பிடித்தம் 31
மித்ராணியின் மனம் புகழ்வேந்தனை முழுவதுமாக ஏற்றுக் கொண்டாலும் அதை அவனிடம் வெளிபடுத்தாமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தாள். அவன் பார்க்காத போது அவனை ரசிப்பதும், அவன் நெருங்கும் போது விலகுவது போல் பாசாங்கு செய்வதுமாக இருந்தாள். புகழ்வேந்தனும் தனது அல்லிராணியின் மாற்றத்தை அறிந்தும் அறியாதவன் போல் இருந்தான்.
அன்று தனது நிறுவனம் கட்டும் தன்னாட்சி நகரத்தை(Township) பார்வையிட்டுவிட்டு மதிய உணவிற்காக வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்த புகழ்வேந்தன் வீட்டிற்கு செல்லும் வழியில் மித்ராணியை அழைத்துச் செல்ல அவளது ஆடை தொழிலகத்திற்கு சென்றான்.
உள்ளே செல்லாமல் வெளியே தனது மகிழுந்தில் இருந்தபடி அவளை கைபேசியில் அழைத்தான்.
அவள் அழைப்பை எடுத்ததும், “என்ன பண்ணிட்டு இருக்கிற?”
“இப்போ தான் சாப்பிட போறேன்.. நீ சாப்டாச்சா?”
“உனக்காக தான் வெயிட்டிங்”
“என்ன?”
“உனக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கிறேன்”
ஒரு நொடி யோசித்தவள் இருக்கையை விட்டு எழுந்தபடி, “கார்மென்ட் வெளியே இருக்கிறியா இல்லை வீட்டில் இருக்கிறியா?”
“கார்மென்ட் வெளியே காரில் வெயிட் பண்ணிட்டு இருக்கிறேன்”
கைபேசியை மூடியபடி நிவேதாவிடம், “வேந்தன் வெயிட்டிங்.. வீட்டுக்கு போய் சாப்டுட்டு வரேன்..” என்றாள்.
கிண்டலான பார்வையும் தலையசைப்பும் நிவேதாவின் பதிலாக இருக்க, மித்ராணி கண்ணால் அவளை மிரட்டிவிட்டு அவசரமாக அறையை விட்டு வெளியேறினாள்.
பின் வேகமாக நடந்தபடி, “முன்னாடியே சொல்ல மாட்டியா? நான் அல்ரெடி சாப்பிட்டு இருந்தா என்ன பண்ணியிருப்ப?”
“ஜஸ்ட் இப்போ தான் தோணுச்சு.. நீ சாப்பிட்டு இருந்தாலும் கூட்டிட்டு போயிருப்பேன்”
“டூ மினிட்ஸ்.. வந்துறேன்”
“அவசரம் இல்லை.. மெதுவா வா”
“சரி.. காள்ளை(call) கட் பண்றேன்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவள் சொன்னது போல் இரண்டு நிமிடத்தில் வந்து புகழ்வேந்தனின் வண்டியில் அவன் அருகே முன் இருக்கையில் அமர்ந்தாள்.
அவன் வண்டியை கிளப்பியதும் கலைவாணியை கைபேசியில் அழைத்தவள் அவர் அழைப்பை எடுத்ததும், “அத்தை, சாப்பிட நானும் வேந்தனும் வீட்டுக்கு வந்துட்டு இருக்கிறோம்.. கார்மென்ட்டில் இருந்து இப்போ தான் கிளம்புறோம்” என்றாள்.
அவர், “புகழ் இப்போ தான் போன் பண்ணி சொன்னான்”
“ஓ” என்றவள், “நீங்க சாப்டுட்டீங்களா?”
“நீங்க வாங்க.. சேர்ந்து சாப்பிடலாம்”
“சரி அத்தை.. நான் வைக்கிறேன்”
“சரி டா” என்றதும் அழைப்பைத் துண்டித்தாள்.
மித்ராணி அவனை முறைக்க, அவன், “சைட்டில் இருந்து கிளம்பும் போது வீட்டுக்கு போய் சாப்பிடலாம் னு தோணுச்சு.. உடனே அம்மாக்கு போன் பண்ணி சொன்னேன்”
அவள், “பென்டிரைவில் பாட்டு வச்சிருக்கியா?”
அவன் மெலிதாக தோளை குலுக்கி உதட்டை பிதுக்கவும், அவள் பண்பலை வானொலியை(FM radio) இயக்கினாள்.
பாடல்களை கேட்டபடி அன்றை நாளின் முக்கிய வேலைகளைப் பற்றி பேசியபடி வீட்டிற்கு வந்தனர்.
கலைவாணியுடன் பேசியபடி உணவை முடித்துக் கொண்டு அறைக்கு சென்ற புகழ்வேந்தன் ஏதோ யோசித்தபடி சோபாவில் அமர்ந்திருந்தான்.
மித்ராணி, “என்ன யோசனை?”
“காரில் வரும் போது, சிங்கப் பெண்ணே பாட்டு கேட்டோமே! அதுல நடுவில் ஒரு டயலாக் வந்துதே! ‘ஒரு கல்யாணம் ஆன பெண்ணோட வெற்றிக்கு பின்னாடி நிச்சயம் கணவன் இருப்பான்’ னு.. அதை பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கிறேன்”
அவள் இடுப்பில் கைவைத்தபடி அவனை முறைக்க,
அவன், “என்ன?” என்றான் புருவம் உயர்த்தியபடி.
“நீ யோசிக்கிறதை பார்த்து ஸ்பின்னிங் மில் வாங்குறதில் ஏதோ சிக்கலோ னு நினைத்தேன்”
“அதில் ஒரு சிக்கலும் இல்லை.. எல்லாம் பக்காவா ரெடி பண்ணியாச்சு.. அதை நாம தான் வாங்கப் போறோம் னு அவனுக்குத் தெரியாது.. மிஸ்டர் குப்தா அவனிடமிருந்து வாங்கிட்டு உன் பெயரில் மாத்தி தந்திடுவார்.. மிஸ்டர் குப்தா மாத்தி தரதா பத்திரத்தில் சைன் பண்ணியிருக்கார்.. நாளானைக்கு ஸ்பின்னிங் மில் உன் பெயரில் இருக்கும்.. அதை விடு.. இப்போ நான் கேட்டதுக்கு பதிலைச் சொல்லு”
கண்ணில் மட்டும் புன்னகையை தேக்கியபடி அவனை பார்த்தவள் சீண்டும் குரலில், “உன்னை கணவனாவே இன்னும் ஏத்துக்கலை.. அப்பறம் தானே என்னோட வெற்றிக்கு நீ காரணமா இருக்கிறியா னு ஆராய்ச்சி பண்ணனும்!!” என்றாள்.
“ஓ” என்று உதட்டோர புன்னகையுடன் எழுந்தவன் அவளை நெருங்கியபடி, “நான் தான் உன் கணவன் னு உன் மனசில் பதிய வச்சிட்டா போச்சு” என்றான்.
“மெதுவா பதிய வைக்கலாம்.. இப்போ எனக்கு கார்மென்டில் வேலை இருக்குது” என்றபடி அவள் நகர, அவள் கையை பற்றி அவளை நகர விடாமல் செய்தவன் அவளை இடையோடு அணைத்தான்.
அப்பொழுது மித்ராணியின் கைபேசி அலற, அவன் பெருமூச்சுடன் விலக, அவள் புன்சிரிப்புடன் கைபேசியை எடுத்துப் பார்த்தாள். அழைப்பு நிவேதாவிடமிருந்து வர, அதை எடுத்து பேசியவள், “இதோ கிளம்பிட்டேன்.. இன்னும் அரை மணி நேரத்தில் அங்கிருப்பேன்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
மித்ராணி புகழ்வேந்தனை பார்க்க, அவன் வண்டி சாவியை கையில் எடுத்தபடி, “கிளம்பிட்டேன்” என்றான்.
இருவரும் கலைவாணியிடம் கூறிவிட்டு கிளம்பினர். மித்ராணியை அவளது ஆடை தொழிலகத்தில் இறக்கிவிட்டவன் தனது அலுவலகத்திற்கு சென்றான்.
அடுத்த நாள் மாலை நான்கு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிட்டான் புகழ்வேந்தன். கடந்த சில நாட்களாக நேரம் பாராமல் உழைத்ததின் விளைவாக தலை வலி வந்திருக்க, மதியம் மாத்திரை போட்டும் கேட்காததால் சிறிது நேரம் ஓய்வெடுக்க வீட்டிற்கு வந்திருந்தான்.
சிறிது நேரம் உறங்கினான். இவன் வீட்டிற்கு வந்த விஷயம் அறிந்து மித்ராணியும் வீட்டிற்கு வந்தாள். அவள் அறையினுள் வந்த போது அவன் உறக்கத்தில் இருந்தான். அவன் அருகே அமர்ந்து அவனது கேசத்தை மென்மையாக வருடியவள் அவனிடம் அசைவு தெரியவும் கீழே சென்று காபி போட்டு எடுத்து வந்தாள்.
ஒரு தட்டில் இரு கோப்பைகளுடனும் காபி அடங்கிய ஒரு கெண்டியுடனும் அவள் அறையினுள் வந்த போது முகத்தை துடைத்தபடி குளியலறையில் இருந்து புகழ்வேந்தன் வந்தான்.
புன்னகையுடன், “குட் ஈவனிங்.. தலை வலி பரவா இல்லையா?” என்றபடி தட்டை உப்பரிகையில் இருந்த சிறு மேஜையில் வைத்தாள்.
உப்பரிகை செல்லும் நுழை வாயிலில் நின்றபடி அவனும் புன்னகையுடன், “யா.. இட்ஸ் கான்.. போயிந்தே!” என்றான்.
“காபி குடிச்சா இன்னும் பிரெஷ் ஆகிடலாம்” என்றபடி இரு கோப்பைகளிலும் காபியை ஊற்றினாள்.
ஒன்றை அவனுக்கு கொடுத்து மற்றொன்றை தனக்கு எடுத்தபடி அமர்ந்தாள்.
காபியை அருந்தியபடி வந்து அமர்ந்தவன், “காபி சூப்பர்.. நீயா போட்ட?”
அவள் மகிழ்ச்சியுடன், “எஸ்.. நான் தான் போட்டேன்” என்றாள்.
அப்பொழுது லேசாக சாரலடிக்க, மழையை ரசித்தபடி அவள் காபியை பருக ஆரம்பிக்க, அவனோ காபியை விடுத்து தன்னவளின் அழகை பருகிக் கொண்டிருந்தான்.
அவனது பார்வையை உணர்ந்து திரும்பி பார்த்தவள், “காபி குடிக்கலையா?”
“எனக்கு ஸ்ட்ராபெரி சாக்லெட் தான் வேணும்”
ஒரு நொடி காபி அருந்துவதை நிறுத்தியவள், இயல்பாகி உதட்டோர புன்னகையுடன், “நீ கண்டுபிடிக்கவே இல்லையே!” என்றாள்.
பின் பார்வையை தோட்டத்தில் பதித்து காபியை அருந்தியபடி, “என்னவோ இதுவரை டேஸ்ட் பண்ணாத மாதிரி பேசுற?” என்றாள்.
“இரண்டு முறை சாக்லேட்டை ஸ்மெல் பண்ணியிருக்கிறேன்.. சாபிட்டது இல்லையே!” என்றவன் எழுந்து உள்ளே சென்றுவிட,
அவன் சட்டென்று இப்படி எழுந்து சென்றதும், காபி கோப்பையை அந்த சிறிய மேஜை மீது வைத்துவிட்டு இவளும் உள்ளே சென்றாள்.
அவள் உள்ளே வந்ததும் தொலைவியக்கி(remote) கொண்டு உப்பரிகை நுழைவாயிலையும் கண்ணாடி தடுப்பையும் திரைச்சீலையால் மூடியவன் அவளை பார்த்து மென்னகையுடன் புருவம் உயர்த்தினான்.
சிறிது படபடத்த மனதை மறைத்தபடி, “நீ இன்னும் கண்டுபிடிக்கலையே!” என்றாள்.
அவன் அசையாமல் அவளை பார்க்கவும் அவள் சிறு திணறலுடன், “என்ன?” என்றாள்.
அவன் வசீகர புன்னகையுடன்,
“வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்” என்று பாடியவன் அவளை இடையோடு அணைத்து நெற்றியில் முட்டியபடி அதே வசீகர புன்னகையுடன், “அன்னைக்கே உன் வாய் அசைப்பை வச்சே கண்டு பிடிச்சிட்டேன்.. உன் வாயால் கேட்க ஆசைப்பட்டு தான் உன்னை சொல்லச் சொன்னேன்” என்றான்.
அவள் அதிர்ச்சியுடன் பார்க்க, அவன், “மனம் ஒன்ற காத்திருந்தேன்” என்று அவள் அன்று கூறியதை கூறினான்.
அவள், “அப்பவே என் மனம் உன்னை ஏற்றுக்கொண்டது னு சொன்ன?”
“அதை நீ முழுமையா உணரலைனும் சொன்னேன்”
“இப்போ…………”
“உணரலை னு சொல்றியா?” என்று அவன் ஆழ்ந்த குரலில் வினவ, எப்பொழுதும் போல் அவனது அந்த குரலுக்கு கட்டுண்டவளால் விளையாட்டுக்குக் கூட மறுத்து பேச முடியவில்லை.
அவனது கண்களை நோக்கியபடி, “உன்னோட இந்த குரல் தான் முதலில் என் மனதை உலுக்கியது.. அப்பறம் இந்த பார்வையும் உதட்டோர புன்னகையும்” என்றவள் கைகளை அவன் கழுத்தில் கோர்த்தபடி, “எஸ்.. இந்த வசியக்காரன் என்னை வசியம் செய்து மழைக்கால பூவாசமாய் என் சுவாசத்தில் கலந்துவிட்டான்..” என்றாள்.
அவள் மனம் திறந்ததில் அவனது மனம் சிறகில்லாது பறக்க, கரமோ அணைப்பை சற்று இறுக்கி மொத்தமாக அவளை தன்னை உரசியபடி நிற்க செய்தது.
அவள் தலை சரித்து புன்னகையுடன் புருவம் உயர்த்த, அவளது அந்த பாவனையில் தன்னை மொத்தமாக தொலைத்தவனாக அவளது செவ்விதழை சுவைக்க ஆரம்பித்தான்.
அவள் மூச்சிற்கு திணறியபோது அரை நொடி இடைவெளி விட்டவன் மீண்டும் சுவைக்க ஆரம்பித்தான். நேரம் செல்ல செல்ல இடையை பற்றியிருந்த கரத்தின் அழுத்தம் கூடியது ஆனால் அவனது உதடுகளோ நிதானமாக மென்மையாக தனது இணையை முத்தமிட்டுக் கொண்டிருந்தது. மித்ராணியின் கரங்களில் ஒன்று தானாக அவனது கழுத்தில் இருந்து சிகைக்குள் நுழைந்தது.
அவளது இதழின் மென்மை அவனை விலக விடாமல் மீண்டும் மீண்டும் நாட வைக்க, அவளுக்கோ ஆழிப்பேரலை தாக்கிய உணர்வு. அந்த இதழ் முத்தம் இருவரின் உயிர் வரை தீண்ட இருவரும் மற்றவரிடம் கரையத் தொண்டங்கினர். அவனது கரம் மெல்ல அவளது மேனியில் வலம் வர ஆரம்பிக்க, அவள் அவன் கைகளில் துவளத் தொடங்கினாள்.
அப்பொழுது பூஜை வேளை கரடியாக புகழ்வேந்தனின் கைபேசி அலறியது. முதலில் அதை கண்டுக்கொள்ளாதவன் தொடர்ந்து அழைப்பு வரவும் மனமின்றி விலகிச் சென்று கைபேசியை எடுத்து பார்த்தான். அழைத்தது சதீஷ்.
கைபேசியை அவளிடம் தூக்கி காட்டியவன், “புருஷனும் பொண்டாட்டியும் ஒரு முடிவோட தான் இருக்காங்க” என்றபடி அழைப்பை எடுத்தான்.
அவன் கூறியதை கேட்டு மித்ராணி சத்தமாக சிரிக்க, அவன் ஆள்காட்டி விரலை ஆட்டி அவளை மிரட்டினான். அவள் அதற்கும் சிரித்தாள்.
[the_ad id=”6605″]
அவளது சிரிப்பை ரசித்துக் கொண்டிருந்தவனின் முகம் மென்மை தொலைத்து தீவிரமாகவும் அவளும் சிரிப்பதை நிறுத்திவிட்டு அவன் அருகே வந்து அவனது தோளில் கை வைத்தாள்.
பேசி முடித்தவன், “நம்ம கார்மென்ட்டில் பயர்(fire) அக்சிடென்ட்.. யாருக்கும் எதுவும் ஆகலை.. நான் கிளம்புறேன்” என்று அவசரமாக கூறியபடி வேகமாக கிளம்பினான்.
“நானும் வரவா?”
“வேணாம்.. நான் பார்த்துக்கிறேன்.. நீ இப்போ உன்னோட கார்மென்ட் போகப் போறியா?”
“ஆமா.. சின்ன வேலை இருக்குது”
“சரி.. நான் அங்க போய் பார்த்துட்டு போன் பண்றேன்..” என்றபடி அறையைவிட்டு வெளியேற போனவன் அவளிடம் வந்து அவளது தோள்களை பற்றி, “ஜாக்கிரதையா இரு.. இது அவன் வேலையா இருக்க அதிக வாய்ப்பு இருக்குது.. டேவிட் உன் கூடவே தான் இருப்பான்.. கார்மென்ட்டிலும் செக்குரிட்டீஸ் அலர்ட்டா இருக்க சொல்லிடுறேன்”
“ஹ்ம்ம்.. நீயும் கேர்புல்லா இரு”
“ஓகே” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டு வேகமாக வெளியேறியவன், டேவிட்டை அழைத்து பேசியபடி படிகளில் இறங்கினான்.
அவனது வேகத்திற்கு ஈடுகொடுத்தபடி வந்தவள் அவன் அழைப்பை துண்டித்ததும், “வேந்தன்” என்று அழைத்தாள்.
அவன் திரும்பி பார்த்ததும் அவன் கையை பற்றியவள், “அதான் யாருக்கும் எதுவும் இல்லையே! பி ரிலாக்ஸ்டு.. சமாளிக்கலாம்” என்று தைரியம் கூற,
அவளது கையை அழுத்தமாக பற்றிவிட்டு கிளம்பினான். பொருள் சேதத்தை பற்றி அவன் கவலைக் கொள்ளவில்லை, அங்கே வேலை பார்க்கும் யாருக்கும் எதுவும் ஆகியிருக்க கூடாதே என்ற கவலை தான் அவனுக்கு. என்ன தான சதீஷ் யாருக்கும் ஆபத்து இல்லை என்று கூறியிருந்தாலும் அவனுள் சிறு கவலை இருக்கத் தான் செய்தது.
போக்குவரத்து நெரிசல் கம்மியாக இருக்க, மகிழுந்தியை மின்னல் வேகத்தில் செலுத்தியவன் அடுத்த பத்தாவது நிமிடம் அவனது ஆடை தொழிலகத்தில் இருந்தான்.
அவன் கிளம்பியதும் கலைவாணியிடம் சாதாரணமாக விடைபெற்று கிளம்பிய மித்ராணி தனது ஆடை தொழிலகத்திற்கு சென்றாள். கலைவாணியை கலவரப் படுத்த விரும்பாமல் முக்கியமான அழைப்பு வந்ததால் புகழ்வேந்தன் கிளம்பியதாக மட்டும் கூறினாள். இது அவ்வபோது நடக்கும் விஷயம் தான் என்பதால் அவரும் சந்தேகமின்றி விடை கொடுத்தார்.
ஒரு மணி நேரம் கழித்து மித்ராணியை புகழ்வேந்தன் கைபேசியில் அழைத்தான்.
அழைப்பை எடுத்ததும் அவள், “ஹோப் எவ்ரிதிங் இஸ் அண்டர் கண்ட்ரோல்?”
“எஸ்.. தீ பரவுரதுக்கு முன்னாடியே பார்த்ததால் யாருக்கும் பெருசா எதுவும் ஆகலை.. நாலு பேருக்கு மட்டும் தீ காயம் பட்டிருக்குது.. ஆனா பெருசா இல்லை.. ட்ரீட்மென்ட் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியாச்சு.. ஒரு வாரம் மெடிக்கல் லீவ் எடுக்க சொல்லி எக்ஸ்பென்ஸ்க்கு கேஷ்ஷும் கொடுத்தாச்சு..”
“தேன்க் காட்.. எப்படி ஆச்சு?”
புகழ்வேந்தன் கோபத்துடன், “அவன்க வேலை தான்.. ஷாட் சர்கியுட் ஆகுற மாதிரி செட் பண்ணியிருக்கிறான்க.. சிசிடிவி கேமரா உடைஞ்சு இருக்குது.. சதீஷ் கார்மென்ட் வர வழியில் மனோஜ் வண்டி எதிரே போறதை பார்த்து இருக்கிறான்..”
“மனோஜா?”
“கிருபாகரன் மட்டும் தான் கிரிமினல் னு நினைத்தேன்.. எத்தனை உயிர்களுடன் விளையாடி இருக்கிறான்க.. மொத்தமா அழிக்கிறேன்.. சாப்ட்வேர் கம்பனி மனோஜ் பிரசாத்தோட சொந்த முயற்சி னு தான் பெருசா எதுவும் செய்யாம ரெண்டு நாள் மட்டும் கிராஷ் ஆகுற மாதிரி வைரஸ் அட்டாக் செய்தேன்.. மொத்தமா கொலாப்ஸ் பண்றேன்.. யாருக்கிட்ட!” என்று கோபத்துடன் பேசினான்.
“என் பிரெண்ட் ஒருத்தன் நல்ல ஹேக் பண்ணுவான்”
“நம்மகிட்டயே ஹேக்கர்ஸ் இருக்கிறாங்க.. அவன் கம்பெனியிலேயே வேலையும் பார்க்கிறாங்க.. நான் பார்த்துக்கிறேன்.. தேவைனா உன் பிரெண்ட் கிட்ட ஹெல்ப் கேட்டுக்கலாம்”
“சரி.. ஸ்டாக் எதுவும் டேமேஜ் ஆகியிருக்குதா?”
“அதெல்லாம் இல்லை.. பில்டிங் மட்டும் கொஞ்சம் டேமேஜ் ஆகி இருக்குது.. அது இன்சுரன்ஸ் கிளேம் பண்ணிக்கலாம்”
“எப்போ வீட்டுக்கு வர? நான் இப்போ கிளம்பிடுவேன்”
“நான் வர லேட் ஆகும்.. எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிடு”
“நீ வா”
“ராணி” என்று அவன் குரல் கண்டிப்புடன் வர,
“சரி.. சரி.. துர்வாசா.. நீ வரதுக்குள்ள ராணி சாப்டுட்டு தூங்கியிருப்பா” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
அவன் உதட்டோர மென்னகையுடன் வேலையை பார்க்கச் சென்றான்.
மித்ராணி கோபத்துடன் மனோஜை கைபேசியில் அழைத்தாள்.
அவன் அழைப்பை எடுத்ததும் அவனை பேச விடாமல் பொரியத் தொடங்கினாள்.
“நீங்கலாம் திருந்தவே மாட்டீங்களா? உன் அப்பனால் போன உயிர்கள் பத்தாதா? அந்த பாவமே உன் வம்சம் முழுவதும் துரத்தும் இதில் நீ புதுசா வேற பாவம் சேர்த்துட்டு இருக்கிற.. இனி உன்னாலோ உன் குடும்பத்தாலோ ஒரு உயிர் போகாது.. ஏன்னா நீங்களே இனி செல்லா காசா தான் இருக்கப் போறீங்க.. ஏதோ நீயும் பிரசாத்துமாது கொஞ்சம் நல்லவங்களா இருப்பீங்க னு நினைச்சு இத்தோடு விட நினைச்ச வேந்தனை தேவை இல்லாம உரசி பார்த்துட்ட.. இனி உன் நிலை!” என்று சொல்லி நிறுத்த,
“மித்து நீ என்ன சொல்………….”
[the_ad id=”6605″]
“டேய்.. இன்னொரு தடவ மித்து கித்து னு சொன்ன! பேச வாய் இருக்காது..” என்றவள் அவனது பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தாள்.
இரண்டு நொடிகள் கழித்தே அதிர்ச்சியில் இருந்து மீண்ட மனோஜ் அழைப்பை துண்டிக்கப் பட்டிருக்கிறதை உணர்ந்து மித்ராணியை அழைத்தான். அவள் அழைப்பை எடுக்கவில்லை. அவன் மீண்டும் மீண்டும் அழைக்கவும், ‘தேவையா உனக்கு? கோபத்தில் எதுக்கு அவனுக்கு போன் பண்ண?’ என்று எரிச்சலுடனும் கோபத்துடனும் தன்னையே திட்டிக் கொண்டாள்.
அவன் தொடர்ந்து குறிஞ்செய்தி வேறு அனுப்பவும் அவனை மீண்டும் அழைத்தவள், “இப்போ எதுக்கு திரும்ப திரும்ப காள் பண்ணிட்டு இருக்கிற?” என்று எரிந்து விழுந்தாள்.
அவன், “மித்ரா.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. நான்…………”
“நான் எதுக்கு நீ சொல்றதை கேட்கணும்?”
“ப்ளீஸ் மித்ரா.. நீ என்னை தப்பா நினைக்கிறதை என்னால் தாங்கிக்க முடியலை.. நான்………….” என்று மனோஜின் குரல் தவிப்புடன் வர, அதை அலட்சியபடுத்தியவள் “பார் டா! அப்பறம்?” என்று நக்கலாக வினவ,
அவன் அதிர்ச்சியில் மெளனமாக இருக்க, அவள், “இன்னும் எதுக்கு நடிக்கிற? அப்போ தான் சொத்துக்காக காதலிக்கிற மாதிரி நடிச்ச!”
அவன் அதிர்ச்சியுடனும் வலியுடனும், “மித்ரா!!” என்றான்.
“உன் சாயம் வெழுத்து ரொம்ப நாள் ஆச்சு.. வக்கீல் அங்கிள் மூலம் உன்னை பத்தி தெரிந்ததுமே உன்னை நார் நாரா கிழிக்கணும் னு நினைச்சேன் ஆனா வேண்டாம் னு விட்டுட்டேன்.. இப்போ நீ பல உயிர்களுடன் விளையாடினதும் கோபத்தில் காள் பண்ணிட்டேன்.. இனி கோபத்தில் கூட உன்னிடம் பேச விரும்பலை.. என் கண் முன்னாடி வந்திராத” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.
மித்ராணி பேசியதை கேட்ட மனோஜ் மரணவலியை உணர்ந்தான். இத்தனை நாள் அவள் தனக்கு கிடைக்கவில்லை என்றாலும் ஏதோ மனதை தேற்றியபடி இருந்தவன் அவளது இந்த வெறுப்பில், அதுவும் சொத்துக்காக காதலித்த மாதிரி நடித்ததாக அவள் கூறியதில் மொத்தமாக நொறுங்கினான். உண்மையில் அவன் சொத்து விஷயம் தெரிந்து அமைதியாக இருந்ததிற்கு காரணம் அவனுக்கு இருந்த பயம். ‘எங்கே உண்மை தெரிந்தால் மித்ராணி தந்தையுடன் சண்டை போட்டு திருமணம் நின்றுவிடுமோ!’ என்ற பயத்திலேயே அவன் அமைதியாக இருந்தது. கல்யாணம் முடிந்த பிறகு அவளிடம் உண்மையை சொல்லத் தான் நினைத்திருந்தான் ஆனால் அதற்கு சந்தர்ப்பம் அமையாமலேயே போய்விட்டது. மித்ராணிக்கு அவன் காதலிப்பதாக நடித்திருக்க மாட்டான் என்று தெரிந்திருந்தாலும் அவன் செய்த துரோகத்திற்கு தண்டனையாக அறிந்தே அந்த வார்த்தைகளை கூறினாள்.
இன்று புகழ்வேந்தன் ஆடை தொழிலகத்தில் நடந்த விபத்திற்கும் மனோஜிற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. மித்ராணி எதற்காக திட்டினாள் என்று கூட அவனுக்கு புரியவில்லை. கிருபாகரன் தான் புகழ்வேந்தன் மேல் இருந்த கோபத்தில் இதை செய்தார். அதுவும் அவனது ஆடை தொழிலகம் தீ பிடித்து எரிவதை கண்குளிர பார்க்க எண்ணி மனோஜின் வண்டியில் நேரில் சென்றிருந்தார். வண்டியை மட்டும் கவனித்த சதீஷ் உள்ளே இருந்த கிருபாகரனை கவனிக்கவில்லை.
தீ விபத்து நடந்த இரண்டாவது நாள் அதிகாலையில் உறக்கம் கலைந்து புகழ்வேந்தன் விழித்த போது குயிலின் கூவல் அவனது காதை நிறைத்தது.
மித்ராணி கட்டிலில் இல்லை என்றதும் திறந்திருந்த உப்பரிகையை எட்டிப் பார்த்தான். அவள் புன்னகையுடன் குயிலுடன் சேர்ந்து கூவிக் கொண்டிருந்தாள்.
உப்பரிகையின் நுழைவாயிலில் கைகளை கட்டிக் கொண்டு நின்றபடி தன்னவளின் அழகை ரசிக்க ஆரம்பித்தான். உதட்டில் புன்னகையை சூடியபடி நின்றிருந்தவளின் கலைந்திருந்த முடி தென்றலின் இசைவிற்கேற்ப அசைந்தாடிக் கொண்டிருந்தது. விடிந்தும் விடியாத அந்த ஏகாந்த வேளையில் மெல்லிய வெளிச்சத்தில், எந்தவித ஒப்பனையுமின்றி இரவு உடையில் நின்றிருந்த அவளது தோற்றம் அவனை வெகுவாக கவர்ந்தது.
குயில் “கூ.கூ.கூ.” என்று தொடர்ந்து கூவியபடி பறந்துவிட, விரிந்த புன்னகையுடன் உற்சாகமாக திரும்பியவள் புகழ்வேந்தனின் பார்வையில் ஒரு நொடி தடுமாறி நின்றாள், பின் பார்வையை தாழ்த்தியபடி மெதுவாக அறையினுள் சென்றாள்.
அவள் தன்னை கடந்து அறையினுள் செல்லும் வரை அமைதியாக பார்வையால் அவளைத் தொடர்ந்தவன், அவள் உள்ளே சென்றதும் உப்பரிகைக்கு செல்லும் கதவை மூடி மெல்லிய குரலில்,
“குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
தவறோ சரியோ
விதி இது தான்..
வழக்கெதுக்கு…
அல்லிராணி உனக்குன்னு
ராசாவா நான் பொறந்தேன்..
ஆண் பாவம் பொல்லாதது
கொல்லாதடி..” என்று ‘ஆண் பாவம்’ திரைப்பட பாடலை அவனுக்கு ஏற்றபடி வரிகளை மாற்றிப் பாடினான்.
அவனது வெளிப்படையான அழைப்பில் அவனை பார்த்தபடி அவள் அசைவற்று நிற்க, அவள் கண்களை பார்த்தபடி மெல்ல அவளை நெருங்கினான்.
நூழிலை இடைவெளியில் அவளை தொடாமல் நின்றவன் அவளை பார்வையால் தீண்டினான்.
அவனது பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் அவள் அவனது நெஞ்சில் சாய்ந்த அடுத்த நொடி அவனது கைகளில் மிதந்தாள்.
“அல்லிராணி.. கொல்றடி” என்று தாபத்துடன் முணுமுணுத்தபடி அவளுடன் மஞ்சத்தில் சரிந்தவன் அழகான தேடலை துவங்கினான். ‘அல்லிராணி’ என்ற தாப அழைப்பும் ‘வசீகரா.. வசி’ என்ற திணறலான அழைப்பும் இதழ் தீண்டலில் கரைய, அவளது வெக்கத்தையும் தயக்கத்தையும் முத்தத்தால் தகர்த்தியவன் மென்மையாக ரசனையுடன் பெண்ணவளை கையாண்டான்.
ஆண்னவனின் தேடல் நீண்டுக் கொண்டே போக, பெண்ணவள், “விடிஞ்சுருச்சு வசீ” என்று சிணுங்கினாள்.
அவளது சிணுங்கல் அவனுக்கு அழைப்பாக தெரிய, “விடியட்டும்” என்றவன் தனது தேடலைத் தொடர்ந்தான்.
சற்று தாமதமாக இருவரும் கிளம்பி கீழே வந்த போது கூடத்தில் இருந்த இண்டர்காம் ஒலித்தது. இருவரின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியிலும், கூடுதலாக மித்ராணி முகத்தில் தெரிந்த சிறு வெக்கத்திலும் கலைவாணி புரிந்தவராக மனம் குளிர்ந்தார்.
இண்டர்காமை எடுத்து பேசிய புகழ்வேந்தன், “போலீஸ் வந்திருக்காம்”
கலைவாணி, “போலீஸ்ஸா!” என்று சிறு அதிர்ச்சியுடன் வினவ,
மித்ராணி, “என்னவா இருக்கும்?” என்றாள்.
“போய் பார்த்தா தெரிந்திர போகுது” என்ற புகழ்வேந்தன் வெளியே செல்ல, மித்ராணியும் அவனுடன் சென்றாள்.
புகழ்வேந்தன் திரும்பி ‘நீ எதற்கு?’ என்பது போல் பார்க்க, மித்ராணி, ‘நானும் வருவேன்’ என்று பார்த்தாள். ஆனால் புகழ்வேந்தன், “அம்மா கூட இரு” என்றுவிட்டு வெளியே சென்றான்.
புகழ்வேந்தன் வெளியே சென்றபோது ஒரு காவலர் ஜீப்பில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார்.
புகழ்வேந்தன் முகத்தில் பதற்றம் சிறிதும் இல்லை என்பதை குறித்துக் கொண்ட காவலர், “நான் ACP மாரீஸ்வரன்.. மிஸ்டர் மனோஜை காணும்.. அது சம்பந்தமா உங்களை விசாரிக்க ஸ்டேஷன் கூட்டிட்டு போக வந்திருக்கிறேன்” என்றார்.
அவர் முகத்தில் தெரிந்த எகத்தாளத்தையும் அலட்ச்சியத்தையும் கண்டு கொண்ட புகழ்வேந்தன் அலட்டிக்கொள்ளாமல், “எந்த மனோஜ்?” என்று வினவினான்.
“ஏன் உங்களுக்கு தெரியாதா?”
“எனக்கு எத்தனையோ மனோஜ் தெரியும்.. அதில் யாரை நீங்க சொல்றீங்க?”
அவர் பல்லை கடித்துக் கொண்டு, “SK இண்டஸ்ட்ரீஸ் ஓனர் மிஸ்டர் கிருபாகரன் முதல் மகன் மனோஜை காணும்”
“ஓ! அதுக்கு எதுக்கு என்னை விசாரிக்க வந்திருக்கீங்க?”
“மிஸ்டர்! நான் உங்களை விசாரிக்க வந்தா நீங்க என்னை விசாரிச்சிட்டு இருக்கிறீங்க.. அமைதியா வண்டியில் ஏறிட்டா பிரச்சனை இல்லை…………”
“இல்லாட்டி?” என்று கைகளை கட்டிக் கொண்டு கூர்மையான விழிகளுடன் வினவ,
“இழுத்துட்டு போக வேண்டியதா இருக்கும்” என்றார் தெனாவெட்டாக.
புகழ்வேந்தன் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல், “எனக்கும் சட்டம் தெரியும்…………”
“என்ன தெரியும்? ஒழுங்கா வந்து வண்டியில் ஏறு” என்று அவர் எகிற,
புகழ்வேந்தன் நிதானமாக, “சும்மா நீங்க நினைச்சதும் விசாரணைக்குக்கெல்லாம் அரெஸ்ட் பண்ணவோ ஸ்டேஷன் கூடிட்டோ போகவோ முடியாது.. ஒரு ACPயே நேரிடையா வந்து விசாரிக்கிறீங்க.. கமிஷ்னரிடம் ப்ராப்பரா பெர்மிஷன் வாங்கினீங்களா இல்லை இன்பர்மேஷன் கொடுத்தீங்களா?” என்றவன் குரலை கடினமாக்கி, “எனக்கு சட்டமும் தெரியும் யாருக்காக நீங்க ஆட்டம் ஆட முயற்சிக்கிறீங்கனும் தெரியும்.. உங்களுக்கு தான் இந்த புகழ்வேந்தனை தெரியலை.. மான நஷ்டயீடு வழக்கு போட்டு, போராட்டம் பண்ணால்…………………”
“என்ன டா மிரட்டுறியா? ஒரு போலீஸ்காரன் நினைத்தால் உன் தலை எழுத்தையே மாத்த முடியும்.. பார்க்கிறியா உன்னை வாழ்க்கை முழுவதும் களி திங்க வைக்கிறேன்”
“ஆல் தி பெஸ்ட்”
புகழ்வேந்தனை முறைத்துவிட்டு வண்டியில் ஏறிய மாரீஸ்வரன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தார்.
அழைப்பு எடுக்கப்பட்டதும், “எங்க வந்துட்டு இருக்கிறீங்க?”
“…”
“மத்தவங்கலாம்?”
“…”
“சரி நானும் வெளியே வரப்போறேன்… சீக்கிரம்” என்று கூறி அழைப்பைத் துண்டித்து வண்டியை எடுக்க கூறினார். இவர்கள் வண்டி வெளியே செல்லவும் தொலைக்காட்சி நிறுவனங்களை சேர்ந்த செய்தியாளர்கள் வந்தனர்.
அவர்களை பார்த்ததும் வண்டியை நிறுத்தக் கூறினார்.
ஒரு நிருபர் (சற்று முன்பு மாரீஸ்வரன் கைபேசியில் அழைத்து பேசியவர்), “என்ன விஷயம் சார்? எதுக்காக வேந்தன் குரூப் ஆப் கம்பனீஸ் ஓனர் புகழ்வேந்தன் வீட்டிற்கு வந்திருக்கீங்க?”
மாரீஸ்வரன், “SK இண்டஸ்ட்ரீஸ் ஒன் ஆப் தி MD மிஸ்டர் மனோஜை காணும்.. அதை பத்தி விசாரிக்க வந்தா அவமரியாதை செய்து வெளியே அனுபிட்டார் மிஸ்டர் புகழ்வேந்தன்”
“அவமரியாதை னா என்ன செய்தார்?” என்று மற்றொரு நிருபர் வினவினார்.
“கேவலமா பேசினார்.. பொதுவில் சொல்ற வார்த்தை இல்லை… அவ்ளோ தான்.. நோ மோர் குவெஸ்டீன்ஸ்” என்றவர் கண்ணாடியை ஏற்றியபடி வண்டியை கிளப்பச் சொன்னார்.
நிருபர்களின், “சார்.. சார்” என்ற அழைப்பை கண்டுக்கொள்ளாமல் காவலர் வண்டி சென்றது.
ஒரு நிருபர் புகழ்வேந்தன் வீட்டு காவலாளியிடம் சென்று உள்ளே செல்ல அனுமதி கேட்க, மாரீஸ்வரனிடம் பேசிய நிருபர், “எதுக்கு உள்ள போயிட்டு? வாங்க கிளம்பலாம்” என்றார்.
அனுமதி கேட்டவர், “அது எப்படி! மிஸ்டர் புகழ்வேந்தன் விளக்கத்தை கேட்கணும் தானே!” என்று கூற,
இன்னொருவர், “ஆமா சந்துரு சொல்றது தான் சரி” என்று கூற,
தடுத்தவர், “அவர் என்ன சொல்லப் போறார்! இல்லை னு தான் சொல்ல போறார்”
“உனக்கு எப்படி தெரியும்?”
“பெரும் புள்ளிகள் அப்படி தானே சொல்வாங்க”
“காணாமல் போயிருக்கிறதும் பெரும்புள்ளி தானே! அப்படியே அவர் இல்லை னு சொன்னாலும் அதை நாம கேட்கணும் தானே! நாங்க போறோம்.. நீ வேணா கிளம்பு” என்று இவர்கள் வழக்காடிக் கொண்டிருக்க, புகழ்வேந்தன் வீட்டு காவலாளி வந்து, “சார் உங்களையெல்லாம் உள்ளே வர சொன்னார்” என்றார்.
இவர்கள் வழக்காடிக் கொண்டிருந்த போது அந்த காவலாளி புகழ்வேந்தனை அழைத்து இவர்கள் வந்திருப்பதையும் மாரீஸ்வரன் பேசியதையும் இவர்கள் வழக்காடியதையும் சேர்த்து கூறி இருந்தார்.
இவர்கள் வேகமாக உள்ளே சென்றனர். இவர்கள் வந்ததும் வெளியே வந்த புகழ்வேந்தன் வீட்டு தாழ்வாரத்தில் இவர்களை சந்தித்தான்.
மாரீஸ்வரனிடம் பேசிய நிருபர், “சொல்லுங்க சார்” என்றபடி மைக்கை புகழ்வேந்தன் முன் நீட்டினார்.
புகழ்வேந்தன், “என்ன சொல்லணும்?”
[the_ad id=”6605″]
“நாங்க ஏன் வந்திருக்கிறோம் னு உங்களுக்கு தெரியாது?” என்று நக்கலாக வினவ,
“அடுத்தவங்க நினைக்கிறதை தெரிஞ்சிக்கிற மந்திர சக்தியெல்லாம் என் கிட்ட இல்லை” என்றவனின் கண்கள் மட்டும் நக்கலாக அவரை நோக்கியது.
“ஜோக் அடிச்சிட்டாராம்.. ஹா ஹா” என்று சிரிக்க,
புகழ்வேந்தன் மற்றவர்களை பார்த்து, “லுக்.. வெட்டிக் கதை பேசுறதுக்கு எனக்கு நேரமில்லை.. என் செக்குரிட்டி நீங்க என்னை மீட் பண்ண கேட்டதாக சொன்னதால் உங்களை அழைத்து பேசிட்டு இருக்கிறேன்.. ப்ளீஸ் டோன்ட் வேஸ்ட் மை டைம்” என்றான்.
வெளியே அனுமதி கேட்ட நிருபர், “சாரி சார்.. உங்களை போல் எங்களுக்கும் நேரம் பொன்னானது தான்.. ACP மாரீஸ்வரன் எதுக்கு வந்துட்டு போனார் னு தெரிந்துக்கலாமா?”
“SK இண்டஸ்ட்ரீஸ் மிஸ்டர் மனோஜை காணும் னு சொன்னார்.. அதை பத்தி விசாரிக்க வந்தார்”
மாரீஸ்வரனிடம் பேசிய நிருபர், “அது ஏன் குறிப்பா உங்களை விசாரித்தார்?”
“இது அவரை கேட்க வேண்டிய கேள்வி”
இன்னொருவர், “நீங்க அவரை அவமரியாதை செய்து அனுப்பியதாவும் பொதுவில் சொல்ல முடியாத வார்த்தையை கொண்டு திட்டியதாவும் சொன்னார்”
“நான் அப்படி எதுவும் செய்யலை.. என்னை ஸ்டேஷன் கூட்டிட்டு போய் விசாரிக்கணும் னு சொன்னார்.. ‘சும்மா நினைச்சதும் விசாரணைக்குக்கெல்லாம் அரெஸ்ட் பண்ணவோ ஸ்டேஷன் கூடிட்டோ போக முடியாது’ னு தான் சொன்னேன்.. அதுக்கு அவர் தான் என்னை மிரட்டிட்டு போனார்.. CCTV புட்டேஜ் பார்த்தாலே யாரு கோபமா பேசினா னு தெரிந்துர போகுது”
“நீங்க முகத்தை சாதாரணாமா வச்சிட்டு கெட்ட வார்த்தையில் திட்டி இருந்திருக்கலாமே!” என்று மாரீஸ்வரனிடம் பேசிய நிருபர் கூற,
“நிறைய தந்திரங்கள் தெரிந்து வச்சிருக்கீங்களே! அடுத்த முறை நீங்க சொல்வது போல் முயற்சி செய்து பார்க்கிறேன்” என்ற புகழ்வேந்தன் பொதுவாக அனைவரையும் பார்த்து, “ஓகே கைய்ஸ்.. முக்கியமான மீட்டிங்கு கிளம்பணும்.. ஸோ ப்ளீஸ்” என்று கூற,
அனைவரும், “ஓகே சார்” என்றும், “தேன்க் யூ சார்” என்றும் கூறி கிளம்பினர்.
அடுத்த சில நிமிடங்களில் அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் முக்கிய செய்தியாக மனோஜின் புகைப்படத்தை போட்டு, “தொழிலதிபர் கிருபாகரனின் மூத்த மகன் மனோஜை காணவில்லை” என்றும் ஒரு சில அலைவரிசைகளில் கூடுதலாக புகழ்வேந்தன் புகைப்படத்துடன், “இளம் தொழிலதிபர் புகழ்வேந்தன் மீது சந்தேகம் இருப்பதாக புகார் வந்ததாக ACP மாரீஸ்வரன் கூறுகிறார்.. ஆனால் தொழிலதிபர் புகழ்வேந்தன் அதை மறுக்கிறார்.. உண்மையிலே மனோஜின் மறைவிற்கும் புகழ்வேந்தனுக்கும் தொடர்வு இருக்குமா?” என்று வந்தது.
மாரீஸ்வரனுடன் பேசிய நிருபர் வேலை பார்க்கும் அலைவரிசையில் மட்டும் இன்னும் கூடுதலாக அந்த நிருபர் புகழ்வேந்தன் வீட்டின் முன் நின்றபடி, “இதை விசாரிக்க போன ACP மாரீஸ்வரனை புகழ்வேந்தன் தகாத வார்த்தையால் திட்டியதாக ACP மாரீஸ்வரன் கூறினார் ஆனால் புகழ்வேந்தன் அதை மறுக்கிறார்.. முன் பகை காரணமாக புகழ்வேந்தன் தான் மனோஜை ஏதோ செய்துவிட்டார் என்ற சந்தேகமும் இருக்கிறது” என்று மைக்கில் பேசியபடியான செய்தியை ஒளிபரப்பினர்.
இவற்றை பார்த்துவிட்டு கலைவாணி சிறிது பதற்றமடைய புகழ்வேந்தன், “இதெல்லாம் ஒண்ணுமில்லை மா.. பார்த்துக்கலாம்.. டென்ஷன் ஆகாதீங்க.. டிவி சேனல்ஸ் ஒன்னை பத்தா தான் சொல்லுவாங்க” என்றான்.
மித்ராணி, “அது எப்படி சரியா அந்த ACP வெளியே போகவும் மீடியா பீபிள் வந்தாங்க? அதுவும் எடுத்ததும் இங்கே வந்து விசாரிக்கிறாங்க னா கண்டிப்பா இதில் அவர் வேலை இருக்கும்.. உனக்கு எந்த இன்பார்மேஷனும் வரலையா?”
“கண்டிப்பா அவன் வேலை தான்.. முன் பகை னு சொன்ன XXX சேனல் கூட அவன் கூட்டா தான் இருக்கணும்.. அவன் போனில் பேசியிருப்பான்.. அவனோட போன் காள்ஸ் ட்ராக் பண்ணலையே ஸோ நமக்கு தெரியலை”
“எவ்ளோ ஸ்பை வச்சிருக்க! இத்தனை ஸ்பை வைக்கிறதுக்கு அவர் ஆபீஸ் ரூமில் மைக்ரோபோன் வச்சிருக்கலாமே!”
“அவனோட ஆபீஸ் ரூமிற்குள் யாராவது தனியா போய் பார்த்திருக்கியா?”
“நான் என்ன அங்கேயேவா இருந்தேன்! ரூமை கிளீன் பண்ண யாராவது போவாங்க தானே?”
மறுப்பாக தலை அசைத்த புகழ்வேந்தன், “ரூம் கிளீன் பண்ற ஆள் கூட அவன் ரூமில் இருக்கும் போது போக மட்டுமே அனுமதி.. மனோஜ் பிரசாத் கூட தனியா போக முடியாது.. அந்த டோர் நாபில்(KNOB) சென்சார் டிடெக்டர் இருக்குது.. அவனோட பிங்கர் பிரின்ட் மட்டும் தான் அக்செப்ட் பண்ணும்”
மித்ராணி ஆச்சரியத்துடன், “பார் டா! இத்தனை வருஷம் இது எனக்கு தெரியாதே! இந்த மனோஜ் பிரசாத் கூட சொல்லலை..”
“ரொம்ப வருஷமா இப்படி இருப்பது போல் தெரியலை.. அவனோட கிரைம் ரேட் ஏற ஏற இப்படி செய்திருப்பான்”
“ஹ்ம்ம்.. மல்லி அத்தை பிங்கர் பிரிண்ட் அக்செப்ட் ஆகுமா?”
“அவன் அவங்களை மதிப்பான்னு நினைக்கிறியா?”
“என்ன மனிதனோ! மல்லி அத்தை பாவம்.. அவர் அவங்களிடம் அன்பா பேசி.. ஏன் அவங்களை மதித்து பேசியே நான் பார்த்தது இல்லை.. கட்டின மனைவி, சொந்த மகன்கள் னு யாரையும் நம்பாம, யாருடனும் அட்டாச்மென்ட் இல்லாம வாழ்ற வாழ்க்கை என்ன வாழ்க்கையோ!!!”
“அவன் வீட்டு கதை நமக்கு எதுக்கு?”
“உண்மையிலேயே மனோஜ் காணாமல் போயிருப்பானா?”
“ஏன் கேட்கிற?”
“நம்ம கல்யாணத்தன்னைக்கு பிரசாத் இங்கே வந்து பிரச்சனை பண்ணானே! அன்னைக்கு அவனை அவர் கடத்தி வச்சதால் தான் கல்யாணம் நடந்த நேரத்தில் அவனால் வர முடியலை னு சொன்னான்”
“ஹ்ம்ம்.. அவனே கடத்தி என் மேல் பழி போடவும் வாய்ப்பிருக்குது.. பார்க்கலாம்” என்றபோது சதீஷிடமிருந்து புகழ்வேந்தனுக்கு அழைப்பு வந்தது.
புகழ்வேந்தன் அழைப்பை எடுத்ததும் அவன், “பாஸ்.. நியூஸ்…………”
“பார்த்தேன்” என்றவன் நடந்ததை சுருக்கமாக கூறி, “நான் கமிஷனர் கிட்ட பேசியிருக்கிறேன்.. இப்போ நேரில் போய் பார்த்து பேசுறேன்.. நீ மாரீஸ்வரன் வண்டியை டிரைவ் பண்ண கான்ஸ்டபிளை நம்ம பக்கம் இழு” என்றான்.
சதீஷ், “ஓகே பாஸ்” என்றதும் அழைப்பை துண்டித்தவன் அன்னையிடமும் மித்ராணியிடமும் விடைபெற்று கமிஷ்னரை சந்திக்க கிளம்பினான். சதீஷும் வேகமாக செயல்ப்பட ஆரம்பித்தான்.
ஆம் செய்தியாளர்களை சந்திக்கும் முன்பே புகழ்வேந்தன் கமிஷனரை அழைத்து பேசியிருந்தான்.
கிருபாகரன் மாரீஸ்வரனை அழைத்து, “என்ன பண்ணி வச்சிருக்கிற? நீ அவனை ஸ்டேஷன் கூட்டிட்டு போற மாதிரி தானே நியூஸ் வரணும் னு சொன்னேன்!” என்று கத்த,
மாரீஸ்வரன், “அட போங்க சார்.. அவன் கொஞ்சம் கூட பயப்படாம தில்லா நின்னு சட்டம் பேசுறான்.. உன்னால் முடிந்ததை பாரு னு சவால் விடுறான்.. அதான் அப்படி நியூஸ் கொடுத்தேன்”
“எல்லாத்தையும் சொதப்பி வை.. நீ இப்படி சொதப்புறதுக்கா உன்னை ACP ஆக்கினேன்”
“சார் நீங்க கமிஷ்னரிடம் பேசிக்கிறேன் னு சொன்னீங்க.. ஆனா சேனலில் நியூஸ் வரதுக்கு முன்னாடி போன் பண்ண கமிஷனர் என்னை திட்டுறார்.. யாரை கேட்டு மிஸ்டர் புகழ்வேந்தன் வீட்டுக்கு போன? னு காச் மூச்சு னு கத்துறார்.. இப்போ இந்த நியூஸ்யெல்லாம் பார்த்துட்டு அடுத்து என்ன சொல்லுவாரோ? அதுக்கு முன்னாடி ஏதாவது செய்யுங்க சார்”
“எதையும் உருப்படியா செய்யாம…………….”
“சார் இதுவரை உங்களுக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணி இருக்கிறேன்? எத்தனை கேஸை மூடி மறைச்சு இருக்கிறேன்!”
“என்ன மிரட்டுறியா?”
“இல்ல சார்.. பழசை நியாபகப் படுத்துறேன்” என்றவன், “சார்.. இதில் நீங்க எதுவும் விளையாடலையே?”
“என்ன?”
“இல்ல.. நீங்களே கடத்தியோ மறைச்சோ வச்சிட்டு………..”
“அப்படி பண்ணி இருந்தா உன்னிடம் சொல்லி இருக்க மாட்டேனா? நிஜமாவே மனோஜை காணும்.. என் ஆட்கள் தேடிட்டு தான் இருக்காங்க”
“சரி சார்.. சரி” என்று நம்பிக்கை இன்றி கூறியவன், “இருங்க சார்.. கமிஷ்னர் போன் பண்றார்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்து கமிஷ்னரின் அழைப்பை எடுத்தான்.
கமிஷ்னர், “நியூஸ் பார்த்தீங்களா?”
“எஸ் சார்”
“நீங்க பண்ண வேலையால் எனக்கு தான் தலை வலி.. மிஸ்டர் புகழ்வேந்தன் உங்க மேல் கம்ப்ளைன்ட் பண்ணியிருக்கார்.. கூடவே உங்க மேல் ஆக்சன் எடுக்கலைனா நம்ம டிப்பார்ட்மென்ட் மேல் கேஸ் போடப் போறதா சொல்றார்.. பெரிய இடத்தில் மோதுறப்ப யோசிச்சு நிதானமா செயல் பட வேண்டாமா? சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் னு போய் அர்ரெஸ்ட் பண்றேன் னு சொல்லி இருக்கிறீங்க.. உங்க மேல தான் ஆக்சன் எடுக்கிறதா இருக்கும்”
“சார்!!”
“உங்க டிரைவரே உங்களுக்கு எதிரா சாட்சி சொல்ல இப்போ ரெடி.. நீங்க அதிகமா பேசிட்டு அவர் மேல் பழியை போட்டு இருக்கிறீங்க.. உனக்கு எதுக்கு மென் தேவை இல்லாத வேலை? வான்ட்டட்டா போய் பேட்டி கொடுத்து இருக்கிற!”
“இல்லை சார்.. ஒரு சேப்ட்டி………….”
“பஸ்ட் ஆப் ஆல் மீடியா பீபிள் அங்கே எப்படி வந்தாங்க?”
“தெரியலை சார்”
“இதை என்னை நம்ப சொல்றீங்களா? நீங்களும் மிஸ்டர் கிருபாகரனும் சேர்ந்து செய்திருக்கீங்க னு புரியாத அளவுக்கு நான் குழந்தை இல்லை”
“…”
“உடனே கிளம்பி கமிஷ்னர் ஆபீஸ் வாங்க.. ஒன்னு நீங்க ப்ரெஸ் மீட்டில் பகிரங்கமா மிஸ்டர் புகழ்வேந்தன் கிட்ட மன்னிப்பு கேட்கணும் இல்லை சஸ்பென்ஷனில் போகணும்”
“சார்!!!”
“நோ அதர் கோ.. சாய்ஸ் இஸ் யுவர்ஸ்” என்றவர், “என்னை கேட்டால் நீங்க மன்னிப்பு கேட்கிறது தான் பெட்டர்.. இதை வளர விடாதீங்க.. என்ன! ப்ரெஸ் மீட் ஏற்பாடு பண்ணிடலாமா?”
“ஓகே சார்” என்றவன் மனதினுள் புகழ்வேந்தன் மீது வன்மம் பிறந்தது.
மல்லிகா பிரசாத்திடம், “கொஞ்சமாவது கவலைப் படுரியா டா?”
“எதுக்கு கவலைப் படனும்?”
“காணாமல் போயிருக்கிறது உன்னோட அண்ணன்”
“அம்மா அவர் நடத்துற டிராமாவா தான் இருக்கும்.. கவலைப் படாதீங்க.. மனோஜ் வந்திருவான்”
“இல்லை டா அவர் அந்த போலீஸ்காரன் கிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டேன்.. மனோஜை தேடி இவரே ஆட்களை அனுப்பி இருக்கார் வேற”
“ச்ச்.. அம்மா.. அவர் கேடிக்கெல்லாம் கேடி மா… மனோஜ் வருவான்”
“இல்லை டா.. எனக்கு மனசே சரி இல்லை.. ஏதோ தப்பா நடக்க போகுது னு என் உள்மனசு அடிச்சுக்குது.. ஏதாவது பண்ணு டா” என்று கண்ணீருடன் தவிப்புடன் கெஞ்சினார்.
அவரை தோளோடு அணைத்த பிரசாத், “அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது மா.. மனோஜ் நல்லா தான் இருப்பான்.. வந்திருவான்.. உங்களுக்காக நானும் தேடுறேன்.. கவலைப் படாம இருங்க” என்றுவிட்டு எழுந்தவன் தன் அறைக்குச் சென்று கைபேசியை எடுத்துவிட்டு மனோஜை தேட கிளம்பியவன். அப்பொழுது மனோஜின் அறையில் அவனது புகைப்படத்தை பார்த்தபடி நின்றிருந்த கிருபாகரனை யோசனையுடன் பார்த்துவிட்டு சென்றான்.
இதயம் இணைய காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥