சிதைந்த பாகங்களை மீட்டுடுத்து, “ஆரோஹி மெடிக்கல் ரிப்போர்ட்ஸ்” தலை அசைத்தவர் தானே சென்று ஆரோஹி சார்ந்த அனைத்து தகவல்களையும் அவனிடம் ஒப்படைக்க அவன் கண்கள் கலங்கியிருந்ததை பார்க்க அவருக்கே மனம் கனத்தது.
கிளம்பவிருந்தான் ஏதோ நினைவு வந்தவனாய் பாண்ட் பாக்கெட்டிலிருந்து மருந்துகள் சிலவற்றை எடுத்து அவர் முன்பு வைத்தான். அனைத்தும் ஆரோஹி அறையிலிருந்து எடுத்தது.
அதனை ஆராய்ந்த அந்த மருத்துவர் அதிலிருந்த சிலவற்றை பார்த்து ஒரு விதமாக அதிருப்தியில் தலை அசைத்தார்.
“ஓவர் டோஸேஜ் pain killer” அந்த குறிப்பிட்ட மருந்தை மட்டும் எடுத்து காட்டினார்.
“தாங்க முடியாத அளவு வலி இருந்தாலுமே நாங்க இத சஜஸ்ட் பண்ண மாட்டோம். ஒரு விதமான போதை மாதிரி செயல்படும் இது. வலி அதிகமான நேரத்துல இது இல்லாம அவங்களால சுத்தமா இருக்க முடியாது.
ஏதோ பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கும், எல்லாம் வேதனையோட தாக்கம். எப்படி இது அவங்களுக்கு கிடைச்சதுன்னு தெரியல பட் வெரி ஒர்ஸ்ட் பார் ஹெர் கரண்ட் சுச்சுவேஷன்”
இன்னும் என்னென்ன இந்த பெண் தன்னிடம் மறைத்துளாள் என்கிற பயமே அஸ்வினை அச்சுறுத்த அவருக்கு நன்றியை கூட கொடுக்காமல் தகவல் கசியாமல் இருக்கவேண்டும் என்கிற வேண்டுகோளை வைத்து மருத்துவமனை வந்து நேராக திவ்யா முன்பு நின்றான்.
ஏற்கனவே அழுது முகம் சிவந்து துவண்ட மனைவியை பிள்ளையை காரணம் காட்டி பழச்சாற்றை அழுத்தி வைத்து பருக வற்புறுத்தினான் மாறன்.
அதற்குள் அஸ்வின் வந்து நிற்க வேகமாக வந்து தடுத்தார் மதி, “இரு அஸ்வின், அவ கொஞ்சம் ஜூஸ் குடிக்கட்டும்”
தாடை இறுக தலை அசைத்தவன் முகத்தை திருப்ப அவன் கண்ணீரை பார்த்த திவ்யாவுக்கு இனி தண்ணீரும் தான் இறங்கிடுமா? இதயத்தினுள் இருள் சூழ பழச்சாறை ஓரம் வைத்து அஸ்வின் கை பிடித்து திருப்பினாள்.
“சொல்லுங்க அண்ணா” தனக்கு சிறிதும் குறையாத வருத்தம் அந்த சின்ன பெண்ணின் கண்களிலும் தெரிந்தாலும் சில விஷயங்களில் அவனுக்கு தெளிவு தேவை.
“இந்த நாலு மாசத்துல அவளுக்கு பீரியட்ஸ் நேரத்துல வந்த வலி பத்தி உங்ககிட்ட சொல்லிருக்காளா?”
“இல்ல ண்ணா, கல்யாணம் ஆனதும் அவ என் வீட்டுக்கு வர்றதே ரொம்ப கம்மி”
“வர்றதே இல்லையா? உன் வீட்டுல தானே திவ்யா ரோஹி போன மாசம் கூட ஒரு வாரம் வந்து தங்கினா” அஸ்வினை தாண்டி திவ்யாவிடம் ஆச்சிரியமாக கேள்வி கேட்டார் மதி.
“இல்ல ஆண்ட்டி வந்தா ஆனா ஒடனே கெளம்பிடுவா”
அவர்கள் அதிர்ச்சியின் காரணம் திவ்யாவுக்கோ மாறனுக்கோ புரியவில்லை. அவர்களை பொறுத்தவரை மாதம் ஒரு வாரம் திவ்யா வீட்டிற்கு சென்று பொழுத்தை கழித்து பிறகு மதி இல்லம் திரும்பிவிடுவாள் ஆரோஹி.
ஆனால் கேள்விப்படுவது வேறாக இருக்க அஸ்வின் அனைத்தையும் ஒன்று கூட்டினான்.
“உங்கிட்ட பணம் தேவைப்படுதுனு ஏதாவது சொன்னாளா?” அடுத்த கேள்வி சித்தார்த்துக்கு தாவியது.
“இல்லடா… ஆனா லோன் விஷயமா நிறையா கேட்ருக்கா” என்றான் அவள் அதிகமாக கேட்கும் கேள்விகளை நினைவுகூர்ந்து. அஸ்வின் தலையை பிடித்து அமர்ந்துவிட்டான்.
இந்த பெண் அனைத்தையும் தானே தனியாக சமாளிக்க எத்தனை போராடியுளாள். சகோதரன் ஓய்ந்த தோற்றம் பார்த்த சித்தார்த் அவன் அருகே வந்து அமர்ந்து தோளை அழுத்தினான்.
சொல்ல முடியாத பாரத்தை நெஞ்சோடு அழுத்தி வைத்திருந்தது அவன் முகத்திலே தெரிய, “என்னாச்சு அஸ்வின்” என்றான் சற்று பதட்டமாகவே.
“அவளுக்கு எல்லாமே தெரியும்டா. நாலு மாசமா தெரிஞ்சும் என்கிட்டே ஒரு வார்த்தை சொல்ல தோணலடா அவளுக்கு. வலி, மன கஷ்டம், தனிமைனு மொத்தத்தையும் தனியா அனுப்பிச்சிருக்கா. இது எதையும் தெரிஞ்சுக்காம நான் நிம்மதியா ஊர் சுத்திட்டு இருந்துருக்கேனேடா”
குரல் உடைந்து கண்ணீர் பெருக்கெடுக்க அவன் கொடுத்த தகவல் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியது.
“அஸ்வின்…” மதி நம்ப முடியாமல் அழைக்க,
“நிஜமா ம்மா. எல்லாம் இவளுக்கு தெரியும். தன்னோட வலிய மறைக்க கண்ட மாத்திரை, திவ்யா வீட்டுக்கு போறேன்னு பொய் சொல்லி நம்ம முன்னாடி சிரிச்சிட்டே நடிச்சிருக்கா ம்மா என் ஆரூ.
பிரசவ வலிய மாதிரி ரொம்ப அதிகமா இருக்குமாம். நம்ம கூட இருந்தா நமக்கு தெரிஞ்சிடும்னு லூசு மாதிரி என்னென்னமோ யோசிச்சிருக்கா ம்மா. வேலைக்கு போக மாட்டேன்னு சொன்னவ கேன்சர் இருக்குறது தெரிஞ்சு மறுபடியும் வேலைக்கு சேர்ந்து லோன் வாங்க ட்ரை பண்ணிட்டு இருக்கா”
அன்னை வந்து அருகில் நிற்க அவரை அணைத்து ஒரு மூச்சாக அழுதான். என்ன அழுதும் அவள் பிணி இல்லை என்று ஆகிவிடாதே, அவள் வடித்த கண்ணீர் முன்பு இதெல்லாம் எம்மாத்திரம் என எண்ணியே வேதனையுற்றான்.
“ஏன் ம்மா என்கிட்ட சொல்லல அவ? என்னைக்கோ சரி பண்ணிருக்கலாமே. ரொம்ப அழுத்துருப்பாள, வலிச்சா பக்கத்துல கை புடிச்சு ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்லாம ஏங்கிருப்பாளே. இந்த வேதனைளையும் வேலைக்கு பொய் லோன் வாங்க ட்ரை பண்ணி…
ச்சை நான் எல்லாம் என்ன மனுஷன் ம்மா, என் ஆரூ இங்க துடிச்சிட்டு இருந்தப்ப எங்கையோ சிரிச்சு சந்தோசமா இருந்துருக்கேன், ஒவ்வொரு தடவையும் அவ வெயிட் குறையிறத கண் கூடா பாத்தும் அது என்னனு கவனிக்காம அசால்ட்டா விட்டு இப்ப…”
சிகையை அழுத்தமாக இரண்டு கைகளால் புடித்து இட வலமாக ஆட்டினான், மூலையில் அவள் சில மாதங்களுக்கு முன்பு மனைவி தன்னிடம் கோவமாக நடந்தது, அவளுக்கு புடித்த ஒவ்வொன்றையும் தானே வாய் திறந்து கேட்டு பெற்றுக்கொண்டது என நிகழ்வுகள் வரிசை கட்டி வந்து நிற்க தான் அமர்ந்திருந்த அந்த இரும்பு நாற்காலியை வேகத்தில் தூக்கி ஏறிய அந்த வளாகமே அவனது ஆவேசத்தில் அதிர்ந்தது.
நடந்ததை நினைத்து அழுது ரணப்பட்ட இதயத்தை சரி செய்வதை விட அவன் மனைவியை முழுதாய் தன்னுடைய கைகளில் பூட்டி கொண்டாட மட்டுமே அஸ்வின் எண்ணம் துடித்தது.
அழுத்தமாக முகத்தை துடைத்தவன் மருத்துவரிடம் செல்ல அவன் சிந்தைக்கு பயந்தே அஸ்வினை பின்தொடர்ந்து உடன் ராகவும், சித்தார்த்தும் சென்றனர்.
மருத்துவர் முதலில் வேறு மருத்துவமனைக்கு ஆரோஹியை மாற்ற அறிவுரை கூற உடனே அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்தது. அஸ்வின் வெளிநாடு என வலை விரித்து தேட சித்தார்த் சரியான தேடலை சல்லடையிட்டு ஒரே மணி நேரத்தில் முடித்திருந்தான்.
“பாரின் போறது நல்லது தான் அஸ்வின், அதை விட பெட்டர் டீரீட்மென்ட் நமக்கு இங்கையே கிடைக்கும்னு இருக்கப்போ அந்த ஆப்ஷன் போறது தான் புத்திசாலித்தனம்”
“இங்கையேனா?” – ராகவ்
“சென்னை தான் ப்பா. ராமகிருஷ்ணா ஹாஸ்பிடல். வரதராஜ சக்ரவர்த்தி. ஒன் ஆப் தி பைனஸ்ட் ஆன்காலஜிஸ்ட். அவரை தவற அங்க இன்னும் அஞ்சு ஆன்காலஜிஸ்ட் ஸ்பேசலிஸ்ட் இருக்காங்க. அதிகமா நான் விசாரிச்சா வரை எல்லாரும் ராமகிருஷ்ணா ஹாஸ்பிடல் தான் சஜஸ்ட் பண்ணாங்க”
சித்தார்த் கூறுவதை ஏற்று ராகவ் அஸ்வினை பார்க்க அவனும் அதனை ஏற்று தலை அசைக்க உடனே சித்தார்த் அந்த மருத்துவமனையை தொடர்புகொள்ள சென்றிட ஆரோஹி இப்பொழுது விழித்துவிட்டதாக செவிலியர் ஒருவர் கூற அனைவரும் விரைந்தனர் அஅஸ்வின் மற்றும் சித்தார்த் தவிர.
உள்ளே சென்றவர்கள் வெளியே வரவே பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியது. அழுகை சத்தம், விசாரிப்பு என வெளியே நின்ற அஸ்வினுக்கு தலையே வலித்தது.
உள்ளே சென்றவர்கள் அனைவரும் வெளியே வந்து அஸ்வினை உள்ளே செல்ல வலியுறுத்த முடியவே முடியாது என அமர்ந்துவிட்டான். அவளை சந்திக்கும் தைரியமா நிதானமா இல்லை என்பதே காரணம்.
“ஒரு பொய் சொல்லிட்டா அதுக்குன்னு இவ்ளோ பிடிவாதமா இருக்காத அஸ்வின், உன்ன தான் தேடுது பிள்ளை” மாறி மாறி கூறியும் அவன் அசையவில்லை.
எளிதாக கூறிவிட்டார்கள் ஒரே ஒரு பொய் தானே என்று. அதுவோ கற்பனைக்கு அப்பாற்பட்ட சுமையை அல்லவா அவன் இதயத்தில் ஏற்றி நிறுத்திவிட்டது.
எதார்த்தம் என்கிற ஒன்றை தாண்டி விதியின் போராட்டமாகவே இருந்து வருகிறது அவர்கள் திருமணம் முதலே.
ஒரு பிடியிலிருந்து விடுபட்டு இன்பம் இன்னதென அனுபவிக்கும் முன்பே அதற்கு இப்பேற்பட்ட சோதனையை எதிர்பார்க்கவே இல்லை அவன். ஆள் மாற்றி ஆள் அவனை உள்ளே அனுப்ப கூறியும் அஸ்வின் அப்படியே நிற்க அனைவரும் ஒதுங்கியே நின்றனர்.
பொறுத்த பார்த்த சித்தார்த், “உள்ள தான் போயேன்டா. ரோஹி தனியா இருக்கா”
“அதுக்கு நான் என்ன பண்றது?”
“அஸ்வின் எந்த நேரத்துல வீம்பு புடிக்கிறதுனு ஒரு விவஸ்தை வேணாம், நிமிசத்துக்கு ஒரு தடவை கதவை கதவை பாக்குறா”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல, நான் வேணாம்னு தானே அவ இந்த முடிவை எடுத்து இப்டி கெடக்குறா” எரிந்து விழுந்தான் அஸ்வின் வேதனையோடு.
“உன் கஷ்டம் புரியுது அஸ்வின் அதுக்காக இப்டி பண்றது ரோஹிய இன்னும் தான் கஷ்டப்படுத்தும்”
“ஓ அவ கஷ்டப்படுவா நான் சந்தோசமா இருக்கேன் இல்ல?” வேகத்தில் எழுந்தவன் அதே வேகத்தில் ஆரோஹி அறையினுள்ளே நுழைய, கணவனை பார்த்தவுடன் வாடிய அந்த முகம் மண்ணில் மின்னும் வைரமாய் ஜொலித்தது.
அதோடு தான் விட்டாளா ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கும் கையையும் மறந்து கை அசைத்து, “ஹாய்” என அவள் இதழ்கள் உச்சரிக்க விழியன் ஓரம் ஒற்றை நீர்த்துளி உருண்டோடி காதினை அடைந்தது.
கோவமெல்லாம் அந்த ஒற்றை நீர் கண்ணீர் துளியில் மறைந்துபோக வேரூன்றிய கால்களை அசைக்க விரும்பாமல் மௌனமாய் நின்றான்.
“ப்ரமோஷன் கெடைச்சிடுச்சு போல” இதழ் வளைத்து சிரிப்போடு கேட்டாள் ஆரோஹி. அசையக்கூட இல்லை அந்த சிலை, “வைஸ் கேப்டன் டு கேப்டன். ம்ம் கலக்குறீங்க”
ஒரு நொடி அந்த விழிகளில் வலி வந்து போக சிறுத்த அவள் முகம் உடனே மாறியது, “எடுத்த ஒடனே வேர்ல்ட் கப்க்கு கேப்டன், பயமா இல்லையா கிரிக்கெட்டரே… நீங்க பயப்பிட மாட்டீங்க. எனக்கு தான் கையெல்லாம் நடுங்குது இப்பயே”
ரத்தவோட்டமே இல்லாத அந்த விரல்களை அவன் முன்பு எடுத்து காட்டினாள், நிஜமாகவே ஆடியது. பயத்திலா வேதனையாளா என்பது அவள் ஒருத்தி அறிந்ததே.
“நீங்களே கேப்டனா இருந்தாலுமே நான் மேட்ச்க்கு வர மாட்டேன் சொல்லிட்டேன். உங்க தம்பி சென்னைல நடக்குற மேட்ச்க்கு எனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கி வச்சிட்டான். எங்க அவனை கானம்?
நான் வந்தா மொத்த ஸ்டேடியம்க்கும் நீங்க தான் என்னோட அஸ்வின்னு கத்தியே சொல்லிடுவேன். ஆனா நம்ம டீல் கப் ஜெய்ச்சிட்டு வந்து நீங்களே என்ன இன்ட்ரோ கொடுக்குறது தானே”
முகத்தில் பொட்டு தோடு என எதுவுமில்லை, கலைந்த வெளீர் நிற ஓவியத்தில் ஆங்காங்கே படர்ந்திருக்கும் செவ்வானத்தின் கதிரை போல் கன்னம் மூக்கு மட்டும் சிவந்து மனதினை பிசைந்தாள்.
“நா… நாராயணா…” அவள் அழைப்பில் கண்ணெல்லாம் மீண்டும் கலங்கியது அஸ்வினுக்கு.
அவள் விறல் அந்த படுக்கையின் விருப்பை இறுக்கமாக பற்றியது. இரண்டே அடியில் மனைவியை நெருங்கியவன் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
“பேசுங்க நாராயணா” மறுப்பாய் தலை அசைத்தான் ஆரோஹி கைமேல் தலை வைத்து அவள் முகம் பார்த்தபடி.
விளையாட்டாக அவள் பேசிவிட்டாள், அதனை கேட்ட அஸ்வின் தான் செத்தே போனான். மனைவியின் இடையோடு ஒரு கரம் வளைத்து அழுத்தமாக அவள் வயிற்றுக்கு முகம் மாற்றியவன் இதுவரை அனுபவித்திராத வேதனை உணர அவளிடமே ஆறுதல் தேடி சிறுபிள்ளையாய் அழுதான்.
குழந்தையாய் கணவனை வருடியவளுக்க ஏக்கம் அதிகம் விழிகளில் நிரம்பியது, “இந்த உலகத்துக்கு நான் ஆரோஹி அஸ்வின் நாராயணனா என்ன அடையாளப்படுத்திக்கணும்”
இவனோடு வாழாமலே போய்விடுவேனோ என்கிற பயம் முதல் முறை அவனது அழுகையில் வெளிப்பட்டது. அதே சமயம் நிதர்சனம், தன்னுடைய உடலின் நிலை என பல உள்ளதே.
முதலில் பெண்ணுறுப்பில் துவங்கிய வலி வயிற்றை தாண்டி மெல்ல இதய கூடு வரை ஊடுருவி பரவுவதை அவள் அறிந்தே தவிப்பது.
அவன் சிகையினுள் வருடிய அவள் விரல்கள் பலவீனமாக போனது, சிறுக சிறுக பெருகும் வலியும் அவளை வலுவிழக்க செய்ய, “நா… நான்” நா வறண்டு வார்த்தை தடுவியாது பெண்ணுக்கு.
“அஸ்வின்…” சுருக்கென குத்திய வேதனையில் முகம் சுருங்கி அவன் சிகையில் அழுத்தம் கொடுத்து தன்னை பார்க்க செய்தாள்.
“ஆரூ…” தவித்தான்.
“நான்… நா சாக போறேனா அஸ்வின்?” வலுவிழந்து சரியவிருந்த அவள் கையை அழுத்தமாக பற்றிக்கொண்டு பலமாக தலை அசைத்தான்,
“இல்லடா” ஆனால் அவன் குரல் காட்டிக்கொடுத்ததே. பாகுபாட்டை உணர்ந்தவள் மனம் விம்மியது,
“பொய் தானே சொல்றிங்க, என… எனக்கு ரொம்.. ரொம்ப வலிக்கிது அஸ்வின்” பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வேதனை பன்மடங்காக பெறுக விழிகளை மூடி இதழ் கடிக்க கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
“வேணாம்டா பேசாத” அவளை அமைதிப்படுத்தி கன்னம் வருடினான், “உனக்கு ஒன்னும் ஆகாது ம்மா, நான் இருக்கேன்”
அவன் பேசியது எதுவும் அவளுக்கு புரியவில்லை, வலி என்கிற உணர்வை தாண்டி வேறொரு உணர்வை உணரும் நிலையில் கூட அவள் இல்லை. தன்னை ஆறுதலாய் அனைத்திற்கும் அஸ்வின் சட்டை பற்றி, “என்னோட ரூம்ல டேப்லட்ஸ் இருக்கும் எடுத்துட்டு வாங்க”
அவள் எதனை கேட்கிறாள் என்பதை அறிந்தவன், “ஆரூ நான் உன் பக்கத்துலயே தான் இருப்பேன்”
அஸ்வின் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகளை மாறி மாறி கூறிக்கொண்டே இருக்க அவன் சட்டையை ஆவேசமாக பற்றிக்கொண்டாள், “எனக்கு நீ வேணாம், அந்த டேப்லட் தான் வேணும். போ எடுத்துட்டு வா. போ…” அவனை தள்ளிவிட நிலை தடுமாறி தரையில் விழுந்தான்.
அவளது இந்த ஆவேசத்தை எதிர்பாராத அஸ்வின் சிறிதும் அசையவில்லை, எழுந்து மருத்துவருக்கு தகவல் கொடுத்து உள்ளே வர, கட்டிலில் ஒருக்களித்து அழுத முகத்தோடு காட்சி கொடுத்தாள் அஸ்வின் மனைவி.
அஸ்வினை பார்த்ததும் வந்த எதிர்பார்ப்பு அவனை ஆராய, அவன் பின்னே வந்த செவிலியர் மற்றும் மருத்துவரை பார்த்ததும் அடங்கியது.
ஏமாற்றம் கண்களை நிறைத்திருக்க, “அஸ்வின் ப்ளீஸ்” கெஞ்சினாள் வலியை பொறுக்கவே முடியாமல், அடிவாயிலிருந்து ஏதோ எரிமலை நெருப்பை கக்கியது போல் ஒரு பக்கம் எரிச்சல்,
மற்றொரு பக்கம் ஆள் கடலில் பூகம்பம் ஏற்பட்டு அதன் விளைவாய் மற்றொரு பக்கம் உள்வாங்கும் கடலை போல் வயிற்றை கவ்வி இழுக்கும் இந்த சொல்ல முடியாத வேதனையை தாள முடியவில்லை அவளால்.
கண்ணீர் ததும்ப அஸ்வின் நிற்க தன்னை நெருங்கிய செவிலியர்களை பார்த்து அச்சம் பிறந்தது பெண்ணுக்கு.
“நாராயணா… ஸ்லீப்பிங் பில் போட்டாலும் என்னால தூங்க கூட முடியாது. வலி உயிரே போகுது ப்பா…” காட்டிலிருந்து இறங்கியவளை இருவர் பிடித்து நிறுத்த, வலுவில்லாத அவள் கால்கள் துவண்டு தரையில் மடிந்து அமர்ந்து அழுதாள்.
இத்தனை நேரம் தூரம் நின்று துன்புற்று நின்றாலும் அதற்கு மேல் நிற்க இயலாது உடனே மனைவியை அஸ்வின் தாங்கிக்கொள்ள அவன் மார்பில் சாய்ந்து இறுக்கமாக அவனை அணைத்து அழுகையை கூட சிரமப்பட்டு வெளியிட்டாள் பாவை.
எத்தனை சமாதான வார்த்தைகள் கூறியும் அவள் துன்பத்தை நீக்கிவிட முடியாதே, அழுவதை தவிர அவளோடு உடன் நிற்க மட்டுமே அவனால் முடிந்தது.
“அஸ்வின்… என்னால முடியல அஸ்வின்… ஏதாவது panni செத்துடலாம் போல இருக்கு. ஏதாவது பண்ணுங்களேன்…” அரற்றியவள் நகங்கள் அஸ்வின் உடலை பதம் பார்க்க அது அவனை சிறிதும் துன்புறுத்தவில்லை.
கண் அசைவில் செவிலியருக்கு செய்தி கொடுக்க அவசரமாக பெண்ணுக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. அதன் பிறகும் ஆரோஹிக்கு உறக்கம் வரவே பத்து நிமிடங்கள் பிடிக்க அவள் படும் வேதனையை பார்த்த அஸ்வின் தான் ஒவ்வொரு நொடியும் மடிந்துபோனான்.
“இதுக்கு மேலயும் லேட் பண்றது சரியில்ல அஸ்வின். எவ்ளோ நேரம் தான் மயக்க மருந்து குடுத்தே தூங்க வைக்கிறது, ஒரு வகைல அது கூட அவங்களுக்கு கெடுதல் தான். வேகமா ஹாஸ்பிடல் மாத்துங்க” எச்சரிக்கையை வைத்து அவர் சென்றிருக்க அஸ்வினுள் பயத்தின் நெருப்பு அதிகமாய் படர்ந்தது.