நாற்காலியை எடுத்து போட்டு அவளோடு நெருங்கி அமர்ந்தான். “சந்தோசம் எனக்கு இல்லனு யாரு உங்கிட்ட சொன்னா? வெறும் செஃக்..”
வேதனையில் சுருங்கிய அவள் முகத்தை பார்த்து அந்த வார்த்தையை விழுங்கினான், “முக்கியம்னு இல்ல பைரவிம்மா. அதுக்கும் மேல புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன என்னமோ இருக்கு.
அந்த வகைல மட்டும் தான் உன்னால எனக்கு சந்தோசம் குடுக்க முடியும்னு இல்லையே. எனக்காக எவ்ளோ நேரம் ஆனாலும் காத்திருந்து எனக்கு பரிமாறுறது சந்தோசம்.
நான் வாங்கி தந்த அந்த சின்ன பன்ன ருசித்து நீ சாப்பிட்டது எனக்கு சந்தோசம். நடு ராத்திரில எனக்காக எதுவும் யோசிக்காம என் கூடையே வந்தது சந்தோசம். மதியம் கூட உனக்கு அயிர மீன் புடிக்கும்னு சொல்லாம உன் கோவத்தை மறைச்சு ‘நீங்க சாப்புடுங்க நீங்க சாப்புடுங்கனு’ மறைமுகமா கோவத்தை காட்டுனியே அது கூட எனக்கு அவளோ சந்தோசமா இருந்துச்சு”
தலை தாழ்த்தி தான் பேசுவதை கேட்பவள் முகத்தை கைகளில் ஏந்தி ஆறுதல் கூற துடித்தது அவனுக்கு.
“என்ன பாரு பைரவி” அவள் கைகளில் தேவா அழுத்தம் கொடுக்க அவனை பார்த்தாள் அவன் மனைவி.
“இத்தனை சந்தோசம் குடுத்த என் பொண்டாட்டி கிட்ட நான் இதுக்கும் மேல வேற என்ன எதிர் பாப்பேன்?”
அவள் அமைதியாக இருக்க, “இனிமேல் இந்த மாதிரி பேசுவியா? உன் வீட்டுல இன்னும் ஒரு வாரம் விட்டுட்டு வரவா?”
இரண்டுக்கும் வேக வேகமாக பைரவி தலையை ஆட்ட அவளை சீண்டவே, “எதுக்கு இந்த வேணாம் தலையாட்டல்?”
“ரெண்டுக்கும்” அவளுக்கு தங்கள் வீட்டை விட, அவனோடு இருந்து அவனுக்காக தங்கள் வாழ்க்கையை சீராக்க அவனோடே இருக்க வேண்டும் என ஆசைகொண்டது.
“அப்போ என்ன விட்டு போக மனசில்லையா?” பதில் சொல்லாமல் கணவன் பார்வையை தவிர்த்தாள்.
“அப்றம் அன்னைக்கே சொல்லணும்னு நினைச்சேன், நிவியை நமக்குள்ள நீ இழுக்க கூடாது. அவ மேல ஒரு இன்டெரெஸ்ட் இருந்தது, ஆனா அதுக்கும் மேல அவளை யோசிக்க கூட இல்லை.
அதையும் மீறி அவ மேல எனக்கு ஆசை இருந்ததுன்னு வை இந்நேரம் நமக்கு கல்யாணம் நடந்துருக்காது. ஒருத்தி மேல ஆசைய வச்சிட்டு இன்னொருத்திக்கு என் தங்கச்சிக்காக வாழ்க்கை குடுக்குற நல்லவன் நான் இல்லை. ரொம்பவே சுயநலவாதி தான் காதல்னு வந்துட்டா” – தேவா
“சரி என்னை இன்னைக்கு ரொம்ப திட்டிருப்ப போல? அடிக்கடி புரையேறுச்சு” – தேவா
“நான் எதுக்கு உங்கள திட்ட போறேன்” கண்ணீரை துடைத்து சகஜமாக முயன்றாள்.
“அந்த மோதிரம் மேட்டர்” – தேவா
“ஓ அது மோதிரம் டப்பாவா?” தெரியாதது போல் பைரவி.
“மேடம்க்கு அது மோதிரம் வைக்கிறதுன்னு தெரியாது அப்டி தான?” – தேவா
“எங்க ஊர்ல அந்த மாதிரி டப்பால கோல்ட் காயின் வச்சு தருவாங்க. சரி யாருக்கோ கிபிட் வாங்கிருக்கிங்களோனு…” வார்த்தையை இழுத்து சென்று ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள்.
“ஆஹான்?” – தேவா
“ம்ம்” – பைரவி தேவா அமைதியாக இருக்க,
“அப்றம் ஏன் அது எனக்காக வாங்குனதுன்னு சொன்னிங்க?”
ஒரு ஆர்வத்தில் கேட்டுவிட்டாள், அதன் பிறகே தான் பேசியது புரிய மனம் துள்ளி திரும்ப, மீண்டும் நாற்காலியை தன்னை பார்த்து இழுத்தான் மெல்லிய சிரிப்போடு.
“என்ன கேட்ட என்ன கேட்ட?” ஆர்வமாக அவளிடம் கேட்டான்.
“இல்ல ஒன்னுமில்ல” – பைரவி “இல்ல ஏதோ சொன்ன” – தேவா
தன்னையும் மீறி அவன் செயல்கள் மேல், அவன் மேல் உரிமையும் எதிர்பார்ப்பும் தனக்கு வந்ததை பைரவி இன்னும் உணராமல் இருந்தாள்.
“பசிக்கிது சொன்னேன் ஆனந்த்” வெட்கத்தை கட்டுப்படுத்தி பைரவி தலையை வேறு பக்கம் திருப்பியிருக்க கை பிடித்து அவள் மோதிர விரலை சொடக்கிட அதிர்ந்து திரும்பி அவனை பைரவி பார்க்கவும்,
அந்த கண்களின் அழகை ரசித்தவன் “ஏன்னா கண்ணுடி சக்கர இது” வியந்தான் அவள் கணவன்.
ஆசையாய் அவன் பேசிய வார்த்தையில் மெல்ல புன்னகை எட்டி பார்க்க தான் பிடித்திருந்த அந்த விரலில் வைரங்கள் மின்ன பூக்கள் கோர்த்திருந்த பிளாட்டினம் மோதிரத்தை அவள் விரல்களுக்கு வலிக்காமல் மாட்டிவிட்டான்.
“நீயா போட்டுக்கவா வாங்கி வச்சேன்? என் பொண்டாட்டிக்கு ஆசையா அவ கண்ண பாத்துட்டே போட்டு விட தான் வாங்குனேன்”
அதனை போட்டுவிட்டு அவள் கையை திருப்பி திருப்பி ஒவ்வொரு கோணங்களில் அழகு பார்க்க அவன் ஆசையே அவளை அதிகமாக புன்னகைக்க வைத்தது.
“ரொம்ப அழகா இருக்குங்க” என்றாள் அவன் புன்னகை பார்த்து.
“உனக்கு தாலி செயின் எடுக்குறப்போவே எடுத்துட்டேன். இப்போ தான் குடுக்க நேரம் வந்துருக்கு போல… சரி எனக்கு எப்போ வாங்கி தர போற?” – தேவா
“என்கிட்ட காசு இல்லையே…” – பைரவி
“என் காசு உன் காசு தான், ஆனாலும் நீ உன் காசுல தான் எனக்கு மோதிரம் வாங்கி தரணும். மோதிரம் இல்லைனாலும் பரவால்ல ரொம்ப நாள் செயின் வாங்கணும் ஆசை” – தேவா
“அதான் போட்டிருக்கிங்களே” அவர்கள் திருமணத்தின் பொழுது அவள் வீட்டின் சார்பில் போட்ட சங்கிலியை காட்டினாள்.
“அது என் மாமா எனக்கு போட்டது. என் பொண்டாட்டி எனக்கு பிளாட்டினம் போடுவா” – தேவா
“அப்போ நான் உங்க கூட தோட்டத்துக்கு வேலை பாக்க வரவா?” – பைரவி
“பார்றா என் பொண்டாட்டிக்கு மரம் எல்லாம் ஏற தெரியும் போலயே” – தேவா
“மரம் ஏறணுமா?” – பைரவி
“பின்ன, தென்னந்தோப்புல மரம் ஏறி தானே இளநி பறிக்கனும்?” – தேவா
“இளநி பறிக்கணுமா?” – பைரவி
“சரி அப்போ என் காளைகளை பாத்துக்குறியா?” – தேவா
“காளையா?” – பைரவி
“என்னடி எதுக்கு எடுத்தாலும் இம்புட்டு ஷாக் ஆகுற?”
“பின்ன எனக்கு வர்ற மாதிரி ஈஸியான வேலை சொல்லுவிங்கனு பாத்தா இவ்ளோ கஷ்டமானதா சொல்றிங்க” – பைரவி
“இதெல்லாம் கஷ்டமா? எங்க ஊர்ல பல்லு போன கிழவி கூட அழகா மரம் ஏறும்” – தேவா
“ம்ம்ம் அவங்க எல்லாம் அங்கையே இருந்து வேலை செய்றாங்க, எனக்கு அப்டி இல்லையே” – பைரவி
“சரி அப்போ உனக்கு வர்ற மாதிரி ஈஸியான வேலைனா என்ன வேலை?” – தேவா
“இந்த கணக்கு பாக்குறது” – பைரவி
“நாளைக்கே வா, அங்க இருக்க கணக்குபிள்ளைய நான் அனுப்பி விட்றேன்” – தேவா
“ஆஆ… வேணாம் வேணாம். அவர் பாவம்” வேகமாக மறுத்தாள் தனக்காக மற்றவர் வேலை போவதை எண்ணி.
சோகமாக முகத்தை தூக்கி வைத்திருந்த மனைவியை பார்த்தவன், “பேசாம வயலுக்கு வந்தரியா? ஒரு நாளைக்கு நானூறுல இருந்து ஐநூறு வர காசு வரும்” – தேவா
“ம்ம்ம் ம்ம்ம்” ஆர்வமாக அவன் மனைவி தலையை ஆட்ட, “பாம்பு, நண்டு அதெல்லாம் வரும் பரவல்லையா?” பயத்தில் விழிகள் பெரிதாகி நடனமாட மாட்டவே மாட்டேன் என ஆட்டினாள்.
பெருமூச்சை விட்டு, “இனி என்கிட்ட வேற வேலை இல்லப்பா” என்றான் சோகமாக.
ஆனாலும் அதோடு விடாமல், “எது எப்டியோ எனக்கு நீ செயின் வாங்கி தரணும். பிளாட்டினம் செயின் தான் வேணும்” தூரத்தில் இருந்த தட்டை எடுத்து பிரியாணியை உண்ண துவங்க, அவனையே பாவமாக பார்த்தாள் அவன் மனையாட்டி.
“நல்லா யோசி டைம் இருக்கு. இப்ப சாப்புடு” என்றான் அவள் நாற்காலியை உணவை நோக்கி திருப்பிவிட்டு. யோசனையிலே உணவு உள்ளே இறங்க தேவா அந்த மீன் குழம்பை எடுக்க சென்ற நேரம் அவன் கையை தட்டிவிட்டு,
“அது எனக்கு” என்றாள் காட்டமாக.
“ஏய் எனக்கும் அதுல பங்கு இருக்கு, தா டி” என்றான்.
“மாட்டேன்” குழம்பை அவன் கை எட்டாவகையில் தள்ளி வைத்து, “மசாலா அம்மில அரைச்சிங்களா?” கணவனிடம் கேட்டாள்.
“ஆமா ஆமா, தோப்புல எல்லாம் மிக்சி, கிரைண்டர் இருக்காது. அங்க என்ன இருக்கோ அந்த பொருள் வச்சு தன் செய்வாங்க” என்றான் தேவா.
“ரொம்ப பிரெஷா இருக்கு” ரசித்து ரசித்து இரண்டு தோசையை விழுங்கியவள் மாலை மீதம் இருந்த சாதத்தையும் கொஞ்சம் வைத்து விறல் சூப்பி உண்டாள்.
“நீ அழுதுட்டு இருந்தப்போவே நான் கமுக்கமா எடுத்துருக்கணும்” சின்ன சிரிப்போடு இருவரும் இதமான மன நிலையில் உறங்க சென்றனர்.
காலை எழுந்தவுடன் கிராமத்திற்கு செல்லாமல் நிதானமாக நடைப்பயிற்சி சென்று வந்த மகனை அதிசயமாக பார்த்த அவன் தந்தை, “என்னடா வேலை இல்ல போல. எந்நேரமும் சும்மாவே சுத்துற?” “நான் என்ன வாத்தியாரா சும்மாவே இருக்க” – தேவா
“டேய் என்ன தான் இருந்தாலும் ஊருக்குள்ள எனக்கு இருக்க மரியாதை உனக்கு வருமா?” – ராஜரத்தினம்
இருவரும் பேசிக்கொண்டிருந்ததை சமையலறையிலிருந்து கேட்ட பைரவி இருவருக்கும் தேநீர் கொடுத்து, “காலேஜ்ல பசங்ககிட்ட மரம் நடுங்க, விவசாயம் பண்ணுங்க சொல்ற நீங்க உங்க வீட்டுல ஒருத்தர் விவசாயம் பண்ணா ஏன் மாமா ஏத்துக்க மாட்டிக்கிறீங்க?”
“அப்பாவும் மகனும் தான் பேசிட்டு இருக்காங்க, நீ எதுக்கு இப்ப நடுல வந்து நிக்கிற?” பைரவியை அங்கு வந்த நாயகி அதட்டினார்.
“கஷ்டப்பட்டு எம்.பி.எ வர படிக்க வச்சு மாட்டு சாணத்தையும், சேத்தையும் அள்ளுறத பாக்கவா ம்மா? இவன் நல்லா படிப்பான். இவன விட மக்கா இருந்தவனுங்க எல்லாம் இன்னைக்கு பெரிய பெரிய வேலைல இருக்கப்போ என் மகன் காசுக்கு கஷ்டப்பட்டு இருக்குறத என்னால பாக்க முடியுமா சொல்லு?” அவருக்கு ஆதங்கம் அவன் வாழ்க்கையை எண்ணி.
“நீங்க அசிங்கமா நினைக்கிற அதே மாட்டு சாணத்தை தான் மாமா ஒரு காலத்துல தினமும் மிதிச்சு வீட்டை விட்டு வெளிய போவோம். அன்னைக்கு மருந்தா தெரிஞ்சது இன்னைக்கு அசிங்கமா இருக்கா? நீங்களும் தான் பெருமையா சொல்லுங்களேன் எல்லார்கிட்டையும் என் மகன் விவசாயம் பாக்குறான்னு.
நீங்க சொல்ற பெரிய பெரிய வேலைல இருக்கவன் இன்னைக்கு வேணா கை நிறையா காசு சம்பாதிக்கலாம். இன்னும் இருவது வருசத்துல நிலம் இருக்கவேணும் விவசாயம் பண்றவனும் தான் கோடீஸ்வரன்.
எனக்கு என்னைக்கும் பெருமை தான் மாமா, அவங்க உழைச்சு நாலு பேர் அந்த சாப்பாடை சாப்பிடுவாங்கன்னு. ஏன் உங்களுக்கு நேத்து நைட் குடுத்தேனே அந்த மிளகு பால் கூட இவர் தோட்டத்துல விளைஞ்ச மிளகு தான்”
மனைவி பேசியதை சுவாரஸ்யமாக கேட்டு வந்த தேவா ஒரு கட்டத்தில் அவளது வார்த்தையை தவிர்த்து அவளையே அணு அணுவாக ரசிக்க துவங்கினான்.
கோவத்தை சிறிதும் காட்டாமல் கோவமாய் பேசினாள், “வீட்டை சுத்தி வச்சிருக்க அந்த பத்து செடியை ஆசையா பாத்துக்கணும்னு நினைச்சு டெய்லி ஒரு மணி நேரம் அத ரசிச்சு ரசிச்சு பாக்குறப்போ வர்ற சந்தோசம், உங்க மகன் ஆயிரம் மரத்த, லட்சம் பயிரை ரசிக்கிறப்போவும் வரணும் மாமா.
நாலு வார்த்தை தெரிஞ்சா மட்டும் போதுமா? நாளும் தெரிஞ்சிருக்கணும்னும், நாலு மனுசங்க மனசையும் படிக்க தெரிஞ்சிருக்கணும்னும்”
“அடடே”, இல்லாத தேநீரை உறிஞ்சி உறிஞ்சி குடிக்கும் கணவன் கையிலிருந்த டம்ளரை வலுக்கட்டாயமாக பிடுங்கியவள் அத்தை தன்னை எதுவும் பேசும் முன் சமயலறைக்குள் ஓடிவிட்டாள்.
மகனை எவ்விடத்திலும் விட்டுக்கொடுக்காத மருமகள் கிடைத்ததில் மகிழ்வதை விட்டு, கணவனை எதிர்த்து நின்று கேள்வி கேட்கும் மருமகளை நாயகி கோவமாக முறைத்து அறைக்குள் சென்றிருக்க, ராஜரத்தினம் எதுவும் பேசாமல் வழக்கம் போல் மகனை முறைத்து வேலைக்கு தயாராக சென்றுவிட்டார்.