ஜெய்யின் அறையில் சூர்யா இருக்க, வெளியே அந்த அறையை எட்டிப் பார்த்தபடி நின்றனர் பிரேமா, மல்லிகாவோடு நிவியும்.
“சம்மதம் சொல்லுவான்னு நினைக்குற?” என்று மல்லிகா கேட்க,
“அபசகுணமா எதுவும் சொல்லி வைக்காதிங்க அக்கா! சூர்யா பேசிட்டு வரட்டும்!” என்றார் பிரேமா.
“இவங்களாச்சும் நல்ல அண்ணியா இருப்பாங்களா?” நிவி கேட்கவும்,
“நிவி என்ன பேச்சு இது?” என மல்லிகா பிரேமா எதுவும் நினைத்துக் கொள்வாரோ என கண்டிக்க,
“உண்மையை தானே சொல்றா! விடுங்க க்கா!” என்ற பிரேமா,
“சூர்யாவையே கல்லை விட்டு எரிஞ்ச தைரியசாலி தான் பொண்ணு.. அப்ப நீயே எப்படின்னு பிரேடிக்ட் பண்ணிக்கோ” என்று கூற,
“ஆமால்ல! அப்ப தூள் தான்!” என்றாள் நிவியும்..
“சும்மா இரு டி! நானே அங்கே என்ன நடக்குது.. ஜெய் என்ன சொல்றான்னு தெரியாம தவிச்சுட்டு நிக்குறேன்.. இவ வேற!” என்ற மல்லிகா அங்கும் இங்குமாய் ஜெய் அறையைப் பார்த்தே நடக்க, அஞ்சலி இறங்கி வந்தாள்.
“மகாராணி வந்தாச்சு!” பிரேமா கூற,
“வா அஞ்சலி!” என்றார் மல்லிகா.
“ரூம்ல தண்ணி இல்ல!” என்றதும்,
“இதோ எடுத்துட்டு வர்றேன்” என்று மல்லிகா கூற,
“அக்கா! இருங்க!” என்றார் பிரேமா.
“இல்ல! நானே எடுத்துக்குறேன்!” என்று அதற்குள் அஞ்சலி உள்ளே செல்ல,
“உங்களை!” என்று எப்போதும்போல பல்லை தான் கடித்தார் பிரேமா.
**********************
“ஏன் டா இப்படி பண்றீங்க? இப்ப என்ன ஆச்சுன்னு மறுபடியும் அவசர அவசரமா பாக்கணும்? என்னை ரிலாக்ஸ் பண்ணிக்க விடுங்க டா” என்று ஜெய் கேட்க,
“ப்ச்! ண்ணா! இப்போ என்ன நடந்து போச்சுன்னு நீ இவ்ளோ சைலன்ட் ஆகிட்ட? நீ எப்பவும் போல பேசிட்டு இருந்தா கூட யாருக்கும் எதுவும் தெரியாது.. வீட்டுல நீ இருக்கியா இல்லையான்னே தெரிய மாட்டுது.. அப்ப எல்லாரும் நினைப்பாங்க தானே?” என்றான் சூர்யாவும்.
“அதுக்காக? அந்தாளு முன்னாடி சிரிச்சிட்டே வந்து நிற்க சொல்றியா?” என்று கேட்க,
“அதுக்காக மட்டும் தான் யோசிக்குறியா?’ என்றான் ஜெய் பார்வையை துளைத்து.
“வேற என்ன?” ஜெய் கேட்க,
“அஞ்சலியும் ஒரு ரீசன் தானே?” என்றான் சூர்யா.
“சூர்யா! என்ன பேசுற? அதெல்லாம் ஒன்னும் இல்லை”
“அப்புறம் ஏன் இப்படி கிளினிக் மட்டும் தான் உலகம்னு இருக்க? வீட்டுக்கு வா.. எப்பவும் போல இரு.. அம்மாகிட்ட பேசு.. பெரியப்பா கூட உன்னை அவ்ளோ நோட் பண்ணிருக்கார் தெரியுமா?” என்றான்.
“டேய்! நீ புரிஞ்சிக்கோ டா.. நானும் எப்பவும் போல தான் இருக்கனும் நினைக்குறேன்.. பட்.. ஐ காண்ட்!” என்று ஜெய் கூற,
“அதை தான் சொல்றேன்.. சும்மா ஓவர் கம் பண்ணி வான்னு சொன்னா எப்படி வருவ? அதனால தான் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்றேன்.. சத்தியமா நான் பெரியப்பா மாதிரி எல்லாம் உனக்கு பொண்ணு பாக்கல.. இந்த பொண்ணு மட்டும் நம்ம வீட்டுக்கு வந்தா வீடே கலகலன்னு இருக்கும்” என்றான் சூர்யா.
“தெரியும்! அந்த பொண்ணு உன் பிரண்ட்.. அன்னைக்கு நாம போனோமே அந்த பொண்ணு தானே?” என்று கேட்க,
“அட போ டா! போய் முதல்ல அந்த பொண்ணுகிட்ட கேளுங்க.. தெறிச்சு ஓடுவா.. உனக்கு தான் உன் பிரண்ட்டை பத்தி தெரியல” அன்று போனில் ஜனனி பேசியதை வைத்து ஜெய் கூற,
“அதெல்லாம் பேசி க்ரீன் சிக்னல் கூட விழுந்தாச்சு” என்ற சூர்யா வார்த்தைகளில் வாட் என்று ஜெய் பார்க்க,.
“நிஜமா தான்! அண்ட் அன்னைக்கு போன்ல ஏதோ மிஸ்ஸண்டர்ஸ்டாண்ட்டிங்ல பேசினதை நீ பெருசா நினைச்சுக்காத.. அவ அதுக்கு ரொம்பவே கில்டியா பீல் பன்றா” என்று கூற,
“முடிவு பண்ணிட்டு தான் என்கிட்ட வந்து சொல்றியா?” என்றான் ஜெய் முறைத்து.
“இல்ல ண்ணா! நீ தான் அன்னைக்கே கல்யாணம் பண்ணிப்பேன்.. கொஞ்ச நாள் போகட்டும்னு சொன்னியே?” என்று கேட்க,
“நான் சொல்லி பத்து நாள் தான் ஆச்சு” என்றான் ஜெய்.
“பத்து நாள் ஆச்சு இல்ல.. அதான் பேசுறேன்” என்றான் சூர்யாவும்.
“இப்ப என்னன்ற?” ஜெய் கேட்க,
“அம்மா, மல்லி ம்மா, ஜனனி, அவ பேமிலி, நானு, நிவின்னு எல்லாருக்கும் ஓகே.. நீ ஓகேன்னு கூட சொல்ல வேணாம்.. ம்ம் னு தலையாட்டு போதும்.. மத்ததை நான் பார்த்துக்குறேன்” என்று சூர்யா முடித்தான்.
அசட்டையாய் தோள் குலுக்கி சட்டை கைகளை மடித்து விட்டு ஜெய் கிளம்ப தயாராக,
“ஒரு முடிவை சொல்லு ண்ணா! கீழே எல்லாரும் வைட்டிங்!” என்றான் சூர்யா விடாமல்.
“ஷ்ஷ்! ஏன் டா!” என்றவன் ஜனனியின் முகத்தை கண்களுக்குள் கொண்டு வந்தான்.
“அய்யயோ! அப்படி மட்டும் சொல்லாத.. உனக்கு பிடிக்கலைனா வேற பொண்ணு கூட பாக்கலாம்.. ஆனா உங்க விருப்பம்னு மட்டும் சொல்லாத.. ஏற்கனவே அப்படி நடந்ததுல தான் நான் கத்தி மேல நடந்துட்டு இருக்கேன்..” என்று சூர்யா கூற,
சிரித்த ஜெய், “ஆமா ஆமா! ஆனா உனக்கு தேவை தான் டா..” என்றான்.
அவன் காதைப் பிடித்து திருகியவன், “அங்க பேசி எல்லாருக்கும் ஓகேன்னு சொல்லி இப்ப என்னை சம்மதிக்க வச்சுட்டு, இப்ப என்ன இத்தனை டைம் உனக்கு ஓகே தானே உனக்கு ஓகே தானேன்னு கேட்குற? ஓகே இல்லைன்னா போய் அங்கே என்ன சொல்றதா இருக்க?” என்று கேட்க,
“வேற என்ன சொல்ல முடியும்! கால்ல விழுந்து பாத பூஜை பண்ணி எஸ்ஸாகிட வேண்டியது தான்” என சிரித்தான் சூர்யா.
“வாய் டா உனக்கு… போய் அம்மாகிட்ட சிம்பிளா என்னென்ன பண்ண முடியுமோ அதை மட்டும் பண்ண சொல்லு” என்று கூற,
“போதுமே! இது போதுமே! இனி இந்த சூர்யா பார்த்துப்பான்.. தேங்க் யூ..” என்று கையெடுத்து கும்பிட்டபடியே வெளியே வந்து மாடிப்படி இறங்க, அஞ்சலி தண்ணீருடம் மேலே ஏறிக் கொண்டிருந்தாள்.
“அந்த ரூம்ல புதையல் எதுவும் வச்சிருக்கியா?” என்று அவளருகே வரவும் சூர்யா கேட்க,
“வம்பிழுக்காம போக முடியாதா?” என்றாள் அவளும்.
“சிரிச்சிட்டே தானே கேட்குறேன்.. நீயும் சிரிச்சிட்டே தான் பதில் சொல்லணும்.. ஹால்ல எல்லாரும் நிக்குறது தெரியும் தானே?” என அதையும் சிரித்துக் கொண்டே அவன் கூற,
“பேசாம போயிருந்தன்னா இதெல்லாம் தேவையே இல்லை” என்றவள் முகமும் இப்பொழுது சிரிப்புடன் இருந்தது.
“சூர்யா ண்ணாகிட்ட மட்டும் தான் நல்லா பேசுவாங்க போல!” கீழிருந்து பார்த்து நிவி கூற,
“சாப்பிட்டாச்சுன்னா இடத்தை காலி பண்ணு!” என்றார் மல்லிகா.
“அண்ணா என்ன சொன்னாங்கன்னு சூர்யா ண்ணா சொல்லட்டும்.. அப்புறம் கிளம்புறேன்” என்றவள் பார்வை இன்னும் மாடிப்படிகளில் தான்.
“புதையல் காத்த பூதம் மாதிரி அங்கேயே இருக்காம அதைக் கொண்டு வச்சுட்டு கீழே வா பார்ப்போம்” என்று சூர்யா கூற,
“நான் நிம்மதியா இருக்கவே கூடாது.. அப்படி தானே?” என்றாள் அஞ்சலி முறைக்காமல்.
“அதுல என்ன சந்தேகம்? உன்னை நிம்மதியா இருக்கவா இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்.. மரியாதையா வந்து சேரு!” விரிந்த புன்னகையோடு கூறிவிட்டு அவன் கீழே இறங்க, ஒரு நொடி அவன் புன்னகையில் மெய் மறந்து நின்றுவிட்டாள் அஞ்சலி.
“ச்ச! இடியட்!” அவனையா தன்னையா? ” என தெரியாமல் கூறிவிட்டு உள்ளே நகர்ந்தாள் அஞ்சலி.
“என்னனு சொல்லிட்டு போய் உன் பொண்டாட்டிகிட்ட பேச வேண்டியது தானே? வேணும்னே சீன் போடுவான்” பிரேமா கூற,
“அதுல தப்பு என்ன இருக்கு.. சூர்யான்னாலே மாஸ் தான்!” என்றான் ஸ்டைலாய் நின்று.
“நீ வேற பேசி நேரத்தை கடத்தாத பிரேமா! சூர்யா! சொல்லு என்ன சொன்னான்?” என்று மல்லிகா படபடக்க,
“இதுல என்னம்மா டவுட்? அதான் ஓவரா சீன் போடுறானே! அப்ப ஜெய் ண்ணா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிருப்பாங்க! என்ன ரைட்டா?” என்று நிவி கேட்க,
“இங்க பாரு! சீன் போட்டாலும் பதிலை நான் தான் சொல்லனும்.. முந்திரி கொட்டையாட்டம் நீ பேச கூடாது” என்று சூர்யா நிவிக்கு பாடம் எடுக்க,
“அதானே உண்மை.. அப்படி தான் சொல்லுவேன்” என நிவியும் மல்லுக்கு நிற்க, ஜெய்யே வந்துவிட்டான்.
“ஜெய்! இதுங்க அடிச்சிக்கட்டும்.. நீயே சொல்லிடு டா.. அந்த பொண்ணு ஓகே தானே?” என்று பாவமாய் மல்லிகா கேட்க, சிரித்துவிட்டான் ஜெய்.
“அதுக்கு ஏன் முகம் இப்படி டல்லடிக்குதாம்.. அதான் சரினு சொல்லிட்டேனே!” என்று ஜெய் கூற,
“நான் சொன்னேனா!” என நிவி ஆர்ப்பரிக்க,
“ஹப்பா!” என ஆசுவாசப் பெருமூச்சு அன்னைகளுக்கு.
“இதெல்லாம் டூ மச்.. வக்கீலுக்குன்னு ஒரு மரியாதை வேணாம்?” என்று சூர்யா கேட்க,
“மரியாதை தானே கொடுத்துட்டா போச்சு.. நீ என்ன பண்ற! உன் பிரண்ட்டை நாளைக்கு ஈவ்னிங் நான் மீட் பண்ண ஏற்பாடு பண்ணு” என்றான் ஜெய் இட்லிக்கு பொடியை தூவிக் கொண்டே.
“எதே!” என்று சூர்யா வாய் பிளக்க, எல்லோருமே எதற்கு என்றபடி தான் பார்த்தனர் அவனை.
“என்னவாம்? இப்படி ஷாக் ஆகுறீங்க? கல்யாணம் பண்ணிக்கணும்னா ஒரு சின்ன அண்டர்ஸ்டாண்ட்டிங் ஆச்சும் வேணும்ல?” என்றவன் கூற்று சரி தான் என்றாலும் சூர்யா உட்பட அனைவருமே தயங்க,
“அவளோட முடிவு தெளிவா இருக்கான்னு நான் நேர்ல ஒரு டைம் பார்க்கணும் அதுக்கு தான்.. வேற ஒன்னும் இல்லை!” என அழுத்தி கூறிய பின் தான் மூச்சே வந்தது அனைவருக்கும்.