“ம்ம்ம் நீ ரொம்ப ஆசை பட்டு கேட்டன்னு வேகமா ஓட்டுனேன் இல்லனா இவ்ளோ வேகமாலாம் ஓட்ட மாட்டேன்”
“ஆமா கேக்கணும்னு நெனச்சேன் என்ன இது முகத்துல, கைல எல்லாம் அடி?” அந்த குண்டு கண்களில் கவலையை காணும் ஆவலுடன் அதை உன்னிப்பாக பார்க்கையில் தான் எதிர்பார்த்தது கிடைத்ததும் வந்ததே ஒரு மகிழ்ச்சி ஆதி றெக்கை இல்லாமல் பறந்தான்…
“அட அந்த கதையை ஏன் கேக்குற இதெல்லாம் வீர தழும்புகள்” தரையில் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் தெளிவாக கவனித்துக்கொண்டான் ஆதி.
அவனை பார்த்து கேலியான சிரிப்புடன், “உண்மைய சொல்லுங்க யார் கிட்ட அடி வாங்குனீங்க?”
“அட என்ன பாத்தா அடி வாங்குறவன் மாதிரியா இருக்கு” தன்னுடைய வெள்ளி காப்பை காட்டி, “நானே அடி வாங்குனாலும் இது துடிச்சிட்டு வந்து வெட்டிடும்… இந்த காயம் எல்லாம் ரோட்ல சில குழந்தைகளை பிச்சை எடுக்க வச்சிட்டு அதுல வந்த காச வச்சு ஒரு பத்து பேர் நோகாம நொங்கு தின்கிறாய்ங்க… விடுவேனா நானு பொங்கி போயி பிரிச்சு மேஞ்சிட்டேன் அப்ப வாங்குனது தான் இந்த குட்டி குட்டி அடிகள்” தான் எதையோ சாதித்ததன் விளைவாக கிடைத்த வெற்றியை கொண்டியது போன்று கர்வமாக பேசினான்…
புருவம் உயர்த்தி தலையை ஆட்டியவளது செவிகளுக்கு மீண்டும் அவன் பார்வை சென்றது, “நீங்க பொய் சொல்றிங்க… நான் அமெரிக்கால இருந்தேன் தான் ஆனா தமிழ் படமும் பாப்பேன்… ஆமா அது என்ன நோகாம நொங்கு திங்கிறது?” அவன் கூறிய பொய்யை கூட ஒரு அளவிற்குமேல் அவளால் கொண்டு செல்ல இயலவில்லை…
“அட நம்பு… நிஜமா ஒரு தப்ப தட்டி கேட்டேன் அடிச்சிபுட்டாய்ங்க” அவள் கண்களை பார்க்க தவிர்த்து பாதி உண்மையும் பாதி பொய்யுமாய் கூறினான், “நோகாம நொங்கு திங்கிறதுனா ஹார்ட் ஒர்க் பண்ணாம வெட்டியா இருந்து சாளரி வாங்குற மாதிரின்னு வச்சுக்கோயேன்” என்றான் சிறுபிள்ளை கதை கேடுப்பது போல் நின்றிருந்தவளிடம்.
சிறிது நேரம் அமைதியே அங்கு… இருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை அவள் தன்னுடைய கைப்பையை பிசைந்துகொண்டே நின்றாலே ஒழிய அவன் முகத்தை கூட பார்க்கவில்லை.
“என்ன நேரமாகலயா?” என்றான் ஆதி இறுதியாக அமைதியை உடைத்து.
எதுவும் பேசாமல் தலையை இல்லையென்று ஆட்டி, “உங்களுக்கு கோவம் வரலையா?”
சிறு குழந்தையின் குரல் போன்று இருந்தது அவள் குரல், அவள் முகத்தின் பாவனை அதை விட பாவமாக இருந்தது. அவள் கேள்வியில் குழப்பம் அடைந்து, “ஏன் கோவ படனும்?” என்றான் சந்தேகமாக.
“ஆனாலும் நீங்க ஒரு ஸ்டுபிட் தான் இப்படியா பண்ணுவீங்க. இப்டி பண்ணுனா நான் அப்றம் என்ன பண்ணுவேன் நீங்களே சொல்லுங்க. அதுவும் மூஞ்சிய வேற அப்டி வச்சிருந்திங்க” என்ன கூறுகிறாள் எதை பற்றி கூறுகிறாள் என்று புரியாமலே இருந்தாலும் அவளுடைய கோவம் கலந்த வெகுளித்தனம் அவனை மேலும் மேலும் அவளிடம் தள்ளியது என்றால் அவள் முகபாவமும் அந்த கண்கள் ஆடிய நர்த்தனமும் கைகள் தன்னுடைய செல்ல குழந்தையான வண்டியை அடித்த பொழுதுகூட அவளிடம் கிறுக்கனாக்கியது.
மனதில் உள்ள காதல் சிரிப்பாய் வெளியில் வர, “என்ன பேசுற நீ?” என்றான் சுவாரஸ்யமாய் அவள் முகம் பார்த்து.
“சிரிக்காதிங்க உங்ககிட்ட முடியாதுனு சொல்ல முடியல நீங்க சொல்றத செய்யவும் முடியல. உங்களுக்கே மைண்ட் வேணாம்? ஒரு பொண்ண நடு ராத்திரி கூப்டுவாங்களா? ஒரு ஒன் ஹௌர் முன்னாடி வந்திருந்தா தான் என்னவாம்? நைட் சாப்புடாம வேற படுத்தேன் அந்த காஞ்சுபோன ரொட்டியை சாப்புட புடிக்காம”
நடு இரவில் ஆதி அவளை வெளியில் வர அழைத்ததை தான் கூறுகிறாள் என்று உணர்ந்தவன், “நான் உன்ன வெளிய கூட்டிட்டு போகணும்னு நெனக்கல… எனக்கே தெரியும் ஒரு பொண்ண உரிமையே இல்லாம வெளிய கூட்டிட்டு போக கூடாதுன்னு, நான் சும்மா தான் வந்தேன் உன்ன ஒரு பத்து அடி தள்ளி வச்சு பாத்துட்டு நீ ஒளறுறத கேட்டா கொஞ்சம் மண்டை காலியாகும்ன்னு” தான் வந்ததன் உண்மையான நோக்கத்தை கூறினான்.
“என்ன சொல்லனும் இப்ப சொல்லுங்க நான் ப்ரீ தான்” என்றாள் மகிழ்ச்சியாக… அவள் மகிழ்ச்சியின் நோக்கத்தை உணர்ந்தவன், “ம்ம்ம் ரொம்ப தான் அக்கறை காலேஜ் போகுறத கட் அடிக்கிறதுக்கு என்ன என்ன சொல்ற…”
“இல்ல நான் காலேஜ்ல படிக்கல சும்மா ஒரு டவுட் அது தான் ஒரு ப்ரோபஸ்ஸர் கிட்ட க்ளியர் பண்ண வந்தேன்… வாங்களேன் பக்கத்துல ஒரு ரெஸ்டாரண்ட்ல பில்டர் காபி செமயா இருக்கும் அப்பா ஒருநாள் வாங்கி குடுத்தாங்க தெரிஞ்ச அங்கிள் தான் அவரோட எ.சி ரூம்ல கூட டேபிள் போட்டு தருவாரு எனக்காக… எங்க அம்மாக்கு எல்லாம் இப்ப காபி கூட ஒழுங்கா போட தெரியல அது தான் இங்க வருவேன் அத விட அன்னைக்கு ஒரு நாள் எங்க அத்தை வீட்டுக்கு போனேன் பாருங்க பூரி வித் சிக்கன் க்ரேவி வேற லெவல்ல இருந்துச்சு… அங்க அமெரிக்கால உப்பு காரம்ன்னு ஒண்ணுமே இருக்காது எனக்கெல்லாம் நாக்கே…”
அவள் பேச பேச கண்கள் நடனமாடியதை மட்டுமே ஆதியால் பார்க்க முடிந்தது… தேவையே இல்லாமல் பல தலைப்புகளுக்கு சென்றவளது ஒரு வார்த்தையும் அவன் செவிகளுக்கு செல்லவில்லை… ஆனாலும் தனக்கு இருக்கும் வேலைகள் நினைவிற்கு வர அவளை தடுத்து நிறுத்த வேண்டியாகியது.
“நீ அப்டியே பேசிட்டு இரு நான் கிளம்புறேன்…” என்று தனது வண்டியை ஸ்டார்ட் செய்வதற்குள் மணிமேகலை ஆதியின் கையை கெட்டியாக பிடித்தாள்…
மின்னல் பாய்ச்சியது போன்ற உணர்வு ஏற்பட அவள் முகத்தை பார்த்தவன் அதிலிருந்த பயத்தை கண்டதும் அவள் பார்வை பதிந்திருந்த திசையை பார்த்ததும் தான் புரிந்தது. அங்கே ஒருவன் மணிமேகலையையும் ஆதியையும் கண்சிமிட்டாமல் பார்த்திருந்தான் அந்த விழிகளில் தெரிந்த ஆத்திரமும், நேசமும் ஆதிக்கு தெளிவாய் புரிந்தது, “யார் அவன்?”
“என் பிரன்டோட அண்ணன்” அவள் அடுத்த நிமிடமே முகம் புன்னகையில் பூத்தது, “ஹண்ட்ஸமா இருகாருல? என்கிட்டே ரெண்டு நாள் முன்னாடி ப்ரப்போஸ் பண்ணாரு. நான் ஓகே சொல்லிரவா? எனக்கு அவரோட ஐஸ் ரொம்ப புடிச்சிருக்கு. ஆனா அப்பாகிட்ட என்ன சொல்றது? அப்பாக்கும் அவரை புடிக்கும் சோ ப்ராப்லம் இருக்காதுன்னு நெனக்கிறேன்…” அவளே கேள்வியும் கேட்டு பதிலையும் அவளே கூறினாள்.
தன்னுடைய வண்டியின் சைடு மிரரரை திருத்தி தன் முகம் பார்த்தான், ‘என்னடா ஆதி உன் கண்ணும் ஓரளவு பாக்குற மாதிரி தானே இருக்கு… அப்டி என்ன அந்த பூனை கண்ணன் கிட்ட இருக்குன்னு அத பாத்து லவ் பண்ண போறேன்னு சொல்றா? இந்த மான்குட்டிக்கு அந்த அளவு வெவரம் இருக்காது பேசி ஆட்டைய களைச்சு விடுவோம்’
“அந்த கண்ண விட அவன் முகம் பாரு கலையா இருக்கு அதுக்காகவே நீங்க ஓகே சொல்லிறலாம்” என்று நிறுத்தியவன் அவள் மகிழ்ச்சி நிறைந்த முகத்தை பார்க்க அவள் அவர்களை முறைத்து நின்றவனை பார்த்துக் கொண்டிருந்தாள் வேகமாக மகிழ்ச்சியில் அவனுக்கு கை அசைக்க சென்றவளது கையை ஆதி நொடியில் நிறுத்தினான்,
“என்ன அவசரம் முழுசா கேளு… என்ன தான் உன் அப்பாக்கு அவனை புடிச்சிருந்தாலும் அவரோட பொண்ணுக்கு லைப் பார்ட்னர் அப்டின்னு வரப்ப இந்த மாதிரி பசங்கள புடிக்காது. பாரு காதுல கடுக்கன், கைல இருவது கருப்பு வளையல், மண்டைல செம்பட்டை கலர், பைக் பாரு ட்டூயிக்(Duke) நாளைக்கு இதுல கல்யாணத்துக்கு முன்னாடி ரெண்டுபேரும் போனா உன் அப்பா பாத்து என்ன நெனப்பாரு?
அதெல்லாம் விடு நீ என்கிட்டே பிரண்ட்லியா தான் பேசிட்டு இருக்க ஆனா அவன் இதுக்கே எவ்ளோ கோவ படுறான் பாரு… என்ன தான் நீ தமிழ் பொண்ணா இருந்தாலும் பாரின் ரிட்டர்ன் நாலு பசங்க கூட பேசுவ அப்ப ஒவ்வொரு டைமும் அவன் இப்டி தான் ரியாக்ட் பண்ணுவான். பொசசிவ்னஸ் இருக்கலாம் ரிலேஷன்ஷிப்ல ஆனா சந்தேகமோ கோவமோ வர கூடாது… இப்டி இல்லாம நல்லா தமிழ் கலாச்சாரம், திராவிட நிறமா இருக்குற பையன் பாரு… சரி சொல்றத சொல்லிட்டேன் இனி உன் இஷ்டம்”
தன்னுடைய காலரை தூக்கிவிட்டு அவள் முகத்திலிருந்த சந்தேகத்தை பார்த்து மனதில் சிரித்தவன் ஆனந்தமாக தன்னுடைய அப்ளிகேஷனையும் போட்ட பின்னரே சென்றான், “பை… டாட்டா”
*****************************
“சார் நீரஜ் அந்த ரிசார்ட்ல பாரினர்ஸ வச்சு ஒர்க் பண்ணுறாரு அத வெளிய மறைக்க தான் பீச் பக்கத்துல அந்த ரிசார்ட்… பிளஸ் ஏதோ ஜேர்மன் பர்சன்ஸ் கூட ஏதோ டீலிங் பேசுறாரு கோட் வொர்ட்ஸ் எல்லாம் பாத்தா நம்ம ப்ராஜெக்ட் ஏதோ ஒன்னுல ப்ராப்லம் குடுக்க ட்ரை பண்ற மாதிரி தெரியுது. அப்றம் சக்தி, ஈஸ்வரன் சார்க்கு ஆப்போசிட்டா எவிடென்சஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டானாம் ஒரே ஒரு டாக்குமெண்ட் மட்டும் கைக்கு வந்தா எல்லாமே ஓவர்”
ஜெயன் கூறியதை அமைதியாய் தலையசைப்புடன் கேட்டவன் தனது நாற்காலியிலிருந்து எழுந்து தன்னுடைய மேசையிலிருந்த ஒரு அழைப்பு பத்திரிகையை எடுத்து ஒரு வார்த்தை கூட பேசாமல் வெளியில் சென்றான்… இது சில கடந்த மூன்று நாட்களாக நடக்கும் வாடிக்கை தான். முன்னர் இருந்த அவனது சில நேர புன்னகை வெளிப்படா சிரிப்புகளும், தன்னை பற்றிய சிறு கவலையும் மறைந்து இயந்திரமாய் சுற்றி திரிந்தான். இப்பொழுது ஜெயன் வழங்கிய செய்தியும் அவனை பெரிதும் அசைக்க வில்லை.
அவன் வழக்கத்தில் மாறாதது யாழினியின் அறையை ஒரு நொடியில் பார்த்து நகர்வது. அதை மட்டும் இப்பொழுதும் சரியாக செய்து மின் தூக்கியில் நுழைந்தான். அவன் பின்னே வந்த ஜெயன் உதய்யின் ஆனைக்காக காத்திருக்க தான் கேட்ட செய்திகளுக்கும் தனக்கும் துளியும் சம்மந்தம் இல்லையென்பது போன்று இருந்தான். தனது வாகனத்தை எறியவன், “மாமா எங்க?”
தன் கையிலிருந்த தாவலை (tab) பார்த்து, “அவர் வீட்டுல சார்”
“வண்டிய அங்க விடுங்க ஜெயன்” அதற்கு பிறகு அமைதி மட்டுமே அந்த அரைமணி நேர பயணத்தில். ஈஸ்வரனின் இல்லம் அடைந்ததும், “நீங்க வர வேணாம்” ஜெயனை தடுத்து தான் மட்டுமே உள்ளே நுழைந்தான். தன்னை துளைக்கும் ஈஸ்வரனின் ஆட்கள் பார்வையை துளியும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய சுய்ட்டை தோளில் ஒற்றை விரலால் போட்டபடி கம்பீரமாய் நடந்தவனை பார்த்த ஆண்களுக்கும் கூட பொறாமை வர தான் செய்தது.
உள்ளே நுழைந்தவன் பார்வை அந்த நுழைவாயிலை அளக்க ஈஸ்வரன் அங்கில்லை… மெல்லிய இருமல் சத்தம் மாடியிலிருந்து கேட்க ஐந்தே எட்டில் அவன் கண்களுக்கு தெரிந்தார் ஈஸ்வரன்.
நீல நிற முழுக்கை சட்டையின் பட்டனை கழட்டி தனக்கு முன்னாலிருந்த சதுரங்க பலகையில் தனது முழு கவனத்தையும் பதித்திருந்தார், “எதிரியே இல்லாம ஆட்டம் ஆடுனா சுவாரஸ்யமே இல்லல??” உதய்யின் திமிர் கலந்த கேலியான குரல் அவரது ஆழ்ந்த கவனத்தை ஈர்த்தது.
ஒலி வந்த திசையை பார்க்காமலே அந்த குரலை அறிந்தவர் அவனை பார்க்காமல் ஒரு சிரிப்புடன், “என்ன வராத ஆளுங்க எல்லாம் இந்த பக்கம் வர்றாங்க?”
அவரது அழைப்பை எதிர்பாராமல் தானே அவருக்கு எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்தவன் சதுரங்க காய்களை முதலிருந்து ஆரமிக்க அடுக்கினான், “ஏதோ ஒரு மூலைல நீங்க மட்டும் தனியா ஆட்டம் ஆடி போர் அடிச்சு போய் இருப்பீங்கன்னு தோணுச்சு. அது தான் எதுத்து ஆட ஒருத்தன் இருக்கேன்னு நியாபக படுத்த வந்தேன்”
அவனுடைய பேச்சில் ஏதோ ஒன்று தெரிய ஆட்டத்தை அவர் தொடங்கினார். தன்னுடைய ரூக் என்றழைக்கப்படும் சிப்பாயை நகர்த்தினார், “என்ன உதய் என்னோட ஆடி ஜெயிக்க முடியும்ன்னு நம்பிக்கை முகத்துல ரொம்ப தெரியுது?” அவர் குரலிலிருந்த கர்வமும் செருக்கும் உதய்யின் அலட்சிய சிரிப்பில் மாண்டது.
“இதுல சந்தேக பட என்ன இருக்குது? நான் தான் ஜெயிப்பேன்… பின்ன படிச்ச படிப்பும் பண்ணுற வேலையும் எதிராளியோட எண்ணம் எப்படி இருக்கும்ன்னு கத்து குடுத்துருக்கே. ஒவ்வொரு காயையும் மூவ் பண்றப்ப எதிரியோட இடத்துல இருந்து யோசிச்சு அடுத்த மூவ் வைக்கணும். உங்களுக்கே தெரியாம உங்க ஆட்டத்துல என்னோட ஐடியாவ நான் செஞ்சு காட்டுவேன்” என்றவன் உலகின் மிக சிறந்த நகர்வான
‘தி குயின்’ஸ் கேம்பிட்’ என்னும் நார்க்வில் தன்னுடைய கருப்பு சிப்பாயை சதுரங்கத்தின் மத்தியில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைப்படுத்தினான், “இது பேரு, ‘தி குயின்’ஸ் கேம்பிட்’ நம்ம காயி இந்த போர்ட் நடுல எவ்ளோ நேரம் இருக்கோ அவ்ளோ நேரம் ஆட்டம் நம்ம கைல. எவன் முதுகில குத்துறான்… எவன் கால வாறுரான்னு இங்க இருந்தா மட்டும் தான் தெரிஞ்சுக்கலாம். எனக்கு சும்மாவே கண்ண நாலா பக்கமும் வச்சுக்க புடிக்கும் இதுல இந்த சாதாரண செஸ்ல வச்சுக்க மாட்டேனா? உங்களுக்கு தெரியாததா?? என்ன மாமா?”
அவர் உதய்யை கூர்மையாக பார்த்து அவன் கூற வரும் செய்தியின் அர்த்தம் முழுமையாக புரியாமல் தன்னுடைய ரூக்கை முன்னேற விடவும் உதய்யின் ஏளன சிரிப்பு அவரை கண்கள் சுருங்க வைத்தது.
“நான் சொல்லல?” வாய் விட்டு சிரித்தவன், “என்னால ரெண்டாவது மூவ்லயே உங்க ராஜாவை ஈஸியா தூக்கி போட முடியும்” என்றவன் தன் ராணியின் மேல் ஒற்றை விறல் வைத்து அவரை பார்த்து புருவம் உயர்த்தி சிரித்து பிறகு தன்னுடைய மற்றொரு ரூக்கை நடுவில் வைத்து, “ஆனா பாருங்க ஒரே அடில அடிச்சா உங்களுக்கு என்னோட அடுத்த அடி எப்படி இருக்கும்ன்னு நான் எப்படி காமிக்கிறது? ஆட்டம் சூடு பறக்க எப்பயுமே இருக்கனும். சோ நீங்க உங்க முழு திறமையையும் என்கிட்டே காமிங்க நான் என்னோட ஏனோ தானோ அறிவை வச்சு கொஞ்சம் விளையாடி பாக்குறேன்”
மனதில் ஏதோ வைத்து பேசுகிறான் என்று அவருக்கு புரிந்துவிட அதன் பிறகு தன்னுடைய ஆட்டத்தில் முழு கவனத்தையும் வைத்தார். உதய்யின் ஆட்ட நுணுக்கங்களை ஓரளவிற்கு யூகிக்க முடிந்தவரால் பூல்ஸ் மேட் என்னும் நுணுக்கம் கொண்டு யானையை வைத்து அவனது ராஜாவிற்கு செக் மேட் வைத்தார்,
“உன்ன விட வயசிலேயும் சரி அனுபவத்துலயும் சரி… நான் பெரியவன் உதய்” என்றவர் அவனை வென்று விட்ட பார்வை ஒன்று பார்த்து, “செக் மேட்” என்றார்.
அவரது கூற்றில் மாறாத அவன் முகத்தை பார்த்தவருக்கு மீண்டும் அதிர்ச்சியே, “ம்ம்ம் பூல்ஸ் மேட்? பிண்றீங்க மாமா… நாம நல்லா இருக்கணும்னா ஒருத்தர முட்டாளாக்கி பண்ணனும்னு அவசியம் இல்ல இப்ப என்னையே வச்சுக்கோங்களேன் நீங்க என்ன பண்றீங்க எதுக்காக பண்றிங்கன்னு நல்லா தெரியும் அப்ப என்கிட்டே இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம், இந்த பூல’ஸ் மேட் எல்லாமே வேஸ்ட் தான் பாருங்க” என்று,
‘தி பிரெஞ்சு டிபன்ஸ்’ முறையில் அவருடைய ராணியையும் வெட்டி அவருடைய ராஜாவிற்கும் இரண்டாவது முறையாக செக் மேட் வைத்தான், “இது பிரெஞ்சு டிபென்ஸ் சிம்பிளா சொல்லனும்னா காப்பி அடிப்பேன் நீங்க என்ன பன்னிங்கனாலும் நானும் அத மட்டும் தான் பண்ணுவேன்… நீங்க பனிஞ்சா நா பணியிவேன் நீங்க வெட்டுனா நானும் வெட்டுவேன்… நீங்க என் குடும்பத்துக்குள்ள வந்தா நானும் வருவேன். செக் மேட்”
அதை சற்றும் எதிர்பாராவதர், ‘தி ஸ்லாவ் டிபென்ஸ்’ முறையை பயன்படுத்த உதய் அவரை பார்த்து மெச்சும் பார்வையோடு, “இங்க தான் நீங்க தப்பு பண்றீங்க… உங்களால பலச மட்டும் தான் யோசிக்க முடியும். நா அப்டி இல்ல என்னோட ஒவ்வொரு அடிலயும் எங்க சறுக்கும், எங்க தூக்கி குடுக்கும், எங்க என்னோட ஆளே… ஐ மீன் என்னோட காயே எப்ப என்ன பழி வாங்கும்ன்னு யோசிச்சு, தெரிஞ்சே தான் நகத்துவேன்…” ‘மார்ஷல்’ஸ் லெஜென்றி மூவ்’ என்னும் நரகர்வை முயற்சித்தான்.
அவர் இந்த முறை அடுத்த காயை நகர்த்த சராசரியாக ஐந்து நிமிடங்கள் பிடித்தது. அவருக்கு தேவையான அவகாசத்தை அமைதியாக அளித்தவன் அவருடைய அடுத்த இலக்கையும் யூகித்திருந்தான். அவன் எதிர் பார்த்தபடியே அவரது மந்திரி காயை ‘டெஸ்பேராடோ சாகிரிபைஸ்’ முறையில் இழக்க. உதய் சில நிமிடங்கள் யோசனைக்கு பிறகு ‘மேயர்’ஸ்’ என்னும் முறையை பயன்படுத்தி அவருக்கு மீண்டும் அதிர்ச்சியளித்தான். இவர்களது ஆட்டம் நீண்டு கொண்டே போக நேரமும் கரைந்தது.
ஈஸ்வரனது நிதானமான ஆட்டத்தில் தானே ஒரு சிறு தவறை செய்து உதய் எதிர்பார்த்த இடத்திற்கு அவரது ராணியை வைத்தார். தன்னுடைய குதிரையை வைத்து அவரது ராஜாவிற்கு ‘எண்டு கேம்’ முறையில் மீண்டும் செக் வைத்தான் உதய். இந்த முறை அவருடைய எந்த அசைவுக்கும் ஐந்து இடங்களில் அவரது ராஜாவை கட்டம் கட்டி நிறுத்தி வைத்திருந்தது அப்பொழுது தான் அவருக்கே புரிந்தது.
“நான் தான் சொன்னேன்ல மாமா… எனக்கு என்ன சுத்தி என்ன நடந்தாலும் தெரியும்… நீங்க என் ராஜாவை தூக்குறேன்னு நெனச்சு நீங்களே அதுல வந்து வான்டடா மாட்டிக்கிங்க இனி நீங்களே நெனச்சாலும் உங்களை காப்பாத்த முடியாது… இனி ஜோரா வெற்றி தான்”
அவன் இது வரை ஒரு முறை கூட சதுரங்கம் விளையாடு பார்காதவருக்கு அவனுடைய அசாத்திய திறமையும் அவன் சிந்தனையின் அளவையும் ஒரு மணி நேரத்திற்குள் புரியவைதான், “ஒரே ஆட்டத்துல மூஞ்சியே மாறிடுச்சே மாமா இனி தானே வேடிக்கையே இருக்கு… இந்தாங்க இன்விடேஷன். சண்டே அப்பா பர்த்டே செலிப்ரரேஷன் வந்து தெம்பா சாப்டுட்டு அடுத்த ரௌண்ட்க்கு ரெடி ஆகுங்க”
மாமா என்னும் வார்த்தையை அரிதாக பயன்படுத்துபவன் ஒவ்வொரு முறையும் மாமா என்று அழைக்கும் பொழுது அவரது சந்தேகம் வலுப்பெற அவனது மறை முகமான இருபொருள் பட்ட பேச்சுகளும் அதிலிருந்த எச்சரிக்கையும் ஆதி மற்றும் விஷ்ணுவை பற்றி மட்டுமே உதய் அறிந்துக் கொண்டான் என்று சரியாக தவறாக புரிந்துக் கொண்டார்…