Skip to content
Post Views: 4,982
“அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து
மு.வ உரை: முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.”
குழந்தை நல்ல உறக்கத்திற்குச் சென்றிருக்க எப்போதும் போல் அவளுக்குப் போர்த்தி விட்டு செங்காந்தள் படுக்க எத்தனித்த நேரம் கேட்ட கணவனின் குரலில் அப்படியே அமர்ந்து விடி விளக்கின் ஒளியில் கணவனை நோக்கினாள்.
“காந்தா..”
Advertisement
“..”
“கொஞ்சம் பேசணும். உனக்கு தூக்கம் வருதுனால் அப்பறம் பார்த்துக்கலாம்.”
“அதெல்லாம் இல்ல சொல்லுங்க மாமா.”, என்றதும் படுத்திருந்தவன் எழுந்து மகளின் கால் இருந்த பக்கத்தில் அமர செங்காந்தளும் மகளின் தூக்கம் கெடாமல் இருக்க அவனுக்கு அருகில் அமர்ந்தாள்.
Advertisement
“சேலை நல்லாயிருக்கா?”, என்றவனின் பார்வை ஓரமாய் வைத்திருந்த அந்தக் கடைப் பையில் பதிந்திருக்க மெதுவாய் எழுந்து சென்று எடுத்து வந்தவளாய் அதை நூறாவது முறையாய் மென்மையாய் தடவிப் பார்த்தாள்.
Advertisement
“ரொம்ப நல்லாயிருக்கு மாமா.”
“உனக்கு என்கிட்ட எதுவும் சொல்லணுமா?”
“ம்ம்?”
Advertisement
“இல்ல எதாவது கேட்கணுமா?”
“உங்களுக்கு இப்பவும் என்னைப் பிடிக்கலையா?”, என்றதில் பெரும் அமைதி ருத்ரேஸ்வரனிடத்தில்.
“இல்ல எனக்குத் தெரியும் நான் உங்களுக்கு பொருத்தமே இல்ல. ஆனாலும் இம்புட்டு வருஷத்தில் எதாவது மாறிருக்கானு தெரிஞ்சுக்க தான் கேட்டேன்.”
“உனக்கு என்னை சுத்தமா பிடிக்காதுனு எனக்குத் தெரியும். என்னை மாதிரி ஒரு புருஷனை எந்த பொண்ணும் கண்டிப்பா சகிச்சுகிட்டு இருந்துருக்க மாட்டா.
உன் வாழ்க்கையை கெடுத்துட்டேனோனு குற்றவுணர்ச்சியா இருக்கு.”
“!!”
“என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியலை. நீ சொல்லு உன் முடிவு எதுவாயிருந்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுறேன்.”
“…”
“என்னால உன் வாழ்க்கை..”
“எனக்குனு தனியா எந்த வாழ்க்கையும் இல்ல மாமா.”
“!!”
“நீங்களும் இந்த வீடும் தான் சாகுற வரைக்கும் என்னோட வாழ்க்கை. உங்க மனசில் வேற எதுவும் இருந்தா நீங்க சொல்லுங்க. நான் புரிஞ்சுக்க நிச்சயமா முயற்சி பண்றேன்.”
“என் மனசில் எதுவுமில்ல”
“ஆனால் நானும் இல்லையே!”
“!!”
“பிடிக்காத வாழ்க்கையை நீங்களும் எவ்வளவு தூரம் கொண்டு போக முடியும். உங்களுக்கு பிடிச்ச மாதிரி யாரையாவது..”
“காந்தா! என்ன பேசுற?”
“மன்னிச்சுடுங்க. எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்ல. ஆனால் இந்த வீட்டை விட்டு மட்டும் போக சொல்லாதீங்க மாமா.”
“!!!”
“உங்களுக்கு தான் இது பிடிக்காத கல்யாணம். என் மனசில் உங்களைத் தவிர எந்த சென்மத்திலேயும் யாருக்கும் இடம் கிடையாது.”, என்றவள் தொண்டை பிசிறாமல் இருக்க பெரும்பாடு படுவது ருத்ரேஸ்வரனுக்கு நன்றாகவே புரிந்தது.
என்னவோ பேச நினைத்து பேச்சு எப்படியோ சென்று இப்போது அவளை சமாதானப்படுத்த முடியாமல் திணறினான்.
“மாமா..”
“ம்ம்?”
“ஒண்ணு மட்டும் கேட்கணும். கோவிச்சுக்க மாட்டீங்களே?”
“என்ன எதுவாயிருந்தாலும் சொல்லு..”
“கொஞ்ச நேரம்.. இல்ல ஒரு இரண்டு நிமிசம் உங்க மடியில படுத்துக்கட்டுமா?”, என்றவள் எத்தனை முயன்றும் கண்ணீர் கன்னம் தொட்டிருந்தது.
இதை சற்றும் எதிர் பாராதவனாய் ருத்ரேஸ்வரன் பின் சாய்ந்து அமர்ந்து அவளின் பின்னந்தலை பற்றி தனது மடியில் சாய்த்திருந்தான்.
சத்தமில்லாத அவளின் அழுகை அவனை மேலும் மேலும் வதைத்தது.
சர்வேஸ்வரனின் பேச்சு அவளை அதிகமாய் பாதித்து விட்டதோ என்று எண்ணியவனாய்,
“சர்வா பேசினதை எல்லாம் நீ பெருசா எடுத்துக்காத.. அவன்..”
“ஐயோ அதெல்லாம் இல்ல மாமா.”, என்றவள் வேகமாய் எழுந்து அமர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“இது.. இது நீங்க எனக்கு கொடுத்த முதல் சேலை. அதான்.. வேற ஒண்ணுமில்ல.”
“இரண்டு நாளில் பாப்பாக்கு லீவு வருதுல ஒரு வாரம் உன் அம்மா வீட்டுக்கு போயிட்டு வா.”
“அது.. இங்கே சாப்பாடு எல்லாம்..”
“ராணி இருக்காளே. இல்லையா அம்மா பார்த்துகிடும். நீ போயிட்டு வா.”
“..”
“என்னாச்சு?”
“இல்ல அங்கே போனால் அங்கேயே இருக்க சொல்ல மாட்டீகளே?”
“!!!”
“திரும்ப.. திரும்ப இங்கே வரலாம்ல?”
“அதனால தான் அம்மா வீட்டுக்கே போகாம இருக்கியா?”
“..”
“சொல்லு. உன்னை அப்படியே விட்டுருவேன்னு தான் போனாலும் உடனே திரும்ப வந்துரியா நீ?”
“ம்ம்..”
“நானே கொண்டு போய் விட்டு கூப்பிட வாரேன். போயிட்டு வா.”
“சரி மாமா..”, என்றவள் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.
பையை எடுத்துக் கொண்டு போய் ஓரமாய் வைத்து வந்தவள் கணவனை ஏறிட அவனும் பலவித சிந்தனைகளோடு மகளருகில் படுத்திருந்தான்.
அந்த இரண்டு நிமிட மடி சாய்தலே போதும் போலும் படுத்தவுடன் உறங்கியிருந்தாள் செங்காந்தள்.
மனைவியின் மனதில் தனக்கான இடத்தை அறிந்தவனுக்கு குழப்பம் இன்னும் அதிகரித்து தான் போனது.
காலையில் எப்போதும் போல் செங்காந்தள் வேலைகளைக் கவனிக்க மனக் குழப்பத்தில் இருந்தவனோ காலையிலேயே வண்டியை எடுத்துக் கொண்டு குளக்கரைக்குச் சென்றிருந்தான்.
அவ்வழியாய் வந்த காளி நண்பனின் வண்டி நிற்பதைக் கவனித்து விட்டு அருகில் வந்து பார்க்க குளக் கரையில் அமர்ந்த படி யோசனையில் இருந்தான் ருத்ரேஸ்வரன்.
“டேய் மாப்பிள..”
“ம்ம் வாடா..”
“என்ன டா இம்புட்டு காலையில இங்கன வந்து உட்காந்துருக்க?”
“ஒண்ணுமில்ல சும்மா தான்.”
“உன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுது. என்னாச்சுனு சொல்லு?”
“புதுசா என்ன டா எல்லாம் என் வாழ்க்கையை நினைச்சுதேன்.”
“உன் வாழ்க்கைகக்கு என்ன டா நல்ல பொண்டாட்டி அழகா ஒரு மவ இன்னும் என்ன யோசிக்குற நீ?”
“என்ன நக்கலா?”
“படிச்ச முட்டாள் டா நீ..”
“!!”
“பின்ன இப்படி ஒரு அருமையான பொண்டாட்டி பிள்ளையோட சந்தோசமா வாழுறதை விட்டுட்டு சும்மா என்னத்தையோ மண்டைக்குள்ளே போட்டுத் திரியுற..”
“எனக்குமே நான் ஏன் இப்படி இருக்கேன்னு புரியலை மாப்பிள்ள..”
“இத்தனை வருசம் குழப்பத்துல இருந்த, இப்போ அது தெளிஞ்சாலும் அதை ஏத்துகிட்டு பொண்டாட்டி காலில் விழ தயக்கமா இருக்கு உனக்கு. அதான?”
“டேய்!”
“பொண்டாட்டி கால்ல விழாதவன் எல்லாம் ஊர் பெருமைக்கு எருமை தான் டா மேய்க்கணும்.
அந்த பிள்ளைக்கு உன் மேல அன்பு இருக்கப் போயி தான இத்தனை நாளும் உன்னோட வாழுது. என்ன பிரச்சனை டா உனக்கு?”
“என்னால சாதாரணமா அவளோட பேசவே முடியலை காளி. வேணும்னு பண்ணலை ஆனாலும்.”
“உன்னை கொடுமைகாரன் லிஸ்ட்லேயும் சேர்க்க முடியலை விளங்காதவன் லிஸ்ட்லேயும் சேர்க்க முடியலை. என்ன கருமம் பிடிச்ச டிசைன் டா இது?”
“..”
“உன்னோட எதிர்பார்ப்பை ஏமாத்தினது உன் ஆத்தாவும் அப்பாவும் ஆனால் அந்த பிள்ளையோட எதிர்பார்ப்பை எல்லாம் குழி தோண்டி புதைச்சது நீ மட்டும் தான்.
இதை இத்தனை வருசத்தில் பல தடவை சொல்லிட்டேன். நீயும் சொன்னதையே தான் சொல்லிட்டு இருக்க. என்னவோ போ டா ருத்ரா.”
“கல்யாணத்தை பத்தி நமக்குனு ஒரு எதிர்பார்ப்பு இருக்குறது தப்பா காளி?”
“யாரு அதை தப்பு சொன்னா?”
“…”
“இங்கே பாரு ருத்ரா நாம ஒரு விஷயத்துக்கு ஆசை படுறோம். ஆனால் வாழ்க்கை வேற ஒரு விஷயத்தை நம்ம கையில் கொடுக்குதுனால் அதை ஏத்துக்குறது தான புத்திசாலி தனம்.
மனசார சொல்றேன் டா நீயே தேடி அலைஞ்சு உலக அழகியவே கட்டிருந்தாலும் இந்த பிள்ளையோட கால் தூசிக்கு ஈடாகாது புரிஞ்சுக்கோ.”
“இத்தனை வருசமும் தள்ளியிருந்துட்டு இப்போ போய்.. என்ன நினைப்பா டா என்னைப் பத்தி?”
“இதை ஒரு புள்ளையை பெக்குறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும்.”, என்றதில் நண்பனை கொலைவெறியில் முறைத்தான் ருத்ரேஸ்வரன்.
“முறைச்சா நான் சொன்னது இல்லைனு ஆயிடுமா? உன்னைய நம்பி பிள்ளை பெத்துக்கவே தயாரா இருந்த புள்ள உன்னை தப்பா நினைக்குமா டா?”
“…”
“இங்கேரு கொஞ்சம் கொஞ்சமா அவளோட உன்னைப் பொருத்திகிட்டு சந்தோஷமா வாழப் பாரு. அதை விட்டுட்டு பேச வரலை பாட வரலைனு கதை சொல்லித் திரியாத சொல்லிப்புட்டேன்.”, என்ற படி காளி கிளம்பத் தயாராக அவனின் மனதை மொத்தமாய் செங்காந்தள் ஆக்கிரமித்திருந்தாள்.
ருத்ரேஸ்வரன் வீட்டிற்கு வந்த நேரம் ராணி மகனை மடியில் வைத்த படி வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தாள்.
அதைக் கண்டும் காணாதவனாய் உள்ளேச் சென்றவன் மனைவியைத் தேட வழக்கம் போல் சமையலறையில் தான் ஏதோ செய்து கொண்டிருந்தாள்.
“காந்தா..”
“மாமா!!”
“காபி வேணும்.”
“இதோ போட்டுத் தரேன்.”, என்றவள் காபியை கலக்க பின் கொடியில் இருந்த அவளது துணிகளைப் பிழிந்து உலர்த்த ஆரம்பித்திருந்தான்.
அமைதியாய் காபியோடு அவனருகில் சென்றவள் கணவனின் பின் பக்கமாய் நின்றதால் அவன் திரும்பும் வரையிலும் கண்களில் ரசனை வழிய கணவனைப் பார்த்து நின்றாள்.
சட்டென ருத்ரேஸ்வரன் திரும்பியதில் விழி தாழ்த்திக் கொண்டவளாய் காபி டம்ளரை நீட்ட அதை வாங்கிப் பருகியவன் திரும்பி உள்ளே செல்லத் தயாரானவளிடம்,
“நீ காபி குடிச்சியா?”
“ஆங்ங்?!!”
“நீ காபி குடிச்சுட்டியானு கேட்டேன்.”
“ம்ம் குடிச்சுட்டேன் மாமா.”
“பாப்பாவை நானே எழுப்பிக்குறேன்.”
“ம்ம்..”
“ராணியை உதவிக்கு கூப்பிட வேண்டியது தான? ஏன் தனியா எல்லா வேலையும் பாக்குற?”
“இல்ல ஆகாஷ் சீக்கிரமே எந்திரிச்சுட்டான்.”
“நீயும் இனி பொறுமையா எந்திரிச்சு பழகு. வேலைக்கு ஆள் வைக்க அம்மைட்ட பேசுறேன்.”
“…”
“என்னைக்காவது என்னை மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சுரு காந்தா..”, என்றவன் விருட்டென உள்ளே சென்றிருக்க கணவன் ஏதோ குழப்பத்தில் இருப்பதை உணர்ந்தவளாய் யோசனையோடே அவன் பின்னால் தனதறைக்குச் சென்றாள்.
error: Content is protected !!