அல்லியூரில் நிச்சியத்திற்கு தேதி குறிக்க சென்றவர்கள் பூசாரியை பார்க்க ஒரு மணிநேரம் காத்திருக்க நேர்ந்தது.
நாச்சியார், “சந்திரா… நிச்சயம் இப்ப வச்சுகிட்டு, திருவிழா முடிந்தபிறகு கல்யாணம் வச்சிக்கலாம்… அப்படி நிச்சியத்தேதி இந்த பதினைந்து நாளுக்குள்ள வரலைனா திருவிழா முடிந்தவுடன் நிச்சியம் வச்சிக்கலாம் டா”… நீ என்ன சொல்லற சந்திரா.
அதற்கு சந்திரன், “நீங்க சொன்னா ஏதாவது காரணம் இருக்கும்… அதுவும் இல்லாம எந்த குறையும் இல்லாம நடக்கனும் ம்மா… பொருமையா பன்னலாம் எந்த அவசரமும் இல்ல”.
“சகுந்தலா, ஜெயா நீங்க என்ன ம்மா நினைக்கறீங்க”… “அத்தை நீ மீனாவுக்கும் கார்த்திக்கும் பாட்டி… இந்த குடும்பத்துக்கே பெரியவங்க… நீங்க என்னைக்குமே அவங்களுக்கு நல்லதைதான் நினைப்பீங்க, நீ என்ன சொன்னாலும் அதை செய்ய நாங்க இருக்கோம் என்றார் சகுந்தலா”… அதை ஆமோதஇக்கும் விதமாக ஜெயா, “நீங்களும் சாரதா அத்தையையும்விட வேறயார் அத்தை நம்மவீட்டு பிள்ளைகளுக்கு நல்லதை நினைப்பாங்க. அவங்க கல்யாணம் மட்டுமல்ல, உங்க பேரபசங்க மூனுபேரோட கல்யாணமும் உங்க பொறுப்பு”… இந்த விஷயத்த பத்தி நீங்க மனசை போட்டு குழப்பிககாம இருங்க அத்தை என்றவரின் கூற்றை மற்றவரும்ஆமோதித்தானர்.
“அப்பொழுது பூஜையை முடித்துவிட்டு வந்த பூசாரி அனைவரையும் உள்ளே அழைத்தார். அதில் பேச்சை பாதில் நிறுத்திவிட்டு அவரை பார்க்க அனைவரும் சென்றனர்”.
பூசாரி, “வணக்கங்க ம்மா… என்ன விஷயமா வந்திருக்கீங்க?… என்ன பாக்கனுங்க ம்மா?… எதை பற்றி பார்க்கனுங்கம்மா?”… சாரதா, “பூசாரி ஐயா”… “எங்க பேத்தி-பேரன் கல்யாண விசயமா நாள் குறிக்க வந்தோம்”… “அவங்க ரெண்டு பேரோட ஜாதகம் கொண்டு வந்தீங்களா ம்மா?”… கொண்டாந்திருங்க ஐயா… அத தாங்க, நான் ஜாதகத்தை கனித்து நாள் குறிச்சி தருகிறேன் என்றவரிடம் நாச்சியார், “ஐயா… திருவிழாக்கு முன்ன நிச்சியம் வச்சிக்கலாம் நினைக்கிறோம். அதுக்கு தோதா நாள் குறித்து தாங்க”.. கல்யாணம் திருவிழா முடிந்தபிறகு வச்சிக்கலாம்னு யோசனை, அதனால் கல்யாணம் தேதி எப்ப வந்தாலும் எங்களுக்கு சம்மதங்க தானுங்க ஐயா.
அதற்கு பூசாரி, “முதலில் நான் நிச்சியத்திற்கு தேதி குறிச்சி தருகிறேன் எனக்கூறியவர் அதற்கான வேலையை பார்த்தார்”.
சிறிது நேரம் ஜாதகத்தை கனித்து கொண்டு இருந்தவர், அதை முடித்து விட்டு அவர்களை அழைத்தார்.
பூசாரி நாச்சியாரிடம், “அம்மா… வர புதன் இல்லாம அடுத்த புதன் கிழமை நாள் நல்லா இருக்கு அப்ப நிச்சியத்தை வச்சிக்கலாம்”… அந்த வெள்ளி கம்பம் நடராங்க. அன்னையிலிருந்து பதினைந்து நாள் பேத்திய கம்பத்துக்கு தினமும் தண்ணீர் ஊற்ற சொல்லுங்க… ஜாதகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை…
“நிச்சியத்தப்ப சின்னசின்ன பிரச்சினை வரும், அதுவும் நல்லதுக்குதானு நினைச்சிங்கோங்க ம்மா”… வேற எந்த தடையும் இல்லை, எல்லாம் நல்லபடியாவே நடக்கும், நீங்க தயங்காம வேலைய ஆரம்பிங்க.
சந்திரன், “ஐயா பசங்க ஜாதகத்தையும் பாக்கனும்”… “கல்யாணம் எப்பநடக்கும்?… ஏதாவது பரிகாரம் பன்னனுமாங்க ஐயா”… நீங்க அவனுங்க ஜாதகத்தை கொடுங்க, பாத்து சொல்லறேன் எனக்கூறியவர் மூவரின் ஜாதகத்தையும் கனித்து கூறினார்.
அவர்களின் ஜாதகத்தை பார்த்தவர், “கூடிய சீக்கிரம் மூனு பேருக்கும் கல்யாணம் நடக்கும்… அதுக்கு முதல் படி உங்க பேத்தி கல்யாணம் தான்… இவங்க கல்யாணம் நீங்க எதிர்பார்க்காத மாதிரி நடக்கும்… சில பிரச்சினைகள் வரும், சில மர்மங்களுக்கு முடிச்சு அவிழும்”… உங்க குடும்பத்துக்கு வரபோற மருமகள்கள் உங்க அந்தஸ்துக்கு நிரகரானவங்களா இருக்கமாட்டார்கள் ம்மா… “ஆனா குடும்ப கெளரவத்தை காப்பாத்த மாதிரியா இருப்பாங்க” என்றவரிடம்…
[the_ad id=”6605″]
காயத்ரி, “நீங்க என்ன சொல்லவரீங்க சாமி?… நாங்க என்ன பன்னனும் சாமி?”… “நீங்க எந்த முயற்சியும் பன்ன வேண்டாம் ங்கம்மா… அவங்க கல்யாணம் தான நடக்கிறமாதிரியான சூழ்நிலை வரும் அப்ப நீங்க பன்னவேண்டிய ஒரே விஷயம் அந்த கல்யாணத்தை குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் தலைமையில் நடத்துவதுதான்”… அதை தவிர நீங்க எதுவும் பன்னவேண்டாம் ங்கம்மா.
சந்திரன், “பூசாரி நீங்க சொல்லறது மாதிரியே நாங்க பண்றோம்… அப்ப நாங்க வறோங்க ஐயா”… சரிங்க தம்பி மறுபடியும் பார்க்களாம் என்றவர்…
நாச்சியாரிடம் பூசாரி, “நாச்சியாம்மா… மரகதலிங்கத்திற்கு ஆபத்து வரபோகுது… அதை தடுக்க நீங்க உங்க போரங்க திருமணத்தை விதிப்படி நடத்துவதுதான் ஒரே வழி… உங்க வீட்டுக்கு வரபோற மருமகள்களாள் தான் சில உண்மைகள் வெளியே வரும்”. நீங்க மரகதலிங்கத்தை ரொம்பரொம்ப கவனமா பார்த்துக்கோங்க எனக்கூறி அனுப்பிவைத்தார்.
வெளியே வந்தவர்கள் முகத்தில் அப்படி ஒரு பயம் இருந்தது. அவர்களின் பயத்தை போங்க சாரதா, “இப்ப எதுக்கு எல்லாரும் இப்படி இருக்கீங்க?”… எப்பவும் இருக்கரைதை விட இனி இன்னும் கொஞ்சம் கவனமா இருக்கனும் சந்திரன்… இன்னையிலிருந்து மரகலிங்கத்தை வேறயிடத்தில் வைத்திடலாம் டா… இல்லைனா வேற ஏதாவது பன்னலாம்…
ஜெயா, “முதலில் பசங்ககிட்ட சொல்லி ஏதாவது பன்ன சொல்லலாம்… அவனுங்க ஏதாவது ஏற்பாடு பன்னுவானுங்க மாமா. நீங்க டென்ஷன் ஆகாம இருங்க”…
காயத்ரி, “நீங்க சொல்லறது தான் சரிக்கா… பசங்ககிட்ட சொன்னா, அவனுங்க பாத்துக்குவாங்க”… அப்புறம் ரொம்ப முக்கியமான விஷாம், கல்யாணத்தை பற்றி அவனுங்ககிட்ட யாரும் சொல்லவேண்டாம் நான் நினைக்கிறேன் அத்தை… அப்போது தான் அவனுங்க இதை பற்றி நினைக்காம தங்கச்சி கல்யாணத்தில் நிம்மதியா இருப்பானுங்க என்றவரை ஆதரித்தார் சகுந்தலா. நாச்சியாரும் அதையேதான் ஆமோதித்தார்.
வீட்டிற்கு வந்தவர்கள் சாமியறைக்கு சென்று கடவுளை வணங்கிவிட்டு முற்றத்தில் அமர்ந்திருந்தவர்களிடம் ஜெயா, “பாட்டி பூசாரி என்ன சொன்னார்… தேதி குறிச்சாச்சா பாட்டி” என்றவளிடம் சாரதா, “அடியே அவசரகுடுக்கை… பெருமையா கேளுடி பதில் சொல்லுவாங்க, உங்ககிட்ட சொல்லாம வேற யாருகிட்டடி சொல்லறது”… அதவிடுங்க பாட்டி பூசாரி என்னா சொன்னாங்கனு சொல்லுங்க பாட்டி.
நாச்சியார், “வர புதன் இல்லாம அடுத்த புதன் கிழமை நாள் நல்லா இருக்கு அப்ப நிச்சியம் வச்சிக்கலாம்னு சொன்னாங்க டீ”… கல்யாணத்தேதி மட்டும் பிறகு பாத்துக்கலாம்னு வந்தாச்சி… ஆமா இந்த வெற்றி வீட்டுக்கு வந்தானா இல்லையா டீ… இன்னும் இல்ல பாட்டி… பண்ணையில் ஏதோ முக்கியமான வேலையிருக்குனு சொன்னான், அதன் உமாகிட்ட சொல்லி சாப்பாடு கட்டி சுந்தரம் அண்ணாகிட்ட கொடுத்தனுப்பியாச்சி…
அப்புறம் பாட்டி நீங்க ரொம்பரொம்ப சந்தோசமான விஷயம் சொல்லுவீங்கனு உமாவும் மல்லியும் சேர்ந்து இனிப்பு பன்னியிருக்காங்க…
[the_ad id=”6605″]
“ஆமாம் நீ மட்டும் இங்கே தனியா இருக்க?… மத்தவங்க எல்லாம் எங்க?”… அவங்க எல்லாம் தோட்டத்தில் இருக்காங்க சித்தி… இவ்வளவு நேரமா வீட்டையே ஒரு வழிபன்னீட்டு இப்பத்தான் தோட்டத்திற்கு போனாங்க… விளையாட ஆள்கிடைத்ததும் போதும் இவளை கையிலையே பிடிக்க முடியவில்லை சித்தி.
“எங்க போனாலும் அவளுக்கு குட்டி வேணும்… பரவாயில்லை பசங்க ரொம்ப நல்ல வர்ஷாவை பார்த்துக்கிறாங்க பாட்டி”… இந்த உமாவும் மல்லியும் தான் ம்மா பாவம் இவங்க கலச்சி போட்ட பொருட்களை எல்லாம் எடுத்துவச்சிட்டு அவங்களை அழைத்துக்கொண்டு போனாங்க என பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே உமா கைகளில் தண்ணீருடன் வந்தாள்… மல்லியோ வாண்டுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.
ஜெயா, “நாங்க தான் இனிப்பு எதுவும் செய்ய சொல்லவில்லையே உமா… உங்க ரெண்டு பேருக்கும் எப்படி செய்ய தோனுச்சீ?”.
மல்லி, “எனக்கு அல்வா செய்ய தெரியாது ங்கம்மா… உமா செய்ய தேவையான பொருள்களை எடுத்து தர சொல்ல சொன்னா, நான் அதை மட்டும் தான் செஞ்சேன்” என்றவளை சாரதா, “பின்ன நீயா செய்யபோற… நீ செஞ்சா இந்த உலமே அளிஞ்சிடாது”…
“நான் செஞ்சா இந்த உலகம் தான் அழியும்… நீங்க செஞ்சா இந்த பிரபஞ்சம் முழுவதும் அழிஞ்சிடும்” என்றவள் முடிந்தமட்டும் சாரதாவை முறைத்தாள், அவரும் அவளை முறைத்துக்கொண்டே இருந்தார்.
இவர்களின் சண்டையை பார்த்த நாச்சியார், “மல்லி நீ போய் இனிப்பு எடுத்துகிட்டுவா… குழந்தைகளுக்கு சேர்த்து கொண்டு ம்மா”. அவளுடன் உமாவும் சென்று அனைவரும் அல்வாவை கொண்டுவந்த கொடுத்தாள்.
அதை சாப்பிட்ட அனைவரும் அவர்களை பாராட்டினார்கள். காயத்ரி, “இது எப்படி பன்னுன உமா?.. ருசியே வித்தியாசமா இருக்கு”… காயத்ரி ம்மா.. “இது திராட்சை அல்வா… அதுதான் ருசி வித்தியாசமா இருக்கு” என்றவளை பாராட்டினார் காயத்ரி.
பின்பு அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் நாச்சியார் விசாலாட்சிக்கு போன் செய்தார்.
விசாலாட்சி போன் எடுத்தவுடன், “அம்மா… பூசாரியை பார்த்தீங்களா?… நாள் குறிச்சாச்சா?… அவர் என்ன சொன்னார் ம்மா?… திருவிழாக்கு முன்னா இல்லை திருவிழாவுக்கு அப்புறமா ம்மா?”… முதலில் என்ன பேசவிடுடி… என்னை பேசவிடாம நீ மட்டும் பேசுனா நான் எப்படி உனக்கு பதில் சொல்லமுடியும் டீ… மாப்பிள்ளை இருக்காரா டீ?… “அவர் இருந்தா, அவர்கிட்ட போடு குடு, நான் அவர்கிட்டயே சொல்லறேன்… அதுதான் முறையும் கூட”… அம்மா, அவரு இங்கதான் இருக்காரு, இரு நான் கொண்டு போய் தருகிறேன் எனக்கூறியவர், போனை எடுத்துக்கொண்டு தன் கணவனை தேடிச்சென்றார்.
அலுவலக அறையில் வேலை செய்து கொண்டு இருந்தவரிடம் விவரத்தை கூறி போனை கொடுத்து தாயிடம் பேசச்சொன்னார் விசாலாட்சி.
போனை வாங்கிய சங்கர், “வணக்கம் அத்தை… எப்படி இருக்கீங்க?… மச்சானுங்களும் தங்கச்சிகளும் எப்படி இருக்காங்க?… மாப்பிள்ளைகளும் மருமகளும் எப்படி இருக்காங்க?” என்றவரிடம்…
அதற்கு நாச்சியார், “எல்லாரும் நல்லா இருக்காங்க மாப்பிள்ளை… சந்தோசமான விஷயத்தை சொல்லட்டா உங்களை கூப்பிட்டேன்”… வர புதன் இல்லாம அடுத்த புதன் நாள் நல்லா இருக்குனு பூசாரி சொன்னாருங்க மாப்பிள்ளை, அப்பயே வச்சிக்கலாமா மாப்பிள்ளை?, நீங்க என்ன நினைக்கிறீங்கனு சொல்லுங்க….
“அத்தை… நீங்க குறிச்சி தேதியிலேயே வச்சிக்கலாம்… அம்மாவும் இந்த வாரம் வந்திடுவாங்க அத்தை… நாங்களும் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வந்திடறோம்” என்றவரிடம் நாச்சியார், “அப்புறம் மாப்பிள்ளை… நிச்சியத்திற்கு இரண்டாவது நாள் கம்பம் போடறாங்க மாப்பிள்ளை…
திருவிழாவுக்கு வந்துடுங்க மாப்பிள்ளை… பதினைந்து நாட்கள் திருவிழா”… கண்டிப்பா வந்திடறோம் அத்தை… எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு பதினைந்து நாளும் அங்கே தங்கரமாதிரி வந்திடறோம்… “அப்புறம் மாப்பிள்ளை வழக்கம் போல் விசாலாட்சி சார்பா முறை செய்யனும் , அவளை வீட்ட சுத்தம் பன்னிவிட்டு வரசொல்லுங்க மாப்பிள்ளை”…. நான் சொல்லிவிடறேன் அத்தை என்றவர் மற்ற அனைவருடனும் பேசிவிட்டு வைத்துவிட்டனர்.
அனைவரின் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி நிறைந்து இருந்தது. தன் தூக்கத்தில் இருந்து எழுந்தது குளித்துவிட்டு சாப்பிட வந்த மீனாவின் காதில் விழுந்த இச்செய்தியில் அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி… இந்த உலகத்தையே தன் கைக்குள் கொண்டு வந்தாள் கூட இந்தளவு மகிழ்ச்சி இருக்காது… அத்தனை சந்தோஷ் அவளுக்கு.
[the_ad id=”6605″]
கீழே வந்தவள் பெரியவர்களிடம் ஆசி வாங்கிகொண்டு, கடவுளுக்கு நன்றி தெரிவித்து வந்தவளுக்கு உமா அல்வாவை கொடுத்து இந்த தருணத்தில் அவள் மகிழ்ச்சியை இன்னும் அதிகபடுத்தினாள்.
காயத்ரி, “மீனா… கம்பம் போட்டதும் திருவிழா முடியரவரை கம்பத்துக்கு தினமும் உன்னை தண்ணீர் ஊத்த சொன்னார் பூசாரி… நாள் தவராம தினமும் காலை எழுந்து சுத்தபத்தமா நீதான் பன்னனும்… புரியுதா?”… புரியுது சித்தி… கண்டிப்பா நான் பன்றோன் எனக்கூறி கார்த்தியுடன் இந்த தருணத்தை பகிர்ந்து கொள்ள சென்றுவிட்டாள்.
ஜெயா அருணுக்கு போன் போட்டு அவனுக்கும் விஷயத்தை கூறிவிட்டார்.
சகுந்தலா வெற்றி மற்றும் விஷ்ணுவை போன் பன்னி வீட்டுக்குவர சொன்னவர், பெரியவர்களை ஓய்வெடுக்க அனுப்பிவிட்டார்.
பின் மத்திய உணவை செய்ய ஆயத்தமானார்கள். இவர்கள் உணவை செய்து முடிக்கவும் விஷ்ணு மற்றும் வெற்றி வரவும் சரியாக இருந்தது. அனைவரையும் சாம்பிட அழைத்தார். உணவு சாப்பிடும் போதே அனைத்தையும் பேசிமுடித்துவிட்டனர்.
உணவை முடித்துவிட்டு ஓய்வாக அமர்ந்தனர் பெரியவர்களிடம் வெற்றி, “பாட்டி தேதி குறிச்சாச்சி… இனி சொந்தகாரங்களை கூப்பிடனும், அப்புறமா வேற என்ன பன்னனும் முன்னைய சொல்லீடுங்க பாட்டி”.
விஷ்ணு, “ஆமாம் பாட்டி… இந்த வேலையில் திருவிழா வேலையையும், திருவிழா வேலையில் இந்த வேலையையும் விட்டுடகூடாது பாட்டி”. ஏதாவது ஒன்னு சரியா செய்யாம விட்டாலும் அது நல்லா இருக்காது என்றவனிடம்…
அக்கா இவனுங்க சொல்றதும் சரியான?… இப்ப இருந்து வேலையை பார்க்க ஆரம்பித்தான் எல்லா வேலைகளையும் கரட்டா செய்யமுடியும் என்று கூறி சிறுவர்களின் கூற்றை ஆமோதித்தார் சாரதா.
இவர்களின் கூற்றில் உண்மை அறிந்த நாச்சியார், “ஜெயா நீ உன் அண்ணனுக்கு போனைபோட்டு விஷயத்தை சொல்லு… சந்திரா நீயும் அவங்கிட்ட பேசிவரு சொல்லுடா”… சரிம்மா… இப்பவே சொல்லறேன் எனக்கூறி அவருக்கு போன் செய்தார்.
போடு எடுத்த நம்பி, “வணக்கம் மாப்பிள்ளை… எல்லாரும் நல்லா இருக்காங்களா மாப்பிள்ளை”… எல்லாம் நல்லா இருக்காங்க மச்சான்… ஒரு சந்தோசமான விஷயம் மச்சான்.. “நம்ம மீனாக்கு அடுத்த புதன் நிச்சியம் மச்சான்… நீங்களும் பாப்பாவும் வந்துடுங்க மச்சான்”… இதோ உங்க தங்கச்சி போசனுங்கிறா கொடுக்கிறேன் மச்சான்… “சரி மாப்பிள்ளை குடுங்க”…
போனை வாங்கிய ஜெயா, “அண்ணா எப்படி இருக்கீங்க?… நவ்யா எப்படி இருக்கா?… ஏன் அண்ணா நீங்க ஊர் பக்கமே வரது இல்ல?”… “ஜெயாம்மா!” அண்ணனுக்கு வேலை அதிகம்டா, அதுவும் இல்லாம நவ்யா படிப்பு, எனக்கு ஆலுவலக மீட்டிங்னு நாள் போய்டுச்சிடா… இப்ப உனக்கு உடம்பு பரவாயில்லையாடா… முன்னைவிட இப்ப நல்லா இருக்கேன் அண்ணா…
அப்புறம் சந்தோசமான விஷயம் ண்ணா, “நம்ம மீனாவுக்கு நிச்சியம் வச்சி இருக்கு அண்ணா… அடுத்த வாரம் நீங்க இங்க இருக்கனும், மறக்காம நவ்யாவையும் கூட்டிகிட்டு வந்துடுங்கடி ண்ணா… எந்த சாக்கு எங்கிட்ட எடுபடாது பாத்துக்கோங்க… அடுத்த வெள்ளிக்கிழமையிலிருந்து பதினைந்து நாள் திருவிழா இருக்கு அதுக்கும் தங்கரமாதிரி வாங்க”… கண்டிப்பா நவ்யாவை கூட்டிகிட்டு வந்திடறேன் ஜெயா… நீ கவலை படாம வேலையை கவனி எனக்கூறி தன்னுடைய வாழ்த்தை அனைவரிடமும் பகிர்ந்துகொண்டனர்.
அடுத்ததாக விசாலாட்சியின் அத்தைக்கு போன் செய்து விஷயத்தை பகிர்ந்துகாெண்டவர்… அடுத்த நிமிடமே மதனின் பொற்றோர்களுக்கு இந்த தகவலையும் பகிர்ந்துகொண்டனர்.
“இறுதியாக யார்யாரை எல்லாம் அழைக்கலாம், என்னென்ன எல்லாம் செய்யலாம்… எவ்வளவு துணிகள் வாங்கலாம்… எத்தனை பேருக்கு வாங்கலாம்… வீடு முழுவதும் மெயின்ட் பன்னலாமா இல்ல வீட்டை கழுவிவிட்டா மட்டும் போதுமா என பல்வேறு விதமாக விவாதித்துக்கொண்டு இருந்தனர்”.
சென்னையில் மகாலட்சுமி மற்றும் ராமன் டிடக்டிவ் மூலமாக புதுச்சேரி முழுவதும் தேடியும் பரமனையும் கண்டுபிடிக்க முடியவில்லை… அதே போல் உமா பற்றிய சிறு குறிப்பும் கூட காணமுடியவில்லை… அதைவிட நித்தியன் மற்றும் அவன் மனைவி ஆனந்தியின் போன் நம்பரை டிரேஸ் செய்ததில் ஒரு விஷயமும் கிடைக்கவில்லை, அதைவிட அந்த நம்பர் உபயோகத்தில் இல்லை என்ற தகவலே கிடைத்தது. எந்த பக்கமும் செல்ல முடியாத அளவிற்கு அத்தனை கதவுகளும் அடைக்கபட்டதை போல் இருந்தது மகாலட்சுமிக்கு.
“வளகத்திற்கு மாறாக கோபத்தை உபயோகிக்காமல் நிதானமாக யோசனை செய்த மகாலட்சுமி, நித்தியனின் நண்பர்களை கண்டறிந்து அவர்கள் மூலமாக நித்தியனையோ அல்லது உமாவையோ அடையும் யோசனை பற்றி டிடக்டிவ் மூலமாக செயல்படுத்த முடிவு செய்தார்”.
அதே போல் செயல்பட்டு நித்தியனின் கல்லூரி நண்பர்களையும் கண்டறிந்தனர். அவர்களிடமும் இவர்களுக்கு ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இறுதியா மேல்படிப்பு படுக்கையில் கிடைத்த நண்பர்களின் மூலமாக தகவலை பெற முயன்று தோற்றவர்கள்…
கடைசியா டிடக்டிவ் மகாலட்சுமியிடம், “மேடம் முடிந்தவரை முக்காவாசி பேரை பார்த்தாச்சி… இன்னும் இருப்பது மூன்று பேர் தான் அவர்களை விசாரிக்க மும்பை, பெங்களூர் மற்றும் மூணார் போக வேண்டியுள்ளது”… அதையும் முடித்துவிட்டு ஏதாவது ஒரு வழிகிடைக்கும் மேடம் என்றவரிடம் மகாலட்சுமி, “அப்படினா அதை உடனடியா பன்னுங்க… அவ இப்ப எங்க இருக்காளோ அந்த இடத்தைவிட்டு வேறயிடம் போவதிற்குள் நாம அவளை பிடித்து ஆகவேண்டும் எனக்கூறி அதற்கான ஏற்பாட்டை செய்ய ஆரம்பித்தனர்”.
பாவம் அவருக்கு தெரியவில்லையா இந்த பயணம் அவரை ஒரே இடத்தில் முடக்கிபோடுவதற்கான பயணம் என்று… இந்த பயணமானது உயிருடன் இருக்கும் பொழுதே நகரத்தை காட்டுவதற்கான பயணம் என்று.
அன்பு தொடரும்….