தர்ஷி மற்றும் அவந்தி ஹாஸ்டெலில் இருந்து கல்லூரிக்கு வருகையில் அவந்தியின் தொலைபேசி சத்தமிட, அதில் ‘நந்து’ என்று மின்ன, இதை பார்த்த தர்ஷியோ.. “நீ கலக்குடி.. எங்கேயும், எப்போதும்..” என்று எதுவோ கூற வர,
“நீ கிளம்புடி.. நான் பேசிட்டு வரேன்.. அப்பறம் என்ன சொல்ல வந்தனு சொல்லு..” என்று அவளை பார்த்துக் பழிப்பு காட்டிவிட்டு போனை அட்டென்ட் செய்ய,
“அடப்பாவி.. ஒரு போன் வந்ததும் எப்படி கூட வந்தவளை கழட்டி விட்டுட்டு போறா பாரு.. அய்யயோ! இப்படியெல்லாம் ஆளு இல்லாத பிரெண்ட் தான் புலம்புவாங்க.. ஆனா, நமக்கு ஆளு இருந்தும், நம்ம நிலைமை இப்படியா ஆகணும்.. உனக்கு வந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாதுன்னு வேண்டிக்கோ தர்ஷி..” என்று தன போக்கில் பேசிக் கொண்டே சென்றாள்.
இங்கு அழைப்பை எடுத்த அவந்தியோ, “குட் மோர்னிங் டாக்டர்.. வீட்டுக்கு வந்தாச்சா..”
“ஹ்ம் அதி.. இப்போ தான்..”
தான் அழைப்பை எடுத்து ஹலோ சொன்னவுடன், அவனின் குரலில் வெளிப்படும் அந்த ரசனையான துள்ளல் இப்பொழுது இல்லாமல் போக, “என்னாச்சு நந்து.. ரொம்ப சோர்வா இருக்கீங்க.. பிஸி நைட்?..”
அவள் தன் குரலின் மாற்றத்தைக் கண்டு கேட்டதில், சிறு உவகைப் பொங்க, “ஆமா, அதியை பாக்கணும் போல இருக்கு..”
“சரி இருங்க, நான் கொஞ்ச நேரத்துல வந்து கூப்பிடுறேன்..”
“ஹே.. நான் சும்மா தான் சொன்னேன்.. நீ கிளாஸ்க்கு போ.. ஈவினிங் வந்துட்டு பேசலாம்..” என்றான் அவசரமாக,
“இல்லங்க .. டிபார்ட்மெண்ட் போனாலும் இதே தான் மண்டைக்குள்ள ஓடும்.. சோ வெயிட் பண்ணுங்க.. ஐ காள் யு பேக்..” என்று கூறி வைத்துவிட்டாள்.
அவளின் பதிலில் இவனோ மெய் சிலிர்த்து அப்படியே அவனின் கட்டிலில் அமர்ந்து விட்டான்.
அடுத்த கால் மணி நேரம் சென்று அவள் இவனிற்கு போன் செய்ய,
“அதிக்குட்டி..ஈஈ..” என்று அவளை பிரம்மிப்புடன் பார்க்க,
“சொல்லுங்க நான் தான்.. என்ன ஆச்சு டாக்டர்க்கு?”
“நீ என்னனு சொல்லிட்டு திரும்ப ஹாஸ்டல் வந்த.. அதுவும் இவ்வளோ சீக்கரம்.. நான் உன்னைய அந்த அளவுக்கு ஆக்கிரமிக்குறேனா முயல் குட்டியை..” என்று மென்னகையுடன் வினவ,
“எப்படியோ வந்தேன்.. நீங்க சொல்லுங்க.. என்னமோ பியூஸ் போன பல்பு மாறி பேசுனீங்கனு நான் ஹச் . ஓ . டி ட்ட எமெர்ஜெண்சினு சொல்லிட்டு வந்தா, இப்போ பேச்யெல்லாம் நல்லா வருது..”
“ஹா ஹா.. அதான் அதி வந்து எனர்ஜி ஏத்திட்டாங்களே எனக்கு..”
“இதுலாம் போங்கு.. நீங்க ஓகே வா..”
“ஆமாடா முயல் குட்டி.. ஐம் பெட்டெர்.. ஒரு கேஸ்னால கொஞ்சம் அப்செட்.. அதான்”
“ஓஹ்.. என்னாச்சு.. நீங்க தான் நிறைய கேஸ் பாத்துருப்பீங்களே?..”
“கண்டிப்பா.. நிறைய நிறைய இருந்திருக்கு.. கொஞ்ச நேரம் ஒரு மாறி இருக்கும்.. அப்பறம் வேற கேஸ் வந்ததும் இது அப்படியே ஒரு மூளைக்கு போய்டும்.. பட் இன்னைக்கு எதோ கொஞ்சம் வேற மாறி ஆகிட்டு..”
“என்னனு சொல்லுங்க..”
“சொன்னா.. நீ எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு தெரியலே எனக்கு.. கண்டிப்பா அழக் கூடாது.. அப்படினா சொல்லுறேன்..”
அவனை பாவமாய் பார்த்து, அழமாட்டேனு சொல்லமாட்டேன். ஆனாலும், நீங்க சொல்லுங்க நானும் பழகிக்கணும்ல என்று கெஞ்சலாய் கேட்க,
“இது என்ன பதில்.. அதி.. அப்போ வேணாம் விடு..”
“ஏங்க நந்து.. ப்ளீஸ்..”
“சொல்லுறேன் சொல்லுறேன்..நீ இனிமே இப்படி மூஞ்சிய பாவமா வச்சிக்காத..”
“சரி.. முதல்ல சொல்லுங்க..”
ஒரு கார் ஆக்ஸிடென்ட் கேஸ், ஒரு நாலு வயசு பொண்ணுக்கு ரெண்டு காலும் முட்டிக்கு கீழ போயிடுச்சிடா.. இனிமே ஒன்னும் பண்ண முடியாது. அதை தான் லாஸ்ட் நைட் ஆபரேஷன் பண்ணுனேன். நல்லவேளை காலைல அந்த பொண்ணுக்கு சீக்கிரமா கான்ஷியஸ் வந்துருச்சி, நமக்கே எப்படி வலிக்கும்.. அப்போ அந்தப் பொண்ணுக்கு யோசிச்சி பாரேன். அதும் இப்போ அந்த பொண்ணுக்கு இடுப்புக்கு கீழ உணர்ச்சியே இருக்காது..” என்று பேசிக்கொண்டே அவளை பார்க்க,
அவள் சத்தமில்லாமல் அழுக, இதுக்கு தான் சொன்னேன்..என்று நந்தா அவளிடம் சொல்ல, நீங்க சொல்லுங்க என்பது போல் கண்ணை துடைத்துக் கொண்டே “அந்த பொண்ணுக்கு இந்த வயசுல என்ன தெரியும்.. அச்சோ, என்னால யோசிக்கவே முடியலப்பா.. அந்த பாப்பா என்ன பண்ணுவா.. என்று தேம்பி அழுக,
“அதி ப்ளீஸ்.. இதுக்கு தான் சொன்னேன்.. பாரு நீ இப்போ எப்படி அழுறனு..”
“என்னால முடியல நந்து.. பாவம்ல.. அவங்க அப்பா, அம்மா எல்லாம் எப்படி இருகாங்க?”
அவனோ அதற்க்கு பதில் சொல்லாமல், “உனக்கு கிளாஸ் எப்போ அதி..?”
“ஹான்.. நீங்க சொல்லுங்க.. நான் ஒரு ஒன் ஹவர்ல போனும்..”
“சரி எழுந்து பேஸ் வாஷ் பண்ணிட்டு வா..”
“நீங்க சொல்லவே இல்லையே.. நான் கேட்டதுக்கு..”
“அதி.. நான் சொன்னா அதுக்கும் சேர்த்து அழுவ.. அதான் சொல்லல.. உனக்கே தெரிஞ்சிருக்கும் இந்நேரம் நான் ஏன் பதில் சொல்லலைனு..”
“நந்து என்று அதிர்ச்சியாகி.. எப்படி நீங்க ஈசி ஆஹ் சொல்லுறீங்க.. காள் இல்லனு தெரிஞ்சே என்னால அந்த பாப்பாவ பத்தி அதுக்கு மேல யோசிக்க கூட முடியல.. இதுல அவளோட அம்மா, அப்பாவும் என்று திரும்பி அழுதுக் கொண்டே, நந்து.. ஏன்..?.. என்று மேலும் அழுகை கூட,
“பச்.. அதி.. அதி.. இங்க பாரு.. என்னைப்பாரு.. இப்படி அழாதே காலைலயே.. இங்க பாருடா.. அதான் லைப் அதி.. அது தான் நிதர்சனமும்.. நீ புரிஞ்சிக்கணும் இதை முதல்ல..”
“எப்படிப்பா.. என்ன பேசுறதுனுக் கூட தெரியல..”
“அதி.. நீ முதல் தடவை எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுற.. அதுனால இப்படி இருக்கு.. இது நேச்சுரல்..”
“அப்போ நீங்க ஏன் காலைல அப்படி பேசுனீங்க..”
இங்க பாரு அதி.. அந்த இம்பாக்ட் எனக்கும் இருக்கும்.. பட் டாக்டர்ஸ்க்கு இறப்புன்றது அவங்களோட ஒரு பார்ட். ஒவ்வொரு டாக்டரும் நோயாளியோட இறப்பை, அவரவர் வழியில தான் அதை கையாளுவங்க. இதல்லாம் அவங்க கடந்து தான் வரணும். ஒரு டாக்டரோட வேலை என்னனா டாக்டர்க்கும், பேஷண்ட்க்கும் இடையே உள்ள நேர்மையான, நல்ல விஷத்தை மட்டும் தான் நினைவுல வச்சிப்பாங்க எப்போதும்.. அது தான் அவங்களை மத்த பேஷண்ட்ஸ் கிட்ட கவனம் செலுத்த வைக்குது..
“எதோ சொல்லுறீங்க.. எனக்கு ஏதும் இப்போ மண்டைக்குல ஏற மாட்டேங்குது.. எனக்கு நீங்க சொன்னதே தோணுது..”
“ஓகே.. ரிலாக்ஸ்.. நீ போயிட்டு முதல்ல ரெப்பிரேஷ் பண்ணிட்டு வா..”
அவள் இன்னும் தெளியாமல் இருப்பது இருக்க, இனிமே, இவக்கிட்ட எதையும் சொல்லக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டு, அவளை கொஞ்சம் திசை திருப்பும் பொருட்டு, “அதி.. அதான் பெர்மிஸ்ஸின் சொல்லிருக்கியே.. அப்படியே லீவு போடுறியா?.. “
“என்ன!.. போச்சு மணி ஆகிட்டா.. நான் வேற பெர்மிஸ்ஸின் சொல்லிட்டு வந்தேன்..”
“அதுலாம் எப்பயோ முடிஞ்சிட்டு.. நீ சொல்லு எங்க போலாம்னு.. நம்ம முதல் சந்திப்பு தான் ஒழுங்கா நடக்கலை, இப்போ மறுபடியும் சந்திப்போமா?”
“பாருடா.. அதிக் குட்டி கொஞ்சம் தெளிஞ்சிடங்கப் போலயே..இனிமே நீ எப்படி பாவமாய் மூஞ்சிய வச்சிக் கேட்டாலும் நானும் சொல்ல மாட்டேன்..”
“அதுக்கு தானே இப்படி பேசுனீங்க.. அப்பறம் என்ன?”
“அப்படிலாம் ஒன்னும் இல்லையே.. தேவி தான் வரம் புரிய மாட்டேங்குறீங்க.. அதான் இன்னைக்காவது கிடைக்குமான்னு பாத்தேன்.. எங்க, நமக்கு கடைசி வரைக்கும் விமோட்சணம் கிடைக்காது போலயே..”
“ஆரம்பிச்சிட்டீங்களா.. போதும்.. அப்படியே என்னைய டைவர்ட் பண்ணிடுங்க நீங்க.. நான் கிளப்புறேன்.. மணி ஆகிடுச்சு..”
“என்னடா! தங்க பொண்ணு இப்படிலாம் சொல்லுற.. உன் நந்துவை நீயே இப்படிலாம் சொல்லலாமா..”
“போங்க நீங்க.. நான் கிளம்புறேன்.. ஈவினிங் பேசலாம்..”
“எங்கயும் போல.. வீட்டுல தான் இருக்கேன்.. நீ வேணும்னா வந்து பாரு, நான் இருப்பேன்..” என்று கண்ணடிக்க,
“உங்களை..”
“என்னை இன்னும் என்னை செய்ய போகிறாய் அன்பே அன்பே..” என்று பாடிக் கொண்டே கண்ணடிக்க,
அவளோ,”நான்.. கிளாஸ்.. லேட்..” என்று அவனை பார்க்காமல் எதையோ உளறிவிட்டு போனை அணைத்துவிட்டாள்.
“ஹ்ம்.. என்ன பண்ணிட்டேன்னு இப்படி ஓடுனா இப்போ.. இதுக்கே இப்படியா?.. நந்தா! உன் பாடு ரொம்ப கஷ்டம் போல..” என்று தானே பேசிக் கொண்டு, சிறிது நேரம் உறங்க சென்றான்.
– – – –
மாலை கல்லூரி முடிந்து அவந்தி, தர்ஷிக்காக காத்திருக்க.. அவளோ இவள் நிற்பதை கண்டுக்காமல் செல்ல, “அச்சோ.. கோவமா இருக்காளா?” என்று நினைத்து கொண்டே, வேகமாக நடந்து அவளுடன் இணைந்தாள்.
“எஸ் மேம்.. என்ன வேணும் உங்களுக்கு ?.. என்னோட சேர்ந்து வரீங்க.. என்னைய உங்களுக்கு தெரியுமா?”
“ரொம்ப பண்ணாதீங்க தர்ஷி மேடம்..”
“யாரடி ரொம்ப பண்ணுனா.. பிரெண்ட காலைல கழட்டி விட்டுட்டு போகும் போது தெரியல?..”
“ஹா ஹா.. நீதானடி என்கிட்ட எப்போதும் சொல்லுவ.. ஒரு நண்பன் அவனோட நண்பனை செருப்பால அடிச்சாக்கூட வாங்கிக்கணும்னு.. பட் நான் உன்னைய கழட்டி மட்டும் தானே விட்டுட்டு போனேன்.. இப்போக் கூட பாரு, நானே சேந்துக்கிட்டேன். ரெண்டுத்துக்கும் கணக்கு முடிஞ்சிட்டு பார்த்துக்கோ..”
“அடப்பாவி.. நீயெல்லாம் நல்லா வருவடி..”
“ஹா ஹா.. தேங்க யு போர் யுவர் காம்ப்ளிமெண்ட்ஸ்..”
தர்ஷி, “எப்போடா இங்க இருந்து கிளம்புவோம்னு இருக்கு.. கடுப்பா இருக்கு..”
“இந்த வீக் மட்டும் தானே.. பாத்துக்கலாம் விடு.. இதும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ்” இப்படி இருவரும் எதையோ ஒன்றை பேசிக் கொண்டே ஹாஸ்டெல்லுக்கு சென்றனர்.
இரவு எட்டு மணிக்கு செகண்ட் இயர் மாணவிகளின் பெயர்களை ஆருஷா, அபிநயா, அனிதா, அபர்ணா என்று வரிசையாக அழைக்க, அனிதா எங்கே என்று மறுபடியும் கேட்க, தெரியல மேம் என்று கோரஸ் வர,
அங்கே இருந்த காயத்ரியை பார்த்து, நீ தானே அவளோட ரூம்மேட், “நேத்தியே வார்ன் பண்ணுனேன் தானே அவளுக்கு.. எங்க போயிருக்கா அவ?.. அவ வரலானாலும், அட்டெண்டன்ஸ் எடுக்குற டைம்னு சொல்லி நீ கூட்டிட்டு வர மாட்டியா?..”
“மேம்.. நீ போ.. நான் வரேன்னு சொன்னா மேம்..”
“அப்போ ஏன் இன்னும் வரல?”
“தெரியல மேம்.. நான் போயிட்டு கூட்டிட்டு வரேன் மேம்..”
“அட்டெண்டன்ஸ் எடுத்து முடிச்சதும் போயிட்டு கூட்டிட்டு வா..”
“ஓகே மேம்.”
அவள் எடுத்து முடித்தவுடன் மாணவிகள் கலைந்துச் செல்ல, அவந்தியின் முகம் யோசனையாக இருப்பதை பார்த்து, “என்ன அவந்தி?..” என்று தர்ஷி கேட்க,
“இந்த அனிதா இன்னைக்கு காலேஜ்க்கு வந்தாளா என்னனு தெரியல.. என் கிளாஸ் அட்டென்ட் பண்ணுல.. நானே இப்போ அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது விசாரிக்கணும்னு இருந்தேன்.. இப்பவும் வரல..”
“உன்கிட்ட இன்போர்ம் பண்ணலையா.. காலேஜ் போலன்னு.. “
“இல்ல தர்ஷி.. ஒன்னும் வந்து சொல்லல.. இந்த பொண்ணு எதோ சரியில்ல..அன்னைக்கு” என்று எதுவோ கூற வர,
“மேம்ம்ம்ம்ம்” என்ற அலறல் சத்தத்துடன் காயத்ரி வேகமாக அறையிலிருந்து ஓடி வந்தாள்.