செந்தமிழ் அரசனுக்கு சிறு வயதில் இருந்தே எதிலும் பொறுமையாய் இருக்கும் உதய் மீது சொல்ல முடியாது பிரியம். தன்னுடைய உடன் பிறந்த சகோதரியின் பிள்ளைகள் மீது இருப்பதாய் விட, உதய் மீது பாசம் அதிகம் வைத்திருப்பார்.
உதய்க்கும் ஈஸ்வரன் மீது எந்த காலத்திலும் பாசம் இருந்தது இல்லை. அவர் பேச்சில் இருக்கும் ஊசி வார்த்தைகளும் ஒளிவு மறைவான பேச்சும் எதிலும் சரியாய் அமைதியாய் இருக்க நினைக்கும் உதய்க்கு புடிக்காமலே போய்விட்டது. அவனது விருப்பம் அறிந்து காயத்திரி கூட எதுவும் பேசியதில்லை.
ஈஸ்வரனுக்கு நேர் எதிர் செந்தமிழரசன். அவர்கள் குடும்பம் செல்வாக்கில் சொல்லும்படி இல்லை என்றாலும் எந்த நாளும் சகோதரியின் வீட்டிற்கு ஒரு வேளை உணவை மீறி இருக்க மாட்டார். தன்னுடைய சொந்த முயற்சியை வைத்தே அமெரிக்காவில் இருந்த மிக புகழ்பெற்ற தி யூனிவர்சிட்டி ஆப் டெக்சாஸ்-ல் தமிழ் பேராசிரியராக வேலை செய்யும் அளவிற்கு உயர்த்திருந்தார்.
டெக்சாஸ் சென்றால் மாமனின் இல்லத்தில் ஒரு விசிட் போடாமல் உதய் வந்தது இல்லை. காரணம், செந்தமிழரசனும் மணிமேகலையும் தான். உதய் அதிகம் பேசுவதும் இவரிடம் தான், அதுவும் நாட்டுநடப்பை பற்றி மட்டுமே இருக்கும். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் உதய்யின் பணிவு அந்த தமிழ் ஆசிரியரை அவன் பக்கம் சாய்த்திருந்தது. இப்பொழுது கூட உதய் கேட்ட கேள்வியில் பேச்சற்று இருந்த அவர் மனதினுள் அத்தனை அத்தனை மகிழ்ச்சி.
மகளை தான் பாதுகாப்பது போல் பத்து மடங்கு அவனிடம் பாதுகாப்பாய் இருப்பாள் என்பது உறுதி. இந்த எண்ணம் அவர் மனதில் பல நாட்களாகவே இருந்ததும் தான் ஆனால் வசதியை எண்ணி அந்த எண்ணத்தை கிடப்பில் போட்டுவிட்டார். இன்று அவனே வந்து கேட்டதும் தயக்கம் காற்றில் பறந்தது.
“உனக்கு பொண்ணு குடுக்கலானா நான் தான் உதய் முட்டால். உன்ன விட என் பொண்ண வேற யார் நல்லா பாத்துக்குவா சொல்லு… என் பொண்ணு அத்ரிஷ்டசாலி தான்” திரும்பி அவர் மகளை பார்க்க, நெருடலோடு உதய்யும் மணிமேகலையை தான் பார்த்தான்.
தன்னை கண்ணீர் திரையிட்ட விழிகளோடு பார்த்தவள் மான் விழிகள் கேட்ட கேள்வியில் மாண்டான் ஆடவன். ஒரு சொட்டு நீர் அவள் கண்களிடமிருந்து விடுதலை பெற்று கன்னத்தில் சொட்டு போட சட்டென உதய் முகத்தை திருப்பிக்கொண்டான்.
அவள் கண்ணீரை கவனிக்காத செந்தமிழரசன் மனைவியிடம் அந்த இன்ப செய்தியை கூற சென்றிருந்தார். மணிமேகலையின் அன்னைக்கும் அத்தனை மகிழ்ச்சி, “ரொம்ப சந்தோசம் பா…” என்றார் முகம் எல்லாம் சிரிப்பாக.
“மாமா ஆனா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” தயக்கம் உதய்யிடம்.
“தாராளமா டைம் எடுத்துக்கோ உதய், ஆனா ஒரு மாசத்துல நல்ல நாள் பாத்து நிச்சயம் மட்டும் வச்சுக்கலாம். வீட்டுல வந்து நான் நாளைக்கு பேசுறேன்” – செந்தமிழரசன்
“ஏன் நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணனும்?” உஷ்ணமாக வந்தது விஷ்ணுவின் வார்த்தை.
நேற்று அருந்திய போதையிலிருந்து வந்த பரிசான தலைவலி, கூடவே ஹரி நிலையை எண்ணி பரிதவிப்பு என மொத்தம் இருந்த கோவத்தை உதய் மீது இறக்கினான்.
“தோ இப்ப எல்லாரும் இங்க வந்துடுவாங்க. இங்கையே பேசி முடிஞ்சா இன்னைக்கே கல்யாணத்த பண்ணிடுங்க. தம்பிய அங்குட்டு ஜெயில்கு அனுப்பி வச்சிட்டு இந்த பக்கம் நீ கல்யாணம் பண்ணிக்கோ” – விஷ்ணு
“விஷ்ணு என்ன பேச்சு இது?” – செந்தமிழரசன்
“என்ன மன்னிச்சிடுங்க மாமா. நான் பொறுப்பு இல்லாம ஊதாரித்தனமா இருக்கறவன் தான் ஆனா இவன மாதிரி ஒன்னும் கல் நெஞ்சுக்காரன் இல்ல. தப்பே பண்ணாத தம்பி அங்க ஜெயில்ல இருக்கறப்ப இங்க சந்தோசமா கல்யாணத்துக்கு சம்மந்தம் பேசிட்டு இருக்குறவன மாதிரி என்னால சாத்தியமா இருக்க முடியல, ஏதோ நெருப்புல நிக்கிற மாதிரி இருக்கு” கண்ணீர் சில அவன் கன்னங்களில் உருண்டோடியது.
“உதய் என்ன பண்ணாலும் அதுல ஒரு காரணம் இருக்கும் விஷ்ணு. கொஞ்சம் பொறுமையா பேசு. உங்க மேல அதிகம் பாசம் வச்சிருக்குறவன் நிச்சயம் யோசிக்காம எதையும் பண்ண மாட்டான்” – செந்தமிழரசன்
“நான் செஞ்ச தப்பையே மறுபடியும் நீங்க செஞ்சிடாதிங்க மாமா. உங்கள விட அதிகம் அவனை நம்புனேன். எங்க அவன்கிட்ட கேளுங்க ஹரி மேல தப்பில்லன்னு அவனுக்கு தெரியாதானு?”
செந்தமிழரசன் உதய்யை திரும்பி பார்த்தார், அவருக்கு பதில் கூறாமல் பார்வையை அவரிடம் திருப்பவில்லை உதய். சகோதரர்களை திருத்த தான் இந்த கடின முயற்சி என்று கூறிவிடலாம் தான் ஆனால் சில நிமிடங்களுக்கு முன் அவரிடம் மணிமேகலையின் மனதை உடைத்து எழுப்பிய தவறான கேள்விக்கு தண்டனையாய் மௌனம் சாதித்தான்.
“அவன் பதில் சொல்ல மாட்டான். எப்படி சொல்லுவான்? தப்பு தான் இவன் மேல இருக்கே… யாருக்கு தெரியும் இவனே இதெல்லாம் செட் பண்ணிருப்பான்”
“அளந்து பேசு விஷ்ணு…” நளினியின் ஆத்திர வார்த்தைகள் விஷ்ணுவை நிறுத்தியது. அழைத்து அவனே… உதய் செய்தது பற்றி தந்தையிடம் கூறி உடனே இங்கு வருமாறு கேட்டுக்கொண்டவன் நளினியை எதிர்பார்க்கவில்லை.
“எப்பையுமே என் வாய அடக்கிறதுலையே இருங்க” பின்னால் வந்த தந்தையையும், சித்தப்பாவையும் பார்த்தவன் அவர்கள் அருகில் சென்றான்,
“எல்லாமே நீங்க குடுக்குற இடம் தான். சாத்தியமா சொல்றேன் ப்பா நான் ஆக்சிடென்ட் நாங்க பண்ணல, அது இவனுக்கும் தெரிஞ்சும் ஹரியை அங்கையே விட்டுட்டு வந்துருகுறான். யாருக்கு தெரியும் ஒருவேளை எங்க கதையை முடிச்சிட்டு மொத்த கம்பெனியையும் இவனே சுருட்டிக்க முடிவு பண்ணிட்டான் போல” – விஷ்ணுவின் வார்த்தைகள் எல்லையை கடந்து சென்றன.
“ஷட் அப் விஷ்ணு… ஹரிய உள்ள வச்ச தெரிஞ்ச எனக்கு உன்னை மறுபடியும் உள்ள அனுப்ப ரொம்ப நேரம் ஆகாது” சகோதரனிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவன் அருகில் வந்த உதய்யின் தந்தை ரகுநந்தன் உதய்யின் கன்னத்தில் ஓங்கி அரைத்திருந்தார்.
கீழே பேச்சு சத்தம் கேட்டு வந்த மணிமேகலையிலிருந்து, அவள் தந்தை, நளினி, ஜெயநந்தன், விஷ்ணு வரை அத்தனை மனிதர்களும் அதிர்ச்சியில் பேச்சற்று நின்றனர். தந்தை அரைந்ததில் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் நின்றவன் வார்த்தை பேசவில்லை… பார்வையை தரையில் தாழ்த்தவும் இல்லை. ஏமாற்றம் பெருகிக்கொண்டே சென்றது.
“என்னடா பேசுற? தோளுக்கு மேல வந்த பையன்-னு ஒரு நாளும் உன்ன கண்டிச்சதும் இல்லை, அரட்டினதும் இல்லை. அதுக்காக நீ என்ன செஞ்சாலும் அமைதியா இருப்பேன்னு மட்டும் நினைக்க வேணாம் உதய். ஈஸ்வரன் விசியத்துலையே நீ பண்ணது இப்ப வர என்னால வெளிய தல காட்ட முடியல” – ரகுநந்தன்
“அவர் பண்ண தப்பு உங்க கண்ணுல இப்ப வர தெரியலையா பா? அவர் பண்ண தப்ப சொல்லி காமிச்ச என் மேல தான் உங்களுக்கு ஏமாற்றம்” – உதய்
“இந்த ஊர்ல இருக்குற எல்லா ஆபிசர்ஸையும் வாங்க முடிஞ்சவன், ரெண்டு பத்தரத்த ரெடி பண்ண எவ்ளோ நேரம் ஆகிட போகுது?”
ஈஸ்வரன் மேல் போலியான பழியை போட்டது நிச்சயம் இவன் தான் என்றது விஷ்ணுவின் வார்த்தை, “நல்லா கேளுங்கப்பா அந்த காச இவன் வேற எங்கையாவது பதுக்கி வச்சிருப்பான்” குத்தீட்டியாய் குத்தியது விஷ்ணுவின் வார்த்தைகள் உதய்யின் நெஞ்சில்.
“என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா விஷ்ணு? அவன் உன் அண்ணன்” நளினி விஷ்ணுவை கண்டித்தார்.
“அண்ணனா?” சிரித்தான் ஏளனமாய், “என்னைக்காவது எனக்கு அப்டி ஆசையா நடந்துருக்கானா?” – விஷ்ணு
“ஆசையா சிரிச்சு பேசுனா தான் உன் மேல பாசம் இருக்கறதா அர்த்தமா விஷ்ணு? ஒவ்வொருத்தருக்கும் தன்னோட அன்ப வெளிகாட்டுறதுக்கு ஒவ்வொரு வழி இருக்கும்” – செந்தமிழரசன்
“வேணாம் மாமா… எனக்கு இவனும் வேணாம், இவன் பாசமும் வேணா. இனிமே நான் இவன் இருக்குற ஆபீஸ் பக்கமே வர மாட்டேன்” விட்டேதரியாக பேசுனான் விஷ்ணு.
“நீ ஏன் டா போகணும்? வாழ்க்கைல எல்லாமே ரொம்ப ஈஸியா கிடைச்சிடுச்சுல… அந்த மிதப்பு இவன்கிட்ட. இன்னும் ஒரு மணி நேரத்துல ஹரி வீட்டுல இருப்பான். அதுக்கு முன்னாடி ஒரு முன்னாடி இங்கையே ஒரு முக்கியமான விசியம் பேசி முடிக்கணும்”
உதய் பக்கம் திரும்பி, “மொத்த கம்பெனியையும் தலைல தூக்கி நிறுத்துற மாதிரி எண்ணம் தானே உனக்கு? அறுவது வயசானாலும் இந்த மாதிரி இன்னும் பத்து ஆபீஸ் வேலைய கூட என்னால பாக்க முடியும் டா. இனிமேலும் உன்ன அசட்டையா நம்பி என்னால ஏமாற முடியாது. அபீசியலா இன்னும் ஒரு மணி நேரத்துல எனக்கு நீயா இந்த சி.ஈ.ஓ போஸ்ட்ல இருந்து போகுறேன்னு மெயில் போடணும். உனக்கு ஒரு மாசம் எல்லாம் நோட்டீஸ் பீரியட் குடுக்க முடியாது. ஒரே வாரம். அப்றம் பொறுப்பையும் நான் பாத்துக்குறேன்… இன்னைல இருந்து ஏழாவது நாள் என் கைக்கு கம்பெனி கணக்கு வேணும்”
ரகுநந்தன் பேசியவை அத்தனையையும் கேட்ட நளினியின் கண்களிலிருந்து நிற்காமல் நீர் வடிந்தது, “நீங்க பண்றது ரொம்ப பெரிய தப்பு மாமா”
நளினியை திரும்பி முறைத்த ரகுநந்தன், “இத்தனை நாள் எப்படி வீட்டுக்கு வராம இருந்தானோ அதே மாதிரி இனியும் இருக்க சொல்லு”
உதய்யை இயன்றமட்டும் முறைத்தவர் வேகமாக வெளியேறிவிட அவர் பின்னே விஷ்ணுவும் திருப்தியுடன் சென்றான். ஜெயநந்தனுக்கு சகோதரனை எதிர்த்து பேச முடியவில்லை ஆனால் அவர் முடிவும் பிடிக்கவுமில்லை. அழுதுகொண்டிருந்த நளினியை அழைத்து சென்றுவிட்டார்.
செல்லும் உறவுகளை பார்த்தவாறே இறுகி போய் நின்றிருந்த உதய் தோளில் ஆறுதலாய் பதிந்தது செந்தமிழரசன் கைகள், “உதய்…”
அவர் பக்கம் திரும்பி வம்படியாக புன்னகையை வரவழைத்தவன், “ரொம்ப நாள் கழிச்சு எந்த விதமான ப்ரஷர் இல்லாம இருக்க போறேன்… நிம்மதியா இருக்கு மாமா” எப்படி தான் இவ்வளவு வேதனையையும் சிரிப்பில் மறைகிறான் என்று வியந்தார் அவர்.
“வரேன் மாமா… வரேன் அத்தை” வெளியில் வந்தவன் ஜெயனின் பார்வையை தவிர்த்து, “ஹரியை வெளிய எடுக்க ஏற்பாடு பண்ணுங்க ஜெயன். அப்பாக்கு தேவையில்லாம அலைச்சல் வேணாம்” மீண்டும் அலுவலகம் தான் சென்றான். பிறகு இதுவல்லவா அவனுடைய வலியையும் கோபத்தையும் உள்வாங்கிக்கொள்ளும் ஒரே இடம்.
*******************
“நான் உங்கள மீட் பண்ணனும்… இப்பயே” அடுத்த குறுந்செய்தி இடத்தை குறித்திருந்தது.
“எதுக்கு இப்ப இவளுக்கு இவ்ளோ அவசரம்?” வியப்பாக மணிமேகலை அனுப்பிய செய்தியை பார்த்தவன் சகோதரி பக்கம் திரும்பி, “சஹானா சமச்சிட்டியாடா?”
“வேணாம்டா சமைக்காத. உன் அண்ணிய பாக்க போறோம் வா” – ஆதி “நீ போ ண்ணா, நான் எதுக்கு?” – சஹானா
“அட வாடா” கையேடு சகோதரியை அழைத்துக்கொண்டு மணிமேகலை அழைத்த இடத்திற்கு அரை மணி நேரத்தில் சென்றுவிட்டான்.
கடையை பார்த்ததும், “ண்ணா இந்த கடைய எப்படி கண்டு புடிச்ச?”
“நான் எங்கடா கண்டு புடிச்சேன். உன் அண்ணி தான் புதுசு புதுசா போய் சாப்டுட்டு சுத்துறா” – ஆதி
“அப்ப இனிமேல் வீக் எண்ட்ல நீ சமையல் கத்துக்கோ” – சஹானா
“அத பண்ண சொல்லி அவ ஆர்டர் போட்டு ரொம்ப நாள் ஆச்சு. என் தங்கச்சி சொல்லி குடுத்தா தாராளமா கத்துக்கலாம்”
சகோதரியுடன் பேசிக்கொண்டே உள்ளே சென்று அமர்ந்தான் ஆதி. இரண்டடுக்கு கட்டிடமதில் கீழ் தளம் பார்சல், கிட்சேன் மற்றும் பில் கவுண்டர் மட்டுமே இருந்தது. அதுவே விசாலமாக இருக்க, மேல் தளம் டைனிங் பண்ண பிரத்தேகமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒரு டேபிலிருந்து மற்றொரு டேபிள் இருக்கும் இடத்திற்கும் நல்ல இடைவேளை விட்டு ஆங்காங்கே அழகிய பூ செடிகளுடன் மேற்கூரை பாதியளவு மட்டுமே இருந்தது காற்றிற்கு அழகாய் வழி தந்தது.
“ஆம்பியன்ஸ் நல்லா இருக்கு ண்ணா” – சஹானா
“ஆமாடா…” என்றவன் வாசலை பார்த்து, “நம்மள வர சொல்லிட்டு இவ என்ன இன்னும் கானம்?” வாய்விட்டு புலம்பி அவள் எண்ணிற்கு அழைத்தான். அழைப்பு சென்றது ஆனால் பதில் இல்லை.
“வருவாங்க ண்ணா வெயிட் பண்ணு” ஆதியும் சரி என்று விட்டு விட்டான்.
“பைக் இன்னுமா ண்ணா வேலை முடியாம இருக்கு?” அவன் வண்டியை விற்றது இன்னும் சகோதரிக்கு தெரியாது.
“ஆமாடா கொஞ்சம் வேலை அதிகம். பொறுமையா வரட்டும்” சந்தேகம் வந்தது அவன் பதிலில்
எப்பொழுதும் சிறு வேலைக்கு கொடுத்தாலும் வண்டியை சென்று ஒரு நாளில் இரண்டு முறை பார்த்து வந்துவிடுவான்.
“உண்மையா வண்டிய வேலைக்கு தான் விட்ருக்கியா ண்ணா?” சகோதரனின் கண்களை பார்த்து சஹானா கேட்க, “சொல்றேண்டா…” உள்ளே சென்ற குரலில் நிறுத்திவிட்டான்.
கைபேசியில் வந்த குறுந்செய்தியை பார்த்தவன், “வந்துட்டா” என்று வாசலை நோக்கி திரும்ப வாடிய முகத்தோடு கண்கள், மூக்கு சிவக்க வந்து நின்றாள் அவன் மான்குட்டி.
எப்பொழுதும் சிரித்த முகத்தோடு வருபவள் வதனம் இன்று வாட்டம் காட்டியது. ஆனால் அது சஹானாவை பார்க்கும் வரை தான், சஹானாவை பார்த்ததும் மகிழ்ச்சி ரேகை படர சிறு பிள்ளை போல் வந்து ஆதியை சட்டைசெய்யாமல் சஹானா அருகில் சென்று அமர்ந்துகொண்டாள்.
“ஹாய் நீங்க வருவீங்கன்னு நான் எக்ஸ்பக்ட் பண்ணவே இல்ல. தெறிஞ்சிருந்தா பெரிய சாக்லேட் ஒன்னு வாங்கி வந்துருப்பேன். இருங்க கீழ சாக்லேட் பாத்தேன் வாங்கிட்டு வர்றேன்”
எழுந்து செல்ல போனவளை ஆதி கை பிடித்தது, “ஒக்காரு மேகா” சஹானா அருகில் அமர்த்தினான்.
“அப்ப நீங்க போய் வாங்கிட்டு வரிங்களா நான் சஹானா கூட பேசிட்டு இருக்கேன்” தன்னுடைய பையை திறந்து ஐநூறு ரூபாய் தாளை அவன் முன் நீட்டினாள். மணிமேகலையை சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்த சஹானாவிற்கு தன் சகோதரனின் வாழ்க்கை நிச்சயம் அழகாய் வண்ண மயமாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லாமல் இருந்தது.
“போறப்ப வாங்கிக்கலாம் மேகா” சற்று முன் வந்து அவள் மூக்கை தொட்டவன், “எதுக்கு இது சிவந்துருக்கு? அழுதியா?” ஆதி கேட்ட கேள்வியில் அவள் முகம் சட்டென வாடிவிட தலையை குனிந்துகொண்டாள் கண்ணீரை மறைக்க.
“அண்ணி என்ன ஆச்சு?” ஆதிக்கு மணிமேகலையின் கண்ணீர் தெரியவில்லை ஆனால் அவள் அருகில் அமர்ந்திருந்த சஹானாவிற்கு தெரிந்தது.
“மான்குட்டி…” அவள் கண்ணீரை காண சகிக்காதவன் வலியோடு அவளை அழைத்தான்.
தலையை இல்லை என்று ஆட்டி தன் கையை பற்றியிருந்த சஹானாவை பார்த்தவள், “அண்ணி சொல்லாதீங்க.. எனக்கு ஏஜ் ஆன மாதிரி இருக்கு” மூக்கை உறிஞ்சிக்கொண்டு அவள் பேசிய அழகில் ஆதி மீண்டும் சொக்கி தான் போனான். சஹானாவிற்குமே அவள் பேசியது சிரிப்பு வந்தது.
“எதுக்கு அழுதனு கேட்டேன்” – ஆதி
“உதய் மாமாக்கு கால் பண்ணி நேத்து நம்ம லவ் பண்ணத பத்தி சொன்னேன்” – மணிமேகலை
“அது தான் பூமி பூஜை போட்ட அன்னைக்கே அவன் பாத்துட்டானே அப்றம் ஏன் நீ வேற அவன்கிட்ட தனியா சொல்லனும்?” – ஆதி
முகத்தை தொங்கபோட்டவள், “வீட்டுல அப்பா ஏதோ டாக்டர் மாப்பிள்ளை பாத்துட்டாங்க” ஆதிக்கும் அது அதிர்ச்சி தகவல் தான்.
சஹானா ஆதியை பயத்தோடு பார்க்க கண்களை மூடி ஆறுதல் கூறியவன், “தப்பு பண்ணவங்க தான் தலை குனியனும் மேகா… நீ தப்பு பன்னிருந்தா அப்டியே இரு”
கண்களை துடைத்து அவன் வார்த்தைகளில் தலையை தூக்கி ஆதியை பார்த்தாள் மணிமேகலை, “உன் அப்பாகிட்ட வந்து பேசவா?”
“இல்ல பயமா இருக்கு… அதுக்கு தான் மாமாவை அப்பாகிட்ட பேச சொன்னேன். சரின்னு தான் சொன்னாங்க” – மணிமேகலை
இலகுவானான் ஆதி, நண்பனின் தலையீட்டை கேட்டு, “அப்றம் என்ன விடு. அவன் பாத்துக்குவான்”
மணிமேகலைக்கு கோவம் வந்தது, “என்ன பாத்துக்குவாங்க? அவங்க பாத்துகுடத்தை தான் நான் இன்னைக்கு காலைல பாத்தேனே. அவன் பண்றது சுத்த ப்ராடு வேலை… பேர கேட்டாலே எரிச்சலா வருது”
அவளை விட ஆதிக்கு அதிக கோவம் வந்தது நண்பனை பற்றி பேசியதும், “ஏய் பாத்து பேசுடி. பொது இடம்ன்ற காரணத்துனால தான் அமைதியா இருக்கேன் இல்லனா பல்ல ஒடச்சிருப்பேன். பேர கேட்டா எரிச்சலா வருதாம்ல…” பற்களை கடித்து பேசியவனை பார்த்து அழுகை பீறிட்டு வந்தது பெண்ணுக்கு.
ஆதியின் கண்கள் கோவத்தில் சிவந்திருந்தது, “இங்க பாருடி… அவன மதிச்சு மரியாதையா பேசுறதா இருந்தா என் கூட இரு. இல்லையா நீ என் வாழ்க்கைல இருந்ததா கூட மறந்துட்டு நான் போய்கிட்டே இருப்பேன். எனக்கு எல்லாரையும் விட அவன் தான் முக்கியம்” ஆதியின் அதிரடி கோவத்தில் மணிமேகலையின் கன்னம் நனைந்தது.
“அண்ணா நீ பேசுறது ரொம்ப தப்பு. சொல்றத பொறுமையா சொல்லு. ஒருத்தருக்காக இன்னொருத்தர இப்டி தூக்கி ஏறியிறது ரொம்ப தப்பு. என்ன நடந்துச்சுனு தெளிவா கேட்டு அப்றம் பேசு” சகோதரி பேசினாலும் ஆதியின் மனம் ஆறவில்லை மணிமேகலையின் பேச்சில், அமைதியாகிவிட்டான்… வேண்டும் என்றால் பேசட்டும் என்று.
“என்ன நடந்துருந்தாலும் அவ பேசுறது ரொம்ப தப்புடா” – ஆதி
சஹானா ஆதியை கண்களால் கெஞ்ச, பிறகு மணிமேகலை பக்கம் திரும்பி, “என்ன நடந்துச்சு அண்ணி?”
விசும்பல் குறையவில்லை சில நிமிடங்கள் பொறுத்து பார்த்த ஆதி அவள் பேசப்போவதில்லை என்று கோவமாக எழ, “என்ன அவங்களுக்கு கல்யாணம் பண்ணிக்க கேட்டாங்க” மணிமேகலையின் வார்த்தையில் ஆதி அதிர்ச்சியாகிவிட அப்டியே மீண்டும் அமர்ந்தான்.
சஹானாவிற்குமே அதிர்ச்சி தான், உதையிடமிருந்து அவள் கூட இதை எதிர்பார்க்கவில்லை. ஆதியின் முகத்திலிருந்த கோவம் சென்று, முகத்தை மூடி அழுத அவன் மான்குட்டியை பார்த்து கனவு பிறந்தது. இருவருக்கும் இடைவேளை கொடுக்க எண்ணி ஒரு அழைப்பு வருவதாக கூறி எழுந்திட, சகோதரி இருந்த இடத்தில் சென்று ஆதி அமர்ந்தான்.
நிமிடங்கள் செல்ல அதிர்ச்சி கோவமாகியது… சகோதரர்கள் மீது தான் கை வைத்ததால் இவனும் சரிக்கு சரியாய் தன்னுடைய காதலில் கை வைத்திருக்கிறான் என்ற கோவம் அதிகமாக பற்களை கடித்து, “அறிவில்ல அவனுக்கு? நீ என்ன லவ் பண்றத தெரிஞ்சும் இப்டி பன்றான்?”
“அத தான் நானும் சொன்னேன்…” – மணிமேகலை
“இத தானே நீ முதல சொல்லணும்… வந்ததும் திட்டுனா என்ன நினைக்க தோணும்? இரு இன்னைக்கு போய் எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டு வர்றேன்… அவன் முகத்தை கிழிச்சு தொங்க விடல நான் ஆதி இல்ல”
ஆவேசமாக கையிலிருந்த காப்பை முறுக்கி எழுந்த ஆதியை பிடித்து அமர வைத்தாள், “கோவப் படாதீங்க… மாமா டைம் கேட்ருக்காங்க அப்பாட்ட… அதுக்குள்ள நானே அப்பாகிட்ட பேசுறேன்”