லாரையும் உண்டு இல்லைன்னு செஞ்சு அப்படி ஒரு சண்டை போட்டிருக்கணும்.. செய்யலைன்னு சந்தோசப் படுங்க..” என்றாள் வேகமாய்..
‘அதானே பார்த்தேன்...’
“என்ன???”
“இல்ல.. இப்படியான அரேஜ்மேன்ட்ஸ் பார்த்து யாருக்குமே கொஞ்சம் சங்கோஜமா இருக்கும்தானே..” என்றான் அவர்களுக்கென்று ஒதுக்கிய அறையை காட்டி.
“உங்களுக்கு இருக்கா அப்படி??!!”
“நான் உன்னைக் கேட்டா நீ என்னை கேட்கிறியா???”
“ஹா ஹா நீங்கதானே சொன்னீங்க நானும் நீங்களும் வேற இல்லன்னு...” என்றவள், “நான் ஒண்ணு சொல்லணுமே...” என்றாள் கொஞ்சம் அவன் முகம் பார்ப்பதை தவிர்த்து.
“எதுவா இருந்தாலும் என்னைப் பார்த்து சொல்லு..” என்றவன், அவள் திரும்பவும் என்னவென்று பார்க்க,
“அது... ம்ம்ம்... நம்ம கொஞ்சம் சீக்கிரமே குழந்தை பெத்துக்கணும்..” என, “ஹா...!!!” என்று வனமாலி அதிர்ந்து தான் பார்த்தான்.
‘இன்னும் இவளைப் பத்தியே முழுசா தெரியாது இதுல குழந்தை.. அதுவும் சீக்கிரமா??!!!’ என்று அவன் மனம் நினைக்க, “என்ன?? என்ன சொன்ன??!!” என்றான் நம்பாது.
எதையும் முதல் முறை சொல்லும்போது தானே கொஞ்சம் தயக்கம் கூச்சம் எல்லாம் இருக்கும்.. இரண்டாவது முறையெனில் அதெல்லாம் கொஞ்சம் தகர்ந்துதானே போகும். ஆக இப்போது கமலிக்கும் வார்த்தைகளில் கொஞ்சம் அழுத்தமே வந்தது.
“நம்ம கொஞ்சம் சீக்கிரம் அப்பா அம்மா ஆகணும்...” என்று திடமாய் சொன்னாலும், அவளுக்கு என்னவோ அந்த நொடி அவனை நேராய் காண முடியவில்லை.
வெளியே திடமாய் காட்டிக்கொண்டாலும், உள்ளே அவளின் அவஸ்தை அவனுக்குப் புரிய, “ம்ம்ம்.. அப்புறம் ...” என்றான் சுவாரஸ்யமாய்.
“என்ன?? அதான் சொல்லிட்டேனே..”
“இது மட்டும் தானா...”
“ஆமா...”
“ம்ம் நம்ம ஹஸ்பன்ட் வொய்ப் தான்.. நமக்குள்ள எதுவும் நடக்காதுன்னு எல்லாம் இல்லை. பட் இந்த சீக்கிரம் குழந்தை பெத்துக்கணும் தான் புரியலை???!!!” என்று வனமாலி கேட்க, கமலி கொஞ்சம் நேரம் அமைதியாய் இருந்தாள்.
“பதில் சொல்லு கமலி.. நீ இது சும்மா சொல்லலைன்னு தெரியும்.. சொல்லு..”
“அது...”
“சொல்றப்போ தயங்கல.. இப்போ தயங்குற...”
“அது நம்ம குழந்தை தான் இந்த குடும்பத்தோட முதல் வாரிசா இருக்கணும்...” என்று அவள் சொல்கையில் அவள் கண்களில் தான் எத்தனை உணர்வுகள்.
தவிப்பு.. ஏக்கம்.. ஒருவித குழப்பம்.. நிறைய நிறைய கேள்விகள்.. ஏமாற்றங்கள் இப்படி அனைத்தும் கலந்த கலவையாய் அவள் கண்களில் தெரிந்த உணர்வுகள் வெளிப்பட, இதற்குமுன் தான் பார்த்த கமலி இவளில்லையோ என்று தான் தோன்றியது வனமாலிக்கு..
“என்ன கமலி...!!” என்று ஆதரவாய் அவளின் கைகளைப் பற்றியவன், “நீ இப்போ எதுவும் நினைக்காத..” என,
“முடியலை... நினைக்காம இருக்க முடியலை.. யார் தப்பு யார் சரி.. எதுவுமே எனக்கு புரியலை.. நா... நான் இங்க வந்திருக்கக் கூடாதுன்னு தோணுது...” என்றாள் கண்ணில் நீர் வழிய.
“ஏய்.. இப்போ ஏன் இப்படி பேசற...”
“இல்ல.. சில விஷயங்கள் கண்ணுக்குத் தெரியாத வரைக்கும் அதைப்பத்தி நமக்கு பெருசா எதுவும் இருக்காது தானே... ஆனா இங்க வந்து அந்த போட்டோஸ் எல்லாம் பார்க்கிறப்போ நான் ரொம்ப மிஸ் பண்ணிருக்கேன் தெரியுது...”
“ம்ம்ம்..”
“எனக்கே இப்படினா அம்மா ரொம்ப பாவம்ல...”
“ம்ம்ஹும்.. இல்ல கமலி. அத்தை பாவமில்லை..” என்று வனமாலி கூற, கமலி புரியாது பார்த்தாள்.
“அத்தைக்கு தான் எந்த இடத்துல இருந்தா அவங்க மரியாதை கெடாதுன்னு நல்லா தெரிஞ்சு தான் இப்பவும் கூட தள்ளி நிக்கிறாங்க.. ஒருவேள அத்தை இங்கயே இருந்திருந்தா, நிச்சயம் வீட்ல பெரிய பெரிய பிரச்னைகள் வந்திருக்கும்..”
“வர வச்சிருப்பாங்க...”
“ம்ம் ம்ம் சரி.. வர வச்சிருப்பாங்க.. ஒருவேளை மாமா மனசுல கூட அத்தை மேல சில கசப்புக்கள் வந்திருக்கலாம்..”
“அதையும் வர வச்சிருப்பாங்க..”
“அடடா.. சரி வர வச்சிருக்கலாம்.. சோ அத்தை இதெல்லாம் அவாய்ட் பண்ண தனியா வந்தது சரின்னு எனக்கு எப்பவுமே தோணும்.. அவங்கனால தனியா எதையும் பேஸ் பண்ண முடியும் கமலி.. ஆனா இந்திரா அத்தை அப்படியில்லை..”
“அவங்களைப் பத்தி எனக்கு கவலையில்லை...”
“ம்ம்ச் பாத்தியா.. குடும்பனா எல்லாரும் சேர்த்திதான்..” அவனின் முதல் முயற்சியை வனமாலி இப்போதிருந்தே ஆரம்பித்துவிட்டான்.
செய்யவேண்டும் என்றில்லை, ஆனால் அதற்கான வாய்ப்பை கமலியே கொடுத்துவிட்டாள். அவள் இந்த பேச்சை ஆரம்பிக்கவில்லை என்றால் நிச்சயம் அவனும் எதுவும் பேசியிருக்கப் போவதில்லை. ஆனால் இப்போது மனதில் ஓர் எண்ணம், எதையும் ஆரம்பத்தில் இருந்தே தெளிவு படுத்திவிடவேண்டும் என்று.
“எனக்கு அப்படியெல்லாம் எதுவுமில்லை..” என்றவள் “குழந்தை இல்லைன்னு தானே ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சாங்க. பமீலா பிறந்ததுக்கு அப்புறம்..” என்று சொல்ல வந்தவள், கொஞ்சம் பேச்சை நிறுத்த,
“உன் மனசுல என்ன இருக்கோ அதை சொல்லி முடி கமலி..” என்றான் இவனும்.
“பமீலா பிறந்ததுக்கு அப்புறம்.. ஏ.. ஏன் என்னை பெத்துக்கணும்..” என்றவளின் முகத்தில் அப்படியொரு வேதனை.
அவளின் இத்தனை வருட வேதனைகள் எல்லாம் இன்றுதான் மொத்தமாய் வெளி வருகிறதோ என்று இருந்தது வனமாலிக்கு. அவனுக்குத் தெரிந்து அவள் சிவகாமியிடம் கூட இதெல்லாம் பேசியிருக்கமாட்டாள் என்றே நினைக்கத் தோன்றியது. இப்போதும் கூட அப்பா என்ற ஒரு வார்த்தை அவளின் வாயில் இருந்து வரவில்லை.. ஆனால் அடிமனதில் நிறைய நிறைய அவரின் மீது பாசமிருக்கிறது என்பது மட்டும் அவள் புகைப்படங்களை பார்த்து கண்ணீர் சிந்தியத்தில் அவனுக்குப் புரிந்திருந்தது. மனதில் நிறைய நிறைய போட்டு குழப்பிக்கொள்கிறாளோ என்று நினைத்தவன்,
“ஹ்ம்ம் இதை நீயோ நானோ எதுவும் கேள்வி கேட்க முடியாது கமலி.. அத்தை மாமா அவங்க வாழ்ந்த வாழ்க்கை இதெல்லாம் அவங்க நமக்கு விளக்கனும்னு அவசியம் இல்லை..” என, வேகமாய் அவன் முகம் பார்த்தவள்,
“இதைதான் அம்மாவும் சொன்னாங்க...” என்றாள் வேகமாய்.
“அப்போ இதை அப்படியே அத்தைக்கிட்டயும் கேட்டியா??” என்று கொஞ்சம் அதிர்ச்சியாய் அவன் பார்க்க,
“இல்ல இல்ல.. உங்கக்கிட்ட கூட இதை எப்படி பேசினேன் தெரியலை.. ஆனா பேசிட்டேன்.. பட் அம்மா சொன்னாங்க.. நாங்க வாழ்ந்த வாழ்க்கை எல்லாருக்கும் விளக்கணும்னு இல்லை.. உனக்குன்னு ஒருத்தர் வர்றபோ புரியும்னு..” என்று கமலியும் சொல்ல,
“அப்புறமென்ன, நடந்ததை மாத்த முடியாது...” என்றான் இவளும் அவளை சமாதானம் செய்யும் விதமாய்.
“ஆனா நடக்கப் போறதை மாத்தலாமே...” என்று கமலி பார்க்க, வனமாலியின் பார்வை மாறியது.
“இங்க பாரு கமலி, நீ என் வொய்ப் தான் உனக்கு எல்லா உரிமையும் என்கிட்டேயும் நம்ம வீட்லயும் இருக்குதான். ஆனா உன்னால வீட்ல ஒரு பிரச்சனை வருதுன்னா நான் சும்மா இருக்கமாட்டேன்..” என்று கடின குரலில் சொல்ல,
“இதுவரைக்கும் நான் என்ன பிரச்சனை பண்ணிட்டேன்..??” என்றாள் இவளும் வீம்பாய்.
வனமாலியும் கமலியும் அப்போது தான் வனமாலியின் வீடு வந்திருந்தனர். முதல் நாள் திருமணம், அது இதென்ற எவ்வித பரபரப்பும் இல்லை. இருவரும் எப்போதும் போலிருக்க, வீட்டில் இருந்த ஒருசில விருந்தினர்களும் கிளம்பியிருக்க, வீட்டினில் ஒருவித அமைதியே நிலவியது.
சிவகாமியோ “நீங்க அங்க போயிடுங்க.. அங்க வந்து தான் மறுவீடுக்கு கூப்பிடனும்..” என்றிருந்தார் மகளிடம்.
“ம்ம்மா அப்போ நீ அங்க வருவியா??!!”
“ஏன் வந்தா என்ன?? இப்போ அது என் பொண்ணு வீடு...” என்று சிவகாமி மிடுக்காய் கூற, “ம்ம்ம்...” என்றுமட்டும் சொல்லிக்கொண்டாள் கமலி.
காலையில் எழுந்ததுமே, வனமாலியை தான் பார்த்தாள், கட்டிலில் சற்றே தள்ளி படுத்திருந்தான். அவன் ஒரு ஓரம் இவள் ஒரு ஓரம் என்றெல்லாம் இல்லை. ஒட்டியும் இல்லாது கொஞ்சம் தள்ளி படுத்திருக்க, கமலிக்கு முதல் நாள் இவன் சொன்னது தான் நினைவில் வந்தது.
“திடீர்னு கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சா.. சோ...” என்று வனமாலி இழுக்க, “சோ...!!” என்றாள் இவளும் அவனைப் போலவே..
வேறெதுவோ சொல்ல வந்தவன் “உனக்கு டென்சன் இல்லையா?? ஹாயா இருக்க??” என்றான் அவள் என்னதான் சொல்கிறாள் என்று பார்க்க.
அவளோ “நியாயமா பார்த்தா நான் இந்நேரம் எல்லாரையும் உண்டு இல்லைன்னு செஞ்சு அப்படி ஒரு சண்டை போட்டிருக்கணும்.. செய்யலைன்னு சந்தோசப் படுங்க..” என்றாள் வேகமாய்..
‘அதானே பார்த்தேன்...’
“என்ன???”
“இல்ல.. இப்படியான அரேஜ்மேன்ட்ஸ் பார்த்து யாருக்குமே கொஞ்சம் சங்கோஜமா இருக்கும்தானே..” என்றான் அவர்களுக்கென்று ஒதுக்கிய அறையை காட்டி.
“உங்களுக்கு இருக்கா அப்படி??!!”
“நான் உன்னைக் கேட்டா நீ என்னை கேட்கிறியா???”
“ஹா ஹா நீங்கதானே சொன்னீங்க நானும் நீங்களும் வேற இல்லன்னு...” என்றவள், “நான் ஒண்ணு சொல்லணுமே...” என்றாள் கொஞ்சம் அவன் முகம் பார்ப்பதை தவிர்த்து.
“எதுவா இருந்தாலும் என்னைப் பார்த்து சொல்லு..” என்றவன், அவள் திரும்பவும் என்னவென்று பார்க்க,
“அது... ம்ம்ம்... நம்ம கொஞ்சம் சீக்கிரமே குழந்தை பெத்துக்கணும்..” என, “ஹா...!!!” என்று வனமாலி அதிர்ந்து தான் பார்த்தான்.
‘இன்னும் இவளைப் பத்தியே முழுசா தெரியாது இதுல குழந்தை.. அதுவும் சீக்கிரமா??!!!’ என்று அவன் மனம் நினைக்க, “என்ன?? என்ன சொன்ன??!!” என்றான் நம்பாது.
எதையும் முதல் முறை சொல்லும்போது தானே கொஞ்சம் தயக்கம் கூச்சம் எல்லாம் இருக்கும்.. இரண்டாவது முறையெனில் அதெல்லாம் கொஞ்சம் தகர்ந்துதானே போகும். ஆக இப்போது கமலிக்கும் வார்த்தைகளில் கொஞ்சம் அழுத்தமே வந்தது.
“நம்ம கொஞ்சம் சீக்கிரம் அப்பா அம்மா ஆகணும்...” என்று திடமாய் சொன்னாலும், அவளுக்கு என்னவோ அந்த நொடி அவனை நேராய் காண முடியவில்லை.
வெளியே திடமாய் காட்டிக்கொண்டாலும், உள்ளே அவளின் அவஸ்தை அவனுக்குப் புரிய, “ம்ம்ம்.. அப்புறம் ...” என்றான் சுவாரஸ்யமாய்.
“என்ன?? அதான் சொல்லிட்டேனே..”
“இது மட்டும் தானா...”
“ஆமா...”
“ம்ம் நம்ம ஹஸ்பன்ட் வொய்ப் தான்.. நமக்குள்ள எதுவும் நடக்காதுன்னு எல்லாம் இல்லை. பட் இந்த சீக்கிரம் குழந்தை பெத்துக்கணும் தான் புரியலை???!!!” என்று வனமாலி கேட்க, கமலி கொஞ்சம் நேரம் அமைதியாய் இருந்தாள்.
“பதில் சொல்லு கமலி.. நீ இது சும்மா சொல்லலைன்னு தெரியும்.. சொல்லு..”
“அது...”
“சொல்றப்போ தயங்கல.. இப்போ தயங்குற...”
“அது நம்ம குழந்தை தான் இந்த குடும்பத்தோட முதல் வாரிசா இருக்கணும்...” என்று அவள் சொல்கையில் அவள் கண்களில் தான் எத்தனை உணர்வுகள்.
தவிப்பு.. ஏக்கம்.. ஒருவித குழப்பம்.. நிறைய நிறைய கேள்விகள்.. ஏமாற்றங்கள் இப்படி அனைத்தும் கலந்த கலவையாய் அவள் கண்களில் தெரிந்த உணர்வுகள் வெளிப்பட, இதற்குமுன் தான் பார்த்த கமலி இவளில்லையோ என்று தான் தோன்றியது வனமாலிக்கு..
“என்ன கமலி...!!” என்று ஆதரவாய் அவளின் கைகளைப் பற்றியவன், “நீ இப்போ எதுவும் நினைக்காத..” என,
“முடியலை... நினைக்காம இருக்க முடியலை.. யார் தப்பு யார் சரி.. எதுவுமே எனக்கு புரியலை.. நா... நான் இங்க வந்திருக்கக் கூடாதுன்னு தோணுது...” என்றாள் கண்ணில் நீர் வழிய.
“ஏய்.. இப்போ ஏன் இப்படி பேசற...”
“இல்ல.. சில விஷயங்கள் கண்ணுக்குத் தெரியாத வரைக்கும் அதைப்பத்தி நமக்கு பெருசா எதுவும் இருக்காது தானே... ஆனா இங்க வந்து அந்த போட்டோஸ் எல்லாம் பார்க்கிறப்போ நான் ரொம்ப மிஸ் பண்ணிருக்கேன் தெரியுது...”
“ம்ம்ம்..”
“எனக்கே இப்படினா அம்மா ரொம்ப பாவம்ல...”
“ம்ம்ஹும்.. இல்ல கமலி. அத்தை பாவமில்லை..” என்று வனமாலி கூற, கமலி புரியாது பார்த்தாள்.
“அத்தைக்கு தான் எந்த இடத்துல இருந்தா அவங்க மரியாதை கெடாதுன்னு நல்லா தெரிஞ்சு தான் இப்பவும் கூட தள்ளி நிக்கிறாங்க.. ஒருவேள அத்தை இங்கயே இருந்திருந்தா, நிச்சயம் வீட்ல பெரிய பெரிய பிரச்னைகள் வந்திருக்கும்..”
“வர வச்சிருப்பாங்க...”
“ம்ம் ம்ம் சரி.. வர வச்சிருப்பாங்க.. ஒருவேளை மாமா மனசுல கூட அத்தை மேல சில கசப்புக்கள் வந்திருக்கலாம்..”
“அதையும் வர வச்சிருப்பாங்க..”
“அடடா.. சரி வர வச்சிருக்கலாம்.. சோ அத்தை இதெல்லாம் அவாய்ட் பண்ண தனியா வந்தது சரின்னு எனக்கு எப்பவுமே தோணும்.. அவங்கனால தனியா எதையும் பேஸ் பண்ண முடியும் கமலி.. ஆனா இந்திரா அத்தை அப்படியில்லை..”
“அவங்களைப் பத்தி எனக்கு கவலையில்லை...”
“ம்ம்ச் பாத்தியா.. குடும்பனா எல்லாரும் சேர்த்திதான்..” அவனின் முதல் முயற்சியை வனமாலி இப்போதிருந்தே ஆரம்பித்துவிட்டான்.
செய்யவேண்டும் என்றில்லை, ஆனால் அதற்கான வாய்ப்பை கமலியே கொடுத்துவிட்டாள். அவள் இந்த பேச்சை ஆரம்பிக்கவில்லை என்றால் நிச்சயம் அவனும் எதுவும் பேசியிருக்கப் போவதில்லை. ஆனால் இப்போது மனதில் ஓர் எண்ணம், எதையும் ஆரம்பத்தில் இருந்தே தெளிவு படுத்திவிடவேண்டும் என்று.
“எனக்கு அப்படியெல்லாம் எதுவுமில்லை..” என்றவள் “குழந்தை இல்லைன்னு தானே ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சாங்க. பமீலா பிறந்ததுக்கு அப்புறம்..” என்று சொல்ல வந்தவள், கொஞ்சம் பேச்சை நிறுத்த,
“உன் மனசுல என்ன இருக்கோ அதை சொல்லி முடி கமலி..” என்றான் இவனும்.
“பமீலா பிறந்ததுக்கு அப்புறம்.. ஏ.. ஏன் என்னை பெத்துக்கணும்..” என்றவளின் முகத்தில் அப்படியொரு வேதனை.
அவளின் இத்தனை வருட வேதனைகள் எல்லாம் இன்றுதான் மொத்தமாய் வெளி வருகிறதோ என்று இருந்தது வனமாலிக்கு. அவனுக்குத் தெரிந்து அவள் சிவகாமியிடம் கூட இதெல்லாம் பேசியிருக்கமாட்டாள் என்றே நினைக்கத் தோன்றியது. இப்போதும் கூட அப்பா என்ற ஒரு வார்த்தை அவளின் வாயில் இருந்து வரவில்லை.. ஆனால் அடிமனதில் நிறைய நிறைய அவரின் மீது பாசமிருக்கிறது என்பது மட்டும் அவள் புகைப்படங்களை பார்த்து கண்ணீர் சிந்தியத்தில் அவனுக்குப் புரிந்திருந்தது. மனதில் நிறைய நிறைய போட்டு குழப்பிக்கொள்கிறாளோ என்று நினைத்தவன்,
“ஹ்ம்ம் இதை நீயோ நானோ எதுவும் கேள்வி கேட்க முடியாது கமலி.. அத்தை மாமா அவங்க வாழ்ந்த வாழ்க்கை இதெல்லாம் அவங்க நமக்கு விளக்கனும்னு அவசியம் இல்லை..” என, வேகமாய் அவன் முகம் பார்த்தவள்,
“இதைதான் அம்மாவும் சொன்னாங்க...” என்றாள் வேகமாய்.
“அப்போ இதை அப்படியே அத்தைக்கிட்டயும் கேட்டியா??” என்று கொஞ்சம் அதிர்ச்சியாய் அவன் பார்க்க,
“இல்ல இல்ல.. உங்கக்கிட்ட கூட இதை எப்படி பேசினேன் தெரியலை.. ஆனா பேசிட்டேன்.. பட் அம்மா சொன்னாங்க.. நாங்க வாழ்ந்த வாழ்க்கை எல்லாருக்கும் விளக்கணும்னு இல்லை.. உனக்குன்னு ஒருத்தர் வர்றபோ புரியும்னு..” என்று கமலியும் சொல்ல,
“அப்புறமென்ன, நடந்ததை மாத்த முடியாது...” என்றான் இவளும் அவளை சமாதானம் செய்யும் விதமாய்.
“ஆனா நடக்கப் போறதை மாத்தலாமே...” என்று கமலி பார்க்க, வனமாலியின் பார்வை மாறியது.
“இங்க பாரு கமலி, நீ என் வொய்ப் தான் உனக்கு எல்லா உரிமையும் என்கிட்டேயும் நம்ம வீட்லயும் இருக்குதான். ஆனா உன்னால வீட்ல ஒரு பிரச்சனை வருதுன்னா நான் சும்மா இருக்கமாட்டேன்..” என்று கடின குரலில் சொல்ல,
“இதுவரைக்கும் நான் என்ன பிரச்சனை பண்ணிட்டேன்..??” என்றாள் இவளும் வீம்பாய்.