“டேய் இந்த டை கட்டி விடு டா” – விஷ்ணு
“எனக்கும் அப்ப கட்டி விடுவியா?” – ஹரி
“எனக்கு தெரிஞ்சா நான் ஏண்டா உன்ட்ட கேக்க போறேன்?” – விஷ்ணு
புருவத்தை உயர்த்தி மேலும் கீழும் விஷ்ணுவை அளவெடுத்தான் ஹரி, “டேய் அந்த பின்னாடி இருக்க முடி கொஞ்சம் மேல தூக்கி இருக்க மாதிரி இல்ல?”
தலையை குனிந்து பார்த்தவன் கைகளால் சரி செய்து பார்க்க மீண்டும் அது பழைய நிலையை அடைந்தது, “ஜெல் தடவுடா அப்ப தான் நிக்கும்” என்று ஒரு டப்பாவை அவன் முன் வைத்து தன்னை கண்ணாடியில் பார்க்க ஆரமித்தான்.
“டேய் இந்த வைட் ஷர்ட் போடவா இல்ல லைட் ப்ளூ ஷர்ட் போடவா?” கண்ணாடி முன் இரு சட்டையையும் தன் மேல் வைத்து கேட்டான் ஹரி,
“ஏண்டா லைட் ப்ளூ ப்லேசர்க்கு லைட் கலர்லையா சட்டை போடுவ? அறிவாளி… டார்க் கலர் போடுடா. பேஷன் சென்ஸ் இல்லாத பையன்” முணுமுணுத்தான் விஷ்ணு.
“லுங்கிய கட்டிட்டு ரோட்டுல டான்ஸ் ஆடுற நாயி நீ என்ன இப்புடி எல்லாம் பேசுற அளவு ஆகிட்டேன் நான். நீ சொன்னதுக்காகவே இத தான்டா போடுவேன். மொத காலர ஒழுங்கா எடுத்து விடுடா அப்றம் என்ன சொல்லு”
விஷ்ணுவின் காலர்ரை சரி செய்த ஹரி அவன் அணிந்து இருந்த கோட் சூட்டின் பாக்கெட்டில் இருந்த அந்த ‘பாக்கெட் ஸ்கோயர்’ என்னும் துணியை எடுத்தவன் விஷ்ணு பார்க்கும் முன் அமைதியாக எடுக்க சரியாக அவன் கையை பிடித்தான் விஷ்ணு, “என்ன பண்றீங்க ஹரி அவர்களே”
“ஹிஹி…”அசடு வழிந்தவன், “உன் சூட்க்கு இது செட் ஆகலடா அதன் வேற கர்சீப் வச்சு விடறேன்” – ஹரி
“எவ்ளோ அக்கறை என் தம்பிக்கு என் மேல. ஆனா பரவால்ல, பிச்சைக்காரன் போடுற மாதிரி இருந்தா கூட நான் இதையே வச்சுக்குறேன்” மீண்டும் அந்த பாக்கெட் ஸ்கோயரை சரி செய்த விஷ்ணு, “டேய் நல்ல பேர்ப்யூம் போன வாரம் வாங்குனதா சொன்னல அத கொஞ்சம் குடேன்”
“பிச்சகாரனுக்கு எதுக்குடா சென்ட், போதும் போ” ஹரி அவன் ப்லேசரை எடுத்து அணிந்து அவனை முன்னும் பின்னும் கண்ணாடியில் ஒரு முறை பார்த்தான்.
“உங்க ரெண்டு பேரோட தொல்லைக்கு வரவர அளவே இல்லாம போச்சு, ஏன்டா இவ்ளோ அலப்பறை ஒரு போர்டு மீட்டிங் தான… அதுக்கு எதுக்கு என்னமோ உங்க கல்யாணத்துக்கு கெளம்புற மாதிரி ரெடி ஆகிட்டு இருக்கீங்க” கையில் சில அழகு சாதான பொருட்களுடன் ஹரியின் அறைக்குள் நுழைந்தாள் திவ்யா.
“ஐயோ இதுக்கே இவிங்க பண்ற அலப்பறை தாங்கல இதுல இவங்க கல்யாணமா? என்னால நெனச்சு கூட பாக்க முடியல, நான்லா வேற நாட்டுக்கு ஓடிருவேன் கரெக்டா டைம்கு தான் வருவேன்”
விஷ்ணுவிடம் ஒரு சென்ட் பாட்டிலை வைத்து, “இந்தா நீ கேட்ட பேர்ப்யூம். ஆனா பொண்ணுங்க பேர்ப்யூம போடுற ஒரே பையன் நீ தான்டா” என்றாள் கட்டிலில் பல்லவியின் அருகில் அமர்ந்தபடி.
“எங்களை இப்புடி திட்டுறீங்கல்ல உங்க அன்னே எப்டி தெரியுமா போர்டு மீட்டிங்க்கு போவான் அப்புடியே…” சட்டென தான் பேச வந்ததை நினைத்தவன் அமைதியானான் விஷ்ணு, “எப்டி ஹீரோ மாதிரியா?” என்றாள் பல்லவி ஒரு நக்கல் சிரிப்புடன்.
‘ஆம்’ என்று கூற தோன்றிய ஆசையை ஒதுக்கி வைத்தவன் இல்லை என்று தலையை அசைத்தான். விஷ்ணுவிற்கு எப்பொழுதும் முன்னோடி அவன் சகோதரன் தான். தோற்றத்திலும் சரி, தொழிலும் சரி. ஆனால் அவர்களுக்குள் இருந்த அந்த இடைவெளி சகோதரன் மேல் இருந்த பாசத்தை வெளியில் காட்ட விடாமல் தடுத்தது.
“இப்ப கூட கீழ பொய் பாரு எப்புடி வருவான்னு. சும்மா நடக்குற ஒரு மீட்டிங்கே கோட் இல்லாம வர மாட்டான் இதுல இன்வெஸ்டர்ஸ் மீட்டிங்கு எப்புடி வருவான்? அவன் முன்னாடி நாங்க எதுலயும் சலச்சு இருக்க கூடாது. அது மட்டும் இல்லாம இது எங்களோட பிரஸ்ட் போர்டு மீட்டிங் கெத்தா போய் நிக்கணும்”
ஹரியை பார்த்தவன், “என்னடா சொல்றது சரி தான” ஆமோதிப்பதாக தலை அசைத்தான் ஹரி.
“சரி கோட் சூட் ஓகே இந்த மேக்கப் செட் எதுக்கு கேட்ட?”
பல்லவி ஹரியை பார்த்து கேட்க அவன் தன்னுடைய அணைத்து பற்களையும் காட்டியவன், “அங்க இருக்க எல்லா பொண்ணுங்களும் நல்லா இருக்குடா அது தான்”
நீ எல்லாம் திருந்தவே மாட்ட என்று பார்வை பார்த்து விட்டு, “தம்பி அதுக்கு பசங்க போடுற கிரீம் எல்லாம் போட்டுக்கலாம்ல எதுக்கு என்னோடது?”
“பாப்பு இந்த அளவு பளிச்சுனு அது இருக்க மாட்டிக்கிதுடா, சரி பேசாம வந்து ரெண்டு பவுடர் போட்டு விடு நேரம் ஆச்சு சாப்பிட போகணும்” இருவரும் சில பல சேட்டைகளை செய்து முடித்து கீழே வந்த பொழுது உதய் தன்னுடைய வழக்கமான பார்மல் ஷர்ட் பாண்ட் மட்டுமே அணிந்து தன்னுடைய கைபேசியில் ஏதோ ஒன்றை மும்முரமாக பார்த்து கொண்டு இருந்தான். அமைதியாக அவனுக்கு சற்று தள்ளியே நால்வரும் அமர்ந்தனர்.
“ஏண்டா இவன் மீட்டிங்கு வரலையா?” விஷ்ணு ஹரியின் காதில் கிசுகிசுக்க, “எனக்கு எப்புடிடா தெரியும் நா என்ன அவன் கொடுக்கா?” கூறினான் ஹரி.
“எனக்கு என்னமோ டௌட்டா இருக்கு. இவன் போட்ருக்க டிரஸ் பாத்தா வேற எங்கயோ போற மாதிரி இருக்கு”
“டேய் விஷ்ணு என்னடா இம்புட்டு அழகா இருக்க” அவன் சித்தி கண்கள் மினுமினுக்க அவனை பார்க்க வந்து அவனை நெட்டி முறித்தார்.
“சித்தி உங்க பிள்ளை பொறப்புலயே அழகு. என்ன… இத்தன நாலா மறச்சு வச்சிருந்தேன்” ஹரியை பார்த்தவன் மலர்ந்த முகத்துடன், “டேய் இன்னைக்கு ஒரு போட்டோ ஷூட் போறோம் மாஸா போட்டோ எடுத்து எல்லா சோசியல் மீடியாலயும் போடுறோம்”
“அம்மா உன் புள்ள பக்கத்துல ஒருத்தன் இருக்கேன்” ஹரி நியாபக படுத்த, “போடா நீ என்னடா சட்டை போட்ருக்க கோடு கோடா நல்லாவே இல்ல” பார்த்தவுடன் தோன்றியதை மறைக்காமல் கூறினார் அன்னை.
ஆனால் உண்மையில் இருவரும் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தனர். ‘மறக்காம ரெண்டு பேருக்கும் வந்த ஒடனே சுத்தி போடணும்’ என்று மனதில் நினைத்தார்.
கையில் ஸ்டைலாக வாட்ச், புதிதாக கோட் சூட், எப்பொழுதும் போல் இல்லாமல் அளவாய் திருத்தி இருந்த முடியும், தாடியும் அவர்களை மேலும் அழகாய் காட்டியது.
“சித்தி லேட் ஆகுமா” கண்களை தன்னுடைய கைபேசியில் இருந்து அகற்றாமல் கேட்டான் உதய்.
“ஒரு ரெண்டு நிமிஷம் பா” சமையலறை உள்ளே சென்று வந்தவர் அனைவர்க்கும் சாப்பாடு பரிமாற நால்வரும் தங்களுக்குள் பேசி கொண்டிருந்தனர், அந்த நேரம் உதய்யின் அலைபேசி அடிக்க அதில் ஆதவன், “சொல்லு டா”
“ஆபீஸ் போய்டியா?”
“இல்ல இனி தா. எதுவும் பிரச்னையா?”
“இல்ல டா உன் மாமாவ இன்னைக்கு பாத்தேன் ரொம்ப சந்தோசமா இருக்காரு என்னமோ பெருசா பிளான் பன்னிருபாரு-னு தோணுது பாத்து இரு”
கண்களை சுற்றி அவன் சித்தியையும் சகோதரர்கள் சகோதரிகளும் இவன் புறம் கவனம் செலுத்த வில்லை என்று உறுதி செய்த பின்னர், “டேய் என்னதா இருந்தாலும் அவரு என்னோட மாமா டா கொஞ்சம் சந்தோசமா இருக்கட்டும் தப்பு இல்ல. அவர் என்ன பண்ணனும்னு நினைக்கிறாரோ அத பண்ணட்டும் எதுவும் தெரியிறதுக்கு முன்னாடி என் மூளையை தேவை இல்லாம நான் யூஸ் பண்ண விரும்பல. இருக்க ஆயிரத்தெட்டு பிரச்னைல இதுவேற” சலித்து கொண்டவன் வேகவேகமாக உணவை அருந்த ஆரமித்தான்.
“டேய் ரொம்ப நல்லவன் மாதிரி பேசாத நீ யாருனு எனக்கு தெரியும். சரி இன்னைக்கு மீட்டிங்கு என்ன பண்ணி கன்வின்ஸ் பண்ண போற அவங்கள”
“முடிவு எல்லாம் பண்ணி உனக்கு அது சம்மந்தமான தகவல் எல்லாம் அனுப்பிருக்கேன். நீ நான் சொல்றப்ப வந்தா போதும். எனக்கு அங்க போகவே புடிக்கல துரோகிக கூட எனக்கு என்னடா வேலைனு தோணுது”
“ரொம்ப சலிச்சுக்காத. நீ கேட்ட அந்த ரெண்டுபேரோட டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி ஜெயன் கிட்ட குடுத்துருக்கேன்”
சற்று நொடிகள் அமைதி காத்த ஆதவன் திடீரென, “ஆமா என்னமோ புதுசா ஒரு பொண்ண வேலைக்கு சேந்துருக்குன்னு கேள்வி பட்டேன். நல்லா இருக்குமா அந்த பொண்ணு?” இவனுக்கு மட்டும் எப்டி தான் எல்லாமே இவ்ளோ வேகமா தெரியாதோ…
“ம்ம்ம் நல்லா தான் இருக்கும்” உதய்யின் பதிலில் ஆசிரியத்தின் உச்சிக்கே சென்றான் ஆதவன் மேலும் அவனை சற்று பேச வைக்க, “அது என்ன நல்லா தான்… ஏன் கண்ணு மூக்கு எதுவும் சரி இல்லையோ?” ஒரு நக்கல் சிரிப்புடன் ஆதவன் கேட்க.
அவள் முகம் ஒரு முறை கண் முன் வந்து சென்றது. அந்த முகத்தில் என்ன குறை கூற முடியும்? குண்டு குண்டு கண்கள் அதற்கு குடை பிடித்தார் போல் கரிய புருவங்கள், வைரம் போல் கூர் மூக்கு, செதுக்கிய அளவெடுத்த இதழ்கள், பளிங்கு சிலை போல் பளபளக்கும் கன்னங்கள். மாநிறத்தை விட சற்று சிகப்பாக இருப்பாள். கொள்ளை அழகு என்றெல்லாம் இல்லை ஆனால் கண்களை கவரும் வண்ணம் அழகியே.
தன்னை கடந்து செல்லும் பெண்களை ஒரு பார்வைக்கு மேல் பார்க்காதவன் உதய் மாதவன் என்றெல்லாம் கூற முடியாது, பெண்களை ஒரு பார்வை பார்க்க ஆண் உண்டோ? ஆனால் அவன் பார்வையில் எந்த விதமான பிசுறும் இருக்காது, ஒரு பார்வைக்கு மேல் போகாத மனம் அவளிடம் சற்று முரண் பிடித்தது. வினோதம் தான் ஆனாலும் அவளை முதல் பார்வையுடன் விட மனம் விரும்பவில்லை கடந்த சில நாட்களாக. அவள் செல்லும் திசையில் கண் தானாக செல்கின்றது. உரிமையுடன் அவனிடம் பேசும் முதல் பெண். புடிக்காமல் போகுமா என்ன?
“இல்லடா எல்லாமே நல்லா தான் இருக்கு ஆனா அவ பாக்குற….” சட்டென நிறுத்தியவன் எதிரில் இருக்கும் அவன் குடும்பத்தை மறந்து விட்டதை நினைத்து தன்னையே கடித்தான் மனதில், “என்னடா பாக்குற….???” தெளிவாக தெரிந்தது ஆதவனின் விளையாட்டு. அதில் முதல் முதலில் இன்று விழுந்திருந்தான் உதய்.
வந்த புன்னகையை மறைத்தவன், “லைன்ல ஜெயன் வரான் நான் அப்றம் பேசுறேன்” கூறி அணைப்பை துண்டித்தான்.
ஆதவன் கைபேசியை ஒரு புன்னகையுடன் பார்த்து இருந்தான், “மச்சா நீ சிரிக்கிறது இங்க வரைக்கும் எனக்கு தெரியுதுடா”
அந்த பக்கம் “ஒரு பொண்ணு கிட்ட இப்புடி சிரிச்சு நீ பேசுனா கூட நான் கவலை பட மாட்டேண்டா. வந்து தின்னு” ஆதவனின் தாயார் அவர் வருத்தத்தை கூற எதுவும் பேசாமல் சாப்பிட சென்றான்.
“இன்னும் ஒரு இட்லி வைக்கவா பா?” உதய்யின் சித்தி கேட்க, “சித்தி இட்லி வேணாம் எனக்கு ஒரு தோசை ஊத்தி குடுக்குறீங்களா?”
அறையில் இருந்த அத்தனை கண்களும் அவனை தான் நோக்கின. இருக்காதா பின்ன? வைத்த உணவை உண்பவன், வாயை திறந்து தன்னுடைய விருப்பு வெறுப்பை ஒரு முறை கூட காட்டாதவன் இன்று இவ்வாறு கேட்கும் பொழுது உறைந்தனர் அனைவரும்.
அவரிடம் இருந்து பதில் வராமல் இருக்க, “இல்ல சித்தி வேணா பசி போயிருச்சு” என்று எழ இறந்தவனின் கையை அழுத்தி அமர வைத்தவர்,
“ரெண்டு நிமிஷம் பா, வந்தர்ரேன்” ஒரு சிறு சிரிப்புடன் சென்றவர் சமையல் அறையில் ஆழ்ந்த யோசனையில் இருந்தார்,
‘எப்டி இதனை நாள் அவனுக்கு புடிச்சது எதுன்னு கூட நான் பாக்காம விட்டுட்டேன். வீட்டுல இருக்க எல்லாரோட அசைவையும் கவனிக்கிற நான் என்னோட இன்னொரு புள்ளைய பத்தி கொஞ்சம் கூட கவலை படாம இருந்துருக்கேனே. அக்கா இருந்திருந்தா இன்னேரம் உதய இப்புடி விட்ருக்க மாட்டாங்கள?’ புலம்பியவாறே சுட சுட நெய் தோசையை அரை முழுவதும் மணக்க மணக்க எடுத்து வந்தார்.
“வேற ஏதாச்சும் வேணுமா பா?” அவர்r கேள்வியில் தன் மேல் சில நிமிடங்களாக இருந்த மற்ற நான்கு ஜோடி கண்களை உணர்ந்தவன், “இல்ல போதும் சித்தி”
அவன் உண்டு கொண்டிருக்கும் பொழுதே திவ்யாவின் மேல் சென்ற அவன் பார்வையை கண்டவள், ‘அண்ணா எதுக்கு நம்மள பாக்குறாரு? இந்த தடி மாடுங்க ஏதாச்சு பண்ணி மாட்டி என்னையும் போட்டு விட்டுட்டாங்களோ?’
அவன் தன்னுடைய பாக்கெட்டில் இருந்த ஒரு கார்டுடை மேஜையில் வைத்து, “இதுல இருக்க அட்ரஸ் போய் பாரு” புரியாமல் விழித்தவள் அதை எடுத்து பார்த்து அதிர்ந்து போனாள்.
“எ… என்ன இது?” பயத்துடன் கேட்டாள் அவனை பார்த்து.
விளையாட்டில் அவள் ஆர்வத்தை அறிந்தவன் ஆதவனிடம் பேசி சிறந்த பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தான்.
அவள் கையில் இருந்த கார்டை பார்த்த ஹரி அதிர்ந்து விஷ்ணுவிடம் கூறினான், “காலேஜ் முடிஞ்சு உன்ன பிக்கப் அண்ட் ட்ராப் பண்ண டிரைவர் அரேஞ் பண்ணிருக்கேன். நாளைல இருந்து ப்ராக்டிஸ் போகலாம். புடிச்சத செய்றதுக்கு தைரியம் வேணும், மறைஞ்சு மறைஞ்சு விளையாட வேணாம்”
“அவளுக்கு எதுக்குப்பா விளையாட்டு எல்லாம் கல்யாணம் ஆகி போக போற எடத்துல இது எல்லாம் ஒதுக்குவாங்களா?”
“அங்க எப்டி இருக்குமோ எனக்கு தெரியாது சித்தி, ஆனா அவளுக்கு புடிச்சத நம்ம வீட்டுல ஆச்சும் அவ அனுபவிக்கனும். போய் விளையாடட்டும் சித்தி நடக்க போறத அப்றம் பாத்துக்கலாம்”
எழுந்து நின்றவன் ஹரியை பார்த்து, “ஏய் ஒழுங்கா இந்த கோட் சூட் எல்லாம் கழட்டி வச்சிட்டு வந்து சேருங்க. இத போட்டுட்டு வந்திங்க ஆபீஸ்குள்ள கால் வைக்க விட மாட்டேன்” உதய் சென்றதை உறுதி செய்த பின்பு திவ்யாவும் பல்லவியும் விழுந்து விழுந்து வயிற்றை புடித்து சிரிக்க ஆரமித்தனர்.
“இதுக்கு பருத்தி மூட்டை குடவுன்லேயே இருந்துருக்கலாமே ராசா” என்று பல்லவி சிரிக்க, பாவம் விஷ்ணு, “நாம போட்டோஷூட் போறோம்னு அவனுக்கு மூக்கு வேர்த்துருச்சு போல டா” என்றான் வருத்தமாக.
“கவலை படாதடா வீட்டுலயே ஒரு சூட் வச்சிட்டா போச்சு அதான் நமக்குன்னு ரெண்டு அடிமை இருக்குல” என்று வன்மத்துடன் ஹரி பல்லவியையும் திவ்யாவையும் பார்க்க அங்க சில நிமிடங்கள் ஒரு மினி போர் நிகழ்ந்தது. பிறகு என்ன? அவர்கள் பேசியது போல் ஒரு போட்டோ ஷூட் நடந்தேறியதே…