ஷீலா கடும் கோபத்துடன் பிள்ளைகளை முறைத்து முறைத்து பார்த்து கொண்டு இருந்தார். தமிழும் பவித்ராவும் தான். இனிப்பான கரும்பை அண்ணன் எடுத்ததற்கு தான் இந்த ஆர்ப்பாட்டம். வீட்டையே சுற்றி சுற்றி வந்து கொண்டே இருந்தனர் அவர்களுக்கு இணையாக துரத்தி கொண்டே இருந்த ஷீலாவை பார்த்து , “அம்மா உன் முட்டை கண்ண எவளோ உருட்டி பாத்தலும் நா நிக்க போறது இல்ல, என்ன தைரியம் இருந்தா அவன் நா எடுத்து வச்சிருந்த கரும்ப திருடி திம்பான்?”
தாய்க்கு பின்னால் நின்று போக்கு காட்டியபடியே, “மா நீங்களே சொல்லுங்க நான் என்ன அவளை மாதிரி திருடி, ஒளிச்சு வச்சா சாப்பிடுவேன்? ஒழுங்கா கொஞ்சம் மொதயே தந்துருந்தா வாங்கியிருக்க கூட மாட்டேன். ஆனா இவ முழுசா ஒளிச்சு வச்சிருக்கா” கோவம் ஏறிக்கொண்டே சென்றது ஷீலாவிற்கு இவர்களின் சிறு பிள்ளை வேலையை பார்க்கும் பொழுது.
“நடிக்காதடா …நீ என்ன பண்ணுவன்னு எனக்கு தெரியும் சும்மா அளந்து விடறது நல்லவன் மாறி”
“உன்ன விட நான் நல்லவன் தான்டி, போன வாரம் என்ன பண்ண நீ? நியாபகம் இருக்கா? உன் கிளாஸ் பசங்க கூட சேந்து சினிமாக்கு போயிட்டு வந்துட்டு, வீட்டுல பொண்ணுங்க கூட போறேன்னு பொய் சொன்ன”
“நீ என்ன பண்ண? என் பிரின்ட் கிட்ட லவ் லெட்டர் என்ன வச்சே குடுக்க வச்சல?”
இருவரின் ரகசியங்களும் சிறுகச் சிறுக வெளியே வர ஆரம்பிக்க கடுப்பானது என்னவோ ஷீலா தான், “இப்ப ரெண்டு பெரும் வாய மூடுறீங்களா? இல்லையா? இப்டியே பேசிட்டே இருந்தா சோறு கிடையாது மதியம்” அவ்வளவு தான் சாப்பாடு பேச்சு வந்தால் அனைத்தும் அடங்கி விடும் இருவருக்குள்.
தாயின் முகத்தில் இருக்கும் மாறுதலை உணர்ந்தவன் அருகில் சென்று அமர்ந்தான் அவர் தோளில் அன்பாக கை போட்டு, “என்ன ஆச்சு என் மம்மிக்கு? முகம் ஏன் டல்லா இருக்கு?”
“ஏண்டா தமிழு உனக்கு ஆதியை பாக்குறப்ப ஒன்னுமே தோணாதா?”
“ஏன் தோணாது? நல்லா படுக்க வச்சு அவன் வாயிலேயே வண்டிய ஏத்தணும் போல தோணும்”
“ப்ப்ச்ச்ச்.. அது இல்லடா உனக்கு கல்யாணம் ஆக போகுது அவனுக்கு அதே மாறி தான நடக்கணும், பேசாம அவனை நம்ம மருமகளோட தங்கச்சிக்கு கேக்கலாமா?”
கோவம் கலந்த அதிர்ச்சியில் பார்த்தவன், “உண்மைய சொல்லு இத அந்த நாயி தான உன்ட சொல்லுச்சு?”
சட்டென முகம் மலர்ந்தது ஷீலாவோ, “அப்ப என் பையனுக்கு அந்த பொண்ண புடிச்சிருக்கா?”
“ம்க்கும்… அவனுக்கு ஊர்ல இருக்க எல்லா பெண்ணையும் தான் புடிக்கும். அதுக்குன்னு அவனுக்கு எல்லாரையும் கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா?”
“டேய் வெளயாடாத பா”
“மா.. நா நிஜமா விளையாடலமா. அந்த பொண்ணு அவங்க அத்தை பையன லவ் பண்ணுது நீ வேற. உனக்கு முன்னாடியே நான் 100 தடவ கல்யாணம் பத்தி பேசிட்டேன். ஆனா அவன் கேக்க மாட்டான். வேணும்னா நீயே பேசிக்கோ” என கூறிவிட்டு அறைக்குள் சென்று அடைந்தவன் கால் செய்தது ஆதிக்கு தான்.
“டேய் எங்க இருக்க?”
“வீட்டுல ஏன்?”
“நான் வரேன்” வண்டியை நேராக ஆதி வீட்டிற்கு தான் விட்டான். வீட்டிற்குள் நுழையும் பொழுதே ஆதி அவன் சிறிய வீட்டு தோட்டத்தில் செடி நட்டு கொண்டு இருந்தான்.
“டேய் அந்த தண்ணிய எடுத்து குடு”
‘வந்ததும் வராததுமா வேல வாங்குறான்’ அலுத்து கொண்டு தண்ணீரை எடுத்து குடுத்த தமிழ், “ஏண்டா இப்ப நா வரலைனா நீ தான போய் எடுத்துருப்ப?”
“ஆமா” அசால்ட்டாக பதில் கூறி கொண்டே தண்ணீர் ஊற்றி இன்னோரு செடியை நட தொடங்கினான்.
“அப்ப அதே மாறி நெனச்சு போய் எடுத்திருக்க வேண்டியது தான?” மறுபடியும் டப்பாவை கையில் கொடுத்தவன், “போய் இன்னோரு டப்பா கொண்டு வா”
“உன்ன பாக்க வந்ததுக்கு வேலைக்காரன் மாறி நடத்துற நீ” வேறு வழி இல்லாமல் எடுத்து வந்தவன், “டேய் ஏண்டா கல்யாணம் பண்ண மாட்டிக்கிற?” ஒரு ஆழமான பாசம் இருந்தது அவன் குரலில்.
“எதுக்கு பண்ணணும்?” கையை கழுவி கொண்டே கேட்டான் ஆதி, “ஏண்டா ஊருல உள்ள பொண்ணுகளை எல்லா சைட் அடிக்கிற ஆனா கல்யாணம்-னு வந்தா மட்டும் உத்தமன் மாறி பேசுற?”
“அண்ணா வாங்க எப்ப வந்திங்க?” ஒரு இலகுவான குரல் வாசலை நோக்கி திரும்ப வைத்தது தமிழை. நின்று கொண்டு இருப்பது ஆதியின் தங்கை சஹானா. அமைதியான சாந்தமான முகம், மெல்லிய புன்னகை, லட்சணமான அழகிய முகம், கண்ணில் வற்றாத ஒரு பாசம் இவை அனைத்தும் அவளை மிக அழகாக காட்டும், “இப்பதாமா வந்தேன். உன் அண்ணே என் உயிரை வாங்குறான்”
ஒரு மெல்லிய அளவான புன்னகை சிந்தினாள் அவள், “அண்ணா அப்டி தான்னு உங்களுக்கே தெரியும்ல. சரி, உள்ள வாங்க காபி போட்றேன்” கோவம் என்றால் என்ன என்று கேள்வி கேட்கும் பெண் அவள். அப்படியே ஆதிக்கு நேர் மாறாக. ஆதிக்கு கோவம் வந்தால் என்ன நடக்கும் என்று யாராலும் கூற இயலாது அப்பேற்பட்ட கோவக்காரன்.
“வரேன் மா” அவள் பின்னே சென்றான் காபி எனும் வார்த்தையை கேட்டு.
ஆதியின் வீடு ஒரு சிறிய வீடு தான், ஒரு அறை, ஒரு ஹால், ஒரு சமையல் அறை. தங்கைக்கு அந்த அறையை கொடுத்து ஹாலில் எப்பொழுதும் இருப்பான் ஆதி. தங்கைக்கு பிடித்தார் போல் வீட்டை அலங்கரிப்பான், ‘இது எனக்கு வேணும், இது வேணும்’ என்று கேட்கும் பிள்ளை இல்லை அவள், ஆசை பட்டத்தை அவள் கண்களை பார்த்து செய்வான். முக வாட்டத்தை கண்டால் இவன் நெஞ்சில் அது குத்தும். உடனே எங்காவது அழைத்து சென்று விடுவான் அவள் மன போக்கை மாற்ற. சிறு வயதிலே வீட்டின் பொறுப்பை ஏற்றவள் பாதை அதிலே போய் விட கூடாது என்பதற்காக சமையல், துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என்று எல்லா வேளையிலும் ஆதியும் இருப்பான் அவள் அருகில்.
சுடச் சுடக் காபியை வாங்கி கொண்டே, “உன் கையால குடிச்சு எம்புட்டு நாள் ஆச்சு?” முகர்ந்து கொண்டே குடிக்க ஆரம்பித்தான், “ஓசில குடிச்சா அப்டி தான்டா நல்லா இருக்கும்” கையை துடைத்து கொண்டே உள்ளே வந்தான் ஆதி.
“டேய் சாப்பாடு விசயத்துல சூடு சொரணை எல்லாம் தூக்கி போட்டுனும்டா”
“அது சேரி, வா கொஞ்சம் வெளிய வேலை இருக்கு”
“வெளிய கூப்டு போய் அடிக்கத் தான போற?” ஒரு நக்கல் பார்வையோடு பார்த்தான் ஆதி, “இல்ல ராசா அது இன்னைக்கு இல்ல, ரெண்டு வீடு தள்ளி ஒரு பொண்ணு புதுசா குடி வந்துருக்காம் வா பாக்க போகலாம்”
கண்ணை பார்க்க தவிர்பவனை பார்த்து அழுத்தமாக, “எங்க டா?”
“கெளதம் வர சொன்னான் டா” கெளதம், தமிழ், ஆதி மூவரும் நெருங்கிய தோழர்கள்.
“அவன் பேச்சையே எடுக்காத எனக்கு கோவம் தா வருது, நிச்சியத்துக்கு கூட வர முடியாம அப்டி என்ன கிழிக்கிற வேலை அவனுக்கு?”
“இப்ப வரியா இல்லையா?” சட்டையை மாட்டிக்கொண்டே கேட்டான் ஆதி பொறுமை அற்று. “மாட்டேன்-னு சொன்ன விடவா போற ஆனா அவன் கூட நான் பேச மாட்டேன். இப்பயே சொல்லிட்டேன்”
“சனியனே கூப்டியா ஒரு வார்த்தை நிச்சயத்துக்கு? சரி அத கூட விடு ப்ரன்ட் பங்சனுக்கு கூப்புடாம தான் வரணும் ஆனா பொண்ணு பாத்த விசயத்தை கூட சொல்ல தோணல நீ பேசுற? மூடிட்டு போய் வண்டிய எடு பேச வைக்காத” மறுவார்த்தை வர வில்லை. சோர்ந்த முகத்தோடு வெளியே சென்றவனை பார்த்து.
“இந்த மூஞ்சிக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல, சஹானாமா நான் வெளிய போயிட்டு வரேன் வீட்டை பூட்டிக்கோ”
“சரி அண்ணா பாத்து போயிட்டு வாங்க” கிட்சனுள் இருந்து வந்தது சஹானாவின் குரல்.
வண்டியை ஸ்டார்ட் செய்து நின்று கொண்டு இருந்தவனின் பின்னால் ஏறி அமர்ந்தான் ஆதி, கண்ணாடியில் தமிழின் முகத்தை பார்த்தவன் , “டேய் மூஞ்சிய நார்மலா வை, சகிக்கல பாக்க”
சிறிது நேரத்தில் கெளதம் வீட்டிற்கு வந்தவர்கள் அவனின் அப்பாவை பார்த்து விட்டு கெளதம் அறைக்குள் நுழைந்தனர். அங்கே அவன் தலையிலும் கையிலும் ஒரு கட்டோடு கிடந்தான், அவனை பார்த்த மாத்திரம் அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தான் ஆதி வயிறை பிடித்து கொண்டு.
“ம்ம்ப்ச் .. டேய் சிரிக்காத டா” அசிங்கத்தில் நெளிந்தான் கெளதம். தமிழுக்கு என்ன நடக்கிறது என்றே புரிய வில்லை மாறி மாறி இருவரையும் பார்த்தான், “என்ன டா நடக்குது இங்க, என்ன ஆச்சு உனக்கு? ஏன் இவன் இப்டி சிரிக்கிறான்?” கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றான் தமிழ்.
“என்ன தெரியுமா இவன் பண்ணியிருக்கான்? சார் ஏரியா சின்ன பசங்க கிட்ட இருக்க கிரிக்கெட் பேட்ட வாங்கி விளையாண்டு இருக்கார். ஒரு கட்டத்துல வீரத்தை பேட்ல காமிச்சு ஒடச்சிட்டாரு. என்ன பண்ணிருக்கணும் ஒழுங்கா வேற பேட் வாங்கி குடுத்துருக்கணும். அத விட்டுட்டு ‘முடியாது போடா’ வீர வசனம் பேசிருக்கான். அவனுங்க ஒடஞ்ச பேட்ட வச்சே மண்டையயும் கையயும் ஒடச்சிட்டு போய்ட்டானுங்க. சின்ன பசங்கட்ட அடி வாங்கிருக்கான் ப்ப்ப்ஹ்ஹா…” உனக்கு இது தேவையா என்பது போல் தமிழ் பார்த்தான்.
“மூடு ரொம்ப சிரிக்காத. சின்ன பசங்கனு தான் விட்டேன். அதுவு இல்லாம அவங்க அம்மா இருந்தாங்க இல்லனா மண்டைலயே நாலு கொட்டு கொட்டிருப்பேன்”
“அங்கிள் எங்க அந்த நெட்ட கொக்கு?” அந்த குரலைக் கேட்டு விழி விரித்தான் கெளதம், ‘ஐயோ இவ எதுக்கு இங்க வந்தா?’
“டேய் நா வாக்கிங் போயிடு வரேன் வீட்டை பாத்துகோ”
‘அட தகப்பா பையன காப்பாத்துறத விட்டுட்டு அந்த பிசாச உள்ள அனுப்பி வைக்கிற ?’ தந்தையை திட்டி கொண்டே ஆதியை மேலும் கீழும் பார்த்து யோசித்தான் ‘என்னமோ பிளான் பண்ணிட்டான் இவன்’ கௌதமின் பதட்டத்திற்கு காரணம், வந்தது தமிழின் சகோதரி.
“என்னடா நடக்குது இங்க?” தமிழ் கௌதமை கொலை காண்டுடன் பார்த்தான் ஆனால் ஆதியோ வழக்கம் போல் சிரித்து கொண்டு இருந்தான்.
“அது ஒன்னு இல்லடா மச்சா. உனக்கு போன் பண்ணாலாம் .. நீ எடுக்கலையாம் என் கிட்ட பாவமா கேட்டாளா.. அதான் நீ இங்க இருக்க-னு சொன்னேன். ஏதோ முக்கியமான விசியமாம்.”
“நலம் நலமறிய ஆவல்…
உன் நலம் நலமறியா ஆவல்…
நீ இங்கு சுகமே…
நான் அங்கு சுகமா…”
வெளியில் இருந்து வந்த பாட்டிற்கு தாளம் போட படி , “ஓ அண்ணனை பாக்க வரப்ப இந்த மாறி பாட்டையும் பாடலாமா?” ஆதி கௌதமிடம் அப்பாவியாய் கேட்க அவனோ கண்ணால் கெஞ்சினான், ‘மச்சி காப்பாத்து டா’.
“சின்ன பசங்கட்ட அடி வாங்குனப்பயே வெக்க பட்டு கூனி குறுகி செத்துருக்கணும் பரவால இந்த தடி மாட்டு கையாள சாகு” அசால்டாக அருகில் இருந்த ஆப்பிள் பழத்தை சுவைத்தான்.
இன்னிசை கச்சேரியுடன் ஆடிக்கொண்டே வந்த பவித்ரா உள்ளே இருந்த சகோதரனை கண்டதும் அதிர்ச்சியயை அப்பட்டமாய் காட்டினாள்.
சட்டென்று தனது 32 பற்களையும் காண்பித்து, நெளிந்தவள், ” ஹி ஹி .. அண்ணா.. நீ இங்க என்ன பண்ற?”
“ஓ அண்ணா? அப்டி? சேரி அப்பறம்…” சாதாரணமாக எரிந்துகொண்டிருந்த தீயை பெட்ரோல் ஊற்றி ஜோராக எரியவைதான் ஆதி.
“இல்ல அ.. அதுதுது.. வந்து….”
“ஆஹ் இந்த பழம் இருக்குல்ல பழம்” உளறியவாறு ஆதியை பார்த்தவள் “ஆஹா என்ன ருசி!! என்ன ருசி !! அருமை ..அருமை..!!” என ஆதியும் எடுத்து கொடுக்க.
ஆதியை முறைதான் தமிழ், “நானு பவித்ரா மாறி பழத்த தான் டா சொல்றேன், என்னமா சரி தான?”
“ஆஹ்.. ஆமா ஆமா … அண்ணா இந்த பழம் இருக்குல்ல அத நீ வீட்டுல வச்சிட்டு வந்துட்ட. அத குடுக்க வந்தேன்” கையில் இருந்த பழ கவரை தமிழிடம் அவசரமாய் திணித்தவள், கௌதமை பார்த்தாள். அவன் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தான், ‘ஒரு பொய்ய சொல்லிச் சமாளிக்க தெரியல. இத வச்சு என்ன பண்ண போறேனோ’ நினைக்கவே அவனுக்கு தலை சுற்றியது.
“ஏய்… அளக்காத உண்மைய சொல்லு அவனுக்கு அடி பட்டது எனக்கே இப்ப தான் தெரியும் உனக்கு எப்படி டி தெரியும் ? என்ன நடக்குது இங்க?” பற்களை கடித்தான்.
பவித்ரா எங்கே ஓடி செல்வதென்று தெரியாமல் முழித்தாள். கெளதம் ‘இன்னோரு கையும் உடைய போகுதோ’ என்றெல்லாம் எண்ணம் தோன்றியது
“முட்டா பயலா இருக்க மச்சி” கையை கௌதமின் கட்டில் துடைத்து, “ஏன்டா அவங்கள மாத்தி மாத்தி பாக்குற ரெண்டும் லவ் பண்ணுதுங்க” தமிழின் தலையில் குண்டைப் போட்டான் ஆதி. அதிர்ந்தது மூவருமே.
“என்னது!!!… லவ்வ்வ்.. பண்றங்களா ?” பொத்தென கட்டிலில் அமர்ந்தான் தமிழ் அதிர்ச்சியில்.
பதறிய கெளதம், “மச்சா பாத்து டா” என்றான்.
“பெட் இருக்குனு தெரிஞ்சு தான் டா அவன் வேகமா ஒக்கந்தான் ஏன் பதறுற?”
“ராசா கம்முனு இருடா கொஞ்ச நேரம்” வேண்டினான் கெளதம் ஆதியிடம்.
சற்று நிதானம் திரும்பியவன் அமைதியாக , “இது எவ்ளோ நாளா நடக்குது?”
“1 இயர் 4 மந்த்ஸ் 24 டேஸ்” இப்பொழுதும் பதில் அளித்தது ஆதி தான்.
“உனக்கு எப்படி டா நாங்க லவ் பண்றது தெரியும்?” ஆதி காதில் கிசுகிசுத்தான் கெளதம், “வாலண்டைன் டேக்கு பிளாக் ஷர்ட் போட்டு வண்டிக்கு ரோஜா பூ வாங்கி வச்சல அப்பயே தெரியும்”
“டேய் கெளதம் ஏண்டா இப்டி பண்ண?” பாவமாக இருந்தது தமிழை பார்க்க. பவித்ரா ஓரத்தில் அமைதியாக நின்று அழுது கொண்டிருந்தாள், “சாரி ண்ணா”
“ஏய் மூடுடி வாய. பண்றதெல்லாம் பண்ணிட்டு அண்ணா நொண்ணா ஆமால நொண்ணன். ஏண்டா நாயே… பிரண்ட்னு நம்பிக்கைல தான வீட்டுக்குள்ள விட்டேன் இப்டி சோத்துல கை வச்சுட்ட” கௌதமின் காலர் -ஐ பிடித்தான் ஆக்ரோஷத்துடன்.
போக்கு சரியாய் இல்லை என்று உணர்த்த ஆதி, “மச்சா நிதானமா பேசுவனு தான் கூட்டிட்டு வந்தேன். வார்த்தைய விடாத.”
“ஐயோ நல்லவரே நீங்களா? ஒரு வருசமா இது நடக்குதுன்னு தெரியும் ஆனாலும் துரை சொல்லல? ஏன்? உங்க வீட்டுலையும் ஒரு பொண்ணு இருக்குல்ல அப்ப இப்டி நடந்தா தான் தெரியும் உனக்கு. நானே இவன வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் என் தங்கச்சிய வச்சு பழக விட்ட மாறி இரு…” அடுத்த வார்த்தை வர வில்லை வெளியே. ஓங்கி அறைந்திருந்தான் ஆதி.
“ப்ச்ச்.. நாக்கு கூசல பேசுறப்ப? ஏத்துக்கணும்னு தோணுச்சுனா ஏத்துக்கோ. இல்லையா, ‘முடியாது’னு சொல்லிட்டு மூடிட்டு போய்டணும். அத விட்டுட்டு என்ன என்னமோ பேசுற”
கோபத்தில் ஆதியை யாருமே விரும்ப மாட்டார்கள் அவ்வாறு இருக்கும் அவன் கண்கள். கஷ்டப்பட்டு கோவத்தை கட்டுப்படுத்தி மீண்டும் தொடர்தான்.
“அண்ணனா யோசிக்கிறப்ப கோவம் வர தான் செய்யும். பிரின்டா யோசிச்சிருக்கலாம்ல? நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்னு சொல்லிருந்தா இன்னேரம் என்ன செஞ்சுருப்ப? சூப்பர்டானு கை குடுத்துருப்ப, அந்த பொண்ணுக்கு ஒரு அண்ணன் இருந்துருப்பான்ல? அவனுக்கு வலிக்காதா?”
இவ்வளவு நேரம் கத்தியவன் குரலில் வருத்ததுடன் தொடர்தான், “இப்டிலா நடக்கும்னு அவன் உனக்கு முன்னாடி எத்தனை தடவ யோசிச்சிருப்பான்? ப்ரன்ட ஏமாத்துறோம்னு அவனுக்கு தோணிருக்காதுனு நீ நெனக்கிறியா? இல்ல பவித்ரா தான் யோசிச்சிருக்க மாட்டாளா? அஞ்சு வருசமா லவ் பன்றான்”, என்றவுடன் அதிர்ந்தான் தமிழ்.
“ஆனா ஒரு தடவ கூட நீ இல்லாம உன் வீட்டுக்குள்ள அவன் வந்தது இல்ல, தப்பான ஒரு பார்வை விட்டது இல்ல அவமேல. கேளு அவகிட்ட எப்ப லவ் சொன்னான்னு. ஒரு வருஷம் முன்னாடி சொன்னப்ப கூட அவளை விட முடியாம தான் சொல்லிருப்பானே தவற அப்பயும் உன்ன பத்தி ஆயிரம் தடவ யோசிச்சிருப்பான்” தமிழ் பார்வையை தரையில் வைத்தவன் தான் நிமிர்த்து பார்க்கவே இல்லை.
“டேய் முடிஞ்சா வீட்டுல பேசு இல்லனா நானே அப்பா அம்மாட்ட பேசுறேன். நீ கல்யாணத்துக்கு சும்மா வந்து ஒரு கிபிட் குடுத்துட்டு கெளம்பு” கோபமோ, வருத்தமோ நண்பனிடம் இருந்து எந்த வார்த்தையும் வரவில்லை என்றதும் கடுப்புடன் முடித்தான் ஆதி.
“பவித்ரா வீட்டுக்கு போ” ஆதி கூறியதும் அவள் பார்த்தது அவள் சகோதரனை தான்.
“அவனை ஏன் பாக்குற கெளம்புனு சொன்னேன்”
மண்டையை ஆட்டிவிட்டு “உனக்கு வேணம்னா எனக்கு வேணா ணா” என உதிர்த்து தன்னை பார்க்காமல் சென்றவளை பார்த்த கௌதமிற்கு தான் வலித்தது அவள் செயல்.
“கேட்டல்ல .. சொன்னத? உன் ப்ரன்ட்ங்கிற நால தான் லவ் பண்ணா. இல்லனா பண்ணிருக்க மாட்டா. இன்னும் ஏதோ ஒன்னு சார் கேட்டீங்களா? என்ன அது? ஆஆஆ… உன் தங்கச்சியா இருந்தா என்ன பண்ணிருப்பனு? கண்ண மூடிட்டு என் கௌதமுக்கு குடுத்துருப்பேன் என் தங்கச்சிய. யாருக்குடா இப்டி ஒருத்தன் கிடப்பான்? ராணி மாறி வச்சு பாத்துக்குவான். காலைல என்னமோ கேட்டல்ல ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டிக்கிறன்னு? இதுக்கு தான் பண்ணல…
25 வருசமா கூடவே இருக்க நீயே இவ்ளோ அசால்ட்டா பேசுறப்ப வேற ஒருத்தி என் சஹானாவை பேசுனா சத்தியமா தாங்கிக்க முடியாது என்னால. இத்தனை நாளா மூணு பேரோட குடும்பத்தை பிரிச்சு பாத்தது இல்ல நான். ஆனா நீ பிரிச்சுப்பேசிட்ட இன்னைக்கு. உள்ளுக்குள்ள என்னமோ வலிக்கிது, என்ன தா இருந்தாலு அனாத பயே தான நானு?” நெஞ்சை தடவிக்கொண்டே கண்கள் கலங்கியவாறு கூறியவனை, “ஆதி…” என்று சட்டென நிறுத்தினான் கெளதம்.
தன்னை அறியாமலே இதயம் வலித்தது ஆதிக்கு, “கெளதம் கார் எடுத்துட்டு போறேன்” நொடி தாமதிக்காமல் வெளியே பறந்தான் ஆதி.
ஆதி கூறிய இறுதி வார்த்தைகள் தமிழை வேரோடு சாய்த்தது, ‘எவ்வாறு இப்படி எல்லாம் பேச தோன்றியது எனக்கு? என்ன காரியம் பண்ணிட்டேன் நான்?’
எப்பொழுதும் குறும்போடும், சிரிப்போடும், கோவதோடும் இருக்கும் அந்த கண்ணில் பல வருடங்கள் பிறகு வலியை காண்கிறான். அதுவும் அந்த வலியின் வீரியம் அதிகமே… நாள் முழுவதும் ஊரைச் சுற்றினாலும் கார் நேராக சென்றது என்னமோ அவன் எத்தனை முறை தான் செல்ல கூடாது என மனதில் நினைக்கும் அதே இடத்திற்கு தான். கீழே இறங்கி ஒரு சிகெரெட்டை எடுத்து வாயில் வைத்து அந்த சீல் வைக்க பட்ட கட்டிடத்தை வெறித்து வெறித்து பார்த்தான். தெரு விளக்கில் இருந்து வந்த வெளிச்சத்தில் ஒரு சிறிய பகுதியே அந்த கட்டிடத்திற்கு கிடைத்தது ஆனாலும் அதில் வளர்த்து உள்ள செடிகளும், சிறிய மரங்களும் பார்க்க ரம்யமாக இருந்தாலும் அவன் கண்ணில் அது எரிச்சல் ஊட்டும் பொருளாகவே இருந்தது
“எப்டியும் நாலு வருசத்துக்கு ஒருதடவை ஆச்சும் உன் கிட்ட வர வச்சிடுறல?” புகையை ஆழமாக இழுத்தான். ஏனோ அந்த வலிக்கு அது மருந்து தரவில்லை வழக்கம் போல்.
Yes this is a dual hero story… ungalukku entha hero ah pudichiruku as of now…?
Cover Pic:
Epdi iruku?
Comment please… kadhai pudichaa kandipaa share panunga…
Bye take care until the next chapter.