“பிரேமா! இன்னைக்கு தான் நல்ல நாள்..” மல்லிகா தயங்க,
“எனக்கும் ஐயர் சொன்னது நியாபகம் இருக்கு க்கா.. ஆனா சூர்யாகிட்ட எப்படி பேச?” என்றார் பிரேமா.
“அஞ்சலி அம்மா வந்திருக்கலாமோ!” என்று பிரேமா கேட்க,
“நம்ம வீடு மட்டும் ஏன் தான் இப்படி இருக்குதோ? எல்லாரும் இருந்தும் ஏதோ தனி தனியா இருக்குற மாதிரி” என்றார் மல்லிகா ஆற்றாமையாய்.
“இந்த பசங்க இருக்க போய் தான் கொஞ்சம் நல்லா இருந்துச்சு.. இப்ப அதுங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டா எல்லாம் இன்னும் தூரமா போன மாதிரி ஆகிடும் போல” என்று பிரேமாவுமே வருத்தம் கொண்டார்.
எதையும் பேசவும் கூறவும் மனநிலை இல்லை இருவருக்குமே! அஞ்சலி கீழே வந்தாலாவது பாலாவது கொடுத்து விடலாம்.. அவள் அறையை விட்டு வரவில்லை.
சூர்யாவும் ஜெய் அறையை விட்டு வராமல் இருக்க, நிவியை பெரியவர்களே விரைவாய் தூங்க அனுப்பி இருந்தனர்.
“சரி க்கா! எப்பவும் போல பிளாஸ்க்ல வச்சுடுவோம்.. வேணும்னா வந்து எடுத்துக்கட்டும்” என்று முடித்துக் கொண்டார் பிரேமா.
“இப்ப என்ன டா உன் பிரச்சனை?” ஜெய் கேட்க,
“நான் என்ன ண்ணா பிரச்சனை பண்ணினேன்?” என்றான் சூர்யா.
“பின்ன! தூங்குற நேரம் வந்து லூசு மாதிரி பேசிட்டு இருக்க? கிளினிக் நல்லா போகுதா இல்லையானு உனக்கு தெரியவே தெரியாதா? ஏன் என்னென்னவோ உளறிட்டு இருக்க?” என்று ஜெய் கேட்க,
“பார்த்தியா நீ என் மேல கோபமா இருக்க.. அதான் நான் என்ன கேட்டாலும் கோபமா பதில் சொல்ற!” என்றான் சூர்யா.
“நிஜமாவே இப்ப தான் டா கோபம் வருது.. நான் உனக்காக தான் பீல் பண்ணுவேனே தவிர ஐம் ஆல்ரைட்.” என்றான் ஜெய்.
“இங்க பாரு நான் ஒரு டாக்டர்! ஐ க்நொவ்! நிஜமா நான் இப்ப பிரீயா ஒரு கம்ஃபார்டேபிளா பீல் பண்றேன்.. அடுத்து உன் பெரியப்பா எனக்கு பொண்ணு பாக்குறேன்னு பெரிய ஆப்பா வைக்குறதுக்குள்ள நானே எனக்கு ஒரு பொண்ணு பார்த்துக்கணும்.. சரியா.. இப்ப ஓகேவா..” என்று கேட்க, வேகமாய் சிரித்து தலையாட்டினான் சூர்யா.
“போ! போய் தூங்கு” என்றதும் சூர்யா வெளியே வர, மல்லிகா, காஞ்சனா என அனைவருமே தூங்க சென்றிருந்தனர் ஒன்பது மணிக்கு எல்லாம்.
“இதுங்களை வச்சுக்கிட்டு..” என நொந்து கொண்டே தன் அறைக் கதவை தட்ட,
“யாரு?” என்றாள் அஞ்சலி.
“திமிர பாரேன்! யாரா இருந்தா உள்ள வரணுமாம்?” என நினைத்தவன், கதவை திறந்து உள்ளே வர, அவனைப் பார்த்து புன்னகைத்தவள் எழுந்து நின்றாள்.
“பிரீயா? பேசலாமா?” சூர்யா கேட்க,
“ஹ்ம்! பேசலாமே! எனக்கும் செம்ம போர்” என்றாள்.
“அது சரி! சாப்பிட்டியா?”
“ம்ம் இப்ப தான் எல்லாரும் சாப்பிடும் போது சாப்பிட்டேன்ல”
“காரணம் கண்டிப்பா வேணுமா?” என்றவன், அவளருகே வந்து தோளில் கைவைத்தபடி,
“ம்ம்ம்!” என்று அவனின் உதட்டருகே இரு விரல்களால் தட்டி யோசித்தவன்,
“ஹான்! கிடைச்சிடுச்சு.. உன் அப்பா மீசை எனக்கு புடிக்கல” என்றதும் அஞ்சலி விழித்த விழியில் இவன் நக்கலாய் சிரித்துக் கொண்டான்.
“சூர்யா! என்ன சொல்ற?” என்றவளுக்கு அப்போதுமே அவன் என்ன செய்கிறான் என புரியவில்லை.
“இங்க பாரு! இது மிஸ்டர் குணசீலன் வீடு இல்ல.. இது பால நாதன்.. என்னோட பெரியப்பா இருக்காரு இல்ல.. அவரு வீடு.. ஆப்வியஸ்லி என்னோட, நம்மோட வீடும் இனி இது தான்.. சோ நான் என்ன சொல்றேனோ அதை நீ கேட்டு தான் ஆகணும்” சூர்யா கூற,
“இல்லைன்னாவா? உனக்கு ஆப்ஷனே நான் தரலையே! சரி கேட்டுட்ட அதனால சொல்றேன்.. இல்லைனா இந்த வீட்டுக்குள்ள நீ இருக்க முடியாது” என்றவனை,
“என்ன பேசுற சூர்யா?” என்றாள் உச்ச கோபத்தில்.
“ஷ்ஷ்! சத்தம் இந்த ரூம்க்கு வெளில போச்சு..” என சத்தமே இல்லாமல் அழுத்தமாய் கூறியவனைப் பார்த்து முதல் முறையாய் கொஞ்சம் அதிகமாகவே பயம் வந்தது அஞ்சலிக்கு.
“என் பேச்சை நீ கேட்டு தான் ஆகணும்..” என்றவன்,
“எப்படி எப்படி? கூட்டத்த கூட்டி எனக்கு அவன் வேண்டாம் இவன் தான் வேணும்னு சொல்லுவ.. நாங்க என்ன உன் ரூம்ல இருக்க பொம்மையா? நீ சொன்னதும் தலையாட்ட? அதுனால யாருக்கெல்லாம் என்னவெல்லாம் மனக்கஷ்டம்னு புரிஞ்சிக்க மாட்ட..” என்றதும் அவள் இன்னும் பயத்தில் விழி விரிக்க,
“என்ன இவ்வளவு பேசுறான்னு பாக்குறியா? பேசவே மாட்டேன் உன் இஷ்டத்துக்கு இருக்கலாம்னு நினைச்சுட்ட போல?” சூர்யா பேச பேச, உள்ளுக்குள் உருண்டு வந்தது அஞ்சலிக்கு இதுவரை என்னவென்றே அறிந்திராத பயம் என்று வார்த்தை.
“ஆமா காஞ்சனா ஆண்ட்டி எனக்கு தெரிஞ்ச வரை இப்படி இல்லை.. பின்ன என்னனு நீ வளந்து நிக்குற?” என்றவன்,
“பூராவும் உன் அப்பா குடுத்த கொழுப்பு இல்ல? கரைக்கிறேன்” என்று கூற,
“சூர்யா! பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சு பேசு.. என் அப்பாகிட்ட சொன்னேன்…!” கொஞ்சமே கொஞ்சம் இருந்த தைரியத்தை திரட்டி அஞ்சலி மிரட்ட,
“நீ யோசிச்சியா டி?” என்று முன்னின்றவள் முன் சூர்யா கை நீட்டி இருக்க, இரண்டடி பின்னே சென்றாள் அவள்.
“என்ன? கிழிச்சிருவாரா உன் அப்பா? எங்க சொல்லு பார்ப்போம்..” என்று வேறு கூற, வேகமாய் மொபைலை எடுத்து அழைக்க, இன்னும் நாட் ரீச்சாப்ள் என்றே வந்தது.
“நான் தப்பிச்சுட்டேன் நினைக்காத.. போனை எடுத்திருந்தா உன்னை கேட்டதை விட அசிங்கமா அந்த ஆளை கேட்டிருப்பேன்..” என்றவனை கண்ணீரோடு அவள் முறைக்க,
“உனக்கு அழ கூட வருது.. பரவால்ல.. ஆனா இதுக்கே அழுதா எப்படி? இன்னும் இருக்கு டி உனக்கு” என்றான்.
“நான் என்ன பண்ணிட்டேன்னு இப்ப இவ்வளவு பேசிட்டு இருக்க சூர்யா?” என்றவளுக்கு தான் செய்தது தவறு என்றே தெரியவில்லை.
“அட மங்குனி! அதை சொல்லாம என்னத்த எல்லாம் சொல்லிட்டு இருக்கேன் பாரு!” என்றவன்,
“நம்பர் ஒன்! எங்கேயோ பாத்துட்டு ஜெய்யை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு குதிச்சது.. நம்பர் டூ! சும்மா உன் இஷ்டத்துக்கு அவனை ஆட்டி வைக்க நினைச்சது.. நம்பர் த்ரீ! இது உன் அப்பன் தப்பு தான்.. ஆனா உன்னால வந்தது தானே? சும்மா சும்மா பெரியப்பாக்கு போனப் போட்டு மிரட்டி வச்சது.. நம்பர் போர்! ஏற்கனவே யோசிச்சு வச்சு பிளான் பண்ணி கல்யாண மண்டபம் வர வந்து எங்க ஜெய்யை வேண்டாம்னது” என்று புள்ளி வைத்து கணக்கு கூற, மிரண்டு நின்றாள் அஞ்சலி.
“என்ன ரவுடி குடும்பமா டி உன்னோடது? உன்னால என் வீட்டுல நிம்மதியா இருந்தே மாசக் கணக்கா ஆச்சு.. இன்னும் உன் அப்பா என்னவோ பண்ணி என் பெரியப்பாவை மிரட்டி வேற வச்சுட்டு இருக்காரு.. அதுல தப்பு யார் மேல தெரியட்டும்னு தான் வெயிட் பண்றேன்” என்றான்.
அஞ்சலி தலையைப் பிடித்து அமர்ந்துவிட, “இப்ப போர் அடிக்குதா?” என்றும் கேட்டு வைத்தான் அவளிடம்.
“இவ்வளவு சொன்ன நான் ஏன் நம்பர் பைவா என்னை நீ என் சம்மதம் இல்லாம செலக்ட் பண்ணினதை சொல்லல தெரியுமா? எல்லாம் ஒரு கணக்கு தான்.. எல்லாரும் உன்கிட்ட பேசிகிட்டு இருந்த நேரத்துல தான் நான் கொஞ்சம் யோசிச்சேன்.. உன்னை வெளில விட்டா பைத்தியத்தை ஊருக்குள்ள விட்டா மாதிரி இன்னொரு குடும்பதுக்குள்ள போய் உன் அப்பாவும் நீயும் ஆட்டம் போட்டுட மாட்டிங்க?” என்று கேட்க,
“சூர்யா!” என்றாள் கோபமாய்.
“ஏய் ச்சீ! கத்தாத!” என்றவன்,
“இது நான் நினச்சு நடந்த கல்யாணம்.. இங்க நீ என் விருப்பப்படி தான் இருக்கனும்.. எனக்கு என் அப்பா இருக்காருன்னு போகலாம்னு நினைக்காத.. யோசிக்காமலா இதெல்லாம் பண்ணுவேன்?” என்று கேட்க,
“நீ என்னை ஏமாத்திட்ட.. யூ பிராட்.. சீட்” என்றவளைப் பார்த்து சிரித்தவன்,
“எனக்கு வேற வேலை இல்ல? சும்மா இருந்த என்னை சொறிஞ்சி விட்டதே நீ தான்” என்றவன்,
“நீ நினச்சா வேணும்.. இல்லைனா வேண்டாம்.. என்ன திமிரு டி? ஹால்ல என்ன சொன்ன? உன் வீட்டோட கம்பெர் பண்ணின இல்ல? இனி எதாவது கம்பேர் பண்ணி பாரு!” என்றவன் பேச்சு செய்தால் என்ன செய்வான் என யோசிக்க வைத்தது.
“உன் வீட்டுல மட்டும் இல்ல.. என் வீட்டுலயும் யார்க்கும் இந்த ரூம்குள்ள நடக்குற எதுவும் தெரியக் கூடாது..” என்றவன், அவள் அவன்புறம் திரும்பிப் பார்க்கவும்,
“செஞ்சா என்ன செய்வன்னு தானே கேட்க போற? ஒன்னும் பிரச்சனை இல்ல.. இங்க பேசுறதை எல்லாரோட முன்னாடியும் பேசுவேன்.. பேச மட்டும் இல்ல கோபம் வந்தா அடிக்கவும் செய்வேன்” என்று சட்டை காலரை சரி செய்ய,
“இதெல்லாம் நல்லாவே இல்லை” என்று அழுதாள் அஞ்சலி. இதுவரை அழுதிராதவளுக்கு அதுவும் சரியாய் வரவில்லை.
“உனக்கு அழவே தெரியல.. இதெல்லாம் பத்தாது.. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்னை எல்லாம் டிசைன் டிசைனா வச்சு செய்யணும்” என்று கூற,
“ஒரு பொண்ணா என் விருப்பத்தை சபையில சொன்னேன்.. இதுல என்ன தப்பு?” என்றவளை வேகமாய் நெருங்கியவன், கண்ணை மூடி தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்து,
“அவன் ஜேன் கழுத்துல தாலி கட்ட வந்த அப்புறம் எனக்கு இந்த பொண்ணு வேண்டாம்.. இந்த பொண்ணு தான் வேணும்னு பக்கத்துல இருந்த பொண்ணைக் காட்டினா உனக்கு கோபம் வருமா வராதா?” என்று கேட்டுவிட்டு,
“காதல், அன்பு, பாசம்னு உன்கிட்ட போய் சொல்லிட்டு இருக்கேன் பாரு” என்றவன்,
“அதுக்காக என் அண்ணா உன்னை லவ் பண்ணினான்னு எல்லாம் நினைச்சுக்காத! கிரேட் எஸ்கேப்.. கிரேட் கிரேட் எஸ்கேப்!” என்று கூறி சிரித்தான்.
மனதில் இருந்ததை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டு படுத்தவன் உறங்கிவிட, காலையில் எழுந்து பார்த்த போது அவளும் அங்கு இல்லை அவள் கொண்டு வந்திருந்த பெட்டியும் அங்கில்லை.