உதட்டை கடித்து, “நான் ஏன் உங்கள தேடணும்? நான்… நான் பெட்ல ஒக்காந்துருக்கேன்… ஜன்னல் வழியா எட்டி எல்லாம் பாக்கல” அவள் உண்மையில் வாய் விட்டு ஆதி சிரித்துவிட அப்பொழுது தான் தான் பேசியதன் பொருள் உணர்ந்து தலையில் அடித்துக்கொண்டாள் மணிமேகலை.
“சரி என்ன நீ எதிர் பாக்கல… மீட் பண்ணலாமா?” இதை கேட்கவே தாங்கிக்கொண்டிருந்தவன் சிரிப்போடு கேட்டுவிட்டான்.
“ம்ம்ஹ்ம்ம் அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க. நீங்க கால் பண்ணியே பேசுங்க”
“ஹே இத்தனை நாள் மீட் பண்ணலயா நாம? இன்னைக்கு என்ன புதுசா பயப்புடுற?” – ஆதி
“இத்தனை நாள் வேற, இனி பேச போறது வேற ஆதி… எனக்கு பயமா இருக்கு. அப்பாக்கு தெரிஞ்சு என்கிட்டே கேள்வி கேட்டா நான் உண்மைய ஒளறிடுவேன்”
“நல்லதா போச்சு… மொட்டை கடுதாசு ஒன்னு எழுதி போடுறேன்… உங்க பொண்ணு ஒரு பையன் கூட நைட் எல்லாம் பேசுதுன்னு… அப்படியாவது உன் அப்பாக்கு உண்மை தெரிஞ்சு வேகமா கல்யாணம் பண்ணி வைக்கட்டும்” ஒரே நாளில் திருமணம் வரை சென்றிருந்தான் ஆதி.
“ம்ம்ம் வைப்பாங்க வைப்பாங்க… கன்னத்துலயே ரெண்டு வைப்பாங்க” பெண் மென்மையாய் சிரிக்க உள்ளுக்குள் அதே சிரிப்பே புத்துணர்ச்சியை கொடுத்தது.
“எனக்கு தங்கச்சி மட்டும் தான் மேகா” அவன் இதழ்களில் இருந்த புன்னகை மறைந்து சாதாரணமாக மாறியது.
“தெரியும். உதய் மாமா வீட்டுல சின்ன வயசுல உங்கள பாத்துருக்கேன்” அவன் சோகம் அறிந்து பேசினாள்.
“அப்ப என்ன முதல் நாள் மீட் பண்ணப்பவே நான் யாருனு உனக்கு தெரியுமா?”
“இல்ல… அப்ப நியாபகம் இல்ல… அன்னைக்கு உங்க பிரண்ட்ஸ் கூட நீங்க வந்திங்கள்ல அன்னைக்கு தான் கண்டு புடிச்சேன்”
“நான் உன்ன இது வர உதய் வீட்டுல பாத்தது இல்லையே”
“நான் ரொம்ப சின்ன பொண்ணு பல்லவி, திவ்யா கூட மட்டும் தான் இருப்பேன்… பாத்துருக்கேன் ஆனா உங்க முகம் கூட நியாபகம் இல்ல, அடிக்கடி உதய் மாமா வீட்டுல குரூப் போட்டோல பாத்துருக்கேன்”
“ம்ம்ம் அப்ப எல்லாம் மொபைல் இருக்காதுல, அதுனால நெனச்சா சேரும் சகதியுமா கூட ஸ்டூடியோல போட்டோ எடுத்துட்டு தான் வீட்டுக்கு போவோம்” அன்றைய நாட்களின் நினைவில் சிரித்தான்.
“நீங்க ஏன் இப்ப உதய் மாமாகிட்ட பேசுறது இல்ல…”
“எப்ப பாரு என் லஞ்ச்ச புடிங்கி புடிங்கி சாப்பிட ஆரமிச்சான்… அப்டியே சண்டை பெருசாகி பெருசாகி பேசுறது இல்ல” அவளை சிறுகுழந்தையாகவே நினைத்துவிட்டால் போல், கதையை மாற்றியிருந்தான்.
“ம்ம்ஹ்ம் சொல்லுங்க ஆதி” சிணுங்கினாள்.
ஆனால் எப்பொழுதும் அவனை பாதிக்கும் அந்த சிணுங்கல் இந்த முறை பாதிக்கவில்லை, “நான் உண்மைய சொன்னா நீ என்ன விட்டுட்டு போய்டுவ மேகா”
“அதெல்லாம் போக மாட்டேன்… என்னமோ கொலை பண்ண மாதிரி பேசுறீங்க”
நீண்ட மௌனத்திற்கு பிறகு வாயை திறந்தவன் “ஏற்கனவே மொத்த சொந்தத்தையும் இழந்துட்டு நிக்கிறேன் மேகா, புதுசா கெடச்சிருக்க ஒரே ஒரு சொந்தத்த விட முடியாது. உன் விசயத்துல ரொம்ப சுயநலவாதி நான், புரிஞ்சுக்கோ” உணர்வுகளின் பிடியில் இருந்த ஆதியை என்ன கூறி உண்மையை வாங்குவது என்று தெரியாமல் அந்த பெண் தத்தளித்தாள்.
“புரிஞ்சது, ஆனா இதுக்கு பதில் சொல்லுங்க. அப்பாகிட்ட என்ன சொல்லி பேசுவீங்க?” தன் பக்கம் அவன் மொத்த கவனத்தையும் திருப்பினான்.
“எத பத்தி பேசணும்?” – ஆதி
“எத பாத்தியா? நம்மள பத்தி தான் கேக்குறேன்… விளையாடாதீங்க ஆதி”
“நம்ம பத்தி பேச என்ன இருக்கு மேகா?”
“அது தான் அன்னைக்கு பார்க்ல பேசுனோம்ல”
“பேசுனோமா? ஹாஹா… நீ எங்க பேசின? நான் மட்டும் தான் பேசுனேன். நீ தான் கோவமா இருக்கேன் கோவமா இருக்கேன்னு கிளம்பிட்டியே”
அவள் முக வாட்டத்தை படித்தவன் சிரிப்புடன், “சரி இப்ப சொல்லு என்னோட வானதுக்குள்ள வர இந்த மேகாக்கு சம்மதமா?”
மென்மையான புன்னகையுடன், “என்னோட அப்பா மாதிரி பாத்துக்குவீங்களா?”
“ஹே உன் அப்பா மாதிரி பாத்துக்கணும்னா உன் அப்பா கூட தான் இருக்கனும். அந்த ஜிமிக்கி ஆட்டத்துக்கு மயங்கி நிக்கிற ஆதி உன்ன எப்டி, அணு அணுவா ரசிப்பானோ அந்த ஆதி மாதிரி பாத்துக்குவேன்… போதுமா?”
வெட்கப் புன்னையை இப்பொழுது மறைக்க தான் தேவை இல்லையே, வற்றாத புன்னகையுடன், “நான் போன் கட் பண்ண போறேன்”
“பதில் சொல்லல மான்குட்டி நீ…” ஆதியின் குரலில் சோகமும் ஏக்கமும் போட்டி போட்டு நின்றது.
“அப்பா சம்மதிக்கலனா என்ன அப்டியே விட்டுட மாட்டீங்கல்ல?” தந்தையும் வேண்டும் நீயும் வேண்டும் ஆனால் இருவரில் எவரையும் இழக்க நான் தயாராக இல்லை என்ற அவள் சிந்தனையை புரிந்துகொண்டான். அவள் தன்னிடம் கேட்கும் முதல் ஆசை, நிறைவேற்றாமல் விடுவானா இந்த காதலன்?
“நீயே வேணாம்னு சொன்னாலும் இனி பின் வாங்க மாட்டேன் மேகா…” கண்ணீரோடு சிரிப்பும் வந்து அவளை இதமாக்கியது.
“சரி தூங்கு நாளைக்கு பேசலாம்” அவளிடம் மேலும் பேசினால் சென்று கையேடு அழைத்து வந்துவிடுவோமோ என்ற பயத்தில் ஆதி கூற, அவளுக்கும் இந்த இனிய வார்த்தைகளோடு உறங்க மனம் ஆசைகொள்ள, “பை” என்று இணைப்பை துண்டித்தனர்.
சொப்பனமா என்ற சந்தேகத்தில் தன்னையே கிள்ளி பார்க்க தோன்றியது ஆதிக்கு, அப்படி ஒரு அழகிய தருணம் அது.
மணிமேகலையின் சிந்தனையில் ஆழ்ந்து இருந்தவனின் மூளையில் காரணமே இல்லாமல் உதய்யின் வார்த்தைகள் வந்து ஒலித்தது, ‘முட்டி மோதி தான் வழிய கண்டுபுடிக்க முடியும், ஒரே வழி மட்டும் இல்ல பல வழிகள் இருக்கு, முன்னாடி காயம் தந்த பழைய வழிகள் இப்ப நம்பிக்கையும் தரும். அவசரப்படாம நிதானமா யோசி‘
*********************
“ஆதவா எத்தனை தடவ தான்டா நானும் உன்கிட்ட கேட்டுட்டேஇருக்குறது… அம்மாக்காகசரின்னுசொல்லுப்பா. ரொம்ப நல்ல இடம். பொண்ணு லட்சணமா அழகா இருக்கா, நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுடா”
“கேக்க எல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனா நான் இன்னும் பொண்ணபாக்கலையே”
மகன் இழுக்க, “காலைல தான அப்பா உனக்கு போட்டோ அனுப்புனாங்க”
“அப்டியா? லைன்ல இருங்க பாக்கறேன்”
பார்ப்பது போல் நடித்தவன், “சாரி மம்மி எனக்கு புடிக்கல பொண்ண”
“இப்டியே பேசிட்டே இரு உனக்கு பல்லி மாதிரி ஒரு பொண்ணு தான் வர போகுது. உங்க அப்பா சொல்றதையும் கேக்குறது இல்ல, நான் சொல்றதையும் கேக்குறது இல்ல. சரி மனசுல யாரையோ நினைச்சு தான் இப்டி பேசுறேன்னு கேட்டா அதுக்கும் பதில் இல்ல… என்ன தான்டா நாங்க எடுத்துக்க உன்ன. காலம் முழுசும் கல்யாணம் பண்ணாமல் சாமியாரா இருக்க போறியா?”
“இருந்துட்டா போச்சு” கூலாக மகன் பதில் கூற கோவத்தில் ஆதவனின் அன்னை இணைப்பைத் துண்டித்திருந்தார்.
ஆனால் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் நிம்மதியாக கைப்பேசியை பாக்கெட்டில் வைத்தவன் மார்புக்குக் குறுக்கே கைகளைக் காட்டிக்கொண்டே தனக்கு முன்னாள் இருக்கும் அவன் மனம் கவர்ந்த சஹானாவைப் பார்த்துச் சிரிப்புடன் நின்றான்.
கடந்த அரை மணி நேரமாக இதுவே நடக்கின்றது. கல்லூரி இறுதி ஆண்டில் இருக்கும் சஹானாவிற்கு வகுப்புகள் அதிகம் இல்லாது போக, மற்ற நேரங்களில் கல்லூரி வளாகத்தில் தோழிகள், தோழர்களுடன் ஏதேனும் மரத்தின் நிழல் பார்த்து அரட்டை அடிப்பதே வழக்கமாகி இருந்தது.
இன்றும் அது போலவே அமர்ந்திருக்க ஒருவன், “சஹானா யார் அது உன்னையே அப்ப இருந்து பாத்துட்டேஇருக்காங்க?” சஹானா திரும்பிப் பார்க்க அங்குக் கண்களில் கூலர்ஸ் அணிந்து தன்னுடைய வாகனத்தில் சாய்ந்து நின்றிருந்தான் ஆதவன்.
அவனைப் பார்த்து ஆசிரியம் பயம் எல்லாம் வந்தது, இத்தனை நாட்கள் கல்லூரிக்குப் போகும் பொழுதும் வரும் பொழுதும் அவன் வண்டியைத் தூரத்திலிருந்தே கண்டுகொள்வாள், அப்பொழுதும் சகோதரன் கண்ணில் சிக்கி விடக் கூடாதென்று பயம் இருக்கும் ஆனால் அவன் அமைதி காப்பது ஒரு வித நிம்மதியைத் தந்தாலும் இன்று இவ்வளவு தைரியமாகக் கல்லூரி உள்ளே வரை அவளைக் காணப் பிடிவாதத்துடன் இருப்பதைப் பார்த்து பயம் மேலும் அதிகரித்தது.
“ம்ம்ம் தெரியும். நான் போய் பேசிட்டுவர்றேன்”
பயத்துடன் சஹானா பேச, “ஏன் இப்டிபயப்புடுற? ஏதாவது பிரச்சனையா?” என்றான் ஒரு நண்பன்.
“இல்ல இல்ல… அப்டிலாம் இல்ல. நான் வந்துர்றேன்”
ஆதவனை நோக்கி தயக்கத்துடன் நடந்தவள் அவன் அருகே சென்று நிற்காமல் சற்று தொலைவில் நின்று அவன் பேசுவதற்காகக் காத்திருந்தாள். ஆதவனுக்கு அவள் இவ்வளவு தொலைவில் நிற்பது பிடிக்காமல் அவனே சென்று அவள் கையை பிடித்து அருகில் இழுக்க, பதறி அவன் கையை உதறியவள் பயத்துடன் ஆதவனின் விழிகளை ஏறிட்டாள்.
அவள் பயம் அவனுக்கு இன்னும் வேதனையைக் கொடுக்க, “ப்ச் பயப்புடாத சஹானா நீயா இங்கையேநின்னுக்கோ, இல்ல காலேஜ் ஸ்கூலுன்னு பாக்க மாட்டேன். ஒட்டி உரசி நின்னுடுவேன்”
பயத்துடன் அவன் பிடித்து நிறுத்திய அதே இடத்தில் வந்து நின்றவள் மண்ணை பார்த்தே நிற்க, அவளிடம் பேசாமல் தானும் அப்படியே பல நிமிடங்கள் ஆதவன் நிற்க, அவளும் பேசவில்லை அவனும் பேச முயலவில்லை.
இருவரின் அமைதியைக் கலைத்தது ஆதவனின் அன்னை குரல் அழைப்பு தான். அன்னையிடம் பேசிவிட்டு அதே சிரிப்போடு ஆதவன் நிற்க, தான் அணிந்திருந்த துப்பட்டாவைக் கிழிக்கும் நிலைக்குக் கொண்டு சென்றிருந்தாள் சஹானா.
“இப்டி எல்லாம் காலேஜ்ல உள்ள வராதீங்க”
“ம்ம்ம்ம்”
“டெய்லி காலேஜ் வெளிய நிக்காதிங்க”
சிரித்துக்கொண்டே அதற்கும், “ம்ம்ம்ம்” என்றான்.
“இப்டி எல்லாம் கைய புடிச்சு இழுக்காதீங்க… ப்ளீஸ்”
“ம்ம்ம்ம்”
“என்ன தேடி வராதீங்க, அன்னைக்கு வீட்டுலபேசுன மாதிரி இன்னொரு தடவ பேசாதீங்க” அடுக்கடுக்காக கட்டளைகளைப்பிறப்பித்தவளைச் சிறிதும் சட்டை செய்யவில்லை ஆதவன்.
“ம்ம்ம்ம்”
“வீட்டுல பாக்குற பொண்ண ஓகே சொல்லிடுங்க” பொறுக்க மாட்டாமல் கேள்வி கேட்டாள்.
“ம்ம்ம் சரி” விழுக்கென அவனைத் தலை தூக்கிப் பார்த்தவளுக்குக் குறும்பாகச் சிரித்துக்கொண்டிருந்த ஆதவனின் முகம் அவள் மனதை வாட்டியது.
“வண்டில ஏறி ஒக்காருரியா?” என்றான். துரிதமாகத் தலையை மாட்டவே மாட்டேன் என்று உறுதியாக ஆட்டினாள்.
“இங்க பாரு பேபி டால், உன்ன தூக்கி உள்ள ஒக்கார வைக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது, உன் மனசு, உன் பீலிங்ஸ் ஹுர்ட் ஆக கூடாதுன்னு தான் அமைதியா இருக்கேன். வர்றியா?” விழிகளில் நீருடன் ஏறி வண்டியில் அமர்ந்தவள் நண்பர்களுக்கு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு அவனைச் சுத்தமாகத் தவிர்த்தாள்.
ஆதவனின் மெர்சிடிஸ் மேபேச் எஸ்-கிளாஸ் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியில் செல்ல சஹானாவிற்குக் கண்களில் அடக்க முடியாமல் நீர் வந்துகொண்டே இருந்தது. என்ன தான் சகோதரனின் நண்பன் என்றாலும் ஆதவன் சஹானாவிற்கு எப்பொழுதுமே தூரத்தில் நிற்பவன் மட்டுமே.
இன்று அவனையே நம்பி இவ்வளவு தூரம் தனியாகச் செல்வது பயமாக இருந்தாலும், தந்தையாய் வளர்த்த சகோதரனுக்குத் துரோகம் செய்யும் எண்ணமும் வந்து பெண்ணை மேலும் அழுகை வைத்தது. அதைக் கவனித்தும் பொறுமையாய் வாகனத்தைச் செலுத்தியவன் தனியாருக்குச் சொந்தமான ஒரு பிரைவேட்பீச் இருக்கும் இடத்தில் காரை நிறுத்தி அவள் பக்கம் திரும்பினான்.
“இப்ப எதுக்கு அழகுற சஹானா?” இல்லை எனத் தலையை ஆட்டினாலும் அவனை மட்டும் பார்க்க மறுத்தது அவள் கண்கள்.
“என்ன பாத்து அத சொல்லு” என்றான். அவன் கண்ணில் இருந்த காதலையும் ஏக்கத்தையும் பார்த்த பேதைக்கு அவனிடம் எதற்கும் மறுத்துப் பேச மனம் வரவில்லை.
“என்ன காலேஜ்ல விட்டுடுங்க… ப்ளீஸ். எனக்கு மூச்சு முட்டுது” அவளின் கண்ணீரும் உதாசீனமும் பன்னிரண்டு வருடங்களாய் காதலை வளர்த்தவனுக்கு சாட்டையால் அடித்தது போன்ற வலி.
“இப்ப எதுக்குடி இப்டி அழகுற? உன்ன என்ன அசிங்கமா பாத்தேனா இல்ல தப்பா தான் பேசுனேனா? ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்லடி பதினஞ்சு வருஷம் மேல பைத்தியமா லவ் பண்ணிருக்கேன். இத்தனை வருஷம் தள்ளி இருந்துட்டேன், இப்பவேற ஒருத்தன் உன்ன வந்து சொந்தம் கொண்டாடுறத வேடிக்கை எல்லாம் பாக்க முடியாது.
ஒருத்தன் பைத்தியம் மாதிரி பகல், நைட்-னு உன் பின்னாடியே சுத்திட்டுஇருக்கான்னுஓவரா தான் துள்ளிட்டு இருக்க. இதுல கண்ணீர் வேற, என்னமோ இவ மேல கண்ட இடத்துல கை வச்ச மாதிரி துடிக்கிறா. புடிக்கலைனா புடிக்கலடா முட்டா பயலே-னு சொல்லிட்டு போடி. என்னமோ ரேபிஸ்ட் மாதிரி பக்கத்துல வரப்ப எல்லாம் இந்த துடி துடிக்கிற”
கோவத்தில் அவன் கத்தி பேசிய வார்த்தைகள், அந்த வாகனதுள்ளே இன்னும் அதிக ஒலியுடன் ஒலித்தது. வேகமாகக் காரை விட்டு இறங்கி அவள் பக்க கதவைத் திறந்தவன் அவள் கையை பிடித்து இழுத்து கண்ணில் பட்ட முதல் ஆட்டோவை நிறுத்தி அவள் கல்லூரியில் விடுமாறு கூறி சஹானாவைத் திரும்பியும் பார்க்காமல் கடற்கரையை நோக்கிச் சென்றுவிட்டான்.
மனம் ஆறவே இல்லை ஆதவனுக்கு, எத்தனை ஆசையாய் தினமும் அவளைக் காணச் செல்கிறான், ஆசையாய்ப் பார்க்காவிடினும் பயத்துடன் பார்க்காமலாவது இருக்கலாம் அல்லவா? எத்தனை பெண்களைக் கடந்து வந்தும் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் பார்த்த அவளின் முகம் அல்லாவா முதலில் நினைவில் வந்து நிற்கும்.
அந்த ஒரு காரணத்திற்கே இத்தனை ஆண்டுகள் எந்த பெண்ணையும் மனதில் நினைக்காமல் வீட்டில் அத்தனை பேச்சுகளையும் வாங்கி சிரிப்புடன் நிற்கிறான், இது எதுவும் அவளுக்குத் தெரியவில்லை, அவனின் ஒரு விறல் சீண்டல் தான் அவளை எரித்தது போல் துடிக்கிறாள்…
என்னென்னமோ எண்ணங்கள் மனதில் ஓட வலித்த இதயத்தைச் சமன்படுத்தி காரை நோக்கிச் சென்றவனுக்கு ஆசிரியமாக இருந்தது வாகனத்தினுள் அமர்ந்து தலையை டாஸ்போர்டில்வைத்துப் படுத்திருந்த சஹானாவைப் பார்த்ததும்.
சில பல மூச்சுகளை இழுத்து விட்டவன் கடல் காற்றில் கலைத்திருந்த சிகையைப் பல முறை சரி செய்து அமைதியாய் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தான். ஆதவன் உள்ளே வந்து அமர்ந்த சத்தம் கேட்டவுடன் படுத்திருந்தவள் எழுந்து முகத்தை துடைத்து வெளியில் பார்க்க தனக்கு முன்னே இருந்த கண்ணாடியை திருப்பி அவள் முகம் பார்த்தான்.
அந்த பால் மேனியில் மூக்கும் கண்களும் அழுது அழுது சிவந்திருந்தது. முகத்தை வாரி அவள் அழுகையை நிறுத்த பேராசை எழுந்தாலும் அவளே பேசட்டும் என்று அமைதியாய் இருந்தான். சில நிமிடங்களில் சஹானாவின் அழுகை குறைய ஆதவன் பக்கம் திரும்பினாள்.
அவனோ எல்லையற்ற அந்த கடலை வெறித்து பார்த்திருந்தான், “சாத்தியமா உங்கள நான் எப்பயும் தப்பா நினைச்சது இல்ல, அந்த எண்ணம் இருந்தா அன்னைக்கு உங்களுக்கு கால் பண்ணிருக்க மாட்டேன், உங்ககூட தனியா வண்டிலயும் வந்துருக்க மாட்டேன்” ஊமையாய் அமர்ந்திருந்தான் அவள் பேச்சை கேட்டுக்கொண்டு.
“எனக்கு என் அண்ணன் தான் எல்லாமே” அந்த ஒரு வாக்கியத்தை அவளால் தெளிவாக பேச முடியவில்லை குரல் தழுதழுத்தது.
“உங்க கூட அண்ணன் உறவை தவிர வேற மாதிரி நினைச்சு பேசுறது நான் என் அண்ணனுக்கு பண்ற தப்பு இல்லையா?” விசும்பி விசும்பி அவள் கேள்வி கேட்க அவளுடைய எண்ணம் இப்பொழுது தான் அவனுக்கு முழுதாய் பிடிபட்டது, ஆனாலும் முதல் முறை மனம் திறந்து பேசுபவளை பேச விட்டான்.
“உங்க மேல விருப்பம் இருக்கா, விருப்பம் இல்லையா? இதெல்லாம் சரி வருமா, நீங்க பண்றது சரியா? எதுவும் எனக்கு சுத்தமா தெரியல. குழப்பம் மட்டும் தான் இருக்கு. அண்ணாக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவான். இதையும் தாண்டி உங்களுக்கும் எங்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் இருக்குற தூரம். நீங்க பணம், புகழ், பேரோட வாழுறவங்க. அது எதுவுமே எங்ககிட்ட இல்ல. எந்த விதத்துலயும் நான் உங்களுக்கு சரி வரமாட்டேன்… ப்ளீஸ் விட்ருங்க நீங்களும் கஷ்டப்படுத்தி என்னையும் கஷ்டப்படுத்தாதீங்க உங்கள கெஞ்சி கேட்டுக்குறேன்”
கெஞ்சும் விழிகளோடு கையையும் இணைத்து கூப்பி வேண்டினாள். கெஞ்சி நின்ற அவள் கைகளை பற்றியவன் அவளை நெருங்கி அமர, திரளாக வழிந்த கண்ணீர் கூட சஹானாவிற்கு சட்டென நின்றது. மிரட்சியுடன் தன்னை பார்த்த விழிகளை பார்த்து,
“காசு பணம் புகழ் தான் வேணும்னா இத்தனை வருஷம் உன்னையே நினைச்சு காத்துட்டு இருக்க மாட்டேன், இந்நேரம் என் அம்மா பாத்த பொண்ணுங்கள்ல இருவது முப்பது பேர கல்யாணம் பண்ணிருப்பேன்”
சிறு புன்னகையுடன் மேலும் தொடர்ந்தான், “ஆனா எனக்கோ என் வீட்டுல இருக்க யாருக்கும் அது தேவையில்லை பேபி டால். என் மனசுக்கு புடிச்ச, என்ன புரிஞ்சு எனக்காக வாழுற ஒரு பொண்ண தான் தேடிட்டு இருக்கோம். இப்ப கூட என் அம்மா முன்னாடி உன்ன கூட்டிட்டு போய் நிறுத்தி, இவ தான் என் பொண்டாட்டின்னு சொன்னா அடுத்த முகுர்த்தத்துலயே சிரிச்ச முகத்தோட நம்ம கல்யாணம் நடக்கும். சோ இப்ப உன்னோட ஒரு பிரச்சனை முடிஞ்சது… அடுத்..”
ஆதவன் மேலும் பேச போக, “இல்ல முடியல” அவசரமாய் இடை வந்தாள்.
“சரி சொல்லு”
“கல்யாணம் ஆகுற வர நல்லா தான் இருக்கும், அதுக்கு அப்றம் நீங்க வந்து போகுற மாதிரி எங்க வீடு பெருசு இல்ல, பத்துக்கு பத்து பெட் ரூம் தான். உங்க அம்மா அப்பா வந்தா எங்க வீட்டுல சோபா இருக்காது, ச்சார் தான் இருக்கும்… என் அண்ணனால உங்க சபை நிறைய சீர் செய்ய முடியாது… அப்டி கம்மியா செஞ்சா என் அண்ணனை எல்லாரும் இளக்காரமா பாப்பாங்க. வேணாம்… என்னால என் அண்ணன் எங்கையும் அசிங்க பட கூடாது”
“இப்ப யாரு உன் அண்ணன் கிட்ட சீர் கேட்டது?”
“பேசுறதுக்கு இப்ப எல்லாமே நல்லா இருக்கும்… ஏன் நாங்க ஏழைங்கனு பரிதாபப்பட்டு சீர் வேணாம்னு சொல்றிங்களா?”
அவளை கோவமாக பார்த்தவன், “என் மேல சாத்தியமா சொல்றேன், ‘உனக்கு வர்ற பொண்ணுகிட்ட நாம ஒரு பொட்டு சீர் கேக்க கூடாது ஆதவா’-னு என் அம்மா சொல்லுவாங்க” இன்னும் அவனை நம்பாமல் அவன் கைகளுக்குள் கட்டுண்டு கிடந்த தன் கையை சஹானா உருவினாள்.
உடனே கைபேசியை எடுத்து அவன் அன்னைக்கு அழைத்தவன் அதை ஸ்பீக்கரில் போட்டான், “மா… எனக்கு வர்ற பொண்ணுகிட்ட எவ்ளோ வரதட்சணை கேப்பிங்க?”
“ஒரு ரூபா வாங்க வேணாம்னு எத்தனை தடவ சொல்ல, கட் பண்ணு உன் மேல செம்ம கோவத்துல இருக்கேன்” அவர் அழைப்பை துண்டிக்க இங்கு சஹானாவை ஆதவன் பார்க்க அவளோ தலையை திருப்பிக்கொண்டாள்.
“ம்ம் இப்ப அடுத்ததுக்கு வருவோம். ஆனா அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லு… நான் இந்நேரம் உன்னோட அண்ணா பிரண்ட்டா இல்லாம இருந்தா நீ என்ன லவ் பன்னிருப்பியா? லவ் கூட வேணாம் புடிச்சிருக்கா என்ன?” அவன் கண்களை பார்த்து விழிகளில் நீருடன், “தெரியல” என்றாள் சின்ன குரலில்.
அவள் பதிலில் சிரித்தவன், “இல்லனு சொல்லலையே அதுவே போதும். உன் அண்ணன்னுக்கு நான் உன் காலேஜ் முன்னாடி நிக்கிறது எல்லாம் தெரியும்”
“என்னது” அழுகை சென்று வாயை பிளந்து ஆச்சிரியம் அடைந்தாள்.
“ஆமா அவன் என்ன பாத்துட்டு தான் இருக்கான் இந்த ஒரு வாரம். ஏற்கனவே ஸ்கூல் படிக்கிறப்பயே அவனுக்கு என் மேல டவுட் இருந்துச்சு இந்த வாரம் கன்பார்ம் பண்ணிருப்பான்”
“அண்ணா ரொம்ப கஷ்ட பட்டுருக்கும்ல? ஏன் உங்க பிரண்ட்டுக்கு துரோகம் பண்றீங்க?”
“டால், உன் அண்ணன பத்தி எனக்கு நல்லாவே தெரியும், அவனுக்கு கோவமோ வருத்தமோ இருந்தா இன்னேரம் என்ன உண்டு இல்லைனு பண்ணிருப்பான். அப்றம் லாஸ்ட்… உன் வீடு குட்டி, உன் ரூம் குட்டின்னு பேசுனியே, ரூம் குட்டியா இருந்தா தானே உன்ன என் பக்கத்துலயே வச்சிட்டு ஒட்டி நிக்க முடியும்…?”
முகத்தை சுருக்கி, “இப்டி எல்லாம் பேசாதீங்க ப்ளீஸ்…” பலவீனமாய் இருந்த பெண்ணை ஒரே இழுவையில் அவள் இடையை பிடித்து தூக்கி தனக்கு மடியில் கிடத்தினான்,
மிரண்டு விழித்த அவள் விழிகளை பார்த்து, “இங்க பாருடி… உனக்கு இந்த ஆதவன் மட்டும் தான். வேற ஒருத்தன் பக்கத்துல கூட வர விட மாட்டேன், அத நல்லா மனசுல பதிய வச்சுக்கோ. அப்றம் இப்டி முகத்தை சுளிக்கிறது, தியாகம் பண்ற மாதிரி பேசுறது எல்லாம் பண்ணிட்டு இருந்தன்னு வை…”
ஆணின் கைகளில் இருந்து விடுபட போராடி கொண்டிந்தவளை வாகாக இன்னும் நெருக்கமாக அமர வைத்து, “ஏற்கனவே எப்படா-னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் தூக்கிட்டு போய் இந்த சங்கு கழுத்துல தாலி கட்டிடுவேன்”
அவள் கண்களை பார்த்து சொன்னவனின் விழிகள் அவள் கழுத்துக்கு மோகத்துடன் இடம் மாற யோசிக்காமல் மெதுவாக குனிந்து அவனை உருத்திக்கொண்டிருந்த அந்த மெல்லிய தங்க சங்கிலியின் மேல் அழுத்தமாய் ஒரு முத்தம் பதித்தான். ஆதவனின் நெருக்கத்தில் திக்குமுக்காடி போனவள் அவன் இதழ் ஸ்பரிசத்தில் அவளையே அறியாமல் உடல் விறைக்க அடுத்த நொடி மொத்தமும் தளர்வுற்றது அவள் உடல்.
அவள் உடல்மொழியை படித்தவன் அப்படியே அவள் நெற்றி முட்டி, “பைத்தியமா இருக்கேன் சஹானா உன் மேல, இத்தனை நாள் விட்டு வச்சது எல்லாம் மொத்தமா குடுக்கணும் போல இருக்கு. ப்ளீஸ் டீ எத்தனை வருஷம் வேணாலும் டைம் எடுத்துக்கோ ஆனா என்கிட்ட வந்துடு… வந்துடுவல…?” பிறைநுதலில் இதழ் பதித்து ஏக்கத்தோடு கேட்டான்.
அவன் காதலிலும், இடையில் இருந்த அவன் விரல்களாலும் மொத்தமும் மயங்கி அவள் பேச்சை கேட்காமலே தலை தானாக சரியென ஆடியது.