“ஆங்….”என்று ஏதோ தூக்கத்தில் இருந்து விழிப்பவள் போல் விழித்தாள் மிருதுளா.
“போச்சு….இன்னைக்கும் கனவுக்கு போயிட்டியா…..முதலாளி வாரார்டீ…வேலையை பாரூ…..”என்று அவளின் கையில் ஒரு கவரை திணித்தபடி படியே கூறினாள் திவ்யா.
“சாரி டீ….ஏதோ…”என்று திக்கி திணறியவளை வாஞ்சையுடன் பார்த்த திவ்யா,
“புரியுது டீ….”என்று விட்டு தன் வேலையை தொடர,மிருதுளாவும் தன் கையில் உள்ள கவரில் பருப்பை நிரப்பி அதன் எடை மற்றும் விலையை அதில் ஒட்டி அதற்கு உண்டான இடத்தில் அடுக்கி விட்டு அடுத்த பொருட்களை பாக்கெட் போட சென்றாள்.
இரவு எட்டு மணியானது அவர்கள் இருவரும் வீடு திரும்ப.திவ்யாவும்,மருதுளாவும் அந்த சிறிய ஒட்டு விட்டில் நுழையவும்,
“வாங்கமா போய் முகத்தை கழுவிட்டு வாங்க….இப்ப தான் சாப்பாடு எல்லாம் உங்களுக்கு எடுத்து வச்சேன்….”என்று சாப்பாட்டு தட்டை வைக்க,
“ம்ம்மா….எத்தனை தடவை செல்லுறேன்…..நீங்க இதெல்லாம் செய்யாதீங்கனு….”என்றவள் அவரை இழுத்து அமர்த்திவிட்டு வேகமாக சென்று கை,கால் முகத்தை கழுவிட்டு வந்தாள்.
“இப்ப என்னத்துக்குடீ இப்படி முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு இருக்க….சும்மாவே இருக்க முடியல அதான் ஏதோ என்னால ஆனத செய்யுறேன்….அதுக்கு இப்படி எரிஞ்சு விழுற….நானே என்னால என் பொண்ணு கஷ்டபடுறாளேனு தினமும் மனசொடுஞ்சி போயிருக்கேன்…இதுல இப்படியே உட்கார்ந்தே இருந்தா செத்தே போயிடுவேன்….”என்று நாயகி கலங்கிய கண்களை புடவை முந்தானையால் துடைக்க,
“சரி நீயும் அந்த ஆள் மாதிரி போயிடு…..”என்றுவிட்டு சாப்பிடாமல் எழ,அதுவரை தாய்,மகள் இடையே வராமல் அமைதியாக இருந்த மிருதுளா,
“திவி….”என்று அதட்டவும்,
“ஏய் நீ இவ்வளவு நேரம் அமைதியா தான நின்ன…இப்ப என்ன….”என்று அவளிடம் எகிறியவள்,மிருதுளாவின் கசங்கிய முகத்தைக் கண்டு லோட்டாவில் இருந்த தண்ணீரை பருகி தன்னை கொஞ்சம் சமன் செய்து கொண்டே,
“சாரி மிருது…..சாரி….”என்று அவளின் கரத்தை பற்றி கூற,அவளின் கைகளின் மீது தன் கரத்தை வைத்தவள்,
“விடு திவி….”என்று குரல் கமற கூறினாள்.
“இப்ப எதுக்குடீ அந்த புள்ளைய திட்டுற….அதுவே பாவம் தன் வாழ்க்கை….”என்று நாயகி ஆரம்பிக்க மகளின் முறைப்பில் தன் பேச்சைவிட்டார்.
“சரி சரி பேசல நீங்க சாப்பிடுங்க….”என்று இருவருக்கும் பரிமாற,திவிக்கு நல்ல பசி அவள் எதையும் யோசிக்காமல் சாப்பிட,மிருதுளா எப்போதும் போல் சாப்பாட்டை அளந்த படி இருந்தாள்.
“இந்தா சாப்பிடு புள்ள….எப்ப பாரு சாப்பாட்டை அளந்துகிட்டு இருக்க….”என்று நாயகி கடிய,அவரை பார்த்து மெல்லிய புன்னகை புரிந்தவள் சாப்பாட்டை வாயில் வைக்க அதுவோ இருங்குவேனா என்று அடம் பிடித்தது.என்ன தான் தன்னை வெளியில் பலமானவளாக காட்டிக் கொண்டாலும் அவளும் சாதாரண மனுஷி தானே அவ்வபோது உடைந்து தான் போகிறாள்.
“ப்ச்….மிருது….சாப்பிடு….”என்று திவ்யா அதட்டல் போடவும் மீதம் இருந்த உணவை கொரித்துவிட்டு எழுந்துவிட்டாள்.அவளை பார்த்த திவிக்கும் நாயகிக்கும் வருத்தமாக தான் இருந்தது ஆனாலும் ஒன்றும் சொல்லமுடியவில்லை மீறி ஏதாவது கூறினால் நான் உங்களுக்கு பாரமாக இருக்கிறேன் என்று ஆரம்பித்துவிடுவாளே அதனாலே இருவரும் அமைதியாக இருந்தனர்.
இரவு மூவரும் படுக்க போகும் போது மிருதுளா நாயகியிடம்,
“ம்மா….நான் கேட்க சொன்னேனே….கேட்டீங்களா…”என்று கேட்க அவரோ தன் மகளின் முகத்தை பார்த்தார்,
“ஏய் மிருது…நீ என் கிட்ட அடி வாங்க போற….எதுக்கு இப்ப உனக்கு தனி வீடு…..ஏன் எங்க கூட இருக்குறதுல என்ன பிரச்சனை…”என்று கோபமாக கேட்க,
“ப்ச்…என்னையும் கொஞ்சம் புரிஞ்சிக்க திவி….நா….நான்….”என்று அவள் சொல்ல முடியாமல் தேம்ப,
“ப்ச் இந்தா பொண்ணு கண்ணை தொட…..இப்ப என்ன உனக்கு வீடு வேணும் அவ்வளவு தான….நாளைக்கு நம்ம பக்கத்து வீடு காலியாகுது….நான் ஓனர் கிட்ட பேசுறேன்…..நீ கவலை படாம தூங்கு….”என்று கூறிவிட்டு தன்னையே முறைத்துக் கொண்டிருந்த மகளை பார்த்து,
“இந்தா டீ முறைக்காத…..அந்த பிள்ளையோட பக்கத்திலேந்தும் யோசி….அதுவே தன் வாழ்க்கை….”என்றவர் ஆரம்பிக்கும் முன்னே,
“ம்மா…..போதும் நான் எதுவும் சொல்லல போதுமா…..இப்ப தூங்குங்க….நாளைக்கு நிறைய வேலை இருக்கு….”என்றுவிட்டு படுத்துவிட்டாள்.திவ்யா வேலை களைப்பில் உறங்கிவிட,நாயகி மருந்தின் வீரியத்தில் உறங்கிவிட்டார்.மிருதுளா எப்போதும் போல் அந்த இருண்ட வீட்டில் விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தாள் அவளது வாழ்வும் இப்படி தானே இருளடைந்து கிடக்கிறது.இந்த நான்கு மாதங்களில் எவ்வளவு நடந்து முடிந்துவிட்டது.
தன் தோழியின் நினைவில் இருந்தவள் மெல்ல அவளை திரும்பி பார்க்க அங்கோ தலையணை ஒருபுறம் போர்வை ஒரு புறம் என்று அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு வாயில் விரல் வைத்து சிறு பிள்ளை போலவே தூங்கி கொண்டிருந்தாள் திவ்யா.அவளின் முகம் மட்டும் தான் குழந்தை போல் இருக்கும் குணம் முற்றிலும் வேறாக இருக்கும்.
பேச்சிலும் சரி,செயல்களிலும் சரி வயதயை தான்டிய முதிர்ச்சி காணப்படும்.திவ்யாவே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு பரிமளத்தின் முகம் நொடியில் வந்து போக கண்களில் கரகரவென கண்ணீர் இறங்கியது. தன்னை பெற்ற மகளை பார்த்து கொண்டவரை இழந்து,கணவன் என்று பெயரளவில் இருந்தவன் எங்கு சென்றான் என்றே தெரியாமல் தவித்து கொண்டிருந்தவளுக்கு திவ்யாவும்,அவளின் அம்மாவும் அடைக்கலம் கொடுக்கவில்லை என்றால் நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது.
தன்போல அவளின் நினைவும் பின்னோக்கி சொன்றது.ப்பா எத்தகைய கொடுமையான நாட்கள் அவை.வேண்டாம் நினைக்காதே என்று தனக்குள் மனப்பாடம் செயத்தது போல் கூறிக் கொண்டாள்.கண்களை மூடினாலே அன்று மருத்துவமனையில் பரிமளத்தை கண்டதே நினைவிற்கு வந்து அவளை அச்சுறுத்தும்.அந்த நினைவை முயன்று புறம் தள்ளியவளின் மனக்கண் முன் வந்து நின்றான் பரிதி அவனை கண்ட நொடி வேகமாக எழுந்து அமர்ந்துவிட்டாள்.
“அடியே….அத்த ராத்திரியல எந்திரிச்சு…..சாரி பூரினு சொல்லிக்கிட்டு…..படுடீ…..நாளைக்கு வேலை நிறையா இருக்கு….”என்று விட்டு திவ்யா படுத்துவிட்டாள்.மிருதுளாவும் திவ்யா கூறியவுடன் படுத்துவிட்டாள் இனி முழித்திருந்தாள் அவளிடம் திட்டுவாங்க வேண்டுமே.திவ்யா திட்ட ஆரம்பித்தாள் யாராலும் நிறுத்த முடியாது.சரியான சண்டீராணி என்று தன் தோழியை மனதிற்குள் திட்டிவிட்டு படுத்துவிட்டாள்.
காலைவேளை மிருதுளாவிற்கும்,திவ்யாவிற்கும் பென்டு கழன்டது.இன்று புதிய சரக்குகள் வந்திருப்பதால் அனைத்தையும் அதன் தரம் அறிந்து பிரித்து வைக்க வேண்டும்.அதனால் மூச்சுமுட்ட வேலை செய்துவிட்டு அப்போது தான் இருவரும் டீ அருந்தி கொண்டிருந்தனர்.
“திவி…..நாளைக்கு நல்ல நாள்னு அம்மா சொன்னாங்க….அதனால நான் நாளைக்கே பக்கத்துவீட்டு போயிடலாம்னு இருக்கேன்….”என்று மிருது கூற திவ்யா எதையும் காதில் வாங்கி கொண்டது போல் தெரியவில்லை.அவளுக்கு கோபம் இப்படி தனி வீடு என்று போவதில் திவ்யாவிற்கு விருப்பமில்லை அதை பல முறை சொல்லியும் பார்த்துவிட்டாள் ஆனால் மிருதுளா பிடிவாதமாக இருக்க திவ்யா அதன் பிறகு அதை பற்றி பேசவில்லை.ஆனால் மிருது வீடு பற்றி பேசும் சமயங்களில் அவளிடம் முறைத்துக் கொண்டு நிற்பாள்.
“இதை பத்தி பேசினா நான் இப்படி தான் இருப்பேன்….வேற ஏதாவது பேசு……”என்று அழுத்தமாக கூற,மிருதுளாவும் அந்த பேச்சை அதோடு நிறுத்திவிட்டு வேறு பேச பின் இருவருக்கும் பேச்சு வேலை என்று அன்றைய நாள் கழிந்தது.இரவு எட்டு மணிக்கு பணி முடிந்து இருவரும் திரும்பும் போது மிருதுளா,
“திவி….நீ போ நான் பார்த்துட்டு வரேன்….”என்று விட்டு முன்னே சென்றாள்.திவ்யாவிற்கு கோபம் தான் இருந்தும் எதுவும் கூறவில்லை.மிருதுளா நேராக பரிமளத்தின் குடுசை இருக்கும் பகுதிக்கு சென்று பார்த்துவிட்டு வந்தாள்.இது தினமும் நடப்பது தான் பரிதி வந்துவிட்டானா என்று தினமும் காலையும்,மாலையும் பார்த்துவிட்டு விசாரித்துவிட்டு தான் வருவாள்.திவ்யா முதலில் அவன் தான் விட்டு சென்றுவிட்டானே ஏன் தேடுறுகிறாய் என்று கோபமாக கேட்க,
“ம்ம்ம்….காரணமா தான் உனக்கு அது புரியாது விடு…..”என்றுவிடுவாள்.திவ்யா பலமுறை திட்டிபார்த்துவிட்டு எப்படியோ போ என்று விட்டுவிட்டாள்.இன்றும் பார்த்துவிட்டு வீடு வந்தவளை,
“ம்ம்….என்ன உன் மகாராஜா வரலையா…..”என்று திவி நக்கலாக கேட்க,மிருது புன்னகை மட்டும் பதிலாக தந்துவிட்டு போக,திவ்யாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது.
“ஏய் நானும் உன்னை எவ்வளவு திட்டுறேன்….நீ என்னடானா இளிச்சிட்டு போற….ஆங்….அப்படி என்னடி உனக்கு வீம்பு….உன்னை வேணாம்னு சொன்னவன் பின்னாடி நீ ஏன் போற தூக்கி போடு அவனை….”என்று திவ்யா ஆவேசமாக கத்த,
“ம்மமா….அமைதியா இரு….இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்….அவன் இவளை ஒரு பொருளா கூட மதிக்கலை….இவ என்னடானா தினமும் அவனை தேடிக்கிட்டு திரியுறா….யார் கண்டா அவனுக்கு வேற கல்யாணம்…..”என்றவள் மேலும் கூறும் முன்,
“திவீவீவீ…..போதும்…..”என்று மிருதுளாவின் குரல் ஓங்கி ஒலிக்க,நாயகி பயந்துவிட்டார்.என்ன இருந்தாலும் அது அவளின் குடும்ப விஷயம் அதை வெளியில் பேசுவது சரியில்லை என்று மகளுக்கு எத்தனையோ முறை கூறி பார்த்துவிட்டார் ஆனால் திவ்யாவிற்கு மிருதுளாவின் மீது தனி பிரியம் அதன் பொருட்டே அவளின் இந்த கோபம் ஆனால் மிருதுளா தன் பெண்ணை தவறாக நினைத்துவிடுவாளோ என்று நினைத்தவர்,
“திவ்யா….நீ இதை பேசக்கூடாது….”என்று திவ்யாவை பார்த்து கூற திவ்யா அமைதியாகிவிட்டாள்.நாயகி மிருதுளாவிடம் திரும்பி,
“மன்னிச்சிடுமா…ஏதோ உன் மேல உள்ள பிரியத்துல பேசிட்டா நீ தப்பா நினைக்காத…”என்று கூற மிருதுளா வேகமாக வந்து அவரைக் கட்டிக் கொண்டவள்,
“ம்மமா….என்னதிது மன்னிப்பெல்லாம் கேட்டு என்னை சங்கடபடுத்தாதீங்க….எனக்கு கஷ்டமா இருக்கு….ம்மா…சில விஷயங்களை நான் யார்கிட்டேயும் பகிரந்துக்க முடியாது அது….”
“புரியுது…”
“மன்னிச்சிடுங்க….”என்று மிருதுளா கூற,
“நீ எதுக்குமா மன்னிப்பு கேட்குற….எனக்கு புரியுது…..என்ன இருந்தாலும் பரிதி உன் புருஷன் விட்டுக் கொடுத்துக்க முடியாது…..”என்று நாயகி கூற,மிருதுளா மௌனமாக தலைகுனிந்தாள்.அங்கு திவ்யாவோ மிருதுளாவை முறைத்தபடி நின்றாள்.
“ப்ச் இப்படி முறைளைக்காதடீ…….நீ என்ன திட்டினாலும் என்னை அடிச்சாலும் நான் அவரை தேடுவேன்….ஏன் தேடுற அவன் தான் உன்னை விட்டுட்டு போயிட்டான்னு நீ சொன்னாலும் நான் தேடுவேன்….ஏனா நான் பரிதியை விடுறதா இல்லை….போதுமா உனக்கு பதில் கொடுத்துட்டேன்….”என்று மிருதுளா திவ்யாவிடம் நெருங்கி கூற,
“ப்பா அப்படி என்ன லவ்வோ….போ…..”என்று கூற,
“காதலா….ம்ம்…அப்படினா….திவி…எனக்கு தெரியலை இந்த காதல் எப்படி இருக்கும்னு எனக்கு நிஜமா தெரியலை…ஆனா….ஆனா என்னால அவரை விட முடியாது….”என்று தீர்க்கமாக கூற திவ்யா அவளை அணைத்துக் கொணாடாள்.
“சரி இனி இப்படி பேசமாட்டேன்….போதுமா….இப்ப வா சாப்பிடலாம் பசிக்குது…..”என்று கூறி அவளையும் இழுத்து சென்றாள்.
மிருதுளா கூறியது போலவே மறுநாள் காலையே திவ்யாவின் பக்கத்துவீட்டிற்கு வாடகைக்கு மாறிவிட்டாள்.
“இருந்த ஒரே கம்மல் அதையும் வித்துட்டு இப்ப நீ தனியா வீட்டுக்கு போகனும் ஏன் நிக்குற….”என்று திவ்யா கத்திக் கொண்டே தான் இருந்தாள் ஆனால் மிருதுளா அதை எல்லாம் காதில் வாங்கவில்லை.
“சரி தான் போடீ….”என்று திவ்யா முறைத்துக் கொண்டு நின்றாலும் மிருதுளாவிற்கு உதவியும் சொய்தாள்.உண்மையான நட்பு எதற்காகவும் நட்பை விட்டுக் கொடுக்காது திவ்யா,மிருதுளாவின் பிணைப்பும் அப்படியே என்ன நிகழ்ந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.இதோ மிருதுளா தனியாக வந்து மூன்று நாட்கள் கடந்துவிட்டது.சாப்பாடு என் வீட்டில் தான் இரவு மட்டுமே மிருதுளா அவளின் வீட்டிற்கு செல்ல அனுமதி என்று திவ்யா கராராக கூறிவிட்டாள்.
மிருதுளா எப்போதும் போல் வேலை வேலையை விட்டால் பரிதியை தேடுவது என்று அவளின் நாட்கள் கழிந்தது.அவளின் நீண்ட நாள் காத்திருப்பின் பலனும் ஒருநாள் அவளுக்கு கிடைத்தது.பரிதியின் வருகை அவள் வாழ்வை மீண்டும் திசை திருப்ப காத்திருந்தது.ஆனால் இம்முறை அவனின் இரும்பை ஒத்த இதயத்தை மிருதுளா அசைப்பாள்.அவனின் இதயத்திலும் துடிப்பு இருக்கிறது என்பதை உணர வைப்பாள்.இரும்பில் இருந்த இதயமும் துடிக்கும் அவளிற்காக.